sirukathai : aathalaal kathal saiveer ulagatheere by raman mullippallam சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே-இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே-இராமன் முள்ளிப்பள்ளம்

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே ஓய்வு பெற்ற கலெக்டர் இராமு படுக்கையில். தூய மலையாளத்தில் மகனை அழைத்தார். ’’சகா இவ்விட வரு’’ . இராமனாதன் மொழி மலையாளம் அல்ல. ‘’இராமு சேட்டா’’ என காதல் மனைவி அழைத்தார். பிள்ளைகள் அச்சன் என…
வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்




இரை
*******
சேம்பிலையில்
நீர்த்துளி உருள்கிறது
தடாகத்தில் மீனொன்று
வாய் திறந்திருக்கிறது
ஆக்ரோசவாதிகள் எல்லாம்
அழகியல்வாதிகள் ஆகி விட்டால்
அகிலமே புல்லரித்துவிடும்
வெந்ததைத் தின்று நடமாடுகின்றன
நடப்பதை வேடிக்கை பார்க்கின்றன
பொம்மைகளல்ல நீங்கள்
புத்தனைப் போல காட்டுக்குப் போகமாட்டோம்
ராமனைப் போல உப்பரிகையில் இருக்கமாட்டோம்
மனிதரோடு மனிதராய் கரங்கோர்த்து திரள்வோம்
பறித்ததைப் பறிப்போம்
இனியும் ஏமாறப் போவதில்லை
படையெடுக்கும் காலம் நெருக்குகிறது
ஐந்து நேரத் தொழுகை தவறமாட்டார்
ஷரியத் சட்டங்களை இறையச்சத்தோடு கடைபிடிப்பார்
வட்டி ஒழுங்காக வசூலாக என்ன வேணாலும் செய்வார்.
ஆராதனைகள் நிற்பதில்லை
பசியோடும் வாழும் பயத்தோடும் கர்த்தரின் குழந்தைகள்
பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது.
சொகுசுக் கார்களில் போதகர்கள்
முண்டியடித்தபடி பஸ்களில் விசுவாசிகள்
கர்த்தரைத் தேடிப் போகிறார்கள்.
கல்லறையாக்காதே
பூந்தோட்டமாக்கு
இதயம் சிட்டுக்குருவியாய் சிறகடிக்கட்டும்
பிரிவினைப் பாம்பை உடலில்
நூலாய்ச் சுற்றியபடி
சாத்தான் விஷம் கக்குகிறது
மனிதக்குருதி ருசிக்க
அதன் நாக்கு நீள்கிறது.

உள்ளே வெளியே
*********************
பேரன்புகள் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கின்றன
திளைத்துக் களித்துக் கோரையாய் அசைந்தாடுகிறேன்
ஏந்தியிருக்கும் வெண் மலர்கள் மிதக்கத் தொடங்கின
பசியால் உயிர் துடித்தது
தலையின் மேல் பழமொன்று விழுந்தது
புத்தர் கைநீட்டி அழைத்தார்
பைத்தியக்கார விடுதி திறந்திருக்கிறது
யாரையும் யாருக்கும் தெரியவில்லை
நெரிகின்றன நகரமெங்கும் தலைகள்
குற்ற உணர்வு எதிர் மரத்தில் அமர்ந்திருக்கிறது
சிறு பூச்சியாய் வெட்டவெளியில் ஊர்கிறேன்
கவ்விச் செல்லும் நேரம் நெருங்குகிறது
இரு சாத்தான்கள்
பெயர்ப் பட்டியலை
அகராதியில் அறிந்து கொள்ளுங்கள்

தேர்தல் எந்திரம் நவீன விவசாயம்.
காசி ராமேஸ்வரம் என்று அலைந்து திரிந்து
கர்மம் தொலைப்பார் நெறியற்று
சம்பாத்தியம் செய்த பணத்தில் கோபுரங்களுக்கு தங்ககவசம் செய்வார்
வியாபாரத்தில் பாட்னராக்கி உண்டியலில் காணிக்கை செலுத்துவார்.

– வசந்ததீபன்

நூல் அறிமுகம் : ஷான் ’வெட்டாட்டம்’ – ரா.ரமணன்

நூல் அறிமுகம் : ஷான் ’வெட்டாட்டம்’ – ரா.ரமணன்




266 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை இரண்டு மூன்று நாட்களில் முடித்து விட்டேன்.அவ்வளவு சுவாரசியாமான புத்தகம். சின்ன வயதில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகளை இப்படி படித்திருக்கிறேன்.ஆனால் இது தமிழ்நாட்டளவில், இந்திய அளவில் ஏன் உலகளவில் நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சம்பவங்களை கற்பனை கலந்து நல்ல படைப்பாக எழுதப்பட்டிருப்பது.

எம்ஜியார்,கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளை விமர்சனத்துடனும் இந்திய அரசியலுக்குள் அவர்கள் இயங்க வேண்டியிருப்பதையும் கலந்து எழுதியிருக்கிறார். சுஜாதாவுடைய விறுவிறுப்பையும் விஞ்சுகிறது இவரது கதை சொல்லும் பாங்கு.பின் குறிப்பாக பனாமா ஆவணங்கள் குறித்து விவரங்களையும் அது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இணைப்புகளையும் கொடுத்திருப்பது இவரை உலக தரத்திற்கு உயர்த்துகிறது. ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யையும் இதையும் ஒப்பிடலாம்.

கணினி, ஹேக்கிங் ஆகியவை புத்தகம் முழுவதும் வருவது இன்றைய இளைஞர்களுக்கு நல்ல தீனி.அரசியல்வாதிகளுக்கு பந்தமோ பாசமோ கிடையாது;அவர்களுக்கு பதவியும் பணமுமே முக்கியம் என்பதை விநோதனின் பாத்திரம் காட்டுகிறது.ஆனால் வருணும் கயல்விழியும் சற்று வித்தியாசமான பாத்திரங்கள். பெரிய மனித வீட்டுப் பிள்ளைகள் வழக்கமாக செய்யும் அட்டகாசங்களுடன் அறிமுகமாகும் வருண் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைகளினால் எப்படி ஒரு கை தேர்ந்த அரசியல்வாதியாகவும் அதே சமயம் பொறுப்பான நிர்வாகியாகவும் மாறுகிறான் என்பது சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.நாலா பக்கங்களிலிருந்தும் வீசப்படும் சதி வலைகளிலிருந்து எப்படியாவது வருண் தப்பிக்க வேண்டும் என்று நாமும் கதையோடு ஒன்றி விடுகிறோம்.

ஒரு இக்கட்டான கட்டத்தில் வருணை அவனது அரசியல் எதிரியே காப்பாற்றுகிறாள் என்பது மட்டும் சற்று நெருடுகிறது. அதுவும் ஒரு அரசியல் செயல்தான் என்றும் அதே சமயம் கயல்விழி அவன் மேல் வைத்திருப்பது வியப்பா காதலா என்று நாமும் சேர்ந்து குழம்ப வைத்திருக்கிறார் கதாசிரியர். உயிருக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு காதலியை கை விடும் அனந்தராமன் பாத்திரம் ஒரு தனித்தன்மையானது.

தலைவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் கண் மூடித்தனமான பக்தி குறித்து வருண் மட்டுமல்ல ஒரு ஆரோக்கியமான அரசியலை விரும்பும் எண்ணற்றவர்களுக்கும் புரிந்து கொள்ள முடியாததே. சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்கள் குறித்து நல்ல கருத்துகள் வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு ஆகியவை அடுத்து அப்படிப்பட்ட இளைஞர்கள் மக்களுக்கு ஆதரவாக திரட்டப்படுகிறார்களா?

அரசியலில் ஈடுபடும் பெண்கள்,செய்தித்துறையில் பெண்கள் என பல நல்ல எடுத்துக் காட்டுகள் இதில் இருந்தாலும் அவர்கள் ஆண்களை விட பலவீனமாவர்களாகவே காட்டப்படுகிறார்கள். அரசியலும் பொருளாதாரமும் இலக்கியமும் ஷானிடம் வெள்ளமாக ஓடுகிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் முன்னுரையிலிருந்து பின் அட்டையில் மேற்கோள் காட்டியிருப்பது இந்த நவீன இளைஞர் மரபில் காலூன்றியிருக்கிறார் என்று தெரிகிறது.

நூல் : வெட்டாட்டம்
ஆசிரியர் : ஷான் 
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்
விலை :₹250

Vatriya Nathiyin Karayil Sila Pookkal Kavithai by Vasanthadheepan வற்றிய நதியின் கரையில் சில பூக்கள் கவிதை - வசந்ததீபன்

வற்றிய நதியின் கரையில் சில பூக்கள் கவிதை – வசந்ததீபன்

வற்றிய நதியின் கரையில் சில பூக்கள்
*********************************************
நைந்து போன கடிதத்தை
வாசிக்க..வாசிக்க
தோற்ற காதல்
வாசனை தேடிப் போன
மனதில் எச்சில்சொட்ட
பசித்த ஓநாய்
சிறகு உலர்த்துகிற
பறவையிடமிருந்து
தூறல் மழை
சிற்பியின் மனதில்
உதித்த உருவல்ல
பாறையுள்ளிருந்து சிலை
புகழ்வான்
பாராட்டுவான்
புதைகுழி பற்றி கவனம் கொள்ளுங்கள்
அடித்தால் அடியுங்கள்
உதைத்தால் உதையுங்கள்
அன்பாயிருப்பது ஏமாறுவதல்ல.
ராமன் ஆண்டாலென்ன?
ராவணன் ஆண்டாலென்ன?
அன்னாடங் காச்சிகள்
ஈயாதான் பறக்கணும்.
மனசுக்குள் புழுங்காதீர்கள்
நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திடுங்கள்
பலூன் ஊத ஊத வெடிக்கும்
மனசுக்குள் புழுங்காதீர்கள்
நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திடுங்கள்
பலூன் ஊத ஊத வெடிக்கும்
உண்மையைக் காப்பாற்ற பொய் சொல்லலாம்
பொய்யைக் காப்பாற்ற
உண்மை சொல்லாதே
காக்க காக்க நீதி காக்க
நவதானியங்கள் தின்றவர்கள்
சுகமாய் வாழ்ந்தார்கள்
கோதுமை தின்பவர்கள்
நோயோடு அல்லாடுகிறார்கள்
நளபாகம் நாலாவிதமாகிப் போச்சு
கோடாரியை கீழே போடு
காடுகள் கோபத்தில் இருக்கின்றன
சிதைக்குள் சிக்கிக் கொள்ளபோகிறாய்
வயிற்றில் கக்கூஸோடு அலைகிறீர்கள்
மூளையை கக்கூஸாக்கி வெறிக்கூத்தாடுகிறீர்கள்
கக்கூஸ் என்றதும் ஏன் பதறுகிறீர்கள்?
வலியிருந்து வெளியேறுகிறேன்
வேதனையை கழற்றி எறிகிறேன்
ஆசுவாசமாக இருக்கிறது.
ஒடுக்கப்படுபவர்களுக்காக குரலெழுப்புவேன்
அடக்கப்படுபவர்களுக்காக
கரம் நீட்டுவேன்
நான் உயிருள்ள மனிதன்
ஒடுக்குகிறார்கள்
உயிராய் நேசிக்கிறீர்கள்
போதும் பெண்ணினமே
பூவுக்குள் தேன்
முள்ளுக்குள் பூ
தேன் மட்டும் குடிக்கின்றன வண்டுகள்.