ராம்குமாரின் கவிதைகள்

ராம்குமாரின் கவிதைகள்




1.
பல இரவுகளை தூக்கியெறிந்து நிற்கிறது என் தூக்கம்
நீயில்லாமல்
நின் நினைவில்லை
சாகாமல்
நிச்சயம் என்னைப்போல்
இருக்கக்கூடாது உனக்கும்
கண் மைக்கும் காதுமடலுக்கும்
வர்ணம் தீட்டியே என்னை
கவிஞன் ஆக்கியவள் நீ
உன் பார்வைக்கு பதிலுரைக்கவும்
புன்னகையில் விழுந்து மடியாமலும்
மீண்டு வந்த ஆட்கள் உண்டா
இப்படியான வேளையில்
கடல் அலை சீற்றத்தை போல்
பேரழிவாய் வந்தது நம் பிரிவு
வருடங்கள் மாறினாலும்
வயதுகள் கூடினாலும்
நரைவிழாமலே இருக்கிறது
நம் காதல்
ஆண்டுதோறும் வந்து நிற்கிறேன்
உன் பாதங்கள் பிரிந்து சென்ற
பாதை நோக்கி
இன்னொரு ஆழிப்பேரலை
வந்துவிடாதா நம்
பிரிவினை சேர்த்துவைக்க

2.
தலைப்புச்செய்திகள் ஆகலாம்
தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிக்கலாம்
கட்சிகளின் வெற்று அறிக்கையும் கண்டன உரையும்
காது துளைக்கலாம்
நடவடிக்கை எடுப்பதாக நாளை கழிக்கலாம்
நாட்டையே பரபரப்பாக்கலாம்
எல்லாம்
அடுத்த செய்தி வரும் வரைதான்
எதுவும் மாறவில்லை இங்கு
நினைவில் கொள்ளுங்கள்
அந்த அடுத்த செய்தி
நீங்காளாகலாம்

அப்பொழுது புரியும்
எங்கள் துயரும்
துடிக்கும் வலியும்

3.
தப்படிக்க
மாட்டுத்தோலுரிக்க
வயல்கள் செழிக்க
உங்கள் வயிறு கொழுக்க
சடலம் புதைக்க
குடிக்கும் நீருக்குக் கூடக் கையேந்தி நிற்க
பழாக்கி வைத்தத்  தலைமுறையில்
முதன் முறையாக
வாத்தியாராகவும்
வக்கீலாகவும்
வாங்கிய பட்டங்கள்
அப்பனின் கையில்
இருக்கையில்
அத்தனை கனம்
4.
நானும் நீயும்
ஒன்று இல்லை
நிறம் வேறு
மொழி வேறு
வசிக்கும் இடம் வேறு
ருசிக்கும் உணவு வேறு
நம்மைப் புதைக்கும்
இடம் கூட வேறு
ஆனால் செத்தால் மட்டும்
எப்படி இருவரும்
பிணம் ஆனோம்
மு.ராம்குமார்
கல்லூர்
தீர்வு தினம் கவிதை – மு.ராம்குமார்

தீர்வு தினம் கவிதை – மு.ராம்குமார்




நுரை பொங்கும்
மலக்குழியில் மிதக்கிறது ஒரு முகம்
நேரம் கடந்தும் ஓடுகின்றன பலரின் கால்கள்
ஒட்டியிருக்கும் தேகங்களின் வியர்வை கொண்டு
வானுயர்கின்றன கோபுரங்கள்
புத்தகம் ஏந்த வேண்டியவை
செங்கல்லை சுமக்கின்றன
பிஞ்சுக் கையெல்லாம் பீடிக் கட்டை
சுருட்டுகிறது
வறண்ட நாட்களில் கூட
வற்றிய பயிர்களால் வயல்கள்
செழிக்கின்றன இப்படி
நேரமின்றி
இயந்திரத்தைப் போல உழைக்கும்
அவர்களைக்கண்டு பெயரிடப்படாத
மற்ற நாட்கள் சிரிக்கின்றன

பொழுதெல்லாம் போராட்டம்
தீராத புலம்பல்கள்
வந்து சேரா ஊதியங்கள் என
நாளெல்லாம் வதைபடுவோருக்கு
தனி தினம் ஏது
வாழ்வில்
தீர்வு வரும் தினம் எது

மு.ராம்குமார்
கல்லூர்

மு.ராம்குமாரின் கவிதை

மு.ராம்குமாரின் கவிதை




ஒரு
ரகசியத்தை
உனக்குச் சொல்லவிருக்கிறேன்
ஒரு பறவை தன்
கூடுகளை
அடைகாப்பது போல்
காதலின் கடந்தகால
சுவடுகளை  அடைகாத்து வைத்திருக்கிறேன்

அதில் உன் வீதிகளில்
நடக்க முயன்ற போது  எனக்குநிகழ்த்தப்பட்ட
அவலங்கள் படிமங்களாக
இருக்கும்

ஒன்றாக அமர்ந்து பேசிக்
பேசிக்கொண்டிருந்ததற்காய்
உடல்கள் சிதறிய கொடுமை
இருக்கும்

இருவரும் நேசித்ததற்காக
இரக்கப்பட்ட  துயரம் இருக்கும்

கூட்டு  வன்கொடுமையால்
கொல்லப்பட்டவளின்
ரத்த வாடை
பளிச்சென்று அடிக்கும்

எரிக்கப்பட்ட சேரியின்
சாம்பல்  வானின்
உயரத்தில் பறக்கும்

இப்படி எல்லாவற்றையும்
கடந்து விட்டு தான்
உன்னை வந்தடைந்தேன்
சாதியைக் கொன்று புதைத்து
காதலை உயிர்ப்பிக்க…..

மு.ராம்குமார்
கல்லூர்
9566317364

மு.ராம்குமாரின் கவிதை




ஒரு
ரகசியத்தை
உனக்குச் சொல்லவிருக்கிறேன்
ஒரு பறவை தன்
கூடுகளை
அடைகாப்பது போல்
காதலின் கடந்தகால
சுவடுகளை  அடைகாத்து வைத்திருக்கிறேன்

அதில் உன் வீதிகளில்
நடக்க முயன்ற போது  எனக்குநிகழ்த்தப்பட்ட
அவலங்கள் படிமங்களாக இருக்கும்

ஒன்றாக அமர்ந்து பேசிக்
பேசிக்கொண்டிருந்ததற்காய்
உடல்கள் சிதறிய கொடுமை இருக்கும்

இருவரும் நேசித்ததற்காக
இரக்கப்பட்ட  துயரம் இருக்கும்

கூட்டு  வன்கொடுமையால்
கொல்லப்பட்டவளின்
ரத்த வாடை
பளிச்சென்று அடிக்கும்

எரிக்கப்பட்ட சேரியின்
சாம்பல்  வானின்
உயரத்தில் பறக்கும்

இப்படி எல்லாவற்றையும்
கடந்து விட்டு தான்
உன்னை வந்தடைந்தேன்
சாதியைக் கொன்று புதைத்து
காதலை உயிர்ப்பிக்க…..

மு.ராம்குமார்
கல்லூர்
9566317364

எதிர்பார்ப்பு கவிதை – மு.ராம்குமார்

எதிர்பார்ப்பு கவிதை – மு.ராம்குமார்




உனக்கென்று
பிரத்யேகமாய்
எதுவுமில்லை
எப்பொழுதாவது
தோன்றுவதை
சலிப்பின்றி
சலனமின்றி
கிறுக்கிக்
கொண்டிருக்கிறேன்
ஒருவேளை
உன்பார்வைப்பட்டு
பெருங்காதலின்
மாயையால்
கவிதையாகலாம்
அல்லவா

மு.ராம்குமார்
கல்லூர்
9566317364