அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை – சு. வெங்கடேசன் எம் பி

அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை – சு. வெங்கடேசன் எம் பி




கீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? : உயர்நீதிமன்றம் |  Why is the central Government stubborn in the Keeladi excavation matter ? :  HC | Puthiyathalaimurai - Tamil News ...

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2014-15) கீழடியில் அகழாய்வுக்கான தொல்நிலம் ஒன்றினைக் கண்டறிந்து அங்கே அகழாய்வுப் பணியினை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு தொடங்கிய காலம்.

தொடக்கத்தில் நானும் நண்பர்களும் மாதத்திற்கு ஓரிரு நாள்கள் அங்கு போய்வரத்தொடங்கினோம். ஒரு கட்டத்தில் மாதத்தில் பாதி நாள்கள் அங்கே கிடப்பது போலானது.

மதுரை எனும் வசீகர நிலத்தின் வாசல் திடீரென மண்ணுக்குள் திறந்தது. “மண்மூடிப்போக” என்ற சாபம்தான் இது வரை கேள்விப்பட்டதுண்டு. ஆனால் மண்மூடிகிடக்கும் வளத்தை தோண்டத்தோண்டப் பார்த்து பூரித்தோம்.

தொல்லியல், வரலாறு, இலக்கியம் என எல்லாவற்றையும் நேரங்காலம் அறியாது அகழாய்வு குழிகளின் ஓரம் நின்று நாட்கணக்கில் பேசினோம்.

முதலில் இந்து தமிழ் திசை நாளிதழிலும் பின்னர் ஆனந்தவிகடனிலும் கீழடி பற்றி எழுதத் தொடங்கினேன்.
கீழடி பற்றிய உண்மைகள் சிறிது சிறிதாக வெளிஉலகிற்குத் தெரியத் தொடங்கியது.

அதன் பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின.புதையுண்ட இடத்தை மீண்டும் புதைக்க நினைக்கும் செயல்பாடு தொடங்கியது. அரசியல் வெளியில் கீழடி இயங்கத் தொடங்கியது. அகழாய்வைக் கைவிட நினைத்தவர்கள் அது முடியாது என்ற நிலையில் அமர்நாத் இராம கிருஷ்ணனை அசாமிற்கு அனுப்பினர். பின்னர் ஒருவரை நியமித்து “அங்கு எதுவுமில்லை” என்று அறிக்கை கொடுத்தனர். சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என்று அனைத்து மன்றங்களும் கீழடிக்கான போராட்டக்களங்களாக மாறின.

எண்ணிலடங்காப் பொழுதையும் பணியையும் இதன் பொருட்டு செலவழித்தவர்கள் பலர். அவற்றில் முதன்மையானவர் அமர்நாத் இராமகிருஷ்ணன். தனது அலுவல்தொழில் சார்ந்தே இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டார். ஆனால் அதில் ஓர் அநீதி இழைக்கப்பட்ட போது அதனை அவர் எதிர்கொண்ட முறையும் அதன் பொருட்டு அவர் அடைந்த துயரமும் மிகப்பெரியது. என்றும் போற்றுதலுக்குரியது.

கீழடியில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் திறக்கப்பட்ட நாளில் தனது அகழாய்வு அறிக்கையின் நகல் ஒன்றினை எனது பார்வைக்குத் தந்தார். அதனை வாங்கி சில நிமிடங்கள் மட்டுமே கையில் வைத்திருக்க முடிந்தது. இந்த உண்மைகளை உலகிற்கு சொல்லத்தான் இவ்வளவு பாடு. உண்மைகள் எழுத்தாக உருப்பெறும் போதே ஆற்றலின் வடிவங்கொள்கிறது.

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை இவ்வாய்வறிக்கையை வெளியிடும் நாளுக்காக காத்திருக்கிறேன். விரைந்து வெளியிட வேண்டுமெனக் கோருகிறேன்.

சங்ககால மதுரை என்பது இன்றைய மதுரைக்கு கிழக்கே திருப்புவனம் பக்கம் இருக்கலாம் என்று 1960 களில் பேரா. மா. இராசமாணிக்கனார் எழுதினார்.

அவர் சுட்டிய திசையில் 2015 ஆண்டு அகழாய்வு நிகழ்த்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் சங்ககால நகரமொன்றினைக் கண்டறிந்து கொடுத்துள்ளார்.

இதுதான் பழைய மதுரையா அல்லது மதுரையையொட்டிய இன்னொரு நகரமா அல்லது மதுரையின் புறப்பகுதியா என்ற எண்ணற்ற வினாகள் எழுந்து நிற்கின்றன. ஆய்வின் முதற்பணி விடையை அறிவதன்று; வினாவை உருக்கொள்ளச்செய்வதே. கீழடி அகழாய்வு பல வினாக்களை உருக்கொள்ளச்செய்திருக்கிறது.

அதே நேரம் பல விடைகளை தெளிவுபடுத்தியும் இருக்கிறது. புரானீக கட்டுக்கதைகளையே வரலாறென நிறுவும் ஒன்றிய அரசின் முயற்சி தமிழ் மண்ணில் எடுபடாது. “இலக்கியமும் அகழாய்வும் இவ்வளவு இறுக்கமாக கைகுலுக்கும் இடம் வேறெதுவுமில்லை” என்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறுவது பேருண்மை.

வளமான சங்க இலக்கியச் சான்றும் பல்லாயிரக்கணக்கான தொல்லியல் எச்சங்களும் ஒருங்கே கைகூடி இருக்கும் கீழடி எமது செம்மார்ந்த மரபையும் தனித்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

மதுரையும் வைகையும் எமது மொழியின் முதுசொல்கள். அவை இன்னும் பல அறிஞர்களின் ஆய்வினூடே பற்பல வியப்புகளை நோக்கி நம்மை அழைத்துசெல்வன. அருங்காட்சிகள் வரலாறு நெடுகிலும் நமக்காக காத்திருக்கின்றன.

சு. வெங்கடேசன் எம் பி

தனித்து ஒரேயொரு நிருபராக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனுபவம் : ஏ.எம்.ஜிகீஸ் –  தமிழில்: தா.சந்திரகுரு

தனித்து ஒரேயொரு நிருபராக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனுபவம் : ஏ.எம்.ஜிகீஸ் – தமிழில்: தா.சந்திரகுரு

சமீபத்தில் எனக்கு மத்திய தொழிற்சங்க அமைப்பு ஒன்றின் தேசியத் தலைமையுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டம் ஒன்றை அந்தத் தொழிற்சங்கம் தொடங்கியிருந்தது. ஒருசில விஷயங்களில் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அது எடுத்திருந்த…
நூல் அறிமுகம்: மதுரைபாலனின் ‘விரல் நுனியில் கசியும் தீ’ – வி.மீனாட்சிசுந்தரம்

நூல் அறிமுகம்: மதுரைபாலனின் ‘விரல் நுனியில் கசியும் தீ’ – வி.மீனாட்சிசுந்தரம்




சமீபத்தில் எழுத்தாளர் தோழர் மதுரைபாலனோடு கலந்துரையாடும் வாய்ப்பு நேர்ந்தது. அவர் என்னிடம் “ விரல் நுனியில் கசியும் தீ” ”லயம்” என்ற இரண்டு புதினங்களை கொடுத்தார்,

”விரல் நுனியில் கசியும் தீ“ என்ற புதினத்தை படிக்க ஆரம்பித்தேன், நிறைவு பக்கமான 207வது பக்கம் வரை படித்த பிறகே கீழேவைக்க மனம் வந்தது.

நிலக்கரி கிடைக்குமா என்று தோண்டிய சுரங்கத்தில் அணுசக்தி தரும் யுரேனியம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ அந்த அளவு மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த புதினம் அன்மைக்காலத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கிராமங்களிலும் வர்த்தக நகரங்களிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கதை மாந்தர்களைக் கொண்டு சித்தரிக்கிறது வட்டார மொழி நடையில் எழுதப் பட்டிருப்பதே இதன் சிறப்பாகும். சாதிப் பகைமை கருத்தோடு சாதி ஒழிப்புணர்வு நடத்தும் போராட்டத்தை சித்தரிக்கிற பொழுது உள்ளதை உள்ளபடி காட்டுகிறதே தவிற எதையும் கூட்டி குறைச்சு சொல்லவில்லை
தமிழகத்தில் எந்த கிராமத்திற்கு போனாலும் அங்கிருக்கும் அரசியல்களில் கம்யூனிச பார்வையுள்ளவர்களைத் தவிற மற்றவர்கள் சாதி ஆணவப் போக்கையோ, மூட பழக்கவழக்கங்களையோ சாதி மேலாதிக்க செயல்களையோ தட்டிக் கேட்க துணிய மாட்டார்கள் சனாதன பழக்கவழக்கங்களை விமர்சித்து பதட்ட நிலையை உருவாக்க விரும்ப மாட்டார்கள் ஆனால் கம்யூனிஸ்ட் ஒருவர் இருந்தால் போதும் அரசாங்க கணக்கில் காவல் துரை கண்காணிப்பிற்கு உட்பட்ட பதட்ட பகுதி என குறிக்கப்படும். ஏன் எனில் இவைகளை தட்டிக் கேட்கும் துணிச்சலை பெரியார் சிங்கார வேலருக்கு பிறகு அவர்கள்தான் தொடருகிறார்கள்.

இந்த புதினத்தின் முதல்பகுதி குசும்பு கிழவன் செங்கானின் இளவட்டங்களை ஈர்க்கும் ஆற்றலை மட்டுமல்ல கிராம பெண்கள் பேசும் செக்சுவல் கிசு கிசுக்களை விரசமில்லாமல் சித்தரிக்க முயலும் பகுதியாகும். காமசுகம் என்பது பெறுதில் அல்ல இரண்டு மனங்களின் கூட்டு என்பதை அவருக்கே உரிய நடையில் உணர்த்த முயல்கிறார் பாண்டி அம்மாள் என்ற கதாபாத்திரத்தின் கனவு காட்சி சித்தரிப்பில் இதை அறிய முடியும்.

அதோடு நிற்கவில்லை கிராம மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கையால் ஏற்படும் சச்சரவுகளை சடங்குகளை சம்பிரதாயங்களை படம் பிடிக்கிறார்.

சாதி ஆணவம் எப்படி யெல்லாம் வெளிப்படுகிறது மாறுதலை ஏற்க மறுக்கிறது என்பதை நேர்த்தியாக காட்டுகிறார் நாட்டாமை கிணறு தோண்டிய பொழுது நீர் வராமல் கொளுந்துவிட்டு எறிவதைக் கண்டு எப்படி மூட நம்பிக்கை வலுப்படுகிறது.

இந்த தீ“ மர்மம் என்ன என்பதை துப்பறியும் புதினத்தைப்போல் ஆசிரியர் கொண்டு செல்வதால் புத்தகத்தை முடிக்காமல் கீழேவைக்க வாசகனுக்கு மனது வராது.

சாதிமறுப்பு திருமணம், பைத்தியம் பிடித்த கணவனோடு வாழ நேர்ந்த பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் இவைகளை சிறப்பாக சித்தரித்த விதம் வாசகனை வியக்க வைக்கிறது.

ஆசிரியர் எந்த இடத்திலும் அறம் போதிக்க முயற்சிக்கவில்லை கதை மாந்தர்கள் யாரும் நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களே தவிற கற்பனையான ஆளுமைகளை கொண்டதாக கூறமுடியாது. குன்றக்குடி அடிகளைப் போல் ஒரு சுவாமி மகிமானந்தா வருகிறார். ஜல்லிகட்டு விளையாட்டு நில உடமையாளர்களின கவுரமே தவிற ஆடுவோரை மகிழ்விக்கும் விளையாட்டல்ல என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

எதார்த்த வாழ்வை உள்ளதை உள்ளபடி சித்தரிப்பதால் இந்த புதினம் மனதை மேம்படுத்தும் ரகமாகும் ஆனால் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறது என்றுமட்டும் தெறிகிறது.

– வி.மீனாட்சிசுந்தரம்

நூல் : விரல் நுனியில் கசியும் தீ
ஆசிரியர் : மதுரைபாலன்
விலை : ரூ.₹200
வெளியீடு : பாலன் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துக கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துக கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




தமிழில்:ச.வீரமணி

உலகில் ஒவ்வொரு 11 நிமிடங்களில் ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ தன்னுடைய நெருங்கிய நபரால் (intimate partner) அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார் என்கிற அதிர்ச்சி அளிக்கும் உண்மைத் தகவலை, ஐ.நா.செக்ரடரி ஜெனரல் அந்தோனியோ குத்தரேசு (Antonio Guterres) தாக்கல் செய்தது, மிகவும் விரிவான அளவில் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. நவம்பர் 25 அன்று “பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை ஒழித்துக் கட்டுவதற்காக” சர்வதேச தினமாக அனுசரித்திட வேண்டும் என்று ஐ.நா.மன்றம் அறைவவல் விடுத்தது. உலகம் முழுதும் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அந்தோனியோ குத்தரேசு தெரிவித்துள்ளார்.

வழக்கமாக நடைபெறும் யுத்தங்களில் மக்கள் பலியாவதைக் காட்டிலும் அதிகமான அளவில் குடும்ப வன்முறை நிகழ்வுகளில் பெண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு குடும்ப வன்முறை நிகழ்வுகள், பெண்களுக்கு எதிரான அறிவிக்கப்படாத யுத்தமாக நடந்துகொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் குவி மையமாக இருக்கின்ற, நன்கு வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படக்கூடிய நாடுகளில்கூட, பெண்களுக்கு எதிரான பதிவுகள் மிகவும் மோசமாக இருப்பதாகவே, ஐ.நா. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த நாடுகளின் தரவுகளிலிருந்து தெரிய வருகிறது.

இந்தியாவிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. சராசரியாக, ஒவ்வொரு நாளும் 86 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று 2021 தேசியங்க குற்றப் பதிவேடு (National Crime Bureau) வெளியிட்டுள்ள தரவிலிருந்து தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மணி நேரத்தில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 49 பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் வரதட்சணை தொடர்பான குடும்ப வன்முறை காரணமாக சராசரியாக 18 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரே ஆண்டில் மட்டும் 6,589 வரதட்சணைச் சாவுகள் பதிவாகி இருக்கின்றன. வரதட்சணைக் கொடுமைகளிலிருந்து தப்பி உயிர் பிழைத்திருப்பவர்களிடம் ஆய்வு செய்தபோது, இவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், குடும்ப அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகியதாகக் கூறியதாக தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 காட்டுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் எந்தவொரு அரசாங்கத்தையும் வெட்கத்தால் தலைகுனியச் செய்யும். ஆனால் இந்தியாவில் இவை தொடர்பாக ஒரு வார்த்தைகூட ஆளும் அரசாங்கத்திடமிருந்து வெளிவரவில்லை. சிலர் இதனை பெருந்தொற்று (pandemic) என்றே சித்தரிக்கிறார்கள். உண்மையில், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது நம் சமூக அமைப்பில் தோன்றியிருக்கும் நோய் ஆகும். மூர்க்கத்தனமான சாதிய நடைமுறைகளால் தலித் பெண்கள் மிக மோசமான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், பெண்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு தண்டனை என்பது அநேகமாக இல்லை என்பதேயாகும். சாதிய மற்றும் ஆணாதிக்க சமூக அமைப்பு முறை காரணமாக, பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களில் 75 விழுக்காட்டினர் தண்டிக்கப்படுவதில்லை. இவ்வாறு தண்டனை என்பது மிகவும் குறைவாக இருப்பதற்கு, குற்றம் நடந்ததற்குப்பின்னர் விசாரணையில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ஏற்படும் சறுக்கல்களாகும். காவல்துறையினர் முறையாக விசாரிப்பதில்லை, நீதிமன்றத்திலும் நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கப்படுவது, வன்முறைக்கு ஆளான பெண்கள் மீது சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிக்கப்படுவது ஆகியவையே குறைந்த தண்டனைக்குக் காரணமாகும்.

கணவனால் அல்லது உறவினர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறையுடன் ஒத்துப்போகக்கூடிய பெண்ணே உதாரண மனுஷி (ideal woman), என்கிற சிந்தனைப்போக்கு புதிய ஆட்சியாளர்களின் கீழ் புதிய வாழ்க்கையாக பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. திருமணமான பெண் கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் (marital rape) அதனைக் கிரிமினல் குற்றமாகக் கருத அரசாங்கம் மறுத்துவிட்டது. ஏனெனில் அது குடும்பத்தைச் சீர்குலைத்துவிடுமாம். இதுதான் அவர்கள் மனநிலையின் பிரதிபலிப்பாகும். மனுவாதி கலாச்சாரம், குடும்ப உறவுகளை ஜனநாயகப்படுத்துவதற்கும், பெண்களை சமத்துவத்துடன் பாதுகாப்பதற்கும் பெரும் தடையாக இருக்கிறது.

மேலும் ஒவ்வொரு பாலியல் வன்புணர்வுக் குற்றமும், பலியானவரின் மதம் மற்றும் குற்றம் செய்த நபரின் மதத்தைச் சார்ந்தும் பார்க்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. பில்கிஸ் பானோ வழக்கில், பாலியல் வன்புணர்வை ஏற்படுத்திய மற்றும் கொலைகளைச் செய்திட்ட கயவர்கள், விடுதலை செய்யப்படுவதற்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார். அதே சமயத்தில் முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டப்படும்போது, ஆளும் கட்சியினரும் அதன் அமைப்புகளும் பெண்களுக்கு நீதி வேண்டும் என்று கோருவது, தற்செயலான நிகழ்வு அல்ல.

இதற்கு மிகவும் சரியான எடுத்துக்காட்டு, சமீபத்தில் அஸ்ஸாம் முதல் அமைச்சர், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஷ்ரத்தா வாக்கர் (Shraddha Walkar) வழக்கு தொடர்பாக உதிர்த்துள்ள வார்த்தைகளாகும். அவர் கூறியிருந்ததாவது: “ஒவ்வொரு நகரத்திலும் அஃப்லாப் போன்றவர்களைத் தடுக்க மோடி போன்ற இரும்பு மனிதரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.” ஷ்ரத்தாவைக் கொடூரமான முறையில் கொலை செய்தது அவள் உறவு வைத்திருந்த முஸ்லீம் நபர். எனவேதான் இதனை ‘லவ் ஜிகாத்’ என்று கூறி மிகவும் வெறித்தனமான முறையில் மதவெறி நச்சுப்பிரச்சாரத்தை மேற்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற அதே சமயத்தில் இதேபோன்று மற்றொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அசம்கார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இளம் பெண் ஒருவர் அவளுடைய முன்னாள் ஆண் நண்பனால் (boy friend), கொல்லப்பட்டு ஆறு துண்டுகளாக்கப்பட்டார். சிதாபூர் மாவட்இடத்தில் இதேபோன்று மற்றொரு பெண் அவருடைய கணவனால் கொல்லப்பட்டு துண்டு துண்டுகளாக்கி வயலில் தூக்கி எறியப்பட்டிருந்தார். ஆனால் பாஜக தலைவர்கள் இவை குறித்தெல்லாம் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. காரணம், பலியானவரும், கொலை செய்தவனும் இந்துக்கள். இதேபோன்றே தலித் பெண்கள் உயர் சாதியினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, ஒரு வார்த்தைகூட இவர்கள் உதிர்ப்பதில்லை. இவ்வாறு பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளை மதவெறி அடிப்படையில் பார்க்கும் போக்கு மிகவும் ஆபத்தாகும். இது நீதிமன்ற நடைமுறைகளையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும் அநேகமாக ஒழித்துக்கட்டிவிடும்.

முதலாளித்துவமும், அதன் சமூகக் கட்டமைப்புகளும் ஆணாதிக்க சமூகப் பழக்க வழக்கங்களுக்கு உதவுகின்றன. இதுதான் உலகம் முழுதும் உள்ள நிலையாகும். முதலாளித்துவம் பெண்களை குறைந்த கூலிக்கு அமர்த்த வேண்டும் என்பதற்காகவே அவர்களின் கீழ்நிலையில் உள்ள சமூக அந்தஸ்தையும், கலாச்சார முறையையும் அப்படியே வைத்துக்கொள்ள விரும்புகின்றன. முதலாளித்துவ உலகம் பெண்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், வன்முறையைப் பிரயோகிப்பதற்கும் அடிப்படை இதுதான். இந்தியாவிலும் வலதுசாரி இந்துத்துவா பேர்வழிகள் மனுஸ்மிருதியையும் சாதியக் கட்டமைப்பையும் தூக்கிப்பிடிப்பதன் மூலமும், பெண்வெறுப்பு மற்றும் ஆணாதிக்க மனோபாவம் மீளவும் வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இது, சிறுபான்மையினர் மத்தியில் உள்ள பிற்போக்கு சக்திகளுக்கும் வலுவை அளித்து, அவர்களும் பெண்களைத் தங்களுக்குக் கீழ் தள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள்.

அரசமைப்புச்சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான சட்டங்களைக் கறாராக அமல்படுத்தக் கோரியும், போராட்டங்களை முன்னிலும் பன்மடங்கு வீர்யத்துடன் நடத்திட வேண்டும். இடது மற்றும் ஜனநாயக சக்திகள் தங்களுடைய போராட்ட நடவடிக்கைகளில் இதனையும் ஒரு முக்கியமான அங்கமாக இணைத்துக்கொள்ள வேண்டும்.

(நவம்பர் 23, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் மலாலா கரும்பலகை யுத்தம் – சங்கர் மனோகரன்

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் மலாலா கரும்பலகை யுத்தம் – சங்கர் மனோகரன்




நூல் : மலாலா கரும்பலகை யுத்தம்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசனின்
விலை : ரூ.₹ 50/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

எனக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை என்று போராடி இன்று கல்வியில் முன்னிலை வகிப்பது பெண்கள் தான். மறுக்கப்பட்ட உரிமையின் தவிப்பு இவர்களின் இத்தகைய வெற்றியின் பின்புலம். அவ்வகையில் பெண்களின் கல்விக்காக போராடியவர்கள் பலர். இவர்களில் மலாலா என்ற பெயர் வெறும் பெயராகவே கடந்து விடாமல் அதன் பின் இருக்கும் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நானும் இதுவரை மலாலா என்றால் ஒரு பாகிஸ்தானிய பெண்களின் கல்விக்காக போராடிய பெண்; நோபல் பரிசு பெற்ற பெண் என்ற பொது அறிவு தகவல்களை மட்டுமே சுமந்து கொண்டு இருந்தேன். இந்நூலை படித்த பிறகு தான் இவரின் பெயரின் பின்னால் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்களும் கல்விக்காக இயங்கும் பெண்ணின் தவிப்பும் தெரிந்தது.

ஆசிரியர் இங்கு மலாலாவின் கதையை மட்டும் சொல்லவில்லை. பெயரின் கூடவே கரும்பலகை யுத்தம் என்று சொல்லை சேர்த்துள்ளார். அவர் நடத்திய கல்விக்கான யுத்தத்தை பல்வேறு வரலாறுகளுக்கு இடையே இணைத்துக் கூறி வருகிறார். இவரின் போராட்டம் எப்படி தொடங்குகிறது, அந்த போராட்டத்திற்கு யார் காரணம், பாகிஸ்தான் எப்படி என்ற குறிப்புகளை தெளிவாக விளக்கியுள்ளார். அத்தனையும் படிக்கும் போது சிறு குழப்பம் வரலாம். ஆனால் தெளிவான விளக்கம் அமைந்துள்ளார்.

எனக்கு கல்வி வேண்டும் நான் படிக்க விரும்புகிறேன் என்ற மலாலாவின் குரல் கல்விக்காக இயங்கும் குழந்தையின் குரல் மட்டுமல்ல அது வரும் தலைமுறைக்காக குரல்.

ஒரு மாணவி, ஒரு ஆசிரியை, ஒரு கரும்பலகை, ஒரு எடுத்துக் கொள் உலகை மாற்றும் சக்தி கொண்டது.

என்பதற்கு உதாரணம் இவர். அனைவருக்கும் கல்விக் கொடுத்து படிக்க சொல்லும் நம் நாட்டில் கல்விக்காக உரிமை வேண்டி போராட்டம் நடத்தும் நிலையில் இருக்கும் இவர்களை எண்ணிப் பாருங்கள்‌.

– சங்கர் மனோகரன்
முகநூல் பதிவிலிருந்து….

அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்:ச.வீரமணி)

அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்:ச.வீரமணி)




சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்:ச.வீரமணி)

இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 19 ஆண்டுகளாக, எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து ஒவ்வோராண்டும் இக்கருத்தரங்கை நடத்தி வருவதற்காக இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2017ஆம் ஆண்டு, மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்ற நூற்றாண்டாக அனுசரித்து வருகிறோம்.  இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். மனிதனை மனிதன்சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.

காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது: ‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.’’ (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.)

மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘…சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், …’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கபூர்வ அறிவியல் என்பதை ருஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது.

நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும். சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை , ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும். 20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம்.

சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

முதலாளித்துவத்துக்கு பெரும் சவால்

சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல.

இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.

அக்டோபர் புரட்சியின் பாரம்பர்ய மாண்புகள்

அக்டோபர் புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோவியத் யூனியன் இன்றில்லை. அது சிதைந்து சிதறுண்டு போனதற்கான காரணங்களைத் தனியே விவாதித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1992இல் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். சோவியத் யூனியன் இன்றில்லை என்ற போதிலும், அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பர்யத்தின் முக்கியமான நான்கு அம்சங்கள், மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி செல்வதற்கு  இடையிலான இடைப்பட்ட மாறுதல் காலத்தில் அச்சாணியாக விளங்கக்கூடிய  நான்கு அம்சங்களை  அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.

(1)  தோழர் லெனின் அவர் காலத்திய உலக நிலைமைகளுடன் முதலாளித்துவ வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்கையில், மூலதனக் குவியல் ஏகபோக மூலதனத்தினை உருவாக்கும் என்று மார்க்ஸ் கூறியதானது, அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றார்.  மேலும் தோழர் லெனின் ஏகாதிபத்தியத்தின் சங்கிலியின் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கும் விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் முதல் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து, தகர்த்திட்டார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தை தங்கள் விடுதலைக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிட  ருஷ்யத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாய்ப்பினை அளித்தது. எனவே, இன்றைய சூழ்நிலையில், எந்தவொரு நாடும் ஏகாதிபத்தியத்தினை உறுதியுடன் எதிர்த்திடாமல்  தங்கள் நாட்டில் புரட்சிகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது என்பது தெளிவாகும்.

இன்றைய  ஏகாதிபத்திய உலகமயக் காலத்திலும்கூட அக்டோபர் புரட்சியின் இந்த அம்சம் இப்போதும் செல்லத்தக்கதாகவே தொடர்கிறது.  ஏகாதிபத்திய உலகமயம் என்னும் சங்கிலியின் பலவீனமான கண்ணிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனத்தின் வர்க்க ஆட்சியின்மீதான அரசியல் தாக்குதல் அழுத்தமாகத் தொடரப்பட வேண்டும்.

இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிச ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.

சரியற்ற மதிப்பீடுகள்: 20ஆம் நூற்றாண்டில் சோசலிம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஈடிணையற்ற விதத்தில் முன்னேற்றங்களைக் கண்டபோதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஒருசிலவற்றைத்தவிர பல நாடுகளில் ஏற்பட்ட அனைத்து சோசலிசப் புரட்சிகளும் ருஷ்யாவில் இருந்ததைப்போன்ற ஒரு பிற்போக்கு முதலாளித்துவ நாடுகள் அல்ல. இந் நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கண்ணி, லெனினிசத்தின் புரிதல்படி பலவீனமான ஒன்று  அல்ல. இந்நாடுகளில் உலக முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் மீது தன்னுடைய பிடிப்பை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அதனால் வளரவும் முடிந்தது. சோசலிச நாடுகள் உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை முதலாளித்துவத்திடமிருந்து நீக்கியது. எனினும்,  இதன்மூலம் அதனால், உலக முதலாளித்துவம் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் தன்னுடைய உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான கொள்திறனை நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்க முடியவில்லை. இதன்காரணமாக ஏகாதிபத்தியம் நவீன காலனியாதிக்கத்தின் மூலமாக உலகச் சந்தையை விரிவாக்கிக்கொள்வதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.

முன்னூறு ஆண்டுகளில் முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது.   சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது.  முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது.  ஆனால் அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய – லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது  அவசியம் என்பதை உணர்ந்திட முடியும். இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை.

சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.

சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர்  எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு  வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது. இது ஒரு பிழையான சிந்தனையாகும்.

அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம், அல்லது, மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம் —  அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுபாட்டுக் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த  ஆட்சிப்பரப்பை மீளவும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும்.  அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற  நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும்.

உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில்  எய்தப்பட்ட வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து, குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும்.

துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார்.  இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும்.

இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.

சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்

சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்ற எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.

அரசின் வர்க்க குணம்

மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும்.  முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின்  சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணமாகும்.

எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது.  தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசில் சமர்ப்பித்தார்.  ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்தசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.  சோவியத் யூனியன், முதலாளித்துவ  நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை.  பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும்,  மிகவும் விரிவானமுறையில்  1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின்  சமர்ப்பித்தார். இதற்கு “சித்தாந்தம் குறித்த கேள்விகள்” (“Questions of theory”) என்று தலைப்பிட்டிருந்தார்.  எனினும், இவ்வாறு  வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது. இதனை  மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச்  சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில்  தீர்மானிக்கப்பட வேண்டியதாகும்.

தோழர் லெனின் இதுகுறித்து தன்னுடைய அரசும் புரட்சியும் என்னும் நூலில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும்,  வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது என்றும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார். “முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் தீவிரமானமுறையில் வேறுபட்டிருக் கின்றன, எனினும் அவற்றின் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், இறுதி ஆய்வில் தவிர்க்கமுடியாதவகையில் அவை முதலாளிவர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருந்திடும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது.”

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான கிழக்கு  ஐரோப்பிய சோசலிச நாடுகள்,  சோவியத் யூனியனில் இருந்தைப்போன்ற சோவியத் வடிவத்தை கையகப்படுத்திக் கொண்டன. அவை தங்கள் நாடுகளின் துல்லியமான சமூகப் பொருளாதார நிலைமைகளையோ மற்றும் வரலாற்றுப் பின்னணியையோ கணக்கில் கொள்ளவில்லை.  இவற்றின் விளைவாக இந்நாட்டின் அரசுகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டன. இவற்றுக்கு எதிராக மக்களின் இடையேயான அதிருப்தியும் வளர்ந்துகொண்டிருந்தன.

சோசலிஸ்ட் ஜனநாயகம்: இரண்டாவதாக மிகப் பெரிய குறைபாடு, சோசலிஸ்ட் ஜனநாயகம் சம்பந்தப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விட சோசலிசத்தின்கீழ் ஆழமானதாகவும், வளமானதாகவும் இருந்திட வேண்டியது அவசியம். முதலாளித்துவம் பெயரளவில் ஜனநாயக உரிமைகளை வழங்கும் அதே சமயத்தில், அது மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதனை உண்மையில் அளித்திடாது. (முதலாளித்துவத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் எதனையும் வாங்குவதற்கு உரிமை படைத்தவன்தான். எனினும் அவ்வாறு வாங்குவதற்கான சக்தியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.) ஆனால் சோசலிசம் எதனையும் வாங்கும் உரிமையையும், அதற்கான சக்தியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கும்.

எனினும், பல நாடுகளில் சோசலிஸ்ட் கட்டுமானம் நடைபெற்ற சமயத்தில், இரு விதமான குறைபாடுகள் நடைபெற்றுள்ளன. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு,  பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் சர்வாதிகாரமாக, அதாவது கம்யூனிஸ்ட்  கட்சியின் சர்வாதிகாரமாக, மாற்றப்பட்டிருந்தது. இதுவும் சிறிது காலத்திற்கப்பின் கட்சித் தலைமையின்  சர்வாதிகாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறு சோசலிச அரசு என்பது, ஒட்டுமொத்த  பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சோசலிச அரசு என்பது, நடைமுறையில்  கட்சியின் ஒரு சிறு பிரிவால், அதாவது  கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால்,  மேற்கொள்ளப்படும் ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டது.

அரசு அறிவிக்கும் ஆணைகள் பெரும்பான்மையான மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் அமைந்திடவில்லை.  அவை சோவியத்துகள் போன்ற அடிப்படையான ஜனநாயக அமைப்புகளின் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லப்படவில்லை. மாறாக அரசின் கட்டளைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன.  இவை இயற்கையாக மக்களை அரசிடமிருந்து தனிமைப்படுத்திட இட்டுச்சென்றது.

இரண்டாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்தும் சமயங்களில், உள்கட்சி ஜனநாயகம் என்பது அடிக்கடி பலிகிடாவாக மாறியது.  சோவியத் யூனியனின் வரலாற்றில் சில சமயங்களில் இருந்ததைப்போல மத்தியத்துவம் முன்னுக்கு வந்தது. இது, அதிகாரத்துவம் வளர்வதற்கு இட்டுச் சென்றது. இவ்வாறு அதிகாரத்துவம் வளர்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இவற்றின் காரணமாக சோசலிசத்திற்கு விரோதமான போக்குகள், ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகை போன்றவை தலை தூக்கின.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த  பெரும்பாலானவர்கள் சலுகைகள் அனுபவித்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்சியின் புரட்சிகரத் தன்மை கொள்ளை போய்விட்டது, கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது, கட்சித் தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் தனிமைப்பட்டன.

இதுபோன்ற திரிபுகளைச் சரிசெய்வதற்குப்  பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது,  அவசியமான  திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.

சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம்:  சில குறைபாடுகள் காணப்பட்ட மூன்றாவதான பகுதி என்பது சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானமாகும். அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றபின் முதலில் அது தேர்ந்தெடுத்த பாதை தொழிலாளர்-விவசாயிக் கூட்டணியின் அடிப்படையில் வெற்றிகரமாக ஜனநாயகப் புரட்சியை நிறுவியதாகும். இதுவே புதிய சவால்களை எதிர்கொண்டது.  ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிஸ்ட் புரட்சிக்குத் மாறுவதற்கான இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் தேவைப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையில் சொத்து உறவுகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிறுவ வேண்டியிருந்தது.  தொழிலாளி – விவசாயிக் கூட்டணிதான் ஜனநாயகப் புரட்சிக்கான முதுகெலும்பு என்கிற உண்மை, விவசாயத்தில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது என்பது விவசாயிகளில் சில பிரிவினரது அந்தஸ்தைக் கடுமையாகப் பாதித்தது என்று பொருளாகும். இவர்கள்தான் ஜனநாயகப் புரட்சியை எய்துவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்தவர்கள். உள்நாட்டு யுத்தம் மற்றும் சோவியத் யூனியன் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்த சிக்கலான பிரச்சனை மேலும் சிக்கலானது.  ஆனாலும், சோசலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்கும்,  சோசலிஸ்ட் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கும் அபரிமிதமான தொழில்மயம் அவசியமாக இருந்தது. ‘யுத்த கம்யூனிசம்’ (‘war communism’), ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ (new economic policy) காலங்களின்போது, தோழர் லெனின் இந்தப் பிரச்சனையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தார்.

தோழர் லெனின் முன்னதாகவே இறந்ததை அடுத்து, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சோசலிஸ்ட் தொழில் மற்றும் விவசாயிகளின் விவசாயம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து ஒரு விவாதம் எழுந்தது.   விவசாய உற்பத்தி அபரிமிதமாக இருந்ததன்  காரணமாக, அதன்மூலம் ஏற்பட்ட உபரியை தொழிற்துறை செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்குப் போடுவது என்பது தொடர்பாகவும், இதனை எப்படி தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. தொழில்துறை நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு விவசாய உற்பத்தியின் உபரியை வெகுவாகப் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. இதனை எப்படிச் செய்வது? இதில் பிரச்சனைகள் எழுந்தன. விவசாயத்துறையில் புதிதாக உருவான பணக்கார விவசாயிகள் (குலாக்குகள்) வர்க்கம் அக்டோபர் புரட்சிக்கு ஒரு வித்தியாசமான விதத்தில் அச்சுறுத்தலாக அமைந்தனர்.

எனினும், உலகம் முழுதும் சோவியத் யூனியனுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் தொடர்ந்து இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சனையை தோழர் ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக சமாளித்தார். அவ்வாறு சமாளிக்காமல் மட்டும் இருந்திருந்தால் சோவியத் யூனியன் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட தாக்குதலை வெற்றிகரமானமுறையில் முறியடித்திருக்க முடியாது.  அப்போது தோழர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த அறைகூவல்களை நினைவுகூருங்கள்.  நாஜிக்களுக்கு எதிராகப் போர்முனையில் போராடுவதால் மட்டும் வென்றுவிடமுடியாது, மாறாக அதனை தொழிற்சாலைகளிலும்,  வயல்களிலும் நாம் வெற்றிபெறுவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும்.  சோசலிசத்தைக் காப்பதற்காகவும், உலகை பாசிசத்திலிருந்து காப்பதற்காகவும், போர்முனையில் சோவியத் செஞ்சேனை வீரஞ்செறிந்த முறையில் போராடுவதற்கு, எவ்விதத் தொய்வுமின்றி அவர்களின் தேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்யப்பட்டதே அடிப்படைக் காரணமாகும்.

ஆனால் “சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளிகளின் கடவுள்”, செல்வாக்கு செலுத்தியதன் காரணமாகவும், இத்தகைய சோசலிஸ்ட் பொருளாதார அடித்தளங்களை,  கோர்பசேவ் படிப்படியாகக் கைவிட்டதன் காரணமாக, சோசலிசமே கைவிடப்படக்கூடிய நிலைக்கு கொண்டுசென்றது.

தத்துவார்த்த உணர்வினை உதாசீனம் செய்தல் (Neglect of Ideological Consciousness):  அடுத்து மாபெரும் குறைபாடு காணப்பட்ட பகுதி, மக்களின் கூட்டு தத்துவார்த்த உணர்வினை (collective ideological consciousness of the people) வலுப்படுத்தத் தவறியமையாகும்.  மக்களிடம் இத்தகைய கூட்டு தத்துவார்த்த உணர்வு உயர்ந்தோங்கி இருப்பதன்மூலமாகத்தான் சோசலிசம் நிலைத்து நிற்கமுடியும் மற்றும் அதனை மேலும் வளர்த்தெடுக்க முடியும். இதனை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு இல்லாமல் மேற்கொண்டிட முடியாது.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் திருத்தல்வாதி திரிபுக்கு (revisionist deviation)ப் பின்னர் இது மிகப்பெரிய ஆபத்தாக (casualty-ஆக) மாறியது.

இக்குறைபாடுகளின் காரணமாக, சோவியத்  யூனியனிலும் இதர சோசலிச நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்புரட்சி சக்திகள் முன்னுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டு, சோசலிசம் கைவிடப்பட்டது.

இவ்வாறு இந்நாடுகளில் சோசலிசம் கைவிடப்பட்டதற்கு, மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, மார்க்சியம்-லெனினியத்தின் அறிவியல் மேற்றும் புரட்சிகர சாராம்சத்திலிருந்து நழுவிச் சென்றதே காரணமாகும்.  உலக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து சரியற்ற மதிப்பீடுகளும் காரணமாகும். மார்க்சியத்தின் ஆக்கபூர்வ அறிவியலை வறட்டுத் தனமான முறையில் வியாக்கியானம் செய்ததும் காரணமாகும். மேலும் சோசலிசக் கட்டுமானத்தின்போது மேலே கூறியவாறு மேற்கொண்ட குறைபாடுகளும் காரணமாகும்.

நடப்பு முதலாளித்துவ நெருக்கடி – சோசலிச மாற்று

மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட இன்றைக்கும் ஒரே வழி, சோசலிசம்தான்.  இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கும் ஒரே மாற்று சோசலிசம்தான்.  2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருந்தே, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதனை மேலும் ஆழமான முறையில் புதிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதன் மூலம் இதனை நன்கு உணர முடியும். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  மேலும் அதிகரித்திருக்கின்றன.  முதலாளித்துவ அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம் என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மையாட்சிக்க எதிராக சோசலிசத்திற்கான அரசியல் மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும்.

முதலாளித்துவத்தின் மீதான நெருக்கடி எவ்வளவுதான்  உக்கிரமானதாக இருந்தபோதிலும், நாம் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் எப்படியாவது தன்னைத் தக்கவைத்துக் கொண்டுதான்  இருக்கும். எனவே, சோசலிஸ்ட் அரசியல் மாற்று அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் வெகுவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிற போதிலும்,   இன்றையநிலையில் இவை அனைத்தும் தற்காப்புநிலையில்தான் இருந்து வருகின்றன.  தற்காப்புநிலையில்தான் என்று ஏன் கூறுகிறேன் என்றால், மக்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாகத் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் பறிக்கப்படும்போது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன.  இத்தகு போராட்டங்கள் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் மீதான தீர்மானத்தில் அலசி ஆராய்ந்திருப்பதைப்போல, லெனினிஸ்ட் அகநிலைக் காரணியை வலுப்படுத்திட வேண்டும். அதாவது, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு புரட்சிக் கட்சியின் வல்லமையை வலுப்படுத்திட வேண்டும்.

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப்பணியைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது. நமது கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடும், ஸ்தாபனத்தின் மீதான பிளீனமும் இந்தியாவின் நிலைமைகளில் அகக்காரணியை (கட்சியை) வலுப்படுத்தும் குறிக்கோளை எய்தக்கூடிய விதத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்கள்

அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைய தினம் தன் நிலையை சர்வதேச அளவில் வலுவாக்கிக்கொண்டுள்ள நிலையில், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மூன்று முக்கிய குறிக்கோள்களை எய்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

முதலாவதாக அது இப்போது மீதம் இருந்துவரும் சோசலிஸ்ட் நாடுகளைக் கலைத்திட விரும்புகிறது. இரண்டாவதாக,  அணிசேரா இயக்கத்தின்கீழ் முக்கியமாக இருந்த  மூன்றாம் உலக நாடுகளை வலுவிழக்கச்செய்வதன்மூலம் எதற்கும் இலாயக் கற்றவைகளாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இறுதியாக, உலகத்தின்மீது பொதுவாகவும், குறிப்பாகத் தனக்குப் போட்டியாக வருபவர்கள் யார் என்று கருதுகிறதோ அவர்களை அழித்து ஒழித்து, தன்னுடைய ராணுவ மற்றும் பொருளாதார மேன்மையை நிலைநிறுத்திட முயற்சிக்கிறது.

ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக வலுவானத் தத்துவார்த்த தாக்குதலால் வெற்றிபெற முடியவில்லை.  ஏகாதிபத்தியம், ஜனநாயகத்தை சுதந்திர சந்தையுடன் சமமாக்கப் பார்க்கிறது. இத்தகைய நிலைப்பாட்டுடன்,  தன்னுடைய மேலாதிக்கத்தையும் மற்றும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ‘சுதந்திர சந்தைகளை’த் திணிப்பதை எதிர்த்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தலையிடுகிறது.

ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகள்’ மற்றும் ‘மண்ணின் மாண்புகள்’ ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கிறோம் என்ற பெயரில் சுயேச்சையான இறையாண்மை நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகத் தலையிடுகிறது. இவ்வாறு ராணுவத் தலையீடுகளின் மூலமடாக அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவந்த முதலாளிவர்க்கம் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, தேசிய இறையாண்மையை மிகவும் புனிதமானதாக உயர்த்திப்பிடித்தது. இன்றையதினம், ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகளை’ப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அந்த நாடுகளின் தேசிய இறையாண்மையை மறுதலித்து, ராணுவ ரீதியாகத் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியம், வெறித்தனமாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கம்யூனிசத்தை, சர்வாதிகாரத்துடனும் பாசிசத்துடனும் சமப்படுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் கம்யூனிசத்தை பாசிசத்துடன் இணைத்து சமப்படுத்தி, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சட்டங்களை இயற்றி இருக்கிறது.  செக் குடியரசு, போலந்து போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கம்யூனிச அடையாளங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமாகத் தடை விதித்திருக்கின்றன.

கடந்த இருபதாண்டுகளில் இந்தப் போக்குகள் மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப்பின்னர் மார்க்சியத்தை மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. எனவேதான் மார்க்சியத்தைப் பல்வேறுவிதமாக திரித்திடும் சித்தாந்தங்கள் அறிவுஜீவிகள் மத்தியில் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டன. இவற்றின்மூலம் மக்களைக் குழப்பிடும் பணி வெகுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

பின்-நவீனத்துவம் (Post-Modernism): ஏகாதிபத்தியமும், உலக நிதி மூலதனமும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் எதிர்ப்பு சித்தாந்தங்களை உருவாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் அனைத்து முற்போக்கு சித்தாந்தங்களையும் மறுதலித்திட முனைகின்றன.  வர்க்கப் போராட்டம் மறைந்துவிட்டது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பங்களிப்பு மறுதலிக்கப்பட்டுவிட்டது போன்ற சிந்தனைகள் முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியிலிருந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ள சித்தாந்தம்தான், பின்-நவீனத்துவம் என்பதாகும்.

பின்-நவீனத்துவம் என்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவம் வெற்றிபெற்று, சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உருவான முதலாளித்துவ தத்துவார்த்தக் கண்ணோட்டமாகும்.  இத்தத்துவமானது மார்க்சியம் உட்பட எந்தவொரு தத்துவமோ, அரசியலோ உலகளாவிய அளவில் இருந்திடமுடியாது என்று நிராகரிக்கிறது.  பின்-நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்தையோ அல்லது சோசலிசத்தையோ ஒரு கட்டமைப்பு (a structure) அல்லது ஒரு முறை (a system) என்கிற விதத்தில் அங்கீகரித்திடவில்லை. இவ்வாறு, இது, உலக நிதி மூலதனத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு தத்துவமாகும். ஏனெனில் இது வர்க்கங்கள் இருப்பதை மறுதலிக்கிறது. எனவே, வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பனவற்றையும் மறுதலிக்கிறது. மேலும் இது, அடையாள அரசியலை உந்தித்தள்ளுவதற்கும், மக்களை அரசியலற்றவர்களாக ஆக்குவதற்கும் மிகவும் பொருத்தமான ஒரு தத்துவமுமாகும்.

கலாச்சாரா மேலாதிக்கம் (Cultural Hegemony): இந்தக் கால கட்டத்தில் ஏகாதிபத்தியமும், நவீன தாராளமயமும்  தங்களுடைய கலாச்சார மேலாதிக்கத்தை வலுவாக நிறுவியுள்ளன.  இவை மக்களைத் தங்களுடைய தகவல் (Information), தொடர்பு (Communication) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment) என்கிற மூன்று ஐசிஇ (ICE) ஆகியவற்றைத் தங்களுடைய மெகா கார்ப்பரேஷன்கள் மூலமாக மக்களிடையே கொண்டுசெல்வதில் மூர்க்கத்தனமாக இறங்கியிருக்கின்றன.  தங்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள் மூலமாக செய்திகளைத் திரித்துக்கூறுதல் என்பதும், மக்களிடம் கூறப்படும் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதும் இவற்றின்  ஏகபோகமாக மாறியிருக்கின்றன.  கலாச்சாரத்தை வணிகமயமாக்குவது உலகமயத்தின் ஒரு பகுதியாகும்.

வர்க்க மேலாதிக்கத்தின் காரணமாக, உலகமயக் கலாச்சாரம் மக்களை தங்களுடைய எதார்த்தமான  வாழ்க்கை நிலைமைகளிலிருந்து கத்தரித்துவிட முயல்கிறது. இவர்களின் கலாச்சாரம் என்பது அழகியலை மேம்படச் செய்வதற்கானது அல்ல, மாறாக மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை மற்றும் ஏழ்மை  ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்புவதற்கானதாகும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தன் ஆளுகையை அதிகரித்துக் கொள்வதற்கும், மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்கும் நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.

பின்-உண்மை (Post-Truth): மார்க்சியத்திற்கும், சோசலிசத்திற்கும் எதிராக, முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்றொடர்தான், பின்-உண்மை (Post-Truth) என்பதாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய 2016ஆம் ஆண்டின்  அகராதியில் ‘இந்த ஆண்டின் புதிய வார்த்தை’ என இதனைக் குறிப்பிட்டு, இதன் பொருளை வரையறுக்கும்போது, உணர்ச்சிக்கும் தனிப்பட்ட நம்பிக்கை அடிப்படையில் எழுப்பப்படும் வேண்டுகோள் அளவிற்கு  மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு செலுத்தாத சொற்றொடர் என்று கூறுகிறது.

டொனால்டு டரம்ப் மற்றம் நரேந்திர மோடி அரசோச்சும் இக்காலத்தில் இதனைப் புரிந்துகொள்வது எளிதாகும். ஈராக்கில் யுத்தத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்க புஷ் நிர்வாகம் அவிழ்த்துவிட்ட பொய்கள் மற்றும் ஏகாதிபத்திய அரசியல் மற்றம் ராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திட அவிழ்த்துவிடப்படும் பொய்களும் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்தியாவிலும் இதேபோன்றே முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதிலிருந்து இதனை நோம்  அறிந்துகொள்ள முடியும்.  மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்காக தலித்துகள் மற்றம் முஸ்லீம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படை போன்ற தனியார் ராணுவத்தினர் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடுப்பதிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடியும்.

பின்-உண்மை என்கிற சொற்றொடரும் மனிதகுல வரலாற்றில் புதிதான ஒன்றல்ல. ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்ஸ், “ஒரு பெரிய பொய்யைக் கூறுங்கள், திருப்பித் திருப்பி  அதனைக் கூறுங்கள், அது உண்மையாகிவிடும்,” என்று கூறிவந்தான் அல்லவா?  அதுதான் இது. இதுதான் அன்றைக்கு நாஜி பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு ஆணிவேராக இருந்தது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்துத்துவா வெறியர்களுக்கும்  முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு ஹிட்லரின் பேச்சுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் போது எப்படி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள் என்று ஒலிபரப்பப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றைக்கு மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிதுருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி என்பது புதிய உருவாக்கம் ஒன்றுமல்ல.

இவ்வாறு ‘பின்-உண்மை’ என்பதும் மக்களை தாங்கள் சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் எதிரான போராட்டங்களிலிருந்து திசைதிருப்புவதற்கான ஒன்றே தவிர, வேறல்ல.

மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரம்  அல்ல. மாறாக, அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, “துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதன்” அடிப்படையில் அமைந்த ஒன்று. மார்க்சியம், வரலாற்றைப் பொதுவாகவும், முதலாளித்துவத்தைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்திடும் ஓர் அணுகுமுறையாகும்.  மாமேதை மார்க்ஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், நாம் இன்றைய சூழ்நிலையைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்.

இந்த அடிப்படையில் நான் சரியானமுறையில் நின்றுகொண்டு, வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளர் ஒற்றுமையையும்  சீர்குலைக்கும் விதத்தில்,  நமக்கு எதிராகத் தற்போதும், எதிர்காலத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.

இந்திய நிலைமைகளில் சோசலிசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் தொடர்பான தீர்மானத்தில், இந்தியாவில் சோசலிசம் என்பதன் கருத்தாக்கம் என்ன என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் சோசலிசம் எப்படி இருக்கும் என்பதை,  இந்தியப்புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவடைந்தபின்புதான், அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்ற பின்னர்தான் கெட்டிப்படுத்திட முடியும்.

எனினும், சோசலிசத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவை எவை தேவை என்பதை நம்மால் எதிர்பார்த்திட முடியும். எனவே, இந்தியாவில் சோசலிசம் என்றால் அதன் பொருள் என்ன?

அதன்பொருள், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு,  அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி.

அதன் பொருள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினர் என அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரநிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மேம்பாடு.

அதன்பொருள், மக்கள் அதிகாரமே உயர்வானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் சமூகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிலும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்தவைகளாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுபோன்ற உரிமைகள் தரப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவை மாயை. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வல்லமை கிடையாது. சோசலிசத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தி இருப்பதன் காரணமாக மனிதகுல வாழ்வின் தரம் உயர்ந்து, அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் செழுமையுடன் காணப்படும்.

அதன் பொருள், சாதி அமைப்புமுறை ஒழிக்கப்படுவதால் சாதி ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து மொழிப்பிரிவினரும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைத்து மொழிகளும் சமமான முறையில் வளர்த்தெடுக்கப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும், பாலின ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதன் பொருள், சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டமைப்பு, சோசலிச உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டமிடல்  அடிப்படையில் அமைந்திடும்.  சந்தை சக்திகள், மத்திய திட்டமிடலின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிடும். சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் இருக்கும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையை தீர்மானகரமான வடிவமாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் அது அரசின்கீழான பொதுத்துறை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் அதே சமயத்தில், கூட்டு(collective) மேற்றும் கூட்டுறவு அமைப்புகள், அரசுக் கட்டப்பாட்டில் உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை இயக்கி முறைப்படுத்திடும்.

அக்டோபர் புரட்சி : உலகத்தை மாற்ற முடியும்

மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு சமயம் கூறிய பொருள்பொதிந்த வார்த்தைகள்: “தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும்.”  அக்டோபர் புரட்சி உலகை மாற்றுவது சாத்தியமே என்று உலகுக்கு காட்டியிருக்கிறது. அது இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றேயாகும்.  பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், அக்டோபர் புரட்சி மற்றம் அதன் பங்களிப்புகள் மனிதகுல நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு இன்றளவும் உதவிக்கொண்டு இருக்கிறது. நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட அக்டோபர்புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை அளித்துவரும்.  அக்டோபர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக்கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.

(கேரள மாநிலம், திருச்சூரில், 2017 ஜூன் 13 அன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது  அவர் கூறியதிலிருந்து சில அம்சங்கள்.)

Sri Aurobindo's Diversity Essay - Siddhartha Sundaram ஸ்ரீ அரவிந்தரின் பன்முகம் கட்டுரை - சித்தார்த்தன் சுந்தரம்

ஸ்ரீ அரவிந்தரின் பன்முகம் – கட்டுரை




அரவிந்தரின் இளமைப் பருவம்:

1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மேற்கு வங்கத்தின் ரங்க்பூரில் துணை சர்ஜனாக பணிபுரிந்து வந்த கிருஷ்ணாதன் கோஷுக்கும் ஸ்வர்ணலதா தேவிக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் அரபிந்தோ அக்ராய்ட் கோஷ் என அழைக்கப்பட்ட அரவிந்தர்.

இவரை இவரது பெற்றோர்கள் ஐரோப்பிய பாணியில் வளர்க்க ஆசைப்பட்டதால் அவரை டார்ஜிலிங்கில் இருந்த லொரேட்டோ கான்வெண்ட் பள்ளியில் சேர்த்தனர். இவருடைய தந்தை இவர் இந்தியன் சிவில் சர்வீஸில் சேர்ந்து பணிபுரிய வேண்டுமென நினைத்தார். அதற்கு நல்ல கல்வி தேவை என்பதற்காக 1879 ஆம் ஆண்டு, அரவிந்தரின் ஏழாவது வயதில், அவரும், இரு சகோதரர்கள் உள்பட மொத்தக் குடும்பமும் இங்கிலாந்துக்குச் சென்றது. அங்கு தனக்குத் தெரிந்த நண்பரான ரெவரண்ட் ட்ரூட் (Drewett) பாதுகாப்பில் தன்னுடைய மூன்று மகன்களையும் இருக்கச் செய்தார். அங்கிருந்த காலகட்டத்தில் அரவிந்தர் லத்தீன், கிரேக்கம், இத்தாலியன், ஃபிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார். அதன்பின் கேம்பிரிட்ஜில் இருக்கும் செயிண்ட் கிங்க்’ஸ் கல்லூரியில் சேர்ந்து மற்ற பாடங்களுடன் ஐசிஎஸ் தேர்வுக்கானப் பயிற்சியும் பெற்று அத்தேர்வில் பங்குபெற்ற 250 பேரில் 11 ஆவது ரேங்க் பெற்று தேறினார். இவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கப்பல் விபத்துக்குள்ளாகிவிட்டது என்கிற தவறான செய்தியைக் கேட்ட இவரது தந்தை மரணமடைந்தார்.

பரோடாவில் அரவிந்தர்:

1893 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்து பரோடாவில் மாநில சேவையில் சேர்ந்தார். அங்கு பல துறைகளில் வேலை பார்த்து வந்ததோடு பரோடா மஹாராஜாவுக்கான பேச்சுக்களை எழுதித் தருபவராகவும் பணியாற்றினார். 1897 ஆம் ஆண்டு பரோடாவில் இருந்த பரோடா கல்லூரியில் (இப்போது எம்எஸ் பல்கலைக்கழகம்) ஃபிரெஞ்சு ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்தபோது அவர் தானாகவே சமஸ்கிருதமும், பெங்காலியும் கற்றுக் கொண்டு பன்மொழி வித்தகராகத் திகழ்ந்தார்.

பரோடாவில் வாழ்ந்து வந்தபோது `இந்து பிரகாஷ்’ என்கிற பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தார். ஐரோப்பிய பாணியில் வளர்க்கப்பட்டாலும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் பரோடா மாநில நிர்வாகத்தில் வேலை பார்த்து வந்த காரணத்தால் இவரால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியவில்லை.

பரோடாவில் இருந்து கொல்கத்தா செல்வதற்கு முன்பாக இவர் புரட்சி நடவடிக்கைகளில் பட்டும் படாமல் ஈடுபட ஆரம்பித்தார். 1899 ஆம் ஆண்டு மிகவும் துடிப்பான இளைஞரான யத்தின் பானர்ஜிக்கு பரோடா ராணுவத்தின் உதவியோடு ராணுவப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். இரண்டு வருடப் பயிற்சிக்குப் பின் யத்தின் கொல்கத்தாவுக்குச் சென்றார்.

அரவிந்தரின் திருமண வாழ்க்கை:

அரவிந்தரின் வாழ்க்கைத் துணையான மிர்ணாளினி தேவி குறித்து அதிகச் செய்திகள் இல்லை. இவருக்கு 14 வயதாகும் போது 29 வயதான அரவிந்தரை மணந்து கொண்டார். இந்துப் பெண்ணை, இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பிய அரவிந்தர் அப்போதே பத்திரிகையில் விளம்பரம் செய்திருக்கிறார். அதன்பின், மிருணாளியின் அப்பாவான கிரிஷ் சந்திரபோஸ் இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அரவிந்தரும் மிருணாளியும் பரிமாறிக் கொண்ட சில கடிதங்கள் சிறு நூலாக வெளிவந்திருக்கிறது. இவர் தனது 32 ஆம் வயதில் இன்ஃப்ளூன்சா நோயால் இறந்து போகிறார்.

`இந்து மனைவி’யாக வாழ அரவிந்தர் இவரை வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் எவ்வளவு முயன்றாலும் மிருணாளினியால் அது முடியவில்லை. இதோடு இருவருக்குமான `தலைமுறை இடைவெளி’யால் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகிறது, அரவிந்தர் அந்த நேரத்தில் தன்னை அரசியலில் தீவிர இணைத்துக் கொண்டதால் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. 1905 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறார். இவரது பதினெட்டு ஆண்டு கால திருமண வாழ்க்கை பெரும்பாலும் தனிமையிலேதான் கழிந்திருக்கிறது. இவர் தனது நகைகளில் பலவற்றை விற்று தர்ம காரியங்கள் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

அரவிந்தரின் அரசியல் நுழைவு:

1902 ஆம் ஆண்டு அரவிந்தர் மேற்கிந்தியாவில் ராஜ்புதானத்தைச் சேர்ந்த தாக்கூர் சாஹேப்பால் இயங்கி வந்த ரகசிய அமைப்பில் சேர்ந்தார். அதன் பின் கொல்கத்தாவில் பி. மிட்டர் தலைமையில் இயங்கி வந்த புரட்சிகர அமைப்புக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் இவரிடமிருந்த ஒருங்கிணைப்புக்குத் தேவையான ஆற்றல் வெளிப்பட்டது. இவர் தீவிரமாக அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பாகவே வங்காளத்தில் இயங்கிவரும் புரட்சிகர அமைப்புகளிடையே அறிவுஜீவியாக அறியப்பட்டார். இவருடைய நோக்கம் என்னவெனில், வலுவான புரட்சிகர அமைப்புகளையெல்லாம் ஒன்றிணைக்கும் நெட்வொர்க் ஒன்றை ஆரம்பித்து அதிலிருக்கும் துடிப்புள்ள இளைஞர்கள் அனைவருக்கும் ராணுவப் பயிற்சி அளிப்பதும் அப்படி ராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர்களைப் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்ய வேண்டுமென்பதாகும்.

இப்படிப் பார்க்கும்போது இவர் காந்திக்கும், எம்.என். ராய்க்கும் முன்பாகவே இந்திய அரசியல் களத்தில் நுழைந்தவராவார். அந்நியரிடமிருந்து இந்தியா எந்தவிதத்திலாவது சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார். 1905 ஆம் ஆண்டுக்குப் பிறகே இவர் தீவிரமான அரசியலில் நேரடியாக இறங்க ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் தான் வங்கத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டுமென பிரிட்டிஷார் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட வங்காள மாநில மக்கள் கொதித்தெழுந்தனர். இதுவே அரவிந்தர் அரசியலில் தீவிரமாக நுழைவதற்கு ஒருவகையில் காரணமாக இருந்தது எனச் சொல்லலாம். இதனால் வருடத்துக்கு 500 பவுண்ட் வருமானம் கொண்ட வேலையை உதறித் தள்ளிவிட்டு மாதம் 10 பவுண்ட் வருமானம் கொண்ட கொல்கத்தா நேஷனல் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கொல்கத்தாவுக்கு வந்தார்.

அப்போது இந்திய அரசியலில் மிதவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களைப் பார்த்து அரவிந்தர் கேலி செய்த்தோடு Lal, Pal, Bal என அறியப்பட்ட லாலா லஜ்பத் ராய், பிபின் சந்திர பால், பால் கங்காதர் திலக் ஆகியோரின் தீவிரவாதத்தை ஆதரித்து பிபின் ஆரம்பித்த `பந்தே மாதரம்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ந்து தலையங்கம் எழுதி வர ஆரம்பித்தார். இப்பத்திரிகையில் எழுதி வந்ததோடு `ஜகன் தாரா’, `இந்து பிரகாஷ்’, `கர்ம யோஹின்’ போன்ற பத்திரிகைகளும் எழுதி தன்னை ஒரு பத்திரிகையாளராகவும் வெளிப்படுத்திக் கொண்டார்.

`ஸ்வராஜ்’ என்கிற சொல்லுக்குப் பதிலாக `சுதந்திரம் (Independence)’ என்கிற சொல்லை முதன் முதலில் உபயோகிக்க ஆரம்பித்தார். மிகவும் தைரியமாக இந்தியாவுக்கு `முழுமையான பூரணத்துவ (complete, absolute)’ சுதந்திரம் வேண்டுமென பிரகடணம் செய்தார். `சுதந்திரம்’ என்கிற சொல்லை உபயோகிப்பதற்குக் கூட சிலர் பயப்படுகிறார்கள் ஆனால் என் வாழ்க்கையின் `மந்திரச் சொல்லே’ இதுதான் என வெளிப்படையாகவும் தைரியத்துடனும் தனது பேராவலை பொதுவெளியில் பேசியும், எழுதியும் வந்தார். இதற்காகவே இவரை அப்போது வைஸ்ராயாக இருந்த லார்ட் மிண்டோ, `இந்தியாவின் மிகவும் அபாயகரமான மனிதர்’ என அழைத்தார்.

வங்காளத்தில் தேசியவாத இயக்கம் வெகு வேகமாக தீவிரவாதக் கருத்துகளுடன் வளர்ந்து வந்த சமயத்தில் தேசதுரோக சட்டத்தின் கீழ் இரண்டு முறை இவர் கைது செய்யப்பட்டு அதன்பின் விடுவிக்கப்பட்டார். 1908 ஆம் ஆண்டு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஒரு வருடத்திலேயே இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

1910 ஆம் ஆண்டில் இவர் தீவிர அரசியலிலிருந்து விலகி பாண்டிச்சேரி சென்று 1950 ஆம் ஆண்டு வரை அதாவது மரணிக்கும் வரை அங்கேயே வாழ்ந்து வந்தார்.

அரவிந்தரும் ஆரோவில் ஆசிரமும்;

1910 ஆம் ஆண்டு விசாரணை அதிகாரி ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர், அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஒரு பகுதியான சந்தாநகருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பாண்டிச்சேரிக்கு மாறுவேடத்தில் வந்து சேர்ந்தார்.

ஆங்கிலேய அரசுக்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பாக இதை நினைத்துக் கொண்டு யோக நெறியில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அரசியல்வாதியாக இருந்தவர் ஆன்மிகவாதியாக மாறத் தொடங்கினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்பு கொண்டார்.

1910 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரிக்கு வந்த அரவிந்தருடன் மூன்று அல்லது நான்கு பேர் வசித்து வந்தனர். மிரா அல்ஃபாஸா என்கிற பெயரைக் கொண்டவரும் பின்னாளில் `அன்னை’ என அழைக்கப்பட்டவரும், பிரெஞ்சு எழுத்தாளர் பால் ரிச்சர்டும் 1914 ஆம் ஆண்டு அரவிந்தரைச் சந்தித்து `Monthly Review’ வெளியிடுவது பற்றிய யோசனையைச் சொன்னார்கள். ஆனால் முதலாம் உலகப் போர் ஆரம்பமானதால் இவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அரவிந்தரே ஒரு சிலரின் உதவியுடன் இந்த வேலையைப் பார்த்து வந்தார்.

1904 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்தபோதே அரவிந்தர் பிரணாயமம் பயிலத் தொடங்கியபோது சிறை வாழ்க்கை இவரை யோக நெறியில் அதிக அக்கறை கொள்ள வைத்தது. விடுதலைப் போராட்டம் என்பதை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமின்றி ஆன்மிகக் கண்ணோட்டத்திலும் அரவிந்தர் பார்க்கத் தொடங்கினார்.

அரவிந்தர் தனது சிந்தனைகளை `ஆர்யா’ என்கிற ஆன்மிக இதழில் 1914 முதல் 1921 வரை எழுதி வந்தார்.

முதலாம் உலகப் போருக்குப் பின் 1920 ஆம் ஆண்டு அன்னை மீண்டும் இந்தியா திரும்பியவுடன் பலரின் ஒத்துழைப்புடன் ஆசிரமம் ஒரு வடிவம் பெற ஆரம்பித்தது. `அன்னை தன் வாழ்நாள் முழுவதையும் ஆசிரமத்திற்காகவும், ஸ்ரீ அரவிந்தருக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டார்’ என்றால் அது மிகையில்லை.

அரவிந்தர் பல நூல்களை எழுதியிருந்தாலும் அவரது `சாவித்திரி’ என்கிற நெடுங்காவியம் 24,000 அடிகளை உடையது. மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூலான இது முதன் முதலாக 1940 ஆம் ஆண்டு வெளியானது. 1972 ஆம் ஆண்டு இவருடைய எழுத்துகள் எல்லாம் தொகுக்கப்பட்டு 30 தொகுதிகளாக Sri Aurobindo Birth Centenary Library யால் வெளியிடப்பட்டது.

அரவிந்தர் ஒரு தத்துவஞானி, யோகி, எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், தேசியவாதியாக இருந்து ஆன்மிகவாதியாக மாறியவர். இவரை கெளரவிக்கும்பொருட்டு இந்திய அரசு 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தபால்தலை வெளியிட்டது. 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் 150 வயதான ஸ்ரீஅரவிந்தரை நினைவு கொள்வது அவசியமாகும்.

– சித்தார்த்தன் சுந்தரம்

விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மாள் கட்டுரை – பேரா.மோகனா

விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மாள் கட்டுரை – பேரா.மோகனா




சுதந்திர தாகம்

விடுதலைப் போராட்டம் என்றாலே ஏதோ உயர்குடிப் பெண்கள் அல்லது பரம்பரையாக செல்வந்தர் மற்றும் விடுதலைப் போராட்ட குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது நமது பொதுப் புத்தியில் ஊறிப்போன விஷயம். மிகவும் சாதாரண குடும்பத்தில் வாழ்ந்தவர்களும் கூட சுதந்திர தாகத்தால் ஈர்க்கப்பட்டு, விடுதலை வேள்வியில் அவர்களும் வெந்து தணிந்திருக்கின்றனர் என்ற உண்மை நம்மை பெரிதும் வியப்பில் ஆழ்த்துகின்றது. அப்படிப்பட்ட இருவர்தான் நாகம்மையார் மற்றும் கண்ணம்மா. இவர்கள் யார் தெரியுமா? நாகம்மையார் பகுத்தறிவுப் பகலவன் ஈ. வெ. ரா. பெரியாரின் முதல் மனைவி. கண்ணம்மா ஈ.வெ.ரா வின் தங்கை. ஈ.வெ.ரா. பெரியாருக்கு  கிருஷ்ணசாமி என்ற ஒரு மூத்த சகோதரரும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாய் என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

நாகம்மை பிறப்பும் மணமும்..

அன்றைய சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட சேலம் மாவட்டம், தாதம்பட்டியில் ரெங்கசாமி, பொன்னுத்தாயி என்ற தம்பதியருக்கு, 1885ம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம். இவரை நாகம்மையார் என்றும் அழைத்தனர். நாகம்மை முறையான பள்ளிக் கல்வி பயின்றதில்லை. தனது 13-வது வயதில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை ஈ. வெ. ரா. பெரியாரை மணந்துகொண்டவர்.  Nagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனா

இவர் பெரியாருடைய தாயாரின் ஒன்று விட்ட தம்பி மகள் ஆவார். நாகம்மை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். அதனால் பெரியாரின் அன்னை,  இவரை தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்க முதலில் விரும்பவில்லை; எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மகன் ராமசாமி பிடிவாதமாக,  நாகரத்தினத்தைத் தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றார். மேலும் நாகரத்தினமும் ஒரேடியாக,   “மணந்தால் ராமசாமியைத்தான் மணப்பேன், இல்லையென்றால் இறந்துவிடுவேன்” என அடம்பிடித்து மிரட்டினார் பெரியாரின் அன்னையை. எனவே வேறு வழியின்றி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஈ.வெ.ராமசாமிக்கும், நாகரத்தினம் என்கிற நாகம்மைக்கும் திருமணம் 1898-ம் ஆண்டு சிறப்பாகவே நடந்து முடிந்தது. திருமணத்தின்போது ஈ.வெ.ராவுக்கு வயது 19.

திருமணத்துக்குப் பின் முற்போக்கு வழியில் மாறிய நாகம்மை..

திருமணமாகி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1900ம் ஆண்டு, ஈ.வெ.ராமசாமிக்கும், நாகரத்தினத்திற்கும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்து ஐந்து மாதங்களிலேயே நோயுற்று காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டது. பின்னர் அவர்களுக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இதுவே நாகம்மையாரின் பிந்தைய தீவிரமான சமூகப்பணிக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஈ.வெ.ராமாசாமி தந்தை பெரியாராக பரிணாமம் அடைந்திருந்தவருக்கு  முதல் மனைவியான நாகம்மை தன்னை தகுதியுள்ளவராக நிகழ்த்திக் காட்டுவதற்குரிய சந்தர்ப்பமாகவே அனைத்துப் போராட்டங்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.

மனைவியை விளையாட்டாய் ஏமாற்றி, மாற்றிய ஈ.வெ.ரா..

திருமணம் ஆனவுடன், நாகம்மை மாமியாரின் சொல்படி, விரதம் இருந்தார். ஆனால் பெரியார், நாகம்மை சாப்பிடுமுன்னர், அவர் சாப்பிட உள்ள சோற்றில் எலும்புத்துண்டை வைத்துவிடுவார். இது தொடர்ந்து நடைபெற்றதால், ஈ.வெ.ராமசாமியின் அன்னை, இனி நீ விரதம் இருக்க வேண்டாம் என்று மருமகள் நாகம்மையிடம் கூறிவிட்டார். ஈ.வெ.ராவுக்கு மனைவி தாலி அணிவதில் விருப்பம் இல்லை. இரவில் மனைவி நாகம்மையை தாலியைக் கழட்டி கீழே வைக்கும்படி கூறுவார். நாகம்மை அதற்கு மறுத்துவிடுவார். இதனைப் பார்த்த ஈ.வெ. ராமசாமி, நாகம்மையிடம், பெண்கள், தன் கணவர் அருகில் இருக்கும்போது தாலி அணியக்கூடாது. வெளியில் தூரத்தில் சென்றிருந்தால்தான் தாலி அணிய வேண்டும் என்பார். அப்பாவியான நாகம்மை இதனை நம்பிவிடுவார். பின்னர் ஈ.வெ.ரா மனைவியின் தாலியைக் கழட்டச் சொல்லி, தனது சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு புறப்பட்டு விடுவார். காலையில் நாகம்மைக்கு, மாமியார் மற்றும் மற்ற பெண்களுடன் ஏன் தாலி இல்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்லி மாளாது. இதுவே தொடர்ந்ததால், ஈ.வெ. ரா வின் அன்னை, மகனையும், மருமகளையும் எதுவும் சொல்வதில்லை என்ற முடிவு எடுத்தார். இப்படியே ஈ.வெ.ரா தனது முற்போக்குக் கருத்துக்களை வீட்டுக்குள்ளும், மனைவியிடமும் விதைத்தார்.

ஈ.வெ.ராமசாமியின் சமுதாயப்பணி,

1905-1908ம் ஆண்டுகளில் ஈ.வெ.ராமாசமிக்கு  வயது 26-29: பொது வாழ்வில் ஈ.வெ.ராமசாமி விருப்பங்கொண்டு மக்கள் நலப்பணி ஆற்றினார். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது மீட்புப்பணி ஆற்றியதுடன், இறந்த சடலங்களை உறவினர்களே கைவிட்டுச் சென்ற போதும், தன் தோள்மீது சுமந்து சென்று  அப்புறப்படுத்தி அரும்பணி ஆற்றினார்.காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ராமசாமியின் அனைத்து செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார் மனைவி நாகம்மை. 1909ம் ஆண்டு ராமசாமி, 30 வயதில்,  இளம் விதவையான தனது தங்கையின் மகளுக்கு  எதிர்ப்புக்கிடையில் மனைவி நாகம்மை உதவியுடன் விதவைத் திருமணம் செய்தார். 1911ம் ஆண்டு 32 வயதில் ஈ.வெ.ராமசாமி தந்தையை இழந்தார்.

மனமாற்றம்.. கடவுள் மறுப்பாளர் 

நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்தன. அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்டார். இது அவரது மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது.  அப்போது நடந்த நிகழ்வுகள்தான் அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றின.

1919-ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி, காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவர் ஈரோடு நகர்மன்றத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியதுடன், குடிநீர்த்திட்டம், சுகாதார வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.ஏறத்தாழ 28 மதிப்புறு பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஈரோட்டில்  பெருவணிகர். தான் வகித்துவந்த மதிப்புறு பதவிகள் அனைத்தினின்றும் தானே விலகியே,காந்தியின் காங்கிரசில் சேர்ந்தார்.

நாகம்மை கதராடை ஏற்பு 

ஈ.வெ.ராமசாமி ,காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தை ஏற்று எளிய வாழ்வை  மேற்கொண்டதுடன், ஆடம்பர ஆடையைத் துறந்து கதர் ஆடையை உடுத்தினார். அப்போது  தன் அன்னை உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கதராடை அணியச் செய்தார். கதர் மூட்டையைத் தோளில் சுமந்து, ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்தார். அந்த கால கட்டத்தில்,  ஆடம்பரமிக்க ஆடை, அணிகலன்களைத் துறந்தார் நாகம்மையார். பின் காந்தியின் , கதராடையை அணிந்து  எளிமையை ஏற்றுக்கொண்டார் நாகம்மையார்.

 நாகம்மை –காங்கிரஸ் இயக்கம் மற்றும் காந்தி சந்திப்பில் 

1919ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக் கொண்ட போது நாகம்மை தன்னையும் அப்போது காங்கிரஸ் உறுப்பினராக்கிக் கொண்டார். அந்தக் காலக்கட்டத்தில்  மகாத்மா காந்தி தொடங்கிய கள்ளுக்கடைப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்திருந்தது. அப்போது பிரசாரத்திற்காக ஈரோடு வந்திருந்த மகாத்மா காந்தி தந்தை பெரியார் வீட்டில்தான் தங்கியிருந்தார். அச்சமயம்  மகாத்மா காந்தி கள்ளுக்கடையினால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அவரிடம் கூறினார்.  எனவேதான் கள்ளுக்கடை போராட்டம் என்றார். காந்தி பெண்கள் மீது அதீத அக்கறையுடன் இருந்ததை, பெண்ணாக இருந்து நாகம்மை உணர்ந்தார். உண்மையை அறிந்தார்.

நாகம்மையும், கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியல் 

1921-ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கள்ளுக்கடை மறியலின் போது ஆங்கிலேய அரசால் ஈ.வெ.ராமாசாமி கைது செய்யப்பட்டார். அப்போது பெரியார் கள் உற்பத்திக்குக் காரணம் தென்னை மரங்கள் என்பதால், தனது தோப்பில் இருந்த 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி போராட்டத்தைத் தீவிரமாக்கினார். ஆங்கிலேயே அரசு அப்போது 144 தடை உத்தரவு போட்டது. அதனையும்  ஈ.வெ.ரா.பெரியார் மீறியதால் கைது செய்யப்பட்டார். அப்போது நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்களுடன் சேர்ந்து மறியலைத் தொடர்ந்தனர். தமது மனைவி நாகம்மையையும், சகோதரி கண்ணம்மாவையும் அரசியலில் ஈடுபட ஊக்குவித்தவரே ஈ.வெ. ராமசாமி பெரியார்தான்.

சிறை சென்ற நாகம்மாள் & கண்ணம்மாள் 

ஈ.வெ.ராமசாமியின் மனைவி நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும்  இருவரும் , 1921ம் ஆண்டு  கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின், ஈரோடு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். கள்ளுக்கடை மறியலில் , ஈடுபட்டதால், ஈ.வெ. ராமசாமியின்  தங்கை கண்ணம்மாள், மனைவி நாகம்மாள் இருவரும் சிறை செல்ல நேரிட்டது. அவர்களுடன் ஈ.வெ. ராமசாமியும் கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றுச் சிறை சென்றார்.. இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.

போராட்டம் நிறுத்துவது ஈரோடு பெண்கள் கையில்..என காந்தி

அதன் பின்னர் அந்தப் போராட்டத்தினை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் முன்னின்று நடத்தினர். பெண்கள் விடுதலைப் போரில் கலந்துகொண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டது இந்திய வரலாற்றிலேயே  அதுதான் முதல்முறை. அரசு விதித்திருந்த 144 தடை உத்தரவை மீறியதால் ஈரோடு நகரம் முழுவதுமே கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்ட அரசு கைது நடவடிக்கையைத் தொடர அஞ்சி, சமரசத்துக்கு முன்வந்தது. மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு காந்தியைச் சிலர் வேண்டினார்கள். அதற்கு காந்தி “போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்றார்.

சாதி, மத வேறுபாடுகளைக் களைய குரல் கொடுத்த நாகம்மை 

சாதி மத வேறுபாடுகளை நீக்கவும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் மேடைகளில் முழக்கமிட்டார் நாகம்மை. பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமைக்கு உலகளவில் முதல் குரல் கொடுத்த இந்திய சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஈ.வெ. ராமசாமியின் வீட்டுப் பெண்களும் அவருக்கு நிகரான சேவைகளை தமிழகத்திற்கு புரிந்தனர். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பதற்கு நிகராக பெரியாருக்கு நிகராக அவரது வீட்டுப் பெண்கள் களத்தில் இறங்கி தங்களை நிருபித்தனர்.

காங்கிரஸ் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக நாகம்மை 

பெண் கல்வியின் இன்றியமையாமை, கலப்பு மணம், விதவைகள் மறுமணம், சுயமரியாதைத் திருமணம் போன்ற கருத்துகளைத் தமது பிரசாரங்களில் வலியுறுத்தினார்.1923 ம் ஆண்டு, டிசம்பர் 4ம் நாள்,  திருச்சியில், மதராஸ் (தமிழ்நாடு) மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டியில், அனைத்திந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நாகம்மை. தமிழ்நாட்டில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாகம்மை ஆவார்

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாகம்மை வைக்கத்தில் கைது 

கேரளத்தின் திருவிதாங்கூர் மாகாணத்தில் தீண்டாமை ரொம்பவும்  ஆதிக்கம் செலுத்தியது.  1924-ம் ஆண்டு ஏப்ரலில் இன்றைய கேரள மாநிலம் வைக்கத்தில் (  அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி) ஈழவர் எனப்படும் தீயர், புலையர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க நடைபெற்றதே வைக்கம் போராட்டம்.  இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைவதையும், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடப்பதற்கும் அப்போது தடை இருந்தது. எனவே காங்கிரஸ் இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் மற்றும் தெருக்களுக்குள் நுழைவதைத் தடை செய்வதை எதிர்த்து வைக்கம் சத்தியாக்கிரகத்தைத்  தொடங்கியது. இந்தப் போராட்டத்தினால் இரண்டு முறை சிறைப்பட்டார் பெரியார். அப்போது நாகம்மையார், தமிழகத்துப் பெண்களைச் அழைத்துக்கொண்டு ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். நாகம்மையும்  மற்றும் இராமசாமியும்  1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தினை முன்னெடுப்பதால் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அறிந்தும் அதற்கு அஞ்சாமல் துணிவுடன் போராட்டக் களத்தில் நாகம்மையார் உறுதியுடன் நின்றார். நாகம்மை போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை முன்னின்று நடத்தி,1924 ம் ஆண்டு,  மே மாதம் அங்கேயே கைது செய்யப்பட்டார்.

 சுயமரியாதை இயக்கத்தில் நாகம்மை 

ஈ.வெ.ராமசாமி, 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை  இயக்கம் என்ற ஒன்றைத் தொடங்கினார். அப்போது இதில் பெண்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் அந்த இயக்கம் தொடங்கிய போது. சுயமரியாதை இயக்கத்தில் பெண்களும் பங்கேற்று தங்களது உரிமைகளை நிலை நாட்டிட வேண்டும் என்று பெண்களை அதிகளவில் சுயமரியாதை இயக்கத்தில் இணைப்பதற்கு காரணமாக இருந்தார் நாகம்மையார். இயக்கத்தில் பெண்கள் பங்குபெறுவதை ஊக்கப்படுத்தியவர், உறுதிப்படுத்தியவர் இவர். அதேபோல் சுயமரியாதை இயக்கத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில், விதவை மறுமணங்கள் மற்றும் சுயமரியாதைத் திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.

 குடியரசு இதழின் ஆசிரியராக 

ஈ.வெ.ராமசாமி பெரியார் சிறை சென்ற காலத்தில் நாகம்மை “குடிஅரசு, ரிவோல்ட்” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். ஈ.வெ. ராமசாமி ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் சென்றார். அப்போதும் நாகம்மையார்   குடியரசு இதழின் ஆசிரியராக பொறுப்பு ஏற்று அதனை திறம்பட நடத்தினார்.

நாகம்மை மறைவு 

மனைவி நாகம்மைக்கு உடல்நிலை சரியில்லை. அருகிலிருந்து கவனித்து அவளுக்குத் தைரியமூட்டி, ஆறுதல் சொல்ல ஈ.வெ.ரா, அதைப் பற்றி எண்ணவில்லை. தனது தொண்டுதான்,  பெரிதென்றெண்ணி, பொதுக் கூட்டங்களில் உரையாற்றப் பயணம் சென்று விட்டார். நாளுக்கு நாள் நாகம்மையார் உடல்நிலை மோசமடைந்து வந்தது.வைத்தியம் செய்த மருத்துவர்கள் இனிப் பிழைப்பது அரிது என்று கூறினார்கள். அருகிருந்து  கவனித்துக் கொள்ள பலர் இருந்தும், நாகம்மையாரின் தளர்ந்த விழிகள், நாற்புறமும் கணவரைத் தேடித் துழாவின. இத்தருணத்திலும் தன் கணவர் அருகில் இல்லாமல் போனது நாகம்மையாரின் மெல்லிய மனத்தை மிகவும் வருத்தியது. வந்துவிடுவார், வந்து விடுவார் என்கிற நம்பிக்கை வரவர அவரது உள்ளத்தில் தளர்ந்து கொண்டே வந்தது.

அப்போது ஈ.வெ.ரா திருப்பத்தூர் மநாட்டில்  பலத்த கைதட்டல்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தார். ஈரோட்டிலிருந்து சென்ற ஆள், ஈ.வெ.ராவிடம் நாகம்மையாரின் மோசமான நிலைமையையும், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறினார். ஆனால், இதைக் கேட்டும், ஈ.வெ.ரா. உடனே புறப்பட்டு விடவில்லை.மாநாட்டில் தன் முழு உரையையும் முடித்த பின்னரே புறப்பட்டார். ஈரோடு மிஷன் மாருத்துவமனையில் நாகம்மையார், கணவரைக் காணும் கடைசி ஆசையும் நிறைவேறாமலே, 1933 -ம் ஆண்டு மே மாதம் 11ம் நாள், உயிர்துறந்தார். ஈ.வெ.ரா. ஊர்வந்து, நாகம்மையாரைக் காண மருத்துவமனை சென்றபோது,நாகம்மையின் உயிரற்ற உடல்தான் அவரை வரவேற்றது. எதற்கும் கலங்காத ஈ.வெ.ராவை,நாகம்மையாரின் மரணமும் கலக்கவில்லை.அன்பே உருவானவர் நாகம்மையார்.

நாகம்மையை பெரியார் பாராட்டு 

“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன்”  என தன் மனைவி நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள் இவை. அவர் அப்படி சொன்னதற்குக் காரணம் தான் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல் தன் கொள்கை வழித்துணையாகவும் நாகம்மையார் விளங்கினார் என்பதனாலேயே

நாகம்மை பெருமை 

@ தந்தை பெரியாருடன் வாழ்ந்த காலத்தில், அவருடன் அவரது கொள்கைப் போராட்டத்தில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார் நாகம்மை..

@ தந்தை பெரியாரின் மனைவியாக வாழ்ந்ததுடன், அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டவராக தந்தை பெரியார் வலியுறுத்திய புதுமைப் பெண்ணாகவும் வாழ்ந்து காட்டியவர் நாகம்மை.

@தமிழ் நாட்டில் பல பள்ளிகள் நாகம்மையின் பெயரைத் தாங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பெரியார் ஈ. வெ. ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

@தஞசாவூரில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளது

@வேலூரில் நாகம்மை பெயரில், அரசு ஈ.வெ.ரா நாகம்மை மேல்நிலைப் பள்ளி உள்ளது.

@மதுரையிலும் பெரியார் நாகம்மை பள்ளிகள் உள்ளன.

@ காந்தியின் பிரச்சாரத்தில் வெகுவாக ஈர்க்கப்பட்ட நாகம்மை ஈரோட்டில் தங்களது வீட்டின் அருகே தெருவொன்றில் பெண்களைத் திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். நாகம்மை கள்ளுக்கடைக்காக நடத்திய போராட்டத்தின் காரணமாக மறியல் போராட்டம் நடைபெற்ற இடம் தற்போதும் கள்ளுக்கடை மேடு என்றழைக்கப்பட்டு வருகிறது.

@ நாகம்மை, கணவரைப் பலசமயம் தன் வீட்டாரிடம் விட்டுக் கொடுக்காமலும். வெளியுலகில் தன் கணவரது பொதுத் தொண்டுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்புக் கொடுத்தவர்.கணவர் சிறைபுக நேர்ந்ததால், அவர் விட்ட இடத்திலிருந்து தொண்டைத் தொடர்ந்து போராடி, சிறைக்கும் அஞ்சாமல் வீரசாகசம் புரிந்த ஒப்பற்ற வீராங்கனையாக வாழ்ந்து காட்டி சரித்திரத்தில் இடம் பெற்றவர் நாகம்மையார்.

@ காந்திஜிக்கு மனைவியாக அமைந்த கஸ்தூரிபாய் அவருக்கு தொண்டும், உதவியும் செய்தது போலவே, ஈ.வெ.ரா. வுக்கு நாகம்மை கிடைத்தார்.அவருக்கு ஏகமாகப் பணிபுரிந்தார், சமூகப் போராளியாகவும் இருந்தார்.

விருந்தோம்பலில் சிறந்த பண்பாளர் நாகம்மை 

விருந்தோம்பலில் நாகம்மையாருக்கு இணையானவர் எவருமில்லை . தம் இல்லத்திற்கு வரும் யாவர்க்கும் இன்முகத்துடனும் இன்சொல்லுடனும் விருந்து படைப்பதைக் கண்டு அனைவரும் நெகிழ்வார்கள். ஆனால் பெரியார் சிக்கனவாதி; இதனை விரும்பாதவர். ஆனால் எந்த நேரத்தில், யார் தன் வீடு தேடி வந்தாலும், அவர்களை வாயார உபசரித்து; வயிராற உணவளித்து அனுப்புவார் நாகம்மை. தனது.மாமனார், மாமியாரையும்  தன் இரு கண்கள் போல் போற்றிக் கடைசிக் காலம்வரைத் தொண்டு செய்தவர்.

”ஒரு சமயம் நானும், பெரியாரும் திருநெல்வேலிக்குப் பிரசார நிமித்தம் சென்றுவிட்டு ஈரோட்டுக்கு இரவு 12.30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற ஐயப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது நாகம்மை அம்மையார் அன்புடன் வரவேற்று, உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்” என்று திரு.வி.க எழுதியிருக்கிறார்.

ராஜாஜியும் கூடப் பெரியார் வீட்டு விருந்தோம்பல் குறித்து 1953-ம் ஆண்டுடில், நான் ஈ.வெ.ராமசாமியின் வீட்டுத் தோசையை விரும்பிச் சாப்பிடுவேன். அதன் பக்குவம் என்ன என்று நான் கேட்பதுண்டு” என்று பொதுக்கூட்ட மேடையிலேயே பேசியிருக்கிறார். பெரியாருடன் மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, இந்தியாவிற்குத் திரும்பும்போது, தங்களுக்கு விருப்பமான, தேவையான மலாய் நாட்டுப் பொருள்கள் எவை என்று கேட்ட தமிழர்களிடம், “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்” என்று உள்ளம் நிறைந்து பாராட்டினாராம் நாகம்மையார்.

நாகம்மை இல்லம்.

நாகம்மையாரின் பெயர் என்றும் நிலைத்திடும் வகையிலும், நாகம்மையின் சமூகப் பணியின் நினைவாகவும், ‘நாகம்மையார் இல்லம்’ என்ற பெயரில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லம்  தந்தை பெரியாரால் 1959-ம் ஆண்டு திருச்சியில் உருவாக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு தனது பொன்விழாவினை இந்த இல்லம் கொண்டாடியுள்ளது. இந்த இல்லம் இன்னும் எத்தனையோ பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.

Ref:

  1. https://ta.wikipedia.org/wiki
  2. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/mar/08/womens-day-2020-remembering-nagammai-maniammai-3376051.html
  3. https://ta.wikisource.org/wiki/
  4. https://www.vikatan.com/social-affairs/women/remembering-nagammai-on-her-death-anniversary
  5. amilvu.org/library/nationalized/pdf/49-na.ra.nachiyappan/ilaignarkalukkuthantha
  6. iperiyarvaralaru.pdfhttp://
  7. modernrationalist.com/category/feminism/
  8. https://feminisminindia.com/2019/09/16/nagammai-fearless-forgotten-dalit-feminist-activist/

Nagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனாNagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனா

பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு நல்லதா ? கெட்டதா ? கட்டுரை -கவிதா ராம்குமார்

பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு நல்லதா ? கெட்டதா ? கட்டுரை -கவிதா ராம்குமார்




பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு நல்லதா ? கெட்டதா ?
வாங்க பேசலாம்

காஞ்சிபுரம் மாவட்டம் என்றாலே நெசவும், விவசாயமும் இரு கண்கள் போன்றவை. காஞ்சிபுரம் மாவட்டத்தை ஏரிகளின் மாவட்டம் என்றும் கூறுவர். பரந்து விரிந்து இருக்கும் பசுமையான நெல் வயல்கள், குடியிருப்புகள், ஏரிகள், குளங்கள், கால்வாய், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் என இயற்கை அன்னையின் அன்பின் அரவணைப்பில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்க மக்கள் ஏன் ? இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் ;

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னை நகருக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து 4,500-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தையும் கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது.

இதில் சுமார் 3,200 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு தனிநபர்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்களாகவும், சுமார் 1,300 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலமாகவும் இருக்கிறது.

இத்திட்டத்திற்காக ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, மகாதேவி மங்கலம் ஆகிய நான்கு கிராமங்களும். அதை ஒட்டி உள்ள நீர்நிலைகள், வயல்வெளிகள், குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள், கோயில்கள் போன்றவை முற்றிலுமாக அழியும் அபாயமும். சுமார் ஆயிரம் குடும்பங்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள் .

இத்திட்டத்திற்காக அரசு என்ன சொல்கிறது ;

இத்திட்டத்திற்காக நிலத்தைக் கொடுப்போருக்கு இழப்பீட்டின்போது வழிகாட்டி மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சந்தை மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலையும். விமான நிலையத்துக்கு அருகிலேயே நிலமும், வீடு கட்டுவதற்கு பணமும் தருவதாக அரசு கூறியிருக்கிறது.

மக்களின் கருத்து ;

எங்களது முதுகெலும்பான விவசாயத்தை மட்டுமே செய்து காலம் காலமாக நாங்கள் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு வேலை தெரியாது. பெரிய லாபம் இல்லாவிட்டாலும் ஆத்ம திருத்தி எங்களுக்கு விவசாயத்தில் தான் இருக்கிறது .இதில் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு தான் எங்களது அன்றாட தேவைகளுக்கும், பிள்ளைகளின் படிப்பிற்கும் உதவுகிறது.

எங்களது பாட்டன் பூட்டன் காலத்தில் சொந்தமான மனையில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு அப்புறம் எங்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நலமோடு  வாழ்வார்கள் என்ற எண்ணம் இன்று சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது. எங்களது விவசாயத்தை அழித்து விட்டு எதற்காக இந்த விமான நிலையம். இங்கு இருக்கும் ஏரிகள் எல்லாம் புறம்போக்கு கிடையாது. அவைதான் இங்குள்ள விவசாயத்துக்கு உதவுகின்றன. அவை விவசாயத்துக்கு தாய், தந்தை போல. அதுதான் விவசாயத்துக்கான ஆணி வேர். இழப்பீடு தருகிறோம், இடம் தருகிறோம் என்கிறார்கள். ஊரை இழந்துவிட்டு எப்படி வாழ்வது. அரசு தரும் வேலையும் வேண்டாம் இடமும் வேண்டாம். எங்கள் விவசாயத்தை விட்டுவிடுங்கள். விவசாயம்தான் எங்களுக்கு கடவுள். ஊரைவிட்டு நாங்கள் போகமாட்டோம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

சென்னையில் இருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் 80 சதவீத மக்களின் நெருக்கடியைச் சமாளிக்க பரந்தூரில் புதிதாக கட்டப்படும் விமான நிலையத்திற்கு பதிலாக கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களை தரம் உயர்த்தினாலே சென்னையில் நெருக்கடி குறையும் என்றும் கையகப்படுத்தப்படும் கிராமங்களில் மூன்றாம் நிலை ஓடை இருப்பதாகவும்.இந்த ஓடை செம்பரம்பாக்கம் வரை நீரைக் கொண்டு வருகிறது. சென்னைக்கு மேற்குப் பக்கம் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். இப்போது மேற்குப்பக்க நீர்நிலைகளை அழித்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் நிபுணர்கள். காவல்துறையினர் அங்கு வசிக்கும் மக்களை சமூக ஆர்வலர்களிடமும் , விவசாய சங்க தலைவர்களிடமும் பேச விடாமல் எப்பொழுதும் கண்காணிப்பிலே  வைத்துக் கொள்வது  தனி மனிதனின் சுதந்திரத்திற்கு எதிரானதாகும், மக்களின் சம்மதம் இல்லாமல் நிலங்களை கையாகப்படுத்த கூடாது என்று பல அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயத்தை அழித்துவிட்டு வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிராக செயல்படாமல் நீர் நிலைகளை மீட்டெடுத்து, சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக ஆகிவிடாமல் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை
தர வேண்டும். அரசு முறையாக சிந்தித்து இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒவ்வொரு மக்களின் எண்ணங்களாக  இருக்கின்றது.

கவிதா ராம்குமார்
திருவண்ணாமலை.