Suya Thedal Poem By R. Banumathi சுய தேடல் கவிதை - இரா.பானுமதி

சுய தேடல் கவிதை – இரா.பானுமதி




தொலைந்தவளைத் தேடியும்
கிடைக்க வில்லை…

எப்போதிருந்து,….
தெரியவில்லை….
தொலைந்தது எங்கே?
புரியவில்லை…
இரவிலா….?
பகலிலா?
எப்போது…. விளங்கவில்லை.

இன்னும்
தேடிக்கொண்டேயிருக்கிறேன்..

மகிழ்ச்சியும் மலர்ச்சியுமாக
கொண்டாட்டமும் கும்மாளமுமாக
இருந்த அவளை….
யார்…விரட்டியது…?

அவளின் மழலைப் பேச்சும்
விளையாட்டுத்தனமும்
குறும்புப் பேச்சும்
குழந்தைத் தனமும்
எங்கே…?…. எங்கே….?

இன்னும்
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
நானெனும்‌..அவளை…
எங்கே போனாள்?