கவிதை : மகிழ்ச்சியின் பிரலாபம்.. - ஜலீலா முஸம்மில் kavithai : magizhchiin pralaabam- jaleelaa musammil

கவிதை : மகிழ்ச்சியின் பிரலாபம்.. – ஜலீலா முஸம்மில்

நேச உள்ளங்களின் சந்திப்புகள் நேற்றோ இன்றோ நாளையோ நிகழ்தல் கூடும் அக்காத்திருப்புகளின் நொடிமுட்கள் வானளாவ முட்டி நட்சத்திரங்களைத் தரைக்குத் தட்டி விடும் வளைந்து வளைந்து வானவில் வட்டங்களை வரைந்து தள்ளும் பின்னும் பெரும்படையில் அமைதிக் கோஷமிடும் ஆன்மாவிலுதித்த அன்பின் பட்டாம்பூச்சிகள் வானம்…
பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘ விண் பறவை’
********************
திரு திருவென
முழிக்கின்றன விண்மீன்கள்!
நீந்தவும் தெரியாமல்
பறக்கவும் தெரியாமல்
ஒரே இடத்தில்
ஒய்யார ஒளியில்
ஜொலித்துக் கொண்டு!

எத்தனை பேர்…
வெளிறிக்கிடக்கும்
விரிந்த வானத்தை
விழிகளுக்கு விருந்து
படைத்திருக்கிறோம்?

ஆகாயத்தை
எப்போது நோக்கின
மனிதக் கண்கள்?

வானம் பார்ப்பதாக….
மழையையும், விடியலையும்
தேடியே…..
பார்த்ததுதான்
மனிதனின்
சுயநல நோக்கு!

மனிதரின்
கண்களெல்லாம்
மினுக் மினுக்கெனத்
தெரியுமோ?
வானத்துக் கண்களுக்கு!

இந்த பூமியின் புரட்டுகளை
இலட்சோப லட்சம்
கண்களென…..
நட்சத்திரங்களைக் கொண்டு
கண்காணிக்கின்றதோ வானம்!

நீந்துவதுதான்
மீனின் பாஷை;
நீந்தத் தெரியாத
நட்சத்திரங்களை….
மீனென … விண்மீனென
அழைப்பதிலிருந்தே
இந்த மனிதன்
எவ்வளவு விவரம் புரியாதவனென
நினைக்கத் தோன்றுகிறது!

பறவைகள்
சுயநலமற்றவையென்பது
அவற்றின் வாழ்க்கை
உணர்த்தும் பாடம்;
மனிதருக்கும், மற்றவைக்கும்!

இப்படி…. அப்படிப்
பறக்க வேண்டுமென
நட்சத்திரங்களுக்குப்
பரம்பரை பரம்பரையாக
கற்றுக்கொடுக்கத்தான்
மேலே பறக்கின்றன பறவைகள்!

ஒரு நட்சத்திரமும்
பறத்தலைக் கற்றுக்கொண்டதாகத்
தெரியவில்லை!

பறவைகளும் விடுவதாக இல்லை;
போதித்தல் என்பது
தொடர் நிகழ்வு என்பதை
பறவைகள் சொல்லிக்கொடுத்துக்
கொண்டேதான் இருக்கின்றன!

எப்படி இருக்கும் என
நினைத்துப் பார்க்கின்றேன்;
நட்சத்திரங்கள்
பறந்து வந்தால்
இந்த….
இருண்ட பரந்த வானத்தின்
வனப்பை!

தூண்டில்
**********
உயிர் துறக்க
உசுப்பேற்றி, ஆசைகாட்டி
சுவையூட்டும்…..
தூக்குமரமே தூண்டில்!

எத்தனை எத்தனையோ
உயிர்களை வதைத்து…
மீண்டும் மீண்டும்
அதே அவதாரம்!

மடிந்த உயிர்களின்
கவுச்சியும்,
சிக்கித் தப்பியதுகளின்
சதை நாற்றமும்
ஆழமான தண்ணீரில்
வீசினாலும்,
எப்படிக் கழுவப்படும்?
இறந்துபோன உயிரின் நாற்றம்
அந்தத் தூண்டிலில்!

அறிவற்ற மீன்கள்,
பரம்பரை பரம்பரையாக
தூண்டிலில் தொங்கும்
எச்சில் சில்லுகளுக்கு
ஆசைப்பட்டு……
மடியும் சோகம்!

அடிபட்டு, விடுபட்ட
அறிவற்ற மீன்கள்
தம் அனுபவத்தை
பகிர்ந்து…..
தம் இனம் காக்க
அறிவு பெற்றால்;
தூண்டில்கள் இந்நேரம்
தொலைந்தே போயிருக்கும்!

ஆசை
யாரை விட்டது;
அடிபட்ட மீனும்
ஆசைக்கு ஆட்படுவது
இயற்கையன்று;
அறியாமை!

ஆசையென்பது
அறியாமையின் வெளிப்பாடே!

-பாங்கைத் தமிழன்

மகேஷ் கவிதைகள்

மகேஷ் கவிதைகள்




ஆழம்!
**********
சிதறிய பாகங்களை
கிளறியபடி நகர்கிறது
கைவிடப்பட்ட
ஓர்
அநாதை நினைவு!

வனங்களை விழுங்கிய
பூங்காவினுள் கொதிக்கிறது
பாலைவன அனல்!

சிதைந்த சொற்களின் மீது
நடனமாடியவன்
வேடம் கலைக்கிறான்!

சொற்களைப் பதிந்து கொண்ட
உணர்வுகளில்
விழுகிறது
பெருங்கீறல்!

பல்வேறு வெளிகளில்
தயங்கி
வார்த்தைக்கு வலிக்காமல்
வரி கோர்த்தவனுக்கு
பரிசாகிறது
புதைகுழி!

அகன்றுவிட்ட நாட்களை
கோர்த்துக் கொள்கிறது
அகத்தேடல்!

நட்புக்கும் உறவுக்கும்
அவப்பெயரிட விரும்பாத
அஞ்ஞான உணர்வொன்று
அமிழ்ந்து கிடக்கிறது
மன மூலையில்!

கனவுகள்!
**************
ஓரங்கட்டப்பட்ட
இருக்கைகளில்
உறங்கிக்கொண்டன
ஓராயிரம் கனவுகள்!

காடு மலை
கடல் நதி
ஆகாயமெனக்கடந்து
நட்சத்திரங்களை
சமீபித்தபின்
கட்டப்பட்டன கைகள்!

பறவையின் இறகுகளைக்
துணைக்கழைத்துக்கொண்ட

வானத்தில்
பலியிடப்பட்டது
புலியின் வீரம்!

இறகுகளை இறுக்கிக்கட்டவும்
ஏதோ ஒரு
சமிக்ஞை மின்னல்
விரைகிறது!

கற்பனை தேசத்துக்
காவிய வெள்ளங்களை
அணைகட்டுகிறது அழுத்தம்!

கனவு கவிழ்தலின்
வீதி வியாபாரம்

விதியாய்க்களைகட்டுதல்
அமோகம்!

கரைகளை
உடைத்தெறிந்த விபரீதங்களில்
ஊசலாடும்
உயர் கனவுகள்!

இரவின்
அழகு தேசங்களில்
ஏற்றி வைத்த
கனவு தீபங்களை
அணைத்து விரையும்
பாழான பகல்கள்!

இன்னும்
நீள் வரிசை கட்டி
நின்று தவமிருக்கும்
நிறைவேற்றச்சொல்லிக்
கெஞ்சும்
அழியாக்கனவுகள்!

உணர்வெனும் பறவை!
*****************************
சிறகொடிந்த பறவையான
உணர்வொன்று
உடைந்து விழுந்து
அழுகிறது!

அம்பெய்த வேடன்
அடுத்த குறிக்கு
ஆயத்தமாகிறான்!

சந்தோஷ மயக்கங்களில்
வானம் தொட்ட உணர்வு
அடிபட்டு
அழுந்தித்தவிக்கிறது!

மீட்பர்
யாரேனும்
உணர்வு காக்கலாம்
எனக்கணிக்கவியலாது!

எப்படியோ மீளும்
உணர்வுப் பறவை
எனும் நேர்மறைகள்
பலிக்கலாம்!

ஆயின்
கடுஞ்சொல் புனைந்து
எய்த வேடன் வீழ்ந்ததாய்
நினைவடுக்கங்களில்

பதிவேடுகள்
ஏதும்
அகப்படவில்லை!

எங்கேனும்
சொற்கள் படபடக்கும்
ஓர்
நாவரசனை வினவலாம்!

– மகேஷ்

Karkavi's Poems 6 கார்கவியின் கவிதைகள் 6

கார்கவியின் கவிதைகள்

உலகின் தலைசிறந்த சொல் ‘வறுமை’
**********************************************
“ஆயிரங்களைத் தாண்டிய பட்டாசுப் புகையில்
நமத்து போகிறது
சில அப்பாக்களின் தீபாவளி,
தூரத்து குடிசையில் வானத்தையும்
பலரின் வீட்டு வெடி ஜாலத்தையும்
காண்பித்துச் செல்கிறது பல அப்பாக்களின் தீபாவளி “

” நூறு சரத்தில் எஞ்சிய ஏழு வெடிகள்
ஏழைக்கு ஒரு சரமாகிப் போகிறதெ,
நெருப்பில் வலு இல்லாமல்
தரையின்கீழே தள்ளப்படுகிறது
பல புதுவானங்கள் “

நேற்று தீபாவளி நன்றாக இருந்தது
அம்மாவின் ஏழு வகையான பலகாரங்கள்,
இன்று மணி ஏழை கடந்தது
இதுவரை எழவில்லை
அம்மாவும்
அவர்களின் இடுப்பு வலியும் ”
ஒவ்வொரு உயிரும் கூறும்
உலகின் தலைச்சிறந்த சொல் ‘வறுமை’

நட்சத்திரக் கிழவி
*********************
அவளின்
யதார்த்த நடைப் பேச்சுவாக்கில்
கிள்ளியெறியக் காத்திருக்கின்றன
வெற்றிலைக் காம்புகள்…

ஓயாமல்
வெற்றிலைக்குப் பாக்கு இடிக்கும்
அவளிடம்
கேட்ட பிறகு
வளைந்து நிமிர்ந்து செல்கின்றன
ஊர்களின் சாலைகள்…

எத்தனை பேர் வந்தாலும்
‘ஏலே நீ அவன் மகன் தான’ என
கையடக்கி வைத்துள்ள டேடா சீட்டுகளின் சொந்தகாரியிடம்
சேகரிக்கப்படுகிறது….
மின்தடையில்லாத
டேடா தொகுப்புகளின் கணினியவள்…

அந்த மூன்று நாள்
********************
விடியல் பல இருப்பினும்
இந்தவிடியல் புதுமையே
ஆறு மணிக்கு எழுந்தவள்
ஐந்துக்கே எழுகை
ஆர அமர துவைத்தவள்
விடியுமுன்னே குளியல்
இரு நாள் யதார்த்த குளியல்
கடைசிநாள் எள் எண்ணெய் கொண்ட குளியல்…
மூன்று நாள் கழிந்து
மிச்சமிருக்கின்றன
வலியும்
ஒரு ரூபாய் சியக்காயும்….

Manathil Odum Yutha Puyal Poem By Vasanthadheepan மனதில் ஓடும் யுத்தப் புயல் கவிதை - வசந்ததீபன்

மனதில் ஓடும் யுத்தப் புயல் கவிதை – வசந்ததீபன்




இருளுக்குள் விழித்தபடி மெழுகுவர்த்தி
எதிர் மதிலின்மேல் என் நிழல்
எனக்குள் ஒருவன்
முகத்தில் ஆயிரம் மின்மினிகள்
உதடுகள் தேனடைகள்
களி கொண்டு தாவும் பொன் மான் விழிகள்
எறும்பு அரிசியை இழுத்துச் செல்கிறது
வியப்பாய் இருக்கிறது
வீட்டிற்குள் மழை பெய்கிறது
காற்றைப் புகைப்படம் எடுத்தேன்

காற்றைக் காணவில்லை
மரங்கள் தான் தெரிந்தன
சுமையில்லாமல் பயணிக்க விரும்புகிறேன்
சுமைகள் கூடுகின்றன
சுமையற்ற பயணத்தை மனதுக்குள் வரைந்து பார்த்தேன்
நீருக்குள் இறங்கினேன்
கரையேறுகின்றன அலைகள்
மெல்ல நகைத்து அடங்கியது நதி
கிழிந்த கூரை
உடைந்த மதில்கள்
கவிதை தின்கிறான் கவிஞன் பாஷோ
சிலந்தி வலை
வருகிறது மூடுபனி
பொம்மைகளின் திருவிழா
தூரத்து மலைகள்
குருவிகள் பறந்து போகின்றன
நான் பார்க்கிறேன்
ஒரு துளி விழுந்தது
பல துளிகள் கலந்தன
முதல் துளியைக் காணவில்லை
புலம்புவதாய் நீங்கள் நினைக்கலாம்
பிதற்றுவதாய் நீங்கள் முடிவு செய்யலாம்
யாவும் உண்மை.

Umamohan's poem உமா மோகனின் கவிதை

உமா மோகனின் கவிதை




சின்னதாக நிலவைப் பிய்த்துக் கொள்ள ஒரு கை நீண்டது
அதைத் தட்டிவிட்ட இன்னொரு கை
தொடாதே என் உடைமை என்றது

நிலவுக்கு நடந்த அசம்பாவிதம் கண்டு
தலைதெறிக்க ஓடி ஒளியத் தொடங்கின விண்மீன்கள்
மேகத் திரளுக்குள் வசதியாக நகர்ந்து
அமர்ந்து கொண்ட கதிரவன்
என் வெம்மையை வைத்துக்கொண்டே
இவன்களிடம் சமாளிக்க முடியலையே
இந்த பூமி பாவம் என்றிட
இடி இடியெனச் சிரித்தது இடி
கண்ணீர் சிந்தி பூமிக்கு ஆறுதல் சொன்னது மழை

அண்டசராசரத்தையும் எனது எனது
எனக்கு மட்டுமானது
நானே உயரம்
என்று அகப்பட்டதை கைக்கொண்டு
அடுத்தவரைப் பள்ளத்தில் தள்ளியபடி
சாதி சாத்தான்
சமயப்பிசாசு
கூட்டணி வருகிறது
ஓடுங்க
அது நம்மை நோக்கிதான் வருது

நிற்க
திரும்பி
எதிர்த்து நிற்க
கைவந்தது
சமமே யாவரும் சரிசமமே
மந்திரம்
உரத்துச் சொன்னால்
ஒதுங்கும் உருவங்களைக் கண்டுகொள்

Short Poems by Vasanthadheepan வசந்ததீபனின் குறுங்கவிதைகள்

குறுங்கவிதைகள் – வசந்ததீபன்




குறுங்கவிதைகள்
_________________________
ஆகாயத்தில் மேகங்களில்லை
நெருப்பு கொட்டியது
நிலமெல்லாம் ரத்தம்
விமானங்கள் மறையத் தொடங்கின.
🦀
நதியை வரைந்தேன்
மீன்கள் துள்ளின
பறவைகள் பறந்தன
மணல் வண்டிகள் வரத் தொடங்கின.
🦀
கோவணத்தையும் இழந்து
சாலைகளில்
உலகத்திற்கு உணவூட்டிய
கடவுள்கள்.
🦀
நட்சத்திரங்களைப்
பார்த்தபடி
ஏக்கத்துடன் கழிகிறது
கண்ணீரில் நனைந்த நிகழ்காலம்.
🦀
தேவதைகள் சிறகுகளுடன் வருவார்கள்
அற்புதங்களை நாளும் நிகழ்த்துவார்கள்
குழந்தைகளின் கனவுகள் விதைப்புக்காலம்.
🦀
ஓநாயின் நாக்கில் பசி ஊறிச் சொட்டுகிறது
மரங்கள் கூட அசையாமல் நிற்கின்றன
பிடரியிலுள்ள உண்ணியை தட்டிவிட
அது பெரு முயற்சியெடுக்கிறது.
🦀

Iravu Yen Azhugirathu ShortStory by Kumaraguru. இரவு ஏன் அழுகிறது? சிறுகதை - குமரகுரு

இரவு ஏன் அழுகிறது? சிறுகதை – குமரகுரு




இரவொரு மாயக் கழுதை. அது சுமக்கும் பொதி நட்சத்திரங்கள். மாயம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அது விடியலில் மாயமாய் மறைந்து விடுவதால். இரவை மறைக்கத் துவங்கிய மனிதனுக்கு மின்சாரம்தான் துருப்பு சீட்டு. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நெடும் இரவுகளில், மொட்டை மாடிகளில் மினுக்கும் உரையாடல்களின் ஓசையை இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நிலா கேட்கிறது.

அப்படிப்பட்ட ஒரு இரவில் தொலைக்காட்சியில் ரைம்ஸ் பார்க்காமல் நட்சத்திரங்களை இணைத்து படம் வரைவது பிடித்து போன ஒரு சிறுமியை தினமும் மொட்டை மாடியில் பார்க்கிறேன். அவள் ஆட்காட்டி விரலை ஊசியாகவும் காற்றை நூலாகவும் உருமாற்றி என்னென்னவோ வரைகிறாள். எனக்கு அது எதுவெதுவாகவோத் தெரிகிறது.

இரவு பிடிபடாத நாட்களில் உறங்கி விடுகிறது உலகம். உலகம் பிடிபடாத நாட்களில் வரவே வராத உறக்கத்தை கண்கள் சிவக்க சிவக்கப் பார்த்தபடியிருப்பதுதான் பலருக்கு வாய்த்திருக்கிறது. சில நேரங்களில் இப்படி பல நாட்களாய் உறங்காதவனின் சிவந்த விழிதான் சூரியனோ என்று கூட தோன்றும்.

இரவு விலகி பகல் நுழையும் நேரத்தில் சைக்கிளில் வந்து பால் பாக்கொட்டுகளையும் செய்தித் தாள்களையும் விநியோகித்து செல்லும் சிறுவர்களின் சைக்கிள் கேரியரில் அமர்ந்து கொண்டாட்டமாக பயணிக்கும் இரவு.

காற்று சில்லென்று வீசுமொரு டிசம்பர் மாதத்தின் இரவில் தெருவோரத்தில் பீடியைப் புகைத்தபடி நடந்து செல்லும் வயசாளியின் இருமல் ஒலி கேட்டு அமைதியாகி விடும் நாய் கூட்டமும் உண்டு. அவை அந்த இருமலை ஒரு சமிக்ஞையாக கொண்டு இரவைத் திருட வரும் எவனிடமோவிருந்து இரவைக் காப்பாற்ற கதறி, அந்த இருமலொலியில் இரவு பத்திரப்பட்டுவிட்ட சமாதானத்தில் அமைதியாகிவிடுகின்றன போல.

கடை மூடும் நேரம் சரியாக டாஸ்மாக்கில் வாங்கிய குவாட்டரை எடுத்துக் கொண்டு வாட்டர் பாக்கெட்டைப் பிதுக்கியடித்து பிளாஸ்டிக் கிளாஸைக் கழுவி, அதில் பானத்தையும் நீரையும் கலந்ததும் வரும் நிறம்தான் இரவோ?

கவலைகளற்ற நாளில் தோழனின் தோள் மீது கைப் போட்டு நடக்கும் தோழியைப் போல் இரவு குதூகலமாக நடந்து செல்கிறது. எப்படித்தான் அதனால் சற்றும் சலனமின்றி இருக்க முடியுமோத் தெரியவில்லை.

நடுநிசியில், மூடப்பட்டிருக்கும் கடை வாசலில் அமர்ந்து கொண்டு கம்பளிக்குள் நடுங்கி கொண்டிருப்பவனின் கண் முன் நிசப்தமான கண்ணாடி குடுவைக்குள் குலுங்காமல் நிற்கும் நீரைப் போல கிடந்த இரவை “வ்ர்ரூம்ம்ம்!!” என்ற ஒலியுடன் அசைத்து செல்லும் ஒரு வாகனத்தின் ஒலி தூரம் செல்ல செல்ல மறைந்ததும் மீண்டும் இரவு அதே போல் அமைதியாக அசையாமல் அப்படியே இருப்பதைக் கம்பளிக்குள் நடுங்குபவன் உணர்வதேயில்லை!!

இப்போதொரு இரவு, வெட்ட வெளியில் மல்லாந்து கிடப்பவனின் கண் முன் குப்புற படுத்திருக்கிறது. அதற்கொரு முகமுண்டு. அந்த முகம் நாமெல்லாம் நினைப்பது போல் கண் காது மூக்கு வாய் கொண்டதல்ல. இரவின் முகம் இருட்டு. அந்த இருட்டு முழுவதும் பரவியிருக்க, முழுதும் நிரம்பிய பெருநதியின் நீரோட்டமென எத்திக்கும் பரவியோடுகிறது. அந்த முகத்தில் கண்ணுக்கு புலப்படாத, மறைந்திருக்கும் இரவின் கண்களிலிருந்து லட்சோபலட்சத் துளிகள் கண்ணீராகப் பொழிகின்றன. அது யாருக்கான கண்ணீரோ? யாருடைய கண்ணீரோ?

பகலெல்லாம் சிரிப்பதைப் போல் நடிக்கும் இரவு, இரவெல்லாம் அழும் ஒலி கேட்பதைப் போல் நினைப்பவனின் மூளையில்தான் கோளாறோ? கிரிக்கெட் பூச்சிகள் இறக்கைகளை உரசத் துவங்கிவிட்டன… தவளைகள் எந்கேயென்றுத் தெரியவில்லை-அமைதியாக எங்கேயோ ஒடுங்கியிருக்கின்றன போல… ஆங்காங்கேப் பறக்கும் இரவுப்பறவைகள்… புதர்களுக்குள் மறைந்தமர்ந்திருக்கும் கொக்குகளின் கண்கள் பச்சை நிற பளிங்கு போல் மின்னுகின்றன… குளத்தங்கரையெல்லாம் நிலாவின் ஒளி வீழ்ந்து குளத்துக்குள் இல்லாத நீரைத் தேடி கொண்டிருக்கிறது… நீரை மட்டுமா காணவில்லை? குளத்தைக் காணாமல் தேடியலையும் நிலாவிற்கு எப்படித் தெரியும்? நான் படுத்திருக்கும் இந்த பூங்காவின் புல்வெளி குளத்தை மண் கொட்டித் தூர் நிரப்பி உருவாக்கப்பட்டதென்பது?

ஒருவேளை அதை நினைத்துதான் இந்த இரவு அழுகிறதோ?

நட்சத்திரங்களின் தொலைவை எவ்வாறு கணக்கிடுகிறோம்? – பிரவீன்

நட்சத்திரங்களின் தொலைவை எவ்வாறு கணக்கிடுகிறோம்? – பிரவீன்

What is Parallax? சிறுவயதில் இரவு நேரங்களில் வானில் மின்மினிகளால் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைக் கண்டுகளித்த ஒரு சிந்தனையைப் பறக்கவிட்டிருப்போம். சிறு புள்ளியாய் தெரியும் நட்சத்திரத்துக்கும் நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? இன்று கிளம்பிப் பயணப்பட்டால் எத்தனை நாட்களில் நட்சத்திரத்தைச் சென்றடையலாம்?…