மலாலா கரும்பலைகை யுத்தம் - Thamizhbooks.com

ஆயிஷா இரா நடராசன் எழுதிய “மலாலா கரும்பலகை யுத்தம்” – நூலறிமுகம்

மலாலா கரும்பலகை யுத்தம் மலாலா என்ற பெண்ணை நான் எப்படி அறிமுகம் செய்வது. அவள் ஒரு மாணவி என்று அறிமுகம் செய்வதா? அல்லது கல்விக்காக போராடிய, அமைதிக்காக போராடிய ஒரு போராளி என்று அறிமுகம் செய்வதா? எனக்கு குழப்பமாக உள்ளது. ஆம்…
Malala Karumbalakai Yutham (மலாலா கரும்பலகை யுத்தம்) | Malala Yusuf Sai

ஆயிஷா இரா. நடராசனின் “மலாலா கரும்பலகை யுத்தம்” – நூல் அறிமுகம்

*"பெண் கல்வியைத் தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை"* *ஒரு மாணவி* *ஒரு ஆசிரியை* *ஒரு கரும்பலகை* *ஒரு எழுது கோள்* *உலகையே மாற்றும் சக்தி கொண்டது.* 12 வயது சிறுமியான மலாலா, குல் மக்காய் என்று தனது பெயரை மாற்றிக்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முதல் ஆசிரியர் – தி. தாஜ்தீன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முதல் ஆசிரியர் – தி. தாஜ்தீன்

      "முதல் ஆசிரியர்"உலக புகழ்பெற்ற நாவல்.ஒரு சிறுமியின் வாழ்க்கையை வளப்படுத்திய அவளுடைய முதல் ஆசிரியரைப்பற்றியும், அந்த ஆசிரியர் முறையாகக் கல்வி பயிலவில்லையென்றாலும் அவருக்குத் தெரிந்த அளவுக்குத் தெரிந்த வழியில், “குர்க்குறீ" கிராமத்திற்கு கல்வி கற்பிக்கவந்தவர். அந்தக்கதையைப் பற்றிய இந்நாவலைப்…
போயிட்டு வாங்க சார்

நூல் அறிமுகம்: போயிட்டு வாங்க சார் (Goodbye Mr Chips) – தி. தாஜ்தீன்

      Goodbye,Mr.Chips_1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை 1934-இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன்,இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின் நாயகனாக இருப்பவர் இங்கிலாந்து பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் 'சிப்பிங்…
nool arimugam: onguttu doona - vijayraj.a நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -விஜய் ராஜ். அ

நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -விஜய் ராஜ். அ

ஓங்கூட்டு டூணா ஆசிரியர்.தேனி சுந்தர் பாரதி புத்தகாலயம் பக்கங்கள் 88 தோழர் தேனி சுந்தர் அவர்களுக்கு பேரன்புடன் வாழ்த்துக்களும் நன்றிகளும். இதுபோல் ஒரு நூல் வெளிவர காரணமாய் இருந்து.... தனது விருப்பத்தையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தியும் வந்த ஐயா ச. மாடசாமி அவர்களுக்கு…
paangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதை

பாங்கைத் தமிழன் கவிதை

ஓர் அரசுப் பள்ளியின் கலை விழா! 🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹 கலகலப்பாகிவிடும் ஒரு மாதத்திற்கு முன்பே! பொறுப்பாசானிடம் பெயர்களைப் பதிந்து என்னப் போட்டியென ஊர்ஜிதப் படுத்திய அந்த நிமிடத்திலிருந்து.... மாணவரென்ற நிலை மாறி.... இராஜா மந்திரி கவிஞர் ஓவியர் அதிகாரி ஆசிரியர் நடிகர் பாடகர்…
மயிர்தான் பிரச்சினையா? : நூல் அறிமுகம் – இரா.சண்முகசாமி

மயிர்தான் பிரச்சினையா? : நூல் அறிமுகம் – இரா.சண்முகசாமி



Book day

Puthagam Pesuthu

‘மயிர்தான் பிரச்சினையா?’

(கல்விசார் கட்டுரைகள்)

மாதொருபாகன் புத்தகம் உள்ளிட்ட ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கிய பேராசிரியர் பெருமாள்முருகன் (Perumalmurugan) அவர்களின் 2022 டிசம்பரில் முதல் பதிப்பாகவும், 2023 பிப்ரவரியில் இரண்டாம் பதிப்பாகவும் காலச்சுவடு பதிப்பகத்தில் வந்த புத்தகம் தான் ‘மயிர்தான் பிரச்சினையா?’ கல்வி சார்ந்த கட்டுரைகள் கொண்ட நூல்.

இதில் 2009 முதல் 2022 வரை கல்வியில் நிகழ்ந்த முரண்பாடுகளை குறிப்பாக மாணவர்களை கல்வி வியாபாரப் பண்டமாக, சூதாட்டக் கருவியாக வைத்து விளையாடிய விளையாட்டு பொம்மைகளாக குழந்தைகள் ஆட்டுவிக்கப்பட்ட கொடுமையான வரலாற்றைத்தான் நமக்கு கட்டுரைகளாக வழங்கியிருக்கிறார். இதில் ஊடகங்களின் பங்கு மிகுந்து இருப்பதையும் சுட்டிக்காட்டி நம்மை ஊடகங்களை எவ்வாறு மூன்றாவது கண் கொண்டு பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருப்பார்.

அது குழந்தைகளின் முதல் மதிப்பெண்ணாகட்டும், மாநில அளவில் இடம் பிடிப்பதாக இருக்கட்டும், “தம் குழந்தைகளின் புகைப்படங்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களில் வராதா” என்று பெற்றோர்கள் ஏங்குவதாக இருக்கட்டும். இன்னும் இது போன்ற பல மாய்மாலத் தோற்றத்தை திட்டமிட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்கி தனது கல்வித்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான மூலதனக் கருவிகள் தான் குழந்தைகள்.

அதேபோன்று பெற்றோரின் பணம் காய்க்கும் மரங்கள் தான் குழந்தைகள் என்று பொதுப்புத்தியாய் கட்டமைக்கும் நிலையில் தான் இன்றைய கல்வி நிலை இருக்கிறது என்று 2009லேயே நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதி தனியார் கல்வி நிறுவன தொழிற்சாலையில் நடைபெற்ற அவலங்களை புட்டு புட்டு வைத்திருப்பார் 2009லேயே.

இன்று 9,10,11,12 நான்கு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்று வைக்கப்பட்டதற்கு காரணமே மேற்கண்ட நாமக்கல் கோழிப்பண்ணை கல்வி நிறுவனங்களே.

இன்று எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்று ஒன்றிய அரசு புகுத்தியதால் கோழிப்பண்ணை கல்வி நிறுவனங்கள் அடுத்த அடியை அதாவது ‘கோச்சிங் செண்டர்’ என்னும் தொழிற்பண்ணைக்குள் நுழைந்துள்ளார்கள். மாணவர்களுக்கு புதுவிதமான நெருக்கடி. எப்படியிருந்தாலும் குழந்தைகளுக்குத்தான் மனஉளைச்சல். சாமானிய பெற்றோருக்கு பண உளைச்சல். விடிவு அனைவருக்கும் கல்லூரிக்கல்வி வரை பணமில்லாக் கல்வி என்னும் நிலை வரும்போதுதான்.

*’மயிர்தான் பிரச்சினையா?’அடடா இது மிக முக்கியமான கட்டுரை. எல்லாமேதான். ஆனால் இதற்கு நாம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டும்.

“பறவைகள் தம் இனத்தின் சோடியை கவர்வதற்கு பல இறகு விரிக்கும் தந்திரங்களைச் செய்கிறது. மயில் தோகை விரிக்கிறது, இன்னும் பல பறவைகள் கேரள கதகளி நடனம் போல கழுத்தை அந்தத் திருப்பு திருப்பி இணையைக் கவரும். அதுபோன்று சிங்கம் தன் பிடரியை சிலிர்க்கும். பறவை, விலங்குகளுக்கே தமது மயிர்களை கூச்செரியும்போது நாம் மனிதர்கள் தானே நமக்கும் முடி மீது கவனம் இருக்காதா?” என்பது போன்று மிகவும் எதார்த்தமான உரையாடல்களுடன் இக்கட்டுரையை எழுதியிருப்பார். இதில் கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா கலைஞர்கள் வரை தமது முடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அலங்கார சலூன்களில் விளம்பரங்கள் இப்படி போகும் கட்டுரை 1970, 80 வாக்கில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தலை முடியை அலங்காரம் செய்த கலைகளை திரைப்படமாக இன்றும் இருக்கிறதே. அப்படி இருக்கும்போது “கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் கையில் கத்தரிக்கோல் இருப்பது சரியா?” உச்சித் தலையில் கொண்டை, பின் மண்டை கொண்டை, நீண்டு முதுகில் தொங்கும் கொண்டை என உயர் சாதி முதல் ஒடுக்கப்பட்ட மக்கள் வரை முடியப்பட்ட கொண்டை முடி மறந்துவிட்டதா? மாணவனின் தலை உச்சியில் முடி தூக்கி நின்றால் அது ஆசிரியருக்கு சவாலாகத் தெரிகிறது. ‘உலத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்கிற திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி இன்றைய உலக வழமைக்குள் அன்றாடம் நடக்கும் நடப்புக்குள் ஆசிரியர்கள் தம்மை புகுத்தி மாற்றத்தை ஏற்று “மயிரை மாணவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் கற்பித்தலில் நாம் கவனம் செலுத்துவோம்” என்று ஆசிரியர்களைக் கேட்டு கட்டுரையை முடித்திருப்பார்.

நான் கூறியது அவருடைய ஒன்றிரண்டு துண்டுகள் தான். இதுபோன்று 25 நறுக்குத் தெறித்த கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஆகச்சிறந்த எழுத்தாளருக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

வாசிப்போம்!

உலகை நேசிப்போம் தோழர்களே!!

தோழமையுடன்

இரா.சண்முகசாமி

புதுச்சேரி.

வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச வேண்டுமா? – நா.மணி

வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச வேண்டுமா? – நா.மணி




கோடை தொடங்கிவிட்டது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, பள்ளித் திறப்பு ஒருவேளை ஓரிரு வாரங்கள் தள்ளிப் போனால், மொத்தக் கோடை விடுமுறை நாட்களைக் காட்டிலும் குழந்தைகள் குதூகலம் அடைவார்கள்.

எத்தனை நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டாலும், திடீர் விடுமுறை குழந்தைகளுக்குப் பெரு மகிழ்வைத் தருகிறது. குழந்தையின் உலகம் பள்ளியில்லா உலகை வேண்டுகிறது. கற்பதையே இயல்பாகக் கொண்ட குழந்தைகள், பள்ளியைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள்.

ஒருவர் இருவர் அல்ல, 99% குழந்தைகள் மனச் சோர்வோடும் அவமதிப்புகளோடும் பெரும் பதற்றத்தோடும் அனுதினமும் வீடு திரும்புகிறார்கள். ஏனிந்த அவலம்? பள்ளி விடுமுறைக்காக குழந்தை துக்கித்து நிற்கும் நிலை வராதா? நிச்சயம் வரும். அதற்கு வன்முறையில்லா வகுப்பறை வேண்டும். மகிழ்ச்சி பொங்கும் வகுப்பறை வேண்டும்.

தடியெடுக்க தடைவிதிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்று? இன்னமும் வன்முறை பற்றி பேசுகிறீர்களா? என கேட்கலாம். பள்ளிக் கல்வியின் சகல தோல்விகளுக்கும் தங்களிடம் இருந்த தடி பிடுங்கப்பட்டதே என்ற பேச்சும் எழலாம்.

உங்கள் வீட்டருகே இருக்கும் குழந்தையிடம் கேளுங்கள். “உங்க மிஸ் அடிப்பாங்களா?” என்ற கேள்விக்கு, எத்தனை குழந்தை இல்லையென்று பதில் அளிக்கிறது பார்ப்போம். நாமும் நம் குழந்தையை அடக்க “உங்க மிஸ்கிட்டே வந்து சொல்லிடுவேன், டைரியில் எழுதிக் கொடுத்துவிடுவேன்” என்று எத்தனை முறை மிரட்டியிருக்கிறோம்! அதன் அடிப்படை என்ன?

KZN Principal in hot water for corporal punishment - SABC News - Breaking news, special reports, world, business, sport coverage of all South African current events. Africa's news leader.

“சீருடை, வாய் பொத்தி அமைதி, விசில், கையில் பிரம்பு, உரத்துக் கேட்கும் கட்டளைகள்” இத்தகு நிலையில் உள்ள பள்ளிக்கும் சிறைச்சாலைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டால் என்ன பதில் இருக்கிறது? பொதுவெளியில் ஒருவர் தவறு செய்தால், போலீஸ் விசாரணை, வழக்குரைஞர்கள் வாதங்கள் இறுதியாக நீதிபதி வழியாக தண்டனையோ விடுதலையோ வாய்க்கும்.

ஆனால் இந்த மூன்று செயலையும் ஆசிரியர் என்ற ஒருவரே எந்தவித கேள்வியுமின்றி செய்கிறாரே இது அராஜகம் என்று கூறினால் அதற்கு மறுமொழி என்ன? குழந்தைகள் பேசத் துடிக்கிறது. தன்னிடம் உள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்ள எல்லையில்லா ஆர்வத்தோடு இருக்கிறது. தன்னிடமிருக்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலைத் தேடி பரிதவித்து நிற்கிறது.

தன்னை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறது. தன்னை சக மனிதர்கள் ஆராதிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறது. குறைந்த பட்சம் சகமனிதனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது.

ஆனால், எல்லோர் சொல்வதையும் கேட்க மட்டுமே குழந்தைகளுக்கு அனுமதி. இப்படி துன்புறுத்துகிற இடம் வன்முறைக் கூடாரம் இல்லையா? மாணவர்கள் ஏன் தவறு செய்கிறார்கள், தான் சொல்வதை ஒரு குழந்தையால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? என்று இன்று வரை அறியாமல் தண்டனை வழங்கும் முறைமையை என்னென்பது?

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவே தண்டனைகள் எனில், பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்துப் பாட சாலைகளிலும் உடலை வருத்தும் தண்டனைகள் இல்லையே! ஒரு பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவரின் பிள்ளையோ காவல் கண்காணிப்பாளர் பிள்ளையோ படித்தால் அவர்களின் தவறுக்குத் தக்க தண்டனை கிடைக்குமா? சம அளவு கற்றல் குறைபாடுகளுக்கு, தவறுகளுக்கு, சம அளவில், சாதி வர்க்க பேதமின்றி தண்டனைகள் ஆசிரியரால் வழங்கப்படுகிறதா? இதிலிருந்தே கற்றுக் கொடுக்கவோ தவறைச் சரி செய்யவோ தண்டனைகள் வழங்கப்படுவது இல்லை என்பது புரியும்.

குழந்தை நம்மைவிட பலமற்றது. நம்மைவிட பல வருடங்கள் சிறியது, அதற்கு எதுவும் தெரியாது. நமக்கு எல்லாம் தெரியும். நாம் இடுகிற கட்டளைகளுக்கு அடிபணிதல் அன்றி அதற்கு வேறு கடமைகள் இல்லை. அதைவிட நாம் அதிகாரமும் பலமும் மிக்கவர்கள். ஆசிரியர் என்றால் அஞ்சி நடுங்க வேண்டும் என்றோ கற்பிதம் செய்யப்பட்ட மனப்பாங்கு.

அமைதி என்று கட்டளை இட்டவுடன், வகுப்பறை மயான அமைதியில் ஆழ வேண்டும் என்ற ஆசிரிய அகம்பாவம் இதுவெல்லாம் சேர்த்து ஆசிரியனை வன்முறையாளனாக மாற்றுகிறது. ஐயோ அடிப்படையில் நான் அப்படியில்லை என்று கதறும் நல்லாசிரியரா நீங்கள்? மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி. ஆனால், வன்முறையில்லா வகுப்பறையாக உங்கள் வகுப்பறையை மாற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. முயன்றால் முடியாததும் அல்ல.

வன்முறையில்லா வகுப்பறை – ஆயிஷா இரா. நடராசன்உங்கள் முயற்சிக்கு ஒரு அழுத்தமான ஊன்றுகோல் முளைத்திருக்கிறது. அந்தஆயிஷா இரா.நடராசன் Ayisha Era.Natarasan ஊன்றுகோலின் பெயர் “வன்முறையில்லா வகுப்பறை” அதனை எழுதியவர் ஆயிஷா நடராசன். 2016 டிசம்பரில் வடிவமைக்கப்பட்டு, பாரதி புத்தகாலயம் வழியாக விற்பனைக்கு இந்நூல் வந்திருக்கிறது. எத்தனை ஆசிரியர்களுக்கு இந்த நூல் அறிமுகம்? எத்தனை பேருக்கு பரிட்சயம்? வகுப்பறையில் நிகழும் வன்முறைக்கு அடிப்படைக் காரணம் தொடங்கி, தற்போது உடல் ரீதியான தண்டனைகள் தடுக்கப்பட்டுள்ள காலத்தில் நிகழும் வகுப்பறை வன்முறைகள் வரை அலசி ஆராய்கிறார். தீர்வுகளை முன்வைக்கிறார், பயிற்சிகளைப் பட்டியலிடுகிறார்.

இன்றைய நவீனக் கல்விமுறையின் தோற்றுவாய். அதை ஆங்கிலேயர்கள் அடிமை இந்தியாவிற்கு ஏற்றவண்ணம் அமல்படுத்திய விதம். குருகுலப் பண்பாட்டுக் கல்வி வாயிலாக நாம் உள்வாங்கிக் கொண்டவிதம் ஆகியவையே மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய நாட்டு வகுப்பறையில் தண்டனைகள் மலிந்துகிடக்கக் காரணம் என்பதை முதலில் மனதில் பதிய வைக்கிறார்.

கல்வி முறையில் உள்ள முரண்பாடுகள், வகுப்பறை வன்முறைக்கு வித்திடுவதை போதுமான ஆதாரங்களுடன் விளக்குகிறார். தண்டனைகளின் நோக்கம், தண்டனைகளுக்கும் நெறிப்படுத்துவதற்குமான அடிப்படை வேறுபாடுகளை எப்படிப் புரிந்து கொள்வது என்பதற்கான தெளிவுகள் திருப்தி தருகிறது.

குழந்தைகளை புரிந்து கொள்வது எப்படி? அதன் நடத்தையைப் புரிந்து கொள்வது எப்படி ஆசிரியரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்? மாணவர்கள் தவறு செய்வது ஏன்? மாணவனின் குறும்புக்கும் குற்றத்திற்குமான வேறுபாடுகள் என்ன? வளர் இளம்பருவ குழந்தைகளைப் புரிந்து கொள்வதும் கையாள்வதும் எங்ஙனம்? கீழ்படிதல் என்றால் என்ன? ஒழுக்கம் என்றால் என்ன? இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடுகள் எவை? என்ற கேள்விகளுக்கும் இந்நூல் விடையளிக்கிறது. இத்தகைய கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான, உளவியல் ரீதியான, ஆராய்ச்சி அனுபவங்களை சேர்த்து பதிலளித்திருக்கிறார். ஆசிரியர் தன்னை மேம்படுத்திக் கொள்ள கூடுதலான நூல்களையும் பரிந்துரை செய்கிறார்.

மேற்படி கேள்வி முடிச்சுகளுக்கான விடை தெரிந்துவிட்டால், ஓர் தொழில்முறை ஆசிரியராக இல்லாமல், ஆசிரியராக வாழத் தலைப்பட்டுவிடுவார். அப்படி ஆசிரியராக வாழும்போதும் மாணவர்களின் மனநல ஆலோசகராக, குழந்தைகளின் வளர்ச்சி அலுவலராக அவர் பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுவார். அப்படியாக ஆசிரியராக பரிணமித்துவிட்டால், உற்சாக வகுப்பறை உயிர்விடும். கற்றல் ஆர்வம் ஊற்றெடுக்கும். வகுப்பறையில் பங்கேற்பு அதிகரிக்கும். குழந்தைகளின் பேச்சைக் கேட்கும் காதுகள் ஆசிரியருக்கு முளைக்கும். மகிழ்ச்சி பொங்கும் வகுப்பறைகள் ஜனிக்கும். இத்தகைய வகுப்பறைகள் மாலை முடிவுற்றால் காலை பள்ளி வந்து சேரும் வரை ஏங்கித் தவிக்கும். இரவு நீண்ட பொழுதாக குழந்தைக்கு தொல்லை தரும்.

112 பக்கங்களில் 25 தலைப்புகளில் ஆயிஷா நடராசன் வகைப்படுத்திக் கூறியிருக்கும் பாங்கு எளியது. ஒவ்வொரு தலைப்பின் முகப்பிலும் ஆயிஷா நடராசன் தேர்ந்தெடுத்து பொருத்தியிருக்கும் மேற்கோள்கள் மட்டும் படித்துப் பார்த்து அசைபோட்டால் கூட ஆசிரியர் மனமாற்றம் பெறுவர். இந்த நூலை வாசித்திருக்காத ஆசிரியர்கள், கல்வி நலனில் அக்கறை இருப்போர் ஒவ்வொருவரும் இந்நூலைப் படித்துப் பார்த்தல், வகுப்பறையில் பயிற்சித்துப் பார்த்தல், பயிற்சியின் அடிப்படையில் தோன்றும் முரண்பாடுகளை விவாதித்தல் தீர்வுகாண வகுப்பறைக்குச் செல்லுதல் என்பது வன்முறையில்லா வகுப்பறை சமைக்கும்.

உடல் மன தண்டனைகளை களைய, பல கல்வியாளர்கள் குரல் கொடுத்துள்ளனர். கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஒரு நூலின் ஊடுபாவாக வன்முறையில்லா வகுப்பறை பற்றி பேசப்பட்டுள்ளது. ஆனால் ஒரு முழு புத்தகமும் வன்முறையில்லா வகுப்பறையைப் பற்றி பேசுவது பயிற்சிக்கான கையேடு போல அமைந்திருப்பது இதுவே முதல் முறை. இந்தப் புத்தகம் பள்ளி ஆசிரியர்களுக்கானது என கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒதுக்கிவிட தேவையில்லை. படித்துப் பார்த்தால் அனைவருக்குமானது என்பது புரியும். இந்த நூல் வெளிவந்ததும் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கோத்தகிரியில் மாநில அளவிலான வாசிப்பு முகாம் நடத்தி இதனைக் கொண்டாடியது. மாணவர்களைக் கையாள முன்னெப்போதும் இல்லாத பேராயுதமாக இது விளங்குகிறது.

நா.மணி | அருஞ்சொல்
நா.மணி பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு. [email protected]

நன்றி: மின்னம்பலம்

நூல் : வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்
விலை : ரூ.₹120/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

விழியனின் “குறுங்…“ அனுபவ பகிர்வு – மு.ஜெயராஜ்

விழியனின் “குறுங்…“ அனுபவ பகிர்வு – மு.ஜெயராஜ்




நான் ஆசிரியராக இருந்தபோதிலும் சரி தற்போது தலைமையாசிரியராக இருக்கும் போதும் சரி கடந்த இருபது வருடங்களாக நான் பழகிக் கொண்டிருப்பது வளரிளம் பருவ மாணவர்களோடு தான்.

எட்டாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களை கையாளுவது எளிது. எந்த எதிர் கேள்வியும் இல்லாமல் சொல்படி நடப்பார்கள். ஆனால் ஒன்பது, பத்து, மற்றும் அடுத்த இரண்டு வருடங்களில் மாணவர்களின் நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படும்.

நல்லது-கெட்டது, சரி-தவறு, வேண்டியது-வேண்டாதது போன்ற அனைத்திலும் குழப்பமே எஞ்சி நிற்கும்.

நமது சமூக கட்டமைப்பில் வளரிளம் பருவ பெற்றோரில் பெரும்பாலானோர் பிள்ளைகள் சிறப்பாக படித்து மதிப்பெண்களை வாரி குவிக்க வேண்டும், எதிர்கேள்வி எதுவும் இன்றி சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று அவர்களின் வயதுக்கான இயல்புகளுக்கு முரணாக எதிர் பார்க்கிறார்கள். இந்த முரண்கள் நெகிழ்வுத்தன்மை இன்றி முற்றும் இடங்களில் எல்லாம் பிரச்சனைகள் முளைவிடுகின்றன.

பெற்றோர்கள் வளரிளம் பருவ குழந்தைகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயல்வதோ தோழமையோடு அனுகுவதோ மிக மிக அரிது.

ஆகவே, அவர்களுக்கான விஷயங்களை சினேகமான மொழியில் தோளில் கைபோட்ட படி உரையாடும் தொனியில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. விழியன் அவர்கள் எழுதியுள்ள “குறுங்…“ என்கிற இந்த நூல் நான் மேற்கூறியிருக்கும் அந்த தேவையை நூறு விழுக்காடு முழுமையாக நிறைவு செய்கிறது.

இந்த நூல் வளரிளம் பருவத்தினருக்கு மட்டுமன்றி வளரிளம் பருவத்தினரோடு தொடர்பில் உள்ள அனைவருமே வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.

விழியன் அவர்கள் தொடர்ந்து மாணவர்களோடு உரையாடி வருபவர். பள்ளி மாணவர்களை சந்திக்க தொடர்ந்து பயணித்த வண்ணம் உள்ளார். மாணவர் மையக் கற்பித்தல் சார்ந்து தொடர்ந்து களமாடி வருகிறார். அவரது பேச்சிலும் சரி எழுத்திலும் சரி ஒரு சினேகமான மொழி இழைந்தோடும்.

இந்த நூல் தொடராக “ தி இந்து தமிழ் வெற்றிக்கொடி “ மாணவர் நாளிதழில் வந்த போதே சில பகுதிகளை வகுப்புகளில் வாசித்து காண்பிக்குமாறு ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டேன்.

அறிவியலை மாணவர்கள் அனுகும் விதம் பற்றி அழகாக கூறியிருந்தார் ஆசிரியர். சக்கரம் உருண்டோடி சைக்கிளாக மாறி நமது தோள்களில் சுதந்திரம் என்கிற சிறகை பொருத்துவதை எல்லாம் தொட்டுக் காட்டி கூர்ந்து கவனிப்பதன் தேவையையும் அறிவியல் கற்பதன் அவசியத்தையும் அழகாக உணர்த்தி இருப்பார். தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டியது பற்றி எல்லாம் அழகாக கூறியிருந்தது “மலைப்பூ“வாக மணத்தது.

வரலாறை கண்டு பெரும்பாலானோர் அச்சம் கொள்ள காரணம் அதில் வரும் ஆண்டுகள் தான் என்று சரியாக கணித்து கூறியுள்ளார். வரலாறு என்றால் முதலில் “உள்ளூர் வரலாறு“ பற்றி அறிவதில் துவங்குங்கள் என்கிறார். வரலாறு படிப்பதோடு நில்லாமல் வரலாறு படைக்க வேண்டுமானால் “அரசியல் பழகு“ என்கிறார். “அய்யய்யோ அரசியலா?” என்று அலறும் பெரியவர்களே இருக்கும் காலத்தில் வளரிளம் பருவ குழந்தைகளுக்கே அரசியல் அறிவு வேண்டும் என்கிறார்.

அனைவருக்குமான உலகம் என்கிற பகுதியில் Inclusiveness பற்றி சிறப்பாக கூறியுள்ளார். எனது மாணவர்களில் ஒருவர் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க இயலாதவர். அவரை மாலை வேளைகளில் தூக்கி கொண்டு செல்வதற்கு பசங்க மத்தியில் அவ்வளவு போட்டி இருக்கும். உண்மையாகவே Inclusiveness ஐ சரியாக உணர்ந்து பரஸ்பர உதவி புரிபவர்கள் பள்ளி மாணவர்கள் தான்.

நூலாசிரியர் கணிதம் பற்றி வெற்றிக் கொடியில் தொடர் எழுதுவதோடு கணிதம் சார்ந்து குழந்தைகளோடு ஆன்லைன் உரையாடல் நடத்தி வருகிறார். எனவே கணிதம் பற்றி எழுதாமல் இருப்பாரா? கணக்கோடு சில மாணவர்களுக்கு ஏற்படும் பிணக்கை தீர்க்க ”பஞ்சாயத்து” பண்ணி இருக்கிறார்.

கேள்விகள் கேட்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்பாக கூறி உள்ளார். சில கேள்விகளுக்கு உடனே பதில் கிடைத்துவிடும் சில கேள்விகளுக்கு காலப்போக்கில் பதில்கள் கிடைக்கும். சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேட்பட்ட விடைகள் வரலாம் என அவர் அடுக்கிக் கொண்டே போவது சுவாரசியமாக இருக்கிறது.

புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க செல்வது பற்றி ஒரு பகுதி எழுதியுள்ளார். அவர் கூறியுள்ள சில நுணுக்கங்கள் மாணவர்களுக்கு நிச்சயமாக பயன்படும்.

நூறு தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட பயிலரங்கில் மேடைக்கு அழைத்த உடனேயே கைதூக்கியபடி நான் எழுந்து கொண்டேன். அங்கு என்னை CEO வாக (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) நடிக்க கூறினார்கள். அடுத்த இரண்டு நாட்களும் அனைத்து சக தலைமையாசிரியர்களும் வணக்கம் CEO சார் என்று சினேகமுடன் பேசினார்கள். ஒரு வினாடியில் அனைவருக்கும் தெரிந்தவனாகிப் போனேன். இதற்கு காரணம் உள்ளபடியே நூலாசிரியர் எழுதிய “மேடைக்கு முந்து” பகுதி தான்.

மாணவர்களை அறிவுத்தேடல் சார்ந்து முடுக்கிவிட்டு அந்த அறிவின் வடிகாலாக அவர்களை எழுதவும் ஊக்குவிக்கிறார். ஆம், பள்ளிகளில் “சிறார் இதழ்“ தொடங்குவது பற்றியும் அதில் எந்த எந்த பகுதிகள் இருந்தால் சிறப்பாக அமையும் என்பது பற்றி எல்லாம் அழகாக கூறி உள்ளார்.

எனவே இந்த நூல் குழந்தைகள் அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் நிறைந்தது. இந்த நூலை குழந்தைகள் வாசித்து முடிக்கும் போது அவர்களின் நடத்தையில் நிச்சயமாக விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என அடித்துக் கூறுவேன்.

மு.ஜெயராஜ், தலைமை ஆசிரியர்,