கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டாவின் கவிதை – தமிழில்: ரமணன்

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டாவின் கவிதை – தமிழில்: ரமணன்




நதியும் நாகரீகமும் மரணிக்கும் நேரம்
பிராணவாயு வற்றிய
நதிகள் இறந்து போயின.
ஆயினும்
உயிரற்ற நீரில் மிதந்துகொண்டிருக்கும்
அவற்றின் சடலங்கள் குறித்து
எவரும் கவலைப்படவில்லை.
ஜீவனற்ற நதி மேல்
மனித உடல்களை வீசியெறிவது
யாருடைய குற்றங்களையும்
அந்த நீரோடு அடித்து செல்லாது.
நதியோடு மிதந்து கொண்டிருக்கும்
சடலங்கள் போல்
அவையும் செத்துப் போன நீரில்
மிதந்து கொண்டுதானிருக்கும்.
ஒரு நாள்
ஆக்சிஜன் இல்லாமையால்
அனைத்து நதிகளும் இறக்கும்போது
நாகரீகத்தின் எலும்புக் கூடுகள்
அவற்றில் மிதக்குமோ?
தம் மரணத்தை
நதிகள் அறியும்.
நாகரீகமும் அவற்றின் பின்னே.

தமிழில்: ரமணன்

************

ஜார்கண்ட் மாநில கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா ஓரோன் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்.இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர்.’anger’ மற்றும் ஜடோன் கி ஜமீன் என்கிற இரு மொழி கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளையம் அவர்களது போராட்டங்களையும் சித்தரிக்கின்றன. இந்தக் கவிதை ‘beacon’ என்கிற இதழிலிருந்து எடுக்கப்பட்டது

Time for Civilizations to Die
Many rivers died
due to lack of oxygen
but nobody paid heed
to their corpses
still floating
in the dead water
dumping human corpses
on top of lifeless rivers
does not make anyone’s crimes wash away in the water
they all keep floating
like with the rivers
human bodies are still floating
in the dead waters.
one day when all rivers die
due to the lack of oxygen
then in the dead rivers
will there be skeletons of civilizations afloat.
rivers know
when they die
civilizations are not far behind.

© Jecinta Kerketta

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை – தமிழில்: ரமணன்

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை – தமிழில்: ரமணன்




முகநூலில் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் ஜார்கண்ட் மாநில கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை வரிகளை பகிர்ந்திருந்தார். அவற்றை தமிழாக்கம் செய்திருக்கிறேன். இவர் ஓரோன் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். ‘anger’ மற்றும் ஜடோன் கி ஜமீன் என்கிற இரு மொழி கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆதிவாசிகளை இழைக்கப்படும் அநீதிகளையம் அவர்களது போராட்டங்களையும் சித்தரிக்கின்றன.
*****************
நாங்கள் நாகரீகத்திற்கு மாற
அவர்கள் காத்திருந்தார்கள்.
நாங்களோ
அவர்கள் மனிதர்களாக காத்திருந்தோம்.

[They are waiting for us to become civilised,
and we, for them to become human.]
——————————
ஆதிவாசி கிராமத்தின்
ஊடாக செல்லும் கவிதையில்
ஆற்றில் குளிக்கும் ஆதிவாசிப் பெண்ணின்
வெற்றுடம்பையோ
அல்லது
ஒற்றை ஆடையில் உடல் மறைத்து
ஈரம் உலராமல் வீடு திரும்பும்
இளம்பெண்ணையோ
சிலர் தேடினர்.
கவிதையில் ஆதிவாசிப் பெண்களை
தேடுவதை நிறுத்துங்கள்.

[In poetry that passes through an Adivasi village,
some people search
for the bare back of an Adivasi woman bathing in a river.
Having draped her body in a single piece of cloth
a still-damp young girl returning home.

Stop searching for Adivasi girls in poetry. ]
——————————
ஒரு கோயிலோ மசூதியோ அல்லது தேவாலயமோ
இடிக்கப்படும்போது
ஆழப்பதிந்த உங்கள் வேதனையில்
காலம் காலமாக பழிவாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால்
காடுகளே புனிதமாய் கொண்ட அவர்களுக்கு
அதன் அழிவிற்கு யார் பதில் சொல்வார்கள் ஐயா?

[When a temple, mosque or church is broken
your pain is so deep
that you keep avenging it for centuries.
But they for whom the forest is sacred
who will pay them back for the destruction, sir? ]
—————————
ஒரு நாள் கடவுள்
எனக்கு பழக்கமானார்.
இப்போது
புகையிலை சுவை போல
அவர் வழக்கமான பழக்கமானார்.

[One day, God
became a habit for me.
Now God was a matter of habit
Like tobacco was a matter of habit.]
—————————
எங்களுக்கு
அவர்களின் கடவுளை அளித்தனர்.
‘உங்கள் பாவங்களிலிருந்து
அவர் விடுவிப்பார்’ என்றனர்.
‘நாங்கள் என்ன பாவம் செய்தொம்?’
என்று திருப்பிக் கேட்டோம்.

[They offered us their god
said he will free you of sins,
we asked
what sins have we committed?]

– ரமணன்

நூல் அறிமுகம் : சூ.சிவராமனின் ‘சற்றே பெரிய நிலக்கரித்துண்டு கவிதை’ – செல்வகுமார்

நூல் அறிமுகம் : சூ.சிவராமனின் ‘சற்றே பெரிய நிலக்கரித்துண்டு கவிதை’ – செல்வகுமார்




மிகச் சிறியதாகவுள்ளதே இக்கவிதை நூல் வெறும் 50 பக்கங்களோடு என மனதுள் எண்ணிக்கொண்டு வாசிக்கும்போது
“துருவேறிய மண்வெட்டி
கைவிடப்பட்ட தானியக்கதிர்
நானொரு மண்புழு” என்ற முதல்பக்கக் கவிதை நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது.

“ஆடுகள் மாடுகள் மேய்ந்த ஆற்றுப்படுகை
நீர்க்காகங்கள் வெளியேறுவதற்கு முன்பு வரை
வாழ்ந்து கெட்டவன் விழுந்து சாக
ஒரு நதி இருந்தது” இதில் பொதிந்திருக்கும் உண்மைகளான நீர்க்காகம் வெளியேறியதையும், மனிதனின் பேராசையால் நதி காணாமல் போனதையும் சூசகமாக கூறியதோடு, வங்கிக் கடனை செலுத்த முடியா பணமுதலைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதும், கடனைத் தள்ளுபடி செய்து உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பெறவைத்து அழகுபார்க்கத்துடிக்கும் ஆட்சியாளர்கள் , விவசாயி வாங்கின கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் முகமூடி அணிந்துகொண்டு ஏழை விவசாயியை தூக்கில் தொங்கவிட்டு மேலுலகம் அனுப்பிவைக்கும் செயலை
” காளைகளின் நுகத்தடிக் கயிற்றில்
அழகிய சுருக்கொன்றைப்
போடக் கற்றுத் தேர்ந்தான்
நிலத்தின் நிர்வாணம் சகிக்கவில்லை
நிமிர்ந்த பால் கதிரென
அந்தரத்தில் தொங்குகிறான்
சட்டைப் பையில் ஓயாமல் ஒலிக்கிறது கைப்பேசி
தொடர்ந்து அழைத்தபடி இருக்கிறார்
வங்கி மேலாளர்” என்ற கவிதையை
வாசிக்கும்போது எங்கோ ஓர் மூலையில் நிலத்தை நேசிக்கும் விவசாயியின் மூச்சடங்குவதை கண்முன் காணச்செய்து நம்
கண்களைக் குளமாக்கிவிடுகிறார்.

“புல் மேயாத மாட்டின் பாலை விற்கிறார்கள்
நெகிழிப் பைகளில்
விடலைகள் அணையாத காளைகளோ
ஆண்மையிழந்துவிட்டன” என்பதை வலியோடு மனம் நொந்து சொல்லும் கவிஞர் அக்கவிதையின் முடிவில் “நீள்சதுரப் பெட்டியில் மீன்களை நீந்தவிட்டது தற்செயலில்லை” என முடித்திருப்பார் ஆறுகளை காணாமல் செய்த நம்சேவையை பாராட்டும்விதமாக.
பாய் கடையில் தேநீர் குடிக்கும் கடவுள்
“சிறுநீர் ரத்தத்தைச் சுத்திகரிக்குமா
கறி தின்பது தேத்துரோகமா” என்ற கேள்விகளுக்கு விடையளிக்கமுடியாமல் எனைக் கொன்றுவிடுங்கள் எனக் கூறி கதறச் செய்யும் சூழலை உருவாக்கிய இம்மானுடர்களின் மதவெறியை தோலுரித்துள்ளார்.
இயற்கை வழங்கிய அழகிய நிலத்தை மாசுபடுத்தும் செயல்களை தொடர்ந்து செய்து வரும் நாம், நமது சந்ததிகளுக்கு வாழத்தகுதியில்லா பூமியை வழங்கவுள்ளதை
“விலை நீரைப் பருகின பின்
அதன் புட்டிகளோடு
புதைக்கிறோம் எதிர்காலத்தை
நேசிப்பில் ஊரும் அன்பைப்போல்
நீரூரும் நல் நிலங்கள்
புவிக்கு வெளியே சென்றுவிட்டன
நம் காதலோ நீண்டிருக்கிறது
கதிராமங்கலம் வரை” என கரி நிலத்தை கவிபாடி எச்சரிக்கைவிடுக்கிறார்.

தன் இருப்பிடத்தின் கீழே பதிக்கப்பட்டுள்ள கெயில் குழாய்கள் சூழ்ந்திருக்கும் அனல்மின் நிலையங்களினால் எழுந்த அவநம்பிக்கையினால் உறக்கமின்றி படுக்கையில் சோர்ந்திருப்பவரின் உடல் கிடக்கை சற்றே பெரிய நிலக்கரித்துண்டென காட்சியளிப்பதை நேரில் கண்டுணர அவ்விடத்திற்கு நமை அழைத்துச் செல்லும் இக்கவிஞரை, நிர்வாண நிலத்தின் நடுவே நின்று அதைப் பாடி எச்சரிப்பது ஆட்காட்டி அல்ல, நூற்றுக்கு நூறு அது நூலாசிரியர் சூ. சிவராமன் தான் என அணிந்துரையில் உயர்திரு. நக்கீரன் கூறிய கூற்று சாலப் பொருந்தும். சமூக அவலங்கள், ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள், மானுடர்களின் பேராசைகள் போன்றவையால் விளையும் விளைச்சலை விலாவாரியாக அள்ளித்தெளித்த, ஊராட்சி செயலராக பணியாற்றும் இம்மக்கள் கவிஞரை தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறோம் எளிய மக்களுக்காக.

– செல்வக்குமார் இராஜபாளையம்.

நூல்: சற்றே பெரிய நிலக்கரித்துண்டு
ஆசிரியர்: கவிஞர் சூ. சிவராமன்
முதல் பதிப்பு: ஜனவரி 2020
வெளியீடு: கொம்பு பதிப்பகம்
நாகப்பட்டினம் -611001.
விலை: ரூ.50/-

வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




பூக்களற்ற நிலம்
********************
பசித்த வயிறுக்கு பத்து வாய்கள்
யாசிக்கும் உடலுக்குப் பதினாறு கைகள்
புசிக்க வழியற்று அல்லாடும் உலகம்
மெளனத்தை வரையறுத்தேன்
ஒலிக்குள் ஒலி உறைந்து போனது
ணங்கென்ற சம்மட்டிச் சத்தம்
திகைத்து நின்றது
நெருப்பாய் நீராய் உரு மாறுகிறேன்
ஒளியாய் ஒலியாய் உயிர் தரிக்கிறேன்
காற்றாய்க் களிப்பாட்டாய்ப்
புவனத்தில் வலம் வருகிறேன்
பசிக்குது என்றான்
பத்து ரூபாய் கொடுத்தேன்
இருபது வேண்டும் என்கிறான்
விழிக்கத் தொடங்கினான்
துக்கம் உறங்கிப்போனது
இதயத்தில் வண்ண வண்ணப்பூக்கள்.
கூப்பிட்டேன்
பதில் இல்லை
மவுனத்துள் ஒலி ஒடுங்கிப் போனது.
பார்வை பட்டதும் கல்லானேன்
தேகம் பட்டதும் பூவானேன்
அவளின் முத்தங்கள் என்னை குழந்தையாக்கியது.
நடைப் பிணம் கீழ்மையானது
பிணம் மேன்மையானது
வாழ்க்கை மதிப்புமிக்கது.

துக்கம் உதிர்க்கும் தானியங்கள்
**************************************
அணில்கள் மரக்கிளைகளில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து சிரிக்கின்றன
நடக்க இயலாத அவன் சிறிது சந்தோஷப்பட்டுக் கொள்கிறான்
வனத்துள் காட்டுக்குதிரை மேய்கிறது
குளம் நீர்த்தூரிகையால்
அதனை வரைகிறது
பனிசூடிய மலையும் ஊசியிலைமரங்களும் வியக்கின்றன
நதியில் மிதந்து வருகின்றன பூக்கள்
நீர்ப் பரப்பில் இசை குமிழியிடுகிறது
மஞ்சள் ஒளியில் காதல் பொழிகிறது
அடிமை வாய்க்குப் பூட்டு

எடுபிடி மூளையை
கட்டியிருக்கிறது சங்கிலி
மொழி திண்டாடுகிறது
வரப்புகளில் கரிசாலையும் நெருஞ்சியும் பூத்திருந்தன
கொறவையும் கெழுறும் நெல் பயிருக்குள் நீந்தித் திரிந்தன
கொக்குகளும் மடையான்களும் கூத்தடித்தன
ஒரு காலம்
இரவு குடிகாரன்
பகல் குடிகாரனை திட்டுகிறான்
பகல் குடிகாரன்
இரவுகுடிகாரனை ஏசுகிறான்
எல்லா குடிகாரன்களையும்
உலகம் வைகிறது.

– வசந்ததீபன்

நூல் அறிமுகம் : நக்கீரனின் காடோடி நாவல் – சூரியா சுந்தரராஜன்

நூல் அறிமுகம் : நக்கீரனின் காடோடி நாவல் – சூரியா சுந்தரராஜன்




நூல் :  காடோடி நாவல்
ஆசிரியர் : நக்கீரன்
வெளியீடு : அடையாளம்
விலை : 270
பக்க :  340
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

வெறும் முன்னூறு ரூபாயில் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டுமா?

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிக் கொண்டிருந்த காலம் அது. “மருத்துவமனைகளில் இடம் இல்லை. அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவை. இடுகாட்டில் இடம் இல்லாததால் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன”. போன்ற அறிவிப்புகளே எங்கும் நிறைந்திருந்தது. போதாக்கு றைக்கு நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் ஒரு இறப்பு செய்தியை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பயமும் மனஉளைச்சலும் தொற்றிக் கொள்ள, அதிலிருந்து விடுபட நிறைய மறதியும் கொஞ்சம் அமைதியும் தேவைப்பட்டது. அவ்வளவு தான் போர்னியா தீவு என்னை வாரி அணைத்துக் கொண்டது. கடவுச் சீட்டு இல்லையென்றேன்; வேண்டாம் என்றது. இபாஸ் இல்லையென்றேன்; தேவையில்லை என்றது. பிறகு எதற்கு தாமதம்? கிளம்பலாமா?

ரசோங் குரங்கு
அதுதான் என் முதல் படகு பயணம். கினபத்தாங்கன் நதியின் நீண்ட படகு பயணத்தை தொடங்கும் முன், மிக நீண்ட சாலை பயணத்தையும் முடிக்க வேண்டியிருந்தது. கினபத்தாங்கனிலிருந்து வடக்கு நோக்கி திரும்பி லோக்கன் ஆற்றின் மீது மிதக்க தொடங்கியிருந்தது படகு. இருபுறமும் மரங்களடர்ந்த பொள்ளாச்சி – ஆனைமலை சாலையில் பயணம் செய்யும் போதெல்லாம் அதன் எழிலில் மயங்கி வண்டியில் ஊர்ந்து செல்லும் எனக்கு லோக்கன் இன்ப அதிர்ச்சி தந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த அடர்ந்த மரங்கள் லோக்கனை வெயிலுக்கு காட்டாமல் வளர்த்துக் கொண்டிருந்தன. லோக்கனின் வழிப்பாதையை தவிர எங்கு திரும்பினும் பசுமை. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வாலர்கள் வந்தால் கூட எந்த புள்ளினத்தின் ஒலி இது என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு கலவையான ஒலிகளால் கானகம் நிரம்பியிருந்தது. ஆனால் லோக்கனோ அதன் ஆழத்தில் கொஞ்சி விளையாடும் மீன்களை கண்ணாடிபோல் தெளிவாக காட்டி அமைதியாக சென்று கொண்டிருந்தது. லோக்கனின் தாகம் தீர்க்கும் பல ஓடைகளில் ஒன்று இடப்பக்கமாக மேற்கிலிருந்து ஓடிவந்து கலந்தது. இதற்கு மேல் படகு செல்லாது. இனி காணப்போவதெல்லாம் காடு காடு காடு மட்டும் தான். கொரோனாவினால் ஏற்பட்ட வலி கரைந்து கொண்டிருந்த தருணம் அது.

தனியாக தான் போனேன். ஆனால் அங்கு சென்றதும் முதலில் துவான் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். பின் ஒமர் வந்தார். யுவன்னா, இல்லை அன்னா வந்தாள். ஜோஸ்சும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். காடுகள் ஒளித்து வைத்திருந்த ஆர்மோனியப் பெட்டியை கண்டெடுக்க அவனே கற்றுக் கொடுத்தான். ஜோஸ்ஸின் சொந்தக்காரி ரலாவின் பாடல்களுக்கு இசை கருவிகளே தேவையில்லை. இவர்களுடன் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சிலர். அப்புறம் பிலியவ். ‘எனக்கு வண்டியில் பயணம் செய்ய தெரியாது’ எனக் கூறி என் பேரன்புகளை பிடுங்கி சென்றவர். படேல் சிலையருகே பாதங்களுக்கு பக்கத்தில் மோடி நிற்பது போன்ற காட்சியில் மூதாய் மரத்தையும் என்னையும் பொருத்திக் கொண்டிருந்த வேளையில் ஒமர் சொன்னார், உலகில் இவ்வளவு உயரமான மரவகைகள் அமேசான், ஆப்பிரிக்க காடுகளில் கூட கிடையாது. என்னையும் அறியாமல் என் தலை அதை ஆமோதித்து அசைந்து கொண்டிருந்தது. எங்களுடன் வா! நீ காண வேண்டியது நிறைய உள்ளது என்று ஜோஸ் சொல்லி முடிப்பதற்குள் நான் தயாரான வேகத்தைப் பார்த்து அனைவரும் வெடித்து சிரித்தனர்.

ஐம்பூதங்களில் மூன்றிற்கு காடு சம்பளத்துடன் கூடிய கால வரையறையற்ற விடுப்பு கொடுத்து விட்டது போலும். கண்ணுலையே படல. நிஜமாகத்தான் சொல்றேன். பல நூற்றாண்டுகளாய் சேமித்த இலை மேல்மண் மக்குகளால் சில அடி உயரம் வரை மூடப்பட்டிருந்த நிலம். ஓங்கியுயர்ந்து அடர்ந்து படர்ந்து வளர்ந்த மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம். சூரிய ஒளி புகமுடியாததனால் வெப்பத்திற்கு (நெருப்பு) தடை. ஆனால் வளிக்கும் (காற்று), அதனை குளிரூட்டும் சிற்றோடைகளுக்கும், குளங்களுக்கு (நீர்) மட்டும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டும் வேலை. இப்படி அடர் வனத்தின் குளிர்ந்த கவிகையில் மூன்று நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன்.

நான் பார்த்ததையெல்லாம் சொன்னால் நீங்கள் எல்லாரும் உடனே கிளம்பி அங்க போயிருவீங்க…கொஞ்சம் பயண களைப்பில் இருந்தாலும் உங்களுக்காக சில விஷயங்களை மட்டும் சொல்றேன்….. நம்ம ஊருல இருக்குற குரங்குகளெல்லாம் ஒரு மாறி மரப்பட்டை கலர்ல தான இருக்கும். இங்க அடர் செம்மஞ்சள் கலர்ல ஒரு குரங்கை பாத்தேன். அதுக்கு மூக்கு வேற தும்பிக்கை மாதிரி இருக்கு. ஒமரிடம் கேட்டேன், ரசோங் குரங்குகளாம். இங்கு தவிர உலகில் வேறு எங்கும் இல்லையாம்.

காட்டின் தாவரவியலையும், விலங்கியலையும் கரைத்து குடித்திருந்த ஒமர்தான் அந்த மூன்று நாட்களுக்கும் என் ஆசான். அதைப் போலவே உலகிலேயே மிகச் சிறிய குளம்புள்ள பாலூட்டியான கூரன் பன்றி, குள்ள யானை, வேதிவால் குருவி, இருவாசி பறவைகள், லயாங் லயாங் குருவி, பறக்கும் பாம்பு, பறக்கும் தவளை, பறக்கும் அணில், உராங் ஊத்தான், ஐந்தடி உயரமுள்ள தேன்கூடு, ஓரடி நீளமுள்ள குச்சிப் பூச்சி, பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு, டைனோசர் காலத்து தொன்மையான துபையா, தேன் குடிக்கும் ஒளவால், பெர்பாஞ்சாட் எனும் தொடை பருமனுள்ள காட்டு கொடி, பகட்டு கோழி, தாடி பன்றி, தெம்படாவ், பன்றிவால் குரங்கு, சாம்பல் குரங்கு, கலோய் மீன், சும்பித்தான்……. ஆமாங்க …இந்த பட்டியல் சற்று நீளமானது தான்..

காட்டுன்னா பல்வேறு மரங்களும் உயிரினங்களும் இருப்பது இயல்பு தானேனு நீங்க நினைக்கிறது கேக்குது. ஆனா மற்ற காடுகளில் இருப்பது போன்று அல்ல. நான் வாசித்த பட்டியலில் பெரும்பாலானவை ஓரிடவாழ்வி. இந்த காட்டை தவிர உலகில் வேறு எங்கேயும் இவற்றை காண முடியாது. இந்த காட்டை பற்றிய மேலும் ஒரு சுவையான உண்மையை ஒமர் என்னிடம் கூறினார். நான் உங்களிடம் கூறுகிறேன். குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை நாம் அறிவோம். அந்த குரங்கு இனத்திற்கே முன்னோடியாக உள்ள விலங்குகளை பிரைமேட் என்று கூறுவார்களாம். அது உலகெங்கிலும் பரவி இருந்தாலும் சுமார் பத்து பிரைமேட்கள் ஒன்றாக இந்த காட்டில் உள்ளதாம். ஆம். நம் பத்து முப்பாட்டனையும் நான் பார்த்து விட்டேன். அதில் ஒன்று தான் நாற்பத்தினான்கு விலங்கு. அந்த விலங்கில் ஆந்தையின் கண்கள், வௌவாளின் காதுகள், குரங்கின் வால், தவளையின் கால் என 44 வகையான விலங்குகளின் உறுப்புகள் இருந்தது. நான் மெரண்டுட்டேன். இறுதியாக,கதிரவன் கரையும் நேரத்தில், உலகிலேயே வௌவால்கள் அதிகம் வசிக்கும் கோமதோங் குகையிலிருந்து பல ஆயிரம் வௌவால்கள் வெளியேறிய காட்சியும், கோடான கோடி மலர்கள் ஒரே சமயத்தில் மலர்ந்திருந்த காட்சியும் இந்த பயணத்தில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது…….

உங்களுக்கும் அங்க போகணும்னு தோணுதா? இந்த பெருந்தொற்று காலத்திலும் இது சாத்தியமாகுமானு சந்தேகமா இருக்கா? அதுவும் வெறும் முன்னூறு ரூபாயில்.சாத்தியம்தான் நக்கீரனின் காடோடி நாவலை வாசித்தால். ஆமாங்க. இவ்வளவு நேரமும் நான் படித்த காடோடியில் உள்ள போர்னியா தீவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர நான் சென்று வந்ததை பற்றி அல்ல. கதையை சொல்லும் துவான், என் கையை பிடித்துக் கொண்டு கூட்டிப்போகும் உணர்வை அவர் எழுத்தில் தோய்த்திருந்தார் நக்கீரன்.

இக்கதை போர்னியாவைப் பற்றியது அல்ல. அங்கு வாழும் வாலில்லாக் குரங்குகள் பற்றியும் அல்ல. அங்குள்ள குளங்களிலும் அருவிகளையும் வளர்க்கும் ஓடைகளை பற்றியும் அல்ல. காடுகளை போற்றி பாதுகாத்து வாழும் திடோங், முருட் இனங்களை பற்றியதும் அல்ல. காட்டிலுள்ள மரங்களிடம் உரையாடும் பிலியவ் பற்றியும் அல்ல. மரங்களினுள் வாழும் கொற்றவை பற்றியும் அல்ல. அந்த கொற்றவையை கொல்ல வரும் வெட்டுமர கம்பனியை பற்றியதும் அல்ல. தன்னை வாழ வைக்கும் காட்டின் அழிவிற்காக கவலைப்படும் பகட்டு கோழியை பற்றியதும் அல்ல. மொத்த காடும் அழிந்து போர்க்களத்தின் இறுதி காட்சியை நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், மூதாய் மரத்தின் வெட்டப்பட்ட அடிமரத்தின் அருகில் சென்று, உரிந்த பட்டையை தடவி வலிக்கிறதா? என கேட்ட துவானைப் பற்றியும் அல்ல. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் பற்றியது. குரங்கின் மூளையை உயிருடன் சுவைக்கும் இரக்கமில்லாதவர்கள் பற்றியது. எதற்கு வாங்குகிறோமென தெரியாமலே பொருட்களை வாங்கி குவிக்கும் பேராசைக்காரர்கள் பற்றியது. ஆம் நம்மை பற்றியது. என்னைப் பற்றியது.

சூரியா சுந்தரராஜன்
9943763750

பழங்குடியினப் பாடல்களைப் படித்துப் பாருங்கள் பாடல் – இந்திரன்

பழங்குடியினப் பாடல்களைப் படித்துப் பாருங்கள் பாடல் – இந்திரன்




பழங்குடியின மக்கள் கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் தைரியசாலிகளாக இருக்கிறார்கள். கீழே பதிவாகியுள்ள கவிதைகளில் பெரும்பாலும் ஊடுருவி நிற்பது அவர்களின் முன்னோர்கள் பற்றிய நினைவுகளும் அதற்கான படையல் முயற்சிகளும்…. அவர்களுடையது எதார்த்தமான இலக்கியம். அவர்கள் தான் உண்மையில் மண்ணின் மைந்தர்கள் என்று தங்கள் வாய் மொழி இலக்கியம் மூலம் நிரூபணம் செய்கிறார்கள். கலை விமர்சகர் இந்திரன் அவர்களின் பதிவுக்கு நன்றி.
-நா.வே.அருள்
கவிதை ஆசிரியர்
புக்டே இணையஇதழ்

சிங்கப்பூர்
Kavignar nepolean பதிவு28. வாசிப்பில் ஈர்த்த வரிகள்…
( சிங்கப்பூர் தமிழ் மொழி விழா 2016ற்காக )
——————————————-
கடவுள்
முதலில் வானத்தையும் பூமியையும் படைத்தார்
பிறகு பெண் மயிலைப் படைத்தார்
அது ஒரு முட்டை இட்டது
அந்த முட்டை உடைந்தது
முட்டை ஓட்டிலிருந்து
கெரியா மலைவாழ் ஆதிகெரியாக்கள்
தோன்றினார்கள்
முட்டையின் வெள்ளைக் கருவிலிருந்து
மயூர்பஞ்சின் புராண மலையினமும்
மஞ்சள் கருவிலிருந்து
மயூர்பஞ்ச ஆளும் பஞ்சாகுடும்பமும்
தோன்றின
முட்டைத் தோலிலிருந்து
ஓரெயன் மலையின
முன்னோர்கள் தோன்றினர்
மயூர்பஞ்ச் பிரதேசத்தின்
பஞ்சயூர் பகுதியில்
இது நிகழ்ந்தது
– ஒரிசாவின் கெரியா மலைப்பகுதியின் பாடல்
***************

கட்டளை
பழங்காலத்தில்
பாறைகள் நகர்ந்துகொண்டிருந்தன
அனைத்தும் உயிரோடு இருந்தன
சூரியதேவன் அவற்றிடம்
சொன்னான்
நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்
நான் இப்போது
மனிதர்களை உலகத்துக்கு அனுப்புகிறேன்
அவர்கள் வாழிடங்களை அமைப்பார்கள்
நீங்கள் அவர்களுக்கு நிழல் தருவீர்கள்
இப்போது நிலையாக நின்று விடுங்கள்
நீங்கள் நிலைத்து நிற்காவிடில்
நதி எப்படி கீழே உருண்டு வரும்?
உங்கள் பிளவுகளில்
புற்களும் புதர்களும்
எப்படி வளரமுடியும்
உங்கள் சரிவுகளிலும்
பாதங்களிலும்
காடுகள்
எப்படி செழித்து வளரமுடியும்?
– பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியின் ஆதிவாசிப் பாடல்
***************

பிறப்பு
சிவன் பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா
நீங்கள்
இயேசு பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா?
நீங்கள்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்
நாங்கள்
கடவுள்களுக்கு
முன் பிறந்தவர்கள்
– தெற்கு பீகார் பகுதியின் கோயல் கேரோ அணைக்கட்டுத் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பாடப்பட்ட ஒரு ஆதிவாசி பாடல்
***************

நிலம்
நமது நிலம்
நமது ஆசிரியர்
நமது ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்
நிலத்தை உழுவது எப்படி என்றும்
விதைப்பு செய்யும் முறை என்னவென்றும்
பிரார்த்தனை மூலம் மழையை வரவழைப்பது பற்றியும்
பயிர்களை கவனிக்கும் முறைகளையும்
கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றுவது பற்றியும்
எப்போ எப்படி அறுவடை செய்வது என்பபது பற்றியும்
நமது அரசு அதிகாரிகளுக்குத் தெரியும்
நமது நிலத்தோடு நமக்குள்ள உறவு
ஆனாலும்
அவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை
– சலோமி எக்கா, 46 வயது பெண், பட்குச்சுனு, ஒரிசா
**************

பூக்களின் திருவிழா
ஓ வீட்டின் வாசற்படியே
உனக்குப் பூக்களைப் படையல் போடுகிறோம்
எங்கள்மீது கருணையோடிரு
எங்களின் தானியக் குதிர்களை
தானியங்களால் நிரப்பு
இது பூக்களின் திருவிழா
நாங்கள் பூக்களைப் படையல் போடுகிறோம்
எங்களின் வீட்டு வாசலுக்கு
புதிதாய் பிறக்கப்போகும் வருடத்தில்
கடவுள்கள் வாழ்த்தட்டும்
உங்களது தானியக் குதிர்கள்
நிரம்பி வழிகிற வரை அவை நிரம்பட்டும்
உங்கள் பயிர்கள் வளர்ந்து செழிக்கட்டும்
பருவ காலங்களும் மாதங்களும்
திரும்பி வரட்டும்
பூக்கள் மீண்டும் மீண்டும் மலரட்டும்
நாம் இங்கேயே தொடர்ந்து வாழ்வோமென்றால்
பூக்களின் திருவிழா
மறுபடி வரட்டும்
– கார்வாலி மலையினப் பாடல், ஒரிசா
***************

படையல்
அன்பான முன்னோர்களே
நீங்கள் எங்கே உலவுகிறீர்கள்?
நீண்ட பகலிலா, முடிவற்ற இரவிலா,
பாறையின் மீதான உச்சி வெயிலிலா
காட்டின் மழைக்கால மாதங்களிலா
நீங்கள் எங்கே உலவுகிறீர்கள்
இன்று திரும்பி வந்து
எங்களது குறைவான
படயலை ஏற்றுக்கொள்ளுங்கள்
எங்கள் மகிழ்ச்சியைக் காணுங்கள்
பழமையான நிகழ்வை
மகிழ்ச்சியின் கொண்ட்டாட்டத்தை
தயவு செய்து காணுங்கள்
– ஹேமா மலையினப் பாடல்
***************

கனவுகள்
நாங்கள் கனவு காண்கிறோம்
எங்களின் மூதாதையர்கள் பற்றியும்
ஆவிகள் பற்றியும்
வாழும் முறை பற்றியும்
எதிர்காலம் பற்றியும்
இறந்தகாலம் பற்றியும்
கனவுகள் காண்கிறோம்
எங்களின் ஒவ்வொரு கனவிலும்
எங்கள் நிலத்தைக் கனவு காண்கிறோம்
எங்கள் நிலத்தில் வாழவில்லையெனில்
நாங்கள் மரணத்தைத் தழுவுகிறோம்
எங்கள் நிலத்திலிருந்து கிடைக்காத
ஆரோக்கியம் என்ற ஒன்று
எங்களிடம் இல்லை
எங்களின் மரணத்திற்குப் பிறகு
மூதாதையர்களாக நாங்கள் வாழமாட்டோம்
எங்கள் குழந்தைகள்
எப்படி ஒன்றுகூடி வாழ இயலும்
பயிர் செய்பவன் அழிந்துவிடுவான்
நாங்கள் முடிந்போவதை
அவர்கள்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
அவர்கள் அதற்காக
காத்திருக்கிறார்கள்
– தர்கேரா ஆதிவாசிப் பாடல்
***************

கருப்பு இயேசுநாதர் / லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்

இயேசுவானவர்ஒரு கருப்பனாக திரும்பி வருவாரானால்
அது நல்லதல்ல.
அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத
தேவாலயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
எவ்வளவு புனிதப் படுத்தப்பட்டாலும்
நீக்ரோக்களுக்கு
அங்கு வாயில்கள்’ மறுக்கப்படும்.
அங்கே இனம்தான் பெரியதே தவிர
சமயம் அல்ல.
ஆனால்
இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவே!
நீர்
நிச்சயமாக
மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்கள்.
***************

சிரிக்கக் கற்றுக் கொடு மகனே / கேபிரியல் ஒகாரா / நைஜீரியா
முன்னொரு காலத்தில்
மகனே
அவர்கள் இதயத்தோடு சிரிப்பார்கள்.
கண்களால் சிரிப்பார்கள்.
ஆனால் இப்போது பற்களால் மட்டுமே சிரிக்கிறார்கள்.
அவர்களது பனிக்கட்டி மூடிய சில்லிட்ட கண்கள்
என் நிழல்களுக்கு பின்னாலும் துழாவுகின்றன.
அவர்கள் தங்கள் இதயங்களோடு
கை குலுக்கிய காலங்கள் இருக்கத்தான் செய்தன.
என் மகனே குழந்தாய்
இப்போது அவர்களின் வலது கை
இதயமில்லாமல் குலுக்குகிறபோது
இடது கை
எனது காலி சட்டைப் பாக்கெட்டுகளைத் துழாவுகின்றன.
“உங்கள் வீடாக நினைத்துக் கொள்ளுங்கள்”
“மீண்டும் வருக” என்று சொல்கிறார்கள்.
ஆனால் நான் மீண்டும் வந்து
தன் வீடாக நினைக்கிறபோது
ஒரு முறை இரு முறை
மூன்றாவது முறை இருக்கப் போவது இல்லை.
ஏனெனில் கதவுகள் எனக்காக மூடிக் கொள்கின்றன.
நான் பலவற்றை கற்றுக் கொண்டேன்
மகனே நான் முகங்களை
அணியக் கற்றுக் கொண்டேன்.
அடிக்கடி மாற்றும் உடைகளைப் போல
வீட்டு முகம், அலுவலக முகம்
நடுத்தெரு முகம், விருந்து முகம்
மது அருந்தும் முகம் என்று
படங்களில் நிலையாக இருக்கும் சிரிப்புகளைப் போல
உறுதி அளிக்கும் சிரிப்புகள்.
என்னை நம்பு மகனே
நான் உன்னைப் போல இருந்த போது
எப்படி இருந்தேனோ
அப்படியே இருக்க விரும்புகிறேன்.
இந்த ஊமைச் செய்திகள் அனைத்தையும்
மறக்க விரும்புகிறேன்.
சிரிப்பது எப்படி என்று
மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்- 1982
***************

காற்றில் ஒரு முத்தம் / கிரிஸ்டோபர் ஒகிக்போ

நம் இருவருக்கிடையில் நிலா எழுந்தது.
ஒன்றை ஒன்று வணங்கிக் கொள்ளும்
இரண்டு பைன் மரங்களுக்கிடையில்
நிலாவுடன் சேர்ந்து காதலும் மேலெழுந்தது.
நமது தனிமையின் அடித்தண்டை
மேயத் தொடங்கி விட்டது.
நாம் இப்போது
ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளும் இரண்டு
நிழல்கள்.
ஆனால்
காற்றை மட்டுமே
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் 1982

– கவிஞர் இந்திரன் ✍ எழுத்தாளர், கலை இலக்கியப் பண்பாட்டுத் திறனாய்வாளர் & மொழிபெயர்ப்பாளர். ஆதிவாசி கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘ ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ என்று முதன்முதலில் நூலாகக் கொண்டுவந்தவர் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன். நன்றி : ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’, ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூல்கள், அந்திமழை இணையத்தளம் & இந்திரனின் முகநூல் பக்கம்.

Raju Arokiyasamy Kavithaigal ராஜு ஆரோக்கியசாமி கவிதைகள்

ராஜு ஆரோக்கியசாமி கவிதைகள்

சலனமற்ற நதியாய்
ஓடப் பார்க்கிறேன்
நான் வேண்டி விரும்பாமலே
சேரும் சுயநல சாக்கடைகள்

எல்லாவற்றையும் மீறிய
ஆத்ம திருப்தி
அந்தப் புள்ளியில்
செல்லாமல் போகும் பணம்

பொய்மையில் சிக்கியழியும்
நீர்க்குமிழியல்ல நான்
உண்மையோடு உருண்டாலும்
மணலாகி மகிழும் பாறை

கீறி ஆற்றுகிறேன்
ஆறாப் புண்
நீ கிழித்த
என்மனக் கடிதங்கள்

உன் ஞாபகங்களைத்
துடைத்து எறிகிறேன்
அழுக்கு நீரில்
ஆயிரம் செந்தாமரைகள்

Vatriya Nathiyin Karayil Sila Pookkal Kavithai by Vasanthadheepan வற்றிய நதியின் கரையில் சில பூக்கள் கவிதை - வசந்ததீபன்

வற்றிய நதியின் கரையில் சில பூக்கள் கவிதை – வசந்ததீபன்

வற்றிய நதியின் கரையில் சில பூக்கள்
*********************************************
நைந்து போன கடிதத்தை
வாசிக்க..வாசிக்க
தோற்ற காதல்
வாசனை தேடிப் போன
மனதில் எச்சில்சொட்ட
பசித்த ஓநாய்
சிறகு உலர்த்துகிற
பறவையிடமிருந்து
தூறல் மழை
சிற்பியின் மனதில்
உதித்த உருவல்ல
பாறையுள்ளிருந்து சிலை
புகழ்வான்
பாராட்டுவான்
புதைகுழி பற்றி கவனம் கொள்ளுங்கள்
அடித்தால் அடியுங்கள்
உதைத்தால் உதையுங்கள்
அன்பாயிருப்பது ஏமாறுவதல்ல.
ராமன் ஆண்டாலென்ன?
ராவணன் ஆண்டாலென்ன?
அன்னாடங் காச்சிகள்
ஈயாதான் பறக்கணும்.
மனசுக்குள் புழுங்காதீர்கள்
நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திடுங்கள்
பலூன் ஊத ஊத வெடிக்கும்
மனசுக்குள் புழுங்காதீர்கள்
நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திடுங்கள்
பலூன் ஊத ஊத வெடிக்கும்
உண்மையைக் காப்பாற்ற பொய் சொல்லலாம்
பொய்யைக் காப்பாற்ற
உண்மை சொல்லாதே
காக்க காக்க நீதி காக்க
நவதானியங்கள் தின்றவர்கள்
சுகமாய் வாழ்ந்தார்கள்
கோதுமை தின்பவர்கள்
நோயோடு அல்லாடுகிறார்கள்
நளபாகம் நாலாவிதமாகிப் போச்சு
கோடாரியை கீழே போடு
காடுகள் கோபத்தில் இருக்கின்றன
சிதைக்குள் சிக்கிக் கொள்ளபோகிறாய்
வயிற்றில் கக்கூஸோடு அலைகிறீர்கள்
மூளையை கக்கூஸாக்கி வெறிக்கூத்தாடுகிறீர்கள்
கக்கூஸ் என்றதும் ஏன் பதறுகிறீர்கள்?
வலியிருந்து வெளியேறுகிறேன்
வேதனையை கழற்றி எறிகிறேன்
ஆசுவாசமாக இருக்கிறது.
ஒடுக்கப்படுபவர்களுக்காக குரலெழுப்புவேன்
அடக்கப்படுபவர்களுக்காக
கரம் நீட்டுவேன்
நான் உயிருள்ள மனிதன்
ஒடுக்குகிறார்கள்
உயிராய் நேசிக்கிறீர்கள்
போதும் பெண்ணினமே
பூவுக்குள் தேன்
முள்ளுக்குள் பூ
தேன் மட்டும் குடிக்கின்றன வண்டுகள்.

Aaratha Aru Kuzhanthaigal Childrens ShortStory By Era. Kalaiyarasi ஆறாத ஆறு குழந்தைகள் கதை - இரா. கலையரசி

ஆறாத ஆறு குழந்தைகள் கதை – இரா. கலையரசி




“கசகச னு ஒரே வியர்வையாக இருக்கு. வெயில்காலம் ஆரம்பிச்சிருச்சுல அதான்”.பேசியபடி தண்ணீரில் மூக்கை அலசிப் பார்த்தது மித்து.

நெடி தாங்க. முடியாமல் அப்படியே பின்னுக்கு ஓடியது.’இது என்ன?இப்டி ஒரு வாடை,.ஆத்து தண்ணீர் கெட்டு போயிருச்சோ?’

“படிச்ச மனுசன் பாடு தான் பாட்டா பாடுது ஊருதான்”.

தத்துவ தாத்தா ஆந்தை பாடியவாறே அங்க வந்தார். “என்ன எல்லாரும் ஆத்தோரமா நின்னுட்டீங்க?”னு கேட்க “வாங்க வாங்க, தண்ணீர் குடிக்க அலக விட்டேன்.உயிரே போயிருச்சு” என்று மித்து அழுகாத குறையா பேசுச்சு.

“எல்லாம் கழிவுதான்..அங்க இருக்கிற சாயப்பட்டறையில இருந்து வருது…ஆறே செத்த மாதிரி ஆகிருச்சு”.

“வட்ட வட்டமா நுரை நுரையா வருதே? நம்ம இப்டி தான் சாவோம் போல” சொல்லிட்டுப் பறந்தது மித்தி.

“ஓடுற தண்ணியில ஒரு குடம் விசம் குடிக்க நெனச்சா ஆகிடும் நாசம்”.

பஞ்ச் பேசிப் பறந்துட்டாரு ஆந்தையாரு.

என்ன குழந்தைகளா? ஆறு குளங்கள் மாசடையறத பத்தி என்ன நினைக்கறீங்க?