சக்தி ராணியின் கவிதைகள்

சக்தி ராணியின் கவிதைகள்




‘நானெனும் பொய்’ 
***********************
பிரபஞ்சம் முழுதும்…
எனக்கானதென்றே உணர்ந்தேன்…
என் செயல் அனைத்தும்
வண்ணமடித்தே…பிறர் கண்ணில்
பதிய வைத்தேன்…

எனக்கான வலி பொறுக்காது…
கதறிய அழுகையில்…அன்பைத் தேடி சுழன்றேனே…
சுழன்ற சுழற்சியில்…
பேரன்பின் வடிவங்கள்…
பின்னலாய் என் வாழ்வை
பிணைந்திருக்க செய்தேன்…

பொருள் தேடி அலைகின்றேன்…
புகழ் தேடி அலைகின்றேன்…
புதிதாய் வாங்கிய…
புத்தகப்பையில்…புது சொந்தம்
படரப் பார்க்கிறேன்…

காலத்தின் அருமையாய்…அற்புத செயல்கள் பல செய்த பின்னும்
சில அற்பமான செய்கையில்
என் குற்றம் உணர்கின்றேன்…

வருங்காலம் பெரிதாய் எண்ணி
நிகழ்காலம் மறக்கச் செய்கின்றேன்…
நின்ற பொழுதின் நிழலாய்…
நிஜங்களின் துறவை அறிகின்றேன்…

பிறர் செய்யும் குற்றங்கள்…
என் புன்னகையிலேயே கடக்கிறேன்…

புதிய குற்றச்சாட்டை…
தூக்கிச் சுமக்கும் கூன் முதுகை நானும் இங்கே தவிர்க்கின்றேன்…

தோழனாய் தோள் கொடுக்கும்
உறவின் உண்மை அறிய மறைமுக சோதனை நடத்துகிறேன்…

காலக்கடிகாரம் கையில்
கிடைத்த போதும்…
எக்காலம் பெரிதென குழம்புகிறேன்…

என் குழப்பத்தீர்வை…குயவனின்
மண்பானையாக ஆக்குகிறேன்…
அப்பானையில் குளிர்ந்த நீர் ஊற்றிப்பருக ஆசை நானும் கொள்கிறேன்…

குளிர்ந்த நீரும் சுடுநீர் ஆகி சுடுகிறதே…
அச்சூட்டில் என் சுயநலம்…
எண்ணெய் போல் மிதக்கச் செய்கிறதே…
மிதந்த கனவில்…என்னைத் தேடி
அலைகின்றேன்…

நான் சேர்த்த சொத்தும்…பணமும்
யாரோ அனுபவிக்கப் பார்க்கின்றேன்…
கந்தலாடையில் ஒதுக்கப்பட்ட
வாழ்க்கை போல உணர்கின்றேன்…

என்ன வாழ்க்கை இதுவென்றே…
ஓடி ஓடி…உழைத்தேனோ…
என் ஓய்வின் தனிமை…
என்னைத் தின்ன…நானே
விருந்தைப் படைப்பித்தேன்…

இல்லா…கடவுளை இருப்பதாய்
எண்ணி…இறைவா உன்னை
சரணடைந்தேன்…
என் வேண்டுதல் உணர்ந்த
கடவுளும் இங்கே…காலதூதனை
அனுப்பிவிட்டான்…

உயிராய்…உறவாய் இருந்தவர்
எல்லாம் ஓரமாய் நின்று
பார்த்திடவே…என் உயிரை
அழைத்திட்ட சங்கு சத்தமும்
என் உயிரை கொஞ்சம் எழுப்பிடுதே…

காலன் வென்ற செய்தியை…
வேதனையாய் எண்ணிய மனம்
காலன் கைப்பிடித்துக் கிளம்பியதே…
அப்போது உணர்ந்த நொடி…
எல்லாமும் இங்கே…பொய் தானோ…!!!
நானும் இங்கே பொய்தானோ…!!!
என் மெய்யும் இங்கே பொய்தானோ…!!!

‘மனிதம்’
**********
எனக்கான உறவொன்றும்
என் நலன் விரும்பவில்லை…
நரைத்த முடியில்…நரைக்காத தெம்பில் நானும் இங்க வாழுறேன்…

ஆசையா பேச…மனசெல்லாம்
வார்த்தைகள் அடங்கிக் கிடந்தாலும்…
என் மனம் கேட்க ஒருத்தருக்கும்…
மனசில்லை…

போற வழியெல்லாம்…போக்கிடமில்லாம
சுத்துறேன்…போற போக்கில்
என் கதையெல்லாம் உங்கிட்ட நானும்
பொலம்புறேன்…

மடி மீது தூக்கியணைக்க…
உறவு இங்க இல்ல…உறவில்லா
உறவா…உன் அன்பை நானும் நாடுறேன்…

என் மொழி புரிய…உனக்கிங்கே…
உணர்விருப்பதாலே…உன் விரல் இங்கே
என் கண்ணம் உரசி கிடக்குதே…

உணர்வால உறவான நாம…இனி
உயிராய் ஓர் உறவாய் கொஞ்சம்
அன்பை சொல்லி வாழ்ந்து தான் பார்ப்போமே…

மனுசனுக்கும்…விலங்குக்கும்
அன்பு ஒன்று தானு உணர்த்துவோமே…

ஆறுதலாய்
***************
ஏமாற்றத்தின் உச்சம்…
யாரையும் பார்க்க விருப்பமில்லை…
எனக்குள் நானே…தொலைகிறேன்…
என் முகம் புதைத்தே…என்னுள்
என்னைக் காண்கிறேன்…

எத்தனை… எத்தனை…
முகங்கள் பார்த்த பின்னும்…
ஏமாற்றத்தின் வலிக்கு மட்டும்
இங்கே குறைச்சலில்லை…
வலியல்ல இது வடு…என்றே

வந்தமர்ந்து அறிவுரை கூறுபவர்களுக்கு
ஒன்றும் புரிவதில்லை…இது
புதிதும் அல்ல அவர்களுக்கு…

யாரோ ஒருவரின் சாயலில்
என் வலிக்கு ஆறுதல் தேட
விரும்பவில்லை…என்னுள் தேடுகிறேன்
எனக்கான ஆறுதலை…

‘வலிமை’
***********
வீடு தாண்டி வெளியே
வரும் ஓர் இடம்…
என் வலிமையெலாம்
சோதிக்க…பிடித்த இடம்…

நான் வரும் போதே…அவளும்
வெத்துக்குடத்தை…வேகமா
தூக்கிட்டு ஓடி வந்துடுவா…

மனசெல்லாம்…வார்த்தையாக்கும்
இந்த இடம்…மனம் விட்டு பேசிய
பின்னும்…நாளைக்கு சந்திக்கும்
நேரத்தை வந்தவுடன் சொல்லிடுவா…

தண்ணீரால நிரப்பிய குடமும்…
கண்ணீரால் நிரம்பிய விழிகளும்…
பேசிய மொழியை நாள் பூரா சிந்தித்தாலும்…மௌன மொழியில்
வீட்டுக்குள்ள சுமக்கும் நேரம்…

விடிவு காலம் வராதோனு…
ஏக்கப்பார்வையில் பார்க்கும் போதே…

மறுநாளும் விடிஞ்சிருச்சி…தண்ணீர்
பிடிக்க போகலையானு…குரலொன்று
செவி கேட்க…இதோ கிளம்பிட்டேனு
போய் வாரேன்…என் வலிமையை
கொஞ்சம் சோதிச்சுப்பார்க்க…

‘அப்பா…’
************
உறவுகள் ஆயிரம்… இருந்தாலும்
அப்பப்பா…அப்பா உன் முகம் பார்க்க
என் விழி இரண்டும் காத்துக்கிடக்குமே…

ராத்திரி வேலை முடிஞ்சு லேட்டா நீ வந்தாலும்
தூங்கிய என் விழிகள் இரசிக்கும் உன் முகம்
காரணமின்றி… என் இரசனை விரும்பிக்கிடக்குமே…

எனக்கான தேவைகள் நிறைவேற்றியே…
நின் வாழ்க்கை சக்கரம் சுழலுதே…
அதில் நம் காலமும் விரும்பி நகருதே…

பசிக்கு…ருசியும்…
ருசிக்கு…பசியும்…நீ உண்டு பார்த்ததில்லை…
அப்பப்போ நீ நிற்கும் டீக்கடை வாசலில்
நின் சொர்க்கம் டீயில் முடியுதானு நினைச்சேன்…

நான் உயர ஏணியா இருந்து ஏத்தி விட்டு இரசிச்ச…
பல சறுக்கல்களையும்…சருகா மிதிச்சு
கடந்து போக பாதையா வழிகாட்டி என்னோடு நடந்த…

நான் நடக்கும் பாதையில பட்டுக்கம்பளம் விரிச்ச…
ஆனா உன் பாதத்திற்கு செருப்பு கூட
இல்லாமலே நடந்த…

மனம் விட்டு நீங்கள் பேசி நான் பார்த்ததில்லை…
ஆனா உன் மனசுக்குள்ள உள்ள வார்த்தை
மௌன மொழியின் செயலாவே
நான் பார்த்து வளர்ந்தேன்…

சாப்பிட்டியானு தொடங்கும் உரையாடலுக்காக…
கைபேசியும் காத்து தினமும் கெடக்கும்…
இந்த காத்திருப்பின் இரகசியத்தை…ஒருநாளும் நாம
தவறவிட்டதில்லை…

உன் அன்பை சொல்ல வார்த்தை இங்க இல்ல…
எப்போதும் நீ மட்டுமே…போதும் என்பதில்
என் அன்பை சொல்லி வைப்பேன்…
நின் உறவோடு என் வாழ்வை புதைத்து
நானும் வாழ்வேன்…

– சக்தி ராணி

ஆசை கவிதை – சக்தி ராணி

ஆசை கவிதை – சக்தி ராணி




விட்டில் பூச்சியாய்…
இருந்தே விண்ணுலகம்
பறக்க ஆசை…

புத்தகப் பக்கங்களில்…
மறைக்கப்பட்ட மயிலிறகில்
உருவான புதிய  உயிரை
உலகம் காண ஆசை…

எதிரிகளும்…புன்னகைத்தே…
நட்பு பாராட்டும் நல்லுறவில்…
தன்னிலை மறக்க ஆசை…

சிலைகளுக்குள் உயிராய்
வாழும்…கடவுளும்… உணர்வாய்
என்னுடன் ஒருநாள் வாழ ஆசை…

பூட்டிய அறைக்குள்…கொஞ்சமாய்
இருக்கும் ஒளியில்… மணம் வீசும்
மலரின்…அழகை இரசித்திட ஆசை…

காற்றில் பறந்திடும்…காகிதமாய்…
நல்காதலர்களுக்கு மத்தியில் தூதாய்…
கவி பரிமாறிட ஆசை…

பாதி கடந்த கடல் நடுவே…
கடலலையின் அசைவும்…
ஆழமும்…கூறும் மொழி அறிய ஆசை…

மின்மினிப் பூச்சிகளின்…வெளிச்சத்தில்
இரவின் இருளில்…நடைபாதையில்
தனியாய் நடந்திட ஆசை…

ஆயிரமாயிரம் ஆசைகளில்…
ஆசைகளைத் துறந்த…புத்தரின்
சிலையை வணங்கிட ஆசை…

இந்நிமிடம் தோன்றிய ஆசைகள்
யாவும் எழுத்தாக்கி…எழுதி விட்டேன்…
இன்னும் எண்ண முடியாமல்
இதயத்தில் மறைந்திருக்கும்
என்னென்னவோ
எழுதா ஆசைகள்…

– சக்தி ராணி

நூல் அறிமுகம் : பா.சரவணகாந்தின் ’குரங்கு பெடல்’ – சக்தி ராணி

நூல் அறிமுகம் : பா.சரவணகாந்தின் ’குரங்கு பெடல்’ – சக்தி ராணி




வாசகனின் படிக்கும் ஆர்வம் கொஞ்சமும் தளர்வடையாமல் கைகோர்த்து இறுதிப்பக்கம் வரை கூட்டிச்செல்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. இம் முக்கியத்தில் கைதேர்ந்த நம் ஆசிரியர் சிறப்பாகவே கதை நகர்வை அமைத்துள்ளமை சிறப்பு…

கதாபாத்திரங்களை மட்டுமே கதைக்குள் பேசவிட்டு…ஆசிரியர் ஓர் ஓரமாய் வாசகனோடு வாசகனாய் பயணிக்கிறார் கதையிலும்…பல்வேறு களங்கள்…பல்வேறு விதமாய் ஏதோ ஒன்றை வாசகனுக்கு உணர்த்தி செல்வதில் எந்த ஒரு கதையிலும் தொய்வில்லை…என்றே கூறலாம்…

கலையுணர்வில் ஏற்ற இறக்கம் விரும்பாத நிலையில் பறை இசைக்கோர் தாழ்வில்லை இனி பறையிசை மேலோங்க பார்க்கப்படும் என்பதை இனிப் பறை எனும் கதையில் அழகாய் பறைசாற்றியுள்ளார்.

உயிரில்லா பொம்மையும் உயிர் பெற்றே கதாபாத்திர அந்தஸ்து பெறுவதில் எதிர்காலமும் அதன் கைகளில் கொடுக்கப்பட்டு பொம்மை காப்பாற்றும் என்றே கதைநகர்த்துகிறார். மதவேறுபாட்டில் உள்ள சமூகப்பிரச்சனைகளை மன்னிப்பு எனும் கதையில் அனைத்து மதமும் சமம் என்றே ஒற்றுமையை உணர்த்துகிறது…
ஐந்தறிவு ஜீவனுக்கும் உள்ள அன்பை மதம் கொண்ட யானையால் எதார்த்தமாக விளக்கினாலும் இறுதி முடிவில் பாகனும்…யானையும் இறந்த பின்னும் அன்பின் மனதால் இணைந்ததில் புதிய உத்தியே…

முடிவில் ஒரு துவக்கமாய் இப்படியும் சில மனிதர்கள் அன்பிற்காக…மனித மனோதத்துவத்தைப் பின்பற்றி வாழ்வதை அழகான உரையாடலில் மனதில் துவக்கத்தில் அமைந்துள்ளது. பிச்சைக்காரர்களுக்குள்ளும் தெளிவான மனம் உண்டு புத்தேள் மனிதர்களில் அவர்களும் ஒன்றே என்பதை புதிய சிந்தனையின் துவக்கமாகக் கடத்தி விடுகிறது…

இடுகாட்டிற்கு வரும் உடல் தானாக வர வேண்டும்…நாம் தூக்கிக் கொண்டு வரக்கூடாது என்ற ஒற்றை வரியில் தற்கொலை என்பதே தவறான எண்ணம் என்பதைச் சுடலை கதாபாத்திரம் சிறப்பான மொழிநடையில் விளக்கியுள்ளமை அனைவருக்கும் எட்டட்டும்…

அனைவரும் ஆடம்பர வாழ்வை விரும்புவது போல் ஆடம்பரமாய் சொல்லிக்கொள்ளும் ஒரு வார்த்தை டிப்ரஷன்…தலைப்பைப் பார்த்ததும் படிக்கத்தூண்டுவதாய் இருந்தாலும் கதை முடிவில் டிப்ரசன் தடுக்கும் முறையும் ஆசிரியர் சொல்லத் தவறவில்லை…

இழப்புகளால் பயந்து வாழும் பெரியவரின் உள்ளத்திற்குள் உள்ள மன ஓட்டங்களை டுபு டுபு என்ற புல்லட் மூலம் பெரியவரின் கதையைப் பயணிக்க வைக்கிறது…
வீட்டில் உள்ள பெரியவர்களை இழிவாகக் கிழவி என்று கூறினாலும் அதையும் அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும் விருப்பங்கள் உறவை விரும்பும் என்பதையும் மனதோடு உறவாட வைத்துள்ளார்…

பெண்குழந்தைகள் தானே என எண்ணி ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த தகப்பன் செய்யும் ஒவ்வாத செயலுக்கு விடையாய் அனைவரையும் சாகடித்து விடை கூறும் மங்கையாய் இருக்கும் மனைவி கதாபாத்திரம் கதை முடிந்த பின்னும் நம்மோடு பயணிக்கிறது…பதுமைகளாக…

விவசாய வாழ்வே சொர்க்கம்…சொந்த நிலத்தை விற்ற பின்னும்…அந்நிலத்தில் விவசாயம் செய்யத் துடிக்கும் பெரியவர்களின் வாழ்க்கையைக் குரங்கு பெடல் போட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றுள்ளமை சிறப்பு…

காலம் கடந்த வாழ்வில் எங்கெங்கு பயணித்த போதும் நியாயமான அன்பில் மீண்டும் வாழ்க்கை பயணப்படும் நியாயமாக…காதல் முடிந்த பின்னும் இனியும் காதலில் காதல் வாழ்ந்து கொண்டிருப்பதை வார்த்தைகளில் கடக்கிறார்… மனித நேயம் வாழ்ந்து கொண்டிருப்பதை ஓர் அழைப்பும்…ஆறாத காயங்களும் நேயமுடன் கதையோட்டத்தில் இடம்பெற்றுள்ளன…

பெண்கள் எதிர்பார்க்கும் வாழ்வை ஆண்கள் நிறைவேற்றி இனிமே இப்படித்தான் என்ற தலைப்பில் அழகாய் எதிர்காலம் நினைக்க வைக்கிறது… அன்பு நிறைந்தது உலகம்…அன்பால் உலகம் ஆளலாம் எனும் கருத்தை வலியுறுத்தியே ஆபியின் டைரியும்…அன்புக்கடனும் நம்மில் அன்பை சூளவைக்கிறது…

ஆண் என்ற அகம்பாவம்…பெண் நிலையைத் தாழ்வாக எண்ணியவர்களுக்கு ராக்காயி கதாபாத்திரம் மூலம் விடை தருவதில் பெண் தாழ்வும் இறந்து பட்டுக் கிடக்கிறது… வினைப்பயனில் வாழ்க்கை நகர்வு என்பதில் வேண்டுதல் ஒரு புறம்…வேண்டாம் எனத் தவிர்க்கும் நிலையும் வினையாலே தீர்மானிக்கப்பட்டுள்ளது…

குழந்தை வளர்ப்பில் ஹைஜுனிக் கற்றுத்தரும் நாம் அனுபவத்தில் உணவு எது சுத்தம் எதுனு கற்றுத்தர மறந்ததை நினைவூட்டி நகர்கிறார் ஆசிரியர்… இப்படிப் பல கதைகள்….பல தளங்களில் மாற்றங்கள் தேடிப் பல விதைகளை விதைத்துச் சென்றுள்ளார்… இவ்விதையின் முளைப்பு புத்தகம் படித்து முடித்த பின்னும் நம் மனதில் எண்ணங்களுக்கும்…கற்பனைகளுக்கும் விருந்தாகத் திருப்தி அளித்ததை உணர முடிகிறது…

புத்தகம் பெயர்: குரங்கு பெடல்
ஆசிரியர்: திரு.பா.சரவணகாந்த்
பக்கங்கள்:185

சக்தி ராணியின் கவிதைகள்

சக்தி ராணியின் கவிதைகள்




என்னென்ன நினைச்சிருந்தோம்…
ஏழ்மை விரட்ட…
வரம் வேண்டி காத்திருந்தோம்…

ஊர் காக்கும்…தெய்வத்தை…
ஊரைச் சுத்திக்காட்ட…
தேர் ஏற்றி வலம் வந்தோம்…

நொடிப்பொழுதில்…
என்ன நடந்ததென…தெரியலையே…
ஏதும் விளக்கம் கூற…மொழியில்லையே…

காலாற…நடந்தவக எல்லாம்…
கட்டையா…ஆனக…கைப்பிடிச்சு
நடந்த வடத்தாலே…

ஒய்யாரமா ஏறி‌ வந்த…
சாமிக்கும் புரியலையோ…
இந்த ஊர்வலம் இறுதி ஊர்வலமா
அமையுமோ என…

என்ன சொல்லி தேத்த…
உறவை இழந்து தவிப்பவருக்கு…
சாமி தூக்க வந்தவங்க…

சாமியா…போனாங்கனு…

இன்னும் மாறவில்லை
****************************
கைப்பிடித்து நடந்த
குழந்தை…கை விட்டே…
பள்ளி செல்லும் போது
அழுகையைத் தன் துணைக்கு
அழைக்கிறது…இன்னும்
இதெல்லாம்…
மாறவில்லை…

மாலை அழைக்கும்…பெற்றோரின்
கரம் புகவே ஓடிச்சென்று…
உள்ளங்கையில்…தம்…அன்பை
புகுத்தும்…நிலை இன்னும் மாறவில்லை…

நடந்த கதையும்…
நடக்க இருக்கும் கதையும்…
மூச்சு விடாமல் சொல்லி முடித்தே…
பொழுதை நகர்த்தும்…குழந்தைகளின் மனம்
இன்னும் மாறவில்லை…

வீடு நிறைய தின்பண்டங்கள்
இடம் பிடித்திருந்தாலும்…
பாதையோரக் கடைகளில்…
தனக்குப் பிடித்த உணவைக்கேட்டு…
வாங்கி உண்ணும் குழந்தைகளின்
ருசி…இன்னும் மாறவில்லை…

வீட்டுப்பாடம் என்றதும்…
இல்லாத பசியும்…வராத தூக்கமும்…
தவறாமல் இடம் பிடித்தே…
காலம் நகர்த்த முயற்சிக்கும் பண்பும்…
இன்னும் மாறவில்லை…

குழந்தைகள்…குழந்தைகளாகத் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
மாறாமல்…

நாம் தான்…நம் எண்ணங்களை
குழந்தைக்கு ஊட்டி…மாறாமல்…
இருக்கின்றோம்… குழந்தைகள்
மாறவில்லையே…என்ற ஏக்கத்தில்…

– சக்தி

வலி…ஒரு…வழி சிறுகதை – சக்தி ராணி 

வலி…ஒரு…வழி சிறுகதை – சக்தி ராணி 




“என்னங்க…கொஞ்சம் சீக்கிரம் வீட்டிற்கு வர முடியுமா…இப்போ…”

“என்னம்மா…ஆபீஸ் இப்போ தான் வந்தேன்…வேலை இருக்கு…போன்ல சொல்லு…”

“போன் ல சொல்ல முடியுற விஷயமா இருந்தா சொல்லியிருப்பேனே…எதுக்கு வீட்டுக்கு வாங்கனு கூப்பிடுறேன்…வர முடியுமா…முடியாதா…”

“வாரேன் மா..வாரேன்”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

தவமாத் …தவமிருந்து…ஏறாத கோவில் ஏறி போதாத ஹாஸ்பிட்டல் போயி…பார்த்து பார்த்து பெத்த புள்ள…கண்கலங்கி நிக்குதே…இத எங்க போயி சொல்லுவேன்…”வா…செல்லம்…அப்பா இப்போ வந்துருவாரு…” என அணைத்துக் கொள்கிறாள்…

“என்னம்மா…என்ன ஆச்சு…வீட்டு சத்தம் ரோட்ல கேட்குது…” என வீட்டிற்குள் நுழைகிறான்ராம்.

“என்னங்க…நம்ம பிள்ளைய பாருங்க…இது கண்ணுல கண்ணீர் வரக்கூடாதுனு நாம் எம்புட்டு பார்த்து பார்த்து வைச்சிருந்தோம்…இப்போ பாருங்க…முகம் வீங்குற அளவு அழுது எப்படி இருக்கு பாருங்களேன்…”

“என்னடா…கண்ணம்மா…என்ன ஆச்சு…என் செல்லம்…அப்பா இருக்கும் போது நீ அழலாமா…”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பா…”

“நிலா…அப்பாக்கு தெரியாத உன் முகம் எப்படி இருக்கும்னு..சொல்லுஎன்னவிஷயம்…பள்ளிக்கூடத்துல எதும் பிரச்சனையா… நண்பர்கள் எதும் கேலி செஞ்சாங்களா…வீட்டுப்பாடம் எழுதாம போனீயா…”

“என்னடீ…அப்பா இவ்வளோ கேள்வி கேட்குறாறு…வாயைத் தொறந்து சொல்லேன்…”

“மேரி டீச்சர் என்ன அடிச்சாங்க ப்பா…”

“என்னது டீச்சர் அடிச்சாங்களா…”

“இந்த ஊர்லயே பெரிய பண்ணை வூட்டுக்காரங்க நாம தான்…நம்ம வூட்டுப்புள்ளைய எப்படி அவுங்க அடிப்பாங்க…இரு…தலைமைக்கு போன் போடுவோம்…எடுடி அந்த போன…என்ன நினைச்சிட்டு இருக்காங்க…எம் புள்ள… என் தங்கத்தை …”

டிரிங்…டிரிங்…

“ஹலோ…யார் பேசுறீங்க…”

“நான் தான் பெரிய வீட்டு பண்ணையார் மகன் பேசுறேன்…”

“சொல்லுங்க சார்…என்ன விஷயமா கால் பண்ணீங்க?”

“என்ன விஷயமா…எல்லாம் தெரிஞ்சு பேசுறீங்களா…இல்ல தெரியாதது போல பேச நினைக்கிறீங்களா?”

“இல்லங்க…சார்.நீங்க என்ன சொல்ல வாறீங்கனு எனக்கு புரியலை…”

“ஓ புரியலையா…உங்க பள்ளிக்கூடத்துல மேரி டீச்சர் வேலை பார்க்குறாங்களா…”

“ஆமா சார்…இருக்காங்க?”

“அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க…லைன்லேயேவெயிட்பண்றேன்..”

“ஹலோ…சொல்லுங்க சார்…”

“மேரி டீச்சரா?”

“ஆமா சொல்லுங்க…”

“இன்னிக்கு என் பொண்ண அடிச்சீங்களாமே ..உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி அடிச்சிருப்பீங்க…உங்கள் வேலையை விட்டுத் தூக்கல…என் பேரு ராஜா சங்கர் இல்ல…”

“சார் கொஞ்சம் பொறுமையா பேசுங்க.என்ன நடந்ததுனு தெரியாம நீங்க பேசுறீங்க…”

“என்ன வேணா நடக்கட்டும் மேடம்.நீங்க எப்படி கை வைக்கலாம்…பிரச்சனை இருந்தா முதல்ல தலைமையாசிரியரிடம் சொல்லிருக்கலாம்.இல்ல எங்ககிட்ட சொல்லிருக்கலாம்.இதெல்லாம் பண்ணாம நீங்க என் மவ மேல கை வச்சிருக்கீங்க…உங்களுக்கு எவ்வளவு தைரியம்.?”

“ஐயோ…சார் என்னையும் கொஞ்சம் பேச விடுங்க…நீங்களே பேசி எல்லாம் முடிவு பண்ணாதீங்க”

“நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்..நான் முடிவு பண்ணிட்டேன்.நீங்க இனி வேலை எப்படி பார்க்குறீங்க பார்ப்போம்.”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

“என்ன மேரி இது புது பிரச்சனையா இருக்கு….இதெல்லாம் உங்களுக்கு தேவையா?”

“இல்லங்க மேடம்.நிலா பண்ணது பெரிய தப்பு…நிலா…செல்வி…பிரியா எல்லாரும் சேர்ந்து கைப் பேசியில் குழு ஆரம்பிச்சு பல வீடியோ அனுப்புறாங்க. அதுல தவறானதும் இருக்கு.விஜிசொல்லிதான்எனக்குஇதுதெரியும். நானும்நல்லவிதமாகபேசிஅறிவுரை சொல்லிஅனுப்பிடலாம்னுதான்வரசொன்னேன். ஆனா,  நிலா ரொம்ப திமிரா பேசுனா.  அதான் கோபம் வந்து அடிச்சுட்டேன் மேடம்…

“என்னமோ போங்க…பெரிய இடம். அவங்களே இதெல்லாம் பாத்துக்க மாட்டாங்களா…நீங்க ஏன் உள்ள போறீங்க…டென்ஷன் தான் உங்களாலும்…”

‘எல்லாம் வல்ல இறைவனே உன்னை ஆசிர்வதிப்பார்’ என்ற‌குரலில் பாதிரியார்…ஆசீர்வதிக்க ராஜா சங்கர் எதிரே வந்து நின்றார்.

“இங்க பாருங்க ஃபாதர்….நான்‌ உங்க மேல உள்ள மரியாதைல தான் இப்படி நின்று பேசிட்டு இருக்கேன். இல்லைனா…உங்க பள்ளிக்கூடத்துல வேலை பார்க்குற மேரி டீச்சர் கதியே வேற” என கத்தினான்.

“பொறுமையா இரு ராஜா…என்ன‌பிரச்சனை?” என கேட்டுக்கொண்டிருக்கும் போதே பாதிரியாரின் கைப் பேசி ஒலிக்க…ஒரு நிமிஷம்..என சற்றே நகர்ந்து பேசத் துவங்கினார்.

“ஃபாதர், நான் தலைமையாசிரியை  பேசுறேன்”.என்று கனிவான குரலில் நடந்ததையெல்லாம் முன்வைத்தார்.

“சரி, நான் என்னனு பார்க்குறேன்…மேடம்”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

“சொல்லு ராஜா சங்கர், நானும் இப்போ தான் எல்லாம் கேள்விப்பட்டேன்….மேரி டீச்சரை வேலையை விட்டு தூக்கிட்டா சரிக்கு சரியாய் போயிடும்னு  நினைக்குறீயா…”

“இல்ல ஃபாதர்…சரியாகாது! .இருந்தாலும் என் மனசு அவ்ளோ வலிக்குது…உங்களுக்கே தெரியும் எம்புள்ளைய எவ்ளோ ஆசையா வளக்குறேனு…அவ மேல கை வைக்க இவங்களுக்கு எப்படி மனசு வந்தது?”

“புரியுது ராஜா சூழ்நிலைனு ஒண்ணு இருக்குல.அதையும் நாம் விசாரிக்கணும்ல…”

“அதெல்லாம் எனக்கு வேண்டாம்..அவங்க இந்த பள்ளிக்கூடத்துல இருந்து போகனும் அவ்ளோ தான் என் முறையீடு உங்கட்ட”

“ம்ம்…சரி…மேரி சர்ச்ல வளர்ந்த பொண்ணு.நான் சொன்னா புரிஞ்சுப்பா…நீ கிளம்பு…நான் பார்த்துக்குறேன்”.

“பார்த்துக்குறேன்னு  சொல்லாதீங்க! நான் சொல்றதைப் பண்ணுங்க.அதுதான் எனக்கு சந்தோஷம்” எனக்கூறி விடைபெற்றார்.

“மே ஐ கமீன்… சார்?”

“வாங்க மேரி. உட்காருங்க…”

“நடந்த பிரச்சனை எல்லாம் கேள்விப்பட்டேன். எதுவுமே செய்யறதுக்கு முன்ன ஆயிரம் முறை யோசிக்கணும். அதும் ஆசிரியர் வேலை, இப்போ ரொம்ப யோசிக்கணும்”

“ம்ம்…புரியுது ஃபாதர். .நான் பண்ணது தப்பு இல்ல.இருந்தாலும் சூழ்நிலைக் கைதி தான் நான் இப்போ…”

“நீங்க கொஞ்ச நாள் ஸ்கூல் வராம…சர்ச்ல உள்ள கணக்கு வழக்குலாம் பாருங்க.  விஷயம் கொஞ்ச நாள்ல மறந்து போகும்.அப்புறம் என்ன பண்ணலாம்னு  பார்க்கலாம்”

“சரிங்க ஃபாதர்…ஆனாலும் என் மனசு இது ஒத்துக்கல…தப்பே பண்ணாம…தண்டனை…கர்த்தர்  பார்த்துட்டு தான் இருப்பார்” என்றே நகர்ந்தாள்.

ஆறு மாத குழந்தையாக…அம்மா அப்பா…யாரு தெரியாம அனாதையா சர்ச் வாசல் தொட்டில்ல கிடந்தாள். தூக்கி வளர்த்து… படிப்பு கொடுத்து எல்லாம் பண்ணாலும் இந்த சமூகத்தில் வாழ இவங்க இன்னும் போராட வேண்டிருக்கு…கெட்டிக்காரி இந்த மேரி பள்ளியில் படிக்கும் போது…படிப்பும் சரி…விளையாட்டும் சரி நம்பர் ஒன் தான்.  வாலிபால் சாம்பியன் பரிசு பெற்றவள்.விளையாட்டுத்துறை எவ்ளோ வசதி வாய்ப்போடு அழைச்ச போதும் போகாம…ஆசிரியரா வருவேன்.என்னைப்போல பல குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பேன் என்ற வைராக்கியத்தில் வாழ்பவள் என்றே பழைய விஷயங்களை  அசைபோட்டுக்கொண்டிருந்தார் பாதிரியார்.

ஃபோன் ஒலித்தது…

“ஃபாதர்…நான் சங்கர் பேசுறேன்.நான் சொன்னது போல செஞ்சுடீங்க.சந்தோஷம்.இப்போ தான் என் மகளுக்கு நல்ல அப்பாவா என்ன உணர முடியுது” என்று நன்றி கூறினார். நாட்கள் நகர்ந்து செல்ல விஷயமும் மறைந்தது.

ஃபாதர் மேரியிடம், “நம்ம ஸ்கூல்ல பனிரெண்டாம் வகுப்பு எடுக்க ஆசிரியர் வேணும்.நீ வந்திரு” என அழைக்க…மேரி சற்று தயக்கத்துடன் “ம்ம்…ஃபாதர்” என்றாள்.

கெட்ட பெயரெடுத்து வெளியில் வந்தேன்.மீண்டும் அதே மாணவர்கள்.என்ன…பெரியவர்களாக வளர்ந்து நிற்கிறார்கள் என்ற பயமும் மேலோங்கியது.   பார்ப்போம்…என்னதான் நடக்குதுன்னு பள்ளி சென்றாள் மேரி.

“குட்மார்னிங்…டீச்சர்…”

“வெரி குட்மார்னிங்…எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“நாங்க..நல்லா இருக்கோம்.நீங்க டீச்சர்?”

“நானும் ஃபைன்.  சரி பாடத்துக்கு போகலாம்…” என ஒவ்வொரு முகமாய் கண்கள் விரிய பார்த்துக்கொண்டே கடக்கையில் நிலாவும் அங்கே அமர்ந்திருந்தாள் புன்னகையுடன். குழந்தைகள் எல்லாத்தையும் மறந்துடுவாங்க.பெரியவங்க தான் பெரிய பிரச்சனை பண்ணி…என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டாள். பாடம் நடத்த நடத்த மாணவர்களும் தலையாட்டிகொண்டே கவனித்து எழுதிக்கொண்டிருந்தனர்.

மறுநாள்…’டீச்சர் வாராங்க…வாராங்க…’என்ற ஒலி அதிகமா எழும்ப…

“என்னாச்சி பிள்ளைங்களா…இவ்வளோ பரபரப்பு.அதும் காலையிலே?”

“ஒண்ணுமில்ல டீச்சர்…சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்”

“அப்படியா…அப்போ சரி…வீட்டுப்பாடம் லாம் பண்ணீட்டீஙகளா…பண்ணிட்டோம் டீச்சர்…

“நிலா பண்ணல டீச்சர்” என்றது ஒரு குரல்.

“ஏன் பண்ணல…புரியலையா நிலா?”

“இல்ல டீச்சர் புரிஞ்சது…ஆனா…ஆனா…”

“சரி உட்காரு.நாளைக்கு சேர்த்து பண்ணிடு”.

“சரிங்க டீச்சர்…”

பாடம் சுவாரசியமான நிலையில் இன்றும் செல்ல…நிலா மட்டும் பாடம் மீது கவனமில்லாமல் இருப்பதைப் பார்த்தாள்
நிலாவை அழைத்துப்  பேசினாள்.

“என்ன ஆச்சு நிலா…இவ்வளோ சோகம்?”

“ஒண்ணுமில்ல டீச்சர்.நல்லாத் தான் இருக்கேன்”

“உன் குரலே சரியில்லே.. நான் உன் சகோதரி போல.சும்மா சொல்லு டா”

என தோள் மீது கை வைக்க பொழ பொழவென கண்ணீர் சிந்தினாள்.

“என்னம்மா…இப்படி அழுகுற…ஒண்ணுமில்லை.நான் இருக்கிறேன்” என்று அறையைத் தாழிட்டுப் பேசத் துவங்கினாள்.

“நம்ம ஸ்கூல்ல முன்ன வேலை பார்க்கும் போது சில விஷயங்கள் ல என்னை கண்டீச்சீங்க…நான் கேட்கலை. இது எங்க  அப்பா பண்ண பிரச்சனைல வெளில எல்லாருக்கும் தெரிஞ்சது. இத பயன்படுத்தி குமார் வாத்தியார் எங்கிட்ட பல முறை தப்பா நடக்க முயற்சித்தார்.  உனக்கு தான் எல்லாம் தெரியுமே அப்புறம் ஏன் தயங்குறனு அசிங்கமா பேசுறாரு…இத யார்கிட்ட சொல்ல தெரியலை…வீட்ல சொன்னா எங்க அப்பா முன்ன செஞ்சது போல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சி மோசமாயிரும் டீச்சர்…”

“சரி…அழாதே.. நான்பாத்துக்கறேன்…உனக்குஎதுவும்பிரச்சனைவராது”.

“ம்ம்…எனக்கு பயமா இருக்கு மிஸ்..”

” ஒண்ணும் கவலைப்படாதே…நீ வீட்டுக்குப் போ…நாளைக்கு எல்லாம் சரியாயிடும்” என்றே அனுப்பி வைத்தார்.

“குமார் சார்…கொஞ்சம் நில்லுங்க”

“என்ன மேரி மேடம்…சொல்லுங்க…நீங்க எங்கிட்ட பேசுறீங்க…என்ன ஒரு நல்ல நேரம் எனக்கு…சரி சரி சொல்லுங்க”

“நிலா…எங்கிட்ட பேசுனா…நீங்க ஏதோ தவறா பேசுறீங்கன்னு”

“ஓ….சொல்லிடாளா….அதனால நீ என்ன பண்ணப் போற?”

“இங்க பாரு குமார் நாம அவுங்களுக்கு குரு.   இதெல்லாம்நினைச்சுப்பாக்கறதேபெரியதப்பு…எச்சரிக்கையாஇருந்துக்குங்க…”.

“சரீங்க…அட்வைஸ் போதும்…கிளம்புங்க.”

” அட்வைஸ் இல்ல… பிரச்சனை ஆயிரும்…பாத்துக்குங்க..சொல்லிட்டேன். புரியும்னு நினைக்கிறேன்”.

கைப் பேசி அழைப்பு மேரியை அழைத்தது.

“ஹலோ மேரி டீச்சர் நான் ராஜா சங்கர் பேசுறேன்”

“சொல்லுங்க சார்.என்ன விஷயம்…உங்க வீட்டு வாசல்ல தான் நிக்குறேன்…உங்களை பார்க்கலாமா?”

“என்ன சார்…இப்படி கேட்குறீங்க…இதோ” என கதவைத் திறந்தாள்..

நிலா…ராஜா சங்கர்…மல்லி…என குடும்பத்தோடு நின்றனர்.

“வாங்க…உள்ள வாங்க” என அழைத்தாள்.

“என்னை மன்னிச்சிடுங்க மேரி மேடம்”

“என்ன சார்.நீங்க போயி ..பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க…”

“நிலா எங்கிட்ட எல்லாமே சொன்னாள்.எம்புள்ள சொல்றதை முழுசா கேட்காம எடுத்தோம்….கவுத்தோம்னு பல விஷயங்கள் செஞ்சிடறேன்… ஏன்உங்கவிஷயம்கூடஅப்படிதான்பண்ணேன்”

“அதெல்லாம் பழசு சார்.விடுங்க. சாப்பிட ஏதாவது எடுத்து வாரேன்” என்று  உள்ளே சென்றாள்.

“நான் உங்களுக்கு வலி தந்த போதும் ….நீங்க என் பொண்ணு வாழ்க்கைக்கு வழி தந்துட்டீங்க” என்றே கரம் கூப்பி நன்றி தெரிவித்தான்

மூவரும்பேசிவிட்டுமகிழ்ச்சியுடன்வீட்டைவிட்டுவெளியேறினர்.

Siruvayathu Vilayattukal Poem By Sakthirani சிறுவயது விளையாட்டுகள் கவிதை - சக்திராணி

சிறுவயது விளையாட்டுகள் கவிதை – சக்திராணி




பாவடை சட்டை போட்ட
வயதில்…பாதை
வீடாய்…ஒத்த வயதொத்த
குழந்தைகளே உலகமாய்…
ஓடித் திரிந்த காலத்தே…

விளையாடிய…விளையாட்டுகள்
அத்தனையும்…
நினைவுப்பெட்டகத்தில் பூட்டியிருக்க…இன்றே…
நினைவூட்டியில் தலைப்பால்
நினைவுகள் மலர…

செப்பு சாமானில் சோறாக்கி…
சேருமானருடன்…பகிர்ந்துண்டு…
சேலையில்…ஊஞ்சல் கட்டி…
உற்சாகமாய் ஆடி மகிழ்ந்து…

சோலையில்லா…தோட்டத்திலே…
பூப்பறிக்க பாட்டுப்பாடி…
மாதம் அனைத்தும் மனப்பாடமாய்…மனனம் செய்தே…

பகடை உருட்டி…தாயம் விளையாடி
ஏற்ற இறக்கம்…கற்றவராய்…
கடந்த பின்னும்…

கற்ற கல்வியின் கால்வாசியில்…
ஆசிரியராய்…உருமாறி…
பள்ளி விரும்பாத பருவத்தே…
வீட்டிற்குள் பள்ளிக்கூடம் நடத்தி…

ஊர்சுற்றா நேரத்தில்… ஓரிடத்தில்
பம்பரம் சுற்றி…சாட்டைக்கோர்
வேலை கொடுத்து…

பனை வண்டியில் ஊர் சுற்றி…
சைக்கிள் ஓட்டி…வளர்ந்த நிலையை…
அனைவருக்கும் எடுத்துக்காட்டி…
எடுப்பாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்து வரும் போதும்…
சிறுவயது விளையாட்டுகள் அனைத்தும்…
நினைவின் மகிழ்வுகளே…

Nalam Poem By Sakthirani நலம் கவிதை - சக்திராணி

நலம் கவிதை – சக்திராணி




கையிலிருக்கும் புத்தகத்தில்…
மனம் முழுதும் மூழ்கிக்கிடக்க…
சிந்தனை சிதறலாய்
தொடர்வண்டியின் வேகம் அதிகரிக்க…காற்றும் கொஞ்சம்
புத்தகத்தை புரட்ட…

காற்றின் வேகத்தின் எதிர்திசையில் சற்றே திரும்பி அமர்ந்து… மீண்டும்
புத்தகங்களூடே விழி சொருகும் நேரத்தில்…எதிரே அமர்ந்த உருவம்…

எங்கோ…பார்த்தது போல இருக்குதே…என உற்று நோக்கும் சமயத்தில்…அவள் கூந்தலும் காற்றால் முகம்மூடி மறைக்க…
பார்க்கும் ஆர்வத்தில்…அருகே செல்ல…கூந்தல் ஒதுக்கியவளாய்…ஒரு பார்வை
பார்த்தாள்…என்னை ஒதுக்கி சென்றவள்…

விழி நோக்கிய பின் ஏன்
இந்த மௌனம்…தேவையில்லையே
என பேசத்துவங்க
அவளும்…
ஏதும் அறியாதவள் போல…
விடையானால்…என் வினாக்களுக்கு…

காலம் தந்த மாற்றங்களுக்கு…
நாம் எப்படி பொறுப்பாவது…என
சுயநலமாய் நடந்து கொண்டாலும்
பொதுநலமாய்…தொடர்வண்டி விட்டு
இறங்கும் போது கூறினேன்…

திருமணம் என்றால்…பத்திரிக்கை
அனுப்பு…கண்டிப்பாக
வருகிறேன் என…

Muthal Santhippu Shortstory By Sakthirani முதல்சந்திப்பு சிறுகதை - சக்திராணி

முதல்சந்திப்பு சிறுகதை – சக்திராணி




புன்னகையும்…மகிழ்வுமாய் பேசிக்கொண்டிருக்கும் நட்பு வட்டாரத்தில்…அந்நபர் இல்லையெனினும் யாரோ ஒருவர் பெயர் மட்டும் அப்பப்போ உரையாடலில் இடம்பெற யார் அவள் என்ற எண்ணம் மட்டும் மனதை சிந்தனையில் ஆளச்செய்கிறது ராமுவுக்கு…

‘யாருடா அது’ எனத் தன் தோழனிடம் கேட்ட போது அவ எங்க கூட பள்ளியில் ஒன்றாக படித்தவள்…ரொம்ப நல்ல பொண்ணு டா…யாருக்கு கஷ்டம் வந்தாலும் உதவி செய்றதுல அவளை மிஞ்ச முடியாது.

ஏன் நம்ம குமாருக்கு காலேஜ் பீஸ் கட்டுவது கூட அவ தான்…

என்னடா…இவ்வளோ நடக்குது எனக்கு அந்த பொண்ணைப்பத்தி எதுவுமே தெரியலையே…

சரிடா ஒருநாள் சந்திப்போம்…அப்போ அவளை உனக்கு அறிமுகப்படுத்துறேன் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அனைவரும் செல்கின்றனர்.

ராமுவின் மனதில் அந்தப்பொண்ணு நினைப்பு நீங்காம ஓடிக்கிட்டே இருந்தது.இவ்ளோ வருஷமா கூடவே இருந்தும் ஏன் நமக்கு இப்படி தெரியாம பண்றாங்கனு நினைப்பு அதிகமானாலும் எதுவும் பண்ண முடியலை.

ஒவ்வொருநாளும் கல்லூரியில் ஏதோ பேச்சுக்கு நடுவில் அவள் பெயர் சரளமாக பேசப்படுவதை உணர ஆரம்பித்தான்.அவளை எப்படியாவது சந்திக்க வேண்டும் என ராகுலிடம் கேட்டுக்கொண்டான்.

அவள் சென்னையில் படிக்கிறாள்.ஊருக்கு வந்ததும் கண்டிப்பா சந்திக்க வருவாள்.அப்போது உன்னை அறிமுகப்படுத்துறேன் என்றான் ராகுல்.

சரி சரி என உதடுகள் சொன்னாலும் மனம் எப்போது என ஏங்க ஆரம்பித்தது….இது காதலா…என்ன உணர்வு என இனம் புரியாத புதிராய் மனதை குழப்பிக் கொண்டிருக்கும் வேளையில் நண்பர்கள் குழுவில் ஜெயந்திக்கு திருமணம் என்ற பரபரப்பு பேச்சு அதிகமானது.

என்ன ஜெயந்தி நிஜமாகவே கல்யாணம் தானா…இல்லை சும்மா எல்லாரும் பேசிக்கிறாங்களா…என ராம் கேட்க…

நிஜமா தான் ராம்…எனக்கு கல்யாணம்…வரும் 28 ம் தேதி நிச்சயதார்த்தம்…கண்டிப்பா நீ வரணும் என்றாள் ஜெயந்தி.

நீ கூப்பிட்டுற…எப்படி வராமல் இருப்பேன்…கண்டிப்பா வருவேன்…என்று கூறிவிட்டு திரும்புவதற்குள் ராம்…அப்போ நம்ம அகல்யா வருவாள் தான ஜெயந்தி என புன்னகையோடு கேட்டான்.

கண்டிப்பா வருவாள்…ஏற்கனவே சொல்லிட்டேன்…என்ன வேலை இருந்தாலும் வந்துடனும்னு…வருவாள்…என்று கூறியதும் ராம் மனதிற்குள் மகிழ்ச்சி எல்லையில்லா இரசனைக்குரித்தானது…

எப்போது நாட்கள் ஓடும்…என்ற நாள்காட்டியோடு தினமும் போரிட்டு…
தேதி 28 ம் ஆனது…இன்று…அகல்யா வை சந்திக்க போகிறேன் என்ற பூரிப்பில் காலையில் இருந்தே தலை கால் புரியாதவனாய் சுற்றி வந்தான்.

ராம்…எப்போ நிச்சயதார்த்தம்…எப்போ போகனும் எனக்கேட்க…இன்னும் நேரம் இருக்குடா…நீ சரியில்லை என்று கேளிக்கையாய் பதில் கூற…அப்படிலாம் எதும் இல்லடா…
ஏதோ உணர்வில் பார்க்கனும் என்ற ஆசை அதிகமாக உள்ளது…அவ்ளோ தான் என்றான்.

மாலையும் வந்தது… நண்பர்கள் கூட்டத்தோடு ராம்…ஜெயந்தி வீட்டிற்கு செல்கிறான்…

ஜெயந்தி வீட்டில் உறவினர் கூட்டம் நிரம்பி வழிய… இக்கூட்டத்தில் எப்படி அகல்யாவைத்தேடுவது என சுற்றிலும் பார்க்க…

ஜெயந்தி அறைக்குள் இருந்து அழைக்கிறாள்…ராம் உள்ளே வாடா…என

மணப்பெண்ணாய் அலங்கரித்த ஜெயந்தியை பார்த்தவனாய் புன்னகைத்து உள்செல்லும் போதே…
பார்க்கிறான்…அவளது அருகில் அகல்யா நின்று கொண்டிருப்பதை…

ஜெயந்தியை பார்த்து புன்னகைத்தாலும்…அருகில் இருக்கும் அகல்யாவிடம்…

நீங்கள் தான் அகல்யாவா…எனக்கேட்க அவளும் ஆமாம் நீங்க…எனக்கேட்க தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான்.
இருவரும் முதல் பார்வை…முதல் பேச்சு இதில் ஏதோ தடுமாற்றமாய் பேசிக்கொண்டாலும்…நீண்ட நாள் பழகியது போல் ஒரு எண்ணம் இருவருக்குள்ளும் அசை போட ஆரம்பித்தது….

Color Kozhikunju ShortStory By Sakthirani கலர் கோழிக்குஞ்சு சிறுகதை - சக்தி ராணி

கலர் கோழிக்குஞ்சு சிறுகதை – சக்தி ராணி




விடியலின் உற்சாகமாய் வேலைக்குச் செல்லும் நோக்கில். “காலை டிபன் ரெடியா?” என கேட்டுக்கொண்டே மாடிப்படிக்கட்டிலிலிருந்து இறங்கி வந்தார் குமார்…

“இதோ அஞ்சு நிமிஷம் ரெடியாயிடும்” என்று குரல் கொடுத்தாள் லக்ஷ்மி…

“நாற்பது வருஷம் ஆனாலும் உன்கிட்ட இருந்து வேற பதில் வராதுன்னு நல்லாத் தெரியும் “என்று கூறிக்கொண்டே வெளியில் சென்று மிதிவண்டியை எடுத்தார்.

‘வயசு திரும்பல நமக்கு…எழுபதுக்கும் மேலாச்சு. எல்லா வேலையும் ஒத்தையால செய்ய முடியல’ என்று மனக்குமுறலை கொட்டித் தீர்த்தாள் லக்ஷ்மி…

“சரி சரி…நான் கடையில சாப்பிட்டுப்பேன். நீ சாப்பிடு” என்று தூரக்குரலில் கூறிவிட்டு கையசைத்து நகர்ந்தார்.

மெதுவாக வேலைகளை முடித்த லக்ஷ்மி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு சற்றே கண் அயர்ந்தாள்.

“லக்ஷ்மி…லக்ஷ்மி…” என்று குமார் கூப்பிடும் குரல் கேட்க,

“என்னங்க, இப்போ தான் வேலைக்கு போனீங்க, அதுக்குள்ள வந்துட்டீங்க?” எனக்கேட்டாள்.

“நேத்து சம்பளம் போடும் நாள்,.அந்தக்கணக்குல நான் தவறா தொகையை மாத்தி எழுதிட்டேன், அதனால என்னை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்று குரல் தாழத் தலை குனிந்தவராய்ப் பதிலுரைத்தார்.

“முப்பது வருஷத்துக்கும் மேல அந்தக் கம்பெனியில் கணக்குப் பிள்ளையா வேலை பார்க்குறீங்க,.எப்போதும் இப்படி ஒரு தவறு வந்ததே இல்லேயே… இப்போ பண்ண இந்த ஒத்த பிழைக்கா இப்படி சொல்லிட்டாங்க !”என கண் கலங்கி பேசினாள் லஷ்மி.

“ஆமா லக்ஷ்மி, வயசாகுதுல… எழுதும் போது கண்ணு வேற சரியா தெரியலை.ஏற்கனவே சில பிரச்சனைகள் வந்தது.அதெல்லாம் காரணமாக வச்சு இப்போ போக சொல்லிட்டாங்க”

“சரி… நீங்க எதும் கவலைப்படாதீங்க.ஏதாவது வேலை செய்து பொழச்சுக்கலாம்” என்று கூறிக்கொண்டே மெதுவாக எழுந்து, ‘டீ போட்டுக் கொண்டு வாரேன்’ என்று உள்ளே சென்றாள்.

டீ குடித்து விட்டு குமார், “கிருஷ்ணாவைப் போய்ப் பார்த்துட்டு வாரேன்.மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. வெளியில போனா கொஞ்சம் மாறும்”என்று கூறியபடி வெளியேறினார்.

குமாரின் பள்ளிப்பருவ நண்பர் கிருஷ்ணா… கோழிக்குஞ்சு வாங்கி விற்பனை செய்வார். வியாபார உத்தியில் கை தேர்ந்தவர்.

குமாரைக் கண்டதும், “வாடா குமார்… இந்தப்பக்கம் வருவதுக்கெலாம் உனக்கு நேரம் இருக்கு போல என கேட்டுக்கொண்டே உள் அழைக்கிறார்.

குமாரும் நடந்தவற்றை எல்லாம் நண்பரிடம் மனத்தைத் திறந்து கொட்டுகிறார்.

“என்ன செய்வதென்றே தெரியல, கிருஷ்ணா….வயசானதால கண்ணில் பிரச்சனை. இதை யாரிடமும் சொல்ல முடியலைடா” என்று கண்ணீர் வடிக்கிறார்.

“என்ன குமாரு, இவ்வளோ வயசாச்சு ….இதெல்லாம் எல்லாத்துக்கும் வரும் பிரச்சனைதான். நான் உனக்கு கொஞ்சம் கோழிக்குஞ்சு தாரேன். நீ அதை வித்து வியாபாரத்தைத் தொடங்கு. வேலைக்கு வேலையும் ஆச்சு…நேரமும் போயிடும்… சும்மா இருக்கோம்னு சிந்தனையும் வராது” என்று அவரை சமாதானப் படுத்தினார் கிருஷ்ணா.

ஒரு மனதாய் எல்லாம் கேட்டுக் கொண்ட குமார் மறுநாளே கோழிக்குஞ்சு வாங்கிக்கொண்டு வியாபாரம் தொடங்கினார். சிறார் முதல் பெரியவர்கள் வரை பலர் கோழிக்குஞ்சு வாங்கி மகிழ்ந்தனர்…

அவர்கள் கேட்கும் வண்ணங்களுக்குத் தான் விடை கொடுக்க முடியாமல், குமார் தட்டுத்தடுமாறி கையில் கிடைக்கும் கோழிக்குஞ்சுகளுக்கு கலர் தேடிக் கொண்டிருந்தார்.