நூல் அறிமுகம்: அப்பணசாமியின் வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும் – ஆர். பாலகிருஷ்ணன்

நூல் அறிமுகம்: அப்பணசாமியின் வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும் – ஆர். பாலகிருஷ்ணன்




வரலாற்றிலிருந்து நாம் தப்பிச்செல்ல முடியாது. கடந்த காலம் தான் நம்மை கடந்து செல்கிறது. எனவே வரலாறு என்ன வாழ்வாதாரமா என்று கேட்டுவிட்டுக் கடந்து செல்லமுடியாது. வரலாறு பற்றிய புரிதல் சரியான எதிர்காலத்தை நோக்கி நிகழ்காலத்தில் வழிநடத்தும்.

இந்திய வரலாற்றியலாளர்களில் மிக முக்கியமான ஓர் ஆளுமை டி.டி. கோசாம்பி.

ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும்; அரசர்கள் நிகழ்த்திய போர்ப் பயணங்களையும்; மேட்டுக் குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும்; அரண்மனைகள், கோவில்கள் குறித்த வருணனைகளையும்; அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையும் வரலாறு என்ற பெயரில் படித்து வந்தோம். ஆனால் அடித்தட்டு மக்கள் வரலாறு இவற்றில் இடம் பெறுவதில்லை. இதில் மடைமாற்றம் செய்து இந்தியாவின் அடித்தட்டு மக்கள் வரலாறு எழுதுவதைத் தொடங்கி வைத்தவர் டி. டி. கோசம்பி என்று அறியப்படும் தாமோதரன் தர்மானந்தர் கோசம்பி ஆவார்.

ஆனால் அவரது எழுத்துகளும் சிந்தனைகளும் இன்றளவும்கூட தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தப்படவில்லை. அத்தகைய சிக்கலான பணியினை மூ. அப்பணசாமி எழுதியுள்ள வரலாறு – பண்பாடு – அறிவியல் : டி. டி. கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும் எனும் இந்த புத்தகம் மேற்கொள்கிறது.

வரலாறு என்பது கல்வெட்டுகள், சாசனங்களில் மட்டுமல்லாமல் தொலைதூரக் கிராமங்களில் காணப்படும் சிதைந்து போன வழிப்பாட்டு உருக்கள், மரக்குகைகள் மலைக்குகைள் ஆகியனவற்றில் மட்டுமல்லாமல் அருகில் வாழும் மக்கள் உணவுமுறை அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள். சொல்லாடல்களில் மறைந்துள்ளதைக் கட்டவிழ்த்துள்ளதன் மூலம் கோசம்பி வெளிக்கொணர்ந்தார். மட்டுமல்லாமல் சமஸ்கிருத வேதங்கள், பிரமாணங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றையும் கட்டுடைத்து இந்திய தொல் குடிமக்கள் மீது நான்காயிரம் ஆண்டுகளாகத் தொடுக்கப்பட்டு வரும் பண்பாட்டுத் தாக்குதல்களை வெளிக்கொணர்ந்தார்.

இதன் மூலமாக இந்தியாவில் வர்க்கச் சுரண்டல் என்பது சாதிப் படிநிலை அமைப்பின் மூலமாக நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் இந்த சாதி அமைப்பு மதத்தால் கட்டுப்படுத்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார்…

இந்தக் கதையினை டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக தமது புத்தகத்தில் கூறுகிறார்
மூ. அப்பணசாமி….

இந்த நூல் வருகிற 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இது ஒரு நல்ல முயற்சி.
வாழ்த்துகள் தோழர் அப்பணசாமி.

– ஆர். பாலகிருஷ்ணன்
முகநூல் பக்கத்திலிருந்து

நூல் : வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
ஆசிரியர் : மூ. அப்பணசாமி
விலை : ரூ.₹400
வெளியீடு : ஆறாம் திணை பதிப்பகம்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்




தொன்மக் காலத்து இயற்கை மாற்றங்களால் உருவான புவி வெப்பச்சலனத்திற்கும், நம்முடைய இன்றைய வெப்பச்சலனத்திற்கான ஒப்புமையை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் கல்வியாளர்களின் பணி தொழில்புரட்சிக் காலத்திற்கும் இன்றைக்கும் மாறி விட்டதை உணர முடிந்தது. பதினேழு பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாளர்கள் எங்கே தவறு செய்து விட்டனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

புத்தாக்கச் சிந்தனையை மாற்றி அமைக்க வேண்டுமானால் அது கல்வியாளர்களால் மட்டுமே முடியும் என்றப் புரிதல் ஏற்பட்டது. தும்பை விட்டு வாலைப் பிடித்தக் கதையாய், நம்முடைய முந்நூறு நூற்றாண்டு கண்டுபிடிப்புக்கள் பல நம்முடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வாழும் வழிகளை மாற்றி அமைத்து இருந்தாலும், நம்முடைய அடிப்படை வாழ்வாதாரமான புவியைப் பற்றிய சிந்தனை இல்லாத கண்டுபிடிப்புக்கள் இன்று நம் அடி மடியிலேயே கை வைத்துவிட்டன.

அதே நேரம் நம்முடைய பொருளாதார நடவடிக்கை ஒவ்வொன்றும் கணினியைச் சார்ந்ததாகிவிட்டது கணினிசார் வாழ்க்கையில், இன்று இருக்கக்கூடிய பொருளாதாரம் இலாபம் சார்ந்த எந்த ஒரு தொழில் முனைப்புகள் நீடித்து இருக்கும் ஒரு புவி என்பதை தங்களுடைய தொழிலின் அடிப்படையாக கொண்டே செயலாற்றவேண்டும். இது ஒரு மேடைப் பேச்சாகவோ, மனித உணர்வுகளைத் தூண்டி தங்கள் செய்தி நிறுவனங்களின் விளம்பர வருவாயைப் பெருக்கக்கூடிய அன்றாடம் அடிக்கொரு தொலைக்காட்சியில் மிதந்து வரும் செய்திகளாக மட்டுமே இருந்து விடக்கூடாது.

Essential requirements for internet classroom 81th Series by Suganthi Nadar. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்

கணினிசார் உலகில், இயந்திரங்களே தொழிலாளர்களாக வேலை செய்யும், காலக்கட்டத்தில், அனைத்து விவரங்களும் ஆராயப்பட்டு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும்முறை, நாம் வாழும் புவியின்மேல் நாம் காட்ட வேண்டிய அத்தியாவசிய அக்கறை இவற்றை நாம் ஒரு உணர்வு பூர்வமாகப் பார்க்கும்போது ஒரு தார்மீகப் பொறுப்பாக மட்டும்தான் தெரியும். ஆனால் தற்போதைய தரவுகளின் உலகத்தில் தரவுகளை ஆராய்ந்து நாம் அறிவியல் பூர்வமாகவும் சிந்தித்துப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம். ஒரு நல்ல குடிமகனாக இப்பொறுப்புணர்ச்சி அனைத்துத் துறையில் இருப்பவர்களுக்கும் பொது என்றாலும், கல்வித் துறைக்கு இப்பொறுப்பின் பளு அதிகமாகத்தான் உள்ளது. உலக நிகழ்வுகள் மட்டுமன்றி இயற்கையையே சீர் படுத்தவேண்டிய ஒரு அச்சாணியாகக் கல்வித்துறை திகழ்கிறது. ஆசிரியர்கள் ஆனாலும் சரி மாணவர்களானாலும் சரி இந்தப் பொறுப்பை எந்த அளவிற்கு உணர்ந்திருக்கின்றோம் என்பதன் வெளிப்பாடாய் நம்முடைய அன்றாட வகுப்பறை பாடங்கள்.

நம்முடையப் பாடங்கள் தொழில் புரட்சி காலத்தில் ஒரு தனி மனிதன். உயர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காரணத்தால் ஒவ்வோரு துறை வாரியாக நமது பாடங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இன்றைய இணையத் தொழில்நுட்பத்தாலும் தரவுகளின் ஆராய்ச்சியினாலும் சமூக வலைதளங்களில் தனி ஒருவரின் ஆளுமையினாலும் நம் ஒவ்வோருவரின் செயல்பாடுகள் பாடப் புத்தகங்கள் வகுப்பறை மதிப்பெண்கள் என்ற எல்லையைத் தாண்டி வெட்டவெளியில் அனைவருக்கும் எந்நேரமும் கிடைக்கக் கூடிய தரவுகளாக உள்ளன. அதனால் நமது செயல்பாடுகளின் பக்க விளைவுகள் பின் விளைவுகள் பல்வேறு கோணமாக ஆராயப்படுகின்றன. அப்படி ஆராயப்பட வேண்டியத் தேவையும் உள்ளது.

அப்படி ஆராயப் படக்கூடிய பொருண்மைகளாக நமது பாடநூல்களையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்க்கவேண்டும். கல்வி 4.0 என்பது கணினிசார் வாழ்க்கைமுறைக்கான கல்வி என்பதோடு, கணினியோடு இயந்து வாழும் வாழ்க்கைமுறை என்பதை நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும். கணினிகள் மனிதனின் உதவியாளராக மட்டுமல்லாமல், மனித வளத்திற்கும் போட்டியாகவும், மனிதனின் சிந்தனையை அச்சிந்தனை சார்ந்த செயல்முறையை நடத்திச் செல்லும் ஒரு அதிமுக்கியக் காரணி என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடப் பொருண்மை ஆகிய ஆராய்ச்சிக் கூறுகளை கணினி என்ற அளவு கோலைக் கொண்டு நாம் மதிப்பிடவேண்டும்.

Essential requirements for internet classroom 81th Series by Suganthi Nadar. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்

எந்த ஒரு ஆராய்ச்சியிலும் உள்ள நான்கு முக்கிய கூறுகளை நாம் புரிந்து கொண்டால் கல்வி 4.0 கொள்கைகளை நம் ஒவ்வொருவரின் தனித்தனித் தேவைக்கு ஏற்ப புரிந்து நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். முதல் இரண்டு Objective and Subjective analytics. Objective analysis என்பது உணர்வுகளை சார்ந்தது. ஆராய்ச்சியாளரின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு ஆய்வு இது. அகவழி ஆய்வு எனவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். Objective analysis என்பது புறத்தில் ஆய்வாளர் சேகரிக்கும் புள்ளி விவரங்களை சார்ந்தது. உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்கும், காலக் கட்டத்திற்கும் தேவைக்கும் ஆராய்ச்சியின் பொருண்மைக்கும் தேவையான விவரங்களை அறிவியியல் பூர்வமாக நிரூபிக்க உதவும் புள்ளி விவரங்களைக் கொண்டது.

பொது முறை ஆய்வு என்று அறியப்படும் இவ்வாய்வு முறை, ஒரு யதார்த்ததைப் புரிய வைக்கக் கூடியது ஐக்கிய நாடுகளின் கல்வி 4.0 கொள்கை பல்வேறு புள்ளி விவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொதுமறை ஆய்வின் விளைவாக உருவானது என்றால் கல்வி என்பது, ஒருவரின் விருப்பு வெறுப்புக்களைச் சார்ந்தது. கல்வி என்ற பொருண்மை அகவழி ஆய்விற்கு ஏற்றதாகும். கல்வி 4.0 ஆய்வுப் பொருண்மையின் அடுத்த இரண்டு முக்கியக் கூறுகள், dependent variable and Independent variable. Variable என்றால் ஒரு ஆராய்ச்சியில் மாறிக் கொண்டே வரும் ஒரு கூறு (மாறி) Dependent variable என்றால் சார்பு நிலை மாறி என்றும். Independent variable என்றால் சார்பற்ற மாறி என்றும் அகராதி கூறுகின்றது. நாம் இதை ஒரு தன்னிச்சை மாறி என்றும் புரிதலுக்காக எடுத்துக் கொள்ளலாம்.

கல்வி 4, 0 பற்றிய நமது ஆய்வில் கணினி என்பதற்கு சார்பற்ற மாறி (independent variable) என்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடத்திட்டங்கள் பொருளாதாரத் தேவைகள் மனித வளம், புவியின் அழிவைத் தடுத்தல், இயற்கை வளங்களைக் காத்தல் என்பவற்றை சார்பு நிலை. மாறிகளாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். புழக்கத்தில் இதுக்கும் பலவகைப் பாடத்திட்டங்களை இன்றைய உலக நிகழ்வுகளோடு பொறுத்தி, நம்முடைய. இரு வகை மாறிகளையும், அக வழி ஆய்வாகவும் பொதுமுறை ஆய்வாகவும் நாம் அடுத்துப் பார்க்கலாம்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80(தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 80th Series by Suganthi Nadar. Book Day. Trains and omnipotence இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 - தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 – சுகந்தி நாடார்

தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

நாம் முன்பு பார்த்த தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டு வந்த Philippa Ruth Foot, Judith Jarvis Thomson இருவரும் தத்துவஞானிகள் மட்டுமே. மனித மனம் எவ்வாறு சிந்திக்கின்றது ? மனித சிந்தனையில், மனிதனின் ஒழுக்க நெறி (உசனம் ethics)பற்றிய ஆராய்ச்சியில் ஒரு பகுதியாகவே தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டுவரப்பட்டது. இப்பிரச்சனையை ஒரு பொறியாளரிடம் கொடுத்து இருந்தால், அவர் அந்த இரயிலை எப்படி நிறுத்த முடியும் என்று சிந்தித்து இருப்பார் தானே? ஒரு சட்ட அறிஞரிடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு விபத்து நடக்காமல் இருக்க சட்டப்படி வழி செய்வார்தானே? ஒரு மருத்துவரோ விபத்து நேர்ந்தால் என்னென்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று யோசிப்பார், இப்புதிரை ஒரு மொழியாளரிடம் கொடுத்தால் விபத்து பற்றிய காரண காரியங்களை ஆராய்ந்து அதை பிறரோடு பகிர்ந்திருப்பார். மற்றக் கலைஞர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப இப்பிரச்சனையை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஒரு பொருளாதார வல்லுனரிடம் கொடுத்தால் அவர் விபத்தின் பொருளாதாரச் சிக்கல்களை அலசி ஆராய்வார்.

இந்தப் புதிரை விடுவிக்க ஒவ்வோரு துறையினரும் ஒரு குழுவாக முயலும்போது, நல்விளைவுகளைப் பெருக்கவும், தீய விளைவுகளைக் குறைக்கவும் முடியும்தானே? நாம் இன்று அப்படித்தான் செய்து வருகின்றோம். ஆனால் குழுவில் செய்தாலும் புரிதல் குறைவு நேரம் கடத்தப்படுதல் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம், இந்த நேரக் கடத்துதல் பிரச்சனைதான் சர்வவல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை நமக்குக் கொடுக்கின்றது.

நாம் வாழும் பூமி கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் விரைவாக அழிந்து கொண்டு இருக்கின்றது. புவி அழிய முடியுமா என்ன? 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் dinosaurs (பெருத்த தொன்ம ஊருமினம்) வாழ்ந்து வந்ததாக தொல்லியியல் ஆராய்ச்சியில் கிடைத்த அவ்விலங்குகளின் எலும்புகள் சாட்சி கூறுகின்றன. ஆனால் தற்காலத்தில் அந்த விலங்கு இருப்பதற்கான அடையாளம் இல்லவே இல்லை.

அன்றையக் காலத்து உயிரின அழிவில் ஏறத்தாழ 75% அழிந்துவிட்ட காரணத்தால் இந்த பெருத்த தொன்ம ஊருமினம் மரபின்றி அழிந்து விட்டது(extinct) முழுமையாக அழிந்துவிட்டது என்றும் கூற முடியாது. பறவைகள் பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) வழித் தோன்றல் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பேரழிவிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 1980களில் கண்டுபிடிக்கப்பட ஒரு உண்மை காலநிலை மாற்றம்தான். காலநிலை மாற்றத்தால் greenhouse effect உருவாகி மூச்சுவிடக் காற்று இல்லாமல் உயிரனங்கள் அழிந்து போயிருக்க வாய்ப்புகள் அதிகம்.

Essential requirements for internet classroom 80th Series by Suganthi Nadar. Book Day. Trains and omnipotence இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 - தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

அப்படி அழிந்து போகக் காரணம் பூமியின் தட்பவெப்பநிலைதான். 2015ம் ஆண்டு Temperature of Earth என்ற தலைப்பில் எழுதப்பட்ட இணையக்கட்டுரையில் Jerry Coffey என்பவர் புவிக்கோளத்தின் சராசரி தட்பவெப்பநிலை 15 0c அல்லது 590 F என்கின்றார். பூமியின் தட்ப வெப்பநிலை அதிகரிக்கும் போது புவியில் உயிரினங்கள் வாழ இயலாமல் போய் விடும். பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) காலத்தில் மிகப்பெரிய பெரிய எரிமலைகள் வெடித்துக் கொண்டே இருந்ததால், அதிலிருந்து வெளிவரும் கரிமல வாயு புவியை சூழ்ந்துபுவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. 

10 கிமி விட்டம் கொண்ட ஒரு புவியின் அதிர்ச்சியில் உருவான பெரிய பெரிய எரிமலைகளும், நிற்காது தொடர்ந்த காட்டுத்தீக்களும் சூழ்நிலையில் உள்ள கரியமில வாயு அதிகரிக்கக் காரணமானது விண்கோள் புவியைத் தாக்கியதால் எழுந்த கந்தகப்புகையும் கரியமில வாயுவும் புவியிலிருந்து 75% உயிரினங்கள் இறக்கக் காரணமாகிவிட்டன. இப்புகைகள் சூரியனையே பல்லாண்டுகள் மறைத்து உலகின் உறைபனிக்காலம் உருவாகியது. இந்த இரண்டு காரணங்களாலும் உயிரினங்கள் வாழ இயலாமல் மடிந்தே போயின. அப்படிப்பட்ட ஒரு தட்பவெப்ப சூழ்நிலையை நோக்கித்தான் நாம் இப்போது சென்று கொண்டு இருக்கின்றோம்.பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) அழிந்த காலத்தில் புவியின் தட்பவெப்பம் 50 C/410 Fஉயர்ந்து இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. 1880 களிலிருந்து புவி ஒவ்வோரு பத்தாண்டுக்கும் 0.080C/0.140 F உயர்ந்து உள்ளது. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் 0.18° C/0.32° F தட்டப்வெட்பநிலையைப் பற்றிய தளமான https://www.climate.gov ல் ரெபெக்கா லின்ட்ஸி என்பவரும் லுயன் டால்மென் என்ற இருவர் கருத்துத் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அமெரிக்க நாசா இன்று தனது இணையதளத்தில் கூறுவதாவது, 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு ஏறக்குறைய 250p/million. 1950களில் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு 300p/million. ஆனால் தற்போது கரியமிலத் துகள்களின் அளவு 450 p/million, நாசா மேலும் அறிவுறுத்துவது பல்லாயிரம் ஆண்டுகளாக ஆகவே இருந்திருக்கிறது. 

நனது பாடத்திட்டங்களில் மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா என்ற அளவீடு எவ்வளவு முக்கியம் என்று நமக்குப் புரிகின்றது. தொழில் புரட்சிக் காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய கண்டுபிடிப்பு கணினி. தொழில்புரட்சிக்காலத்தில் புத்தாக்க கருத்துக்களையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் கண்டுபிடித்துப் பயன்படுத்திய நாம், அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் விட்டதன் விளைவே பூமி அழிவை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்ற அச்சுறுத்தலுக்குக் காரணம். 

அப்படி இருக்க நம்முடைய பாடத்திட்டம்,  மனிதாபிமான உணர்வுகளையும் விழிப்புணர்வையும் கற்றுக் கொடுக்க வேண்டுமானால் கருணை அன்பு விட்டுக் கொடுத்தல் என்று நீதிக் கதைகளை மட்டும் சொல்லாமல், நம் புவியைக் காக்க வழி சொல்லும் விதமான விவரங்களைக் புவியை பாதுகாத்து வளப்படுத்தும் அறிவையும், விழிப்புணர்வையும் அதை செயலாற்றும் வழி முறைகளையும் கொண்டதாகப் பாடத்திட்டம் அமைய வேண்டும். இத்தகைய அறிவையும் விழிப்புணர்வையும் பெற்ற ஒருவர், செயலாற்றும் முன் அவற்றின் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் அவர் ஒரு சர்வத்துறையிலும் வல்லமை பெற்றவராகத்தானே இருக்க வேண்டும் ?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 – சுகந்தி நாடார்

மாணவர்களின் வல்லமை

மாணவர்களுக்கு நாம் எந்தப் பாடம் நடத்தினாலும், பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஒவ்வோரு தனி மாணவரும் சர்வ வல்லமை உடையவராக மாறக் கூடிய ஒரு அனுபவத்தையோ, அல்லது அப்படிப்பட்ட ஒரு தேடலுக்கான வழியையும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் என்ன மாதிரியான ஒரு மாணவர் சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று யோசித்துப் பார்ப்போம். இங்கே நான் சர்வ வல்லமை என்றச் சொல்லை, சமயம் சார்ந்த இறைமையைக் குறிப்பிடவில்லை. (கோவிலுக்கு போக வேண்டுமா? தேவலாயத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டுமா? தொழுகை செய்வதற்கு பழக்க வேண்டுமா என்று மதங்கள் சார்ந்து யோசித்து விட வேண்டாம். இங்கு சர்வ வல்லமை என்பது வாழ்க்கைக் கல்வி என்று சொல்லுக்கு ஒரு மறுபெயர் தான் என்று வைத்துக் கொள்ளுவோமே).

நம் பாடத்திட்டத்தின் அங்கம் நம் மாணவர் ஒருவரை சர்வத்திலும் வல்லுனராக ஆக்கக் கூடிய தகுதி பெற்றுள்ளதா என்பதை எப்படி சோதித்துப் பார்ப்பது? சோதித்துப் பார்த்தால் தானே நம் பாடத்திட்டம் வேலைசெய்கின்றதா இல்லையா என்று தெரியும்? 

மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா? அவர் வயதுக்கும் சூழ்நிலைக்கும் தேவையான திறமையையும் செயல்திறனையும் வளர்க்கும் விதத்தில் உள்ளதா? 

மாணவரது செயல்திறனையும் திறமையையும் ஊக்குவித்து, வளர்க்கும் வகையில் பாடப் பொருண்மையை வகுப்பில் அளிக்கக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளதா? ஒரே சூழ்நிலையிலும் வயதிலும் உள்ள மாணவர்களில் ஒரு மாணவர் முதல் எட்டு இடங்களில் வரக்கூடியவரா? ஒரு மாணவர் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் வகைகளை தன்முனைப்பில் தேடிசென்று, தன்னை வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தவரா?  என்ற வகையில் ஒரு பாடத்திட்டத்தின் ஒரு அங்கத்தையாவது நாம் சோதித்துப் பார்த்தால்தான் நம் மாணவர் ஒரு சர்வ வல்லமை படைத்தவராகக் வர முடியும்.

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

சரி வாழ்க்கைக் கல்வியை, ஏன் சர்வ வல்லுனர் என்று குறிப்பிட்டுச் சொல்கின்றேன் என்று முதலில் பார்ப்போம். பொதுவாக வாழ்க்கைக் கல்வி என்று சொன்னால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எண்ணத்தையும் தங்கள் செயல்முறைகளையும் மாற்றிக் கொள்ளும் பண்பு செய்யும் தொழிலின் அறம் காத்தல் கூட்டணியில் வேலை செய்தல் தகவல் தொடர்பு வல்லமை  என்று பலர் சொல்லுவர். இன்னும் சிலர் தொழில்நுட்ப அறிவு, கோட்பாடுகளை சார்ந்த கருத்துக்களை புரிந்து கொள்ளுதல் எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை தருக்கவியல் கருத்துக்களை உருவாக்குவதில் வல்லமை சிக்கலான தெளிவில்லாத விஷயங்களைப் புரிந்து கொன்டு அதை கோர்வைப்படுத்தப்பட்ட கருத்தாகக் கூறுதல் புத்தாக்க சிந்தனை மாற்றங்களை எதிர்பார்த்தல் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து எதிர்காலத்தைக் கணித்தல் என்று பட்டியலிடுவார்கள்.

மேற்கூறிய பட்டியலில் ஒரு மாணவரை வல்லவராக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை அதனால் தான் வாழ்க்கைக் கல்வி என்ற பதத்திற்கு பதிலாக சர்வ வல்லமை என்ற சொல்லை இங்கு பயன்படுத்துகின்றேன். நாம் கல்வி 4,0 பற்றி பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இடையில் கட்டுரை நின்று போயிருந்த காலக் கட்டத்தில் உக்ரேன் மேல் ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது, துக்கமான செய்தியாக இருந்தாலும். ஒரு மாணவன் சர்வத்திலும் வல்லவராக இருக்க வேண்டிய அவசியத்தை உக்ரேன் மக்கள் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். இராணுவப் பயிற்சி இல்லாத அனைவரும் நாட்டைக் காக்கும் வீரர்களாய் மாற வேண்டிய கட்டாயம். வீட்டுக்கு அரசியாக இருந்த பெண்கள் முதல் பல்வேறு தொழில் புரியும் அனைத்துப் பெண்களும் ஒரு நாளில் அடிப்படையே இல்லாத ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியக் கட்டாயம். சர்வ வல்லமையுடைய மாணவர் என்று சொல்லும் போது, all-rounder என்ற சொல்லைப் பொருத்திப் பார்க்கலாம். all – rounder என்றால் சகலத்துறையர் என்று பொருள். இங்கே சர்வவல்லமயம் என்பது சகலத் துறை அறிவு அனுபவம் பெற்றதோடு மட்டுமல்லாமால், அனைத்துத் துறையிலும் வல்லமை பெற்று இருப்பது.

ஒரு மாணவர் வல்லமை பெற்று இருக்கின்றார் என்பதை எந்த ஒரு அளவுகோலாலும் மதிப்பிட இயலாது. ஏன் எனில் ஒவ்வோரு மாணவரும் ஒரு விதம், மனிதனுக்கு முகம் எப்படி வேறுபடுகின்றதோ அப்படித்தான் மூளையும் வேறுபடும். அதனால் நம் திறமையும் சிந்தனைத் திறனும் செயல்திறனும் கண்டிப்பாக வேறுபடும். நம்முடைய முகம் நமது மூதாதையர் போல் இருந்தால் நமது முகம் மூதாதையரின் முகமாகிவிடாது. அது போலத்தான் ஒருவர் வல்லமைப் பெறுவதும். முகம் ஒன்று போல இருந்தாலும் மூளை (தலைமிதழ், தேகசாரம், பூமலி, மிதடு ஆகியவை மூளை என்ற சொல்லிற்கு இருக்கும் சிலச் சொற்கள் சின்னக் கொசுறுத் தகவல் – கூகுள் ஆண்டவருக்காக) என்பதன் திறன் கண்டிப்பாக வேறுபட்டுத்தான் இருக்கும். ஒரே முகம் கொண்ட இரட்டையரிடமும் சில வித்தியாச குணநலன்களைத் திறமைகளை நாம் காணலாம். எனவே சர்வ வல்லமை என்பதற்கு எந்த விதத்திலும் ஒரு அளவு கோலை வைக்க முடியாது. சர்வ வல்லமைத் திறனைத்தான் ஒரு மாணவனிடமிருந்து கல்வி 4.0 எதிர் பார்க்கின்றது.

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

All-rounder என்ற சொல்லுக்கு துடுப்பாட்டத்தை (cricket) ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்விளையாட்டில் ஒரு வீரர்,பந்தை அடிப்பது, பந்தை வீசுவது. மைதானத்தில் பந்தைக் கையாளுவது ஆகிய அனைத்துத் திறமைகளையும் காட்டினால் அவரை All-rounder அல்லது பன்முக வித்தகர் என்கின்றோம். அதே விளையாட்டுக்காரர், துடுப்பாட்டத்தை மட்டும் விளையாடாது அனைத்து விளையாட்டிலும் எந்த ஒரு பொறுப்பையும் எடுத்துச் செய்யக் கூடியவராக இருந்து, விளையாட்டைச் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தும் விதம், அவற்றை தயாரிக்கும் விதம், விளையாட்டின் வரலாறு என்று விளையாட்டுத் தொடர்புடைய அத்தனைத் தகவல்களையும் தெரிந்தவராகவும் இருந்தால் அவரை நாம் சர்வ வல்லமை படைத்தவர் என்று கூற முடியுமா? இல்லை. தான் விளையாடும் விளையாட்டைச் சார்ந்த அனைத்து செயல்களின் நல்விளைவையும், தீய விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்து நல்விளைவுகளைப் பெருக்கும் வகையையும் , தீய வளைவுகளைக் குறைக்கும் வகையையும் தெரிந்து அவற்றைச் செயலாற்ற கூடிய ஒருவரை நாம் சர்வ வல்லுநராக நாம் அடையாளம் காட்ட முடியும். இத்தகைய சர்வ வல்லுனர்களைக் கொண்ட சமுதாயம் நாளைய உலகிற்கு இப்போது தேவை. அப்படிப்பட்ட ஒருவர் உலகத்திலேயே இல்லை, இதில் எங்கிருந்து ஒரு சமுதாயத்தை உருவாக்க? இயலாத காரியம்.

இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்வி இருக்க அப்படி ஒருவரை மாற்றக் கூடிய இடம் கல்வி நிலையங்கள் தான். கல்வி நிலையங்களைச் சார்ந்தே, குடும்பம் பணிகள் பொருளாதாரம் உடல் நலம் அனைத்தும் இருக்கின்றன. கல்வி என்ற கட்டமைப்பை மேம் படுத்தி வலு பெறச்செய்வதே கல்வி 4.0. சர்வ வல்லுநராக ஒரு மாணவனை ஏன் தயார் படுத்த வேண்டும்? 

ஏன் எனில் அம்மாணவன் தனது செயல் முறைகளை நன்னெறிப் படுத்த முடியும். இன்றைய உலகிற்கும் நாளைய உலகிற்கும் இது அத்தியாவசிய, அவசரத் தேவை. அப்படி என்றால் கல்வி என்று நாம் அடையாளம் காட்டும் ஒன்றை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஏன்?

நன்னெறி என்றால் நீதிக்கதைகளா?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

Edhu Kalvi Shortstory by Shanthi Saravanan சாந்தி சரவணனின் எது கல்வி சிறுகதை

எது கல்வி சிறுகதை – சாந்தி சரவணன்




வழக்கம் போல் பெரம்பூர் பஸ் ஸ்டாண்டை அடைந்தாகிவிட்டது. மணி சரியாக 7.45 AM. 29m  அடையார் செல்லும் பேருந்து ஒரு மணி நேரத்தில் பெரம்பூரிலிருந்து அடையார் சென்று சேர்த்து விடுவார் முத்து டிரைவர்.  

29c  அதிகமாக இருந்தாலும் வெண்பாவும்  அவளது  தோழிகளும்  29m தான் தேர்ந்து எடுப்பார்கள். கடைசி வரிசையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது ஒரு அலாதி சுகம் தானே. அதுவும் இந்த பேருந்து குறைந்த தடங்களில் தான் நிற்கும். அதாவது ஓட்டேரி, மோட்சம்KMC,  ஸ்டேர்லிங் ரோடு ஜெமினி, ஸ்டெல்லா மேரீஸ், லஸ், மயிலாப்பூர், மந்தவெளி, சத்யா ஸ்டுடியோ, அடையார்.  

ஒவ்வொரு தடம் வரும் போதும் அமர்ந்து இருப்பவரகளின் மடி கனம் குறையும். நிற்பவர்களின் மொத்த பைகளும் அமர்ந்து இருப்பவர்கள் மடியில் தான் பயணம் செய்யும்.

ஆனால் இன்று மாட்டு பொங்கல். சென்னையே காலியாக இருக்கும். ஆங்கிலேயர் மக்கள் கணக்கெடுப்பின்படி திருச்செந்தூரில் தான் மக்கள் தொகை அதிகம்  என்றார்களாம். ஏன் என்றால்? அவர்கள் கணக்கு எடுத்த நாள் தைப்பூசமாம்

அதுபோல சென்னை மக்கள்தொகையை இந்நாளில் எடுத்தால் மக்கள் தொகை குறைந்து வாழும் நகரமாக அறிவிப்பார்கள். ஏன் என்றால்? சென்னையை அதிக மக்கள் வாழும் நகரமாக மாற்றி, காற்று கூட புகாத படி அடைந்து இருந்த சக தோழமைகள் எல்லோரும் சென்னையை சுதந்திரமாக சுவாசிக்க அனுமதித்து சொந்த ஊர் சென்று உள்ளனர். பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னையில் எந்த வாகனத்தில் சென்றாலும் ஆனந்தமாக இருக்கும்.

மாட்டு பொங்கலை ஒட்டி  அலுவலகத்தில் நடக்கும் விழாவிற்காக வெண்பா சென்று கொண்டு  இருக்கிறாள். S Construction அடையார் கஸ்தூரிபாய்நகர்மெயின்ரோட்டில் தான் அலுவலகம். ஒரு வரவேற்புரை இரண்டுஅறைகள் ஒன்று அலுவலக பணியாளர் அறை மற்றொன்று முதலாளி அறை. வீடு போன்ற உணர்வு. இந்த உணர்வால் தான் அங்கு பணி செய்பவர்கள் குறைந்தது ஐந்து வருடமாவது அங்கு பணிபுரிவார்கள்.

வெண்பா பஸ்ஸில் ஒரே அரட்டை. கமலி, ஷ்யாமளா, சுகன்யா தோழர்களோடு உரையாடி வந்ததில் அலுவலகம் மிக விரைவாக அடைந்தாகிவிட்டது. வரவேற்பு அறையில் வேணி, ரம்யா மேடம் சீனியர் சுசி முவரும் பட்டு புடவையில்.  

ரம்யா மேடம்,  “வெண்பா  வா, வா.  ஒரே கலக்கலா இருக்கே, இந்த ஜிமிக்கி எங்க வாங்கின?

“GRT மேடம் . உங்க உடை கூட மிகவும் அழகாக இருக்கு மேடம்”.

அப்போ நான் அழகாக இல்லையா என்ற ரம்யாவிடம், “நீங்க எப்பவும் அழகு தான் மேடம்”, என்றாள் வெண்பா.

கனைத்தபடி கணக்காளர் ரமேஷ்ஆரம்பிச்சிடிங்களா. இந்த பெண்களுக்கு எப்போதும் இதே  பேச்சு”  எறும்பு வரிசையாக வருவது போல பாலு, சதிஷ் ஆடிட்டர் ரவி வரிசையாக வெளியே வர  அனைவரும்ரே அரட்டை.

சிறிது நேரத்தில் HONDA CITY CAR வந்தது. “சார் எல்லாம் நேரே பூஜை போடும் தளத்திற்கு  போயிட்டாங்க பெண்களை எல்லாம் கூப்பிட்டு வர சொன்னாங்க“, என்று சொல்லிக் கொண்டே டிரைவர் உள்ளே வந்தார். ஆண்கள் அவர்களின் வாகனத்தில் வந்துடுங்க என்றார் டிரைவர்.

“ரவி சார் எங்களுக்கு கொஞ்சம் பிரியாணி வையிங்க எல்லாத்தையும் காலி பண்ணிடாதிங்க” என்ற ரம்யாவிடம். பார்கலாம் பார்கலாம் எனகூறிய வண்ணம் அவர்களின் வாகனத்தில் கிளம்ப ஆயத்தமானார்கள்.

ஸென் மேரிஸ் ரோடு அபிராமாபுரத்தில்  GROUND + 4 FLOORS அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. அங்கு தான் விழா. கலர் காகிதங்கள் வருக வருக என அனைவரையும் வரவேற்றன.

கட்டிட வேலை செய்யும் ஆட்கள் கூட்டமாக ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக சலசலப்பு பேச்சோடும் ஒரு சிலர்  இவர்களை பார்த்த வண்ணம். பிரியாணி வாசனை கட்டிடம் முழுவதுமாக விசிக் கொண்டு இருந்தது.

ஒரு வரிசையில் துணிகள் டேபிள் பக்கத்தில் அடையார் ஆனந்த பவன் ஸ்விட், காரம் கொண்ட கவர்கள் ஒரு புறம். புத்தம் புது 100ருபாய் கட்டுகள்முதலாளி  கோபால் வெள்ளை உடுப்பில் அமர்ந்து இருந்தார்இந்த சூழல் வெண்பாவை தன் குடும்ப நினைவுகளை நினைவுட்டியது.

தாத்தா  வீட்டில்தை பொங்கலை தொடர்ந்து வரும் மாட்டு பொங்கல், கானும் பொங்கல் என தொடர் விழா எத்தனை குதூகலமான நாட்கள். கடலில் வாழும்  மீன்கள் ஒவ்வொரு துளியையும் அனுபவித்து நீச்சல் அடிப்பது போல விட்டில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தாண்டவத்தில்.

ஆம்புர் சாய்பான் சாய்பு தெரு, பெயரே சொல்லும் முஸ்லிம் தோழர்கள்தான் நினைவுக்கு வரும். பெரும்பாலும் முஸ்லிம் தோழர்கள் வாழும் தெரு அது. அந்த தெருவில் நாயுடு வீடு என்றால் தெரியாதவர்கள் யாருமில்லை. தொடர்ந்து மூன்று வீடுகள் மட்டுமே தனித்து இருக்கும். ஓரே வண்ணம். ஓட்டு வீடு.

ஒவ்வொரு வீடும் இரண்டு பெருந்திண்ணைகள் கொண்டு இருக்கும். செம்மண் பூசின படிகள். மோட்டார் பைக் விட்டில் இருந்து வெளியே வர படிக்கட்டுகள் மத்தியில் அப்போதே சரக்கு மரம் போல் வழவழப்பான  தரை‌. தினமும் விதவிதமான கோலங்கள். லக்ஷ்மி கடாட்சம் வாசலை பார்த்தாலே தெரியும்.

தாத்தாவின் அப்பா கோபால் சாமி நாயுடு அம்மா பத்மாவதி அம்மாள். தாத்தா உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். பெரிய கூட்டு குடும்பம். முன்று பேர்களுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும் போது தான் தனிக்குடித்தனம் சென்றார்கள். அதுவரை கூட்டு குடும்பம் தான். அதன் பின்னும் பிள்ளை மருமகள் பேரன் பேத்தி என்று கூட்டு குடும்பமாக தான் வாழ்ந்து வந்தார்கள். பெரிய சமையல் அறை. பாத்திரங்கள் எல்லாம் பெரிய பெரிய டேக்ஸா. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை அவர்கள் பிள்ளைகள் என சிறும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் கூடினாலே விழா என்ற உணர்வு அளித்து விடும். இந்த மொத்த குடும்பமும் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் திருவிழா தான். முல்லை தோட்டம், தென்னந்தோப்பு வெண்பாவின்  பெரிய மாமா தான் பார்த்து கொள்வார். விடியற்காலை ஐந்து மணிக்கலகெல்லாம் மாமா குளித்து பளிச்சுனெ   இன்றைய பெங்களுர் அய்வேஸ் வரப்பு மேலா அமர்ந்து விடும் மாமா. அப்போது  தோல் தொழிற்சாலை அதிகமாக இல்லாத நேரம். நிலத்தில் தின கூலி வேலைக்கு வருபவர்கள்  தான் அதிகம். அதிலும் பெரிய மாமா என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.

பொங்கல் போது, வீதியில் 10 வீடுகள் சேர்த்து பந்தல் போட்டு லைட், சீரியல் பல்பு  என ஒரு வாரம் முன்னதாகவே போட்டு விடுவார்கள். பாத்திரங்கள் சாமான் அறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே எடுக்கப்படும். பிரியாணி டேக்ஸா, பெரிய  தாம்மாள தட்டு பளபளப்பாக தேய்த்து தயாரான நிலையில். கட்டை வைத்து கற்புரம் கொளுத்தி டேக்ஸா வைத்து மட்டன் பிரியாணி, மூட்டை, தயிர் பச்சடி, கத்திரிக்காய் தொக்கு 12 மணிக்கு தயாராகி விடும்

நிலத்தில் இருந்து அனைவரும் காலை பத்து மணிக்கே முதல் வரிசையில்  வரிசையாக வர ஆரம்பித்து விடுவார்கள். தாத்தா பெரிய மாமா தான் அன்றைய கதாநாயகர்கள். வரிசையாக இரண்டு பக்கமும் போட்ட  நாற்காலிகள் நிறைந்து விடும். குடும்பத்தோடு நிலத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம்  வரிசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க. மாமாதான் அன்று மேற்பார்வையாளர். அதனாலேயே வெட்கத்தோடு பெண்கள் சாப்பிடுவார்கள். “முதலாளி வராருடீ.”

மாமா,என்ன கனகா இன்னும் கொஞ்சம் கறி  வெச்சிக்கோ என சொல்ல. அவர்கள் வெட்கத்துடன் நானி கோனி முகம் சிவக்க வெட்கத்தோடு சாப்பிடும் அழகே தனி”. வெண்பா பெரிய மாமாவோடு அனைவருக்கும் உணவு பரிமாறுவாள். அவள் தான் பெரிய பேத்தி.

சென்னையில் கல்லூரியில் படித்து முடித்து இருக்கும் வெண்பாவிற்கு நிலம் என்றால் எத்தனை பெரிய சொத்து என தெரியாது. அவள் இலக்கு எல்லாம் கல்லூரி படித்து அலுவலகத்தில் வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும் என்பது தான்.

அனைத்து தொழிலாளிகள் சாப்பிடும் அதே நேரம் வீட்டினுள்ளே தாத்தாவின் தம்பி, தம்பி பெண்டாட்டி, அவர்கள் பிள்ளைகள்மாப்பிள்ளை மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என வீட்டில் பந்தி பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். சிரிப்பு சத்தம் காற்றை கிழித்து கொண்டு வெளியே வரும்.

சாப்பாடு முடிந்தவுடன் உடைகள் வழங்கும் வழக்கம். மாப்பிள்ளை பெண்ணுக்குதான்  முதல் மரியாதை. வரிசையாக மொத்த குடும்ப உறுப்பினர்களின் ஆடை வழங்கும் விழா முடியும்.

பின் நிலத்து தொழிலாளி, பட்டறையில் வேலை செய்யும் பணியாளர்கள் என வரிசையாக  150 பேர் ஆடைகள், தனியாக பணகவர் பெற்றுகொண்டு செல்வார்கள். மாலைவரை இந்த நிகழ்வு தொடரும். வருடந்தோறும்  இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

அந்த வருடம் தாத்தா அனைத்து வேலை முடிந்தவுடன் வெண்பாவிற்கு வரன் பார்த்து இருக்கிறேன் என ஆரம்பித்தார்.

தெரிந்த பையன் +2 படித்து IIT Diploma செய்து இருக்கிறார். நல்ல பையன் உன்னை கண் கலங்காமல் பார்த்து கொள்வார்கள் என ஆரம்பித்தார்.

திருமணம் என்ற பேச்சை கேட்டவுடன், வெண்பா, தாத்தா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்; என சினுங்க ஆரம்பித்தாள்.

“என் செல்லம் என தாத்தா வெண்பாவை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து கொண்டார்.” முதல் பேத்தி செல்ல பேத்தி வெண்பா. பெண், மருமகளிடம் இருக்கும் கரார் மனிதராக  நாயுடுவை பேத்தியிடம் பார்க்க முடியாது.

“ஏன்டா செல்லம் இப்போ கல்யாணம் பண்ணாமல் எப்போ செய்வது. நம்ம நிலம் இருக்கு, தொழில் இருக்கு இதை பார்த்து கொள்”.

“இல்லை தாத்தா, நான் காலேஜ் முடித்துவிட்டேன். கணினி பட்டயம் படித்து முடித்தவுடன்  கேம்பஸ் முலமாகவே வேலை கிடைத்து விடும். அலுவலகத்தில் வேலைக்கு போகனும்”. நான் சம்பாதிக்கணும் என்றாள். அதுமட்டுமல்ல குடும்பத்தில் கல்லூரி வாசப்படியில் முதல் காலை எடுத்து வைத்தவள் வெண்பா மட்டுமே. முதல் பட்டதாரி அவளின் லட்சியம் நன்கு படிக்க வேண்டும். படிக்க வேண்டும். 

“நீ ஏன்டா வேலைக்கு போகனும். நாமே பலருக்கு வேலை தரலாம்” என்றார் நாயுடு.

“இல்லை, தாத்தா நான்  வேலைக்குதான் போவேன். என் காலில் நான் நிக்க வேண்டும் என ஆடம் பிடித்தாள்”, வெண்பா.

குடும்பத்தில் அனைவருக்கும் ஒரு வித பயம் நாயுடுவிடம். ஆனால் தாத்தா பேத்தியிடம்  எப்போதும் சரண்டர்தான்.

தாத்தா, வெண்பாவின் குழந்தைதனம் மாறாத முகத்தை பார்த்துக்கொண்டே, சரிமா. உன்  இஷ்டம் என கூறிவிட்டார். குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அதன்பின் வெண்பா விருப்படியே இந்த வேலை கிடைத்தது. ஆனால் தாத்தா, திடிர் என ஒரு நாள் இயற்கை எய்தினார். அதன் பின் மாட்டு பொங்கல்விழா கனவானது.

மனகண்ணில் அன்று படிக்காத தாத்தா கொடுக்கும் இடத்தில் கம்பீரமாக முதலாளியாக அமர்ந்து இருந்தார், படித்த தன்னிடம் இல்லாதது படிக்காத தாத்தாவிடம்  என்ன இருந்தது? அந்த அனுபவ படிப்பை ஏன் இந்த ஏட்டு படிப்பு தரவில்லை அதனுடைய இடைவெளி எது? இதை ஏன் இத்தனை நாள் நாம் சிந்திக்கவில்லை என நினைத்த வண்ணம் அமர்ந்து இருந்தாள் வெண்பா. 

முதலாளி, “வெண்பா வாங்க மா” என அழைக்க நினைவுகள் கலைந்து, நிஜத்தில் விழித்து குடும்பத்தில் முதல் பட்டதாரி தொழிலாளி வெண்பா பொங்கல் கிஃப்ட் வாங்க எழுந்து சென்றாள்

வெளியே ஒலிபெருக்கியில் புதிய கல்விதிட்டம் பற்றி விவாதம் நடந்து கொண்டு இருந்தது.

சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக்கூறுகளும் | Sundar Ganesan | சுந்தர் கணேசன்

சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக்கூறுகளும் | Sundar Ganesan | சுந்தர் கணேசன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about tamil Books, Visit…