Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – பேரா. முனைவர் எ. பாவலன்
நாய் குறைக்கிறது
கூட்டம் சேர்வது
அதற்கு பிடிக்கவில்லை
——
இப்பொழுதெல்லாம் சாதி பார்ப்பதில்லை
உண்மைதான்
சாதி சாதியைப் பார்க்கிறது.
——-
உடை மாற்றும் நிலவு
கூச்சப்படும் வேளையில்
அம்மாவாசை இரவு
——-
ஒரு மாயக்காரன் கையில்
சிக்கிக் கொண்ட பொம்மை
இந்தியா
——-
மோடி மஸ்தான் வேலை
பலிக்காது
நிச்சயம் மானுடம் வெல்லும்.
—-
சூரியனையே விழுங்குவதாக இருந்தாலும்
கொஞ்சம் அவகாசம் தேவை
இரவுக்கு…
——
அவர்கள் பொக்ரானை நம்புகிறார்கள்
நாங்கள்
வாக்குச்சீட்டுக்குக் காத்திருக்கிறோம்
——
வழக்கு நடைபெறவில்லை
தீர்ப்பும் வழங்கவில்லை
சிறைக் கம்பிக்குள் பறவைகள்