நூல் வெளியீடு : புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு.
சமூகநீதிப் பார்வையுடன் கொள்கைகளை வகுக்கிறோம்
சென்னை, மே 30- கேரள அரசின் கொள்கைகள் சமூக நீதி பார்வையுடன் வகுக்கப்படுகிறது என்று கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கேரள மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து, மகளிர் ஆணைய தலைவர் சதி தேவி ஆகியோருக்கு கேரள சமாஜம் சார்பில் ஞாயிறன்று (மே 29) வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குச் சமாஜத்தின் செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இரா.சிந்தன் தமிழில் மொழி பெயர்த்துள்ள பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான “புதிய கேரளத்திற்கான தொலை நோக்கு” என்ற நூலை அமைச்சர் பிந்து வெளியிட சமாஜத்தின் தலைவர் எம்.சிவதாசன் பிள்ளை பெற்றுக் கொண்டார். பின்னர் அமைச்சர் பேசுகையில், கேரளாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தத் தொலைநோக்கு திட்டம் தீட்டப் பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 6.8 லட்சம் குழந்தைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 141 பள்ளிகளின் கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு மாற்றியமைத்துள்ளோம். 4,752 பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆயிரம் பள்ளிகளில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 45,000 வகுப்பறைகள் உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்டவையாக மாற்றப் பட்டுள்ளன.
11,272 ஆரம்பப் பள்ளிகளில் தொடக்க நிலை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களை ஏற்படுத்தியுள்ளோம். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடங்கப்பட்டு 395 பள்ளிகளுக்கு தலா 3 கோடி ரூபாயும், 444 பள்ளிகளுக்கு தலா 1 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 1,19,054 மடிக்கணினிகள், 69,943 புரொஜெக்டர்கள், 4,578 கேமராக்கள், 4545 தொலைக்காட்சி பெட்டிகள், 4611 பிரிண்டர்கள், 23,098 திரைகள், 4720 இணைய கேமராக்கள், 1,00,472 ஸ்பீக்கர்கள் 1 முதல் 12 ஆகியவை 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிதி ஆயோக் தரவரிசையில் தரமான பள்ளிக் கல்வி யை வழங்கும் மாநிலமாகக் கேரளம் விளங்குகிறது.
உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மாநிலத் தின் வளர்ச்சியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசின் கொள்கை கள் மக்களின் பல்வேறு வர்க்கங்களுடைய பிரச்சனைகளையும், சமூக பிரச்சனைகளையும் கணக்கில் கொண்டு சமூக நீதி பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் இதர ஏழை மக்களை மனதில் கொண்டு கொள்கைகள் வகுக்கப் படுகின்றன. நவீன காலகட்டத்தில் , கல்வி முன்னேற்றம் அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் அவசியமாகும். வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதன் மூலமே அந்த இலக்கை அடைய முடியும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தியதன் மூலம் பொதுக் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பின்பு கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் தொடர்ச்சியாக உயர்கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத்தை வலிமைப் படுத்தும் நடவடிக்கையின் வாயிலாக வருமானம் குறைவான குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டங்களில் வழங்கப்படும் உதவி 600 ரூபாயிலிருந்து 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டங்களின் நலன் களைப் பெறுவோர் எண்ணிக்கை 59.5 லட்சமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப் பட்ட ஓய்வூதியம் பரவலான மக்களுக்கு வழங்கப்படுகிறது. தரமான மருத்துவம், கல்வி வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நவ கேரளத்தில் யாரும் பட்டினியில் வாடக் கூடாது என்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உணவகங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும் அங்கு தயாரிக் கப்படும் உணவுகளில், 10 விழுக்காடு உணவுப் பொட்டலங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. ஒரு சாப்பாடு 20 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை இடது ஜனநாயக முன்னணி அரசு அமல்படுத்தி வருகிறது என்றார். இதில் கேரள மாநில மகளிர் ஆணைய தலைவி சதிதேவியும் பேசினார். சமாஜத்தின் பொருளாளர் சசிதரன் நன்றி கூறினார்.
Bharathi Puthakalayam
7, Elango Salai.
Teynampet.
Chennai 600 018
044 24332424
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 8 : கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் ! – இரா. சிந்தன்
1957 ஆம் ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. இது உலகம் முழுவதுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக மாறியது. இந்த வெற்றிக்கு பின் 1958 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு அமிர்தசரசில் கூடியது.
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 62 லட்சம் மட்டுமே. 1957 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகள் 12 கோடியாக இருந்தது.
பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் வந்தார்கள். எனவே நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி மாறியது. சென்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘புரட்சிகர எதிர்க்கட்சி’ என்ற நிலைப்பாடு நல்ல பலனைக் கொடுத்தது.
கவனமான மதிப்பீடுகள்
- தென் மாநிலங்களில் ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் கட்சி சிறு பின்னடைவுகளை எதிர்கொண்டபோதிலும், கேரளத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது மிக முக்கியமான சாதனையாகும். இருப்பினும் கேரளத்தில் கிடைத்த வெற்றியைப் பற்றி, தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மிகவும் கவனமான மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.
- இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றது என்ற போதிலும், நாட்டில் பெரும்பான்மை மக்களுடைய ஆதரவைப் பெறுவது சாத்தியமாகவில்லை. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 48% மட்டுமே காங்கிரஸ்கட்சி பெற்றிருந்தது.
- இப்போதைய கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருவாங்கூர், கொச்சி மற்றும் மலபாரில் காங்கிரஸ் கட்சியினால் பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே சமயம் இந்தப் பகுதியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் கம்யூனிஸ்ட்இயக்கத்தின் பின் நின்றார்கள்.
- கேரள மாநில பகுதிகளில் தேசிய இயக்கத்தின் முகமாக கம்யூனிஸ்ட் தலைவர்களேஇருந்தார்கள்.
- விவசாயிகள் பிரச்சனைகளையும், மலையாள தேசிய இன பிரச்சனைகளையும்அறிவியல் பார்வையோடு முன்னெடுத்த காரணத்தால், கம்யூனிஸ்ட் கட்சி,கேரளத்தை ஒரு மாநிலமாக அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்றது.
- இருப்பினும் கூட, கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்த மக்கள் ஆதரவும் ஒரு சிறுபான்மையான அளவிற்கே இருந்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 40% ஆகும். ஆனால் தேர்தல் முறையின் கரணமாக, இந்த வாக்குகளைக் கொண்டே அதனால் 52% இடங்களில் வெற்றிபெற முடிந்தது.
‘மத்தியில் காங்கிரசின் சிறுபான்மை அரசு வந்ததைப் போலவே கேரள மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை அரசு ஆட்சிக்குவந்தது’ என்றுதான் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அதுவே சரியான மதிப்பீடும் கூட.
ஆட்சியை தொடர முடியுமா?
இந்திய ஆளும் வர்க்கங்கள் மேற்சொன்ன வெற்றியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில், கரள மாநில அரசாங்கம், அரசமைப்பின் 365 வது பிரிவினை பயன்படுத்தி கலைக்கப்பட்டது.
5 வது மாநாடு நடைபெற்ற காலத்திலேயே கல்வி மசோதாவிற்கு எதிராகவும் விவசாய உறவுகள் மசோதாவிற்கும் எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் வேலையை காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டிருந்தது. பின்நாட்களில் அது முஸ்லிம் லீக், கிறித்துவ குருமார்கள் மற்றும் மேல்தட்டு சாதி தலைவர்களோடு இணைந்து ‘விமோசன சமரமாக’ (விடுதலைப் போராட்டமாக) முன்னெடுக்கப்பட்டது.
முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்குள்ளாக ஒரு மாநில ஆட்சியை தொடர்ந்து நடத்துவதை ஆளும் வர்க்கங்கள் அனுமதித்திடுமா ? என்ற கேள்வி அப்போது கட்சிக்குள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தது.
‘அசாதாரண மாநாடு’ என்று அழைக்கப்படும் ஐந்தாவது மாநாட்டில் கட்சியின் அமைப்பு விதிகளை மேம்படுத்துவது பற்றி கூடுதலாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருவைப் பற்றி முற்போக்கான மதிப்பீட்டை எடுத்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை முடிவு செய்வதற்கு ‘திருத்தல்வாதிகள்’ முயற்சித்தார்கள். இந்த திருத்தல்வாத போக்குகள் தொடர்ந்தது, பின்நாட்களின் கட்சி பிளவிற்கு வழிவகுத்தன.
இ.எம்.எஸ் வெளிப்படுத்தும் கவலை
கேரள சூழல் பற்றிய ஒரு தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், கேரளாவில் நடந்துவரும் மாற்றங்களை அந்த மாநாடு சரியாக உள்வாங்கிடவில்லை. இதுபற்றி தோழர் இ.எம்.எஸ் கவலையுடன் இவ்வாறு பதிவு செய்கிறார், “”ஐந்தாவது மாநாடு இதில் எதைப்பற்றியும் விவாதிக்கவில்லை. மாநாட்டின் முடிவுகளில் மிக முக்கியமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு மறுப்பு அறிவிப்பை மட்டும் வெளியிடுவது என்பதுதான். அதாவது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியான வழிமுறைகளையே மேற்கொள்ளும் என்றும் ஒரே கட்சியின் தலைமையை ஏற்படுத்தாது என்றும் அறிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் பின்னணியில் கம்யூனிசத்தை நிலைநாட்டின அமைதியான சோசலிச புரட்சி என்ற சமூக ஜனநாயக நிலைப்பாடு இருந்தது வெளிப்படை”
‘சோசலிசத்தை நோக்கிய பயணம் அமைதியான முறையில் இருக்க வேண்டும். அதே போல கட்சி ஏற்படுத்த விரும்புகிற அரசியல் அமைப்பில், ஒரே கட்சியின் தலைமை என்ற நிலைமைக்கு இடமில்லை’ ஆகிய கருத்துக்கள் சரியானவையே ஆனால் கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாநில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் ஆளும் வர்க்கத்தின் அக்கிரமான முயற்சிகளை பற்றி கவனம் செலுத்த முடியாததற்கு திருத்தல்வாதப் போக்கே ஒரு காரணமாகும்.
ஏகாதிபத்தியமும், கேரள அரசாங்கமும்
கேரளத்தின் நிலைமைகளைப் பற்றிய கூடுதலான கவலையை தோழர் இ.எம்.எஸ் வெளிப்படுத்தியிருப்பது முக்கியமானது. கேரளாவில் அமையப்பெற்ற மாநில ஆட்சிக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்தன. அதனால் முதலாளித்துவ – நிலவுடைமைக் கொள்கைகளின் வரம்பிற்கு உட்பட்டு, ஒன்றிய அரசு வகுத்த கொள்கைகளுக்குள்ளாகவே செயல்பட முடியும். ஆனாலும், கேரள அரசு பல முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகள் – தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை சாத்தியமாக்கியது. காங்கிரஸ் அரசு, காகித அளவில் மேற்கொண்ட பல அறிவிப்புகளை, கேரள அரசாங்கம் செயல்வடிவிற்கு கொண்டுவந்தது.
உதாரணமாக, நிலக் குவியலை உடைப்பதிலும், குத்தகை விவசாயிகளுடைய நில உரிமையை உறுதி செய்வதிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களையும், சுயநல சக்திகளையும் ஆத்திரப்படுத்தின. அதிகாரப் பரவலாக்களுக்கு முன்னோடியாக அமைந்த மாவட்ட நிர்வாக மசோதா, கல்வி மசோதா, போலீஸ் கொள்கை, கூட்டுறவுஅமைப்புகளுக்கு ஆதரவு, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்ததொழில் நிறுவனங்களுக்கு உதவி ஆகிய நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் மேற்கொண்டது. ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், ஆளும் வர்க்கங்கள் இந்த மக்கள் நல நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தார்கள்.
இது ஏகாதிபத்திய சதியின் ஒரு பகுதியாகவே நடந்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த எல்ஸ்வொர்த் பங்கர், கேரளாவில் அமையப்பெற்ற கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வகித்த பாத்திரம் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தை பின் நாட்களில் ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அதற்காக காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு சக்திகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பினை அமெரிக்கா மேற்கொண்டது. கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆவணங்களில் இந்த வாக்குமூலம் பதிவாகியுள்ளது.
பிற தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவந்த பின்னடைவு, ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்துவதற்காக செய்ய வேண்டிய போராட்டங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக முன்னேறிய மக்கள் போராட்டங்கள் ஆகிய பல்வேறு விசயங்களும் விவாதிக்கப்பட்டன. கட்சிக் கிளை முதல், தேசியக் குழு வரையிலான அமைப்பு ஏற்பாடுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முந்தைய தொடர்களை வாசிக்க :
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்
1953 ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது அகில இந்திய மாநாட்டுக்கு பின், நாட்டின் அரசியல் நிலைமைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்கள், காங்கிரஸ் கட்சி தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றிய விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்தன.
ஆவடி சோசலிசம்:
அதாவது, அந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் தனது இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்திருந்தது. அந்த திட்டத்தை அமலாக்குவதற்கு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட சோசலிச நாடுகள் உதவி செய்தன. எனவே சோசலிச நாடுகளுடன் ஒத்துழைக்கும் போக்கினை வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டது நேருவின் அரசாங்கம். மேலும், 1955 ஆம் ஆண்டில் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ‘சோசலிச பாணியே தேசிய லட்சியம்’ என்ற அறிவிப்பையும் மேற்கொண்டது. இவையெல்லாம் காங்கிரஸ் அரசாங்கம் பற்றிய மதிப்பீடு குறித்த விவாதத்தை மீண்டும் எழச்செய்தன.
எனவே, 1956 ஆம் ஆண்டு பாலக்காட்டில் நடந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் 4 வது அகில இந்திய மாநாட்டிற்கு முன்பாகவே, மத்தியக் குழுவில் பல்வேறு கருத்துக்கள் மோதின. அந்த விவாதங்களுக்கு பின் மாநாட்டில் ஒரே அரசியல் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் இந்த தீர்மானத்திற்கு எதிராக புதிய தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. பி.சி.ஜோசி, ராஜேஸ்வர ராவ், ரவி நாராயண ரெட்டி, எஸ்.எஸ்.யூசுப், பவானி சென், சோம்நாத் லகிரி, கே.தாமோதரன், அவதார் சிங் மல்ஹோத்ரா, ரமேஷ் சந்திரா ஆகியோர் அதில் ஈடுபட்டார்கள். அந்த தீர்மானம் ‘காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஜனநாயக முன்னணி அமைப்பது பொருத்தமானதல்ல’ என்றும் காங்கிரசோடு நெருக்கமான உறவு கொள்ள வலியுறுத்துவதாகவும் அமைந்தது. இவர்களே பிற்காலத்தில் கட்சி பிளவுபட்ட பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆகும்.
நான்காவது மாநாட்டின் விவாதத்தில் பங்கெடுத்த ஒரு பிரதிநிதி ‘காங்கிரஸ் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி பேசினார். ஆளும் வர்க்கங்களுடைய பிரதான கட்சியாக அமைந்த காங்கிரஸ் கட்சியோடு கம்யூனிஸ்டுகள் அணி சேர வேண்டும் என்ற அந்தக் கருத்து மாநாட்டு அரங்கத்தில் கடும் விவாதங்களை உருவாக்கியது. அந்த விவாதத்தின் முடிவில் சரியான நிலைப்பாட்டுக்கு மாநாடு வந்து சேர்ந்தது என்றபோதிலும், மாற்றுக் கருத்துக்கு மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தது என்பதையும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் பதிவு செய்கிறார்.
அரசியல் தீர்மானம்:
மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் 6 பகுதிகள் இருந்தன. தேசிய விடுதலையையும், உலக சமாதானத்தையும், ஆசிய நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் இந்தியா உயர்த்திப்பிடிப்பதை அந்த தீர்மானம் அங்கீகரித்தது. அதே சமயத்தில் உள்நாட்டில் அது கடைப்பிடித்த அரசியல், பொருளாதார கொள்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

அதன்படி நேருவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம், இந்தியாவின் திட்டமிடல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று மாநாட்டு தீர்மானம் அங்கீகரித்தது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் அரசு கடைப்பிடித்த அணுகுமுறை, ஆளும் வர்க்கங்களுக்கே சாதகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியது.
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்மய நடவடிக்கைகள் மிக அவசியம். அதற்கு அடிப்படையாக, நாட்டில் நிலச்சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருக்கும் நிலக் குவியல் உடைக்கப்பட்டால்தான் அது சாத்தியம். இந்தியாவின் ஆட்சியாளர்கள், நிலவுடைமையாளர்களுடன் சமசரப் போக்கையே கடைப்பிடித்தார்கள். அது அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடே ஆகும். எனவே கம்யூனிஸ்டுகள் இந்தப் போக்கோடு ஒத்துழைப்பதோ, அணி சேர்வதோ சாத்தியமே இல்லை என்ற சரியான முடிவே மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிவர்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கேற்ற விதத்தில் அரசின் வரிக்கொள்கையும், இதர கொள்கைகளும் மாற வேண்டும் என்று மிகச் சரியாகவே மாநாடு அரைகூவியது. எனவே, இவற்றை முன்னெடுக்கும் ஒரு புரட்சிகர எதிர்க் கட்சியாக செயல்படவேண்டும் என முடிவு செய்தார்கள்.
இதில் ‘புரட்சிகர எதிர்க் கட்சி’ என்பதன் பொருளை சற்று சுருக்கமாகப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் செயல்பாட்டை அனைத்துக் கட்சிகளுமே மேற்கொள்வார்கள். ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் போராடுவதோடு, களத்திலும் மக்களைத் திரட்டி போராட வேண்டும். முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்கு எதிராக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திரட்டி, சட்டப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமற்ற வழிகளிலும் போராட வேண்டும் என்ற முடிவினையும் கட்சி முன்னெடுத்தது.
மொழிவழி மாநிலங்கள்:
மாநாட்டின் பிற தீர்மானங்களில் மாநிலங்களை வலிமைப்படுத்துவதுடன், நாட்டின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. (சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநாட்டிற்கு சென்று திரும்பிய அஜாய் கோஷ் [பொதுச் செயலாளார்] ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் மொழி அடிப்படையிலேயே மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற தீர்மானமும் முன்வைக்கப்பட்டு இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது)
இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் உடன்பாடில்லை என்பதையும், மிகப்பெரும் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்ததன் பின்னணியில் ஆளும் வர்க்கங்கள் அதனை ஏற்றுக்கொண்டன என்பதையும் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சரியான நிலைப்பாட்டுக்கு உதாரணமாக பார்க்கலாம்.
ஒரு லட்சம் உறுப்பினர்கள்:
இந்த மாநாட்டில் தோழர் கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தோழர்களை கொண்டு செயல்பட தகுதி ஆய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி நாட்டில் மொத்தம் 75 ஆயிரம் கட்சி உறுப்பினர்களும், 30 ஆயிரம் பரிச்சார்த்த உறுப்பினர்களும் இருந்தார்கள். 427 பிரதிநிதிகள் வந்திருக்க வேண்டும், மாநாட்டில் பங்கேற்பு 407 ஆக இருந்தது.

மேலும், 4 வது மாநாட்டின் விவாதம் அரசியல், தத்துவார்த்த பிரச்சனைகள் தொடர்பாகவே அமைந்திருந்த காரணத்தால், அமைப்பு விதிகளை மேம்படுத்துவது தொடர்பான விவதங்களை மேற்கொள்வதற்காக 6 மாத காலத்தில் ஒரு பிளீனம் (சிறப்பு மாநாடு) நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 1957 தேர்தல் காரணமாக அந்த சிறப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.
முந்தைய தொடர்களை வாசிக்க :
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்
சிவப்பு புத்தகத் தினத்தை முன்னிட்டு கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஒலிவடிவில்…
கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 1 | குரல் : உ.வாசுகி
கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 2 | குரல் : உ.வாசுகி
கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 3 | குரல் : சிந்தன்
வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 19 சப்தர் | ஒலிப்புத்தகம் 8 – வாசித்தவர் சிந்தன்
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 19, சப்தர், காலம் கி.பி. 1942. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் சிந்தன்.