புதிய புத்தகம் பேசுது 2025 – ஏப்ரல் மாத இதழ்

புதிய புத்தகம் பேசுது 2025 – ஏப்ரல் மாத இதழ்

புதிய புத்தகம் பேசுது – ஏப்ரல்  மாத இதழ் – 2025 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்… ♻️ தலையங்கம்: உலகப் புத்தகத் தினத்தை பள்ளிதோறும் அரசு விழாவாக மாற்றுவோம்! - ஆசிரியர் குழு ♻️ நூல்…
தர்ப்பண சுந்தரி(Tharpana Sundari)-எஸ்.வி.வேணுகோபாலன்

எஸ் வி வேணுகோபாலன் எழுதிய “தர்ப்பண சுந்தரி” நூல் அறிமுகம்

  கவித்துவ வாசிப்பில் கவரும் சிறுகதைகள் எஸ் வி வேணுகோபாலன் அவர்களது  தர்ப்பண சுந்தரி தொகுப்பின் 16 சிறுகதைகளும் சிறப்பு.  எழுத்து நடை படிப்பதற்கு எளிதாக - கவித்துவத்துடனும் உள்ளது. ஒவ்வொரு‌ சிறுகதையைப் படித்து முடித்தவுடன்‌ அடுத்த கதையைப் படிக்க ஆவலாக இருந்தது. 'இருட்டுப்…
pasumai puratchiyin thanthai m.s.swaminathan avarkalin nerkaanal பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப் பல்கலைக் கழகங்கள் வழங்கியுள்ள டாக்டர்…
Puthagam Pesuthu May Magazine 2023 Synopsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayam புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2023

புதிய புத்தகம் பேசுது 2023 – மே மாத இதழ்

புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2023 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: வரலாற்றுத் திரிபு… அறிவியல் ஒழிப்பு… மதவெறி திணிப்பு
– ஆசிரியர் குழு

♻️ நூலகாலஜி – 6: ஒரு கண்டுபிடிப்பாளரின் கடைசி நூலகம் – ஆயிஷா இரா. நடராசன்

♻️ புத்தகக் காதல் – 16: சுல்தானின் அந்தப்புரம் – ச. சுப்பாராவ்

♻️ நூல் அறிமுகம்: மாநரகமான மாநகரம் – ஸ்ரீதர் மணியன்

♻️ நூல் அறிமுகம்: ‘ஓர் ஏர் உழவன்’ – வேர்களோடு உரையாடும் பண்பாட்டு ஆய்வு – சுஜா சுயம்பு

♻️ நூல் அறிமுகம்: சொல்லப்படாத கதைகள் – நிகழ் அய்க்கண்

♻️ நூல் அறிமுகம்: சங்க இலக்கிய ஆய்வுகளும் ஆளுமைகளும் – மயிலம் இளமுருகு

♻️ நேர்காணல்: சிங்காரவேலரின் 1923 கோரிக்கைப் பட்டியல் இன்றும் நீடிக்கிறது! – ஏ.கே. பத்மநாபன் | சந்திப்பு: வீ.பா.கணேசன்

♻️ நூல் அறிமுகம்: யாருக்கும் தெரியாமல் இருப்பதனால்தான் அவை மோடி ஆவணங்களா..?  – களப்பிரன்

♻️ உலகப் புத்தக தின கொண்டாட்டம் – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம் – நாதுராம் கோட்சே -இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம் – நாதுராம் கோட்சே -இரா.சண்முகசாமி



வாசிப்பை நேசிப்போம்
Book Day
Puthagam Pesuthu

நூல்        : நாதுராம் கோட்சே உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்.
ஆசிரியர்  : திரேந்திர கே.ஜா
தமிழில்     : இ.பா.சிந்தன்
வெளியீடு : எதிர் வெளியீடு
ஆண்டு      : ஜனவரி2023
பக்கம்         : 368 பக்கம்
ஆவணங்கள் : 32 பக்கம்

நூலின் வெற்றி ஆடம்பரமற்ற எழுத்துகளில் இருக்கிறது;
நூலின் வெற்றி எல்லாத் தகவல்களுக்கும் உரிய ஆதாரங்களைக் கொண்டுள்ளதில் இருக்கிறது;
நூலின் வெற்றி விறுவிறுப்பான திரைப்படம் ஓடும்போது நுனி நாற்காலியில் உட்கார்ந்து பார்ப்பது போன்ற கருத்துகளை கொண்டிருப்பதில் இருக்கிறது;
நூலின் வெற்றி மூலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யும்போது அதற்கான சுவடே தெரியாமல் மொழிப்பெயர்க்கப்பட்டதில் இருக்கிறது. பெரும் சிரத்தையோடு மொழிப்பெயர்த்து நமக்கு விருந்தளித்த #தோழர்இபாசிந்தன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இப்படி ஏராளமான வெற்றிகளைக் கொண்ட நூல்தான் ‘நாதுராம் கோட்சே’.

பாடப் புத்தகத்தில் ‘கோட்சே என்பவனால் மகாத்மா காந்தி சுட்டுக்கொள்ளப்பட்டார்’ என்று இரண்டு மார்க் கேள்வியுடன் படித்த பாடமாக முடிந்தே போய்விடும் மகாத்மாவின் வரலாறு. அப்படியில்லையெனில் ‘மகாத்மா குறித்து இரண்டு பக்க அளவில் கட்டுரை எழுதுக’ என்று 10 மார்க்குடன் கட்டுரையாக முடிந்துபோவார்.
மேலதிக வரலாற்றுத் தரவுகளுக்கு மாணவர்களுக்கான வாசல் வாசிப்புக்கான தேடல் தான். கல்வியில் அதற்கெல்லாம் நேரம் குறைவு.

இதோ நாதுராம் கோட்சேவை வாசித்ததால் ஏற்பட்ட அனுபவத்தை உங்களோடு பகிர்கிறேன் தோழர்களே.

மதவெறியை எப்படியாவது இந்தியாவில் நுழைக்க நரிதந்திர வேலையைச் செய்த ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு காந்தி பெரும் சவாலாக இருந்ததால் அவரை கொலை செய்ய ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் எப்படியெல்லாம் வேலை செய்தது, அதற்காக இளைஞர்களின் மூளையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நஞ்சை விதைத்து காந்தியை கொலை செய்யத் துடித்தது, அதற்கேற்ப கொலை படலம், பின்பு நீதிமன்றத்தில் பொய் பித்தலாட்டம் செய்து சாவர்க்கரை மட்டும் விடுதலை செய்ய செய்த சூழ்ச்சி, அதில் ஏற்பட்ட முரண்பாடுகளை நீதிமன்றத்தின் கண்களுக்குத் தெரியாமல் தடுக்கப்பட்டது, கோட்சேவின் அறிக்கையின் முதல் பக்கத்தை மட்டும் ஆவணப்படுத்தி விட்டு 92 பக்கத்தை ஆவணப்படுத்தாமல் விட்டதன் சூழ்ச்சி, நீதிமன்றம் மட்டும் கோட்சேவின் முதல் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், அதில் உள்ள தகவல்களும், நாக்பூர் ஆர்எஸ்எஸ் அலுவலக ஆவண தகவல்களுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளை வைத்து சாவர்க்கரும் தண்டனையிலிருந்து தப்பியிருக்க மாட்டார்.

இப்படி ஏராளமான தரவுகள் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. வாசிக்க வாசிக்க இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் ஐந்து சதவீதம் கூட தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்கிற சந்தேகம் வந்தது.

அப்பப்பா காந்தி உண்ணாவிரதம் இருக்கும்போது அந்த இடத்திற்கு வந்து ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் ”அந்தக் கிழவன் செத்து தொலையட்டும்” என்று கூச்சல் போட்டபோது அங்கே வந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் அவர்களை சத்தம் போட்டு விரட்டினார் என்கிற செய்தி மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் புதிய செய்தி.

நாதுராம் கோட்சே என்னும் இந்துத்துவா வெறியன் என்கிற நபருக்குப்பின் இருக்கும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மகாராஷ்டிரம், டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் எவ்வளவு ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு நாட்டை இந்து தேசமாக கட்டமைக்க வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக செயல்பட்டார்கள் என்கிற தடத்தை நமக்கு மிகவும் சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஆய்வாளர். இதற்காக அனைத்து ஆவணங்களையும் திரட்டியிருக்கிறார். கோட்சே தூக்கு மேடைக்கு போவதற்கு முதல் நாள் இரவு கூட காந்தியவாதிகள் அவனுடைய தூக்குத்தண்டனையை ரத்துசெய்வார்கள் என்று சிந்தித்திருக்கிறான். செய்வதெல்லாம் அயோக்கியத்தனம் வாழ்வது மட்டும் கோழைத்தனம். பரம்பரையே மன்னிப்பு கோஷ்டி தானே. காந்தி கொல்லப்பட்டவுடன் கோட்சே சித்பவன பார்ப்பனர் என்பதை அறிந்த மக்கள் அவன் சார்ந்த சித்பவன பார்ப்பன மக்களை தேடித்தேடி தாக்கினர். இந்நிலை நீடித்திருந்தால் சித்பவன பார்ப்பன மக்களின் நிலை கொடுமையானதாக இருந்திருக்கும். விரைவில் சட்டம் ஒழுங்கு சரிசெய்யப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தகவலை படித்தவுடன் இலங்கை யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்கள் தங்களின் சுயநலத்தால் தனி ஈழம் என்கிற நிலை எடுத்தபோது இலங்கை அரசு தமிழர்களின் வேரையே துண்டிக்கும் வேலையை செய்தது நினைவுக்கு வந்து போனது. இதனால் அப்பாவித் தமிழர்களும் சிக்கி தமிழ் மக்களின் வாழ்க்கையே இன்று வேரோடு சாய்ந்துபோன மரமாக இருக்கிறது.

காந்தி கொலையுண்ட நேரத்தில் இலங்கை போன்ற நிலை இங்கும் வராமல் தடுக்கப்பட்டதால் சித்பவன பார்ப்பனர்கள் பாதுகாக்கப் பட்டார்கள். இதுதான் மனித இயல்பு. ஆனால் ஆர்எஸ்எஸ் இன்றுவரை தன்னுடைய சித்தாந்தத்தை மாற்றிக்கொள்ளாமல் நாட்டை பொருளாதார வலுவிழந்த நாடாக மாற்றுவதில் பெறும் வேலையை செய்து வருகிறது.

கடந்த 2014லிருந்து இந்தியாவின் மக்களின் பொது சொத்துக்களை கார்பரேட்டுகளுக்கு வரைமுறையின்றி கொள்ளையடிக்க வழிவிட்டு மதவெறி விதையை மண்ணில் தூவி வருகிறது. இனிமேலும் இந்த அபாயத்தை நம் மண்ணில் அனுமதிக்க மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள இந்நூல் மிகவும் வழிகாட்டியாக இருக்கும். மதவெறியை மண்ணிலிருந்து அகற்றிட இந்நூலை
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

தோழமையுடன்

இரா.சண்முகசாமி

புதுச்சேரி

புதிய புத்தகம் பேசுது – மார்ச் மாத இதழ் – 2023

புதிய புத்தகம் பேசுது – மார்ச் மாத இதழ் – 2023

புதிய புத்தகம் பேசுது – மார்ச் மாத இதழ் – 2023– கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்… ♻️ தலையங்கம்: பாலின சமத்துவமும் பெண் கல்வியும் தேவை இக்கணம்! - ஆசிரியர் குழு ♻️ நூலகாலஜி - 5:…
புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2023

புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2023

புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2023– கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்… ♻️ தலையங்கம்: சென்னை புத்தகக் காட்சி வரலாறு படைப்பாம்! - ஆசிரியர் குழு ♻️ நூலகாலஜி - 3: நூலகர்…
புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022

புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022

புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்… ♻️ தலையங்கம்: தேவை: வாசிக்கும் ஆசிரியர் - ஆசிரியர் குழு ♻️ கல்வி வரிசை நூல்கள் ♻️ சமீபத்திய…
புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2022

புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2022



புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: தமுஎகச மாநாடு வெல்லட்டும- ஆசிரியர் குழு
♻️ புத்தகக் காதல் 8: என் புத்தகங்கள் நீரைப் போன்றவை – ச.சுப்பாரவ்

♻️ தமுஎகச மாநில மாநாடு 15: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: தமுஎகச வின் கோட்பாடும் எனது கலையின் வெளிப்பாடும்! – இயக்குநர் சீனு ராமசாமி
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: கலை இரவும் நானும் – சைதை சா.துரைசாமி

♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 20: வாசிப்பும் சேமிப்பும் – எஸ். வி. வேணுகோபாலன்

♻️ நூல் அறிமுகம்: குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: ஆனந்தவல்லி – ஸ்ரீதர் மணியன்

♻️ அஞ்சலி: தோழர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி – இரா. தெ.முத்து

♻️ நேர்காணல்: நாங்கள் காண்பது கூட்டுக் கனவு… மதுக்கூர் ராமலிங்கம் சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன்

♻️ தமுஎகச மாநில மாநாடு 15: 2018 – 22ஆம் ஆண்டுகளில் வெளிவந்த தமுஎகச படைப்பாளிகளின் படைப்புகள்

♻️ நூல் அறிமுகம்: மதஎந்திரங்களை உருவாக்கும் RSS எனும் உளகளாவிய அச்சுறுத்துல் – ஜமாலன்