Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – ஹ்ரிஷிகேஷ்
தடித்த ஹெட்போன்களை
தாங்கும் செவிகளுக்கு
இசையும் பாரமாகுமோ?
தன்னையே சுற்றிக்கொண்டும்
துளியும் காற்றின்றி
தவித்தது மின் விசிறி!
கால்கள் இருந்தும்
கடக்காது இருக்கிறது
ஆற்றின் பாலம்!
நித்தம் கிழிக்கப்பட்டும்
நிரந்தர புன்னகையில்
நிலையாய் நாட்காட்டி!
ஊரே உறங்கும் நேரத்திலும்
ஓயாது உழைக்கின்றன
கடிகார முட்கள்!
