ஜான் ஸ்டீன்பெக்-ன் “கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH)” – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: பென்யாமின் ‘ஆடு ஜீவிதம்’ (தமிழில்) விலாசினி – இரா.சண்முகசாமி
மனிதன் போர்வையில் வாழும் மிருகங்களை காணவேண்டுமெனில் எதிர் வெளியீட்டின் ‘ஆடு ஜீவிதம்’ நூலை வாசியுங்கள் தோழர்களே. கொடூர மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன இன்னும் உயிர்ப்போடு.
பாலைவன விஷப்பாம்புகளெல்லாம் பெரும் கருணை கொண்டவை. அவைகள் சீறிப்பாய்ந்து வரும்போது நாம் பாலைவன மணலில் தலையை புதைத்து அமைதியாக படுத்திருந்தால் நம்மை எதுவும் செய்யாமல் அவை நம்மீது ஊர்ந்து சென்றுவிடும். அவைகள் சென்றபின் அவைகள் உரசிச் சென்றதால் ஏற்பட்ட எரிச்சல் மட்டும் தான் உடம்பில் தெரியும். ஆனால் மனித மிருகங்கள் தன் கண்பார்வையிலேயே கொடூர விஷத்தை வைத்துக்கொண்டு அலைவதை ஓர் அரசின் விதியாகவே பார்க்கலாம்.
நானும் சிறிய வயதில் அரபு நாடுகளில் நிறைய கொடூர சித்ரவதைகள் நடந்துள்ளதை கேள்விப்பட்டுள்ளேன். அதெல்லாம் எப்படி இருந்திருக்குமென்று இந்நாவலை வாசித்தவுடன் தான் உணர முடிந்தது.
நான்கு மணி நேரத்தில் வாசித்து முடித்தேன். வாசிக்கும்போது குரல் உடைந்து அழவேண்டும் போலிருந்தது. நாவலின் இறுதியில் அழுதேவிட்டேன்.
நீரும், உணவும் கொஞ்சம் கிடைத்தாலும் வாழலாம் என நினைப்போம். நீரே மூன்று நான்கு நாட்களுக்கு கொடுக்காமல் தடுக்கும் கயமத்தன மிருகங்களைத்தான் இந்நூலில் பார்த்தேன் தோழர்களே.
ஆடுகள் குடிக்க தாராளமாக நீரும், உணவும் கிடைக்கும். ஆனால் மனிதனுக்கு அந்த வசதி இல்லை. சரி ஆடுகள் குடிக்கும் தொட்டி நீரை குடிக்கலாம் என்று தலை கவிழ்ந்தால் முதுகில் சலார் என்று பெல்ட் விளாசும். கொடூர பசியாக இருந்தாலும் அப்படியே தான் கிடக்கனும். தன்னை கண்காணிப்பவனிடமிருந்து தெரியாமல் ஆடு குடிக்கும் தண்ணீரையும், ஆடு சாப்பிட்டு மீந்த கோதுமையையும் உண்ணும் வாய்ப்பு கிடைத்தாலே பேரின்ப காலமாகும்.
தோழர்களே நீங்கள் நம்புவீர்களா 3 ஆண்டுகள், 4 மாதங்கள், 9 நாட்கள் ஒருவன் குளிக்காமல் இருந்தால் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் அதுதான் உண்மை.
வளைகுடா நாடுகள் வாரி வழங்கும் சொர்க்கம் என்று படையெடுத்தவர்கள் ஏராளம். ஆனால் அதைவிட வாடி மடிந்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள் என்றே தெரிகிறது.
எவனையோ நம்பி பணம் கட்டி விசா எடுத்து வெளி மண்ணில் இறங்கி யாரோ வந்து அழைத்து போவார்கள் என்று காத்திருந்து ஏடிஎம் இயந்திரத்தில் முரட்டுத்தனமாக பணத்தை கொள்ளையடித்த கூட்டம் போல் விமான நிலையத்தை விட்டு வெளியே குழந்தைகள் போல் அப்பாவியாக நிற்கும் வேலை தேடி வந்தவர்களை திருட்டு கும்பல் கடத்திகொண்டு போய் பாலைவனத்தில் எவ்வித வீடும், தங்குவதற்கு குடிசையுமின்றி ஆடுகள் வாழும் பட்டியிலேயே வானமே கூரையாக கோடையின் கொடும் வெயிலுக்கும், இரவின் கடும் குளிருக்கும் தன் உடம்பை மணலில் காணிக்கையாக்கி அதிகாலை 5மணி முதல் இரவு 10மணிவரை ஆடுகளை மேய்த்தும், உணவளித்தும், ஒட்டகங்களுக்கு உணவு மூட்டைகளை சுமந்து கொட்டியும் களைத்துபோன ஒரு கேரள மனிதனின் உண்மை கதைதான் இந்த ஆடு ஜீவிதம் நூல் உருவானதிற்கு காரணம் தோழர்களே.
ஒரு சொட்டு நீரின்றி ஓரிரவு இரண்டிரவு அல்ல பலநாள் இரவு பகல் மனிதன் உழன்றிருக்கிறான் என்றால் இந்த உலகம் எதற்கு இன்னும் உயிரோடு இருக்கிறது. பாரதி சொன்னதுபோல் அழித்துவிட வேண்டும். அவ்வளவு கோபம் வருகிறது தோழர்களே.
ஒன்று மட்டும் புரியவில்லை. ஒருநாட்டின் குடிமகன் வேறொரு நாட்டில் ஏதோவொரு காரணத்திற்காக சென்றால் அவன் திரும்பி வரும்வரை தன் சொந்த நாடு கவனத்தில் கொள்ளாதா. விசா எடுத்து பயணித்தவன் என்ன ஆனான் என்று தன்னுடைய டிஜிடலில் குறித்து வைத்து தேவைப்படும்போது வெளிநாட்டு தூதரகத்தை தொடர்புகொண்டு கேட்காதா. அல்லது உறவினர்கள் புகார் அளித்த பின்பாவது துரிதமாக செயல்பட்டு தன் நாட்டு குடிமகன் எங்கே? அவனை உடனே அனுப்பவில்லையெனில் சம்பந்தப்பட்ட நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க சொந்தநாடு களத்தில் இறங்காதா என்று அப்பாவியாக மனம் கேட்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. மதவெறி எம்மண்ணிலிருந்தாலும் அது மதவெறியில் உலகம் முழுவதும் ஒற்றுமையாகவே இருக்கிறது. மக்களாகிய நாம்தான் இந்த பிற்போக்கு மனிதத்தன்மையற்ற முகங்களிடமிருந்து நம் மக்களை காக்க வேண்டியிருக்கு தோழர்களே.
ஆசிரியர் பென்யாமின் எழுத்தில் விலாசினி அவர்களின் அருமையான மொழிப்பெயர்ப்பில் இந்நூலை மிகவும் விரைவாக வாசிக்க முடிந்தது. 46ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி அலமாரியில் அடுக்கியதோடு மறந்து போனேன். தோழர் Samsu Deen Heera அவர்களின் அருமையான விமர்சனத்தில் அவருக்கு சபதம் கொடுத்த 24 மணி நேரத்துக்குள் வாசித்து முடித்தேன் தோழர்களே.
உலகில் வெளிநாட்டில் வேலை செய்ய செல்லும் ஒவ்வொரு உயிரும் இனி பாதுகாப்பாக இருக்கனும்னா அதற்கான விழிப்புணர்வு வேணும்னா இந்நூலை அவசியம் வாசியுங்கள் தோழர்களே. ஆடு வாழும் வாழ்க்கையை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆடாகவே மாறி வாழ்ந்த மனிதனின் கதையை பார்க்கனும்னா அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!! தோழர்களே!!!
புதுச்சேரி
ஆசிரியர் : பென்யாமின்
தமிழில்: விலாசினி
விலை : ரூ.₹250/-
வெளியீடு : எதிர் வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் ”கிளியும் அதன் தாத்தாவும்” – இரா.சண்முகசாமி
நூல் : கிளியும் அதன் தாத்தாவும்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
விலை : ரூ.60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : செப்டம்பர் 2022
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
ஆசிரியருக்கு பெருந்தொற்று காலத்தில் இணையத்தில் கிடைத்த கதைகளை நமக்குத் தேவையானதை மட்டும் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.
பீகார் பகுதிகளில் வாயில் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்த பெரிசுகளிடமிருந்து பெறப்பட்ட மைதிலி மொழி சிறார் கதைகள். இதில் போஜ்புரி, மைதிலி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்று ஐந்து மொழிகளில் வழங்கப்பட்டவை.
இக்கதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டது. தமிழ்ச் சிறார்களுக்கான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அதிலும் நீதிபோதனைகள் உள்ளே வராமல் வெட்டிவிட்ட பின்பே வழங்கியிருக்கிறார். குழந்தைகளின் வயிறு குலுங்கும் வண்ணம் கதைகள் சொல்லலாம். நான் ‘நகர, கிராமத்து காக்கா’ கதையை வாசித்து குலுங்கி சிரித்துவிட்டேன். பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்தவர் ஒரு மாதிரியாக பார்த்தார். இது என்னுடைய வாசிப்பில். உங்களுக்கு எப்படி இருக்குமோ எனக்குத் தெரியாது தோழர்களே.
அந்தக் கதையின் சுருக்கம்-
கிராமத்து காக்காவுக்கு எதுவும் கிடைக்காம நகரத்துக்கு வந்து நகர காக்காவிடம் உதவி கேட்க, நகர காக்கா கிண்டல் மட்டுமே செய்தது. அதாவது நாம பேசுவோமே கிராமத்தான் என்று அதுபோல. அப்போது ஒரு சிறுவன் கையில் ஜாங்கிரியுடன் வர நகரத்துக் காக்கா தன்னுடைய திறமையை பீத்துவதாக எண்ணி அவனிடம் பிடுங்க அருகே சென்றது. சிறுவன் காகத்தை பார்த்து ஜாங்கிரியை வாயில் போட்டுக்கொண்டான். நகர காக்கா ஏமாந்தது. இப்போது கிராம காக்கா அதே சிறுவனின் அருகில் சென்று அவன் தலையில் தன் அலகால் லேசாக தட்டியது. ஆ என்று சிறுவன் வாய் திறக்க ஜாங்கிரி கீழே விழ தூக்கிகொண்டு பறந்தது. யார் திறமைசாலிங்க என்று தயவுசெய்து நீதியை குழந்தைக்கு சொல்லக்கூடாது. மீதியை புத்தகத்தில் காண வாரீர். எழுத்தாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இதில் 16 கதைகள் உள்ளது. வாசிப்போம். குழந்தைகளை வாசிக்க வைப்போம் தோழர்களே.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
மதுரை புத்தகக் கண்காட்சி அனுபவம் – இரா. சண்முகசாமி
புத்தக வாசிப்பு அனுபவம் மட்டுமல்ல புத்தகக் கண்காட்சியே ஒரு வாசிப்பு அனுபவமாக இருந்ததை தங்களோடு பகிர்கிறேன் தோழர்களே!
03.10.2022 மதுரை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் புத்தகங்கள், தோழர் Amalarajan Arulraj அவர்களின் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அந்நிகழ்வில் குழந்தைகளுக்காக நான் பாடல் பாட தோழர் வாய்ப்பளித்தது, அவர் அளித்த அவரின் ஒரிகாமி நூல் பரிசு, சகலகலா வல்லவர் தோழர் #சதமிழ்ச்செல்வன் அவர்களின் வாசிப்புத் தேடல் கலை குறித்த உரை என முக்கனிச் சுவையாக நிறைந்திருந்தது.
முக்கியமான நிகழ்வை முதலில் சொல்லிவிடுகிறேன் அந்தக் குழந்தையின் பெயர் மாறவர்மன் செல்லைய்யா என நினைக்கிறேன். ஆஹா காகம்-நரி கதையை மூன்றாவது கட்டத்துக்குக் கொண்டு சென்றான். ஆம் நரியையும் உழைக்க வைத்து அதையும் பாட்டியிடம் வடை வாங்க வைத்து கதைக்கு புதிய உயிர் கொடுத்தான். நான், உழைப்புச் சுரண்டலை ஏமாற்றிய நரியை காகங்கள் அனைத்தும் கூடி காலி செய்ததை சொல்ல இருந்தேன். அப்போது “குழந்தைகள் யாராவது இந்தக் கதையை கூறுகிறீர்களா?” என்று நான் கேட்டபோது மைக்கை வாங்கி அழகியலை உருவாக்கினான் மாறவர்மன். சபாஷ் என்று அவனை உச்சிமுகர்ந்தேன்.
அடுத்து,
தமிழகத்தில் முதல் முறையாக புத்தகக் கண்காட்சி குளிரூட்டப்பட்ட மாபெரும் அரங்கில் நடந்தது எனில் அது மதுரை மண்ணில் தான் தோழர்களே. அது வாசகர்களுக்கும், குறிப்பாக புத்தக அரங்கில் தொடர்ச்சியாக பணிபுரிபவர்களுக்கும் மிகுந்த மனநிறைவாக இருந்தது. அதற்கு காரணம் மதுரை மண்ணின் செங்கொடியின் புதல்வன் தோழர். வெங்கடேசன் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் பங்களிப்புமே காரணம் என்று தெரியவந்தபோது அவர்கள் இருவருக்கும் ஒரு ராயல் சல்யூட்.
இன்னும் நிறைய அனுபவங்களை பகிரலாம். இன்ப அதிர்ச்சியாக தோழர் Venpura Saravanan அவர்களும், அவர்களின் இணையரையும் சந்தித்தது; அவர்கள் அளித்த உபசரிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
தூங்கா நகரின் புத்தகக் கண்காட்சியின் அரங்குகளில் இரண்டு நாட்கள் தூங்காமல் புத்தகங்களை வாங்கி குவித்த Visakan Purushothaman தோழரை இடையில் சந்தித்து இடையிலேயே விட்டுவிட்டு வந்தேன். அவர் இன்னும் அங்கே இருக்கிறாரா இல்லை புதுச்சேரி வந்துவிட்டாரா என்று தெரியவில்லை.
தோழர் Mohammed Sirajudeen அவர்கள் வேறெங்கேயும் புத்தகங்கள் வாங்காமல் பாரதி புத்தகாலயத்தில் மட்டுமே வாங்கவேண்டும் என்பது போல நிறைய புதிய புதிய தலைப்புகளில் புத்தகங்களை குவித்து வைத்திருந்ததால் அங்கே புத்தகங்களையும், கூடுதலாக முகநூல் தோழர் Mohan Kumara Mangalam அவர்களின் நூல் ‘வைகைவெளி தொல்லியல்’ நூலை ‘கருத்து-பட்டறை’யிலும் மட்டுமே வாங்கிவிட்டு மற்ற அரங்குகளை காட்சிப்பொருளாக மட்டுமே பார்க்க நேரிட்டது. வீட்டில் இணையரின் கட்டுப்பாடும் கையை கட்டிப்போட்டது.

நூல் அறிமுகம்: சு.உமாமகேஸ்வரியின் ‘உரையாடும் வகுப்பறைகள்’ – இரா.சண்முகசாமி
நூல் : உரையாடும் வகுப்பறைகள்
ஆசிரியர்கள் : சு.உமாமகேஸ்வரி
விலை: ரூ.80/-
பக்கம் : 88
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் , (பாரதி புத்தகாலயம்)
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
பேராசிரியர் #சமாடசாமி அவர்களின் மிகவும் அருமையான அணிந்துரையே தோழர் உமா அவர்களின் நூலுக்கு சிறந்த அங்கீகாரம்.பேராசிரியரின் சிறப்பான பாராட்டுரையுடன் மிகவும் சிறப்பாக நூல் தன் பயணத்தை தொடங்கியது.
ஆசிரியர் என்பவர் தொடர்ந்து வாசிக்கும் பண்புடையவராக இருக்கவேண்டும். அப்போதுதான் உலகை தன்முன் கொண்டு வந்து தன்னிடம் கற்றுக்கொள்ள வரும் குழந்தைகளுக்கு காண்பிக்க முடியும். இங்கே ஆசிரியர் தோழர் உமா மகேஸ்வரி அவர்கள் குழந்தைகளின் உலகில் நுழைந்து தானும் குழந்தையாகி சக குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து வருகிறார் தன் வாசிப்பாலும், தன் எழுத்தாலும், தன் குழந்தைகளிடம் கற்றுக்கொண்டதாலும்.
குழந்தைகளிடம் கற்கும் ஆசிரியரே குழந்தைகளின் நெஞ்சினில் குடிபுக முடியும்.
அப்பப்பா எவ்வளவு கற்றல் அனுபவங்களை கொண்டுள்ளார் ஆசிரியர்! மனம் திறந்து உரையாட ஏங்கும் குழந்தைகளுக்கு அவ்வாறே நடக்கிறார்.
‘நீங்க ட்ரெயினிங் மிஸ்ஸா?’
‘ஏம்பா கேட்கிற?’
‘இல்ல மிஸ் ட்ரெயினிங் எடுக்கிற மிஸ்ஸூங்க தான் எங்களோடு சகஜமாக பேசுவாங்க. நீங்களும் அப்படியே பேசறீங்களே அதான் கேட்டேன் மிஸ்’. எவ்வளவு ஏக்கம் குழந்தைகளிடம்.
‘மிஸ் எங்க கிளாசுக்கே வரமாட்டேங்கிறீங்க’ என ஏங்கும் மாணவர்கள், ‘நீங்கள் எம் பொண்ணுக்கு வகுப்பாசிரியராக வராததால் பள்ளிக்கூடம் வரமாட்டேங்கிறாள்’ குழந்தையின் அழுகையால் பெற்றோரின் புலம்பல், பள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவரை விடுப்பு எடுக்க வைக்க ரகசியமாய் ஆசிரியருடன் பேசும் பெற்றோர், மாதம் ஒருமுறை புதிய மாணவர் தேர்தல் அடடா என்ன அற்புதமான சம வாய்ப்பு உண்டாக்கல்! இப்படி ஏராளமான அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்.
இந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் ஆசிரியர் நுழைந்துவிட்டால் சிலபஸ் எல்லாம் தூசு. அதாவது சிலபஸை கட்டிக்கொண்டு அழவேண்டாம் என்பதே.
குழந்தைகள் வேறெந்த ஆசிரியரிடமும் செல்லாமல் தனக்கு பிடித்த ஆசிரியருடனே சுற்றிச் சுற்றி வருகிறார்கள் என்றால் அங்கே பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் கூறுவது போல் ‘ஒரு வாய் பல காது’ என்பது மறைந்து பல வாயும், பல காதுகளுமாய் பிறந்து உற்சாகமாய் உறவாடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
ஆசிரியர் உமா அவர்கள் குழந்தைகளுடன் அரசியல் பேசுகிறார், வாசிப்பு உலகை விரிக்கிறார், வகுப்பறையில் மாணவர்களை ஆசிரியர்களாக மாற்றி மாணவராக வகுப்பறையில் உட்கார்ந்து கற்கிறார், சோகமான உள்ளங்களுக்கு மருந்திடுகிறார், மனம் திறந்து பேச தன் ஆசிரிய உலகை மிக அகலமாக திறந்து வைத்திருக்கிறார். இப்படி ஏராளம் ஏராளம் அவருடைய கல்வி உலகம்.
இந்நூலை படித்தவுடன் ஆசிரியர் உமா அவர்களின் மாணவராக அவருடைய வகுப்பில் உட்கார்ந்து படிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக எழுந்தது.
பள்ளியில் குழந்தைகளுடனும், சமூகத்தில் கல்விமுறையில் இருக்கும் சிக்கலை அவிழ்க்க தயக்கமின்றி தன் வாதத்தை சமூக ஊடகம் மற்றும் பல்வேறு ஊடகங்களின் வழியில் வெளிப்படுத்துவது என அவர் அயராது இயங்குகிறார்.
ஆசிரியர்களுக்கு இருக்கும் அற்புதமான வாய்ப்பு வாசிப்பு. வாசிக்க தெரிந்த ஆசிரியர்களால் மட்டும்தான் மாணவர்களின் உள்ளங்களில் வாடகையின்றி நிரந்தரமாக தங்க முடியும்.
மாணவர்களுக்கு பாடப் புத்தகமும், நோட்டும் தற்காலிக குடியிருப்பே. அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பை அதாவது பரந்து விரிந்த இவ்வுலகில் எங்கும் பறந்து திரிய நிரந்தர சிறகை உருவாக்குவதற்காகவும், நமக்காகவும் நாம் வாசிக்க வேண்டும் ஆசிரிய நண்பர்களே!
தோழர் உமா மகேஸ்வரி அவர்களே, உரையாடலால் உண்டான வகுப்பறை அனுபவங்களை நூலாக தந்ததற்கு தோழமையுடன் தங்களின் கைகளை குலுக்கி நன்றி தெரிவிக்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
– இரா.சண்முகசாமி
நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி
நூல் : ரயிலே ரயிலே… (வரலாறு – அறிவியல் – தொழில்நுட்பம்)
விலை: ரூ.170/-
ஆசிரியர்கள் : சு.ஹரிகிருஷ்ணன், முனைவர் பெ.சசிகுமார்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : பிப்ரவரி-2022
Email : bharathiputhakalayam@gmail.com
www.thamizhbooks.com
ரயிலை நேசிக்காத குழந்தைகள் உண்டா. சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ரயிலை பார்த்தால் அவர்களின் மனம் சிறிய குழந்தைகளின் உயரத்திற்கேச் சென்று உயர பறக்கும். அந்தளவிற்கு ரயிலை நேசிக்காதவர்களே இல்லை எனலாம்.
ரயிலின் வெளித்தோற்றத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அதன் முழுத் தகவலும் கிடைத்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தானே செய்யும்.
ஆம் இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும், பள்ளி ஆசிரியரும், அவருடைய பள்ளி மாணவர் ஒருவரும் அம்மாணவனின் வீரதிர செயலுக்காக விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கெடுக்க கோவையிலிருந்து இரண்டு நாள் ரயில் பயணத்தில் டெல்லி செல்லும் வழியில் உரையாடல் நடத்துவது போன்று மிக இயல்பாக எழுதப்பட்ட நூல் இது என்றால் மிகையல்ல.
நானெல்லாம் ஆரம்பத்தில் ரயிலில் உட்கார்ந்து செல்லும் சீட் மட்டுமே இருக்கும் என்று நீண்ட காலம் எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தை நொறுக்கும் விதமாக இந்தியன் வங்கி ஊழியர் தோழர் ஜெ.மனோகர் அவர்கள் ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடத்தி வரும் ‘தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு’ நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகளோடு செல்வதற்கான வாய்ப்பாக நாகர்கோயில் மாநாட்டுக்காக என்னையும் பல நண்பர்களுடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். “ம் சரி எவ்வளவு நேரம் உட்கார்ந்து போகப் போறோமோ” என்று நினைத்து ரயிலில் ஏறினேன். எனக்கு ஒரு சீட்டை காண்பித்தார். நானும் உட்கார்ந்துவிட்டு என்னோடு இன்னும் மூன்று நான்கு பேர் உட்கார வருவார்கள் என்று சீட்டின் ஓரமாக உட்கார்ந்திருந்தேன். ‘என்ன ஓரமா உட்கார்ந்திருக்கீங்க இந்த சீட் முழுவதும் உங்களுக்குத்தான். இரவில் நன்றாக தூங்கலாம் இது ‘படுக்கை சீட்’ என்று கூறினார். அப்படியே ஆச்சரியத்தில் “என்னது தூங்கிகிட்டு போற சீட்டா, இப்படி ஒரு வசதி ரயிலில் இருக்கிறது என்றே இவ்வளவு நாளா தெரியாமல் இருந்திருக்கேனே” என்று ஆச்சரியப்பட்டேன். அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக பயணம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தூரமும் ரயிலையே தேர்ந்தெடுத்தேன். இப்போது வரை ரயில் பயணம் என்றால் அது எவ்வளவு தொகையா இருந்தாலும் செல்போனில் டிக்கெட்டை எடுத்து விடுவேன். அப்படித்தான் ஒருமுறை ஏல முறையில் ரயிலில் நிமிடத்திற்கு நிமிடம் டிக்கெட் விலை எகிறிடும் வகையில் இருந்த முறையில் சாதாரண நாளில் ரூ.1300 இருக்கும் டிக்கெட் அன்று இணைய ஏலத்தில் மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கு ஏசி கோச்சில் ரூ.5,000 கொடுத்து டிக்கெட் எடுத்தேன். ரயில் பயணம் அவ்வளவு ஈர்ப்பு என்றால் பார்த்துக்குங்களேன்.
இப்போ டிக்கெட் எடுத்தாலும் GST, கேன்சல் செய்தாலும் GST என்று அடுத்த ஏலச்சீட்டு நடத்த ஆட்சியாளர்கள் தயாராகி விட்டார்கள்.
சரி சரி நம்ம புராணத்தை அப்புறம் வச்சிக்குவோம். விஷியத்துக்கு வர்றேன்.
ரயில் எப்படி இயங்குகிறது;
தண்டவாளங்களில் கோளாறு இருந்தால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்; சிக்னல்கள் ஒரு மஞ்சள் விளக்கு, இரண்டு மஞ்சள் விளக்கு, சிவப்பு இதெல்லாம் எதைக் குறிக்கிறது; தண்டவாளம் வளைவா இருக்கிற பகுதிகளில் ரயில் கவிழாமல் செல்வது எப்படி; ஒற்றை தண்டவாளத்தில் ரயில்கள் எதிரேயும், பின்னாடியும் வரும் ரயில்கள் எப்படி ஒழுங்கு குலையாமல், எதிரே வரும் ரயிலுக்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஓரம் ஒதுங்கி நின்று செல்கிறது; ரயில்வே ஓட்டுநர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்; சரியான பிளாட்பாரத்தில் எப்படி ரயிலை நிறுத்துகிறார்கள்; ரயில் எஞ்சினில் பிரேக் பிடித்தால் எல்லா பெட்டிகளும் எப்படி ஒரே நேரத்தில் நிற்கிறது;
(ரயிலில் பிரேக் சிஸ்டம் என்பது எஞ்சினுக்கு எதிர்புற மின்சாரத்தை கொடுத்தால் சக்கரம் முன்னோக்கி சுற்றுவதற்குப் பதில் ரீஜெனரேட் முறையில் பின்னோக்கி சுற்றுவது போன்று அமைத்து ரயிலில் பிரேக் பிடிக்கிறார்கள் என்று இப்போதுதான் புதியதாக கற்றுக்கொண்டேன்); ரயில்வே ஊழியர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்; ரயிலின் வேகம் எப்படி மாறுபடுகிறது; பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் சென்று ரயில் நிற்கும் போன்ற எண்ணற்ற கேள்விகளை பள்ளி மாணவன் கேட்பது போல் அமைந்த உரையாடல் வழியில் மிகவும் அருமையாக எழுதப்பட்ட இந்நூலை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.
ஒரே ஒரு தகவல் மட்டும்
ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கிவிட்ட பின்பு சற்று ஓய்வு கிடைக்கும் என இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் இந்நூலை படித்தவுடன் மிகவும் அதிர்ந்தே போனேன். ஆமாம் ரயில் செல்லும்போது ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் எஞ்சினில் இருக்கும் ரயில் இயக்கும் கணினி தொழில்நுட்பத் திறையில் அது கேட்கும் தகவலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் ரயிலில் ஓட்டுநர் இல்லையென்று ரயில் சந்தேகப்பட்டு ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அதற்கும் பதில் இல்லையெனில் தானாகவே பிரேக் போட்டு ரயில் நின்றுவிடும். எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் இது என்று ஆச்சரியப்பட்டேன். ஓட்டுநர்கள் (லோகோ பைலட்டுகள்) அவ்வளவு தூரம் கண்ணுறங்காமல் ரயிலை இயக்கும் ரயில் எஞ்சினில் ஓட்டுநர்களுக்கு என்று ஒரு கழிவறை இல்லையேயென்பது எவ்வளவு வேதனை. அவசரமாக வந்துவிட்டால் அடக்கிக்கொண்டு அடுத்த ரயில் நிலையம் வரை பொறுத்திருக்கனும். அதுவும் ஒருநிமிடம், ரெண்டு நிமிடத்திற்குள் ஓடிவந்துவிட வேண்டும். இவ்வளவு கொடுமையான சூழலிலும் ரயில் ஓட்டுநர்கள் பயணிகளை மிகவும் பத்திரமாக பயணிக்க உதவுகின்றனர்.
இன்னும் இன்னும் நிறைய பொக்கிஷங்களை தென்னக ரயில்வே முதன்மை லோகோ ஆய்வாளர் தோழர் சு.ஹரிகிருஷ்ணன் அவர்களும், இஸ்ரோ விஞ்ஞானி தோழர் பெ.சசிகுமார் அவர்களும் மிக எளிய மொழியில் நமக்கு வழங்கியிருக்கின்றனர்.
அத் தோழர்களுக்கும், நூலை மிகச்சிறப்பாக வெளியிட்ட பாரதி புத்தகாலயத் தோழர்களுக்கும், இந்நூலை எழுத வழிகாட்டிய தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் உரித்தாக்குகிறேன்.
அனைவரும் இன்றே மேற்கண்ட முகவரியில் நூலை புக் செய்து வாசித்து உள்ளம் மகிழுங்கள் தோழர்களே!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
செல் : 9443534321.
நூல் அறிமுகம்: அ.கரீம் ‘முகாம்’ – இரா.சண்முகசாமி
நூல் : முகாம்
ஆசிரியர் : அ.கரீம்
விலை : ரூ. ₹300
வெளியீடு : எதிர் வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
‘முகாம்’ அய்யோ இந்த நாவலை ஏன் படிக்க எடுத்தேனோ தெரியவில்லை. 364 பக்கத்தில் விடுதலை போராட்ட கால பகுதியில் மட்டும் ஆனந்தக் கண்ணீரும், மற்ற ‘முகாம்’ இடங்களில் எல்லாம் வெம்பிய கண்ணீர் மட்டுமே வந்து கொட்டுகிறது. படித்து முடித்து இன்னும் வேதனையிலிருந்து மீளவில்லை. அதனால் முழு பதிவும் போட முடியவில்லை. சற்று நிதானத்திற்கு வந்தவுடன் தான் பதிவுக்கு கட்டை விரல் போகும்.
அதுமட்டுமல்ல சாமானிய எளிய உழைக்கும் மக்கள், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் அதாவது இந்து மதமாகவே இருந்தாலும் முகாமில் அடைபடுவது உறுதி என்பதாகவே நமக்குத் தோன்றும். தோழர் Samsu Deen Heera அவர்களின் ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நூலை வாசித்தவர்கள் அசாமில் 19 லட்சம் மக்கள் முகாமில் அடைபட்டது புரியும். அதேபோல் குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் வில்லங்கம் வந்தால் அப்போது தோழர் Kareem Aak அவர்களின் முகாம் நாவலில் சொன்னது போல் எல்லோருக்கும் நடக்கும். விரைவில் முழு பதிவுடன் வருகிறேன் தோழர்களே. இப்போதைக்குத் தோழர் Kareem Aak அவர்களின் கைபிடித்து உச்சி முகர்கிறேன் அவரின் முதல் நாவலிலே நெஞ்சத்தை உருக்கிப் பிழிந்ததால்.
இரா.சண்முகசாமி
புதுச்சேரி