தொடர் 10 : கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 10 : கவிதை உலா – நா.வே.அருள்



Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

இரவும் நிலவும் மனிதர்களைத் தூங்க வைக்கும் மகத்தான சொரூபங்கள். ஆனால் அந்த இரவையே உறங்க வைக்கிறான் ஒரு கவிஞன். அவன் தனியாக எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இரவு உறங்குவதற்கு ஒரு தொட்டில் இருப்பதை அவனது கவிதைக் கண்களால் கண்டுபிடிக்கிறான்….ஆனால் விஷயம் என்னவென்றால் அது தூக்கத்தைத் தொலைய வைக்கும் சுவாரசியமான தொட்டில்!

என்ன முடியும் சிறு பிறையால்?
இரவை உறங்க வைக்கும்
சிறு தொட்டிலென மாறி…

Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
அன்பழகன்.ஜி

ஒரு மீனின் மரணம் மனிதனின் மனசில் கல்லறைப் பெட்டியின் மீது ஆணியைப் போல அறையப்படுகிறது. அமைதியான நீர்ப் பரப்பு தகதகக்கும் தகன மேடையாக மாறுகிறது. யாருமே அஞ்சலி செலுத்தாத மரணமாக ஒரு மீனின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. கவிஞனின் வார்த்தைத் தூண்டிலில் வசமாக சிக்கிக் கொள்கிறது ஒரு கவிதை மீன். அது நம் இதயத் தொட்டியில் இசைபாடும் மீன்!

தூண்டிலைச் சுண்ட
வானம் கிழியத் துடிக்கும்
கெண்டை மீன்

Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
நீலச் சங்கியாள் சுகந்தி

தேநீரின் கதை சுவாரசியமானது. தலை வலித்தால் தேநீர். தன்னிச்சையாய்த் தேநீர்.. ஒருவரைச் சந்தித்தால் தேநீர். பிரிவென்றால் தேநீர். தேநீர் இல்லையென்றால் தேசமே இல்லை எனலாம். தேநீர் ஒரு தேசிய பானம். ஒரு தேநீருக்குள் சோகங்களைத் துடைத்தெறியும் சுவை இருக்கிறதாம். ஆனால் ஒரு கவிஞரின் கண்ணுக்குத்தான் தேநீரின் நிறம் தென்படுகிறது. அது ரத்தத்தின் சுவை என்கிற ரகசியம் புரிகிறது.

எத்துணை மோசமான சோகத்தையும்
தேயிலைத்தூளின் மணம்
துடைத்தெறிந்துவிடுகிறது
நினைவில் தேயிலைக்காடுள்ள மிருகமல்ல
தேயிலைக்காக ரத்தம்
சிந்தியவர்களின் ரத்தம் யான்


Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
வீரமணி

இயற்கையைப் படைப்பின் கண்கொண்டு பார்க்கிறான் ஒரு கவிஞன். துன்பம் செய்த அதே இயற்கை இன்பம் செய்வதைக் காண்கிறான். எப்படி இதயத் துடிப்பில் “லப்” உண்டோ அப்படி “டப்” பும் உண்டு. லப் மட்டுமோ, அல்லது டப் மட்டுமோ இல்லை… லப் டப் சேர்ந்தால்தான் இதயத் துடிப்பு. புயல் அடிக்கிற அதே வானிலைதான் மழையையும் கொண்டு வருகிறது. .

நேற்று
வாரித் தூற்றிவிட்டுப்போன
அதே காற்றுதான்
இன்று
என் தோட்டத்திற்கு
மழையை
அழைத்து
வந்திருக்கிறது

முந்தைய தொடர்களை படிக்க: 

தொடர் 1 :  கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்

தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்

தொடர் 5 : கவிதை  உலா 5 – நா.வே.அருள்

தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்

தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்

 தொடர் 8: கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்

 தொடர் 9: கவிதை உலா 9: ஒரு சுற்று வாழ்க்கை – நா.வே.அருள்