Se. Ganesalingan Disappeared Eelam Tamil Literary Dawn (மறைந்து போன ஈழத் தமிழ் இலக்கிய விடிவெள்ளி) Article by Writer Ve. Pa. Ganesan

மறைந்து போன ஈழத் தமிழ் இலக்கிய விடிவெள்ளி – வீ. பா. கணேசன்




கடந்த சனிக்கிழமை (04/12/2021) அன்று காலை சென்னையில் இயற்கை எய்திய தோழர் செ. கணேசலிங்கன் பல வகையான பாரம்பரியங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அவரது வாழ்க்கைப் பாதையின் சுவடுகளை திரும்பிப் பார்க்கையில் இலங்கை, தமிழ்நாட்டு இலக்கிய உலகு எத்தகைய ஆளுமையை இழந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. 1970களில் தமிழகத்தில் சமூக அக்கறையோடு எழுந்து வந்த எம்மைப் போன்ற மாணவர் தலைமுறையிடம்தான் அவரின் எழுத்துக்கள் முதன்முதலில் வந்து சேர்ந்தன.

ஈழத் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழகத் தமிழ் இலக்கியத்திற்கும் ஓர் உறவுப் பாலமாக பல்வேறு வகையில் அவர் விளங்கினார். ஓர் எழுத்தாளராகவும், மாத இதழ் ஒன்றின் ஆசிரியராகவும், நூற்பதிப்பாளராகவும் தமிழகத்துடன் அவர் மேற்கொண்ட உறவு இரு கரைகளிலும் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தின. ஈழத்து எழுத்தாளர்கள் இங்கு அறிமுகமானதும் தமிழ் எழுத்தாளர்கள் அங்கு அறிமுகம் பெற்றதும் அவர் தீவிரமாக இயங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலமாகவே நிகழ்ந்தது. அவரின் செறிவுமிக்க வாழ்க்கையில் சில முக்கிய அத்தியாயங்களை மீள் நோக்கிப் பார்ப்பதே இந்த அஞ்சலிக் கட்டுரையின் நோக்கம்.

செ. கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் எனும் கிராமத்தில் 09.03.1928 அன்று க. செல்லையா- இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சூட்டிகையாக இருந்த அவர் யாழ்ப்பாணம் பரமேஸ்வரன் கல்லூரியில் எச்.எஸ்.சி. படித்து தேர்வு பெற்றதோடு, லண்டன் மெட்ரிகுலேஷன் தேர்விலும் தேர்ச்சி பெற்று, 1950ஆம் ஆண்டில் இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் ஓர் எழுத்தராகப் பணியில் சேர்ந்து 1981ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.

பெண்ணடிமை தீர - நூலகம்இளம் வயதிலேயே சமூக அவலங்களை எதிர்த்துச் செயல்படுவதில் ஆர்வம் காட்டிய செ.க. தொடக்கத்தில் யாழ்ப்பாணம் பகுதியில் நிலவி வந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் அப்பகுதியில் உள்ள கோவில்களில் அனைத்துச் சாதியினரும் சென்று வழிபடும் உரிமை கோரியும் செயல்பட்டு வந்தார். இந்தப் பின்னணியில்தான் ‘மகாத்மா காங்கிரஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். 1949இல் கடல் வழியாக ரகசியமாக இலங்கை சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து தன் சொந்த ஊரான உரும்பிராய் கிராமத்திற்கு அழைத்துச் சென்று தீண்டாமைக்கு எதிரான கூட்டத்தில் உரையாற்ற வைத்தார்.

பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே சமூக அவலங்கள் குறித்த தெளிவான பார்வை கொண்டவராக இருந்த நிலையில், உண்மையான சமூக மாற்றத்திற்கு மார்க்சியப் பார்வை எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்தவராக மார்க்சிய நூல்களை ஆழப் பயிலத் தொடங்கினார்.

அவரின் ’மன்னிப்பு’ என்ற முதல் சிறுகதை 1950இல் தினகரன் நாளிதழில் வெளிவந்தது. இதே நேரத்தில் இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவுவதில் முன்னின்று செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக 1956ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெரூடாவை இலங்கையில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கும் கணேசலிங்கன் தலைமை தாங்கினார்.

இன்றும் இலங்கை தமிழ் இலக்கிய உலகில் ஜாம்பவான்களாகத் திகழும் கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி, கலாநிதி சு. வித்தியானந்தன், கலாநிதி எம்.ஏ. நுஃமான் என்று எண்ணற்ற அறிஞர்களின் செயல்பாட்டுக் களமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருந்தபோது அதன் பின்னாலிருந்த உந்துசக்தியாக அவர் செயல்பட்டு வந்தார். அறிஞர்கள் இருக்கும் சபையில் சண்டை இல்லாமலா?

பதிவுகள்பாரதியின் சமூகப் பார்வை குறித்தும் தமிழ் இலக்கிய உலகில் அவரின் இருப்பு குறித்தும் ஏராளமான மாறுபட்ட கண்ணோட்டங்கள் இலங்கையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் நிலவி வந்த காலமது. இயற்கையாகவே, பாரதியின் தகுதியை குறைத்தும் கூட்டியும் விவாதிக்கும் குழுக்கள் இந்த இரண்டு பகுதிகளிலும் ஏராளமாகவே இருந்தன.

இருந்தபோதிலும், கருத்து வேறுபாடு கருத்து மட்டத்தில் மட்டுமே என்பதை தெளிவாக வரையறுத்து, அனைத்து பிரிவினருடனும் தோழமை உணர்வுடன் பழகி எழுத்தாளர் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற ஒரே எழுத்தாளர் அவர் என்று 1996இல் இலக்கு என்ற இதழ் குறிப்பிட்டிருந்தது. இலக்கிய விமர்சனம் என்ற புதிய பிரிவின் வலிமையையும் ஆழத்தையும் அவசியத்தினையும் தமிழ் இலக்கிய உலகிற்கு எடுத்துக் காட்டிய கலாநிதி க. கைலாசபதியின் நூல்களை பதிப்பிக்க சென்னை பாரி நிலையத்தை அணுகி இறுதி செய்தவர் அவர்.

பாரதி குறித்து மட்டுமின்றி, வேறுபல விஷயங்களிலும் இந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவிய போதிலும் கைலாசபதி மறைந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது திடீர் இழப்பைத் தாங்க இயலாத துக்கத்துடன் எங்கெங்கோ சிதறிக் கிடந்த அவரது 19 கட்டுரைகளை மிகுந்த முனைப்புடன் தேடிச் சேகரித்து ’இலக்கியச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் தனது குமரன் புத்தக இல்லம் வழியாகவே வெளியிட்டார். இதுபற்றி ஆர். சிவகுருநாதன் எழுதிய முதலுரையில் “ இவ்வரு முயற்சிக்கு அச்சாணி போன்றிருந்தவர் பேராசிரியரின் உள்ளங் கவர்ந்த நண்பர் செ. கணேசலிங்கன் ஆவர். நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கின்ற, பேராசிரியர் மீது பற்றுக் கொண்டுள்ள, இலக்கிய ஆர்வலர்களுடன் உடன் தொடர்பு கொண்டு பல கட்டுரைகளை சில தினங்களில் பெற்றார். பேராசிரியர் மீதும் தமிழ் மீதும் கொண்ட அன்புப் பாசத்தால் இரவும் பகலும் இதே வேலையாக இருந்து இந்நூலை உருவாக்கித் தந்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

படிப்பகம் - ஒரு மண்ணின் கதை (செ.கணேசலிங்கன்)கணேசலிங்கன் தனது பதிப்புரையில் “எவ்வாறாயினும் கைலாசபதியின் ஆராய்ச்சி முயற்சிகளும் விமர்சனக் கோட்பாடுகளும் இந்நூலிலுள்ள கட்டுரைகளில் தொக்கு நிற்பதைக் காணலாம். இவற்றைப் பரவலாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ள மேலும் பல தசாப்தங்கள் ஆகலாம். காலத்துக்கு முந்திய தீர்க்கமான சிந்தனை முடிவுகள் அவரது எழுத்தில் புதைந்துள்ளன” என்று பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகத்தை மிகச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துக் காட்டியிருந்தார். அதேபோன்று கலாநிதி கைலாசபதியின் முனைவர் ஆய்வு நூலான Tamil Heroic Poetry என்ற நூலை தமிழர் வீரயுகப் பாடல்கள் என அவரின் குமரன் புத்தக இல்லம்தான் தமிழில் வெளியிட்டது.

ஒரு மனிதராக அவரது மானுடப் பண்பினை சித்தரிக்க எண்ணற்ற நிகழ்வுகள் உள்ளன. எழுத்தில் எவ்வாறு மார்க்சிய வழி நின்று மனித குலத்தின் விடிவைக் குறித்துப் பேசினாரோ, அதே போன்று தெளிவாகவும், உறுதியாகவும் தன் நிலைபாட்டினை தோழமையுணர்வுடன் எடுத்துக் கூறிய அடுத்த கணமே எளிமையோடும் பண்போடும் முற்போக்கு-பிற்போக்கு என்ற பேதமின்றி சக மனிதர்களின் இடர்ப்பாடுகளைக் களைய முன்நிற்பதில் அவரை விஞ்ச எவருமில்லை. 1980களின் இறுதியில் சென்னையில் நிலைகொண்ட அவர் இலங்கையிலிருந்து சிகிச்சைக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் வரும் எண்ணற்ற நண்பர்களுக்கு பரிவோடு உதவி செய்து வந்தார்.

பதிவுகள்அவரின் எழுத்து பற்றிக் கூறுவதெனில், ஒரு விஷயத்தை முதலில் கூறி விடுகிறேன். இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் நான் முதலில் வாசித்த எழுத்து அவருடையதே. அதன் பிறகே கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் எழுத்துக்கள் எல்லாம் எனக்கு அறிமுகமாயின. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தன் படைப்பின் மூலம் வாசகர்களின் முன் வைத்த அவர் அதற்கான தீர்வுகளையும் நயமாக, உரிய இடத்தில், உரிய வகையில் எடுத்து வைப்பதிலும் திறன் பெற்றவராக இருந்தார்.

அவரின் சொந்த மகள்களுக்கும் மகனுக்கும் எழுதுவது போல் தோற்றமளித்த குந்தவிக்குக் கடிதங்கள், குமரனுக்குக் கடிதங்கள், மான்விழிக்குக் கடிதங்கள் போன்ற நூல்கள் மனித குலத்தின் வரலாற்றை மார்க்சிய நோக்கில் மிக மிக எளிமையாக எடுத்துக் கூறியது. சிறுவர்களுக்காக அவர் எழுதிய நூல்கள் அனைத்துமே இளம் வயதினரை பகுத்தறிவு பெறவும், அறிவியல் உணர்வு பெறவும் தூண்டுவதாக அமைந்திருந்தன.

1950இல் தொடங்கிய அவரின் இலக்கியப் பயணம் மிகத் தெளிவான ஒன்றாகவே இருந்தது. ” இலக்கியம் வாழ்க்கையை அதன் வரலாற்றோடும், வளர்ச்சியோடும் ஒட்டிச் சித்தரிக்க வேண்டும். தனி மனித வாழ்வு சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்து இருப்பதையும், சமுதாயத்தின் வளரும் – தேயும் சக்திகளைப் புலப்படுத்துவதையும் சித்தரிப்பதே உயர்ந்த இலக்கியமாகும். இத்தகைய இலக்கியம் படைப்பதற்கு எழுத்தாளன் முதலில் மனித இனத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவும் நம்பிக்கையும் திராணியும் பொறுப்புணர்ச்சியும் இருத்தல் வேண்டும்” என தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் பிரகடனம் செய்திருந்தார். அவ்வாறே இறுதி வரை வாழ்ந்தும் மறைந்தார் என்பதே உண்மை.

Thinakaran Vaaramanjari: - மணிவிழாவையும் பவளவிழாவையும் புறக்கணித்து அயராமல் இயங்கும் படைப்பாளி

1950இல் இருந்து வாழ்நாளின் இறுதிவரை எழுதிக் கொண்டேயிருந்த அவரின் பேனாவில் இருந்து 71 நாவல்களும், ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், 22 கட்டுரைத் தொகுப்புகளும் சிறுவர்களுக்கான எட்டு நூல்களும் வெளிவந்தன. இவற்றில் அவரின் முதல் நாவலான ‘நீண்ட பயணம்’ இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை 1966ஆம் ஆண்டில் பெற்றது. 1987 முதல் 1999 வரை அவர் எழுதிய பத்து நாவல்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் பல்வேறு அம்சங்களைப் பேசுவதாக இருந்தன. அவரின் ‘மரணத்தின் நிழலில்’ நாவல் 1994ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றது.

இலங்கை தமிழ்ப்புதின உலகில் புதுத்தடம் பதித்த செ. கணேசலிங்கன் தன் எழுத்துக்களில் சமகாலத்தினை பிரதிபலித்ததோடு மட்டுமின்றி, சமூக மாற்றம், பெண்ணியம், சிறுவர்களுக்கான எழுத்துக்கள், சமூகத்தின் மீதான உலக மயமாக்கலின் தாக்கம் என பல துறைகளிலும் முத்திரை பதித்த படைப்புகளை வழங்கியிருந்தார். அவரின் எழுத்துக்கள் சமூக மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருந்தன. தன்முனைப்பு அற்று அடக்கமாக வாழ்ந்த இந்த மனிதநேயவாதியின் இயல்புகள், படைப்புலகம் பற்றிய விரிவான ஆவண நூல் செ. கணேசலிங்கனின் படைப்பும் படைப்பாளியும் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

15-01-1971 முதல் கொழும்பிலிருந்து மாணவர்களுக்கான இதழாக வெளிவரத்தொடங்கிய கணேசலிங்கனின் குமரன் மாத இதழ், பின்னர் படிப்படியாக கலை, இலக்கிய, அறிவியல் படைப்புகளையும் மார்க்ஸீய சிந்தனைகளின் அடிப்படையில் கட்டுரைகளையும் வழங்கத்தொடங்கியது.

ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை-முருகபூபதி-அங்கம் 03 – www.naduweb.comகலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் அறிவியல்பூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 1979 ஜூன் மாதம் (56வது இதழ்) தடைப்பட்டு, மீண்டும் பாரதி நூற்றாண்டு காலத்தில் 1982 நவம்பர் மாதம் முதல் வெளிவந்தது. ஆயினும், 1983 ஜூலை மாதத்திற்குப் பின்னர் நின்று போன குமரன் மீண்டும் மே 1989இல் வெளிவரத் தொடங்கி 1990 ஜூன் உடன் முழுமையாக நின்றுபோனது. மொத்தமாக 77 இதழ்கள் வெளிவந்தன. இதை முழுத் தொகுதியாக 993 பக்கங்களுடன் கணேசலிங்கன் குமரன் புத்தக இல்லம் மூலமாகப் பின்னாளில் வெளியிட்டார். இலங்கையிலும் தமிழகத்திலும் நடைபெற்ற இலக்கிய சர்ச்சைகளின் ஆழத்தை இத்தொகுதியில் முழுமையாகக் காணலாம்.

இலங்கையின் தமிழ்ப்புதின எழுத்துலகில் புதுத்தடம் பதித்த செ. கணேசலிங்கன் தன் எழுத்துக்களில் சமகாலத்தினை பிரதிபலித்ததோடு மட்டுமின்றி, சமூக மாற்றம், பெண்ணியம், சிறுவர்களுக்கான எழுத்துக்கள் என பல துறைகளிலும் முத்திரை பதித்த படைப்புகளை வழங்கியிருந்தார்.

அதிலும் குறிப்பாக பெண்களின் மீதான சுரண்டல், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை அவர் எழுதிய பல்வேறு நாவல்களில் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளார். இன்றைய உலக மயமாக்கலின் நவீன கலாச்சார ஆதிக்கத்தால் பெண் இனம் எதிர் கொண்டு வரும் அடக்குமுறையை அவர் அளவிற்கு விரிவாக எழுதியவர் அபூர்வம் என்றே கூறலாம்.

தந்தையின் கதை by செ.கணேசலிங்கன்உதாரணமாக, பாலுமகேந்திரா இயக்கி கமல்ஹாசன் நடித்த கோகிலா என்ற கன்னட மொழிப் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக கணேசலிங்கன் பணியாற்றிய அனுபவப் பின்னணியில் திரைத்துறையில் சிறு வேடங்களில் வந்து போகும் நடிகர்கள், நடிகைகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி கவர்ச்சிக் கலையின் மறுபக்கம் என்ற நாவலில் சித்திரமாக வடித்துள்ளார்.
அதைப் போன்றே தேசிய இனப் பிரச்சனையை மையமாக வைத்து மொத்தம் பத்து நாவல்களை 1987 முதல் 1999 வரை எழுதியுள்ளார். ஈழத்து சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவருக்கு 75 வயது நிறைவடைய இருந்த தருணத்தில் வாசகர்களும் நண்பர்களும் அத்தருணத்தை நினைவு கூரும் வகையில் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு பவள விழாவாக கொண்டாட வேண்டுமென முயற்சி செய்தபோது தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு அடக்கமும் எளிமையும் நிரம்பப் பெற்றவராக அவர் திகழ்ந்தார்.

அவரது எழுத்துக்கள் அனைத்தின் ஊடாக நிற்பது மார்க்சிய கண்ணோட்டத்துடன் கூடிய மனித நேயமும் சமூக அவலங்கள் குறித்த விரிவான விமர்சனமுமே ஆகும். இந்தத் தெளிவான பார்வையே வாசகனை தன் சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்ப வைக்கிறது. அதன் மூலமே ஓர் ஆசிரியராக செ. கணேசலிங்கன் வெற்றி பெற்றார். அவரது நீண்ட வாழ்க்கை எண்ணற்ற துயர்களை எதிர்நோக்கிய போதிலும், இறுதிவரை மனித நேயம் பிறழாது சமூக மாற்றத்தின் மீது எள்ளளவும் நம்பிக்கை இழக்காது தன் எண்ணத்தை எழுத்தில் வடித்துக் கொண்டே இருந்தார் என்பதில்தான் அவரின் பெருமை துலங்குகிறது. அவரது நினைவைப் போற்றுவோம். எத்தகைய சமூக மாற்றத்தை அவர் விழைந்தாரோ, அதை உருவாக்கப் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும்.

தோழர் செ. கணேசலிங்கனுக்கு செவ்வணக்கங்கள்!
இன்றும் வானம் ’செவ்வானம்’ ஆகத்தான் இருந்து வருகிறது!

போர் சிதைத்த நிலத்தின் கதை (இது வேறு கதையல்ல) 21 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (இது வேறு கதையல்ல) 21 – மணிமாறன்



மனிதர்கள் தன் முன் நகரும் வாழ்வை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை எழுத நினைத்திட்ட தொடர்தான். எழுத நினைப்பதை,நினைத்ததை அப்படி அப்படியே எழுதிட முடியுமா?. எழுதிக் கடந்திட எழுத்து அனுமதிக்குமா?. அதனால்தான் தொடரின் முதல் பத்தியை வாசிக்கத் துவங்கியதில் இருந்து நாம் இப்பிடியுமா கடந்திருக்கிறது அவர்களின் தினசரி என நினைத்துக் கொண்டே வாசிக்கிறோம். ஒற்றைத் தன்மை படிந்திருக்கும்
கதைகளை,நாவல்களை,புகலிடத்து சர்ச்சைகளை வாசித்துப் பழகியிருந்த எனக்கு. எழுதித் தீராப் பக்கங்கள் எனும் பத்தித் தொடர் தனித்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு பத்தியை படிக்கிறோம். அதற்குள் சமறிகள் குறித்த ஒரு புரிதலுக்கு வந்தால் ,அடுத்த பத்தியில் நாடோடிகளைப் போல ரூம் ரூமாக அலைக்கழிகிற பெரும் கூட்டம் எந்த சமறி ஒழுங்குள்ளும் வர ஏலாது என்பது புலப்படுகிறது. ஒருவிதத்தில் சமறிகள் சென்னை மேன்சன் வாழ்க்கையை நினைவூட்டுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சிலவற்றிலும் கம்யூன்கள் முழுநேர ஊழியர்களுக்காகவே இயங்கி வருவதையும் ஞாபக மூட்டுகிறது. ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு தன்மை. ஒன்றைப் படிக்கிறோம் அவ்வளவுதான் அடுத்த நொடியில் புத்தகத்தில் வேறு ஒரு புதிய காட்சி நகர்கிறது .
எழுபதுகளின் கடைசியில் சொந்த நிலத்தில் இருந்து துவங்கிய. பயணம் நிற்காமல் தொடர்கிறது. எத்தனை துயரங்கள்,எத்தனை சள்ளைகள். அத்தனையையும் கடப்பதும்,பின் தொடர்வதுமான இந்தப் பெருங் கூட்டத்தின் கதையை தன்னுடைய கதைக்குள்ளிருந்து எழுதியிருக்கிறார் செல்வம் அருளானந்தம்.

தன்னிலிருந்து வெளிப்படுகிற தன்கூட்டுக்கதைகள் இவை. எல்லாவற்றையும் சொல்லில் வடித்திட முடியாது. தன் அனுபவத்தை தன்னுடன் பாரீஸில் பல நாட்கள் இருந்தவர்களின் அனுபவமாகவும் மற்றவர்களின் அனுபவத்தையும் கூட ரசனை கொண்ட வித்தையாகவும் உருமாற்றுகிறார் செல்வம். பத்திகளுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்புகளை தனித்துப் படித்துப் பார்த்தால் அதுவே வாசகனுக்கு தனித்த அனுபவத்தை தரக் கூடியதாக இருக்கிறது..
வில் விறட்டனும்,விமலதாசும், அவிட்ட பாரிசில அவியவிடாத கோழி, மாஸ்ரரும்,நரகலோக நங்கையும், றிச் கேக்கும் அரிச்சந்திர மயான காண்டமும்,பாதர் ஓடியோவுடன் பொங்கலும் கொம்யூனிசமும்..

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 21th Series Article Selvam Arulanandham's Ezhuthi theera pakkangal By Writer Manimaran. செல்வம் அருளானந்தத்தின் எழுதி தீராத பக்கங்கள்
செல்வம் அருளானந்தம்

இவையெல்லாம் எடுத்துக்காட்டாக சொல்லப்பட்ட தலைப்புகளே. பெரும் சிக்கலான வாழ்வினை நகைத்து உருளும்படியாகச் சொல்வது அவ்வளவு ஒன்றும் எளிதில்லை. அத்தனை லகுமொழியில் சம்பவங்களை அடுக்குகிறார் செல்வம். யாழ்ப்பாணத்தில் இருந்து அத்துக் கிளம்பி கருமாயப்பட்டு, கவலைப்பட்டு
நாடற்று தேசாந்திரியாக திரிந்து கொண்டிருப்பவர்கள் பட்ட பாடுகளின் வலியை நுரைக்க, நுரைக்க காடிப் புளிப்பேறிய மதுவின் சுவையாக்கி வார்த்தைகளில் வடித்தெடுக்கிறார் அருளானந்தம். .யாழ்ப்பாணத்து தெருவில் கிடந்த பலரும் பாரிஸில் அகதிகளாகி அவ்வப்போது ரோமிற்கும், ஸ்வீடனுக்கும் கனடாவிற்கும் அலைந்த கதையை, அதன் துயரச் சாம்பல் படிந்திடாத தனித்த பகடியான ஒரு மொழியில் சொல்லியிருக்கிறார் செல்வம்.

காலம் குறித்த பிரக்ஞையை புத்திசாலித்தனமாக வாசிப்பவனுக்குள் கடத்திவிடுவதில் மகா கெட்டிக்காரார்கள் எழுத்தாளர்கள். தன்னுடைய முதல் கட்டுரையான கொண்டலிலை மழை கறுக்கத் தோன்றிய தேவதைகள். எனும் தலைப்பு பத்தியில் கோயில் பூசாரியாகவும், சூசையப்பராகவும் இருந்தவரோடு சேர்த்து அப்போதிருந்த எம். பி யின் பெயரையும் சேர்த்துக குறிப்பிடுகிறார். அந்தக் குறிப்பே நமக்கு புத்தகத்தின் போக்கை புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கிறது. முதல்வரியிலேயே தொடரும் பகடி புத்தகத்தின் கடைசிச் சொல்வரையிலும் தொடர்கிறது.

எழுபதுகளில் நாடு கடத்திவிட ஏஜென்ட்கள் பட்ட பாடுகள் இத்தனை சுவாரஸ்யமானவை என்பது நிஜத்தில் எவருக்கும் விளங்கவில்லை. அதில் வடியும் அழுகாட்சியையே எல்லாம் காட்சிப் படுத்தியிருக்கின்றனர். செல்வத்தின் சொல்முறை முற்றிலும் வேறானது. ஒருவிதத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திவிடுவது லாபம் கொழிக்கும் தொழிலாகவும் இருந்திருக்கிறது. நடுவழியில் எவரேனும் பிடித்தால் தளரக்கூடாது. வலுவா பொய் சொல்லனும். அதிலயும் நம்புற மாதிரியே பொய் சொல்லத் தெரியனும். இலங்கையில் அரசுப் பணியில் இருக்கிறோம். சுற்றிப் பார்க்க பிரான்ஸ் வந்தோம் எனச் சொல்லனும். அப்படிச் சொன்னாலும் சந்தேகம் தீராது. ஆனால் நீங்கள்தான் அவரை நம்ப வைக்க பெரும் முயற்சி எடுத்திட வேண்டும்..

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 21th Series Article Selvam Arulanandham's Ezhuthi theera pakkangal By Writer Manimaran. செல்வம் அருளானந்தத்தின் எழுதி தீராத பக்கங்கள்

ஆஹா வெளிநாடு எண்டால் வெளிநாடுதானப்பா என்றபடியே மகிழ்கிறது சென்று இறங்கிய முதல் நாளின்போது மனம். பிறகுதான் எல்லாப் பிசகும் நடக்கிறது. பாத்ரூமில் குளிக்கிற போது கழிவுநீர் தங்களுக்கு கீழ் இருக்கும் வீடுகளுக்குள் இறங்குகிறது. வேறு என்ன ஒரே ரப்சர், தகராறு. இப்படித்தான் துவங்கியது பலருக்கும் புகலிட வாழ்க்கை. அதிலேயும் சண்டையும் வம்பும் தும்புமாக கிடைக்கயிலே இங்க எதுக்கு கிடந்து சாகனும், பேசாம கப்பல் ஏறுங்க. செத்தாலும் அங்கினயே கிடந்து சாவோம் எனும் நினைப்பு வரும்போதெல்லாம் பலருக்கு அவர்கள் வீட்டு பெண்களின் குரல் கேட்கத் துவங்குகிறது. வெளிநாட்டுக்கு போகயிலே நல்ல கோட்டு தைச்சு எடுத்துப் போகிறார்கள். போனவுடன் டிசைன் டிசைனா போட்டோ எடுத்து அனுப்பனும். இதுவும் கூட. அந்தந்த வீட்டுப் பெண்களின் ஆசைதான். அது எதுவும் நடக்கல. கோட்டுகள் எதன் குறியீடாகவோ பல ரூம்களில் இடத்தை அடைத்துக் கொண்டு கிடக்கிறது.
ஞாபகம் திறந்து கொள்ள பயணித்து, பயணித்து திரும்புவது எல்லோருக்கும்தான் நடக்கிறது. இங்கே பாரிஸில் மேற்கூரை கண்ணாடி வழியே விரிந்து வெளியேறும் நினைவு தன்னுடைய வாழ்விடத்தில்தான் போய் விழுகிறது. கூத்தும்,களிப்புமாகக் கிடந்த காட்சிகள் சித்திரங்களாக மன அரங்கினில் விரிகிறது. அதிலும் மனிதர்களுக்கு தூஷனங்களின் மீது இருக்கும் காதல் தனித்து எழுதப்பட வேண்டியது. அதனை எழுத்தாளர் வியோந்தம்மான் எனும் பகடித்தே வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனிதரின் வாழ்வினைக் காட்டுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார். வியந்தோம்மான் மாதிரியான ஆட்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். உடல் அலுப்பு மிகுதியாகும் வேலைகளின் போது கெட்ட வார்த்தை கதைகளைப் பேசுவதும்,அதற்கேயான சங்கேத மொழிகளை உருவாக்கி வைத்திருப்பதையும் தனித்து தொகுக்க வேண்டும் என்பதையே அம்மான் சொல்லும் கதைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. சட்டென ஒரு புள்ளியில் சிரிப்பாணி கரைந்து சோகம் அப்பி தலைகவிழ்வதும் கூட நடக்கிறது. அம்மான் கூரை வேய்வதில் மகா கெட்டிக்காரர். பாரிஸின் கருக்கிருட்டு அறையில் அம்மானின் நினைவு கிளர்கிறது. நாளை எனக்கு புதிய பெயர் சூட்டப் போகிறார்கள். என் பெயர் அகதி. இங்கே எங்களுக்கென தனிக்கூரையுமில்லை. அதனை வேய்ந்து தர அம்மானுமில்லை…

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 21th Series Article Selvam Arulanandham's Ezhuthi theera pakkangal By Writer Manimaran. செல்வம் அருளானந்தத்தின் எழுதி தீராத பக்கங்கள்

இப்படி புத்தகம் முழுக்க சிரித்துக் களிக்கும் புள்ளிகள் உடைந்து அழுகையும் துயரமும் கொப்பளிக்கும் இடங்கள் வாசகனை வேறு ஒரு இடத்திற்கு நகர்த்துகின்றன. அகதியென பதியப் போகும் இடத்தில் என்னிடம் குறைவாக பணம் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. அப்படிச்சொன்னால் மீதப்பணத்தைக் கட்டிடச் சொல்லி நிர்பந்திப்பார்கள். என்னிடம் பணம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது பாரிஸில் சக தமிழர்களால் தரப்படும் முதல் பயிற்சி. இதனை மேலோட்டமாக கற்ற மனுஷன்தான் தட்சூன். பிரெஞ்சு அலுவலக விசாரணையில். உங்க ஊர் எது? பணம் இல்லை. உங்க பெயர் என்ன? பணம் இல்லை. உங்க அப்பா பெயர் என்ன?. தட்சூன் அளிக்கும் அதே பதில் பணம் இல்லை. நிஜத்தில் அவர் பெயர் கூட. தட்சூன் இல்லை. மாணிக்கவாசகர் எனும் பெயர் பிரெஞ்சு அதிகாரிகளின் வாய்க்குள் நுழையாததால் தட்சூன் ஆகிவிட்டார். தட்சூன் எனும் பெயர் ஸ்டைலாக இருப்பதால்,அதுவே அவரின் பெயராக நிலைத்தும் விட்டது.
யாழ்ப்பாணம் நகர வாழ்வில் இருந்து வந்தவர்களுக்கு பிரான்ஸின் கலாச்சார வாழ்க்கை அதிர்ச்சியூட்டக்கூடியதாகவே இருக்கிறது. பெயர் பதிவதற்கான மெத்ரோ பயணங்கள் இங்கே பலருக்கு புதிய உலகை திறக்கிறது. தனித்து பயணித்து தங்கள் சிக்கல்களைக் களைகிற ஆற்றலும் கூட வந்துவிடுகிறது. அதிலும் மெத்ரோக்களில் நகரும் காட்சிகளை ரகஸியமாக கவனிக்கும் பேராவலும் கூட உடன் வருகிறது. அருளானந்தர் நினைத்துக் கொள்கிறார். ஆத்துமாவோ பெலனானது. சரீரமோ பலவீனமானது. அதனால் மெத்ரோ பயணங்களின் போது ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்கிற போதும், கட்டித் தழுவுகிற போதும் ஒருபால் சேர்க்கையினரை கண்ணுறும் போதும் முதலில் ஏற்பட்ட கலாச்சாரம் குறித்த அச்சம் பிறகான நாட்களில் ஏற்படுவதேயில்லை.

அப்போதெல்லாம் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் புகலிடத்தில் எல்லரும் சொல்லிக் கொண்டேயிருக்கின்றனர். எல்லாம் சில நாட்களுக்குத்தான் சண்டை எப்படியும் முடிவுக்கு வந்துவிடும். நாம ஊருக்குப் போயிரலாம். பொடியங்கள் அடிச்சு மேலேறி வந்துக்கிட்டுத்தான் இருக்கினம்.. எப்படியும் வெற்றி கிட்டும். கொஞ்சம் பணம் சேர்ந்ததும் ஊருக்குப் போறேன். இயக்கத்தில குதிக்கிறேன்…இப்படி குரல்கள் விதவிதமாக கேட்டபடியேதான் இருக்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டலைந்த எவரும் புகலிடத்தினை விட்டு போன பாடில்லை என்கிற கசப்பான உண்மையையும் கூட பத்திக்குள் பதிவு செய்கிறார் செல்வம். ஊர் போய்ச் சேரும் விருப்பம் எல்லோரின் மனதிலும் முளைவிட்ட படியேதான் இருக்கிறது. பொடியன்கள் தயாராகிவிட்டார்கள்.சண்டை முடிந்துவிடும். என்பதுகளின் துவக்கத்தில் மனம் கேட்கத் துவங்கிய கேள்வி?. எந்தச் சண்டை. எப்போது முடியும் என்பதே.

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 21th Series Article Selvam Arulanandham's Ezhuthi theera pakkangal By Writer Manimaran. செல்வம் அருளானந்தத்தின் எழுதி தீராத பக்கங்கள்

பாரீஸிற்கு வந்து சேர்ந்த நாள் முதல் தினசரிகளை கடத்திட பெரும் பாடு பட வேண்டியிருந்தது. அதிலும் வேலை தேடி அலைவதும்,வேலை கிடைப்பதும் பெரிய துயரும் வலியும் கொண்டதாக இருந்தது. யாழ்ப்பாணத்தாள்கள் அடிக்கடி தங்களுக்குள் நினைத்துக் கொள்வது எல்லாப் பயலும் வந்துட்டான். பேசாம வேறு இடம் போயிர வேண்டியதுதான் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் சிலர் ரோமிற்கும்,கனாடாவிற்கும் பாரீஸை விட்டு இடம் பெயர்கிறார்கள். ஒரே நாடு,ஒரே ஊர்,ஒரே மதம் இருந்தாலும் இவுனுகள்லாம் வந்துட்டாய்ங்க,நாம வேற இடம் பார்க்க வேண்டியதுதான் என நிவேறு எந்தக் காரணமும் இல்லை. ஜாதி மட்டுமே. ஜாதியை தன் நெஞ்சில் இருந்து இறக்க முடியாமல் தடுமாறிக்கிடக்கிறது தமிழ்க்குடி. இத்தனைக்கும் அங்கே தமிழர்கள் செய்யும் வேலை இதுதான். ஹோட்டல்களில் பிளேட் கழுவுவது. ஏர்போர்ட்களில் கிளினிங். அல்லது வீட்டு வேலைகள் செய்வது. இதற்கே அரிக்கும் சாதிய வன்மத்தை அகற்ற முடியவில்லை தமிழர்களால்.

மனிதர்கள் சாப்பிட உறங்கத்தானே வாழ்கிறோம். உணவு குறித்த ஒவ்வாமை. சாப்பிடுகிற முறை குறித்த குழப்பங்கள். இவையெல்லாம் புகலிடத்தில் மனிதர்களைத் தடுமாறச் செய்கிறது. சாப்பிட மனம் ஒப்பாத போதெல்லாம் பேசாம ஊருக்கே போயிருவோம். பொடியங்கள் எப்பிடியும் போரை முடிவுக்கு கொண்டு வந்துருவாங்க என்று தோன்றிக் கொண்டேயிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் அழகும் கனிவும் கொண்ட பெண்கள் அமைந்துவிட்டால் போதும்,எல்லாம் சரியாகிவிடும். மொப்வாளி தூக்கி அலைகிற மனுஷர்களைப் பார்த்து வெரிகுட், வெரிகுட் எனச் சொல்லும் பேரழகிகளே அகதிகளை நிலத்தில் இறுத்தி வைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிலும் பாரீஸ் நகரத்துக் குடிக்கதைகள் சொல்லித் தீர்க்க முடியாததாகத்தான் இருக்கின்றன. அதுவரை பார்த்திராத வண்ணப் போத்தல்களால் ஈர்க்கப்பட்டே தமிழர்கள் குடிக்குள் வீழ்கிறார்கள். குடிப்பதற்கு இங்கே ஒருநூறு காரணங்களை எல்லோரும் சொல்கிறார்கள். இன்னைக்கு அடிச்சு துவைச்சுர வேண்டியதுதான் என நினைக்கும் மனிதர்களாகட்டும். மலையகத் தமிழரோடெல்லாம் குடிக்கும் படியா ஆகிப் போச்சே நம்ம பொழைப்பு என புலம்பும் யாழ்பாணத்தாரகட்டும். பெரும்போர் நிகழப் போகிறது குடிப்போம் என்றலைகிறார்கள்.

தெருவில் நின்று ஆண்களை அழைக்கும் பெண்கள் எதிர்ப்படும் போது முதலில் தடுமாறுகிறது மனம். மனதிற்குள் சொல்லிக் கொள்கிறார்கள் எவ்வளவு சிக்கல் இருந்தாலும் நம்ம ஊரில எல்லாம் இப்பிடிக் கிடையாது. கலாச்சார சீரழிவுகள் அற்றது நம்ம ஊரு என நினைக்கிறார்கள். ஆனாலூம் ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் முகவரி தேடி அலையும் போது தெருவில் தென்படும் சிறுவன் சொல்கிறான். பொடியன்கள் ஊரில எம்புட்டு பாடு படுறாங்க. துட்டு இருந்தா ஊருக்கு அனுப்பி வையுங்கள். இப்பிடி கெட்டுச் சீரழியாதீங்க என்கிறான். பாரீஸ் நகரத்துக் காட்சிப் படலம் எனும் பகுதி மிகவும் முக்கியமான பத்தியாக இருக்கிறது.
எழுபதிற்கும், என்பத்தைந்திற்கும் இடையில் நடந்த காட்சிப்பதிவுகள் அவை. குட்டிமணி,தங்கத்துரை மீதான தூக்குத்தன்டனையை ரத்து செய்யக் கோரி பெரும் போராட்டங்கள் புகலிடத்தில் நடந்திருக்கின்றன. சாத்தியமான வகைகளில் போராட்டம் நடந்திருக்கிறது. நடா எனும் மரபபான கொம்யூனிஸ்ட் வெளிப்படும் இடம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 83 கலவரத்திற்குப் பலி தீர்க்க தன்னை தேடி வந்த சிங்களச் சிறுவனை குத்தி மல்லாத்துகிறது இனவெறி. அப்போது நடா என்னும் கொம்யூனிஸ்ட்டின் மனநிலையும்,செயல்பாடும் நமக்கு பல்வேறு அர்த்தங்களைத் தருகிறது.

நடா அண்ணன் சட்டையைக் கழற்றுகிறார். என்னையக் குத்துங்கடே, என்னையக் குத்துங்கடே என நெஞ்சைத் திறக்கிறார். கொள்கைப்பற்றுடன் வாழ்ந்த மரபான கம்யூனிஸ்ட் அவர். ரோட்டில் தலை தெறிக்க ஒடுகிறார். “”எனக்கு ஈழமும் வேண்டாம்,கம்யூனிஸ்ட்டும் வேண்டாம் என தலை தெறிக்க ரோட்டில் ஒடிக்கொண்டேயிருக்கிறார். அப்போது ஒடத்துவங்கிய நடா அண்ணன் போன்றோரின் கால்கள் எல்லாம் முடிந்து போன இந்த துயரக்காலத்திலும் கூட நின்றபாடில்லை.

1983 கலவரத்தில் யாழ்ப்பாணம் தீயில் எரிகிறது எனும் செய்தி பாரீஸில் கசியத் துவங்கிய பிறகு பெரும் கலவரம் நிகழ்கிறது. எதிர்ப்படும் இளைஞனை நீ சிங்களவனா எனக் கேட்டு,கேட்டு அடித்து துவம்சம் செய்கிறார்கள். அப்போது எதிர்ப்படும் அயர்லாந்து சிறுவன் கேட்கும் கேள்வி வாசித்துக் கடந்த பிறகும் கடக்க முடியாத கேள்வியாக நீடித்தே இருக்கிறது. அவன் சொல்கிறான் சிங்களவர்கள் என்றால் தோற்றத்தால்,செயலில் ஐரோப்பியர் போல இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்களும் உங்களைப் போலத்தானே இருக்கிறார்கள். பிறகு எதற்கு இத்தனை பகையும்,வன்மும்.. இது போலான துயர நாட்களைக் கடந்திடத்தான் நிற்கவே நிற்காமல் உலகெங்கும் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

பயணங்கள் வாழ்வை கற்றுக்கொள்ள புதிய புதித பாதைகளை திறக்கின்றன. பாரிஸ் அலுப்பூட்டும் போது ரோமிற்கு பயணிக்கிறார்கள். ரோம் பயணம் நிகழ்கிற ரயிலில் தமிழர்கள் உட்கார்ந்து பயணிக்க முடியாது. பயணச்சீட்டு இல்லை. ரோம் போக ஒரிஜினல் விசா இல்லை. ரயில் சீட்டுக்கு அடியில் பயணித்தே கடக்க வேண்டும். அதிலும் காலை மடகௌகி ஒடுக்கி சீட்டிற்கு அடியில் படுத்து பயணிப்பதும்,போலிஸில் சிக்கி சித்திரவதை அனுபவிக்கும் போது கூட மலைகளையும் மலர்களையும் ரசித்துக் கடக்கும் மனம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடம்தான் ஈழமே தவிர ரசனை சினிமா ஈடுபாடு என யாவற்றிலும் தமிழ்நிலத்தின் சாயல் படிந்துதான் இருக்கிறது. இங்கே எப்போதும் கொண்டாட்டங்களின் போது எம்.ஜி.ஆரின் பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. துயரத்திலிருந்து விடுதலை பெற்றிடும் ஒற்றைக்கருவியாக கலையே அங்கு யாவருக்கும் கைவசமாகியிருக்கிறது. அதனால்தான் மாலைநேரக் கொண்டாட்டங்களின் போது றிச் கேக்கும் அரிச்சந்திர மயான கண்டத்தின் காட்சிகளும் இங்கே விளம்பப்படுகிறது.

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 21th Series Article Selvam Arulanandham's Ezhuthi theera pakkangal By Writer Manimaran. செல்வம் அருளானந்தத்தின் எழுதி தீராத பக்கங்கள்

அகதிகள் வாழ்வில் சில பயணங்கள் அச்சமூட்டுபவையாக அமைந்துவிடுகின்றன. அதிலும் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். புகலிடத்தில் எனக்கு எந்த சிக்கலுமில்லை என்பதை நிருபிக்க பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. ஒரு திருமணத்தின் போதான வீடியோ கேசட் ஒளிபரப்பினால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணமே நின்றுவிடுகிறது. பாரீஸில் நிகழ்ந்த திருமணக்கொண்டாட்ட நிகழ்வு வீடியோ கேசட்டாக ஈழம் பறக்கிறது. ஆட்டம் பபாட்டம் கொண்டாட்டமாக நடந்தேறிய திருமணம் அது. வீடு வீடாக தரமுடியாது என்பதால் டெக்கை வாடகைக்கு எடுத்து ஒரே இடத்தில் ஒளிபரப்பி எல்லோருமே பார்க்கிறார்கள். பிறகென்ன. நடக்க இருந்த கல்யாணம் தடைப்பட்டது மட்டுமே மிச்சம். என்னதான் புரட்சி பேசிக் கொண்டு திரிந்தவர்கள் என்றாலும் இருபது தடியன்கள் தனித்திருக்கும் அறையில் ஒரு பெண் வந்து குடியேறுவதும் ரூமை பங்கிட்டு கொள்வதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வமானவை. ஒரு பெண்ணின் வருகை எப்படியெல்லாம் நிலையை தலைகீழாக மாற்றும் என்பதையும் பத்தி நமக்கு உணர்த்துகிறது. இயக்கப் பொடியன் மாரை அடித்ததிற்காக தப்பிப்பிழைத்து பிரெஞ்சு தேசம் வந்தவர் செல்வராசு. ஆனால் இங்கே தெருவோரத்தில் விளம்பர நோட்டிஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறான். அங்கேயும் கூட காதல் துளிர்க்கிறது. பொதுவாக தமிழர்கள் சுத்தபத்தம் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்கள். அதனால்தான் நான் பெருமை கொள்கிற மனிதனாக இருப்பதற்காக காதலை பலியிடுகிறார்கள். என்ன இருந்தாலும் அந்நிய தேசத்து ஆளுல்ல என்று விலகி தனிகிறார்கள்.

போர் சூழல் உருவாக்கிய துயரத்தைக் கடந்திட மனிதர்காள் பட்ட அவஸ்தையை பகடியாக கடத்தும் இந்த நூலிற்குள் விதிவிலக்கான பத்தி அழுகை எனும் பத்தி. ஓடும் பேருந்தில் தனித்து கதறி அழுது கொண்டிருக்கும் துயரச் சித்திரம் வெகு நாட்களுக்குப் பிறகும் கூட எழுத்தாளனை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. தம்பி ஏனடா அழுகிறாய் எனக் கேட்ட போது. அண்ணன் இயக்கத்துக்குப் போயிட்டான். நானாவது தப்பிப்பிழைத்து உயிரோடு இருக்கட்டும் என என் அம்மாதான் என்னை கஷ்டப்படுத்தி இங்கே அனுப்பி வைத்தாள். ஆமிக்கேம்பில் இருந்த செல் அடிச்சு அம்மை இறந்திட்டாள். அவள் இறந்து மூனுநாளு கழிச்சுத்தான் செய்தியே இங்கு வந்தது எனக் கதறுகிறான்.

இப்படி எத்தனை துயரங்கள். தாயகத்தில் உறவுகள் இறந்த செய்தி புலம் பெயர் நாடுகளுக்குப் பல வாரங்கள் கழித்து வருவதும். ஐரோப்பாவில் எல்லைகளைத் தான்டும் போது பெயர் தெரியாத நாடுகளின் சிறைச்சாலைகளில் இறந்த பிறகான ஆண்டு பலவாக. அந்தச் செய்தி தாயகம் அடையாமல் இருப்பதும் எவ்வளவு பெரிய துயரம். எங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வாழ்வு ஏன் இத்தனை துயரமாக இருக்கிறது என்பதே புத்தகத்தை வாசித்து முடித்த பிறகும் கூட நீண்ட நாட்கள் நமக்குள் ஓடிக் கொண்டேயிருக்கிறது..

(காலச்சுவடு பதிப்பித்திருக்கும் செல்வம் அருளானந்தத்தின் எழுதித் தீராப் பக்கங்கள் எனும் நூலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்…)

 பிரியங்களுடன்
ம.மணிமாறன்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவில் நகரும் புல்லின் நிழல்) 19 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (மீந்தவர்களின் சொல்) 20 – மணிமாறன்

 

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 20th Series Article Tho. Pathinathan's Porin Marupakkam By Writer Manimaran.

போர் சிதைத்த நிலத்தின் கதை (மீந்தவர்களின் சொல்) 20 – மணிமாறன்



உச்சரிக்கப்படுகிற வார்த்தைகள் தனித்திருப்பவை.அர்த்தங்களை ஒரே தன்மையில் சொற்கள் உருவாக்குவதில்லை. வாத்திச்சி என்று அழைக்கப்படுவதை விட டீச்சர் என்று சொல்வதற்குள் ஏதோ ஒரு பாந்தம் ஒட்டிக் கிடக்கவே செய்கிறது. ஊருக்கு வெளியே அல்ல, வெளியேவிற்கும் வெகு தொலை தூரத்தில் பதுங்கி கிடக்கிற குடிசைத் தொகுப்புகளுக்கு என்ன பெயர் இருந்தால் என்ன?. எத்தனை காலத்திற்கு இந்த அகதிப்பட்டத்தை சுமந்தலைவது. அகதி எனும் சொல்லை விட ஏதிலி என்றுரைப்பதில் ஒரு உளவியல் சிகிச்சை நிகழவே செய்கிறது. அந்த சொல்லை உச்சரிக்கும் போது நான் அகதி இல்லை என தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.

வாழத் தகுதியற்ற இந்த தொண்டுக்குடிசைக் கூட்டத்திற்கு முகாம் என்ற பெயரிடப் பட்டதும், அதன் மீது நிகழ்த்தப் படுகிற ஒதுக்குதலையும் எப்போது மாற்றியமைப்பது எனும் ஏக்கம் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது. இங்கே பாராமுகமும் கழிவிரக்கமும் கலந்து கிடக்கிறது. அய்யோ பாவம் என்பதோ அல்லது அவுக ஊருக்குப் போய்ச் சேர வேண்டியதுதானே எனும் குரலையோ நித்தமும் கேட்கும் படியான துயர வாழ்வை விட்டு விலகுவதற்கான துடிப்புடனே கடக்கிறது நாட்கள். போர் நிலத்தில்தான் முடிந்து போயிருக்கிறது. முள்ளி வாய்க்கால் பெருங்கொடுமைக்குப் பிறகான காலத்தில் உச்சரிக்கப்படும் வெளிப்படைத் தன்மையிலான வார்த்தைகள் அர்த்தப்பூர்வமானவை. இப்போதாவது பேச முடிந்ததே நம்மால்.. இனி இவை முகாம்கள் இல்லை. மறுவாழ்வு மையங்கள் என்று அரசதிகாரம் அறிவித்த போது ஏதோ நடந்துவிடும் போலவே எனும் பெரும் விருப்பம் யாவர் மனதிலும் துளிர்விடத் துவங்கியிருக்கிறது. எத்தனை மரணங்கள்,எவ்வளவு இழப்புகள், அவமரியாதைகளைச் சகிக்க முடியாது தற்கொலையில் மடிந்து போன ஜீவன்கள் கணக்கில் அடங்குமா?… வாழத்தகுதியற்ற இந்த நிலத்திலேயே கிடக்க எங்களுக்கு மட்டும் ஆசையா?. சொந்த நிலத்தின் மீதான ஏக்கமற்ற குடிகள் உண்டா? இப்படி எண்ணிலடங்கா கேள்விகள் விடைகளற்று தொடர்கின்றன…

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 20th Series Article Tho. Pathinathan's Porin Marupakkam By Writer Manimaran.

விடைகாண முடியா கேள்விகளைச் சுமந்தபடி இங்கேயே விழுந்து கிடப்போமா? அல்லது ஊருக்கே போய்விடலாமா எனும் இந்த இருவேறு மனநிலைகளை எழுதிய தன்வரலாற்றுப் பதிவு போரின் மறுபக்கம். பத்திநாதனின் முகாம் நாட்களின் டைரிக்குறிப்புகளைப் போல தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் சொல்ல முயற்சிப்பது பத்திநாதன்களின் கதையை. அரசியல் மாற்றங்களுக்குப் பிறகான மீள்குடியேற்றங்கள் கசப்பானவைதான். ஆனாலும் ஏதோ மூச்சுவிட முடிகிறது எனும் உணர்விற்கே அலைகுடிகள் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த தனித்த மனநிலைகளைக் குறித்தும்கூட பத்திநாதனால் எழுத முடியும். போரின் மறுபக்கம் பத்திநாதனின் முதல்நூல். ஒருவிதத்தில் தமிழக வாழ் அலைகுடிகளைப் பற்றி எழுதப்பட்ட தனித்த புத்தகமும்தான். தன் வரலாறுகளின் சொற்கள் எப்போதுமே காத்திரமாகவே வெளிப்படும். தொண்ணூறுகளுக்குப் பிறகு கவனம் பெறத் துவங்கிய தன்வரலாற்று ஆவணங்களை விளிம்பு நிலையாளர்களே எழுதி வருகின்றார்கள். பெண்களுக்கு மட்டுமேயான தனித்த மன உணர்வின் சொற்கள் வலிமையானவை என்பதை இலக்கியப்புலம் உணரத்துவங்கியது அப்போதுதான். மூன்றாம் பாலினப் பிரதிகளும், ஒடுக்கப்பட்டோரின் தன்வரலாற்று நூல்களும் கவனம் பெறத்துவங்கின. அதன் தொடர்ச்சியில் வந்துநிற்பதே பத்திநாதனின் போரின் மறுபக்கம் என்கிற தன்வரலாற்று நூல். விளிம்பிற்கும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் வாழ்க்கைப்பாடுகள் இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறதா எனும் கேள்வியில் துளிர்த்ததே இந்த தொகுப்பாவணம். அகதி முகாம்களுக்குள் உறைந்திருக்கும் கொடுஞ்சித்திரத்தை எந்த எழுத்தாளனாலும் எழுதிக்கடக்க முடியாது என்பதே காலம் நமக்கு உணர்த்தியிருக்கும் நிஜம். துயரத்தின் கொதி சொற்களைத் தீராத தன் அலைச்சலின் ஊடாக காட்சிப்படுத்தியிருக்கிறார் பத்தி..

உண்மையை உரைக்க எந்த மெனக்கெடல்களுக்கும் அவசியமில்லை. கத்தி போன்ற மிகக் கூரான சொற்களால் கட்டித்தரப்பட்டிருக்கிறது போரின் மறுபக்கம். புத்தகத்தின் முதல் பக்கத்தில் துவங்கிய போரின் துயரக் காட்சிகளும் அது துரத்தும் வாழ்க்கையையும் எந்த விதமான பூச்சுகளுமின்றி கருப்பு, வெள்ளையில் வடித்திருக்கிறார் எழுத்தாளர்.

தெருவில் விழுந்து கிடக்கிற என் பந்ததினை எடுப்பதற்காகக் காத்து நிற்கிறேன். எவ்வளவு நேரம் இப்படி இந்த மரநிழலில் குடியிருக்கிறேன். வாகனம் தொலையட்டும் என காத்திருக்கிறேன்.ஏன் காத்திருக்கிறேன். ட்ரக் வண்டி ஊர்ந்து தெருவை அடைத்து நிற்கிறது.என்னுடைய பந்தை ஒட்டி செல்கிறது. தெருவில் செல்வது சாதாரண மக்களுடைய வாகனம் அல்ல. அது போராளிகளின் ரக்கு ஜுப்பு பீரங்கி வண்டிகள். சில சமயங்களில் தெருவில் ராணுவ வண்டிகளும் வரும். நடு இரவில் போர். எல்லோரும் அமைதியான ஆழ்ந்த உறக்கத்தில் துயிலும் போது குண்டுகள் வெடிக்கும் சத்தம் காதைப் பிளக்கிறது. தெருதான்,ஆனால் யாராவது போவது வருவது தெரிந்தால் ஆமிக்காரன் சுடுவான். அந்த ஊர் இரவின் துக்கத்தில் உறைந்து போய்விட்டது. இனி மீளவே முடியாத பெருந்துயர் ராட்சஷப் போர்வையாக ஊரை வளைத்து நிற்கிறது.

போர்க்கருவிகளுக்கு நடுவினில் நித்தமும் விழுந்து கிடக்க எவருக்குத்தான் மனமிருக்கும். தப்பிப்பிழைப்பதைத் தவிர வேறு எந்த வாய்ப்புகளையும் போரின் கொடூர உக்கிரம் அவர்களுக்கு வழங்கவேயில்லை. எண்பதுகளின் இறுதியில் துவங்கிய அலைகுடி முத்திரை இதுநாள் வரையிலும் அழிந்த பாடில்லையே ஏன்?. இலங்கையிலிருந்து குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளோடு வந்திறங்கிய ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? வந்திறங்கிய யாவரும் விருப்பத்துடனா கரை ஒதுங்கினர்?. இல்லையே?. தன்னுடைய நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேறிட நிர்ப்பந்தித்தது எது?

பாசிமோட்டையில் ஒரு தெருவில் போரின் ஆரம்பத்தில் ஒருவர் போராளிக்குழு ஒன்றிலிருந்தார். அவர் உக்கிரமாக நடந்த பெருஞ்சண்டை ஒன்றில் மரணித்தார். அதன்பிறகு என்னுடைய மூன்றாவது சீனியண்ணாவுடன் சேர்த்து நாலுபேர் வரிசையாக இறந்து போனார்கள். எங்கள் தெருவில் மட்டுமே இப்படி என்றால், அடுத்தடுத்த தெருக்களில்,ஊரில் நடந்தது ரொம்ப மோசம். இந்த யுத்தத்தின் உக்கிரம் எல்லா பெற்றோரையும் யோசனையில் ஆழ்த்தியது. பலரும் தப்பி பிழைத்து தேசாந்திரியாகப் போனார்கள். காசுள்ளவர்கள் போன இடம் வேறு நிலம். எதுவும் அற்ற அன்றாடங் காய்ச்சிகளுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த புகலிடமும் கண்களுக்குத் தெரியவில்லை…

இப்படி இந்திய நிலத்தைப் புகலிடமாக்கிய பலருக்கும் எல்லாம் மூன்று மாதத்தில் சரியாகிவிடும். நாம் மறுபடியும் ஊருக்கே சென்றுவிடலாம் எனும் பெரும் நம்பிக்கை இருந்திருக்கிறது. பத்திநாதன் அப்படி  நினைத்துக் கொண்டே தமிழ் நிலத்தில் அலைந்தவர். சூழல் கனிந்து நிலைமை சரியாகிவிடும் என நான் உறுதியாக நம்பினேன் என நூலில் குறிப்பொன்றையும் தருகிறார். மிகுந்த நம்பிக்கையுடன் துயரங்களைக் கடந்து மண்டபம் வந்திறங்கிய ஈழத்தமிழர்கள் எப்படியெல்லாம் இங்கே உழல வேண்டியிருந்தது என்பதைத் தன்னையும்,,தன் வாழ்வையும் படைபாக்குவதன் வழியே பொதுவெளிகளில் புதிய அர்த்தத்தையும் அகதிகள் வாழ்நிலையின் மீது தனித்த கவனத்தையும் ஏற்படுத்த முயற்சித்தார் பத்தி. அவர்களுக்கு வேறு எங்கு செல்வதைக் காட்டிலும் இங்குக் குடியேறுவதில் ஒரு சின்ன நம்பிக்கை இருக்கவே செய்தது. தொப்புள் கொடி உறவு, மொழியால் பண்பாட்டால் ஒரே படித்தான  மனுசக் கூட்டமிது என்பதால் ஏற்பட்ட நம்பிக்கையிது. வந்திறங்கியதற்குப் பிறகான நிஜம் உயிரை வதைத்தது தனிதௌதது. அதையே தன்வரலாறாக்கி போரின் மறுபக்கத்தை நமக்குக் காட்டித்தருகிறார் பத்திநாதன்.

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 20th Series Article Tho. Pathinathan's Porin Marupakkam By Writer Manimaran.துயரங்களின் கதையை வாசித்துக் கடக்க முடியாது நமக்கு. முகாமில் வந்திறங்கிய பிறகும் கூட அவர்களுடைய அவர்களுடைய மனதை அறுக்கும் அச்சத்தின் துடி அகலேவேயில்லை. சுதந்திரமான காற்றைச் சுவாசிக்க அவர்களை அனுமதித்தது,அவர்கள் நடந்து போய் திரும்புகிற ஒற்றையடிப்பாதை மட்டுமே. அதைத் தவிர இந்த நிலத்திலும் கூட அவர்களுடைய கால்களைப் பயம் கவ்விப் பிடித்திருந்தது. கன்னிவெடிகளின் புதை மேட்டிலிருந்து திரும்பிய பிறகும் கூட அச்சம் அவர்களுடைய நெஞ்சாக்கூட்டில் இருந்து விலகவேயில்லை. அகதிமுகாம் எனும் வதைக் கொட்டடிக்கு வந்து சேர்ந்திருப்பவர்கள் யார் தெரியுமா? வாழ வழிதேடி வந்தவர்கள் இல்லை இவர்கள். போர் சிதைத்த நிலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள். மரணத்தின் வாயிலில் நித்தமும் பகடையாட்டம் ஆடிக்கிடந்தவர்கள். ஒருவிதத்தில் இவர்கள் யாவரும் போர் விட்டு வைத்திருக்கும் மிச்சமானவர்கள்…

எப்படியாவது வாழ்ந்து விடுவது என்றான பிறகு கப்பலில் இடுபாடுகளுக்கும் நெரிச்சலுக்கும் இடையில் மூச்சுத்தினறி செத்துப் போனவர்கள். நடுக்கடலில் தலைகுப்புற கவிழ்ந்து ஐலசமாதியானவர்கள். ஆமிக்காரன் கண்களுக்கு அகப்பட்டு நாயாக குருவியாக சுட்டுத்தள்ளப்பட்டவர்கள். கடல் அலைகளின் ஆக்ரோசத்திற்கு கடலிலேயே பலியானவர்கள் தவிர மீதமிருப்பவர்களே உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள். இந்த மிச்சமிருப்பவர்களின் வாழ்நிலை என்னவாக இருக்கிறது முகாம்களில் என்பதையே பத்திநாதன் போரின் மறுபக்கமாக்கி தந்திருக்கிறார்…

பத்தி மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற உச்சம்பட்டி முகாமிற்குள் இருந்து கொண்டு ஏன் இப்படியாகிவிட்டது என்னுடைய வாழ்நாள் எனும் கேள்வியை விதவிதமாக கேட்கிறார். வழிநெடுக நகரும் தற்குறிப்புகளாக நகர்கின்றன சொற்கள். அவை யாவும் அன்பிற்காக ஏங்கி நிற்கின்றன. தாயை விட்டு தந்தையை விட்டு வந்தாகிவிட்டது. உற்றாரும்,உறவினர்களும் அங்கு உயிருடன் தான் இருக்கிறார்களா? அல்லது நம்மைப் போல வேறு வெகு தொலைதூரம் சென்றுவிட்டனரா?. இந்த பதிலறியத் துடித்தலையும் மனதுடன் நித்தமும் வளர்ந்து கொண்டேயிருக்கும் கேள்விகளைச் சுமந்து அலைய வேண்டியிருக்கிறது. போர் பரிசாக அளித்த ஒற்றைக்கேள்வி நான் ஏன் அகதியாகத் துயருகிறேன். இந்தக் கேள்வியை நாவல் வழிநெடுக கேட்டுக்கொண்டேயிருக்கிறது. கிடைக்கும் பதில்களும் கூட அலுப்பூட்டக்கூடியவையாகவே இருக்கிறது. எதனால் ஏற்பட்டது எனக்கு இந்த நிலைமை. இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தினாலா. அல்லது பனிரெண்டு பிள்ளைகளில் கடைசிப்பிள்ளையாகப் பிறந்து தொலைத்தேனே அதனாலா?.  அம்மா அருகினில் இருந்த போதிலும் அன்பு காட்டாததாலா. அப்பா அருகிருந்து அறிவூட்டாதனாலா. அண்ணணுடன் அகதியாக வேற்று நிலம் வந்திறங்கியதால் வந்த தீவினையா?. எது என்னை இக்கதிக்கு ஆளாக்கியது எனும் கேள்வியைத் தீவிரமாகக் கேட்டு எழுப்பிய ஒருவித டைரிக்குறிப்பு பத்திநாதன் எழுதியிருக்கும் போரின் மறுபக்கம்…

இனப்பிரச்சினை குறித்து மிக தீவிரமாகப் பேசிக்கொண்டு இருப்பவர்களில் எத்தனை பேருக்கு அகதிகள் முகாமின் துயரம் தெரியும். வாழவே தகுதியற்ற அகதி முகாம்களின் சூழல் குறித்து என்றைக்காவது இவர்கள் அக்கறையுடன் பேசியிருக்கிறார்களா?. அல்லது ஒருமுறை வந்து அகதிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுடன் பேசிடாவது செய்திருக்கிறார்களா?. மண்டபம் முகாம் வந்திறங்கிய நொடியிலிருந்து அகதிகளின் உடல்கள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதில்லை. அவர்களுடைய மச்சங்கள்,காயங்கள்,தழும்புகள் ஏன் கைரேகை உள்பட யாவற்றையும் பதிவுசெய்து விடுவார்கள். அதன்பிறகு அவர்களைச்சுற்றி கண்ணுக்குப் புலனாகாத கண்காணிப்பு வளையம் சூழ்ந்திருக்கும். அகதி அந்தஸ்து அளிக்கப்பட்ட பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உதவித் தொகை வழங்கப்படும். உதவித்தொகை வழங்கும் நாளில் குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் முகாமில்தான் இருக்க வேண்டும். ஒருவர் இல்லையென்றாலும் மொத்த குடும்பத்திற்கும் உதவித்தொகை நிறுத்தப்படும். இப்படி வரைமுறைகளற்ற கட்டுப்பாடுகள் இந்த அரசாங்கத்தினால் நித்தமும் கொடுங்கத்தியாக முகாமின் மீது வீழ்ந்து கொண்டேருக்கும். உதவித் தொகை நாளில் வெளியேறிப் போனவர்களின் வாழ்க்கையில் நிகழும் வன்மத்தை வார்த்தைகளால் எழுதிட முடியாது..

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 20th Series Article Tho. Pathinathan's Porin Marupakkam By Writer Manimaran.
தொ. பத்தினாதன்

வெளியேறிச் சென்றவர்கள் வேறு எங்கும் தப்பிப் போக முடியாது. இந்த முகாம் உள்ளிழுக்கும் தந்திரத்தை உடன் வைத்திருக்கும் குரூர மாயம் கொண்டது. வெளியேறிய பிறகு மொத்த உடலும் மனமும் கியூபிராஞ்ச் எனும் இரக்கமற்றவர்களின் கையுறைக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். நொடிக்கு நொடி பதட்டமும் அச்சமும் சூழவே நகரும் நாட்கள். நகரும் நிழலையும் பணம் தரும் உபகரணமாக்கிடும் அதிகார வர்க்கம் ரட்டும் தப்பி போனவர்களைக் குறித்துக் கவலைப்படாது. முகாமின் ஆர்.ஐ யின் பாக்கெட்டிற்குள் அவர்கள் உதவித்தொகைப் பணமாக சுருட்டப்பட்டிருப்பார்கள். பிணந்தின்னிகள் எல்லா இடங்களும் விஷப்புகையென ஊடுருவிக் கிடப்பதை நாவலின் பல இடங்கள் நமக்குக் காட்சியாக்கிக் காட்டுகிறது. அகதிகளின் பிரதிமைகள் ஆர்.ஐ யின் கைப்பைக்குள் காசாக சுருண்டிருக்க,அவர்கள் வெளியேறி வெகுதூரம் சென்று விட்டனர். கால் போன பாதையில் பயணித்து கைக்குக் கிடைத்த வேலையைச் செய்து கொண்டு பொழுதை நகற்றிடும் ஈழ அகதிகளின் வாழ்க்கை சாட்சியத்தையே பத்திநாதான் போரின் மறுபக்கமாகத் தந்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் துவக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். 2009ல் தற்காலிகமான சூழலின்  உபவிளைவாக மீள் குடியேற்றம் நிகழ்கிறது. எழுத்தாளர் பத்திநாதன் இங்கு இல்லை. அவருடைய சொந்த நிலத்தில் அகதியெனும் துயர்மிகு அடையாளத்தை அழித்துவிட்டு இலங்கைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்.  யாராவது முன்வந்து இந்த ஏதிலிகளின் வாழ்க்கையில் சிறு மாற்றத்தையாவது நிகழ்த்திவிட மாட்டார்களா? எனும் ஏக்கம் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது. .

அகதிகளுக்கு என இருக்கிற எந்த சர்வதேச சட்டத்தை இந்திய அரசு ஏற்பதில்லை. நடைமுறைப்படுத்துவதுமில்லை. முகாம் காரன் தன்னை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கியூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் காட்சிப்படுத்தவேண்டும். அப்போது எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வெளியே செல்ல முடியாது. அது மட்டுமல்ல அரசியல் பிரமுகர்கள் அந்த சாலையில் பயணம் செய்கிற போது நிச்சயம் முகாமை விட்டு வெளியேறக்கூடாது. ஒருவித மன அவஸ்தையில் அந்த நிலை கடத்தி நகற்றுவதில் ஏற்படும் உளச்சிக்கல்களை நாவல் நுட்பமாக வரைகிறது. தமிழகத்தில் மட்டும் 102 முகாம்கள் இருக்கின்றன. எல்லா முகாம்களையும் நகரத்தை விட்டு மிக வெளியேவிற்குள்ளும் வெளியேவிற்குள்தான் அமைத்திருக்கிறார்கள். இங்கே கொத்தனார் உண்டு, சித்தாட்கள்  கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. ஆனால் ஒரு பொறியாளர் இல்லை. கங்காணிகள் உண்டு. ஆனால் சூப்பர்வைசியர்களோ, மேலாளர்களே அறவே இல்லை. 90 ஆம் ஆண்டு வீடென நம்பி வாய்த்த. இடமும் கூட இன்று கூரைகளோ  தட்டோடட இத்து புத்துப் போய் கிடக்கின்றன. மொழியால் இனரால் கலாச்சாரத்தால் ஒன்றினையும் புள்ளிகளே ஈழ அகதிகளை இங்கே இருத்தி வைத்திருக்கும் ஒரே நம்பிக்கை. நாவலை வாசித்து முடித்த பிறகு விதவிதமாக மனதில் எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிப் பாருங்கள்.  நம்முள் சூழ்ந்திருக்கும் குறௌற உணர்ச்சியாவது குறையட்டும். 

(பத்திநாதனின் போரின் மறுபக்கம் எனும் தன் வரலாற்று நாவலைக் குறித்து எழுதப்பட்ட வாச்சியம்)…..

வாசிப்பைக் கோரி நிற்கும் 

ம.மணிமாறன்..

முந்தைய தொடர்களை வாசிக்க: 

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவில் நகரும் புல்லின் நிழல்) 19 – மணிமாறன்

Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented 19th Series Article (Sri Lankan Tamil Muslims) By Writer Manimaran.

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவில் நகரும் புல்லின் நிழல்) 19 – மணிமாறன்



இந்த எளிய வாழ்க்கையின் மீது தீவிரமான விசாரணைகளை நிகழ்த்துபவர்களாக எப்போதும் கலைஞர்களே இருந்து வருகிறார்கள். ஞாபகங்கள் எல்லோருக்குள்ளும் தான் அசைகின்றன. கடந்து சென்ற மணித்துளிகளை நினைவினில் மீட்டி கதையாக்கிடும் திறன் கொண்டவர்கள் யாவற்றையும் கதையாக்கித் தருகிறார்கள். எழுதுபவர்கள் மட்டுமல்ல வாசகனும் அறிந்த கதைதான். ஆனாலும் அதற்குள் உருகி ஓடும் கதைச்சொற்கள் வாசகனின் மனதைத் திறக்கின்றன. பிறகு அவரவர் மனதிற்குள் விதவிதமாக கதைகள் நகர்கின்றன. எப்படி இந்தக் கதைக்குளுக்கு நாம் மட்டுமே அறிந்த ரகசியமான பக்கத்தைக் கண்டறியவும், திறக்கவும் முடிகிறது.

எழுத்தாளனால் வாசகனை அதிர்ச்சியுறச் செய்திடவும், தனித்து அவனுக்குள்ளே பயணப்பட வைக்கவும் நிச்சயம் முடியும். அப்படியான கதைகளை எப்போதாவது தான் வாசிக்க முடிகிறது. அப்படியான மிக அபூர்வமான வாசிப்பனுபவத்தைத் தருவதாக இருக்கிறது பூனை அனைத்தும் உண்ணும் எனும் சிறுகதைத் தொகுப்பு. எழுத்தாளர் ஹஸீன் தன்னைப்பற்றிக் கூறுகிற போது நான் போரின் குழந்தை என்கிறார். போரும், நானும் சற்றேறக்குறைய ஒரே காலத்தில் தான் பிறந்து வளர்ந்தோம் என்கிறார். போர் குறித்த எந்த மயக்கமோ தனித்த பிரக்ஞையோ அவருக்கு எழுதுகிற போது ஏற்படவில்லை என்பதை அவரின் கதைகளே கூட நமக்கு உணர்த்துகின்றன. போர் மிக மிகப் பழமையானது. வரலாற்றின் துவக்கத்திலிருந்தே அது களத்தில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் இது பகுதி உண்மை மட்டுமே. நிஜத்தில் போரின் புள்ளிகள் மனித மனத்திலும் முகிழ்த்து மூர்க்கமாகி வெளிப்படுகிறது. அது இறந்து போன மனிதர்களின் உணர்வுகளையும் கூட குத்திக் கிழிக்கிறது. இந்த மனதின் கதைகளையே ஹஸீன் சிறுகதைத் தொகுப்பாக்கியிருக்கிறார்.

அப்படியானால் நரகத்தைக் காட்டு என்றாள் அந்தக் கூட்டத்தின் தலைவி என தொடங்குகிறது ஒரு கதை. தத்துவ தர்க்கங்களை ஒற்றைச் சிறுகதைக்குள் நடத்திட முடியுமா?. ஹஸீனால் முடிகிறது. சொர்க்கம், நரகம். கடவுள், சாத்தான். நல்லது, கெட்டது என்பதான இரண்டு கச்சிதமான நேர் எதிர்வுகளுக்கு இடையேயான தர்க்கங்களை தன்னுடைய ஊழிக்குச் சில நாட்கள் முன்பாக எனும் கதையில் நிகழ்த்துகிறார். அதற்குள் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களின் நிறுவனத்தன்மை குறித்த சின்ன சின்ன கேள்விகளையும் நிகழ்த்துகிறார். இந்த உலகில் கடவுளின் இடம் எது எனும் கேள்வியை எவர் எழுப்பாமல் இருந்திருக்கிறார்கள். தேடுபவர்களுக்கும், முற்றாக மறுப்பவர்களுக்கும் இடையில் சிக்காமல் போக்குக் காட்டி விளையாட. கடவுளர்களுக்குக் கதையே சரியான ஊடகம் என்பதை ஹஸீன் கண்டு சொல்கிறார். உயரம் குறைவானவனாக இருந்தபோதும், கடவுளுக்குரிய திடகாத்திரம் கொண்டவனாக இருக்கிறான். ஒற்றைக் கண்ணனைக் குறித்த சித்திரம் வாசகனுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது.” ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு நானே இறைவன் என்று சொல்லி வஞ்சிப்பார்கள் என்று இருந்தது. இது பைபிள் வாசகம். இதுவே வேறு ஒரு சொற்களில் குரானுக்குள்ளும், ஹதீஸ்களாகவும் வெளிப்படுகின்றன. மதங்கள் எப்போதும் அச்சப்படு, அப்போதுதான் சொர்க்கம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.

பூனை அனைத்தும் உண்ணும் - ஹஸீன் - அடையாளம் பதிப்பகம் | panuval.com

நீ இதுவரை எங்கிருந்தாய். அப்போ என்ன மயித்துக்கு நீ வேதங்களில் உன்னை அறியும் படி வேண்டினாய். மனிதனை ஏன் படைத்தாய்… இப்படி மனிதர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கடவுளிடம் விடையிருக்கவில்லை. பதில் தெரியாமல் போகிற போது அதிகாரம் எடுக்கும் ஒற்றை ஆயுதம் வன்முறை. அதனால் தான் கடவுள் எனச் சொல்லிக் கொண்டிருந்தவன் கதைக்குள் இப்படிச் சொல்கிறான். உங்களைத் தண்டனைக் கப்பல்களில் அடிமையாகப் பூட்டுவேன். மதத்தின் பெயரால் சண்டை மூட்டிவிட்டு வென்றவர்கள் தோற்றவர்களின் பெண்களை வெற்றுடம்பில் ஆயுதங்கள் கொண்டு தாக்கி, பலாத்காரமாக உடலுறவு கொண்டிருந்த போது மௌனமாகவோ அல்லது மகிழ்ந்தோ இருந்த உங்களின் கடவுளர்களை விட நான் மேலானவன் இல்லையா என்று கேட்டான் ஒற்றைக்கண்ணன். கடவுள் குறித்த வித விதமான தர்க்க மொழிக்குள் அந்த நிலத்தின் மனம் கதைக்குள் சுருள்சுருளாக விரிகிறது.

விழித்துக்கொண்டே உறங்குவது எத்தனை துயரமானது. மொத்த நிலமே எப்போதும் என்ன நடக்குமோ எனும் பதைபதைப்புடன் இருக்கிறது. நாம் நிஜம்தானா என மன அவஸ்தைக்குள்ளாகும் காட்சிகளை ஈழத்துப் படைப்பாளிகள் கதைகளை எழுதி கடக்கிறார்கள். துவக்குகள் தோளில் ஏறிய பிறகு இந்த நிலத்தில் யாருக்கும் உறக்கம் இல்லை. நிம்மதியாக உணவு உண்ணக் கூட நேரமில்லை. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். யாரும் உறங்கவில்லை எனும் கதைக்குள் இஸ்லாமான சிங்களவர் ஒருவர் வருகிறார். அவரோடு மல்லுக்கு நின்ன போலிஸ்காரர்கள் குடிகாரர்கள். அந்த முதியவரின் சிங்களச் சொல்லுக்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள். நிலைமை தலைகீழாகிறது. ஊரே குத்திக் கிழிக்கப்படுகிறது. எங்கும் ரத்த வாடையும் மனித ஓலமும் நிறைகிறது. யுத்த நாட்களில் தண்டனை முறைமைகளில் ஒன்றான போஸ்ட் கம்பங்கள் எவரையோ சுமக்கத் தயாராகக் காத்திருக்கின்றன. விளக்கு கம்பங்களில் துரோகிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டுக் கட்டித் தொஙக விடப்படுவதும், ட்ரக் வண்டிகளில் பிணமாக மனிதக்கூட்டம் எடுத்துச்செல்லப்படுவதும் இங்கே தினசரியும் நடந்தேறுகிறது. இந்த நிலத்தின் மனிதர்கள் யாவருடைய நினைவிலும் போர் உக்கிரமாகச் சுழன்றடிக்கிறது. பலரும் உள்ளுக்குள் உக்கிச் சாகிறார்கள். வெகு சிலர் கதைகளாக்கிக் கடக்கிறார்கள். ஹஸீன் கதைகளுக்குள் இயங்கும் மனிதர்களின் அகவெளிக்குள் பயணித்துக் கடக்கிறார்.

மனிதர்கள் ஒருபோதும் நிலையானவர்களில்லை. தன்னுயிரைக் காத்திட நண்பர்களை, ஏன் உயிரைக் காப்பாற்றியவனைக்கூட பலி தர தயங்காத மிருதன்கள். கம்பத்தில் கட்டியிருக்கும் போலிஸ்காரர்களை கட்டிவைத்திருக்கும் இடத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை அவனுடைய வீட்டை நோக்கி இழுத்துக்கொண்டு ஓடுகிறான் நண்பன். போலிஸின் வேட்டுச் சத்தத்திற்கு நடுவிலும் ஓட்டம் தொடர்கிறது. ஒருவனுடைய வீட்டை நெருங்குகிற போது ஒரு கரம் அவனை உள்ளே இழுத்துக்கொண்டு மற்றவனை வெளியே தள்ளுகிறது. காப்பாற்றியவனை வெளியே தள்ளி கதவைச் சாத்தும் குரூரத்தை உயிர் மீதான பயமும், சித்திரவதைகளின் மீதான அச்சமும்தான் ஏற்படுத்துகிறது. இந்த சம்பவங்கள் யாவும் வரலாறாகப் படிந்திருக்கிற குறிப்புகளிலிருந்து எடுத்தாளப்பட்டவைதான். தெருவில், வேலிக்கு மேலாக ஒரு வாழை இலை விழுந்து கிடந்தது. ஒரு ஆள் அசைவதுபோல் இருந்தது. என்னோடுதான் சுத்திக்கொண்டு இருந்தான். அவனுடைய மூத்த சகோதரனைச் சுட்டு விட்டார்கள். பாரூக் புலியில் பெரிய ஆளாக இருந்தார். அவருடைய அஞ்சலி நோட்டீஸ், பள்ளிவாசல் மதிலிலும், கிடுகு வேலிகளிலும், அபுசாலியின் கடைத்தட்டியிலும் ஒட்டப்பட்டு இருந்ததை, ஒரு அதிகாலையில் பரபரப்பாய்க் கைகளை இடுப்பில் குத்திக்கொண்டு கூட்டம் கூட்டமாய்ப் பார்த்தோம்.

ஈழப்போராட்டத்தில் முதன் முதலில் பங்கேற்ற முஸ்லீம் இளைஞர்களின் தளபதி பாரூக். அக்கரைப்த்தைச் சேர்ந்தவர் பாரூக் என்கிற ஹனீபா. யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தை 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ந்தேதி விடுதலைப்புலிகள் தாக்கியபோது பாரூக் மரணமடைந்தார். இது வெறும் குறிப்பாகக் கதைகளுக்குள் அசையவில்லை. வரலாற்றின் தீராத பக்கங்களை நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறது. போர் உக்கிரங்களை மட்டும் கதையாக்கிட மாட்டான் கலைஞன். மனதின் நுன்பகுதிகளுக்குள் பயணிக்கும் கதைச் சொற்களால் கட்டித்தந்திருக்கிறார் ஹஸீன்.

இன்றைக்கும்கூட பள்ளிவாசல் மௌலவிகளின் அதிகாரம் கேள்விக்கு உட்படுத்த முடியாததாக இருக்கிறது. அதிகாரத்தையும் அசைத்துப் பார்க்கும் ஆற்றலை மதம் இவர்களுக்கு வழங்கியிருக்கிறது. வீட்டைவிட்டு விலகி நிற்கும் இவர்களின் பாலியல் உளச்சிக்கல்கள் குறித்த கதைகள் தனித்துப் பேசப்பட வேண்டியவை. இதனையே ஹஸீன்தன்னுடைய ஆட் கொண்டு விடுதல் அது என்னும் கதையின் வழியே வாசகனுக்குள் கடத்துகிறார். மௌலவிகளின் ஓரினச்சேர்க்கை குறித்த கதைகளுக்குள் பேசப்படுவதாக இருப்பது அவர்களுடைய வக்கிர மனதையும், பாலியல் பிறழ்வையும்தான். இங்கே பள்ளிவாசல் போகிற சிறுவர்கள் வீடுகளில் பதுங்கி அழுது கிடக்கிறார்கள். மௌலவிகளின் வக்கிரத்தைப் புரிந்து கொண்ட இளைஞர்களால் கூட. இந்த முறைகேட்டைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இவற்றைப் பற்றி எவரிடம் முறையிட வேண்டுமோ, அவர்களே கூட ஒழுங்கில்லை எனும் போது என்னதான் செய்வது. “தடிமாட்டின் தாடியையும், ஜிப்பாவையும் அவர் கழற்றி எறியாமல் இன்னும் ஏன் அதற்குள் இருந்து கொண்டு அதை அவமரியாதைப்படுத்துகிறான். அந்த தசைப்பிண்டத்தினால் எவ்வாறு ஆசானாக இருக்க முடியும். நபியின் வயிறு வாடி வதங்கி அல்லவா இருந்தது..”

நூற்றைம்பது பக்கங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பிற்குள் சரிபாதிக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட மிக நீண்ட கதையொன்றை எழுதியிருக்கிறார். பூனை அனைத்தும் உண்ணும் எனும் கதை பேசுவது அந்த நிலத்தில் சுற்றித் திரிந்த, திரிகிற இளைஞர்களின் கதையைத்தான். அதற்குள் அவர்களின் பால்ய காலத்தின் சேட்டைகள், கொண்டாட்டங்கள், போராளிகளாகப் போவது எனும் உளவிருப்பத்தை, பாலியல் சிக்கல்களை, முற்றாத காதலையும், காமத்தையும் துளித்துளியாக கதையாக்குகிறார். கதைகளுக்கு நடுவே முஸ்லீம்களின் போர் பங்களிப்பையும், இலக்கியம், எழுத்து என்றிருக்கிற அந்த நிலத்தின் சகலத்தையும் காட்சிகளாக்கியிருக்கிறார்.

எஸ்.எல்.எம். ஹனீபா, ஹஸீன்

நிஸ்தார், உபைத், ஹிஸான், நஜீம் எனும் நான்கு இளைஞர்களின் வாழ்க்கைப்பாடுகளை ஒரு ஆட்டோகிராப்பின் குறிப்புகளாக்கித் தந்திருக்கிறார் ஹஸீன். இமையம், புது உணர்வு, கூர்மை என்று பல இலக்கிய சஞ்சிகைகளை இவர்கள் நடத்துகிறார்கள். பத்திரிக்கைகளுக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர்களே அவர்களுடைய மொழியையும்,அரசியலையும் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. எப்போதும் கதைக்குள் காலத்தைக் காட்டித்தர எழுத்தாளனுக்குக் கைவசமிருக்கும் தந்திரம் திரைப்படப்பாடல்கள் மட்டுமே. கதைகள் எங்கும் திரைப்படப்பாடல்கள் வாசிப்பவனின் மனதை வருடியபடி செல்கின்றன. வரலாற்றின் பக்கங்களைப் புரிந்து கொள்ள ஹஸீன்இந்தக் கதைக்குள் வேறு ஒரு முறைமையையும் உருவாக்குகிறார். கதைக்குள் வருகிற இளைஞர்கள் அவர்களுடைய மனதின் குரலை இலக்கியங்களில் தேடிக்கண்டடைகிறார்கள். அவர்கள் எஸ். பொவின் ஆண்மை கதையையும், ல.ச.ராவின் த்வனி கதையையும் உரத்த குரலில் குழுவாக வாசிக்கிறார்கள். இலக்கியம் எப்போதும் தன்னுணர்வு குறித்த மயக்கத்தில் கிடப்பவர்களைக் கலைத்து வெளியேற்றுகிறது. அதனால்தான் இவர்கள் காலம் முன்வைக்கும் அரசியலை எதிர்கொள்ளும் மனிதர்களாக வளர்கிறார்கள். பின்வரும் இரண்டு குறிப்புகள் இந்த தொகுப்பிற்குள் அலையும் மனதைப் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது.

நிஸார், உபைத் எனும் பத்திரிக்கையாளனைப் பார்த்துக் கேட்கிறான். நீர் இயக்கத்துக்குப் போனதற்குக் காரணம், இன அரசியலா? அல்லது துவக்குகளின் மீதான கவர்ச்சியா?. ஏற்கனவே உமக்குத் தத்துவத் தெளிவிருந்ததா அல்லது இயக்கத்தின் பக்கம் போன பிறகு உருவானதா… இப்படியாகப் பல கேள்விகள் அப்போதைய ஈழத்து இஸ்லாமிய இளைஞர்களின் மனதில் முகிழ்த்துக் கொண்டேயிருந்தது.

“என்பத்தியேழுகளிலெல்லாம் ஜிகாத் இல்லையென்று சொல்ல ஏலாது. முஸ்லீம் குழுக்கள் ஜிஹாத் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணம் முழுவதிலும் இருக்கிற ஊர்களிலிருந்தாலும் ஒருவொருக்கு ஒருவர் தொடர்பில்லாமல்தான் இருந்தார்கள். இதனை ஒருங்கிணைக்கவும் யாரும் முயற்சி செய்யவில்லை. தமிழ் இயக்கங்களின் நெருக்குவாரத்தால் வந்ததனால் பெரியதொரு ஐடியோலொஜி இருக்கவில்லை. காசுப்புழக்கம் வந்தவுடனே அமைப்புகளுக்குள் பிளவுகள் உருவாகத் தொடங்கிவிட்டன. இவையாவும் வெறும் குறிப்புகளில்லை என்பதை நாம் உணர்கிறோம். இரண்டு வரிகளுக்கிடையே ஊதி, ஊதி உருவாகுகிற பள்ளங்களில் அந்த நிலத்தின் மனிதர்கள் யாவருக்கும் சொல்வதற்கு ஒரு நூறு கதைகள் இருக்கின்றன.

நாங்க அவர்களின் நியாயமான விசயங்களின் பக்கம் இல்லையென்றில்லை. யாழ்ப்பாணத்து முஸ்லிம்களை வந்து மீண்டும் குடியேறுங்க என்று பிரபாகரச் சொல்லச் சொல்லுங்கோ. காத்தான்குடி, ஏறாவூர் படுகொலைகளை இன்றுவரையிலும் கூட புலிகள் பகிரங்கமாக ஏற்கவில்லையே. எங்களையும் ஒரு தனித் தேசியம் எண்டு ஒத்துக்கொள்ளனும். முஸ்லிம்களும் ஒரு தனியினம். ஒரு சிறுபான்மையை இன்னுமொரு சிறுபான்மை ஏற்றுக்கொள்ளாட்டி தமிழர்களின் போராட்டத்தை எப்படி நாங்கள் நியாயம் என்று சொல்ல முடியும். …

போரைப் பற்றியதாக மட்டுமில்லாது மனிதக் குலத்தின் தனித்த பண்புகளான அன்பு, பெருங்காதல் வேடௌடை என யாவற்றையும் கதைகளாக்கித் தந்திருக்கிறார் ஹஸீன். இந்த தொகுப்பில் இருக்கும் செங்க வெள்ளை கதை உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று. வேட்டையின் தடங்களை மனதெங்கும் நிறைத்திருக்கும் இனக்குழு இது. வேட்டையின் போதான இருளையும் நிலத்தையும் நுனுகி, நுனுகி விஸ்தாரமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர். முயல் வேட்டைக்கான பயணம்தான். ஆனால் கிடைத்ததோ செங்க வெள்ளை எனும் பறவை. இவனுகள்ள பிள்ளைகள் காட்டக் கலக்கி கலக்கி எல்லாம் பொய்த்து. யாருக்காக நடக்கிறது இந்த வேட்டையெல்லாம். இது இவர்களால் ஒருபோதும் விடமுடியாத தொல் சடங்கு.. எனக்கு ஒரு மாதிரியாப் போனது. எவ்வளவு கஷ்டப்பட்ட போதும், இதில் தாஜீதினுக்கு எந்த இரணம் இல்லை…

பறவையும், மீனும் நிறைந்திருக்கும் பையை வேட்டையில் உடன் வந்த தாஜீதின் எடுத்துப் போவார் என்றுதான் கதைசொல்லியை போல நாமும் நினைக்கிறோம். அத்தனை துயரமும் வலியுமான பயணம் அது. ஆனால் வேட்டைக்காரர்களுக்கு வேட்டையின் சாகசம் மட்டுமே போதுமானது. அதனால்தான் தாஜிதீன் உங்களுக்குத்தான் எல்லாவற்றையும் கொண்டு போங்கள் என்று உலகிற்கே தன்னுடைய வேட்டையின் பொருட்களைத் தருகிறார்.

காதல், வீரம், வேட்டை, பிரியம், துரோகம், யுத்தம் என அனைத்தையும் பூனைகளின் கண்ணொளியின் கதையாக்கித் தந்திருக்கிறார் ஹஸீன்..

( பூனை அனைத்தும் உண்ணும் எனும் ஹஸீனின் சிறுகதைத் தொகுப்பிற்காக எழுதப்பட்டிருக்கும் வாச்சியம்)

நேசத்துடன் எதிர்பார்த்து
ம. மணிமாறன்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்

Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented 18th Series Article (Tamil Muslims) By Writer Manimaran. Book Day is Branch of Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்

கடந்த காலத்திற்குள் பயணம் செய்வதும் அதன் வழியே நிகழ்காலத்தின் புதிய தடங்களைக் கண்டுணர முயற்சிப்பதும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. அதிலும் குறிப்பாக எழுத்தாளர்கள் நினைவுக் குளத்திற்குள் அலைந்தே கதையெனும் வசீகரத்தைக் கண்டடைகின்றனர். எழுதிச் சேர்த்திருப்பதில் தன்னையும், தன் மன விருப்பங்களையும் கொந்தளிப்பான…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented 17th Series Article (Tea Plantation workers) By Writer Manimaran.

போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்

வாழ்க்கை என்பது எப்போது மெய்யாகிறது. அவரவர் தன்னையும் தன்னிலையையும் அறிந்து கொள்ளும் போதா. இல்லையெனில் வேறு எப்போது . இப்படி ஒரு கேள்வி உதிக்கும் போதே கிளை கிளையாகப் பல இணை துணை கேள்விகளும் எழுவது எதார்த்தம் தானே. இந்த உலகத்தில்…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article (Tea Plantation workers) By Writer Manimaran.

போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்

வாதைகளை மட்டுமே தன்னுடைய வாழ்நாள் முழுக்க எதிர்கொள்வது எத்தனை துயர்மிக்கது. உடலில் ஒட்டி ஒடுங்கியிருக்கும் வயிறு எப்போதும் தன்னை நினைவூட்டிக் கொண்டேயிருந்தால் எப்படித்தான் நகர்த்துவது பொழுதுகளை. வாழ்வின் வெற்றி,தோல்விகளைத் தீர்மானிக்கும் ஒற்றை சக்தியாகப் பணம் மட்டுமே இருக்கும் எனில், இந்த வாழ்க்கைக்கு…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article (Tea Plantation workers) By Writer Manimaran.

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்

யாரெல்லாம் தமிழ் நிலத்திலிருந்து கூலிகளாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். மலையகத்து காமிராக்கள் எனும் தகரக்கொட்டகை வாழ்க்கை குறித்த புரிதலோடுதான் அங்கு போனார்களா?. போகும் பாதையிலேயே பசியால் சுருண்டு விழுந்த சனம் எத்தனை?. போன இடத்தில் கொக்கிப் புழு நோயினால் மடிந்த மக்கள்…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article (Dry Cleaners) By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்

எடுத்துரைக்க ஆளில்லை. ஏனென்று கேட்பாருமில்லை. வாழும் நிலத்தில் வாழ வகை தொகையற்று கசங்கிக் கிடக்கும் கந்தலைப் போலான மனிதர்கள் இவர்கள். சடங்குகளை நிறைவேற்ற நடு வீடு வரையிலும் போய் திரும்பும் வழிவகை தெரிந்தவர்கள். ஆனாலும் சேவை சாதி எனும் கட்டுத்தளையை அறுக்க…