Posted inUncategorized
களவு போன புத்தகம் கவிதை – அபர்ணா
களவு போன என் புத்தகத்தைத்
தேட எனக்கு மனமில்லை;
அது பழைய புத்தகக்கடைக்கு
விலை போன
விஷயம் தெரியாத வரை எனக்குக் கவலையும் இல்லை.
அங்காவது யாராவது படிக்க மாட்டார்களா என்ற என் ஆசைக்கும் குறைவில்லை.
கழுதையாகப் பிறந்தாலும் புத்தக மூட்டையைத் தவிர எதையும் தூக்க எனக்கு விருப்பமில்லை.
கரையானாகிப் போனாலும்,
வெற்றுத் தாளில்
எனக்கு வேலை இல்லை.
