மதுரை போற்றுதும் (Madurai Potruthum) – நூல் அறிமுகம்

மதுரை போற்றுதும் (Madurai Potruthum) – நூல் அறிமுகம்

மதுரை போற்றுதும் (Madurai Potruthum) - நூல் அறிமுகம் மதுரையுடனான தனது நினைவுகளை, வாழ்வை சுப்பாராவ் 23 கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார். வளமான, பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்திருக்கும் சுப்பாராவ், தனது பிறந்த மண் மீதான பாசத்தை, பிணைப்பை எடுத்துக்காட்டி இருக்கும் விதம்…
எம். எஸ். சுப்புலட்சுமி (உண்மையான வாழ்க்கை வரலாறு) ஆங்கிலத்தில் டி.ஜே.எஸ் ஜார்ஜ் எழுதிய இந்நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ச. சுப்பாராவ்

எம். எஸ். சுப்புலட்சுமி (உண்மையான வாழ்க்கை வரலாறு) – நூல் அறிமுகம்

எம். எஸ். சுப்புலட்சுமி (உண்மையான வாழ்க்கை வரலாறு) ஆங்கிலத்தில் டி.ஜே.எஸ் ஜார்ஜ் எழுதிய இந்நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ச. சுப்பாராவ் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. எம். எஸ். சுப்புலட்சுமியை அறியாதவர்களுக்கும் அறிந்திருந்தும் போதிய விளக்கம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் இந்நூல் அரிய நூல்…
கிளியும் அதன் தாத்தாவும் | ச. சுப்பாராவ் | Kiliyum Adhan Thathavum | Subbarao

ச. சுப்பாராவ்-வின் “கிளியும் அதன் தாத்தாவும்” – நூலறிமுகம்

நம் இந்தியாவில் உள்ள மாநிலமான உத்திபிரதேசக் கிராமங்களிலில் பேசப்படும் மொழியே மைதிலி. இக்கதைகள் சில மௌரியர் காலத்தவை, சில பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும் சிற் சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீஹாரின் ஐந்து…
En Ezhuthikiren article ஏன் எழுதுகிறேன்

ஏன் எழுதுகிறேன்? : ச.சுப்பாராவ்

ஏன் எழுதுகிறேன்? என்று எழுத ஆரம்பித்து சுமார் நாற்பதாண்டுகள் கழித்து யோசிப்பது நன்றாகத்தான் இருக்கிறது. கல்லூரி நாட்களில் தீவிர வாசிப்பின் அடுத்த கட்டம் – ஒரு விதத்தில் ஒரு பிரமோஷன் என்று கூட வைத்துக் கொள்ளலாமே – எழுதுவது என்று நினைத்த…
நூல் அறிமுகம்: டி. ஜே. எஸ். ஜார்ஜியின் எம். எஸ். சுப்புலட்சுமி -உண்மையான வாழ்க்கை வரலாறு (தமிழில் : ச. சுப்பாராவ்) – இந்து கணேஷ்

நூல் அறிமுகம்: டி. ஜே. எஸ். ஜார்ஜியின் எம். எஸ். சுப்புலட்சுமி -உண்மையான வாழ்க்கை வரலாறு (தமிழில் : ச. சுப்பாராவ்) – இந்து கணேஷ்




நூல் : எம். எஸ். சுப்புலட்சுமி
-உண்மையான வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : டி. ஜே. எஸ். ஜார்ஜ்
தமிழில் : ச. சுப்பாராவ்

விலை : ரூ.₹ 220/-
பக்கங்கள் : 255
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

எம். எஸ். அம்மாவை பற்றி நினைத்தாலே அவரின் தெய்வீக குரல் தான் நம் நினைவிற்கு வரும். பக்தி என்கிற உணர்வை குரல் வழி கடத்திவிட முடியும் என்று நான் நம்பியது அவர் குறை கேட்டு தான். எனது பள்ளி பருவத்தில் யதார்த்தமாய் நான் கேட்க நேர்ந்த இவரின் அண்ணாமாச்சார்யா கீர்த்தனைகள் மற்றும் குறையொன்றுமில்லை பாடல் எனக்குள் சொல்லமுடியாத அமைதியை ஏற்படுத்தியது. மீண்டும் மீண்டும் அதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தது, அப்போது எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பையும், உள்ளம் உருகும் உணர்வையும் அதற்கு பின்பு ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அதே போல உணர முடிவதே அவரின் குரலின் சிறப்பு எனலாம். அவரின் உண்மையான சரிதம் என்ற உடன் மிகவும் ஆர்வமாகவே இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்.

பொதுவாக நமக்கு பிடித்த பிரபலங்களின் சரிதையை நாம் எதற்காக தேடிதேடி வாசிக்கிறோம், அவர்கள் வாழ்வில் தோல்விகளை கடந்து எப்படி வெற்றி அடைந்தார்கள் என்று அறிவதன் மூலம் நமக்குள்ளும் ஒரு உத்வேகம் ஏற்படும் என்பதே பிரதானமான காரணமாக இருக்க முடியும். மற்றொன்று வம்பு பேசும் பொது மனோபாவம், பக்கத்து வீட்டில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள நமக்கு ஏற்படும் ஆர்வம் போல பிரபலங்களின் வாழ்விலும் என்ன நடந்திருக்கும் என்ற குறுகுறுப்பு அனைவருக்கும் இயல்பான ஒன்று. இந்த புத்தகத்தில் ஆசிரியர் திரு. ஜார்ஜ் அவர்கள் இந்த இரண்டு விதத்திலும் நம்மை திருப்தி படுத்துகிறார். எம். எஸ் அவர்கள் சின்ன வயதில் இருந்து பாடத் தொடங்கி சிகரம் தொட்ட கதையை மட்டும் எழுதவில்லை, கூடவே இந்தியாவில் கர்நாடக இசையின் வரலாற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறார்.

சுதந்திரத்திற்கு முன்பிருந்த காலகட்டத்தில் பெண்கள் இசைத் துறைக்கு வர எவ்வளவு தடை கற்களை கடக்க வேண்டி இருந்தது, அவைகளை திருமதி. எம். எஸ் அவர்கள் எவ்வளவு எளிதாக கடந்தார் என்பதை விலாவாரியாக விளக்குகிறார். அந்த காலத்திலேயே பிரபலமாக இருந்த பாடகிகள் திருமதி. எம். எல். வசந்தகுமாரி, திருமதி. டி. கே. பட்டம்மாள் போன்றோர் அடைந்த புகழை விட எம். எஸ். அவர்கள் பெரும் புகழ் அடைய காரணம் என்ன என்பதை வாசிக்கும் நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்த திருமதி. எம். எஸ் எப்படி அவரின் கணவர் சதாசிவத்தின் கரங்களை பிடித்தார், அது அவரது வாழ்வை எப்படி புரட்டி போட்டது என்பதை எல்லாம் இவ்வளவு ஆழமாக யாரும் ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

சிறிய வயதிலேயே அற்புதமான குரல் வளத்தை பெற்ற எம் எஸ் தன் குடும்ப வழக்கத்தை கடைபிடிக்க விரும்பவில்லை, தன் பதின்மங்களில் தைரியமாக தன் வீட்டை விட்டு வெளியில் வந்து சதாசிவம் அவர்களின் வீட்டில் அடைக்கலமாகி இருக்கிறார். அப்போது திரு. சதாசிவதிற்கு மணமாகி இருக்கிறது, எனினும் அவர் எம் எஸ்ஸின் இசை வாழ்விற்கு தன்னால் ஆன உதவிகளை செய்திருக்கிறார். சதாசிவத்திற்கும் எம் எஸ்ஸின் அம்மா மற்றும் அண்ணா தரப்பினருக்கும் (மதுரை கோஷ்டி என்று சதாசிவம் அழைப்பாராம்) எப்போதுமே தகராறு இருந்து வந்திருக்கிறது. மதுரைக்கு அவருடைய தேவதாசி வாழ்விற்கு அவரை போக விடாமல் எம் எஸ்ஸை பாதுகாத்து வந்திருக்கிறார் சதாசிவம் அவர்கள். எம். எஸ்சிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்ட போது அவர் நடித்த படங்கள் எப்படி வெற்றி பெற்றன அதற்கு பின் இருந்த சதாசிவத்தின் சூட்சுமங்கள் என்னென்ன என்பதை எல்லாம் வாசிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.

நடிகர் மற்றும் பல்துறை வித்தகர் ஜி என் பி அவர்களை எம் எஸ் மிகவும் விரும்பி இருக்கிறார், அவரின் காதல் கைகூடவில்லை எனினும் அவர் ஜி என் பிக்கு எழுதிய கடிதம் இந்த புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது அது நமக்கு புது தகவல், ஸ்வாரஸ்யமானதும் கூட ! சதாசிவத்தின் முதல் மனைவி இறந்த பிறகு அவசரமாக அவர் எம் எஸ் அவர்களை திருமணம் செய்து கொண்டது தேவையில்லாத பல சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது, எனினும் சதாசிவம் அதை பற்றி எல்லாம் கவலை படவில்லை. மிக நேர்த்தியாக திட்டமிட்டு சாதாரண நடிகை என்ற கட்டமைப்பிற்குள் இருந்த எம். எஸ்ஸிற்கு பக்தி என்னும் அலங்காரத்தை செய்து அதையே அவருக்கு நிரந்தர அடையாளமாக மாற்றியது எல்லாம் நாம் கற்பனை கூட செய்ய வாய்ப்பில்லாத விஷயங்கள். பக்திபூர்வமாக ஒரு வடிவமாகவே எம் எஸ் திகழ்ந்தார், அது அவருக்கு அற்புதமாக பொருந்தியது. சதாசிவம் அவர்களின் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் எம் எஸ் இன்னும் இசையில் பரிமளித்திருப்பார் என்று பலர் அபிபிபிராய பட்டிருக்கிறார்கள்.

ஆனால் எம் எஸ் எப்போதுமே தன்னை முழுவதுமாய் ஒப்புக் கொடுப்பவராகவே இருந்திருக்கிறார், பணிவும் அன்புமே அவரது அடையாளமாக இருந்திருக்கிறது. கல்கி கார்ட்ன்ஸ் உருவான கதை, ராஜாஜி மேல் எம் எஸ்- சதாசிவம் தம்பதிகளுக்கு இருந்த குரு பக்தி, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கும் சதாசிவத்திற்குமான நட்பு, மகா பெரியவா மேல் இருந்த பக்தி என்று எதையும் விடாமல் எழுதி இருக்கிறார் ஆசிரியர். முக்கியமாக சேவை மனப்பான்மையோடு
எம். எஸ் அவர்கள் பல கச்சேரிகளில் பாடி நிதி திரட்டி தர்ம காரியங்களுக்கு வழங்கி இருப்பதெல்லாம் வாசிக்க நெகிழ்ச்சி. அதையெல்லாம் முழுமையாக நெறிப்படுத்திய அவருடைய கணவர் சதாசிவத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. இசை சார்ந்த நூல்களை நான் அதிகம் வாசித்ததில்லை என்பதாலும் சில வாக்கியங்களை சரியாக புரிந்து கொள்ள இருமுறை அந்த பத்திகளை வாசிக்க வேண்டி வந்தது.

ஆராய்ச்சி நோக்கத்துடனும் மதி நுட்பத்துடனும் எழுதப்பட்ட இந்த நூலை எளிதில் படித்துவிட்டு கடந்து விட இயலாது, ஆழமான வாசிப்பு தேவை படும் சிறந்த புத்தகமிது. ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை எழுதிய ஜார்ஜ் மிக சிறிய விஷயத்தை கூட விட்டுவிடாமல் விரிவாக ஆராய்ந்து எழுதி இருப்பதால் மொழிப் பெயர்ப்பு மிகுந்த சவால் நிறைந்ததாகவே இருந்திருக்கும். சங்கீதம் தொடர்பாக நிறைய வார்த்தைகள் வருவதால் அதை போகிற போக்கில் மொழி பெயர்க்க இயலாது சற்றேனும் இசை ஞானம் தேவைப்படும். திரு. சுப்பாராவ் அவர்களின் கடினமான உழைப்புக்கு என் வந்தனங்கள். மனோகர் தேவதாஸ் வரைந்த எம் எஸ் அவர்களின் ஓவியம் இதில் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பாரத ரத்னா, மேக் சே சே விருது எல்லாம் அவரின் திறமைக்கு மட்டும் கிடைத்தவை அல்ல, மாறாக அவரின் பணிவிற்கும் அர்பணிப்பிற்கும் கிடைத்தவை. இசையாய் வாழ்ந்த ஒரு இசை குயிலின் குரலின் குழைவை, மயிலிறகு வருடலை அனுபவிக்க அவசியம் இந்த புத்தகத்தை வாசியுங்கள்….

நன்றி:
இந்து கணேஷ் முகநூல் பதிவிலிருந்து….

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – இரா.சண்முகசாமி




நூல் : சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர் : ச. சுப்பாராவ்
விலை : ரூ. 140/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

சிறந்த சிறுகதை எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றவருமான நமது அருமைத்தோழர் சா.சுப்பாராவ் அவர்கள் தன்னுடைய மகளும், மருமகனும் வேலை காரணமாக ஓராண்டு ஐரோப்பாவில் தங்கியிருக்கும் பொழுது, நமது எழுத்தாளருக்கு வெளிநாடு செல்ல அழைப்பு வந்து புறப்பட்டுச் சென்றார். அப்படி அவர் சென்ற பொழுது ரோட்டர்டாமில் தங்கியிருந்து பல முக்கிய இடங்களை கண்டுணர்ந்தார். அவர் பார்த்தது மட்டுமல்லாமல் நம்மிடமும் பகிர்ந்தும் கொள்கிறார். ஆஹா என்ன அற்புதமான பயண அனுபவம்!

35 ஆண்டு காலமாக ஆங்கில புத்தகங்கள் மூலம் பார்த்த ஐரோப்பாவை, அது எந்த முக்கியமான நகரமாக இருந்தாலும் அதை களமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் அவர் மனதில் வந்து போனதாக நம்மிடையே பகிர்கிறார். அவர் பார்த்த சில இடங்களைப் பற்றி உங்களோடு…

ஐரோப்பாவில் தன் மகள் வாழும் நெதர்லாந்து ரோட்டர்டாமில் ஆசிரியர் தன் பயணத்தை தொடங்குகிறார். மக்கள் பெரும்பாலும் மிதிவண்டிகளிலேயே பயணம் செய்கின்றனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படை இரண்டு மணி நேரத்தில் 86 ஆயிரம் மக்களை கொன்றொழித்த கொடுமையான வரலாற்றை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்நகரம் மீண்டும் புத்துணர்ச்சியோடு நிர்மாணிக்கப்படுகிறது. அங்குள்ள வீடுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ‘கியூப் வீடு’ என்று யூட்யூபில் பதிந்தால் அருமையான வீடுகளை நாம் காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் அங்க மருந்து கடைகளே இல்லையாம்! மருத்துவமனை கூட அரசு மருத்துவமனை மட்டுமே. நம்ம ஊர்ல தலைவலிக்கு, காய்ச்சலுக்கு என ஓடிப்போய் மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த மாதிரி எதுவும் அங்கே கிடையாதுங்க. எதுக்கெடுத்தாலும் அங்கு ஆஸ்பத்திரிக்கு ஓடற நிலைமையும் இல்லை. சளி, ஜலதோஷம் அப்படின்னு மருத்துவமனைக்கு போனா ‘அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க சரியாயிடும் போயிட்டு வாங்க’ என்று மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விடுவார்களாம். இன்னும் நிறைய இருக்குங்க. இரண்டு நதிகளுக்கு இடையில் இருக்கிற கிண்டர்டையக். அப்பப்பா நிறைய இருக்கு. இதையெல்லாம் எழுதி முடிக்க நான் ஒரு புத்தகம் தனியாக போடணும் போல.

அடுத்ததாக வான்கோ வாழ்ந்து துன்புற்ற இடமான ஹேக் அதாங்க சர்வதேச நீதிமன்றத்திற்கு தான் ஆசிரியர் செல்கிறார். உள்ளே செல்ல அனுமதி இல்லை. அருமையான அருங்காட்சியகம் இருக்கிறது. அங்கேயும் ஒரு மரம். நம்ம கந்தசாமி படத்தில் வருவது போல துண்டு சீட்டுகள் அட்டைகள் தொங்குகின்றன. நம்ம ஆசிரியரும் ‘உலகினை அழித்துவிடும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என்றும் வேண்டும் சமாதானம்’ எழுதி மரத்தில் கட்டி வைத்தார். அந்த மரத்தில் தமிழில் எழுதிய ஒரே ஒருத்தர் அவர் நம்ம தோழராத்தான் இருக்கும். அடுத்ததாக உலகை வலம் வந்த கம்யூனிஸ்ட் அறிக்கை பிறந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். ஆம் காரல் மார்க்ஸ் பாரிஸிலிருந்து நாடு கடத்தப்பட்டு அவர் வந்து சேர்ந்த இடம் தான் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸலஸ். ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்று கூடுங்கள்! என்று எழுதிய மாமேதையின் இடத்தை பார்க்க வருகிறார். ஆனால் அந்த சசுவான் ரெஸ்டாரண்ட் இடம் இப்போது ஒரு தனியார் உணவு விடுதியாக மாற்றப்பட்டதால் அங்கே மார்க்ஸ் இருந்த அடையாளமாய் அன்னப்பறவை சிலையைக் கண்டு ஆனந்தமாகி அந்த விடுதியின் முன்பு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். மக்களின் வரலாற்றை யாரேனும் ஒருவர் புதுப்பிப்பார் என்கிற உணர்வு ஏற்பட்டது தோழர்களே. இப்படியாக வான்கோ மற்றும் பல்வேறு வரலாற்றுத் தரவுகளை சலிப்பில்லாமல் மிகவும் அருமையாக தரவுகளை வாரி வழங்கியபடியே பயணம் செய்கிறார். வான்கோவின் ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய வாழ்வும் மிகவும் துயரம் நிறைந்தது. தன்னுடைய சகோதரன் அனுப்பும் தொகை மட்டுமே வான்கோவுக்கு உயிர்நாடி. அப்படி துன்பப்பட்டவர்தான் உலக அதிசயங்களை அள்ளி வழங்கினார்.

அடுத்ததாக பாரிசுக்கு பயணம் செய்கிறார். எந்த நகரத்துக்குச் சென்றாலும் அந்த நகரத்தை பற்றிய ஒரு நூலை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே செல்கிறார். அப்படித்தான் ஈபிள் டவருக்குச் சென்றார். இரண்டாம் உலகப்போரில் ‘பாரிஸ் என்னும் நகரமே இருக்கக்கூடாது அதை அழித்து விடு’ என்று ஹிட்லர் கூறியபோது, கோல்டிஸ்ட் அப்படி செய்யாமல் விட்டு விடுகிறார் என்கிற செய்தி வியப்பைத் தருகிறது.

கோபுரத்தின் உச்சிக்கு கூட உணவு பொருள் எடுத்து செல்லலாம் என்பது வியப்பை தருகிறது. நம்மூர்ல இதெல்லாம் எப்போது சாத்தியமோ. நாஜிக்களிடமிருந்து பாரிஸை காப்பாற்றுவதற்காக 18 முதல் 50 வயது வரையிலான அத்தனை பேரும் நாட்டர்டாம் தேவாலயம் முன்பு கூடி போலீஸ் தலைமையகத்தைக் கைப்பற்றிய காட்சியை லாரி காலின்ஸூம், டொமினிக் லாப்பியரும் அவ்வளவு நுணுக்கமாக விவரித்த விஷயத்தை நம் ஆசிரியர் மிக அழகாக குறிப்பிடுகிறார்.

அடுத்து லூவர் அருங்காட்சியகத்தில் நம்மை அழைத்துச் செல்கிறார். இந்த ஒரு நாவல் டான் பிரவுன் எழுதிய ‘டாவின்சி கோட்’ மோனலிசா பற்றிய நூல். என்ன ஒரு எழுத்தாளர் எப்படித்தான் இதெல்லாம் படிச்சிருக்காரோ தெரியல. அப்பப்பா அருங்காட்சியகத்தை பாக்கணும்னா பயங்கர பிரம்மாண்டம்! மூன்று ஈபில் டவர் கோபுரங்கள் ஒன்றாக படுக்க வைத்திருக்கும் அளவு தூரம் 46,000 கலைப் பொக்கிஷம். மோனலிசா பற்றிய செய்திகள் நிறைய தெரிஞ்சிக்கலாம். மோனலிசா ஓவியம் ஆயிரத்து பதினொன்றில் திருடு போய் இருக்கு. அதிலிருந்து அதை காப்பாற்றுவதற்கு, அவ்வளவு பாதுகாப்பு போட்டு இருக்காங்க. இரண்டாம் உலகப் போரின் போது அந்த மோனலிசா ஓவியத்தை காப்பாற்றுவதற்கு பல திட்டம் போட்டிருக்கிறார்கள். 10 லட்சம் மணல் மூட்டை கட்டி காப்பாற்றியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது. டான் பிரவுன் ஓவியங்கள் அனைத்தும் 95 லாரிகளில் வெளியூருக்கு அனுப்பி இருக்கிறார்கள். மோனலிசா மட்டும் அங்கேயே தனியே ஒரு ரகசியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். 1939 லிருந்து 1945 வரைக்கும் லூவர் அருங்காட்சியகத்தில் காப்பாற்றுவதற்கு அவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள்.

அவர் போன இடத்தை எல்லாத்தையும் குறிப்பிடலாம் என்றால் அவர் மாதிரியான ஒரு புத்தகத்தை எழுதினால் தான் சரியாக இருக்கும். ஆனால் கண்டிப்பா யாரும் படிக்க மாட்டீங்க. அதனால அவர் எழுதிய இந்நூலில் முழுவதும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

இரண்டாம் உலகப்போர் நெதர்லாந்து ‘ஆஸ்ட்விட்ச் சர்வைவல் இன் ஆப் சுவிட்ச்’ என்கிற கொடுமையை பற்றிய எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றது கண்கலங்காமல் யாராலும் படிக்க முடியாது. முகாமில் காலையில் ஆட்களைக் எண்ணுவார்கள். ஒருவர் குறைந்தால் கூட பத்து பேரை சுட்டுக் கொள்வார்கள். முகாமில் கைதிகளே யாராவது தப்பித்து போனாலும் மற்றவர்கள் தப்பிக்காமல் பார்த்துக்கொள்வார்கள். கொடுமைகள் ஏராளம். சாகப்போகிற ஒருவர் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்ள வேண்டும். குழி வெட்டிய பின்பு குழியின் மூளையில் நிற்க வேண்டும். நாஜி துப்பாக்கியால் சுடுவான் அப்படியே குழிக்குள் விழ வேண்டும் தள்ளுவதற்கு வேலை மிச்சமாம்.
பசிக்கு சூப்பு கொடுப்பானுங்க. அத குடிச்ச பின்னாடி தெரியும் அது இறந்தவர்களுடைய உறுப்புதான் அதில் கிடக்கிறது என்று. குடித்தவர்கள் அப்படியே வாந்தி எடுப்பார்கள். எவ்வளவு கொடுமையான நாஜிக்கள். சோவியத் வீரர்கள் வந்து காப்பாற்றும் வரை இதுதான் நிலைமை. இன்னும் நிறைய கொடுமைகளையும் நூல்களை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் தோழர்களே.

இறுதியாக ஆம்ஸ்டர்டாம் செல்கிறார் ஆசிரியர். ‘ஆசிரியர் குடும்பத்தோட வா செல்கிறார்?’ என்று கேலியாக பேச்சு வரும். ஏனெனில் அங்கு இரவு விடுதி புகழ் பெற்றது. ஆனால் நமது ஆசிரியரோ பார்க்கச் சென்றது வேறு ஒன்றை. ஆம் வான்கோ, ஆன் பிராங்க் நடந்த, உலாவிய ஆம்ஸ்டர்டாம் வீதியில் தான் பேராசிரியரும் நடந்தார். மிகப்பெரிய அருங்காட்சியகம்! அப்பப்பா மிகவும் பிரமிப்பான அருங்காட்சியகம்! வான்கோவினுடைய கையெழுத்து கடிதத்தைக் கண்ட ஆசிரியர் மொழி தெரியாவிட்டாலும் கண்கலங்கினார். ஆன் ஃபிராங்க் குடும்பம் நாஜி படையினரிடம் இருந்து தப்பிக்க தன் அப்பா பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு புத்தக அலமாரிக்கு பின்புறம் ரகசியமாக சிறு வீடு கட்டி மறைவாக வாழ்ந்து வந்தனர். சிலரின் நம்பிக்கைத் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு ஆளாகினர். ஆன் பிராங்க் சிறையில் கொடும் நோயில் இறந்துவிட, அவர் தந்தையார் மட்டும் பிழைக்க பிறகு ஆன் அவர்கள் இளம் வயதில் நாஜி கொடுமைகளை தனது டைரியில் எழுதி வைத்த குறிப்புகளை கொண்டு அவற்றை நூலாக வெளியிட்டார். சிறிய வயதில் மிகவும் அபாரமான திறமை கொண்டவராக திகழ்ந்துள்ளார் ஆன். அப்படி அவர்கள் வாழ்ந்த இந்த மறைவான இடம் தான் தற்போது அருங்காட்சியமாக உள்ளது. பார்வையிட வருபவர்கள் அந்த அலமாரியை விலக்கி உள்ளே சென்று பார்ப்பது போன்று பழைய நடைமுறையில் இன்னும் இருப்பது சிறப்பு.

அப்பப்பா ஆசிரியரின் வாசிப்பு எவ்வளவு தூரம் அவரை இழுத்துச் சென்றிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! ஆனால் மனிதராகப் பிறந்தவர்கள் ராகுல சாங்கிருத்தியாயன் சொல்வதுபோல் ஊர்சுற்றிப் புராணமாக நாம் உலகை வலம் வர வேண்டும். நிறைய பொக்கிஷங்களை கொண்டுள்ள பூமியின் ஓவியத்தைக் கண்டு உணர்வதற்காக அவசியம் உலகை வலம் வர வேண்டும். அதற்கு வாசிப்பு மிக மிக அவசியம். அப்படி உலகை வாசித்து நமக்கு அளித்த எழுத்தாளர் தோழர் சா. சுப்பாராவ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

நான் உங்களிடம் சொன்னது தம்மாத்தூண்டு. ஆனால் அறிய தகவல் களஞ்சியங்கள், புகைப்படக் காட்சிகள் இந்நூலில் நிறைய கொட்டிக்கிறது!
வாசியுங்கள் தோழர்களே!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.

நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின்  சில இடங்கள்… சில புத்தகங்கள்… – சிந்துஜா சுந்தரராஜ்

நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – சிந்துஜா சுந்தரராஜ்



நூல்: சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர்: ச. சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 140
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

பயணம் என்ன செய்யும் மாற்றத்தை நம்முள் நிகழ்த்தும். நேற்று தான் தோழர். சுப்பாராவ் எழுதிய ” சில இடங்களும் சில புத்தகங்கள் ” என்ற நூலை படித்து முடித்தேன். சிறு வயது முதலே ஐரோப்பிய நாடுகள் மீது ஓரு அதீத ஈர்ப்பு. அதற்கு காரணம் ஐரோப்பியர்கள் கலை,இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றிய வர்கள் என்பதாலோ என்னவோ. எங்கள் உறவினர்களில் சிலர் பிரான்ஸ் இருக்கின்றனர். அவர்களுடன் பேசும் போது எல்லாம் ஓரு முறை ஐரோப்பிய நாடுகள் சென்று அப்படி என்ன இருக்கும் என்று நினைத்து உண்டு. அதன் பின் பணி நிமித்தமாவது மட்டுமாட்சி போகலாம் என்று நினைத்தேன. அதற்கு பின் நான் எடுத்த படித்து வேலை பார்த்தது  வேறு  எதுவோ…பாரிஸ்  மேற்கத்திய ஆடை வடிவ உலகத்தின் ஜாம்பவான். ஆகையால் பேஷன் துறையை எடுக்க  வேண்டும் என்று நினைத்தேன். இங்கு பாண்டிச்சேரியில் பலர் இரட்டை குடியுரிமை உள்ள குடும்பங்கள் உள்ளது. ஏன் எங்கள் வீட்டில் எங்கள் பாட்டிக்கும் கூட இரட்டை குடியுரிமை உள்ளது என்பதே பின் நாட்களில் தான் தெரியும். பிரான்ஸ் பற்றி கேட்க கூடவே ஓட்டிக்கொண்டது போன்று வரும்  அதன் இலக்கியமும், அழகியலும், சுதந்திரமான நாடு என்றும். ஆகையால் நிறைய பிரஞ்சு படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றில் மிட்நைட் இன் பாரிஸ், ரோடு டு பாரிஸ், விவி டடூர், பிரஞ்சு கிஸ் போன்ற படங்களின் வழி ரசித்து இருக்கிறேன்.அதே போன்று இலக்கியங்களிலும் கலையும்  கைதேர்ந்த கலைஞர்ள்  நிரம்பிய  ஊர், ஈபிள்

கோபுரம்,,  ஷேக்ஸ்பியர் புத்தக கடை,  மார்கஸ் வாழ்ந்த Rue Vanue,, venice ,, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கை  பிறந்த இடம் இவையெல்லாம் ஒரு பக்கம். மற்றொரு  பக்கம் அவர்களின் வாழ்க்கை சௌகரியம.இவற்றை எல்லாம் டேவிட் லேபோ எழுதிய நூலான The Sweet Life in Paris ஓரு  பகுதியை   உணர முடிகிறது. ஆனால் நம்  ஊராகாரர்  நாம் பார்க்கும் பார்வையில் எழுதுவது ஆலாதி சுகம் தான். அதிலும் புளியோதரையுடன் உங்களுடனே நானும் கூடவே  ஈபிள் டவர், காலோஷியம்,பைசா கோபுரம் வந்து கடைசியாக வால்காவின் ஓவியத்தை ரசித்துப், அனா பிரங்கின் துயரத்தையும்  அறிய முடிந்தது. புத்தகத்தில் வரும் புத்தகத்தை எல்லாம் படிக்க முடியவில்லை யென்றாலும் சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன் படிக்கலாம் என்று. அடுத்த முறை ஓரு வேலை போக வாய்ப்பு இருப்பின் நான் போனவற்றையும் சேர்த்து பேசலாம் தோழர்.  உங்களின் இப்புத்தகத்திற்கு என் நன்றியும் அன்பும்

இன்று இதுதான் மிகவும் பொருத்தம் – சில இடங்களில் சில மனிதர்கள் | நூல் விமர்சனம் | தோழர். ராமன்

இன்று இதுதான் மிகவும் பொருத்தம் – சில இடங்களில் சில மனிதர்கள் | நூல் விமர்சனம் | தோழர். ராமன்

இன்று இதுதான் மிகவும் பொருத்தம் . . . இன்று உலக புத்தக தினம்.  ஊரடங்கு காலத்தில் “சூல்” படித்த பின்பு முடித்த மூன்று புத்தகங்களில் எதைப் பற்றி இன்று எழுதலாம் என்று யோசித்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட…