கவிதை சூர்யநிலா ( Sooryanila Kavithai )

கவிதை: புரிதல் – சூர்யநிலா

புரிதல் கழிவறையில் அமரும் போது கிருஷ்ணா என்றாள் ஊத்தப் பல்லை விளக்கும் போது ஈஸ்வரா என்று எச்சில் உமிழ்ந்தாள் உதிரத்துணிகளை அலசும் போது அட ராமா என்று அக்குளைத் தேய்த்தாள் மழலையின் மலத்துணிகளை துவைக்கும் போது படைத்தவனே என்று பிரம்மனைச் சபித்தாள்…