Posted inPoetry
எங்களுக்கும் காலம் வரும் கவிதை – வெ.நரேஷ்
எங்களுக்கும் காலம் வரும்
******************************
ஊரோரம் ஒதுக்குகையில
உஞ்சோறு வேவுதடா
ஒவ்வொரு ராத்திரியும்
எம்புள்ள வாடுதடா
எத்தன நாட்களுக்கு
ராப்பகலா முழிச்சிருக்க
எங்கெங்கே அலையுரேனே
எங்குடும்பம் விழுச்சிருக்க
ஊர் வெளியே காவகாக்கும் கருப்பசாமி
ஊர் நாடி வந்தோம் எங்கள வீட்டுக்குள்ள சேக்கலையே
சாலையோரம் போகும் போது
சாதி சாயம் பூசுறியே
சாமிகிட்ட போயிச்சொன்னா
சாமிகூட கேக்கலையே
பூர்வ குடி மக்க நாங்க
புறந்தள்ளிப் போறோமையா
பூவுலகில் வாழ்வதற்கு
போறாத காலமையா
எங்களுக்கும் காலம் வரும்
காத்திருந்து பாருமையா
காலம் மாறும்போது
கவலையெல்லாம் தீருமையா
– வெ.நரேஷ்
