Posted inPoetry
ஞானம் கவிதை – ச. லிங்கராசு
பயிர் வளர்க்க ஆசைப்பட்டேன்
பயிர் வளர்த்தேன் கூடவே
களை வளர்ந்து நின்றதனால்
களை இழந்தேன்
களை அழிக்க முயன்றேன்
பயிர் இழந்தேன்
உயிர் நிலைக்க ஆசைப்பட்டேன்
உண்டு கொழுத்தேன்
உயிர் பறிக்கும் நோயின் வசம்
உயிலைக் கொடுத்தேன்
கவி எழுத ஆவல் கொண்டேன்
கசடானது
கற்பனையின் வறட்சியினால்
கைவலித்தது
இசை பாட முயற்சி செய்தேன்
வசையானது
ஏனிந்தத் தோல்விகள் என்று
எண்ணிய போதினில்
எல்லாமே எல்லோருக்கும்
சாத்தியமா? என்றொரு
கேள்வியில் ஞானம் பிறந்தது
