Posted inPoetry
நீலியின் தோழி கவிதை – கனிராஜ் சௌந்திரபாண்டி
அப்பா வேலை பார்க்கும்
அலுவலகத்தை
சென்னைக்கு மாற்றுகிறார்களாம்
நாம் நாளைக்கு கிளம்ப வேண்டும்
நீலி என்றாள் அம்மா
நீலியின் தோழிகள் நிறையபேர்
இருக்கிறார்கள் பிரிந்து
செல்வதில் அவளுக்கு கவலை
எல்லா தோழியிடமும் எடுத்து
சொல்லும் நீலிக்கு கண்ணீர்
தேம்பியது
தினமும் ஒரு பூ கொடுக்கும்
தோழி ரோஜாவிடம்
விடும் கண்ணீ ரில் மலர்ந்தது
கடைசி அன்பு பரிசு.
கனிராஜ் சௌந்திரபாண்டி
இராம்நாடு
9025525087