எப்போது முடியும் இந்த நாடகம்? கவிதை – ச.லிங்கராசு

எப்போது முடியும் இந்த நாடகம்? கவிதை – ச.லிங்கராசு




மீண்டும் ஒரு கபட நாடகத்தை
அரங்கேற்றத் துடிக்கும் அவலம்
இங்கே ஆரம்பித்து விட்டது
பேதத்தை மறந்ததைப் போல் காட்டி
வேதத்தை முன்நிறுத்தச்செய்யும்
வேலைகள் இங்கே மிக வேகமாக

நரிகளே தோற்றுப் போகும்
நயவஞ்சக தந்திரங்கள்
இந்த நலிந்தோரிடம் எடுபடுவதுதான் கொடுமை
நெருப்பைத் தீண்டும் குழந்தைகளாய் நிறைந்து
வருகிறார்கள் இந்த அப்பாவிகள்

எல்லா இனத்திலும் ஊடுருவி
ஏணியில் ஏற்றிப் பின்னர்
சநாதனத்தின் வெறி கொண்டு
சாய்த்து விடுவதில் மன்னர்கள்
இந்த சாபகேடுகள்

சிறு கூட்டத்தின் சாமர்த்தியம்
இன்று பெருங்கூட்டமாய்த் திரண்டு
மதமென்னும் ஒற்றைச் சொல்லில் மாற்று மதம் வெறுக்கிறது.

என்று இந்த ஏமாற்றம் அறிவார்
இந்த எளியோர்கள்?
அன்றுதானே இங்கு ஆனந்தம்
எங்கெங்கும்!

தேச விடுதலைக்குத் தோள்
கொடுக்காதவர்கள்
தேச துரோகம் பற்றி ஒப்பாரி
வைக்கிறார்கள்
சுதேசியம் கூட ஒரு காலத்தில்
பேசிப் பார்த்தவர்கள்
இன்று சர்வதேச கார்ப்பரேட்டுகளுக்கு
ஏஜென்டுகள் ஆனார்கள்!

– ச.லிங்கராசு

ஆழப் புதைத்திடு கவிதை – கோவி.பால.முருகு

ஆழப் புதைத்திடு கவிதை – கோவி.பால.முருகு




இந்தியர் நொந்து இறப்பதைப் பார்த்து
இனிதாய் மகிழ்ந்தாரே-மக்கள்
வெந்து தணிந்திட வேதனை கொண்டு
வீதியில் நின்றாரே-நம்
சொந்த பணத்தையே செல்லாத தாக்கிச்
செவிட்டில் அறைந்தாரே-மோடி
செயலால் இறந்தாரே!

இந்திய வீரர் இறப்பது மோடியின்
இழிந்த அரசியலாம்-அவர்
சொந்தம் அழுது சோர்ந்திடக் கண்டும்
சொகுசாய் வாழ்பவராம் -அட
பந்தம் இலாதவர் பாசம் இதுதான்
பாருங்கள் மக்களே-பகை
தீருங்கள் மக்களே!

சிலையால் அரசியல் சில்லறை மதவெறி
சீர்கெட்ட ஆட்சியாம் -இவர்
கொலைகள் செய்வது கொள்கை என்றாகும்
கொடுமைக் காட்சியாம்-அட
மலைபோல் பொய்யை மனதாரச் சொல்லும்
மோடியே சாட்சியாம்-அவர்
தேடிடும் வீழ்ச்சியாம்!

வங்கியின் பணத்தை வாரிச் செல்வர்கள்
வளம்பெறக் கொடுத்தவராம்-அவர்
வாங்கிய பணத்துடன் வெளிநாடு ஓடிட
வசதியும் செய்தவராம்-மோடி
ஏங்கிடும் மக்களை ஏழ்மையில் தள்ளி
ஏளனம் செய்பவராம்-மோடி
ஏளனம் செய்பவராம்!

வரியாய் ஜிஎஸ்டி விதித்து மக்களை
வாடிட வைத்தாரே-நாட்டில்
சிறுகுறு தொழிற் சாலைகள் எல்லாம்
சிதைந்திடச் செய்தாரே-மோடி
நரியாய்ச் செய்த வேலை அதனால்
நாட்டை அழித்தாரே-மோடி
நாட்டை அழித்தாரே!

ஊழல் மதவெறி உலுத்த சாதி
ஒழிந்திடச் சங்கூது-அவர்
வீழ உழைத்திடு வீதியில் களமிடு
வெற்றி என்றோது-பாஜகாவை
ஆழப் புதைத்திடு ஆக்கம் நிலைத்திடு
அதற்கிணை ஏது-இனி
அதற்கிணை ஏது!

இந்துத்வத்திற்கு மத அடிப்படைவாதம் விடுக்கும் சவால்..! – திரு.சஜ்ஜன் குமார் (தமிழில் நாராயணன் சேகர்)

இந்துத்வத்திற்கு மத அடிப்படைவாதம் விடுக்கும் சவால்..! – திரு.சஜ்ஜன் குமார் (தமிழில் நாராயணன் சேகர்)

ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியாவில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது குறித்து மூன்று வெவ்வேறு கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.  இந்நிகழ்வை ஆதரிப்பவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றனர். மதச்சார்பற்றவர்கள், அம்பேத்கரிய வாதிகள், இடதுசாரி ஆதரவாளர்கள் ஆகியவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.   …