Thousands Members arrested in protest against Modi government's anti-labor move மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் தொழிற்சங்கத்தினர் ஆவேசம் ஆயிரக்கணக்கானோர் கைது

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் தொழிற்சங்கத்தினர் ஆவேசம் ஆயிரக்கணக்கானோர் கைது



Thousands arrested in protest against Modi government's anti-labor move மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் தொழிற்சங்கத்தினர் ஆவேசம் ஆயிரக்கணக்கானோர் கைது

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் கோவையில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அரசு பேருந்துகள் 98 சதவிகிதம் இயங்கவில்லை. கோவை கோட்டத்தில் மொத்தமுள்ள 2208 பேருந்துகளில் 100க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டது.

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடுவது, எரிபொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியது, மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் சிறு குறு தொழில்களை சீரழித்தது உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது. திங்களன்று துவங்கிய இந்த போராட்டம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.

கோவை கோட்டத்தில்  அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை,  80 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதேபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களான அக்வாசப், டெக்ஸ்மோ போன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முழுமையான வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.   தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்களும் முழுமையான ஆதரவை தெரிவித்தனர். அன்றாடம் ஏறிவரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசிற்கு தங்களின் எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தினர்.  பொது வேலை நிறுத்தம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, சிஐடியு, எச்எம்எஸ், எஐடியுசி, ஏஐசிசிடியூ எல்பிஎப், எம்எல்எப் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத போக்கினை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும்  மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி. பத்மநாபன், எல்பி எஃப் ரத்தினவேல், ஏஐடியூசி ஆறுமுகம், ஐஎன்டியூசி செல்லகுட்டி, எஸ்எம்எஸ் வீராச்சாமி, எம்எல்எப் தியாகராஜன், ஏஐசிசிடியு தாமோதரன், எஸ்டிடி யு ரகுபு நிஷர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போன்ற தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, கைக்குழந்தைகளுடன் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். தனித்தனியாக அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், கோவை வடக்கு, குனியமுத்தூர், உள்ளிட்ட 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக  காலை முதல் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்தும், கேரளாவிற்கும் பேருந்துகள் இயக்கப்படாததால், உக்கடம் பேருந்து நிலையத்தின் கேரளா பேருந்து நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கோவையில் உள்ள காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பேருந்துகளில் பயணித்தனர். போராட்டத்திற்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்ததால், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் கோவையில் பொதுப்போக்குவரத்து அடியோடு முடங்கியது. எல்ஐசி, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்களில் அறைகூவலை ஏற்று எல்ஐசி வங்கி மற்றும் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக எல்ஐசி ஊழியர்கள்.  12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய அளவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படுவது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பாதிப்பு என தெரிவித்தனர்.  இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

நன்றி: தீக்கதிர்

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது – அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு



'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

இஸ்லாமியர்களைப் பெருமளவில் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக -ஆர்எஸ்எஸ் கூட்டணியைச் சார்ந்தவர்கள் சமீபத்தில் ஹரித்துவாரிலும், தில்லியிலும் விடுத்த அழைப்புகள் இதுவரையிலும் இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டி தங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து திரட்டி வந்தவர்களின் செயல்பாடுகள் மூர்க்கத்தனம் கொண்டவையாக இப்போது மாறியிருப்பதையே காட்டுகின்றன. முன்னெப்போதுமில்லாத வகையிலே முஸ்லீம்களுக்கு எதிராக முழு அளவிலான ஆயுதப் போருக்கு இவ்வாறு அழைப்புகள் விடுக்கப்படுவது குறித்து நரேந்திர மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் மௌனம் காத்து வருகின்றனர். அவர்களிருவரிடம் உள்ள மௌனம் இரண்டு வழிகளில் இருப்பதாகக் காண முடிகிறது. ‘யாரும் தண்டனைக்குட்பட மாட்டோம்’ என்ற நம்பிக்கையை அளிப்பதற்கான அடையாளமாக, பாதுகாப்பின்மை குறித்து தங்களிடம் எழுந்துள்ள சந்தேக உணர்வின் அடையாளமாக என்று இரண்டு வழிகளில் அவர்களது மௌனம் இருக்கிறது. அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு குறித்த வாதங்களை இந்தக் கட்டுரையில் நான் முன்வைக்கிறேன்.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

என்னுடைய வாதம் உத்தரப்பிரதேசத் தேர்தல், தனக்கு முக்கியமான புனிதம் நிறைந்த பகுதிகளில் தான் அவமானப்படுத்தப்படுவதைப் பற்றிய பாஜகவின் கவலை குறித்ததாக மிகவும் வழக்கமான அணுகுமுறைவாதமாக இருக்கப் போவதில்லை. இனப்படுகொலைவாதம் என்று நான் குறிப்பிடுவதையே நாடு இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இனவெறி தேசியவாதங்கள் அனைத்தையும் பாதிக்கின்ற ஆழ்ந்த தர்க்கத்திலிருந்தே இந்த இனப்படுகொலைவாதம் உருவாகின்றது. அதன் தர்க்கம் தேசியவாதத்திற்கும், வன்முறைக்கும் இடையிலான தொடர்புடன் நன்கு பிணைக்கப்பட்டுள்ளது. மார்க்ஸ் மற்றும் மார்க்சிஸ்டுகள் பலரும் அதனை ‘டிரெட்மில் விளைவு’ என்றே அடையாளப்படுத்துகின்றனர்.

தேசியவாதத்துக்கும், வன்முறைக்கும் இடையிலுள்ள உறவு அந்தரங்கமானது, இருவழியிலானது என்ற வாதங்களை பிறிதொரு கட்டுரையில் முன்வைத்திருந்தேன். ‘தேசத்தின் பெயரால் மக்கள் இறந்து போவார்கள், தேசியவாதம் மக்களைக் கொல்வதை நோக்கியே இட்டுச் செல்லும்’ என்று கருதுவதற்கே நாம் பழகியிருக்கிறோம். தேசியவாதம் தீவிரமடையும் போது அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தேசத்திற்காக இறந்து போவது அல்லது மற்றவர்களைக் கொல்வது போன்ற செயல்களுக்குத் தயாராக உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அனைத்து தேசியவாதங்களும் தங்களிடம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான கருவையே சுமந்து கொண்டுள்ளன.

இஸ்லாம் மட்டுமே ஜிஹாதிகளை உருவாக்குகிறது என்ற சிந்தனை நம்முடைய காலத்தின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாகும். போர் வீரன், தியாகி என்ற அந்தஸ்தை ஒருசேர அடைவது என்ற நம்பிக்கையின் பேரிலே தீக்குளிப்பதற்கு அல்லது தற்கொலை செய்து கொள்வதற்குத் ​தயாராக இருக்கின்ற ஒவ்வொரு ஹிந்து, கிறிஸ்தவர் அல்லது யூதரும் தீவிர தேசியவாதத்தின் உள்ளார்ந்த தர்க்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றனர். தேசியவாதத்தின் எக்காளத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தாத ராணுவம், காவல்துறைப் படை, கமாண்டோ படை போன்றவை உறுதியுடன் இருப்பதற்கான சாத்தியமே கிடையாது. ஒருவேளை அவ்வாறு இருக்குமானால் அவை திறனற்றவையாகவே இருக்கும். தேசியவாதத்திலிருந்து வன்முறைக்கு இட்டுச் செல்கின்ற பாதை பற்றி அதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை.

தேசிய-அரசு குறித்த நவீன வடிவத்தின் வருகைக்குப் பிறகு குழு வன்முறைகள் புதிய செயல்பாட்டைப் பெற்றிருக்கின்றன. அது தேசத்தின் மீதான பற்றுதல் என்ற சிந்தனைக்கு எரிபொருளை ஊற்றுவதாக மாறியிருக்கிறது. அதை நாம் காணக்கூடிய முக்கிய இடமாக பயிற்சி, ஒத்திகை, உண்மையான போர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேசம் குறித்த புனைகதைகள், கருத்துருவாக்கங்களின் மீதான பற்றுதலை உருவாக்குகின்ற நவீன ராணுவங்களின் உருவாக்கம் இருக்கிறது. பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை தேசம் என்பது கருத்துருவாக, கற்பனையாக, எட்டாத தொலைவிலே இருப்பது என்பதால் அவர்களிடத்தே தேசத்தின் மீதான விசுவாசத்தை உருவாக்குவது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகும். அத்தகைய கருத்துருவாக்கத்தின் மீதான விசுவாசத்தை உருவாக்குவதற்கான உறுதியான வழிகளாகவே தேசத்திற்காக இறந்து போவது, மற்றவர்களைக் கொல்வது போன்ற செயல்பாடுகள் உள்ளன. அவை தியாகம், கௌரவம், தூய்மை போன்ற அனைத்து தேசியவாதங்களுடனும் ஆழ்ந்து பிணைந்துள்ள சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன.

அதிகாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வன்முறைகளின் மூலம், தேசத்தின் புனிதத்தன்மை மீதான உணர்வு புதுப்பிக்கப்பட்டு, புத்துயிர் தரப்பட்டு மீட்டெடுக்கப்படுகிறது. எப்போதும் கிடைக்கின்ற வகையிலே தேசியவாத இயந்திரத்திற்குத் தேவையான புனிதமான எரிபொருளைப் புதுப்பித்துக் கொள்ளும் வழிகளாகவே சமீபத்தில் மோடியும் அவரது கூட்டாளிகளும் வாரணாசி போன்ற இடங்களில் நடத்தியுள்ள நாடகக் காட்சிகள் இருந்திருக்கின்றன. மத்திய தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது, பாடப்புத்தகங்கள், சமூக ஊடகங்கள், அதிகாரப்பூர்வ பிரச்சாரங்கள் மூலமாக வரலாற்றை மாற்றி எழுதுவது, காஷ்மீரைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாக அடிபணிய வைப்பது போன்ற முயற்சிகளும் அதுபோன்றே இருக்கின்றன. இந்திய ஆயுதப் படைகள் இந்திய மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அனைத்து இடங்களிலும் (பழங்குடியினர், மாவோயிஸ்ட் பகுதிகளில், வடகிழக்கில், அனைத்து எல்லை மாநிலங்களில்) வன்முறை என்பது பயனுள்ள செயல்பாட்டைக் கொண்டுள்ள (அரசு ஆதரவுடன் திணிக்கப்படுகின்ற ஒழுங்கு) போதிலும் – அது தனக்குள்ளே பகட்டான, நாடகரீதியான செயல்பாட்டையும் கொண்டுள்ளது. தேசியவாதம் உயிர் பிழைத்திருக்கப் போராட வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாகவும் அது இருக்கிறது.

டிஜிட்டல் ஊடகங்கள் இன்றைய நிலைமையில் உள்ளூர் நிகழ்வுகள் தேசிய அரங்கில் உடனடியாக, பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கான உத்தரவாதத்தைத் தருபவையாக இருக்கின்றன. ஆனாலும் திட்டமிட்டு இந்திய முஸ்லீம்களை ஒழுங்கமைக்கப்பட்ட இனப்படுகொலை செய்வதற்காக ஹிந்துத்துவா விடுத்து வருகின்ற அழைப்புகளில் நாம் காண முடிகின்ற சுயமுரண்பாட்டின் முக்கியமான தருணத்தை நோக்கியதாக இருக்கின்ற அது மிகவும் எளிமையானதாக இருக்கவில்லை.

சிந்தனையாளர்கள் – குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் முதலாளித்துவத்தில் டிரெட்மில் விளைவை கண்டதைப் போலவே இங்கே இனப்படுகொலைவாதம் என்று நான் கூறுவதையும் காணலாம். இனப்படுகொலை வரலாற்றில் தேசியவாதத்தின் குறைந்தபட்சத் தேவையை நிலைநிறுத்துவதற்காக வன்முறைகளைப் பெருமளவிலே அதிகரிக்க வேண்டிய தருணமாகவே இனப்படுகொலைவாதம் அமைகிறது. முதலாளித்துவத்தைப் போலவே அது அமைப்புரீதியானதாக, ஒற்றைமயமாக்கலுடன், அச்சுறுத்திக் கைப்பற்றிக் கொள்வதாகவும் இருக்கின்றது. ஒட்டுமொத்தக் கவனம், அர்ப்பணிப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்களின் முழுமையான பங்கேற்பைக் கோருவதாகவும் அது இருக்கிறது. இனப்படுகொலைவாதம் முதலாளித்துவத்தைப் போலவே வன்முறையின் அன்றாட உற்பத்தியைத் தக்கவைத்துக் கொள்ளப் பணிக்கப்பட்டிருக்கின்ற ஏராளமான தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி சுரண்டுகிறது. வன்முறையின் டிரெட்மில்லை எதிர்நோக்கி, வடிவமைத்து, அதிலிருந்து பயன்பெறுகின்ற சிறிய வகை தொழில்முனைவோர், மேலாளர்கள் போன்றவர்களுக்குப் பயனளிப்பதாக அது இருப்பதால், இனப்படுகொலைவாதம் மூலம் பலனைப் பெற்றுக் கொள்பவர்களாகவே அவர்கள் கருதப்படுவர்.

மோடி இந்தியா இப்போது தேசியவாதத்தின் மிக முன்னேறிய கட்டமான இனப்படுகொலைவாத கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமர்சகர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, இனப்படுகொலை என்ற இயந்திரத்திற்கான எரிபொருள் வெளிப்படையாகவே தேவைப்படுகின்றது. இந்தியாவில் ஆங்காங்கே, தானாக எழுகின்ற, உள்ளூர் வன்முறை நிகழ்வுகளால் திருப்தியடைய முடியாத தேசியவாத இயந்திரத்தின் வெறித்தனமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் அது இருக்கிறது. முறையான வலுவூட்டல், அணிதிரட்டல் ஆகியவற்றுடன் அரசிடமிருந்து அல்லது அரசிற்கு மிக நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்து ஆட்சிக் கொள்கையும் அதற்குத் தேவைப்படுகிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வான்சீ மாநாட்டில் இறுதித் தீர்வு அதிகாரப்பூர்வ நாஜிக் கொள்கையாக மாற்றப்பட்டதற்கு இணையானதாகவே 2021 டிசம்பர் 17-19 நாட்களில் நடைபெற்ற ஹரித்துவார் சன்சத் கூட்டம் அமைந்திருந்தது. இப்போதும், அதைத் தொடர்ந்து காவியுடை உடுத்திய ஆண்களும் பெண்களும் முஸ்லீம்களுக்கு எதிராக விடுக்கப்பட்டு வருகின்ற போருக்கான அழைப்புகளுக்கு ஏற்பாடு செய்திருப்பது நாஜிக்களின் கீழ் வாஃபன்-எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஈடான பாத்திரத்தை பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரத்தின் சாது-அகாடா தரப்பு கொண்டிருப்பதற்கான விளக்கத்தையே தருகின்றது. மேலும் அது மையப்படுத்தப்பட்ட தலைமையைத் தேடுகின்ற பல்வேறு குண்டர்கள், கும்பல்கள், படைப்பயிற்சி பெற்றவர்கள் என்றுள்ள ஈட்டியின் முனையாகவும் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் தொடர்புடைய முக்கியமான நபர்களுக்கு எதிராக சமீபத்தில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், குறிப்பிடத்தக்க இந்தப் பொதுவெளி பேச்சுகள் குறித்து மோடியும் அமித்ஷாவும் மௌனம் காப்பது இன்றைக்கு இந்தியாவில் இனப்படுகொலைக்குத் தரப்பட்டிருக்கின்ற அதிகாரப்பூர்வ சட்டபூர்வமான தன்மையின் அலட்சியப்படுத்த முடியாத குறியீடாகவே இருக்கிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

நான் சொல்வது சரியாக இருக்குமென்றால், பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரத்தின் மிக உயர்ந்த மட்டத்திலே உருவாகியுள்ள பீதி, பதட்டம் நிறைந்த தருணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்த புதிய இனப்படுகொலைவாதம் எழுந்துள்ளது. அவர்களுடைய மனநிறைவு அல்லது மகிழ்ச்சிக்கான தருணமாக அது இருக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

இந்திய சமூகத்தில் அழிந்து போனவர்களாக முஸ்லீம்களை மாற்ற நினைக்கின்ற போர்க்குணமிக்க ஹிந்துத்துவாவின் நோக்கத்தால் வரையறுக்கப்படாத இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளதை இன்றைக்கு நடைபெறுகின்ற நாடகம் நமக்கு நினைவூட்டிக் காட்டுகிறது. தாங்கள் ஹிந்துத்துவக் கருத்தொற்றுமையில் அங்கம் வகிக்கவில்லை என்பதைக் காட்டுகின்ற வகையிலே – ஏறக்குறைய ஓராண்டு காலாமாக தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டிருந்து, தங்களை அடக்க நினைத்த மோடியின் மனவுறுதியை முறியடித்த இந்திய விவசாய சமூகங்களைச் சார்ந்த பிரதிநிதிகள்; கோபம் கொண்டவர்களாக, அரசியல்மயப்படுத்தப்பட்டவர்களாக, அதிகரித்து வருகின்ற எதிர்பார்ப்புகளின் விளைவான புரட்சியின் நாயகர்களாக பெரும் எண்ணிக்கையில் இந்தியா முழுவதிலும் இருக்கின்ற தலித்துகள் என்று இரண்டு முக்கியமான சக்திகளிடமிருந்து கோபம் வெளிப்பட்டிருக்கிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

ஆட்சிக்கு எதிராகத் திரும்பிய விவசாயிகள், ஹிந்துத்துவா எதிர்ப்பு தலித்துகள் என்று இந்த இரண்டு மக்களின் எண்ணிக்கை மேலோட்டமாகக் கணக்கிட்டாலும் குறைந்தபட்சம் இன்றைக்கு முப்பது கோடி இந்தியர்கள் என்ற அளவிலே இருக்கும். அந்த அளவிற்கான மிகப் பெரிய எண்ணிக்கையில் உள்ளோர் தற்போதைய ஆட்சிக்கு அடிபணிந்து போவதற்கான அறிகுறிகளையோ, அரசியல் மேடையில் இருந்து அமைதியாக வெளியேறிக் கொள்வதற்கான அறிகுறிகளையோ காட்டவில்லை.

அந்த முப்பது கோடிப் பேர் இந்தியாவின் இருபது கோடி முஸ்லீம்கள் மீதான ஹிந்துத்துவா வெறியின் இலக்காக இருக்கின்றனர். அதன் தர்க்கத்திற்கும், இன்றைய இனப்படுகொலைவாதத்தின் மையத்தில் உள்ள டிரெட்மில் விளைவுக்கும் ஏராளமான தொடர்பு இருக்கின்றது. இனப்படுகொலைக்கான அழைப்புகளை விடுப்பதன் மூலம் ஒருபுறத்தில் முஸ்லீம்களைப் பயமுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்கள் உண்மையில் இனப்படுகொலை செய்யப்படுவதற்கான ஆட்களாக தாங்கள் மாறி விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள், தலித்துகள், பிற எதிர்ப்புக் குழுக்களுக்கு விடுகின்ற எச்சரிக்கை சமிக்ஞையாகவே உள்ளது. மற்றொரு புறத்தில் இந்த குழுக்களைச் சார்ந்தவர்களுக்கு புதிய இனப்படுகொலைவாதச் செயலில் பங்கு கொடுத்து அவர்களை ஹிந்துத்துவா குடையின் கீழ் இழுத்துக் கொள்ளும் வகையில் ஆட்சேர்ப்பு உத்தியாகவும் அது இருக்கிறது. இனப்படுகொலை இயந்திரங்கள் எந்த வேகத்தில் இயங்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துவதையே இந்த இரட்டை உத்தி நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இனப்படுகொலைத் திட்டங்களுக்குத் தேவையான ஆட்களை முடிந்த அளவிற்கு வழங்குவதாகவும் அது இருக்கிறது.

இந்த புதிய இனப்படுகொலைவாதத்தை ஆளுகின்ற அரசிடம் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாகப் பார்க்கின்ற என்னுடைய வாதத்திற்கு இப்போது திரும்புகிறேன். மனித உரிமைகள் – குறிப்பாக இனப்படுகொலைக்கு இலக்கானவர்களின் உரிமைகள் – மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற மேற்குலகம் மற்றும் பிற அரசியல் சக்திகளின் அங்கீகாரம் மோடி, அவரது ஆட்சிக்கு இன்னும் தேவைப்படுகிறது. மற்ற இனவெறி எதேச்சதிகாரிகள் போலல்லாமல் மோடியால் அந்த வட்டாரங்களில் தன்னுடைய நம்பகத்தன்மையை இதுவரையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் அது இப்போது ஆபத்தில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தனது ஆதரவாளர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்புகளை விடுப்பதை அனுமதித்திருப்பது இந்த ஆட்சியிடம் உள்ள இனப்படுகொலை குறித்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. அதன் விளைவாக உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்பாளர்களின் பார்வையில் அவர்கள் மீதுள்ள பிம்பத்தின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. அதுவே அவர்களிடம் தற்போது ஏற்பட்டிருக்கும் விரக்திக்கான காரணமாக உள்ளது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறப் போகின்ற பிற மாநிலத் தேர்தல்கள் இந்த புதிய இனப்படுகொலைவாதத்திற்கான காலம், இடங்களுக்குப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன என்றாலும் அவை பெரிய அளவிலே அல்லது புரிந்து கொள்ளக்கூடியவையாக இருக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் இந்த ஆட்சி சுதந்திரமான சட்டமன்றம், நீதித்துறை அல்லது பத்திரிகைகளுக்கான தேவைக்கு எதிராக தன்னையே பணயம் வைத்துக் கொண்டுள்ளது. அந்தப் பணயத்திற்காக இனப்படுகொலைவாதத்தை தங்களுடைய வெளிப்படையான அரசியல் தளமாக்கியுள்ள இந்த ஆட்சியும் அதன் ஆதரவாளர்களும் போதுமான இந்தியர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வைத்திருப்பது மிகவும் மோசமான பணயமாகும் என்றாலும் அதுவே ஒருவேளை இருள் கவிந்துள்ள இப்போதைய அரசியலில் நம்பிக்கைக்கான விடியலாகவும் இருக்கக் கூடும்.

https://thewire.in/politics/narendra-modi-india-genocidalism
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு




 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர் பிரதாப் பானு மேத்தாவுடன் நடத்திய வீடியோ நேர்காணலை 2021 டிசம்பர் 17 அன்று தி வயர் இணைய இதழ் வெளியிட்டது. கடந்த ஏழாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் அரசியல், சமூகம், பொருளாதார ரீதியாக இந்தியா எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்கான பரந்த தலைப்புகளை உள்ளடக்கியதாக அந்த நேர்காணல் அமைந்திருந்தது.

தேர்தலில் பலன்களை ஆளும் கட்சி அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக நாட்டில் மதம் மற்றும் சமூக குழுக்களிடையே இருந்து வருகின்ற நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதில் தற்போதைய ஆட்சி எந்த அளவிற்குத் தீவிரமாகப் பங்கேற்று வகுப்புவாத சக்திகளுக்கு உதவி வருகின்றது என்பதை நேர்காணலின் போது விளக்கிச் சொல்ல மேத்தா சற்றும் தயங்கவில்லை. அரசு நிர்வாகத்தைப் பொறுப்பேற்க வைப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் தருகின்ற அழுத்தங்களுக்கு ஊடகங்களும், நீதித்துறையும் கூட எவ்வாறு வளைந்து கொடுத்துள்ளன என்பதையும் வருத்தத்துடன் அந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.

நேர்காணலின் எழுத்தாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. நேர்காணைலை இங்கே காணலாம்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: மேத்தா! பிரதமராக நரேந்திர மோடி இருந்த இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா சமூகரீதியாக குறுகிய நோக்குடைய, பெரும்பான்மைவாதம் கொண்ட, சகிப்புத்தன்மையற்ற நாடாக, அரசியல்ரீதியாக எதேச்சதிகார நாடாக மாறியுள்ளது என்று சிலர் கூறி வருகின்றார்கள். ஏறக்குறைய பிரதமர் தெய்வமாக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிறுவனங்கள் பலவீனமடைந்து வருகின்றன. கண்காணிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன அல்லது கொத்தடிமைகளாக மாறியுள்ளன. இவற்றையெல்லாம் உண்மையல்ல என்று மறுக்கின்றவர்கள் அதுபோன்ற கருத்துகள் பிரதமரை, அரசாங்கத்தை, ஏன் நாட்டையே இழிவுபடுத்துகின்ற வகையில் உருவாக்கப்பட்டவை என்று கூறுகின்றார்கள். இதுகுறித்து உங்கள் பார்வை எவ்வாறு இருக்கிறது?

பிரதாப் பானு மேத்தா: உங்களுடைய விளக்கம் சரியானது என்றே நினைக்கிறேன். மிகுந்த வகுப்புவாதம் கொண்ட நாடாக இந்தியா மாறி விட்டது; அதிக எதேச்சாதிகாரம் கொண்டதாகவும் அது மாறியிருக்கிறது – உண்மையில் இதுபோன்ற விளக்கங்களை யாரும் இப்போது எதிர்த்துப் பேச முடியாது என்றே நினைக்கிறேன். பிரதமரின் நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன என்பது குறித்து பேச வேண்டியதில்லை என்றாலும் – உச்ச நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுவைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுக்கும் போது; பெரும்பாலான ஊடகங்கள் குறைந்தபட்சம் தொலைக்காட்சி ஊடகங்கள் (அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்… ஒரு வகையில் பார்க்கும் போது வேறு யாரைக் காட்டிலும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்…) நான்காவது தூண் என்ற தங்களுடைய பங்கைத் தவிர்த்திருக்கும் நிலையில் – நிறுவனங்களின் நடத்தை குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

சமீபத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் பார்த்ததைப் போல் ஒரு வகையில் சங்கராச்சாரியார், சிவாஜியின் கலவையாக பிரதமர் முன்னிறுத்தப்பட்டார். ஒட்டுமொத்த வழிபாட்டு முறையும் இன்று அவரைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தை மறுவடிவமைப்பதாக மட்டுமல்லாமல், ஹிந்து மதத்தின் மதம் சார்ந்த மற்றும் மத வடிவங்களை மிகவும் தீவிரமான முறையில் மறுவடிவமைப்பதாகவும் அது உள்ளது. தேர்வு செய்து கொள்கின்ற எந்தவொரு பண்பும் இந்தியா மிகவும் வகுப்புவாதம் கொண்டதாக, எதேச்சாதிகாரம் கொண்டதாக மாறிவிட்டது என்ற எண்ணத்திற்கு எதிராக இருப்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

நான் அதற்குத் தருகின்ற ஒரே காரணத்தை பாஜக ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இப்போதுள்ள எதேச்சாதிகாரத்திடம் உண்மையான ஜனநாயக ஆற்றல் உள்ளது. அதாவது ஜனரஞ்சகத்தின் வேர்களைக் கொண்டதாக அது இருக்கிறது. சில வழிகளில் அதுவே நமக்கு மிகவும் கவலையளிப்பதாகவும் இருக்கிறது. மோடி ஒரு ஜனரஞ்சகமான நபராக இருக்கிறார். தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு வகையில் இந்தியாவின் நிறுவன களத்தை அவர் முழுமையாக மாற்றியமைத்திருக்கிறார். இந்த தருணத்தை அதுவே மிகவும் சிக்கல் மிகுந்ததாக்கி வைத்திருப்பது நன்கு தெரிய வருகிறது.

கரண் தாப்பர்: இப்போதுள்ள வகுப்புவாதமும், எதேச்சாதிகாரமும் ஜனநாயக வேர்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்று கூறுகின்ற போது, உண்மையில் பெரும்பான்மைவாதம் உள்ளிட்ட இந்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவாக இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் கூற வருகிறீர்களா? மோடி ஆட்சி செய்து வருகின்ற எதேச்சாதிகார வழியானது மக்கள் தாங்கள் அந்த வகையில் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்புவதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: அது மூன்று விஷயங்களைப் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். நிச்சயமாக, மேல்தட்டில் இருப்பவர்களின் கருத்து மட்டத்தில், மோடிக்கும், அவரது வகுப்புவாத, எதேச்சாதிகார திட்டங்களுக்கும் மிகப் பரவலான பெரும் ஆதரவு இருக்கிறது. இந்திய மூலதனத்தின் ஆதரவு, தகவல் ஒழுங்கை உருவாக்கி கட்டுப்படுத்துகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட முறையான வழிகள் போன்றவை இல்லாமல் உண்மையில் அது சாத்தியப்படாது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

இந்தியாவில் உள்ள தொழில்முறை சார்ந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் போன்றவர்களின் உடந்தையில்லாமல் அதற்கான சாத்தியமில்லை. வாக்காளர்களைப் பொறுத்தவரை நிச்சயமாக அதற்காக அவர்கள் அவரைத் தண்டிக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியும் என்றே நினைக்கிறேன். இவ்வாறாக அதைச் சொல்லிப் பார்க்கலாம். குடிமைச் சமூகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது, எடுத்துக்காட்டாக குர்கான் போன்றதொரு நகரத்திலே வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்ற தொழுகையைச் சிலரால் சீர்குலைக்க முடிந்திருக்கும் நிலைமையில் அதுகுறித்து தீவிரமான குடிமைச் சமூக எதிர்ப்பு என்று எதுவும் எழவில்லை என்ற உண்மை நாம் அதுபோன்ற செயலில் பங்கேற்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அதற்கு உடந்தையாக இருக்கிறொம் என்பதையே காட்டுகிறது.

கரண் தாப்பர்: அது குறித்த விவரங்களுக்கு சிறிது நேரத்தில் மீண்டும் வருகிறேன். முதலில் இன்னுமொரு பொதுவான கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இவையனைத்தும் கடந்த ஏழு ஆண்டுகளில் தற்செயலாக நடந்திருக்கின்றனவா அல்லது அரசாங்கமும், மோடியுமே ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளனரா?

பிரதாப் பானு மேத்தா: இந்தக் கேள்வியை இரண்டு நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஒரு நிலையில் பார்க்கும் போது இந்த மாற்றங்கள் நீண்ட வரலாற்றின் விளைபொருளாக இருக்கின்றன. ஹிந்து தேசியம் பற்றி புரிந்து கொள்ள விரும்பினால், இந்திய நாகரிகத்தின் தன்மை, அடையாளம் குறித்து நடைபெற்றிருக்கும் கடந்த நூறு ஆண்டுகால உரையாடலை – குறிப்பாக. முஸ்லீம்களுக்கான இடம் குறித்து நடந்திருக்கும் உரையாடலை – பார்க்க வேண்டும். ஆக ஒரு நிலையில், அது மிக ஆழமாக அடியாழத்திற்குச் செல்கிறது. காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால், ஒருவேளை 1950களிலேயே இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்த்திருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்குமா என்ற அனுமானத்திலான கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

மோடியும், பாஜகவுமே பொறுப்பு என்று சொல்லும் வகையில் அவர்கள் அவற்றைச் சட்டப்பூர்வமாக்கவில்லை என்றாலும் சில வகைகளில் ஒவ்வொரு அரங்கிலும் அவற்றை அவர்கள் விளம்பரப்படுத்தி வந்திருப்பது காரணமாகலாம். ‘மறைந்திருக்கும் போக்குகள்’ என்று சொல்லப்படக் கூடிய வகையிலே அதுபோன்ற விஷயங்களை நம்பி, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தை குலைக்கின்ற செயல்களில் ஈடுபடத் தயாராக இருப்பவர்கள் எப்போதுமே சமூகத்தில் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் பேர் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களே அவற்றைச் சட்டப்பூர்வமாக்குவது, குறிப்பிட்டவர்களிடம் அதற்கான ஆதரவை பெற்றுக் கொள்வது, மக்களை ஏமாற்றுவது என்று தொடர்ந்து இருந்து வருவதும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இப்போது நாம் விவரங்களுக்கு வருவோம். முதல் கேள்வியில் நான் குறிப்பிட்டிருந்த அனைத்து விவரங்களையும் பற்றி பேச முடியாது என்பதால் எனக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்ற நான்கை மட்டும் முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். தொடர்ந்து சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை இந்தியா நடத்தி வருவது குறித்தும், அரசாங்கங்கள் அடிக்கடி மாறுகின்றன என்பதிலும் எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. ஆனாலும் நாடாளுமன்றம், அமைச்சரவை, தேர்தல் ஆணையம் போன்ற முக்கியமான அமைப்புகள் நெருக்கடி நிலைக்குப் பிறகு இருந்ததைக் காட்டிலும் மிகவும் பலவீனமாக இப்போது இருக்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலைமையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பிரதாப் பானு மேத்தா: இந்திய ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. பெரும்பாலான மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டு வருவதால், நாடாளுமன்றம் ஏறக்குறைய ரப்பர் ஸ்டாம்ப் போன்றாகி விட்டது. உச்ச நீதிமன்றம் கை கழுவிக் கொண்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்த நீதித்துறையும் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொண்டுள்ளதால் சில வகைகளில் இப்போது இருக்கின்ற நிலைமை நெருக்கடி நிலையைக் காட்டிலும் மிக மோசமானதாகவே இருக்கிறது. அரசியலமைப்பு அடிப்படை நோக்கங்களின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க உச்சநீதிமன்றம் விரும்புவதே இல்லை. பத்திரிகைகள் – நிச்சயமாக அது பற்றி நீங்கள் ஏற்கனவே பேசிவிட்டீர்கள் – தேர்தல் ஆணையம் போன்றவையும் வலுவிழந்து விட்டன. மக்கள் கேள்வியெழுப்பக் கூடிய நிலையை தேர்தலின் நியாயத்தன்மை இன்னும் எட்டவில்லை என்றாலும் அங்கேயும் கவலை தரக்கூடிய அறிகுறிகள் தென்படவே செய்கின்றன.

கரண் தாப்பர்: இன்னும் சிறிது நேரம் கழித்து உச்சநீதிமன்ற விஷயத்திற்கு வருகிறேன். அதற்கு முன்பாக நமது அரசியலின் நிலையை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்க விரும்புகிறேன். கட்டுப்பாடுகள் குறைந்து கொண்டே வருகின்ற வேளையில் பிரதமரின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது அரசாங்கத்தின் மிகப் பெரிய அதிகாரமிக்க நிறுவனமாகியிருக்கும் பிரதமர் அலுவலகத்தின் ஆதிக்கம், நரேந்திர மோடியைச் சுற்றி வெளிப்படுகின்ற ஆளுமை வழிபாட்டு முறை பற்றி இப்போது பேச விரும்புகிறேன். இந்தக் கலவையானது அவரை, நமது பிரதமரை மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற நபராக மாற்றியிருப்பது எந்த அளவிற்கு கவலையளிக்கின்றது?

பிரதாப் பானு மேத்தா: கடந்த காலத்திலும் குறிப்பாக இந்திரா காந்தி போன்ற ஆளுமை வழிபாட்டு முறைகள் நம்மிடம் இருந்தன. உண்மையில் ஜனநாயக சுய வெளிப்பாட்டுடன் குறிப்பிட்ட அளவிற்கு கலாச்சாரம், ஆளுமை கொண்ட ஒரு வகையான நீண்ட பாரம்பரியம் நமக்கு இருக்கிறது.

நம்பமுடியாத அளவிற்கு இருக்கின்ற தன்னுடைய ஜனரஞ்சகத்தையும், அதிகாரத்தையும் அவர் [மோடி] ஒருவேளை நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துகிறார் என்றால், தன்னுடைய எந்தவொரு முன்னெடுப்பிலும் எந்த வகையிலும் அவர் இந்தியாவிற்கு நல்லதைச் செய்திருக்கவில்லை என்பது கவலைக்குரியதாகவே இருக்கிறது. மோடி ஓர் இயல்பான ஜனநாயகவாதி அல்ல. பெரும்பாலும் அவரது உள்ளுணர்வு ஊக்குவிப்பதைக் காட்டிலும் கருவறுப்பதாகவே இருக்கிறது. அவரது நோக்கம் வகுப்புவாதத்திற்கு ஆதரவாக குறிப்பிட்டவர்களின் ஆதரவைப் பெறுவதாக மட்டுமே இருக்கிறது. நமது குடிமைச் சமூகத்தில் ஒரு வகையான நச்சு பரவியுள்ளது. சமீப காலங்களில் அது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமாக இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆளுமை வழிபாட்டு முறைகள் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்வது கடினம் என்று வரலாற்றிலிருந்து அறிந்திருக்கின்ற அதன் மறுபக்கத்தையும் இந்தக் கட்டத்தில் நாம் கவனிக்க வேண்டியதுள்ளது.

அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மூலமாக நடைபெற்று வந்த அரசியல் இப்போது விவசாயிகள் போராட்டத்தில் நாம் பார்த்ததைப் போல தெருக்களுக்கு வந்திருக்கிறது. நம்மால் இப்போது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், விவசாயிகள் இயக்கம் என்று இந்திய குடிமைச் சமூகத்தில் காண முடிகிறது. ஜனநாயக ஆலோசனை போன்ற செயல்முறைகள் எதுவுமே இல்லாமல் தனது அலுவலகத்தை மட்டும் மையமாகக் கொண்ட அரசியலால் மக்களுக்குத் தேவையான நிர்வாகத்தை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதை பிரதமர் சில வழிகளில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகி இருக்கிறது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: தனக்கிருந்த பிம்பத்தில் மோடி சரிவை சந்தித்திருக்கிறாரா? விவசாயிகளிடம் சரணடைந்த விதத்தைக் கொண்டு இதை விட வலுவாக அதை என்னால் எவ்வாறு சொல்ல முடியும்…

பிரதாப் பானு மேத்தா: தனக்கென்றுள்ள ஆதரவு தளத்தில் தன் பிம்பத்தின் மீது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அவர் சந்தித்துள்ளார் என்றே நினைக்கிறேன். அவருடைய ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டங்களைத் துல்லியமாக அடக்குவதற்காகவே அவரைத் தேர்ந்தெடுத்ததாக நினைப்பவர்களாக இருப்பதால், அவரது ஆதரவுத் தளம் சற்று ஏமாற்றமடைந்திருப்பதாகவே கருதுகிறேன். அவ்வாறு நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் அதனாலேயே அவருடைய அடித்தளம் முற்றிலுமாகச் சிதைந்து விடப் போவதில்லை. எனவே அந்தப் பாதிப்பு நீண்ட கால அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கப் போவதில்லை என்றே கருதுகிறேன்.

கரண் தாப்பர்: அவரது ஆதரவாளர்களின் பார்வையில் வெல்ல முடியாதவர் என்பதாக அவருக்கென்றிருந்த பிம்பத்தின் ஒளி சற்றே மங்கியுள்ளதா?

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். மிகச் சரிதான். ஆனால் அவர் அதை எங்காவது ஈடுகட்ட முயற்சிப்பார் என்பதால் அது ஒரு ஆபத்தான தருணமாகவே மாறக் கூடும். ஆனால் அவரது உத்தி என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

கரண் தாப்பர்: ஜனநாயகத்தில் அரசாங்கம் மற்றும் பிரதமரின் அதிகாரம், செல்வாக்கை அடிப்படையாகக் கட்டுப்படுத்துகின்றவையாக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இரண்டாவதாக அவ்வாறு கட்டுப்படுத்துவது உண்மையில் ஆளும் கட்சியில் இருக்கும் எம்.பி.க்கள் தான்… ‘எங்களுக்கு உடன்பாடில்லை… இதைச் செய்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை’ என்று எதிர்த்து நின்று சொல்கின்ற திறன் அவர்களிடம் இருக்குமானால்… போரிஸ் ஜான்சனின் செயல்திறனை, பிரதமராக அவரது பதவியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அளவிற்கு எம்.பி.க்கள் கீர் ஸ்டார்மர், டோரி எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைப் பிரிட்டனில் இந்த வாரம் பார்த்தோம். இந்தியாவில் அதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. எனவே மோடியால் தனது கட்சி, எதிர்க்கட்சி என்று அனைவரின் மீதும் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது.

பிரதாப் பானு மேத்தா: கரண் நான் அந்தக் கேள்வி கூடுதலாக சிந்திக்கத் தக்கது. நேர்மையாகச் சொல்வதென்றால், இந்தியாவில் கட்சித் தாவல் தடைச் சட்டம் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால் அது தனிப்பட்ட எம்.பி.க்கள் அல்லது சிறிய குழுக்களாக இருக்கின்ற எம்.பி.க்களின் அதிகாரத்தைக் குறைத்திருக்கிறது.

கரண் தாப்பர்: அது சர்வாதிகாரிகளாக கட்சித் தலைவர்களை மாற்றியிருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா: மிகச் சரியாகச் சொன்னீர்கள். போதுமான எண்ணிக்கையில் இருந்தாலொழிய அவர்களால் கிளர்ந்தெழ முடியாது. கிளர்ந்து எழுவதற்கு கட்சியில் பாதிப் பேர் வேண்டும் என்பதால் கூட்டு நடவடிக்கை உண்மையில் மிகவும் கடினமாகவே உள்ளது. அது ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாக உள்ளது.

இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. இந்திய ஜனநாயகம் இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று அனைவரும் நினைக்கும் நேரத்தில் – குறைந்தபட்சம் அது இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்வதாகச் சொல்கின்ற போது – எதிர்க்கட்சிகள் உண்மையில் போதுமான அளவிற்கு ஒன்றுபடவில்லை. இவ்வாறான தருணத்தில் குறுகிய காலக் கருத்து வேறுபாடுகளைப் புறக்கணித்து அவர்களால் ஒன்று சேர முடியாது என்றால், இந்திய ஜனநாயகத்திற்கான மாபெரும் போரில் எதிர்க்கட்சிகளுக்கான பங்கு கேள்விக்குறியாகவே இருக்கும்.

கரண் தாப்பர்: இதுவரையிலான நேர்காணலின் சுருக்கமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் மோடியின் கீழ் ஜனநாயகம் நலிவடைந்து விட்டது, பிரதமர் எதேச்சாதிகாரியாக மாறியுள்ளார், விவாதங்கள் நிறுத்தப்பட்டு விட்டன, பாராளுமன்றம் செயல்படவில்லை, தேர்வுக் குழுக்கள்கூட செயல்படவில்லை என்று சொல்லலாமா? இந்தியாவின் ஜனநாயகம் நலிவடைந்து, சுருங்கி விட்டதா?

பிரதாப் பானு மேத்தா: மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஆம். நிலைமை முற்றிலும் அப்படியாகத்தான் இருக்கிறது.

கரண் தாப்பர்: இது அவரது [மோடி] அரசியல் நாட்காட்டியில் உள்ள ஒரு மைனஸ் ஆகும்.

பிரதாப் பானு மேத்தா: சரிதான்.

கரண் தாப்பர்: உங்களிடம் கொண்டு வர விரும்பும் இரண்டாவது விஷயம் கருத்து வேறுபாடு. முதலில் ஊடகங்களின் மீது கவனம் செலுத்தலாம். பிரதமருக்கு சவால் விடும் வகையில் கேள்வி எழுப்புவதற்கு ஊடகங்கள் ஏதாவது செய்கின்றன என்று நினைக்கிறீர்களா? இந்தியாவில் புலனாய்வுப் பத்திரிகைகள் நடைமுறையில் இல்லாமலே போய் விட்டன என்று கூறிய தலைமை நீதிபதி ‘நமது தோட்டத்தில் உள்ள அனைத்தும் ரோஜாக்களாக இருப்பதாகத் தெரிகிறது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பிரதாப் பானு மேத்தா: உச்சநீதிமன்றம் போதுமான சட்டப் பாதுகாப்பை பேச்சுரிமைக்கு வழங்காததால், அந்த உரிமை ஓரளவிற்கு இல்லாமலே போயிருக்கிறது. நீதிமன்றம் என்ற அந்த நிறுவனம் அதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்றே நான் சொல்வேன். ஆனால் இந்திய ஊடகங்களுக்கான சவால் என்ற பிரச்சனை உண்மையில் மிக மோசமான நிலையில் இருப்பதாகவே நினைக்கிறேன். பல்வேறு காரணங்களால் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தை எதிர்த்து பத்திரிகைகள் நின்றிருக்காத வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்ற பொருளில் பார்த்தாலும் அது இன்றைக்கு மிகவும் மோசமாகவே உள்ளது. தங்களுடைய வருமானத்திற்காக ஓரளவிற்கு ஊடகங்கள் அரசாங்கத்தையே சார்ந்திருக்கின்றன. இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை அந்த நிலைமை எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இந்திய ஊடகங்கள் இப்போது வெறுப்பை, பாரபட்சத்தை வெளிப்படையாகப் பரப்பி வருவதுதான் கூடுதல் கவலையளிப்பதாக இருக்கிறது.

ஹிந்தி செய்தித்தாள்களை வாசித்தால் – ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பாலான ஹிந்தி செய்தித்தாள்கள் – அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட்டவர்களின் ஆதரவைத் திரட்டுகின்ற வகையிலான செய்திகள் நிறைந்திருப்பதைக் காண முடியும். அதிகாரப்பூர்வமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்ற தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கும் போது, அவற்றில் பெரும்பாலானவை சிறுபான்மையினருக்கு எதிராக மறைமுகமாக அல்லது வெளிப்படையாகவே வெறுப்பைப் பரப்பி வருவது தெரியும். ஒருவகையில் ஊடகங்கள் தங்களுடைய கடமையைக் கை கழுவி விடுவது அல்லது குறைந்த பட்சம் அரசாங்கத்தை எதிர்த்து நிற்காமல் இருப்பது என்று வித்தியாசமான வழியில் இந்திய ஜனநாயகத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்ற பாத்திரத்தை வகித்து வருகின்றன.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: ஆக மோடியை ஆதரிக்கின்ற ஊடகங்கள் மோடியை விமர்சிக்காமல் இருப்பது மட்டுமல்லாது, அவர் அடையாளப்படுத்தி வருகின்ற வகுப்புவாதம், எதேச்சாதிகாரத்தையும் அவை முன்னெடுத்து வளர்த்து வருகின்றன.

பிரதாப் பானு மேத்தா: நிச்சயமாக. ஒரு கட்டத்தில் தனது பதவியை விட்டு மோடி விலகிச் சென்று விடலாம். ஆனாலும் இப்போது நடந்திருக்கும் வகுப்புவாத ஊடுருவலும், ஊடகங்கள் அதனை வெளிப்படையாக சட்டப்பூர்வமாக்கி இருப்பதும்தான் இந்திய ஜனநாயகத்திற்கும், இந்திய குடிமைச் சமூகத்திற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற மிகப் பெரிய சேதமாக இருக்கப் போகிறது. அது முன்னெப்போதுமில்லாத ஒன்றாக இருக்கின்றது.

கரண் தாப்பர்: நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஊடகங்கள் நம்புவதன் பிரதிபலிப்பாக அது இருக்கின்றதா? ஒருவகையில் மோடி விரும்புவதைப் போல மறைவான வகுப்புவாதத்திற்காக அவை அலைக்கழிகின்றனவா?

பிரதாப் பானு மேத்தா: உண்மையில் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பது மிகவும் கடினமானது. அதாவது அதை எவ்வாறு கண்டறிகிறோம் என்பதில் தெளிவிருப்பதில்லை. உங்களுடைய இரண்டு முன்மொழிவுகளுமே உண்மை என்றே கூறுவேன். அதாவது ஒரு மறைவான போக்கு இருந்து வருகிறது. ஒரு வகையில் தகவல் ஒழுங்கு மற்றும் ஊடக நிறுவனங்கள் அதைப் பெரிதாக்கும் போது, அது தன்னிறைவு கொண்ட தீர்க்கதரிசனமாக மாறுகின்றது. ஓரளவிற்குப் போதுமான மக்கள் இவ்வாறு நினைக்கிறார்கள் என்று நினைக்கின்ற போது, அதிக அளவிலான மக்கள் அவ்வாறு நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.

கரண் தாப்பர்: பெரிதாக்குகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு ஊடகங்கள் உள்ளாகின்றனவா?

பிரதாப் பானு மேத்தா: ஆமாம்.

கரண் தாப்பர்: அரசை இன்னும் விமர்சித்து வருகின்ற சிறிய எண்ணிக்கையிலான ஊடகங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு கணம் நீங்கள் பாருங்கள். மோடியை மட்டும் விமர்சிக்காமல் அரசையும் சேர்த்து விமர்சிப்பவர்கள் மீது ட்ரோல்களின் பட்டாளமே இறங்கி விடுகிறது. மாநில அரசுகளும் 2016 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தங்களால் சுமத்தப்பட்டுள்ள தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை 165% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளன. அத்தகைய குற்றச்சாட்டுகள் பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள், வரலாற்றாசிரியர்கள், மாணவர்கள், நடிகர்கள், சில நேரங்களில் இயக்குனர்கள், சிறு குழந்தைகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.

நகைச்சுவையாக இவ்வாறு சொல்லப்படுவதுண்டு – இந்தியாவில் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது பேசுவதற்கான சுதந்திரம் அல்ல; நீங்கள் ஏதாவது விமர்சித்துக் கூறும் போது, உங்களைக் கைது செய்வார்கள். நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்பதால் பேசி முடித்த பிறகு இருக்கின்ற சுதந்திரமே மிகவும் முக்கியம் என்று மக்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிரதாப் பானு மேத்தா: முறையாக நெருக்கடி நிலையை அறிவிக்கவில்லை என்பது போன்ற சில வழிகளில் இந்த அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமாகவே இருந்திருக்கிறது. அதனால் பெரிய அளவில் கைதுகள் இருக்கவில்லை. ஆயினும் உங்கள் அனைவராலும் சுட்டிக் காட்டப்படுபவை அனைத்துமே மிகச் சரியாக அரசாங்கத்தை மிகவும் திறனுள்ளதாக்குகின்ற வகையிலேயே இருக்கின்றன. அவ்வப்போது​​ பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், குடிமைச் சமூகம், நடிகர்கள் போன்றோரை மிரட்டக்கூடிய வகையில் அரசாங்கம் சரியான சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

மீண்டும் நான் உச்சநீதிமன்றப் பிரச்சனைக்குச் செல்கிறேன். அது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு கட்டத்தில் தாங்கள் எதிர்பார்க்கக்கூடிய அளவிற்கு நியாயம், நீதியை வழங்கக்கூடிய வேறு நிறுவனங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளும் போது ஊடகங்கள், தனியார் துணிவுடன் முடிவெடுக்கக் கூடும்.

கரண் தாப்பர்: உச்சநீதிமன்றத்தின் தோல்வி, அது ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக நிற்க மறுப்பது போன்றவற்றால் ஊடகவியலாளர்கள் எதேச்சாதிகாரம் கொண்ட தலைவர்களால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாகி விடுகிறார்கள்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதாப் பானு மேத்தா: பிணை கட்டாயம் கிடைத்து விடும் என உங்களால் எதிர்பார்க்க முடியாது. ஆட்கொணர்வு மனுவில் நீங்கள் மிகவும் சாதாரணமாக விசாரணையை எதிர்பார்க்க முடியாது. இந்திய அரசியலில், காஷ்மீரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முறையில் பத்திரிகையாளர்கள் மீது ஊபா வழக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. அந்த முறை நாடு முழுவதும் அதிக அளவிலே பிரதிபலிக்கப் போகிறது. அந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்து உச்சநீதிமன்றம் விரைவில் – ஒருவேளை ஓரிரண்டு ஆண்டுகளுக்கு அது வலியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றாலும் குறைந்தபட்சம் ஒரு கட்டத்தில் நீதி வழங்கபப்டுவதை எதிர்பார்க்கலாம் – அவற்றை முடித்து வைத்து இந்தியாவில் நீதித்துறை இன்னும் இயங்கி வருகிறது என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் காட்ட முடியும்.

கரண் தாப்பர்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போன்றவர்கள் போரின் புதிய எல்லையாக இப்போது குடிமைச் சமூகம் இருக்கிறது என்று காவல்துறையினரிடம் பகிரங்கமாகச் சொல்ல முடிந்திருப்பது உச்சநீதிமன்றத் தலையீடு இல்லாததன் விளைவுகளில் ஒன்றாகவே இருக்கிறது. அதுபோன்ற அணுகுமுறை குடிமைச் சமூகம், எதிராளிகள், கருத்து வேறுபாடு கொண்டவர்களை எதிரிகளாக அரசாங்கம் அல்லது அதன் சிந்தனையாளர்கள் வித்தியாசமாகச் சிந்தித்துப் பார்க்கத் தொடங்கியிருப்பதைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதாப் பானு மேத்தா: அது வெறுமனே தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது போன்றதொரு அறிக்கை அவர்களுடைய சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருப்பதாகவே நினைக்கிறேன். அந்த சித்தாந்தத்தின் முக்கிய கூறுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது – ஒற்றைச் சிந்தனையுடனே மக்கள் பேச வேண்டும். அந்த ஒற்றைச் சிந்தனையிலிருந்து யாராவது விலகிச் செல்லும் போது, ‘மக்களிடம் நியாயமான கருத்து வேறுபாடுகள் உள்ளன; பலவிதமான கண்ணோட்டங்களுடன் இருப்பது சிக்கலானது அல்ல’ என்பதாக இல்லாமல் மக்களுக்கு எதிரிகளாக அவர்கள் இருக்கிறார்கள் என்றே அவர்களுடைய விளக்கம் இருக்கிறது.

அது ஒரு வகையில் கண்காணிப்பைச் சட்டப்பூர்வமாக்கித் தருவதாகவே உள்ளது. பெகாசஸ் ஊழலையும் மிக விரைவாகக் கையாண்டிருக்கலாம் என்றாலும் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைப்பது என்று பெரும் நேரத்தை வீணடித்தது. ஆனால் இப்போது இந்திய குடிமைச் சமூகத்தின் மீதான போர் – பலவீனப்படுத்துகின்ற போரே ஆளும் கட்சியின் மேலாதிக்கச் சித்தாந்தமாக உள்ளது.

கரண் தாப்பர்: இந்த ஆட்சி உண்மையில் எதிராளிகளை, மாற்றுக் கருத்து கொண்டவர்களை, வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட மக்களை எதிரிகளாகவே பார்க்கிறது என்று சொல்ல வருகிறீர்கள்.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். தங்களுடன் உடன்படாதவர்களைக்கூட நாட்டுக்கு நல்லது என்ன என்பதைக் கண்டறிய முயற்சி செய்கிற குடிமக்களாகக் கருதுவதன் மூலமே பொதுவான நிறுவனத்தில் ஜனநாயகம் தழைக்கும் என்பதால் இதுபோன்ற செயல்கள் அவர்களை ஜனநாயகமற்றவர்களாகவே காட்டுகின்றன.

கரண் தாப்பர்: ஆனால் அதுபோன்றவர்களை கருத்து வேறுபாடு கொள்ளும் உரிமை கொண்ட குடிமக்களாக மோடி ஆட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. நம்மிடையே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை இல்லை என்றும் எதிர்ப்பு காட்டுபவர்களை எதிரிகளாகக் கருதி தரமற்ற வகையில் அவர்களை நடத்துகின்ற நயவஞ்சகமாகத் திணிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலை நம்மிடையே உள்ளது என்றும் கூறிய போது இதைத்தான் நினைத்தீர்கள் என்று நினைக்கிறேன்.

பிரதாப் பானு மேத்தா: இன்னும் ஒரு பொருளிலும் அது நயவஞ்சகமாகத் திணிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலையாக இருக்கிறது. அதாவது நிறுவன அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அது எவ்வித தயக்கமும் காட்டவில்லை. அந்த அதிகாரம் நெருக்கடி நிலைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்று பயன்படுத்தப்படவில்லை. நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து விட்டு தேவைப்படுகின்ற போதெல்லாம் அவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை மறுத்து விடலாம். அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டுவதில் எவ்வித தயக்கமும் இல்லாமல் மக்களைக் கைது செய்யலாம் என்பதாக இருக்கிறது.

கரண் தாப்பர்: இச்சூழலில் பெகாசஸ் வெளிப்பாடுகள் எந்த அளவிற்கு கவலையளிக்கின்றன? அரசாங்கம் தன்னுடைய பதிலில் அதைத் தெளிவாகத் தவிர்த்திருக்கின்றது – உண்மையாகச் சொல்வதென்றால் அது நேர்மையற்று இருந்திருக்கிறது என்றே கூறுவேன். அது குறித்து நீங்கள் எந்த அளவிற்கு கவலைப்படுகிறீர்கள்?

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதாப் பானு மேத்தா: பெகாசஸ் வெளிப்பாடுகள் கவலையளிக்கின்றன என்றாலும் அது குறித்து நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை என்றே சொல்வேன். வெளிப்படையாக நேர்மையாகச் சொல்வதென்றால், இந்த அரசாங்கம் மட்டுமல்லாது, கண்காணிப்புக்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் உருவாகியுள்ள பதட்டத்தில் உண்மையில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜனநாயகங்களும் தோற்றே இருக்கின்றன. அதாவது பிரிட்டன், அமெரிக்காவில் உள்ள அரசாங்கங்களும் தங்கள் குடிமக்கள் மீதே உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளன என்று சொன்னாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

கரண் தாப்பர்: நான் இந்த அரசாங்கம் மாட்டிக் கொண்டிருப்பதாகவே சொல்ல வருகிறேன். அரசியல் எதிரியாக இருக்கக்கூடிய ராகுல் காந்தியின் நண்பர்களில் இருந்து பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண்மணிகள் மற்றும் சாதாரண மக்கள் என்று அரசுக்கு எதிராகப் பல்வேறு வகையில் பலரும் பரவியிருப்பது குறித்து நீங்கள் கவலைப்படவில்லையா?

பிரதாப் பானு மேத்தா: கண்காணிப்பு மிகுந்த கவலையளிப்பதாகவே இருந்தது. அது உள்ளார்ந்த கவலையை ஏற்படுத்தியதாக, சில வழிகளில் வெளிப்படையாக இடைஞ்சல் செய்வதாகவும் இருந்தது. ஏனெனில் குடிமக்கள் என்ற நமக்கான தகுதியைக் குறைப்பதாக அது இருந்தது. தனியுரிமை என்பது என்னிடமுள்ளதை மறைத்துக் கொள்வதாக மட்டுமே இருக்கவில்லை. அது அடிப்படை உரிமை சார்ந்ததாக இருக்கிறது. அரசு அதனுள் ஊடுருவது ஆச்சரியமளிக்கவே செய்கிறது. ஜனநாயகத்தின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால் – எடுத்துக்காட்டாக, 1960களில் நடைபெற்ற குடிமை உரிமைகள் இயக்கத்தில் எஃப்.பி.ஐயின் பங்கு ஒருவகையில் இது போன்றே இருந்தது. ஜனநாயக அரசுகள் விரிவான கண்காணிப்புக்குத் தயங்குவதில்லை என்பதற்கான எச்சரிக்கையாகவே அது இருந்திருக்க வேண்டும். எந்த அளவிற்கு அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே எழுகின்ற கேள்வியாக உள்ளது.

கரண் தாப்பர்: கண்காணிப்பு நடக்கிறதென்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர இந்தியாவில் அது நடப்பதற்கான வாய்ப்பில்லை என்று நினைத்ததாலேயே அதுகுறித்து நாம் அதிர்ச்சியடைந்தோம் இல்லையா?

பிரதாப் பானு மேத்தா: உண்மையில் நான் ஆச்சரியப்படவில்லை. அதாவது அவ்வாறு நடக்கிறது என்பது குறித்து யாராவது ஆச்சரியப்பட்டிருப்பார்களா என்பது குறித்தே நான் ஆச்சரியப்படுகிறேன். உண்மையாகச் சொல்வதென்றால் அவர்கள் பிடிபட்டதுதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

கரண் தாப்பர்: முன்னர் நிறுத்திக் கொண்ட விஷயத்திற்கு இப்போது வருகிறேன். அடிக்கடி நீங்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் கவலைக்குரிய மூன்றாவது பகுதியான நீதித்துறை – குறிப்பாக உச்சநீதிமன்றம். அதை இவ்வாறு சொல்லலாம் என்று நினைக்கிறேன். 1970களின் நடுவில் ஜபல்பூர் மாவட்ட துணை நீதிபதி வழக்கிற்குப் பிறகு, இந்திய மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு ஆதரவாக மிகப் பெரிய அரணாக உச்சநீதிமன்றம் இருக்கும் என்றே அனைவரும் கருதினர். ஆனால் சமீப காலங்களில் அடிப்படை அரசியலமைப்பு முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகள், காஷ்மீர் பிரச்சனை, தேர்தல் பத்திரங்கள், ஆட்கொணர்வு, இன்னும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கியமான பிரச்சனைகளில் வேண்டுமென்றே வழக்குகளை விசாரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் பிரச்சனைகளைத் தள்ளிப் போட்டிருக்கிறது. அந்த வழக்குகளின் விளைவுகள் அரசாங்கத்தைச் சங்கடப்படுத்தக்கூடும் என்று கருதியதால் அவ்வாறு செய்திருக்கலாம். அரசியலமைப்பு தொடர்பான சட்டப் பிரச்சனைகளில் நீதிமன்றம் தன்னுடைய கடமையைத் தட்டிக் கழித்திருப்பது எந்த அளவிற்கு கவலையளிப்பதாக இருக்கிறது?

பிரதாப் பானு மேத்தா: அது கவலையளிப்பதாகவே இருந்தாலும் அதைப் பற்றிய சற்று நுணுக்கமான வரலாற்றுப் பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. இந்திய நீதித்துறை பற்றிய எனக்கிருக்கும் அறிவார்ந்த பார்வையைக் கொண்டு அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கும், அரசாங்கத்தைப் பொறுப்பாக்குவதற்கும் இந்திய நீதித்துறையிடம் உள்ள திறன் மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே நான் கூறுவேன். நீதித்துறையின் செயல்திறன் மிக மோசமாக இருக்கிறது. நடைமுறையில் அது அரசியல் ஸ்தாபனத்தை எதிர்த்து ஒருபோதும் நின்றிருந்திருக்கவில்லை.

எடுத்துக்காட்டாக ஜபல்பூர் மாவட்ட துணை நீதிபதி வழக்கில் ஏற்பட்ட அதன் தோல்விக்கான செயல்திறன் இழப்பீடாகவே பொதுநல வழக்கு குறித்த புரட்சி இருந்தது. ஆனால் உண்மையில் அதிலும் கூட வழங்கப்பட்ட தீர்வுகளைக் காட்டிலும் அதன் அறிவிப்புகளே மிகவும் பிரமாண்டமாக இருந்திருக்கின்றன. அதுபோன்றதொரு வரலாறு நீதித்துறைக்கு இருக்கின்றது.

கரண் தாப்பர்: அப்படியென்றால் நாம் நீதிமன்றத்தை கூடுதலாகவே நம்பி பாராட்டியிருக்கிறோமா?

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு நீதித்துறையை நம்பியிருக்கக் கூடாது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நீதித்துறையை நாடினால், ஏற்கனவே அந்தப் போரில் தோற்று விட்டீர்கள் என்றே அர்த்தம்.

அந்த அளவுகோல்களின்படி பார்த்தாலும்கூட, கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் ஒரு வகையில் அடிப்படை அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து விலகி நின்றிருப்பது முதலாவதாகத் தெரிகிறது. இரண்டாவதாக தன்னுடைய கொலீஜியம் அமைப்பு செயல்பாடு மூலமாக நீதிபதிகள் பதவி உயர்வு பெறும் விதம், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் விதம் போன்ற விவகாரங்களில் நிறுவனங்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்திலிருந்து விலகி மிகவும் மோசமாக நடந்து கொண்டிருப்பது நீதிமன்றம் நியாயமாக நடந்து கொள்ளும் என்பதைக் கூற முடியாததாக்கி இருக்கிறது.

கரண் தாப்பர்: ஆட்கொணர்வு பற்றி இப்போது எடுத்துக் கொள்ளலாம். அது எந்தவொரு ஜனநாயகத்திலும் எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கின்ற மிக முக்கியமான அடிப்படை உரிமையாகும். சமீப காலங்களில் நீதித்துறையின் செயல்திறன் முரணுடனே இருந்து வருகிறது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அர்னாப் கோஸ்வாமிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், ஓராண்டிற்கும் மேலாக குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் சித்திக் கப்பன் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட காஷ்மீர் விஷயத்தில், நூற்றுக்கணக்கான ஆட்கொணர்வு மனு மீதான வழக்குகள் விசாரிக்கப்படவே இல்லை. சில வழக்குகள் விசாரிக்கப்படாமலேயே காலாவதியாகியுள்ளன. கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானவர்களின் அவலத்தை உச்சநீதிமன்றம் கண்டு கொள்ளாதிருந்தது. இந்திய குடிமக்கள் மீது இந்த நீதிமன்றத்திற்கு எந்தவித அக்கறையும் இருக்கவில்லை என்றே தெரிய வந்திருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா: தாராளவாத அரசியலமைப்பு ஜனநாயகத்தின் தலைமை நீதிமன்றமாக இருக்கின்ற உச்சநீதிமன்றம் தனது கடமைகளைத் துறந்து விடக் கூடாது என்ற கருத்தை மீறியிருக்கிறது. நீங்கள் சொன்னதைப் போல எப்போதாவது அது பிறப்பிக்கின்ற உத்தரவுகளும்கூட ஒரே போன்றதாக இருப்பதில்லை. அர்னாப் கோஸ்வாமி விவகாரத்தில் நீதித்துறை வழங்கிய தீர்ப்பு உங்களுக்குத் தெரியும். வேறெதற்கும் முன்னுதாரணமாக அந்த தீர்ப்பு அமைந்திருக்கவில்லை. பிணை வழங்குவது, பிணையை நிறுத்தி வைப்பது போன்ற நடைமுறைகள் இப்போது மேலும் மோசமாகி இருக்கின்றன.

எனவே தரப்படுகின்ற அழுத்தத்தாலேயே இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்ற கருத்தை உதறித் தள்ளி விட முடியாது. ஒருவேளை அரசாங்கத்திற்காக உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற உண்மையான விசுவாசிகள் அதன் சித்தாந்தத்திற்கு மாறியவர்களாக இருப்பதாலும் அவ்வாறு நடந்திருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும் தான் செய்ய வேண்டிய பணிகளை உச்சநீதிமன்றம் செய்திருக்கவில்லை என்பதே உண்மை.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: உச்சநீதிமன்றம் நம்மை ஏமாற்றுகின்றதா?

பிரதாப் பானு மேத்தா: அவ்வாறு சொல்லலாம்.

கரண் தாப்பர்: சற்று முன்பு நீங்கள் விமர்சித்த கொலீஜியம் அமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையிலுள்ள உறவு பற்றி என்ன சொல்வீர்கள்? 2014 செப்டம்பரில் கோபால் சுப்ரமணியம் தொடங்கி, பலமுறை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களை இந்த அரசாங்கம் நிராகரித்துள்ளது அல்லது கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரங்கள் எதிலும் தன்னுடைய நியமனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உண்மையில் அந்த நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை நியாயம் என்று கருதியே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருந்துள்ளது. அதற்கு மாறாக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் பலருக்கு அரசாங்கம் வேலைகளை வழங்கி வருகிறது. நீதிபதிகள் பலரும் பகிரங்கமாக பிரதமரைப் புகழ்ந்து பேசத் துவங்கியுள்ளனர். இருவருக்குமிடையே தங்களுக்குச் சாதகமாக இருந்து வருகின்ற நெருக்கமான உறவு கவலையளிக்கும் வகையில் இருக்கின்றதா?

பிரதாப் பானு மேத்தா: தனக்கான நீதிபதிகளை கொலிஜியம் தேர்வு செய்து வந்த போதிலும் – அதுகுறித்த வரலாற்றுக் கண்ணோட்டத்தைக் கொஞ்சம் சொல்கிறேன் – சற்றே தளர்வாகச் சொல்வதானால், அது எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை நோக்கி ஒரு கண்ணை வைத்துக் கொண்டேதான் இருந்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ‘தேசத்தின் மீட்பர்’ என்று புகழ்ந்து நீதிபதி பி.என்.பகவதி எழுதியிருந்த நம்ப முடியாத அந்த வெளிப்படையான கடிதம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆக இன்று நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பவற்றிற்கு ஏற்கனவே முன்மாதிரிகள் இருக்கின்றன. ஆனால் இப்போது அதன் அளவு, தீவிரம் மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. இப்போதைய அரசு நிர்வாகி அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்திய ஒருவரின் பெயரை உச்சநீதிமன்றம் கைவிடுகின்ற வரை நூற்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் நியமனத்தை பதினாறு மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அது இதுவரையிலும் நாம் கண்டிராத அளவிலான செயலாகும். எடுத்துக்காட்டாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த கோகாயின் நடத்தையை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, நீதிபதியாக இருந்த ஒருவர் தன்னுடைய சொந்த காரணத்தை முன்னிறுத்தி செயல்பட்ட நிகழ்வை உலகில் உள்ள எந்தவொரு நீதித்துறையின் வரலாற்றிலும் காண்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். நீதி குறித்து இருக்கின்ற அடிப்படை அனுமானங்கள் அனைத்தும் முற்றிலுமாகப் புறந்தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

கரண் தாப்பர்: நீதிபதி கோகாய் பின்னர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக்கப்பட்டார். அவருக்கு முன்பாக நீதிபதி பி.சதாசிவம் கேரளாவின் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டிருந்தார்.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். இதுபோன்ற நடைமுறை இன்னும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இப்போது தங்கள் அமர்வுகளிலேயே நீதிபதிகள் வெளிப்படையாக பிரதமரைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே நெருக்கமின்மை இல்லாமல் போயிருக்கிறது இல்லையா?

பிரதாப் பானு மேத்தா: நெருக்கமின்மை இருக்கவில்லை என்பது மட்டுமல்லாது, அரசாங்கம் தன்னுடைய சித்தாந்தப்படி செய்வதை அவர்கள் இப்போது சட்டபூர்வமாக்குவதும் நடந்து கொண்டிருக்கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா வெளிப்படையாக, கருத்தியல் ரீதியாக அரசாங்கம் செய்வதைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கிறார்.

கரண் தாப்பர்: அரசாங்கத்தை சங்கடப்படுத்தக் கூடும் என்று உணருகின்ற அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. அதுபோன்று எழுகின்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்கான வழியாகவே அது இருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா: சங்கடத்தைத் தவிர்ப்பதற்கான வழியாக அது இருக்கின்ற அதே நேரத்தில் அதிகாரங்களை நிறைவேற்றுபவர்களைப் பொறுப்பேற்க வைக்க மறுப்பதாகவும் உள்ளது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: ஆக இவையனைத்தும் உச்சநீதிமன்றம் நம்மைக் கைவிட்டு விடுவதற்கான நிகழ்வுகளாகவே இருக்கின்றன என்று மீண்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கத் தவறுகின்ற போது உச்சநீதிமன்றம் குடிமக்களைக் கைவிட்டு விடுகிறது. காஷ்மீர், குடியுரிமை சட்டத் திருத்தம் அல்லது தேர்தல் பத்திரங்கள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளை விரைந்து விசாரிக்கத் தவறுகின்ற போது அரசியலமைப்பை அது கைவிடுகிறது.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். தான் வழங்குகின்ற தீர்ப்புகளில் முரணாக இருக்கும் போதும் அது அவ்வாறாகவே நடந்து கொள்கிறது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: அரசியலமைப்பு வழக்குகளை விசாரிக்காத போது, அரசியலமைப்பிற்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் நியாயமானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதே இங்கே மோசமான விளைவாக இருக்கிறது. சில நேரங்களில் அதை மாற்றுவதற்கு மிகவும் தாமதமாகி விடுகிறது.

பிரதாப் பானு மேத்தா: தகாத செயல்கள் மட்டுமல்லாது, அவை உருவாக்குகின்ற அச்சம் கலந்த சூழலும் நம்பிக்கைக்குரியவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆபத்துக்களைச் சந்திப்பதற்கு மக்கள் தயாராகவே இருக்கின்றனர். ‘ஆளுபவர் என்னைத் தாக்குகின்ற போது, குறைந்தபட்சம் நீதித்துறையாவது எனக்கு நீதி வழங்கும்’ என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இப்போது மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆனாலும்கூட பிணை பெற என்னால் முடியாது என்பதை அறிந்தே இருக்கிறேன். சுதா பரத்வாஜ் வழக்கை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு பிணை கிடைத்துள்ளது. ஒரு குடிமைச் சமூகத்தில் அபாயங்கள் குறித்த கணக்கீடுகள் வியக்கத்தக்க முறையில் மாறியிருக்கின்றன. ஆக தகாதவற்றை சட்டப்பூர்வமாக்குவது மட்டுமல்லாமல், அச்சத்தை உருவாக்குகின்ற கருவியாகவும் அது உள்ளது.

கரண் தாப்பர்: பொறுப்பு – ‘உச்சநீதிமன்றத்தின் குற்றம்’ என்றே சொல்வேன் – மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் அவர்களிடம் அரசியலமைப்பு குறித்த எதிர்வினை எதுவும் இல்லாததால் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் அல்லது வழக்கறிஞர்கள் என்று நாம் அனைவரும் உணர்கின்ற அச்சம், மன அழுத்தம் உணர்வுகள் அதிகரிக்கின்றன. நீதிமன்றங்களின் மூலம் இறுதி மாற்று வழி, தீர்வு என்று எதுவும் கிடைக்காததாலேயே நாம் அனைவரும் அவ்வாறு உணர்கிறோம்.

பிரதாப் பானு மேத்தா: உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை குற்றம் இன்னும் மோசமாக உள்ளது. ஏனெனில் அது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மிகவும் சுதந்திரமான நிறுவனம். மற்ற நிறுவனங்கள் எல்லாம் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தைச் சார்ந்தே இருக்கின்றன. குறைந்தபட்சம் கொள்கையளவில் தன்னுடைய நியமனம் உள்ளிட்டு முற்றிலுமாக தனித்து சுயமாக நிலைத்திருந்த நிறுவனமாகவே உச்சநீதிமன்றம் இருந்தது. அந்த வகையில் பார்க்கும் போது, அரசாங்கத்துடன் இப்போது அது உடந்தையாக இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

கரண் தாப்பர்: அப்படியென்றால், உச்ச நீதிமன்றத்தின் சீரழிவு என்பது மற்ற எல்லா சீரழிவுகளைக் காட்டிலும் மிகவும் மோசமானதாக இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: முற்றிலும் சுயமாக ஏற்படுத்திக் கொண்டதாக இருப்பதால், அது எல்லாவற்றிலும் மிக மோசமான சீரழிவாகவே இருக்கிறது. கரண் தாப்பர்: உங்களுடன் பேச விரும்புகின்ற கவலையளிக்கும் நான்காவது பகுதிக்கு வருவோம். அது முஸ்லீம்களை நடத்துவது குறித்தது. முதலில் முஸ்லீம்கள் மீது ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றம் சாட்டினார்கள். பின்னர் அவர்களை ‘பசு படுகொலை’க்கு உள்ளாக்கினார்கள். இப்போது கண்காணிப்பாளர்களும், கும்பல்களும் முஸ்லீம்கள் குர்கானில் தொழுகை நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். அசைவ உணவுக் கடைகளை நடத்த குஜராத்தில் அனுமதிக்க மறுக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் வளையல் விற்பனையாளர்கள், உணவு விற்பனையாளர்கள், காய்கறி விற்பனையாளர்களைக் கூட அனுமதிப்பதில்லை. தன்னுடைய மௌனத்தாலும், செயல்படத் தவறியதாலும் அரசாங்கம் மட்டுமல்லாது நமது சமூகமும் முஸ்லீம்களை இந்தியாவில் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குகிறது என்று கருதுகிறீர்களா?

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். பாஜகவின் சித்தாந்தம் ஹிந்துக்கள் பலியாகின்றார்கள் என்பதையே கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ‘பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு மீள்வது?’ என்ற கேள்வியை எழுப்பினால் அவர்களிடமிருந்து ‘முஸ்லீம்களின் ஆதிக்கச் சின்னங்களை முறியடிப்பதன் மூலம் ஹிந்துக்கள் பலியாவதை முறியடிக்கலாம்’ என்றே அதற்கான பதில் நேரடியாக வரும். கோவில்கள் மீது வெறி, முஸ்லீம்கள் மீதான ஹிந்துக்களின் கலாச்சார மேலாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதாகவே அந்தப் பதில் இருக்கின்றது. அவர்களிடம் இந்த கருத்தியல் திட்டம் குறித்த மறுபேச்சுக்கான இடம் எதுவும் இருக்கவில்லை.

இதற்கு எதிராக பெரும்பாலான குடிமைச் சமூகம் போதுமான அளவு கோபம் கொண்டு எழவில்லை என்றே நான் நினைக்கிறேன். அது நம்மைப் பாதிக்காது என்றே ஓரளவிற்கு நம்மில் பலரும் நினைத்து வருகிறார்கள். தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக எண்பது சதவிகித இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மாயையாக விரைவிலே மாறக் கூடும். சர்வாதிகார அரசுகள் பெரும்பாலும் ஒரு சமூகத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. இதுபோன்று வெளிப்படையாகப் பரப்பப்படுகின்ற வகுப்புவாத நச்சு சட்டப்பூர்வமாக்கப்படுவதை நான் என்னுடைய வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று தான் சொல்வேன். அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாது நமது நண்பர்கள், குடும்பங்கள் என்று நமக்குத் தெரிந்தவர்களின் வட்டங்களிலும், இந்தியாவின் அதிகாரம் மிக்க மேல்தட்டினரிடமும் அந்த நச்சு நன்கு ஊடுருவியுள்ளது.

கரண் தாப்பர்: மோடி அரசுதான் இப்போது அதை வெளிக்கொண்டு வந்திருக்கிறதா? அது மறைவாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்றே நான் ஊகிக்கிறேன். முன்பெல்லாம் அது எப்படியோ அடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாக கருதப்படவில்லை. மக்கள் அதற்கான ஆதரவுக் குரலை எழுப்பவில்லை. இப்போது அவர்கள் அதைப் பற்றி பேசுவதை, சில சமயங்களில் பெருமையுடன் பேசிக் கொள்வதை எப்படியோ மோடி ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்.

பிரதாப் பானு மேத்தா: அதை மட்டுமே மோடி ஏற்றுக் கொள்ள வைக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் அது இப்போது அரசியல் வெற்றிக்கான பாதையாக மாறியிருக்கிறது. அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, சாத்வி பிரக்யா போன்றோரை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாகச் சொல்வதானால் பாஜகவிற்குள் யோகி ஆதித்யநாத் போன்றவர்களின் வரலாறும் இருக்கிறது. இவர்கள் அனைவரும் இந்த வகையான வகுப்புவாத நச்சை வெளிப்படுத்துவதன் மூலம் அதிகாரக் கட்டமைப்பில் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கும் அனுபவசாலிகள். எனவே மேல்நோக்கி நகர்வதற்கான ஊக்கத்தொகைகளை வழங்குவதாக இருந்தாலும் நமது அரசியல் வட்டாரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடாததாக இருந்தவை இப்போது வியத்தகு வகையில் பெருமளவிற்கு ஏதோவொரு வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக தொழில்முறை வட்டாரங்களிலும் மாறி விட்டன.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இந்தியாவில் கிட்டத்தட்ட சாதாரண விஷயமாக மாறியிருக்கும் வகுப்புவாத ஆதரவு திரட்டலே கடந்த ஏழு ஆண்டு கால ஆட்சியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. யோகி ஆதித்யநாத் அடிக்கடி ‘அப்பா ஜான்’ பற்றி பேசுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று நமக்குத் தெரியும். பிரதமரோ அவுரங்கசீப்பைத் தோண்டி எடுக்கிறார். அவரது மனதிலும் அதே கவனம் இருக்கிறது. இப்போது ​​விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் ‘இஸ்லாம் என்பது புற்றுநோய்’ என்றும் அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் பகிரங்கமாக அறிவித்திருப்பதைக் கவனிக்கின்றேன். இதுபோன்ற நடத்தைகள் நமது குழந்தைப் பருவத்திலோ அல்லது இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவோ ஏற்றுக் கொள்ள முடியாதவையாகவே இருந்திருக்கின்றன. பொதுவெளியில் யாரும் இதைச் சகித்துக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அது வழக்கமான ஒன்றாகி விட்டது. இந்தியா எந்த அளவிற்கு மாறியிருக்கிறது என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: இந்தியா மாறியிருப்பதற்கான அடையாளமாகவே அது இருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் மட்டும் நடந்திருக்கவில்லை. வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற போது, தெற்காசியாவில் உள்ள அனைத்து குடியேற்றங்களிலும் அது நிகழ்ந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். பாகிஸ்தானில் நடந்திருப்பதைப் பாருங்கள். ஒருவகையில் பாகிஸ்தானின் இஸ்லாமியமயமாக்கல் குறைந்து விடும் என்றே நாம் அனைவரும் நினைத்திருந்தோம். அந்த சிந்தனை வலுவிழந்து விடும் என்றே நாம் நினைத்திருந்தோம். ஆயினும் அது வலுவுடன் தனது வேகத்தை அதிகரித்திருக்கிறது. எனவே நாம் அனைவரும் இதிலிருந்து பின்வாங்கி, ‘ஒட்டுமொத்த தெற்காசியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?’ என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். 1947ஆம் ஆண்டின் தீர்வாக மதச்சார்பற்ற குடியரசாக இந்தியா இருக்கும் என்றே நாம் நினைத்தோம். இஸ்லாமிய நாடாக – குறைந்தபட்சம் தொழில்முறை நவீன நிறுவனங்களைக் கொண்ட மிதவாத இஸ்லாமிய நாடாக – பாகிஸ்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ந்நமக்கு இருந்தது. வங்கதேசம் உட்பட தெற்காசியா முழுவதும் தன்னுடைய பொருளாதார வெற்றி குறித்த பெருமையில் மூழ்கிக் கொண்டிருந்தாலும், உள்நாட்டில் அது தற்போது கடுமையான கருத்தியல்ரீதியான அழுத்தத்திலே இருந்து வருகிறது.

கரண் தாப்பர்: இலங்கையைப் பொறுத்தவரையிலும் அது உண்மையாகவே இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: இலங்கையைப் பொறுத்தவரை அது நீண்ட காலமாகவே உண்மையாகவே இருந்து வருகிறது. தெற்காசியாவில் உள்ள குடியேற்றங்களுக்கு என்னவாயிற்று? ஒவ்வொருவருக்கொருவரிடையே சுதந்திரம், தனிப்பட்ட கண்ணியத்தை மதிக்கின்ற நவீன, சமூக ஒப்பந்தம் இருந்து வந்த அனைத்து இடங்களும் இப்போது முற்றிலும் பிணைக் கைதியாக கூட்டு சுயமோகத்திற்கு ஆட்பட்டவையாக மாறியுள்ளன.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பெரும்பான்மைவாதம் உலகின் இந்தப் பகுதியில் இப்போது பரவி வருகிறது என்ற உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவை மட்டுமே கணக்கில் கொண்டு பார்க்கும் போது இதற்கு முன்பாக, பிரதமர் அல்லது உத்திரப்பிரதேச முதல்வர் போன்ற அரசியல்வாதிகள் முஸ்லீம்களை ‘அப்பா ஜான்’ என்று குறிப்பிட்டதாக அல்லது அவுரங்கசீப்பைக் குறிப்பிட்டு அவர்களைக் கேலி செய்ததாக உங்கள் நினைவில் இருக்கிறதா? விரல்கள் யாரை நோக்கி சுட்டிக் காட்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். சிறுவயதில் அது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகக் கருதப்படவில்லை என்றாலும் இப்போது அது வழக்கமான ஒன்றாகி விட்டது.

பிரதாப் பானு மேத்தா: சரிதான். எனக்குத் தெரிந்தவரை இரண்டு நிகழ்வுகள் உள்ளன. அவை 1930கள் மற்றும் 1940களில் மிகவும் பரவலாக ஊடுருவியிருந்ததாக நினைக்கிறேன். குடிமைச் சமூகத்திடம் அது குறித்து எழுந்த விளைவு நமக்குத் தெரியும்.

கரண் தாப்பர்: நல்லவேளை அவை நாம் பிறப்பதற்கு முன்பே நடந்தவை…

பிரதாப் பானு மேத்தா: ஆம். அணிதிரட்டல் நமக்கான படிப்பினைகளைக் கொண்டுள்ளது. ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது அவர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் – ஒருவகையில் அந்த ஒட்டுமொத்த இயக்கமும் குறிப்பிட்டவர்களின் ஆதரவைத் திரட்டுவதாகவே அமைந்திருந்தன. ஆனாலும் அந்த இயக்கம் அடைந்துள்ளதைப் போன்ற போன்ற தேர்தல் வெற்றியை, பரவலான அங்கீகாரத்தை அதன் மூலமாக அவர்களால் பெற முடியும் என்று நாம் நினைத்திருக்கவில்லை.

கரண் தாப்பர்: அதுதான் மோடி அதற்கு கொடுத்திருக்கும் பரிசு.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம் அதுதான் மோடி அதற்கு கொடுத்துள்ள பரிசு. மேலும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி இங்கே எழுகின்றது – அவர்களுடைய சித்தாந்தத்தைத் தழுவுவது, உண்மையான கருத்தியல் மாற்றம் என்று எந்த அளவிற்கு மக்கள் மோடியை, அவரது ஆளுமையை நம்புவதால் நிகழ்ந்திருக்கிறது?

கரண் தாப்பர்: என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் தொடங்கும் போது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அவர்களுடைய பிரச்சாரம் முஸ்லீம்களை மிகக் கொடியவர்களாகச் சித்தரிக்கும் வகையிலேயே இருக்கப் போகிறது. அந்த மாநிலத்தில் இருக்கின்ற எண்பது சதவிகித ஹிந்துக்களுக்கும், இருபது சதவிகித முஸ்லீம்களுக்கும் இடையே துருவப்படுத்துதல், பிளவுபடுத்துதல் நடக்கப் போகிறது. அவர்களுடைய பிரச்சாரத்தில் பொருளாதார செயல்திறன், திறமையான நிர்வாகம், கோவிட்-19ஐ அவர்கள் நிர்வகித்த விதம் போன்ற பொதுமக்களுக்கு முக்கியமானவை எதுவும் இருக்கப் போவதில்லை. மக்களுக்கு இடையே உள்ள வகுப்புவாத உறவின் மேற்பரப்பைச் சொறிந்து விட்டு பிரச்சனையை மோசமாக்குவதாகவே அவர்களுடைய பிரச்சாரம் இருக்கப் போகிறது.

பிரதாப் பானு மேத்தா: அத்தகைய வகுப்புவாத துருவமுனைப்பு முயற்சியில் ஏற்கனவே அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மோடியை நாம் மிகவும் குறைத்து மதிப்பிடுவது இங்குதான் என்று நான் நம்புகிறேன் – ‘இது அல்லது அது’ என்பது போன்ற சூழ்நிலையாக இல்லாமல் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. பொருளாதாரப் பிரச்சனைகளை அல்லது வகுப்புவாதப் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதற்கு இடையில் இருக்கின்ற முரண்பாட்டைப் பலரும் காண்பதில்லை. எப்படியாவது பொருளாதாரப் பிரச்சனைகளை நோக்கி உரையாடல்களைத் திருப்பி விட முடியும் என்றால், மறைவாக இருக்கின்ற வகுப்புவாத துருவமுனைப்பு மறைந்து விடும் என்ற மாயையில் நாம் ஒருபோதும் இருந்து விடக் கூடாது.

கரண் தாப்பர்: இந்த ‘மறைவான, வகுப்புவாத துருவமுனைப்பு’ இப்போது வெளியே வந்திருக்கிறது. அது தொடர்ந்து இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது என்றே நினைக்கிறேன். அது அப்படியே மறைந்து போய் விடாது இல்லையா?

பிரதாப் பானு மேத்தா: அது பிரித்தெடுக்க மிகவும் கடினமான நச்சாக இருக்கிறது. ஏற்கனவே சொன்னதைப் போல முப்பதுகள் மற்றும் நாற்பதுகளைப் பற்றி, இந்தியப் பிரிவினை மட்டுமல்லாது, அதனுடன் இணைந்து நடந்த பயங்கரமான வன்முறைகளுக்கும் காரணமான செயல்முறைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: மீண்டும் அதுபோன்று ஏதாவது இப்போது நடக்குமா?

பிரதாப் பானு மேத்தா: மீண்டும் அதுபோன்று மட்டுமின்றி வேறு விஷயங்களும் நடக்கலாம். ஒருவேளை மகாத்மா காந்தியின் படுகொலை நடக்காமல் இருந்திருந்தாலும் இந்த வன்முறைகள் எதுவும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காது என்பதே உண்மையில் என்னுடைய கணிப்பாகும். குடிமைச் சமூகத்தில் நிறுவப்பட்டு விட்ட இந்த நச்சு எதையெல்லாம் கட்டவிழ்த்து விடும் என்பது குறித்து நாம் மிகவும் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்றே நினைக்கிறேன்.

கரண் தாப்பர்: அதன் மூலம் இந்தியா தன்னைத்தானே முறித்துக் கொள்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: தன்னை மிக ஆழமாகவே இந்தியா முறித்துக் கொண்டிருக்கிறது. நான் இந்தியா குறித்து அதிகமாக கவலைப்பட்டதில்லை என்றாலும் வகுப்புவாதத்தின் இந்த செயல்முறைகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதைப் பற்றி கொடுங்கனவுகள் இப்போது என்னிடம் இருக்கின்றன.

கரண் தாப்பர்: அந்த மோசமான கொடுங்கனவு என்னவாக இருக்கிறது? ஒருவிதத்தில் நாட்டைத் துண்டாடுவது? அல்லது உள்நாட்டுப் போர்?

பிரதாப் பானு மேத்தா: அரசியல் வடிவம் எடுத்தால் அது மிகப்பெரிய அளவிலான வன்முறையாக இருக்கப் போகிறது. இந்தியாவின் மக்கள்தொகைப் பரவலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பிரிவினை இயக்கங்கள் அல்லது மற்றொரு பிரிவினை போன்ற வழக்கமான வடிவங்களை அது எடுக்காது என்றே நினைக்கிறேன். அரசியல் ரீதியாக அது சாத்தியமாகாது. ஆயினும் அரசால் தூண்டி விடப்படும் வன்முறைகள் அதிகம் கொண்டதொரு நாட்டை நம்மால் பெற முடியும். நமது மக்கள்தொகையில் இருக்கின்ற கணிசமான பிரிவினர் இந்த நாட்டை தங்கள் சொந்த நாடு என்று நினைத்துக் கொள்ள ‘அனுமதிக்கப்படாது’ முற்றிலுமாக அந்நியப்படுத்தப்படலாம். அது மிகவும் முக்கியமான விஷயம்; அவர்கள் உண்மையில் இந்த நாட்டை தங்கள் சொந்த நாடு என்றே நினைத்து வருகிறார்கள் என்றாலும் அவ்வாறு இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட செயல்முறையில் அல்லது ஒரு வகையான வன்முறையில் சென்று அது முடியலாம்.

கரண் தாப்பர்: இருபது கோடி மக்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் – முஸ்லீம் மக்களைப் பற்றி.

பிரதாப் பானு மேத்தா: இந்த வகையான வன்முறை நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு அது நிச்சயம் குறிப்பிட்ட சமூகங்களை மட்டுமே குறிவைக்காது என்றே நினைக்கிறேன். சமூகக் கட்டமைப்பிற்குள் ஊடுருவி, மிகச் சாதாரண அறிவாக அது மாறி விடும்.

கரண் தாப்பர்: இதுதான் மோடி விட்டுச் செல்லப் போகின்ற மிகப்பெரிய ‘பாரம்பரியம்’ என்று நினைக்கிறேன். அதாவது இந்தியாவை வெளிப்படையான வகுப்புவாதம் கொண்ட நாடாக மாற்றுவது.

பிரதாப் பானு மேத்தா: இப்போதைய போக்கு தொடர்ந்தால், அதுதான் நடக்கும்.

கரண் தாப்பர்: முடிப்பதற்கு முன்பாக இன்னும் இரண்டு விஷயங்கள் பற்றி பேச வேண்டும். என்னைப் போலவே நாம் அனைவரும் பொது வாழ்வில் ஹிந்துமயமாக்கல் அதிகமாகி வருவதைக் காண்கின்றோம். நீங்கள் அன்றைய தினம் காசியில் என்ன நடந்தது என்று – பிரதமருக்கு ஹிந்து மத நம்பிக்கையுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது பற்றி குறிப்பிட்டீர்கள். நகரங்களின் பெயர் மாற்றம், வரலாற்றைத் திருத்தி எழுதுவது, ராணுவ அணிவகுப்புகளில் ஆரத்தி எடுப்பது போன்றவற்றைப் பார்க்கும் போது அதேபோன்று வேறு விஷயங்கள் நடப்பதுவும் தெரிகிறது. மதச்சார்பின்மை குறித்த இந்தியாவின் அரசியலமைப்பு உறுதிப்பாடு தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டே வருகிறதா?

பிரதாப் பானு மேத்தா: சரிதான். நீங்கள் விவரித்தவாறு அனைத்து வழிகளிலும் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பு குறித்து இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு நிச்சயமாகத் தோல்வியடைந்தே வருகிறது. இருப்பினும் இங்கே இரண்டு வகையான ஆபத்துகளை வேறுபடுத்துவது முக்கியம். இந்தியா பெரும்பான்மையாக ஹிந்துக்களைக் கொண்ட நாடு. ஜனநாயகம் ஆழ்ந்திருக்கும் போது, அனைவரையும் உள்ளடக்கிக் கொள்கின்ற வட்டாரமயமான ஜனநாயகம் இருக்கும் போது ஏராளமான குழப்பங்கள் இருக்கும் என்றும் இந்தியாவின் கடந்த காலத்தை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது குறித்து ஏராளமான விவாதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். பெரும்பாலான விவாதங்கள் நியாயமானவையாகவே இருக்கும். பொதுக் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் விருப்பம் சில பிரிவினரிடம் இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். அவை அனைத்து சமூகங்களும் கடந்து செல்கின்ற செயல்முறைகளாகும். ஆனால் வெளிப்படையான குடிமைச் சமூக விவாதங்களாக இருந்திருக்க வேண்டியவற்றைத் திசைதிருப்புவதற்காக முறையான அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதே இந்த தருணத்தை மேலும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறது.

இடைக்காலத்தைப் பற்றி விவாதிக்கலாம். தங்கள் மதங்களுக்கு இடையே நம்பிக்கை குறித்து குடிமக்கள் ரத்தம் சிந்த மாட்டார்கள் என்று உறுதியளிக்க முடியும் என்றால் நிச்சயமாக வரலாற்றாசிரியர்களின் உள்ளடக்கத்துடன் உள்ள பள்ளிகளை வைத்திருப்பது வேடிக்கையாகவே இருக்கும். சிறுபான்மையினரைத் தாக்கத் தொடங்கியதால் மட்டுமே அரசியல் மற்றும் கலாச்சார அதிகாரங்களின் ஒன்றிணைவை ஆபத்தானது என்று கூறி விட முடியாது. ‘உண்மையான ஹிந்துவாகக் கருதப்படுகின்ற எவரொருவருக்கும் நாங்கள் ஆதரவுடன் இருப்போம்’ என்று அரசியல் கட்சிகள் இப்போது கூறுவதே ஆபத்தானதாக இருக்கிறது.

கரண் தாப்பர்: அரசியல் கட்சிகள் என்று பன்மையில் சொன்னீர்கள். ஆனால் உண்மையில் அது ஒரேயொரு கட்சியாக – பாஜகவாக – மட்டுமே இருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா: மற்ற கட்சிகளும்கூட அதையே பின்பற்றுவதாக இருக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் தீர்த்த யாத்திரை ரயில்களை இயக்குவது பற்றி என்ன சொல்கிறீர்கள்? ராகுல் காந்தியின் எண்ணம் சரியாக இருந்தது என்றாலும், அவரும் ‘உண்மையான ஹிந்து என்று யாரைச் சொல்வது, யார் அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் வரையறுக்கப் போகிறோம்’ என்று கூறும் நிலைக்கு – ஓர் அரசியல் கட்சி சென்றிருப்பது அதான் நோக்கம் எதுவாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானதாகவே இருக்கிறது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: ஆக இப்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மதத்தின் வெளிப்படையான அரசியல் ஈடுபாடுதான். அரசியல், மதம் ஆகியவற்றிற்கிடையே இருந்த வேறுபாடுகளும், பிரிவினையும் இப்போது குறைந்து கொண்டே இருக்கின்றன.

பிரதாப் பானு மேத்தா: பொதுவெளியில் அது கிட்டத்தட்ட குறைந்தே விட்டது.

கரண் தாப்பர்: இந்த இடத்தில்தான் மதச்சார்பின்மை சீரழிந்துள்ளதா?

பிரதாப் பானு மேத்தா: ஆமாம்.

கரண் தாப்பர்: நம்முடைய பொது வாழ்க்கை இன்னும் அதிக அளவிலே ஹிந்துமயமாகக் கூடுமா?

பிரதாப் பானு மேத்தா: முஸ்லீம்கள் தங்கள் மதத்தை பொதுக் கலாச்சாரத்தில் வெளிப்படுத்திக் கொள்வதைப் போல தன்னிச்சையான சுதந்திரத்துடன் அது இருக்கும் என்றால் அதனால் எந்தவொரு தவறுமில்லை. ஆனால் அரசியல் அதிகாரத்தை ஒழுங்கமைப்பதற்காக அது அரசாங்கத்தால் சீரமைக்கப்படுவதே அதை மிகவும் ஆபத்தானதாக்குகிறது.

கரண் தாப்பர்: மேத்தா! நரேந்திர மோடி பிரதமராக இருந்த ஏழு ஆண்டுகளில் நடந்திருப்பவை பற்றி இதுவரை பேசினோம். பாஜகவும் நரேந்திர மோடியும் 2024 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், பலரும் நம்புவதைப் போல், இந்தப் பத்தாண்டின் இறுதியில் இந்தியா என்ன மாதிரியான நிலைமையில் இருக்கும்?

பிரதாப் பானு மேத்தா: மனதில் கொள்ள வேண்டிய இரண்டு எச்சரிக்கை குறிப்புகள் நம்மிடையே உள்ளன. ஒன்று நாம் வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டது. ஆட்சி செய்யும் திறனைக் கொண்டு அது நிறைய மாறும் என்றே நினைக்கிறேன். இப்போதைய போக்கு தொடர்ந்தால், இந்தியா ஆளப்படக்கூடிய திறனற்றதாகி விடும் என்பதே என்னுடைய கணிப்பு. நம்மிடையே உள்ள பல முரண்பாடுகள் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வடிவங்களில் அப்போது வெளிப்படும்.

பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன் என்றாலும் மக்கள் பொருளாதாரத்திற்காக மட்டுமே வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. மிக அதிக அளவிலே பணவீக்கம், வேலையின்மை கொண்ட பொருளாதாரம் போன்றவை ஒரு கட்டத்தில் மோடிக்கான ஆதரவுதளத்தில் கூட சில அரசியல் எதிர்ப்புகள் அல்லது கோபம் என்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும். அரசியல் தீர்வுகள் இல்லை என்பதை நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த ஆட்சியைப் பற்றி சட்டப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்படக் கூடிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக பணவீக்கம் இருக்கிறது என்று நம்புகிறேன். பாஜகவை அது பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கருதுகிறேன்.

‘இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமான, நம்பகத்தன்மை வாய்ந்த எதிர்ப்பு உருவாகுமா?’ என்பதே இப்போது நம்மிடையே எழுகின்ற கேள்வியாக உள்ளது. மோடி முயற்சி செய்து கொண்டிருப்பதைப் போன்று இந்தியாவைப் போன்ற மிகப் பெரிய, சிக்கலான தேசத்தை முறையாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நம்புவது மிகவும் கடினம். எதிரணியினர் பலம் கொண்டிருக்கும் பகுதிகளும் இருக்கப் போகின்றன. ‘ஒளி எப்போதும் விரிசல் வழியாகவே உள்ளே வரும்’ என்று பிரபலமான பாடல் ஒன்று இருக்கிறது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: எதிர்க்கட்சிகள் சுதாரித்து எழுந்து கொள்ளா விட்டால் – தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளாவிட்டால் – தவறான நிர்வாகத்துடன் பணவீக்கம், பொருளாதாரம் போன்றவற்றை மிகவும் தவறுதலாகக் கையாண்ட போதிலும் மோடி எவ்விதத் தடையுமின்றி சுதந்திரமாகவே இயங்குவார் என்றே கருதலாம்.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். பொருளாதாரத்தை அவர் கையாண்டிருக்கும் நிலை அவருக்கு பின்னடைவை உருவாக்கி பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது தற்போதைய செயல்பாடுகள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்ற விதத்தில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புடன் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

கரண் தாப்பர்: எதிர்க்கட்சிகளின் தோல்வி அல்லது இயலாமை மோடியைப் பொறுத்தவரை மற்றொரு பலமாகவே இருக்கிறது என்று கூறி நாம் முடித்துக் கொள்ளலாம்.

பிரதாப் பானு மேத்தா: ஆம். அவர்களே மோடிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு.

கரண் தாப்பர்: பிரதாப் பானு மேத்தா! இந்த நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி. இது எங்களுடைய பார்வையை அகலத் திறந்து வைத்திருக்கிறது. அற்புதமாக இருந்தது என்றாலும் ஆழ்ந்த மனச்சோர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக முடிவுகள் எங்கே சென்று முடிவடையும் என்பது பற்றி உங்களிடம் கொடுங்கனவுகள் இருப்பதை நான் கவனித்துக் கொண்டேன்.

பிரதாப் பானு மேத்தா: அவ்வாறு வரக்கூடாது என்று விரும்பினாலும் உங்கள் நிகழ்ச்சியில் உண்மையையே பேசியாக வேண்டும்.

கரண் தாப்பர்: மிக்க நன்றி. கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

https://thewire.in/rights/full-text-damage-to-indian-democracy-under-modi-is-lasting-pratap-bhanu-mehta

நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

Why has Modi not implemented the Citizenship Amendment two years after it was passed? Article by In tamil Translated by Tha Chandraguru. குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? - தமிழில்: தா. சந்திரகுரு

குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? – தமிழில்: தா. சந்திரகுரு



Why has Modi not implemented the Citizenship Amendment two years after it was passed? Article by In tamil Translated by Tha Chandraguru. குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? - தமிழில்: தா. சந்திரகுரு
2019 டிசம்பர் 13 அன்று கவுகாத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம்

தனது அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்தார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆவணங்கள் இல்லாமல் வந்த புலம்பெயர்ந்தோருக்கு – அவர்கள் முஸ்லீம்களாக இல்லாத வரை – இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த சட்டத் திருத்தம் இருந்தது. அத்தகைய சட்டத்தை இயற்றித் தருவதற்கான வாக்குறுதி பாரதிய ஜனதா கட்சியின் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த சட்டத்திருத்தம் இந்திய முஸ்லீம்களைக் குறிவைக்கும் வகையில் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் அடிக்கடி இணைக்கப்பட்டு பேசப்பட்டது. 

Why has Modi not implemented the Citizenship Amendment two years after it was passed? Article by In tamil Translated by Tha Chandraguru. குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? - தமிழில்: தா. சந்திரகுரு
2019 டிசம்பர் 11 2019 அன்று மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்

அவர்கள் விளக்கிடாத தர்க்கம் மிகவும் எளிமையாக இருந்தது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடுபடுகின்ற முஸ்லீம் அல்லாதவர்கள் ‘அகதிகள்’ என்று தங்களைக் கூறிக் கொள்வதன் மூலம் குடியுரிமையைப் பெறுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகிய இரண்டு முயற்சிகளின் கலவை அனுமதிக்கும். மறுபுறத்தில் பதிவேட்டில் உள்ள சிவப்பு நாடாத்தனம், முஸ்லீம்களைத் துன்புறுத்துவதற்கான கருவியை அரசுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 2019ஆம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பாஜகவிடமிருந்த உந்துதலைப் பொய்யாக்குகின்ற வகையிலே அந்தச் சட்டத்திருத்தம் இன்னும் செயல்படுத்தப்படாமலே இருக்கிறது. மக்களவையின் 2021ஆம் ஆண்டு குளிர்கால அமர்வில் ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தின் கீழ் வருபவர்கள், அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.   

ஒரு சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களாக அதற்கென்று உருவாக்கப்படுகின்ற விதிகள் அமையும். நாடாளுமன்ற வழிகாட்டுதல்களில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வெளியிடப்பட வேண்டும் என்றிருக்கிறது. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், மோடி அரசு அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகளை இதுவரையிலும் வெளியிடவில்லை. குடியுரிமைக்கு ஒருவரால் கூட விண்ணப்பிக்க முடியாத நிலைமையில், அந்த்ச் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உரியவர்களைச் சென்றடைய முடியாத வெற்றுக் காகிதமாகி விட்டது.  

பாஜகவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு பிரச்சனையில், அவர்களுக்கு இதுபோன்று திடீரென்று ஆர்வமின்மை தோன்றக் காரணம் என்ன?

தெருக்களில் குவிந்த போராட்டக்காரர்கள்
தெருக்களில் நடந்த  போராட்டங்களே புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான முதல் எதிர்வினையாக இருந்தன. வங்கதேச ஹிந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வரக்கூடும் என்ற அச்சத்தில் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கின.  தேசிய குடிமக்கள் பதிவேட்டை அடிக்கடி குடியுரிமை சட்டத் திருத்தத்துடன் அமித் ஷா இணைத்துப் பேசி வந்ததால், தங்களுடைய குடியுரிமை நிலைமை குறித்து இந்திய முஸ்லீம்களிடம் அச்சம் உருவாகியிருந்த நிலையில் பிற மாநிலங்களுக்கும் போராட்டங்கள் விரைவில் பரவின.    

போராட்டத்தின் வீச்சு மிகப் பெரிய அளவில் இருந்தது. போராட்டக்காரர்கள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான ஆர்வலர்கள், அரசு தரப்பு என்று சில இடங்களில் அது வன்முறைக்கு வழிவகுத்தது. அசாமில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். வங்காளத்தில் போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீ வைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் இருபது பேர் கொல்லப்பட்டனர். மங்களூரில் நடத்தப்பட்ட காவல்துறையின்  துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.  

இந்த கொந்தளிப்பு தேசிய தலைநகரான தில்லியில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. பாஜக அரசியல்வாதியான கபில் மிஸ்ரா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை தெருக்களிலிருந்து அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்ததைத் தொடர்ந்து மிகப் பெரிய அளவிலே வகுப்புவாதக் கலவரங்கள் மூண்டன.  

குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன என்று பயந்த இந்தியர்களிடமிருந்து தரவு கணக்கீட்டாளர்கள் அச்சுறுத்தல்களையும், வன்முறையையும் எதிர்கொள்ளும் வகையிலான பல நிகழ்வுகளுக்கு வரப் போகின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம் வழியேற்படுத்திக் கொடுத்தது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றின் விளைவாக மக்களிடம் உருவாகியிருக்கும் நம்பிக்கையின்மை, மனக்கசப்பின் காரணமாக மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்பாளர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநில காவல்துறை மற்றும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலுக்கு கடிதம் எழுதியதால் பிரச்சனை தீவிரமானது.       

மாற்றிக் கொள்ளப்பட்ட திட்டங்கள்
பரவலாக ஏற்பட்டிருந்த அமைதியின்மை பாஜகவால் கிட்டத்தட்ட உடனடியாக மீட்டமைக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 10 அன்று நாடாளுமன்றத்தில் விவாதித்த போது ‘எங்களுடைய தேர்தல் [2019] அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததால், தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டில் நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத்ய் தேவையில்லை’ என்று அமித் ஷா மிகக் கடுமையாகக் கூறினார். ஆயினும் அதிலிருந்து பன்னிரண்டு நாட்களுக்குள் ‘இது காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்டது. நாங்கள் அதை உருவாக்கிடவில்லை. அதை பாராளுமன்றத்திற்கு நாங்கள் கொண்டு வரவில்லை, அறிவிக்கவில்லை’ என்று தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைகழுவுகின்ற வகையிலே பேரணி ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  

2019ஆம் ஆண்டில், குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் அமித் ஷா அடிக்கடி இணைத்து பேசி வந்திருந்த நிலையில், கடும்எதிர்ப்புகளுக்குப் பிறகு சற்றே பின்வாங்கிய பாஜக உண்மையில் அவை இரண்டும் இணைக்கப்படவில்லை என்ற வாதத்தை முன்வைக்கத் துவங்கியது.    

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பாஜக கூட்டணி கட்சிகளே அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரும் அளவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான உணர்வு மிகவும் வலுவாக உள்ளது.  திடீரென இப்பகுதியில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மோடி அரசைப் பொறுத்தவரை அது மிகவும் வலுவான பிரச்சனையாகவே உள்ளது. ‘எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் பிராந்தியத்தில் பிரச்சனையைத் தூண்டுவதற்கு சீனா சதித்திட்டம் தீட்டுகிறது’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகின்ற அதே நேரத்தில் மியான்மரும் அதுபோன்று ஈடுபடக்கூடும் என்று ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

Why has Modi not implemented the Citizenship Amendment two years after it was passed? Article by In tamil Translated by Tha Chandraguru. குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? - தமிழில்: தா. சந்திரகுரு
2019 டிசம்பர் 22 அன்று தில்லியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தனது கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இந்தியா குறித்த பிம்பத்தின் மீது ஏற்பட்ட தாக்குதல்
குடியுரிமை சட்டத் திருத்தம் உள்நாட்டு அளவில் மட்டுமே சிக்கலை ஏற்படுத்தியதாக இருக்கவில்லை. வெளியுறவு விவகாரங்களிலும், குறிப்பாக தன்னுடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றாக உள்ள வங்கதேசம் தொடர்பான விவகாரங்களில் இந்தியாவிற்கு அது அதிக குழப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குடியுரிமை தொடர்பாக ஏற்பட்டிருந்த அரசியல் வங்கதேசத்தின் மீது கடுமையான வாய்மொழித் தாக்குதல்களை பாஜக அரசியல்வாதிகள் உருவாக்கிட வழிவகுத்துக் கொடுத்தது. புலம்பெயர்ந்தோரைக் கொண்டு கிழக்கு அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நிரப்பி வருகிறது என்று பாஜகவினர் பலரும் குற்றம் சாட்டினர். 2018ஆம் ஆண்டில் வங்கதேசத்தவரை ‘கறையான்கள்’ என்று அழைக்கும் அளவிற்கு அமித் ஷா சென்றிருந்தார்.

அதுபோன்ற பேச்சுகள் வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினையைத் தூண்டியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. 2020ஆம் ஆண்டில் மோடி வங்கதேசத்திற்குச் சென்றிருந்த போது வெடித்த வன்முறையில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு 2015ஆம் ஆண்டு மோடி சென்றிருந்த போதுகூட இதுபோன்ற எதிர்வினைகள் எதுவும் காணப்படவில்லை என்பது வங்கதேசத்தில் சில பிரிவினர் இந்தியாவை எந்த அளவிற்கு  இப்போது எதிர்மறையாகப் பார்க்கின்றனர் என்பதையே குறிக்கிறது.

பிரச்சனைகளை இன்னும் மோசமாக்குகின்ற வகையில் இந்தியாவின் உறுதியான கூட்டாளியாக இருந்து வரும் வங்கதேசப் பிரதமர் ஹசீனா, வங்கதேசத்தில் பரவலாக ஹிந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து 2021 அக்டோபரில் புதுதில்லியை எச்சரித்திருந்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஹசீனா ‘அங்கே [இந்தியாவில்] நம் நாட்டைப் பாதிக்கின்ற, நமது ஹிந்து சமூகத்தைப் புண்படுத்துகின்ற எதுவும் செய்யப்படாமல் அவர்கள் [புதுதில்லி] பார்த்துக் கொள்ள வேண்டும்’  என்று குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத் திருத்த இந்திய-வங்கதேச உறவுகளைச் சீர்குலைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்று ஃபாரின் பாலிசி என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் வகுப்புவாத அம்சம் வங்கதேசத்தில் மட்டுமல்லாது இந்தியாவை தாராளவாத ஜனநாயக நாடாகக் கருதி வந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் வருடாந்திர ஜனநாயகக் குறியீட்டில், 2020ஆம் ஆண்டில் இந்தியா பத்து இடங்கள் சரிவைக் கண்டுள்ளது. சரிவிற்கான மற்ற காரணிகளுடன் குடியுரிமை சட்டத் திருத்தமும் ஒரு காரணியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் அமெரிக்க சிந்தனைக் குழுவான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்பு இந்தியாவின்  குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் இருந்த பாரபட்சமான திருத்தங்களை மேற்கோள் காட்டி இந்தியாவிற்கான தகுதியை ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து ‘ஓரளவிற்கு சுதந்திரம்’ என்று தரமிறக்கியிருந்தது.

Why has Modi not implemented the Citizenship Amendment two years after it was passed? Article by In tamil Translated by Tha Chandraguru. குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? - தமிழில்: தா. சந்திரகுரு
வங்கதேசத்தில் மோடியின் வருகையை கண்டித்து 2021 மார்ச் மாதம் போராட்டம் நடந்தது

பாஜகவிற்கு முற்றிலுமாக இழப்பு 
ஒருபுறத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் அறிமுகம் எதிர்மறையான விளைவுகளை – உள்நாட்டு அமைதியின்மையிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேர்வுகளைக் குறைப்பது வரை – ஏற்படுத்தியது. அது பாஜகவுக்கு மிகக் குறைவான நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்திக் கொடுத்தது.

ஹிந்துத்துவாவின் தெற்காசியப் பார்வை மீது கவனம் செலுத்துகிற வகையிலேயே குடியுரிமை சட்டத் திருத்தம் இருந்தது. பாஜகவின் முக்கிய கருத்தியல் அடித்தளத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்ததிர்வு கொண்டதாக இருந்த இஸ்ரேல் வடிவமைத்த ‘திரும்பி வருவதற்கான சட்டத்தின்’ மறுபதிப்பாக பிராந்தியத்தில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் இந்தியாவிற்குச் செல்வதற்கான உரிமையை ஏற்படுத்தித் தருவதாகவே சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தலில் அது நமத்துப் போனது. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மேற்கு வங்கம் – வங்கதேசத்துடன்  அதிக தொடர்பு கொண்ட மாநிலம் – ஆர்வத்துடன் இருந்த நிலைமையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் அதையொரு பிரச்சினையாக்காமால் கைவிடுவது என்று  பாஜக முடிவு செய்தது, அதற்குப் பதிலாக உள்ளூர் ஊழல் போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தவே அது விரும்பியது.

கூடுதலாக குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டாலும், அது பலனளிக்குமா என்பது குறித்தும் மிகப்பெரிய அளவிலே சந்தேகங்கள் இருந்து வருகின்றன. சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக நடந்த விவாதங்களின் போதே இந்திய உளவுத்துறை ​​குடியுரிமை சட்டத் திருத்தத்தால் மிகக் குறைவான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் மட்டுமே – சுமார் முப்பதாயிரம் பேர் மட்டுமே – பயனடைவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் ஏற்கனவே இந்திய குடியுரிமையை சட்டவிரோதமான முறையில் பெற்றிருப்பார்கள் என்றும் கணித்திருந்தது.

உண்மையில் இந்திய உளவுத்துறையின் அந்தக் கணிப்பை ஏற்கனவே இருந்து வரும் நீண்ட கால விசாவின் செயல்பாட்டிலிருந்து நம்மால் காண முடியும். குடியுரிமை சட்டத் திருத்தத்தைப் போன்று 2015ஆம் ஆண்டில் மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட கால விசா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கிடைத்து வருகிறது என்றாலும் 2015ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் முஸ்லீம் அல்லாத 25,782 பேர் மட்டுமே இந்த நீண்ட கால விசாவைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் வசித்து வருகின்ற ஹிந்து, சீக்கிய பாகிஸ்தானியர்கள் இந்த வகையான விசாவைப் பெறுவதில் இருந்து வருகின்ற சிவப்பு நாடாத்தனத்தால் விரக்தியடைந்து தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்வதைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் 2020 நவம்பரில் செய்தி வெளியிட்டது.

ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகவே குடியுரிமை சட்டத் திருத்தம் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பல கொள்கைகளை மிகவும் தீவிரமாக முன்வைத்து வந்துள்ள போதிலும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அக்கறை மிகக் குறைவாகவே அதனிடம் இருந்திருக்கிறது. அதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டாக, நிச்சயமாக வேளாண் சட்டங்களைக் கூறலாம். பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, 2021 நவம்பர் மாதத்தில் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் மோடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

பாஜகவின் அடிப்படை ஹிந்துத்துவா சித்தாந்தத்திற்கு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கும் போது குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது என்பது அவர்களைப் பொறுத்தவரை மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். இரண்டு பாறைகளுக்கு நடுவே வெளிவர இயலாமல் சிக்கியுள்ள மோடி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்திருக்கிறார்.

https://scroll.in/article/1012561/protests-bangladesh-and-north-east-why-modi-hasnt-implemented-caa-two-years-after-it-was-passed
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

Interview with Sitaram Yechury on the victory of democracy over the abolition of agricultural laws in tamil Translated by S Veeramani. வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி சீத்தாராம் யெச்சூரியுடன் நேர்காணல் - தமிழில்: ச.வீரமணி

வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி சீத்தாராம் யெச்சூரியுடன் நேர்காணல் – தமிழில்: ச.வீரமணி




[இடதுசாரிக் கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியுடனும் உரக்கவும் விமர்சனம் செய்து வந்தன. இடதுசாரிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்ற சமயத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தனர். அதேபோன்று, இவ்வாறான இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாகத்தான், 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் மக்கள் ஆதரவு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இடதுசாரிக் கட்சிகள், நவீன தாராளமய சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து, குறிப்பாக விவசாயத்தின்மீது அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் குறித்து, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றனர்.

ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், அது ஓர் அரசியல் சந்தர்ப்பவாதமே என்றும் விவரித்திருக்கிறார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:]

கேள்வி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சம்பந்தமாக பிரதமரின் அறிவிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: தொடர்ந்து ஓராண்டு காலமாக வரலாறு படைத்திடும் விதத்தில் அமைதியாகப் போராடிவந்த நம் விவசாயிகளுக்கு இது ஒரு மகத்தான வெற்றியாகும். மிகவும் வீறாப்புடன் இருந்து வந்த மோடி அரசாங்கம் தன் வீறாப்புத்தனத்தை விட்டுக்கொடுத்து இறங்கிவரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசாங்கத்தாலும், மாநிலங்களில் உள்ள பாஜக-வின் அரசாங்கங்களாலும், விவசாயிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்துவிதமான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றிருக்கிறது. தில்லியின் கடுங்குளிரிலும் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் “வாட்டர் கேனன்கள்” மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் போராடுவதற்காக தில்லியை நோக்கி வருவதைத் தடுப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை ஏற்படுத்தினார்கள். பல இடங்களில் போராடும் விவசாயிகள் குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கப்பட்டனர். அவர்களைத் தில்லிக்குள் வரவிடாதவாறு கைது செய்தனர். போராடும் விவசாயிகளை, காலிஸ்தானிகள் என்றும், தேச விரோத பயங்கரவாதிகள் என்றும், பிரிவினை வாதிகள் கும்பல் என்று பொருள்படும் துக்டே துக்டே கும்பல் என்றும் முத்திரை குத்தினர். மோடி மிகவும் கீழ்த்தரமான முறையில் “போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்” (“Andolan Jeevis”) என்று கிண்டலடித்தார். இவ்வாறு இவர்கள் எடுத்த நடவடிக்கைள் அனைத்தையும் முறியடித்து, தில்லியின் எல்லையில் போராடிய விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவும் நாளுக்குநாள் அதிகரித்தது. இவ்வாறான மக்களின் ஆதரவு நாடு முழுதும் எதிரொலித்தது. மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களிலும் இது எதிரொலித்தது.

பாஜக-வினர் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயமும் இவ்வாறு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதற்கான ஒரு காரணிதான். உண்மையில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நேர்மையற்ற ஒன்றாகவும், முழுமையான தேர்தல் சந்தர்ப்பவாதம் என்றும்தான் பார்க்க வேண்டும். ஆயினும், இவ்வாறு பாஜக மேற்கொண்ட முடிவானது அக்கட்சிக்கு ஆதாயம் அளிக்குமா என்பது சந்தேகமே. விவசாயிகளின் அமைதியான போராட்டம் நாளுக்கு நாள் வீர்யம் அடைந்துகொண்டிருந்ததும், விவசாயிகளின் உறுதியும்தான் அரசாங்கத்தைப் பணிய வைத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த வெற்றி, ஜனநாயகத்திற்கான வெற்றி, ஜனநாயக உரிமைகளுக்கான வெற்றி, குடிமை உரிமைகளுக்கான வெற்றியாகும். அமைதியாகப் போராடுபவர்கள் மீது ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களும், பாசிஸ்ட் தாக்குதல்களும் அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், அரசமைப்புச்சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இது நடந்திருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி: வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் ஏகபோகங்களுக்காகவும் கொண்டுவரப்பட்டன என்று நம்பப்படுகிறது. நாட்டின் சொத்துக்கள் தனியார் கார்ப்பரேட்டுகளிடமும், தனியார் ஏகபோகங்களிடமும் தாரைவார்ப்பதற்கு எதிராக இடதுசாரிக்கட்சிகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அவை எதற்கும் அசைந்துகொடுக்காத அரசாங்கம், இப்போது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தினை அடுத்து, வளைந்து கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், ஜனநாயக இயக்கங்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக. மோடி அரசாங்கம் பின்வாங்கியிருப்பது, ஜனநாயக இயக்கங்களை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையேயாகும். இது, இதர ஜனநாயகப் போராட்டங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.

இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளின் ஒரு பகுதியேயாகும். இந்தச் சட்டங்களின் நோக்கம், வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதலும், கார்ப்பரேட்மயப்படுத்துதலுமேயாகும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை ஒழித்துக்கட்டியதற்குக் காரணம், வேளாண் விளைபொருள்களை பதுக்கல் பேர்வழிகள் பதுக்கிவைத்து, செயற்கைமுறையில் பற்றாக்குறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும். பணவீக்கத்தை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்வதென்பது, நிச்சயமாக மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளிவிடும் சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும். இவற்றின் விளைவாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களைக் பட்டினிச் சாவுகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நிலைமைகள் ஆபத்திற்கு உள்ளாகும். ஏற்கனவே, இந்தியா, உலக பசி-பட்டினி அட்டவணையில் தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்நிலைமை மேலும் மோசமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பொதுத்துறை நிறுவனங்களையும், கனிம வளங்களையும், நாட்டின் செல்வாதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிராக எண்ணற்றப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவது தொடர்கின்றன. துறைவாரியாக பெரிய அளவிலான வேலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் மகாசம்மேளனம் அறைகூவல்கள் விடுத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரிக் கட்சிகளும் இத்தகைய தொழிற்சங்களின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவும் ஒருமைப்பாடும் அளித்து வருகின்றன. இத்தகைய போராட்டங்கள், இனிவருங் காலங்களில் மேலும் மேலும் வலுப்பெறும்.

விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், இப்போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கமும், விவசாயத் தொழிலாளர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி யமையாகும். போராட்டங்களின்போது விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் காட்டிய ஒற்றுமை, மதச்சார்பின்மை ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோளாகவும் திகழும்.

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான காரணம், பஞ்சாப் மற்றும் ஹர்யானா மாநிலங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான் என்று நாட்டில் ஒரு பிரிவினர் நம்புகிறார்களே. இது தொடர்பாக உங்கள் புரிதல் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இது ஒரு கற்பனையான நம்பிக்கை. உண்மையில் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துஷ்பிரச்சாரம். சந்தைப்படுத்தலும், கார்ப்பரேட்மயப்படுத்தலும் ஒட்டுமொத்த விவசாயிகளையும், விவசாயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. நாட்டிலுள்ள விவசாயிகளில் 85 சதவீதத்தினர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் கீழே உள்ள விவசாயிகள்தான். இவர்கள் சிறுகுறு விவசாயிகளாவர். மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் இவர்களின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் விழுங்குவதற்கு வகை செய்தது. விளைவாக சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து, தாங்கள் இதுகாறும் அனுபவித்துவந்த தங்கள் சொந்த நிலங்களிலேயே விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

இன்றைய தினம் குறைந்தபட்ச ஆதார விலை ஒருசில மாநிலங்களில் மட்டுமே வலுவாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் ஒருசில விளைபொருள்களுக்கு மட்டுமேயாகும். குறைந்தபட்ச ஆதார விலையில் அனைத்து விளைபொருள்களையும் விற்பதற்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடியதாகும். அதனால்தான் இந்தக்கோரிக்கையை பணக்கார விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர்சாதி விவசாயிகள், இந்து-முஸ்லீம் விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட்டு ஆதரித்து, வரலாறு படைத்திட்ட போராட்டத்தை நடத்தினார்கள். கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்தையும் அதன் உற்பத்தியையும் கையகப்படுத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு விவசாயிகள் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, வெற்றிபெற்றுள்ளார்கள்.

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது, பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே, இந்த வாதத்தில் ஏதேனும் தகுநிலை (merit) இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: இந்த வாதத்தில் நிச்சயமாக எவ்விதமான தகுநிலை(merit)யும் கிடையாது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், பெரும்பான்மையான மக்களின் கைகளில் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதேயாகும். இது பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையை மந்தமாக்குகிறது. இதன் காரணமாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன, பல மூடப்பட்டும் விட்டன. ஏனெனில் இவை உற்பத்தி செய்த பொருள்களை வாங்குபவர்கள் இல்லை.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தின்போது, இந்தப் பிரச்சனை, மேலும் மோசமாகியது. இந்த நிலையில் ஒன்றிய அரசாங்கம், பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கிய அதே சமயத்தில், சாமானிய மக்களை விலைவாசி உயர்வின் மூலமாகவும், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை நாள்தோறும் உயர்த்துவதன் மூலமாகவும், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஏற்படுத்தியது. இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் மோசமாக்கியது. தாங்கள் ஜீவித்திருப்பதற்குத் தேவையான பொருள்களைத் தவிர வேறெதையும் வாங்கிட அவர்களால் இயலவில்லை.

ஆட்சியாளர்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் மோசமாக்கின. ஏனெனில், நாம் முன்பே விவாதித்ததுபோன்று, விவசாயிகளின் வருமானம் மேலும் மோசமாகி, அவர்கள் நுகர்பொருள்கள் வாங்குவதற்கான சக்தியற்று இருந்திடுவார்கள். நாட்டில் பெரிய அளவிற்கு சந்தை என்பது கிராமப்புற இந்தியாவில்தான் இருக்கிறது. அங்கே வாழும் மக்கள், பணக்கார விவசாயியிலிருந்து சிறுகுறு விவசாயிகள் வரை, பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், நம் பொருளாதாரத்தில் மக்களின் தேவை என்பது மேலும் சுருங்கிவிடும். இது நடப்பு பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்திடும்.

ஏதேனும் நடக்கும் என்றால் அது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததன் மூலம், மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைவது தடுத்து நிறுத்தப்பட்டு, அதன்மூலம் உள்நாட்டுத் தேவை வீழ்ச்சியடைவது ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும் என்பதேயாகும்.

கேள்வி: விவசாயிகள் இயக்கத்தில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். இத்தகைய ஒருமைப்பாடு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது மேலும் ஒன்றுபடுவதற்கும் நீடிப்பதற்கும் இடதுசாரிகளின் பங்கு எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மேலும் பல பொதுவான மற்றும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்பட்டன. நவம்பர் 22 அன்று லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்தைப் பார்க்கும்போது, விவசாயிகளின் மத்தியில் இத்தகைய ஒற்றுமை மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.

நான் முன்பே கூறியதுபோல, விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களுக்கிடையே போராட்டங்களில் காட்டிய ஒற்றுமையின் பலம், எதிர்வருங்காலங்களில் தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்பட்டிருப்பதை எதிர்த்தும், நாட்டின் சொத்துக்கள் தனியார்மயம் மூலமாகச் சூறையாடப்படுவதை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களுடன் ஒரு பொதுவான போராட்டத்திற்கு இட்டுச்செல்லும். நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகியிருக்கிறார்கள் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் வலுவினை உயர்த்திப்பிடிக்கிறது.

விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம்கூட தெரிவிக்க மோடி முன்வராத நிலையில், அவர்களுக்காக எவ்விதமான இழப்பீடும் வழங்குவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் குணாம்சம் வரவிருக்கும் காலங்களில் போராடும் மக்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திடும்.

நேர்காணல் கண்டவர்: டி.கே.ராஜலக்ஷ்மி,
தமிழில்: ச.வீரமணி
நன்றி: ஃப்ரண்ட்லைன்

Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுரு

விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் – தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுரு




Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருசர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள திடீர் முடிவானது, இந்திய விவசாயத்தின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், மறுவடிவமைப்பதற்கும், என்றென்றைக்குமான பசுமைப்புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பொருளாதார வளர்ச்சியின் அதிகார மையமாக விவசாயத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் அடிப்படைக் குறிக்கோளுடன் பொருளாதார வடிவமைப்பை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டிய தேவை இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் முடிந்ததும் தலைமையின் முன்பாக இருக்கும்.
Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருபுதிய தாராளமயப் பொருளாதார வல்லுநர்கள் கூக்குரலிடுவார்கள் என்றாலும் விவசாயத்தை லாபகரமானதாக, பொருளாதார ரீதியாக நீடித்திருக்கக் கூடியதாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நிலையானதாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த உலகம் ஆரோக்கியமற்ற, நிலையற்ற உணவு முறைகளுக்கு தன்னை மாற்றிக் கொள்கின்ற அவசரத்தில் இருந்து கொண்டிருக்கும் நேரத்தில், சுற்றுச்சூழலியல் ரீதியாக பாதுகாப்பான, மக்களுக்கும், இந்த பூமிக்கும் தேவையான வியூகத்தை வடிவமைத்துத் தருகின்ற திறன் இந்தியாவிடம் இருக்கிறது. விவசாயத்துறையில் தன்னால் முன்மொழியப்பட்ட சந்தை சீர்திருத்தங்களை திரும்பப் பெறுவதில் பிரதமர் மோடியிடமிருந்த தைரியமான, ஆனால் தாமதமான முயற்சியால் வேளாண் சீர்திருத்தத்திற்கான முதல் அடி ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டு விட்டது.

வேளாண் சீர்திருத்தம் என்று அதை ஏன் சொல்கிறேன் என்றால், இதுவரையிலும் விவசாயத்தில் முன்மொழியப்பட்டுள்ள சந்தை சீர்திருத்தங்கள் பல நாடுகளிலும், கண்டங்களிலும் தோல்வியையே கண்டிருக்கின்றன. ஏற்கனவே நிலவுகின்ற விவசாய நெருக்கடியை அதிகரிக்க மட்டுமே அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, சிலியிலிருந்து பிலிப்பைன்ஸ் வரை உள்ள சந்தைகள் உதவியுள்ளன. அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளில் உள்ள சந்தைகள் விவசாயக் கடன்களை அதிகரித்து, சிறு விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தின் முக்கிய பங்களிப்பாளராக விவசாயத்தை மாற்றியிருக்கின்றன எனும் போது, இந்தியாவில் அதே சந்தைகள் பேரதிசயத்தை நிகழ்த்தப் போவதாக வைக்கப்படுகின்ற வாதம் நிச்சயம் தவறானதாகவே இருக்கும். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அதிக முதலீடுகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அதிக உற்பத்தித்திறன், அதிநவீன சர்வதேச மதிப்புச் சங்கிலிகளின் பரிணாமம் போன்றாவை வட அமெரிக்காவில் இருந்து வந்துள்ள போதிலும், அங்கே வேளாண் வருமானம் தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்திருக்கிறது. 2018ஆம் ஆண்டில் இறுதி நுகர்வோர் விலையின் ஒவ்வொரு டாலரிலும் விவசாயிகளுக்கான பங்கு வெறுமனே எட்டு சென்ட்டுகளாகக் குறைந்து அழிவை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை கணித்திருக்கிறது.

சந்தைகள் உலகெங்கிலும் வேளாண் வருமானத்தை அதிகரிக்கத் தவறி விட்டன என்பது பொது விவாதத்திற்கு உட்பட்டதாக இருந்து வருகின்ற நிலையில், சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படுகின்ற நடவடிக்கைகள் விவசாயத்திற்கு புத்துயிர் அளிப்பது, விவசாயத்தின் பெருமையை மீட்டுக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளுக்கான பாதைகளைச் சீரழித்திருக்கும் நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகின்ற முடிவு பொருளாதார காரணங்களுக்காக எடுக்கப்பட்டதா அல்லது வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதுதில்லியின் எல்லையில் தங்கியிருந்த ​​ஓராண்டு காலத்தில் மிகவும் மோசமான வானிலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் வெளிப்படுத்திய விடாமுயற்சி வேளாண் சமூகத்தின் அவலநிலையை நோக்கி நாட்டின் கவனத்தை ஈர்த்தது. அவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கை வெளியைக் கட்டியெழுப்புவதற்கும், என்றென்றைக்கும் நீடித்திருக்கும் ஆரோக்கியமான, துடிப்பான வேளாண் முறையை மறுவடிவமைப்பு செய்வதற்குமான நேரமாகவே இது அமைந்துள்ளது.

சட்டங்களைத் திரும்பப் பெற்றிருப்பது போரில் வென்றெடுத்துள்ள பாதி வெற்றியாகவே இருக்கின்றது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது என்பது தற்போதிருக்கும் நிலைக்கே மீண்டும் திரும்புவதாகும். அது ஏற்கனவே தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த கடுமையான விவசாய நெருக்கடியில் இருந்து விவசாயிகளுக்கு விடிவு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதையே காட்டுகிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருப்பது நிச்சயமாக விவசாயிகளுக்கு முதல் சுற்றில் கிடைத்திருக்கும் வெற்றிதான். ஆனாலும் இந்தப் பந்தயம் இன்னும் முழுமையடையவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கான வாழ்வாதாரம் உறுதி செய்து தரப்படாத வரை, பொருளாதார வல்லுநர்கள் பலரும் நம்புவதைப் போல வழங்கல்-தேவை கொள்கைகளே விலையை உறுதி செய்வதற்கு வழிவகுக்கும் என்றிருப்பது விவசாயிகளை மேலும் சுரண்டுவதற்கு மட்டுமே வழிவகுத்துக் கொடுக்கும். வேளாண் வருமானத்திற்கு உத்திரவாதம் அளித்திடாமல் உணவு முறை மாற்றங்களைக் கொண்டு வர முடியாது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இதுதான் விவசாயம் பெரிதும் எதிர்பார்த்து நிற்கின்ற சீர்திருத்தமாக இருக்கின்றது.

இருபத்தி மூன்று பயிர்களுக்கு அரசாங்கம் அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஒப்பிடும்போது, விவசாயிகள் சராசரியாக நாற்பது சதவிகிதம் குறைவாகவே சந்தையில் பெறுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால். உற்பத்திச் செலவைக் கூட அவர்களால் திரும்பப் பெற முடியவில்லை என்பது தெரிய வரும். ​உண்மையில் தாங்கள் நஷ்டத்தையே அடைகிறோம் என்பதைக்கூட உணராமலேயே சாகுபடியை மேற்கொண்டு வரும் விவசாயிகள் இருக்கிறார்கள். கோதுமை, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் உள்ளவர்களைத் தவிர, நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தங்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை. பதினேழு மாநிலங்களில் – ஏறத்தாழ நாட்டின் பாதிப் பகுதியில் – விவசாயிகளின் சராசரி வேளாண் வருமானம் ஆண்டுக்கு இருபதினாயிரம் ரூபாய் மட்டுமே என்று 2016ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொண்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு சூழ்நிலை மதிப்பீட்டு கணக்கெடுப்பு பயிர் சாகுபடியின் மூலம் கிடைக்கின்ற சராசரி பண்ணை வருவாய் ஒரு நாளைக்கு இருபத்தியேழு ரூபாய் என்பதாக நிர்ணயித்துள்ளது.
Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருகுறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கான சட்டப்பூர்வமான உரிமையாக மாற்றுவதே – அதாவது, தரநிலை விலைக்குக் கீழே வர்த்தகம் செய்யக் கூடாது என்பதுதான் – இந்திய விவசாயத்திற்குத் தேவையான உண்மையான சீர்திருத்தமாகும். அது வேளாண் சீர்திருத்தத்தின் இரண்டாவது படியாக இருக்கும். விவசாயிகளின் கைகளில் அதன் மூலம் அதிக அளவில் பணம் இருக்கும் என்பதால், பொருளாதார ரீதியாக லாபகரமானதாக விவசாயம் மாறுவது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். கிராமப்புற வாழ்வாதாரத்தை அது வலுப்படுத்தும், நகரங்களில் வேலைகளுக்கான தேவையைக் குறைக்கும், கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதுடன் பெருமளவிற்கு கிராமப்புறத் தேவையையும் உருவாக்கும். தொழில்துறைக்காக விவசாயத்தைத் தியாகம் செய்து கட்டமைக்கப்பட்டிருக்கின்ற குறைபாடுள்ள பொருளாதார வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டிய நேரமாக, மனித மூலதனத்தில் முதலீடு தேவைப்படுகின்ற, மக்களுக்காக வேலை செய்கின்ற பொருளாதாரத்தைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டிய நேரமாக இது இருக்கிறது..
Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருகுறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதத்தை வழங்குவது பெருமளவிலான விவசாய மக்களை விவசாயத்திற்குள் விட்டு வைக்கும். சந்தைப்படுத்தக்கூடிய உபரி எதுவுமில்லாத, ஆனாலும் வீட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து வருகின்ற சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதமர் உழவர் நல நிதி திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற பலன்கள் அதிகரித்துத் தரப்பட வேண்டும்.

உலகிலேயே மிகப் பெரியதாக, மிக நீண்ட காலம் நடந்துள்ள இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகளாவிய கவனத்தைத் தன்வசம் ஈர்த்துள்ளது. விவசாயத்தை வறுமையில் வைத்திருப்பதையே நம்பியிருந்த காலாவதியாகிப் போன பொருளாதார சிந்தனைக்கு விவசாயிகளால் சவால் விடுக்க முடிந்துள்ளது. உண்மையில் இது மிகப்பெரிய சாதனை ஆகும். நேர்மையான மதிப்பீட்டுடன் இதனைத் தொடர்ந்தால், அது என்றென்றைக்குமான பசுமைப்புரட்சிக்கான விதைகளை விதைக்கும் திறன் கொண்டதாக இருக்கும். பாரம்பரிய அறிவு, இருக்கக்கூடிய பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலை அழிக்காத வேளாண் நடைமுறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற உற்பத்தி முறையைக் குறிப்பிடும் வகையில் என்றென்றைக்குமான பசுமைப்புரட்சி என்ற சொல் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனால் உருவாக்கப்பட்டது.
Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருவேளாண் முறைகளை மறுவடிவமைப்பு செய்தல், சந்தைகளை விவசாயிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு வருதல், ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்கும் வீட்டு உணவு விநியோக முறையை உருவாக்குதல் ஆகியவை மிகவும் அவசியம். ஆனால் நெருக்கடியை உருவாக்கியவர்களால் இதைச் சாதிக்க முடியாது. அதற்கு முற்றிலும் புதியதொரு அணுகுமுறை தேவைப்படும். முதலில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதன் மூலம் அதைச் சாத்தியமாக்கிடுவதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
https://www.tribuneindia.com/news/comment/a-battle-only-half-won-341193

நன்றி: ட்ரிப்யூன்
தமிழில்: தா.சந்திரகுரு

The success of the peasant struggle will have great consequences Article in tamil translated by Sa Veeramani விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விரிவான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும் - தமிழில்: ச.வீரமணி

விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விரிவான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும் – தமிழில்: ச.வீரமணி




பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்து சரணாகதி அடைந்திருப்பதன்மூலம், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் பதாகையின்கீழ் ஒன்றுபட்ட விவசாயிகளின் போராட்டம் வரலாறு படைத்திடும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்த வெற்றியானது, விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், மேலும் விரிவான அளவில் பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய வெற்றியாகும்.

இதில் முதலாவதும், முதன்மையானதும் என்பது, விவசாயிகளின் அடிப்படையிலான விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதரங்களுக்கான உரிமையையும் வெற்றிகரமாகப் பாதுகாத்திருப்பதன் மூலம், மோடி அரசாங்கத்தால் பிடிவாதமானமுறையில் பின்பற்றிவரப்பட்ட கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலுக்குப் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகும்.

இரண்டாவதாக, விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்து எதேச்சாதிகாரமான முறையில் ஆட்சி செய்தவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பலத்த அடியாகும். தொழிலாளர் வர்க்கத்தால் ஆதரவு அளிக்கப்பட்டு, பெரும் திரளான விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட இயக்கம் நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும்கூட ஓரங்கட்டிவிட்டு, தானடித்த மூப்பாக நடந்துகொண்ட எதேச்சாதிகார நடவடிக்கைகள் மீது வீசப்பட்டுள்ள அடியுமாகும்.

மூன்று வேளாண் சட்டங்களும் முதலில் 2020 ஜூனில் அவசரச்சட்டங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டன. இவ்வாறு அவசரச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது எவரிடமும் கலந்தாலோசனைகள் செய்திடவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குக்கூட அனுப்பிடாமல், மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்குக்கூட விடாமல், இவற்றின்மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்புவதற்கும் அனுமதிக்காமல், மிகவும் அடாவடித்தனமான முறையில் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய எதேச்சாதிகார நடைமுறைக்குத்தான் மாபெரும் விவசாயிகளின் இயக்கம் மரணி அடி கொடுத்துள்ளது.

இதற்கு முன்பும் கூட, இந்த அரசாங்கம் 2015இல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்துவதற்காக ஓர் அவசரச்சட்டத்தைப் பிரகடனம் செய்தது. பின்னர் மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும், பூமி அதிகார் அந்தோலன் என்னும் ஒன்றுபட்ட விவசாயிகளின் மேடை இதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்திய பின்னர், அரசாங்கம் இதனைக் கைவிட்டுவிட்டது. ஆனாலும், இவர்கள், 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றபின்னர், அதனை மறந்துவிட்டு, அவசர கதியில் எண்ணற்ற அவசரச்சட்டங்களையும், நாடாளுமன்றத்தின்மூலம் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்தது உட்பட பல ஜனநாயக விரோதச் சட்டங்களையும் நிறைவேற்றினார்கள். இனிமேலாவது மோடி அரசாங்கம், எதிர்காலத்தில் இதுபோன்று நடவடிக்கைகளை அவசரகதியில் எடுக்காது, ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்திட வேண்டும்.

மூன்றாவதாக, ஓராண்டு காலமாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், ஆட்சியாளர்களின் இந்துத்துவா-நவீன தாராளமயத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கான வழியையும் காட்டி இருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலவீனமாகவும், சக்தியற்றும் இருக்கக்கூடிய நிலையில், ஒன்றுபட்ட மேடைகளின் மூலமாக வெகுஜனப் போராட்டப் பாதையில், மக்களை அணிதிரட்டி, எதிர்ப்பினைக் கட்டி எழுப்புவதே வழியாகும் என்பதைக் காட்டி இருக்கிறது.

இந்தக் கட்டத்தில் மோடி அரசாங்கம் பின்வாங்கியது ஏன்? போராட்டத்தின் குவிமையமாக இருந்தது பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசமாகும். போராடிய சீக்கிய விவசாயிகளை, மோடி அரசாங்கமும், ஆளும் கட்சியும் காலிஸ்தானிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, போராட்டத்தை நசுக்க முயன்றது. இவ்வாறான ஆட்சியாளர்களின் அடக்குமுறை-ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பாஜகவிற்கு எதிராகவும், மோடி அரசாங்கத்திற்கு எதிராகவும் பஞ்சாப்பில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள எந்தக் கிராமத்திற்குள்ளும் எந்தவொரு பாஜக தலைவரும் நுழைய முடியாத அளவிற்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் இன்னும் சில வாரங்களில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஆடிப்போயுள்ள பாஜக எப்படியாவது இவ்வாறு தனிமைப்பட்டிருக்கும் நிலையை மாற்ற நடவடிக்கைகள் பலவற்றைப் பின்பற்றியபோதிலும் அவை எதுவும் அதற்கு உதவிடவில்லை. பஞ்சாப்பில் தேர்தலில் வெற்றிபெற முடியாது போனாலும் பரவாயில்லை என்று பாஜக நினைத்தாலும் அதேபோன்று உத்தரப்பிரதேசத்தையும் கைவிட அது விரும்பவில்லை. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால் பஞ்சாப் மட்டுமல்ல, உத்தரப்பிரதேசமும் தங்கள் கைகளிலிருந்து பறிபோய்விடும் என்று அது கருதியதாலும், அவ்வாறு பறிபோவதை எக்காரணம் கொண்டும் இடம்கொடுத்திடக்கூடாது என்றும் அது நினைத்தது.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சென்ற ஆண்டில் இருந்த நிலைமையை ஆராய்ந்தோமானால், அங்கே ஒட்டுமொத்த விவசாயிகளும் போராடிய விவசாயிகளுக்கு ஆதாரவாக ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இங்கேயிருந்த விவசாயிகளில் கணிசமானவர்கள் 2014 மக்களவைத் தேர்தலிலும், 2019 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக-விற்கு வாக்களித்தவர்கள்.

முசாபர் நகரில் 2013இல் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்றக் கலவரங்கள் ஜாட் இனத்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகைமை உணர்வை அதிகப்படுத்தி இருந்தன. இத்தகைய பகைமை உணர்வு பாஜக-விற்கு உதவியது. ஆனால், இப்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் இத்தகைய பகைமை உணர்வைச் ஒழித்துக்கட்டி, அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இருக்கிறது. “சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி, நம்மைப்பிரிக்கும் சூழ்ச்சிகளை இனியும் நாங்கள் அனுமதியோம்” என்றும், “ஒன்றுபட்டுப் போராடுவோம்,” என்றும் “சாதி வெறியர்களையும், மத வெறியர்களையும் தனிமைப்படுத்திடுவோம்” என்றும் முழக்கமிட்டு அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

லக்கிம்பூர் கேரியில், ஒன்றிய இணை அமைச்சர் ஒருவரின் மகன் காரை ஓட்டிவந்து நான்கு விவசாயிகளைக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டத்திற்கு அனுதாபத்தையும், ஆதரவையும் ஏற்படுத்தியது. பாஜக-விற்கு உத்தரப்பிரதேசம் என்பது கிரீடத்தில் உள்ள ஆபரணம் போன்று பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அமித் ஷா, 2022 சட்டமன்றத் தேர்தல் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்திடும் என்று திரும்பத் திரும்பத் தன் அபிலாசையைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் மத்தியில் அபரிமிதமாக ஆதரவை சம்பாதித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் அச்சுறுத்தலும், ஆதித்யநாத்தின் அரக்கத்தனமான ஆட்சி காரணமாக மக்கள் ஆதரவு சரிந்துகொண்டிருப்பதும் இவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே உத்தரப்பிரதேசத்தில் இழப்பைச் சரிக்கட்டுவதற்காகத்தான் மோடி இவ்வாறு பின்வாங்குவது அவசியம் என முடிவெடுத்திருக்கிறார்.

இந்த நடவடிக்கைக்குப்பின்னே மற்றுமொரு காரணியும் இருக்கிறது. அதாவது, விவசாய இயக்கமும், அதனால் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழ்நிலையில், மக்களைப் பிளவுபடுத்திடும் தங்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலின்மீது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாஜகவிற்கு சிரமமாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால், மக்கள் மத்தியில் தங்களுடைய ஆத்திரமூட்டும் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைக் கொண்டுசெல்வதற்கு உகந்த சூழல் ஏற்படும் என பாஜக நம்புகிறது. ஆனால், விவசாயிகள் பிரச்சனைகள் மறையப்போவதில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருப்பதுடன், அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும், விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்திடும் மின்விநியோகத்தைத் தனியாரிடம் தாரை வார்க்க வகை செய்யும் மின்சாரத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேற்றப்பட என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா மிகவும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. இக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தீர்மானித்து, செயலில் இறங்க இருக்கிறது.

எனினும், ஒரு விஷயம் மிகவும் தெளிவாகியிருக்கிறது. இந்துத்துவா-நவீன தாராளமய எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது. விவசாய இயக்கத்தின் மூலமாக தொழிலாளர் வர்க்கமும், விவசாயிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றுபட்டிருக்கிறது.

2020 நவம்பர் 26 அன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் அறைகூவலுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் ‘தில்லி செல்வோம்’ என்கிற அறைகூவலும் இணைந்து இந்த வெகுஜனப் போராட்டம் தொடங்கியது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும். அதிலிருந்தே, தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து கூட்டு இயக்கங்கள் பலவற்றிற்கு அழைப்பு விடுத்தார்கள். இடதுசாரிகள் தலைமையிலான விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள்-விவசாயிகள் இடையே விரிவான அளவில் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட கேந்திரமான பங்களிப்பினைச் செலுத்தின. நடவடிக்கைகளில் இவ்வாறான ஒத்துழைப்புதான் வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மத்தியத் தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்டுள்ள இரண்டு நாள் வேலைநிறுத்தம் உட்பட பல போராட்டங்களுக்கு உதவிட இருக்கின்றன.

இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு வலுவான மாற்றைக் கட்டி எழுப்புவதற்கு, இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் திசைவழியில் ஒரு முக்கிய அடி எடுத்து வைத்திருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கமும் கருதுகின்றன.

(நவம்பர் 24, 2021)
நன்றி:பீப்பிள்ஸ் டெமாக்ரசி

The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 11 – ஜா. மாதவராஜ்



“மக்களில் சிலரை எல்லா நேரமும் ஏமாற்றலாம்.
எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லா மக்களையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது.”
       – ஆப்ரஹாம் லிங்கன்

“இளைஞர்கள்தான் இந்த நாட்டின் சக்தி. நான் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உரிய மதிப்பளிப்பேன், அவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்“ என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில், ’வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள்’ என்பதாய் மோடி கைகளை விரித்து அரவணைத்துக் கொள்ள முற்பட்டார். ‘பத்து ஆண்டுகளில் இருபத்தைந்து கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக’ தொலை நோக்குப் பார்வையை அச்சடித்து வெளியிட்டது பிஜேபி. நாடு முழுக்க அதைக் கொண்டு போய் சேர்த்தார்கள்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇந்திய வாக்காளர்கள் 80 கோடி மக்களில், குறிப்பாக 11 கோடி இளைஞர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் அது. அவர்களை குறி வைத்துத்தான் மோடியும், இந்துத்துவ அமைப்புகளும் மிக முக்கியமாக செயல்பட்டனர். பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் , ‘Neo Middle Class’ என புதிதாக அழைத்தனர். ஏழ்மையிலிருந்து விடுபட்டு இன்னும் மத்தியதர வர்க்கமாக நிலை பெறாதவர்கள் என்று வகைப்படுத்தினர். முன்னேறத் துடிப்பவர்கள். படித்திருந்தும் உரிய வேலை கிடைக்காதவர்கள். திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காதவர்கள். விரக்தியடைந்தவர்கள். இவர்களைத்தான் lower middle class என தன் தீவீர ஆதரவாளர்களாக ஹிட்லர் ஜெர்மனியில் தக்க வைத்திருந்தான்.

நவீன தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் பிறந்த குழந்தைகளே அந்த இளைஞர்கள். இருபது ஓவர் மேட்ச் காலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். மாற்றங்களை உடனடியாக காணத் துடிப்பவர்கள். நுகர்வுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டவர்கள். வேகமும் துடிப்பும் மிக்கவர்கள். காத்திருக்கும் பொறுமையற்றவர்கள். விரல்நுனியில் உலகை காண்பவர்கள். கறுப்பு வெள்ளை டிவியை பார்க்காதவர்கள். சோவியத் ரஷ்யா குறித்து அறியாதவர்கள். முந்தைய தலைமுறையை ஏமாந்து போனவர்களாகவும், தாங்கள் விழித்துக் கொண்டவர்களாகவும் காட்ட முற்பட்டவர்கள்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyவரலாற்றில் தவறவிடக் கூடாத வாய்ப்பாக 2014 பாராளுமன்ற தேர்தலை மோடி வகையறாக்கள் கருதினர். சகல தந்திரங்களையும் செய்து ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு வெறி கொண்டு செயல்பட்டனர்.

தங்களின் பாதையில் முக்கியத் தடையாக அப்போது ராகுல் காந்தி அவர்களுக்குத் தெரிந்தார். 40 வயதான அவர் தன்னியல்பாக இளைஞர்களைக் கவர முடியும், 63 வயதான மோடிக்கு அது கடும் சவாலாக இருக்கும் என்று கணித்தனர். கொள்கைகள், சித்தாந்தங்கள், செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து தனிநபர்களை முன்னிறுத்தி பேசுவதே அரசியல் எனக் கொண்டவர்கள் வேறென்ன செய்வார்கள்?

கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ராகுலையும், காங்கிரஸையும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது என்பது அவர்களின் வியூகமாக இருந்தது. 2004ம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தியை தங்களின் ஆபத்தாக கருதி, போகுமிடமெல்லாம் ‘வெளிநாட்டவர்’ என்று முத்திரை குத்திப் பார்த்தவர்கள் அவர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் இயக்கம் பெரிதாக பேசப்பட்டது. நிர்பயா மீதான கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் கொலையை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டங்கள் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின. ’தலை நகரம் அல்ல. கொலை நகரம்.” என மோடி ஆக்ரோஷமாக தாக்கினார். எல்லாவற்றுக்கும் காங்கிரஸை காரணமாக்கிய காலம் அது. களத்திலிருந்து விலக்கப்பட்டு ராகுல் காந்தி இளைஞர்களின் கவனம் பெற முடியாதவராய் போனார்.

“60 ஆண்டுகள் காங்கிரஸுக்கு கொடுத்தீர்கள். நாட்டையே நாசமக்கி விட்டது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள். இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றிக் கண்பிப்பேன். தேசத்தின் வளர்ச்சிதான் முக்கியம். நான் பிரதம மந்திரியாக இருக்கப் போவதில்லை. இந்த தேசத்தைக் காக்கும் காவல்காரனாகவே இருக்க விரும்புகிறேன். வாய்ப்பு கொடுங்கள்.”

நம்பிக்கையான மனிதராகவும், திடமான அரசியல் தலைவராகவும் தன்னை மோடி முன்னிறுத்திக் கொண்டார். விவேகானந்தரைப் பற்றி எப்போதும் பேசினார். விவேகானந்தர் இளைஞர்களை பெரிதும் ஆகர்ஷிக்கிறவராக இருந்தார்.விவேகனந்தரின் உரைகளும் அறைகூவல்களும், இளஞர்களை நோக்கியே இருந்தன. அவரைப் போலவே மோடி தானும் பிரம்மச்சாரி, அவரைப் போலவே தானும் இளைஞர்களை நேசிக்கிறவன் என காட்டிக் கொண்டார்.

மோடியும் இந்துத்துவ சக்திகளும், கார்ப்பரேட்களும் நினைத்தது நடந்தது. மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். மக்களும், இளைஞர்களும் நினைத்ததுதான் நடக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிக்கு வாக்களித்த இளைஞர்கள் மீண்டும் விரக்தியடைந்து போயிருந்தார்கள். தாங்கள் ஏமாந்து போனது குறித்து பேசினார்கள்.

இராஜஸ்தானில் கஸ்பாபோன்லி என்னும் சிறிய ஊரில் கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்திருந்தார் ராகேஷ்குமார். முப்பத்தொரு வயதாகிறது. வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து கொண்டு இருந்தார். பேண்ட்டில் கலர்ச் சிதறல்களோடு காணப்படும் அவர், “சென்ற முறை மோடிக்கு வாக்களித்தேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி தந்தார். நம்பினேன். இனி அவருக்கு வாக்களிக்க மாட்டேன்” என்றார்.

அதே ஊரில், “எனது நண்பர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்காமல் நகரத்திலிருந்து திரும்பி வந்து விட்டார்கள்” என்றார் டீக்கடை வைத்திருக்கும் பப்லு ஷைனி என்னும் இளைஞர்.

‘பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை’ லாப நோக்கற்ற ஒரு குழுவிற்காக மகாராஷ்டிராவில் வீடு வீடாக பிரச்சாரம் செய்தவர் ஸ்ரீகாந்த் தத்தாத்ரேயா. முப்பது வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு மாதம் ரூ.10000/- வரை கிடைக்கிறது. அவரது அண்ணன் ஆட்டோ ரிக்‌ஷா ஒட்டுகிறார். அவருக்கு மாதம் 8000 கிடைக்கிறது. இரண்டு பேரின் வருமானத்தில்தான் தத்தாத்ரேயா, அவரது பெற்றோர்கள், அண்ணன், அண்ணி,. அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பம் வாழ வேண்டும்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇரண்டு வருடங்களுக்கு முன்பு ரெயில்வேத் தூறையில் அறிவிக்கப்பட்ட 90,000 பணிகளுக்கு 2.8 கோடி பேர் விண்ணபித்து இருந்தார்கள். இந்த ஒரு வரிச் செய்தியில் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டமும், இளைஞர்களின் அவல நிலையும் அப்பட்டமாய் தெரியும்.

ஒவ்வொரு வருடமும் படித்து முடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பத்து லட்சம். படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். அவர்களின் எதிர்காலத்திற்கும் நிரந்தர வருமானத்திற்கும் வழி எதுவும் ஏற்படுத்தவில்லை.

130 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 46.7 கோடி பேர் வேலை பார்ப்பதாகவும், அதில் 50 சதவீதம் சுயதொழில் செய்கிறவர்கள். 33 சதவீதம் அன்றாடம் காய்ச்சிகள். எஞ்சிய 17 சதவீதம் பேரே நிரந்தர வேலையில் இருக்கிறார்கள். ப்ளும்பெர்க் ஆய்வு முடிவுகள் இப்படித்தான் சொல்கின்றன.

கொடுமை என்னவென்றால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாதது மட்டுமல்ல, இருந்த வேலைகளும் ஒழிக்கப்பட்டு இருந்தன. இருக்கும் காலியிடங்களுக்கும் ஆட்கள் எடுப்பதில்லை. சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது. இதுவும் சரியான தரவு இல்லை, உண்மை இன்னும் மோசமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வேலை தேடித் தேடியே ஒரு பாதுகாப்பான நிலைக்கு வருவதற்குள் எங்கள் இளமையான காலம் கழிந்து விடும் போலிருக்கிறது என கவலை தெரிவிக்கின்றனர் இந்திய இளைஞர்கள்.

2013 நவம்பரில், “ப.சிதம்பரம் அவர்களே! பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. இளைஞர்கள் வேலை வேண்டும் என்கிறார்கள். சில்லறை அரசியல்களில் நேரத்தை செலவழிக்காமல் கையிலிருக்கும் வேலையைக் கவனியுங்கள்” என அப்போதைய நிதியமைச்சரைப் பார்த்து கிண்டலாய் பேசிய மோடி இப்போது கார்ப்பரேட்களுக்கு இந்தியாவையே விலை பேசும் ‘பெரிய அரசியலில்’ ஈடுபட்டிருந்தார்.

வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை அளிப்பதாக மோடி சொல்லவே இல்லை என்று பிஜேபி சொல்ல ஆரம்பித்து விட்டது. லக்னோவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் வருடத்திற்கு ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்பதாகத்தான் பேசினார். இரண்டு கோடி என்று காங்கிரஸ் பொய் சொல்கிறது என்றார்கள். அதற்கும் காங்கிரஸை பொறுப்பாக்கினார்கள். மொத்தப் பிரச்சினையையும் திசை திருப்புவதற்கு மோடி அல்லும் பகலும் அயராமல் உழைத்துக் கொண்டிருந்தார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyவருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் சென்ற வருடம் 55 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்யப்பட்டு இருப்பதை மோடி காண்பித்தார். அவையெல்லாம் புதிய வேலை வாய்ப்புகள் என்று கணக்கு சொன்னார். புதிய பென்ஷன் திட்டத்தில் இணைந்திருக்கும் புதிய கணக்குகளையும் வேலை வாய்ப்புகள் உருவக்கப்பட்டதன் எதிரொலியே என்றார். இப்படியே கூட்டிக் கூட்டி வருடத்திற்கு இரண்டரை கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாய் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதையே தனது இணையதளத்திலும் சாதனையாக வெளியிட்டுக் கொண்டார்.

உண்மை என்னவென்றால், அணி திரட்டப்படாத தொழிலாளர்களாய் சில வருடங்கள் வேலை பார்த்து வருபவர்களுக்கு பி.எஃ பிடித்தம் செய்யப்பட்டு இருந்தன. அவைகளை புதிய வேலைவாய்ப்புகள் என்று ஜோடிப்பது எப்பேர்ப்பட்ட மோசடி.

அரசு சார்பில் தேவையான புள்ளி விபரங்கள் இல்லையென்பதும், இருக்கும் புள்ளி விபரங்களை மறைப்பதும் மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு தொடர்கதையாகி விட்டது. தங்களுக்குச் சாதகமான, ஆதாரமற்ற தனியாரின் புள்ளி விபரங்களை வெளியிட்டு அதன் மூலம் ’எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்’ என்று பொய்யான தோற்றத்தை காட்டுவதுதான் மோடியின் ஆட்சி. பொய்களின் ஆட்சி.

நிதியமைச்சராயிருந்த அருண் ஜெட்லியோ தனது வாதத் திறமையால் இன்னொரு தர்க்கத்தை முன்வைத்தார். “வேலை வாய்ப்புகள் இல்லையென்றால் இந்நேரம் இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி இருப்பார்கள். கடந்த ஐந்து வருடங்களில் அப்படி எந்த போராட்டமும் நடைபெறவில்லை” என்றார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லையாம்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“வேலை வாய்ப்புகள் இருக்கவேச் செய்கின்றன. பக்கோடா விற்று ஒரு நாளைக்கு இருநூறு ருபாய் சம்பாதிக்க முடியும்” என்றார் மோடி ஒருநாள் வாயைத் திறந்து. அவரது skill India என்னவென்று அப்போதுதான் இளைஞர்களுக்கு புரிந்தது. அன்றைக்கு மோடி விவேகானந்தர் முகமூடியை கழற்றி வைத்திருக்க வேண்டும்.

Tourism, Physical infrastructure, Manufacturing, Global manufacturing hub, Agriculture, Foreign Direct investment, Skill Focusing, Massive open online courses, Education and Research, Sports, IT sector, Entrepreneurship என்று எவ்வளவு வேலைகளுக்கான வாய்ப்புகளை பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. கடைசியில் பக்கோடாவில் போய் நின்றது.

டெல்லி ஜந்தர் மந்தரில் 2019 பிப்ரவர் 7ம் தேதி முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியாவின் இளைஞர்கள் கூடி மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். ’வாருங்கள் அருண் ஜெட்லி, இப்போது பேசுங்கள்’ என அவரையும் அழைத்தார்கள்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Indian students march as they take part in the ‘Young India Adhikar March’ protest rally, in New Delhi on February 7, 2019.

“வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக மோடி வாக்குறுதியளித்தார். ஆனால் அரசுத்துறையில் இருக்கும் 25 லட்சம் வேலைவாய்ப்புகளையும் கூட நிரப்பவில்லை” என்றார் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து டெல்லிக்குப் போராட வந்திருந்த ஸ்ரீகாந்த் தத்தாத்ரேயா.

“பக்கோடா விற்பதும் வேலைதான் என பிரமர் சொல்வது வேதனையாய் இருக்கிறது. அது வேலையில்லை என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அதற்கு எதற்கு உயர் படிப்பு? என்றார் பிரியா தாக்கூர்.

“பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை சிறு வியாபாரிகளின் தொழில்களை எல்லாம் முடக்கி விட்டன. அங்கு வேலை பார்த்தவர்களின் வேலைகளும் பறி போய் விட்டன“ என்றார் 29 வயதான பங்க கலியா.

அதிகாரத்துக்கு வருவதற்கு தேவைப்பட்ட புதிய இந்திய வாக்காளர்களாகிய இளைஞர்கள், அதிகாரத்துக்கு வந்த பிறகு மோடிக்குத் தேவைப்படவில்லை. மோடியின் இந்தியாவுக்கு சக்தியாய் இருப்பவர்கள் கார்ப்பரேட்களே என்பதையும், மோடி அவர்களின் காவல்காரன் என்பதையும் டெல்லி போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் புரிந்திருந்தார்கள்.

சமீபத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில், மோடியின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டிருந்தது. 2019ல் 66 சதவீதம் ஆதரவு பெற்று யாரும் அருகில் இல்லாதவாறு காட்சியளித்தவர் 2020ல் 38 சதவீதமாக உயரம் குறைந்து 2021ல் 24 சதவீதமாக குள்ளமாகிப் போயிருந்தார்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 86 சதவீதம் தங்கள் அன்றாட வாழ்க்கை குறித்தே கவலைப்பட்டு இருந்தார்கள். மோடியின் ஏழு ஆண்டு கால ஆட்சியின் மீது கரு நிழல் மெல்ல படர ஆரம்பித்து இருக்கிறது. அவரது பொய்கள் உருவாக்கியது அது.

இந்திய இளைஞர்கள் வேலை இழந்தது மட்டுமல்ல. எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் இழந்து வருகின்றனர்.  அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதில்தான் தேசத்தின் எதிர்காலம் இருக்கிறது. இல்லையென்றால் இந்த அவநம்பிக்கைகளையும் கூட பசிச சக்திகளே வேறு உத்திகளில் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும். அதற்கென்று சில பொய்களை மோடி வைத்திருக்கவே செய்வார்.

Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு

விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் – விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு




Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருதனது அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று அறிவித்தார். கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அவசரமாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் பற்றியே அவர் தன்னுடைய அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சட்டங்களைத் திரும்பப் பெறுவதை அறிவித்த தன்னுடைய உரையில் ‘அவர்கள் [தங்களுடைய] வீடுகள், வயல்வெளிகள் மற்றும் [தங்களுடைய] குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் மீண்டும் புதிதாகத் தொடங்குவோம்’ என்று விவசாயிகளிடம் அவர் கூறியிருந்தார். விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து ஓராண்டாகப் போராடிய விவசாயிகளை எதிர்மறையாகப் பாதிக்கின்ற சட்டங்களை தன்னுடைய அரசாங்கம் இயற்றியதைப் பற்றி எந்தக் கட்டத்திலும் மோடி ஒப்புக் கொண்டிருக்கவில்லை.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவிவசாயத்தை தனியார்மயமாக்குகின்ற கொள்கைகளை மோடி கைவிடவ் போவதில்லை; மாறாக அவர் வெவ்வேறு தொகுப்புகளின் மூலம் தனியார்மயத்திற்கே திரும்புவார் என்றே தோன்றுகிறது. தன்னுடைய உரையில் ‘எங்களுடைய அரசு விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அதைச் செய்யும்’ என்றே அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெற்றியில் மகிழ்ச்சி
ஆனால் ‘விவசாயிகளின் நலனுக்காக’ பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மோடியின் அரசாங்கம் வேலை செய்து வருகிறது என்ற எண்ணம் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. விவசாயிகள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் உணர்வை அறிந்து கொள்வதற்காக, முக்கியமான விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (ஏஐகேஎஸ்) தேசியத் தலைவரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கேஎம்) தலைவருமான அசோக் தவாலேவிடம் நேர்காணலை நடத்தினேன்.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருமூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மோடி அளித்திருக்கும் வாக்குறுதி ‘போதுமானதாக இல்லாமலும், மிகவும் தாமதத்துடனும்’ இருப்பதாக தவாலே கூறினார். வலுவான குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பிற கோரிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றை (வேளாண் சட்டங்களை ரத்து செய்தல்) மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பதால் மோடி அளித்திருக்கும் வாக்குறுதி போதுமானதாக இருக்கவில்லை; ஓராண்டு நீடித்த போராட்டம் ஏற்படுத்திய தனிமைப்படுத்தல், அரசாங்க அடக்குமுறைகள் காரணமாக எழுநூறு விவசாயிகள் தங்கள் உயிர்களை இழக்க நேரிட்ட பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது வாக்குறுதி மிகவும் தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது.

‘கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சியில் மிகவும் அவமானகரமான முறையில் மோடி இவ்வாறு கீழிறங்கி வந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்’ என்று கூறிய தவாலே ‘முதலாவதாக 2015ஆம் ஆண்டில் நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக ‘2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை’ திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது’ என்றார். இந்திய விவசாயத்தை மிகப்பெரிய பெருநிறுவனங்களிடம் வழங்குவதற்கான திட்டத்தை 2014ஆம் ஆண்டு தான் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே மோடி முன்வைத்து வந்திருக்கிறார். அப்போதிருந்தே அவருடன் போராடி வந்த விவசாயிகள் இன்றைக்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நவம்பர் 19 அன்று வெளியான மோடியின் அறிவிப்பிற்குப் பிறகும் விவசாயிகள் தங்கள் போராட்ட முகாமை விட்டு வெளியேறவில்லை. ‘வேளாண் சட்டங்கள் உண்மையில் [பாராளுமன்றம் மூலம்] ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இருப்பார்கள்’ என்று தவாலே கூறினார். மேலும் ‘விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அவர்கள் அங்கேயே இருப்பார்கள். போரில் பாதி வெற்றியை அடைந்திருப்பது குறித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்த போதிலும் போராட்டத்தின் மற்ற நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் காண வேண்டும் என்ற உறுதியும் விவசாயிகளிடம் இருக்கிறது’ என்றார்.

மோடி ஏன் சரணடைந்தார்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மோடி முடிவு செய்ததன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக தவாலே கூறினார். இந்தியத் தலைநகரான தில்லி எல்லையில் அமைந்திருக்கும் மூன்று முக்கிய மாநிலங்களில் (பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம்) வரப் போகின்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் தொடர்புடையதாக முதலாவது காரணம் இருக்கிறது. சமீபத்திய மாதங்களில் ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் போது தனக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதை பாஜக கண்டிருக்கிறது. அந்த இடைத் தேர்தல்களில் பாஜக அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவில்லை.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவட இந்தியாவில் தேர்தல் நடந்திருக்கும் அல்லது நடக்கவிருக்கும் ஆறு மாநிலங்கள் தில்லிக்கு அருகாமையில் உள்ள மாநிலங்களாகும். மேலும் தில்லியின் எல்லையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகள் பலரின் சொந்த மாநிலங்களாகவும் அவை இருக்கின்றன. போராட்டங்கள் தொடருமானால் விவசாயிகள், தொழிலாள வர்க்கம் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் தங்களுடைய கட்சி மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று பாஜகவில் உள்ள தலைவர்கள் கருதினர்.

விவசாயிகளின் உண்மையான போராட்டம், உறுதியைக் காட்டிலும் கவனத்தில் கொள்வதற்கு முக்கியமானவை வேறு எதுவுமில்லை என்று கூறிய தவாலே, எடுத்துக்காட்டாக செப்டம்பர் 5 அன்று கிசான் மகாபஞ்சாயத்திற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிட்டார். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற அந்த மகாபஞ்சாயத்தில் விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருஉத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒன்பது பேர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அமிர்தசரஸ் புறநகர்ப் பகுதியில் 2021 அக்டோபர் 6 அன்று கூடிய விவசாயிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து முழக்கங்களை எழுப்பினர்.

மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்த அந்தக் கூட்டத்தின் தொனி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கவில்லை. அது பாஜக அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்பதையே தெளிவுடன் காட்டியது. விவசாயிகள் போராட்டத்தின் அடிப்படைப் பார்வை மோடியின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவா அரசியல் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானதாக மதச்சார்பற்ற, சோசலிச இந்தியாவிற்காகப் போராடுவதாகவே இருந்தது.

போராட்டத்தின் வேகம் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 27 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி இந்தியா முழுவதும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்தது. அது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் போது நடைபெற்ற மூன்றாவது வேலைநிறுத்தமாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், நடைபெற்ற மூன்று வேலை நிறுத்தங்களில் மிகவும் வெற்றிகரமானதாக அந்த வேலைநிறுத்தம் அமைந்தது என்று தவாலே கூறினார்.

மத வேறுபாடுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைப் பிளவுபடுத்துவதில் தோல்வியுற்ற பாஜக அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 18 அன்று விவசாயிகள் நாடு முழுவதும் ரயில் தடங்களை (ரயில் ரோகோ) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அறிவித்த போதிலும், விவசாயிகள் கிளர்ச்சியின் முதல் ஆண்டு தினமான நவம்பர் 26 வெள்ளிக்கிழமையன்று தில்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் மற்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
திங்களன்று விவசாயிகளிடம் மோடி சரணடைந்த பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் மிகப்பெரிய கிசான் மகாபஞ்சாயத்தில் ஒன்றுகூடிய விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் போராட்டத்தைத் தொடர்வது என்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். ‘வெற்றி குறித்த மனநிலையும், போராட்டத்தைத் தொடர்வது என்ற உறுதிப்பாடும் அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொண்டது’ என்று தவாலே கூறினார்.

தீர்க்கப்படாதிருக்கின்ற பிரச்சனைகள்
1995 மற்றும் 2018க்கு இடையிலான காலத்தில் நான்கு லட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 2014ஆம் ஆண்டு மோடி பதவியேற்றதில் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தவாலே தெரிவித்தார். அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயிகள் சார்பாக தலையீடு போன்றவற்றை நீக்கியது, பருவநிலை பேரழிவு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றால் இந்தியாவில் உருவாகியுள்ள வேளாண் நெருக்கடியுடன் நேரடியாகத் தொடர்புடையவையாகவே விவசாயிகளின் தற்கொலைகள் இருந்துள்ளன.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவிவசாயிகள் தேசிய ஆணையத்திற்குத் தலைமை தாங்குமாறு புகழ்பெற்ற அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனை இந்திய அரசாங்கம் 2004ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. 2006வாக்கில் முக்கியமான பரிந்துரைகளின் நீண்ட பட்டியலுடன் அந்த ஆணையம் தயாரித்துக் கொடுத்த ஐந்து முக்கிய அறிக்கைகளில் இருந்த பரிந்துரைகள் எதுவுமே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து, வலுப்படுத்த வேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் ஒன்று. விவசாயிகளின் நிலைமையை அரசாங்கங்களின் வெற்று அலங்கார வார்த்தைகள் சற்றும் மேம்படுத்தவில்லை; விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளதாகவே சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை விவசாயிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விளைபொருளின் விலைக்கான உதவி, கடன் தள்ளுபடி, மின்சார விலையுயர்வைத் திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல், மானிய விலையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். ‘இந்தப் பிரச்சனைகளே விவசாய நெருக்கடி மற்றும் விவசாயிகளின் பெரும் கடன் சுமைக்கு அடிகோலுகின்றன. விவசாயிகளின் தற்கொலை, விவசாய நிலங்களின் விற்பனை போன்ற நெருக்கடிகளுக்கும் அவையே வழிவகுத்துக் கொடுக்கின்றன’ என்கிறார் தவாலே.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு‘நமக்கான உணவை விவசாயிகள் பயிரிட்டுத் தர வேண்டுமென்றால், விவசாயிகளுக்குத் தேவையான உணவு அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று தவாலே கூறினார். இது இந்திய விவசாயிகளுக்கான கோரிக்கை முழக்கமாக மட்டும் இருக்கவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இந்திய விவசாயிகள் தொடர்ந்து போராடுவார்கள்.

https://asiatimes.com/2021/11/indian-farmers-defend-rights-of-farmers-everywhere/
நன்றி: ஆசியாடைம்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு