கவிஞர் சே.கார்கவியின் கவிதைகள்

கவிஞர் சே.கார்கவியின் கவிதைகள்




நீருக்கு முளைத்த பாதங்கள்
*********************************
ஒரு சூழல் ஒருவனை முட்டாளாக மாற்றும்
அறிவாளியாக நடிக்கச் செய்யும்..
மரம் வெட்டத் துணிபவனுக்கு
அமர்ந்து வெட்ட இடம் தேடுவது முக்கியமாகிறது
கணுவோடும் தூரோடும் விளையாடும் அளவிற்கு
வயது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது…!

ஒரு கல் எறிந்த ஆற்றில்
நீர் செல்லும் வழி எல்லாம் கல்லின் நகர்வு இருக்கத்தான் செய்கிறது
நீர் மேல் பரவளையங்களின் தடயம் முடியும் வரை…!

நிலாவை சுமந்தபடி நகரும் நீருக்கு
அவ்வப்போது இடை கிள்ளி சலசலப்பைத் தருகிறது காற்று…!

காற்றுக்காகப் பல கயிறு திரிக்கப்பட்டுப்
புல்லாங்குழல் துளைக்குள் நுழைத்து

சிறை வைக்கின்றன இராகங்கள்…!

யாருக்குத் தெரியும்
அந்த நதியும்
சிறு கல்லும்
சில் காற்றும்
மரம் உடைந்து கீழ் விழுந்த முட்டாளும்
வழி தவறி புவி விழுந்த வான் வழிப்போக்கர்கள் என்று…..!

கொஞ்ச நேரம் இரு
***********************
கொஞ்ச நேரம் இரு
மெல்ல வருட மழை வரும்
கொஞ்ச நேரம் இரு
இன்றும் நாளையும் நல்லது நடக்கும்
கொஞ்ச நேரம் இரு
உண்மையில் வந்துவிடுகிறேன்
கொஞ்ச நேரம் இரு
தூரிகையேந்தி தும்பி வரும்…..

கொஞ்ச நேரம் இரு
அறுவடைக்கு மழை நின்றுவிடும்
கொஞ்ச நேரம் இரு
வறுமையில் பசி தானாக மறந்துவிடும்
கொஞ்ச நேரம் இரு
பசியை மறைக்க நட்சத்திரம் தோன்றும்
கொஞ்ச நேரம் இரு
அம்மா அப்பா வானில் வருவார்

கொஞ்ச நேரம் இரு
கூரை கிழித்து சூரியன் வருவான்
கொஞ்ச நேரம் இரு
குளிர்ச்சி பொங்க நிலா வருவாள்
கொஞ்ச நேரம் இரு
கிரகரணம் மறைந்து போகட்டும்
கொஞ்ச நேரம் இரு
புவிஈர்ப்பு பரவலாகட்டும்

கொஞ்ச நேரம் இரு
ஆதாமும் ஏவாளும் உறங்கச் செல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
மலைப்பாம்பு பயமுறுத்தாமல் செல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஆப்பிள் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஏதேன் திட்டம் உறங்கிப் போகட்டும்……!

கொஞ்ச நேரம் இரு
நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பக்தனுக்கும் புரியட்டும்

கொஞ்ச நேரம் இரு
பசிக்காக அழும் குழந்தைக்கும் இயற்கை
சமாதானம் சொல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
மழலையின் அருகே நாய்க்குட்டி துள்ளட்டும்
கொஞ்ச நேரம் இரு
மழலையிலே மனிதம் பிறக்கட்டும்

கொஞ்ச நேரம் இரு
பார்வையில் பட்ட
அனைத்தும்
கவிதையாய் உருவெடுக்கட்டும்……

கவிஞர் சே கார்கவி

Veguli Sirukathai By Niranjan வெகுளி சிறுகதை - நிரஞ்சனன்

வெகுளி சிறுகதை – நிரஞ்சனன்

ஒரு தேநீர்க் கடைக்குள் நுழைகிறான் ஒரு பதினான்கு வயது மதிப்பு மிக்க சிறுவன், பார்க்க கொஞ்சம் சோம்பேறி போலவும் முட்டாள் போலவும் அவன் தோற்றம், பள்ளி போக மற்ற நேரங்களில் தேநீர் கடை மட்டுமே உலகம் என சிறு வேலைகள் அந்த கடைக்கு செய்து கொண்டு காலம் ஓட்டுகிறான். அவன் வீடு அருகில் தான்.

அவன் நுழைந்ததும், அந்த தேநீர் கடைக்காரர் அவனிடம் ஒரு குடம் கொடுத்து நீர் எடுத்து வர அனுப்புகிறார். அவனும் வெளியே நீர் எடுக்க சென்று விடுகிறான்.

கடைக்காரர், தேநீர் பருக வந்தவரிடம் கூறுகிறார், இவனைப் போல் சோம்பேறி, முட்டாள், உதவாக்கரை நான் பார்த்ததே இல்லை என அவனை மட்டம் தட்டுகிறார். இப்போ அவன் வந்ததும் உதாரணம் காட்டுகிறேன் பாருங்க, என்றார்.

தேநீர் பருக வந்தவர், இவன் சொந்தம், என தெரியாமல்.

நீர் கொண்டு வந்தவனிடம், “ப்ரு சின்ன பாக்கெட் ஒரு சரம் வாங்கி வா.….தம்பி, இந்தா 100 ரூபாய் போய் வாங்கி வா” என அனுப்பினார். அவனும் பக்கத்து மளிகை கடையில் வாங்கி வந்தான். இந்த உனக்கு 5 ரூபா என்றார் அவர், அவன் எனக்கு வேண்டாம் 3 ரூபாய் போதும் என்று வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டான்.

தேநீர் அருந்த வந்தவர்க்கு வந்ததே கோவம், தேநீர் குடித்து முடித்து நேர அவன் வீட்டுக்கு போனார், அவன் தாயிடம் பொரிந்து விட்டார்.

இவன் அழகாக அங்கே ஐஸ் கிரீம் ருசித்துக் கொண்டே வீடு வந்தான், அவன் தாய் அழுவதை கண்டு என்ன என விசாரிக்க…..

‘ஏண்டா இப்படி இருக்க?’ என ஒரே ஒப்பாரி…..

தலையும் காலும் புரியாமல், “அய்யோ மாமா இப்போ தான டீ கடையில் பார்த்தேன், என்ன மாமா என்ன சொன்னீங்க?”

“அந்த டீ கடைக்காரன் உன்னை ஏமத்துறான், நீயும் அவன் சொல்லுற வேலை எல்லாம் செய்யுற அவன் extra கொடுக்குற காசு வேண்டாம் சொல்லுற…..நான் இருக்குறது கவனிக்காம போற….என்னடா?”

“இப்போ உங்களை பார்த்து மரியாதை செய்யாதது பிரச்சனையா? இல்ல அவன் கிட்ட கூடுதலா 2 ரூபா வாங்காதது பிரச்சனையா?”

“ஏண்டா? அங்க போற…. படிக்கறது போக வீட்டில் இருக்க வேண்டியது தான….எக்ஸ்ட்ரா கொடுத்தா வாங்கிக்க வேண்டியது தான.?”

“சரி, தான். இப்போ நான் முட்டாளா இல்லை அவன் முட்டாளா நீங்களே சொல்லுங்க……மாமா, ஒரு சரம்ல 20 பாக்கெட் இருக்கும் , ரெண்டு பாக்கெட் ஃப்ரீ, ஒரு சரம் 100 ரூபா அந்த கடையில், அவனுக்கு ஒரு பாக்கெட் 5 ரூபா தான் தெரியும், நான் 2 பாக்கெட் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன், அவன் சோம்பேறி தனத்தில் எனக்கு 2 பாக்கெட் லாபம். அப்புறம் அந்த 3 ரூபா, அவன் கொடுத்ததை வாங்கினால் அவனுக்கு எதோ நான் அடிமை மாதிரி இருக்கும், இப்போ நான் நினைச்சா போவேன்னு அவன் நினைப்பான், எப்பையும் வேலை வாங்க மாட்டான்.

கம்மியா வாங்கினதால் என்ன சந்தேக பட மாட்டான், என் மேல் நம்பிக்கை இருக்கும், என் உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டா கொடுக்க மாட்டான், சிறுவன் என ஏளனம் செய்வான், இப்போ எனக்கு தினமும் லாபம் கிடைக்கும், தினமும் அவன் கடைக்கு வரும் நாளிதழ் எங்க இருக்கு பாருங்க, நான் தினமும் இரவு சென்று வாங்கி வந்து அடைக்கி சேகரித்து வருகிறேன், இது மாதிரி நெறய இருக்கு. இப்போ சொல்லுங்க உங்க மருமகன் முட்டாளா? சோம்பேறியா? பிழைக்க தெரியாதவனா?”

அசந்து போய்ப் பார்த்தார் அந்த பையனின் மாமா.

‘விவசாயி ஒன்றும் முட்டாள் அல்ல’ – அகாலிதளத் தலைவர் நரேஷ் குஜ்ராலுடன் ஜியா உஸ் சலாம் நேர்காணல் (தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி)

‘விவசாயி ஒன்றும் முட்டாள் அல்ல’ – அகாலிதளத் தலைவர் நரேஷ் குஜ்ராலுடன் ஜியா உஸ் சலாம் நேர்காணல் (தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி)

உழவர் உற்பத்திப் பொருள் பரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான ஒப்பந்தம், ஆகியவற்றோடு அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா மூலம் தானியங்கள்,…