சித்தாராவின் ‘மணமகள்’ சிறுகதை (மலையாளம்)  – ஆங்கில வழி தமிழ்  மொழிபெயர்ப்பு: மு. விஜயக்குமார்

சித்தாராவின் ‘மணமகள்’ சிறுகதை (மலையாளம்) – ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பு: மு. விஜயக்குமார்




என் மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாள். எனக்கு இரவு பணியில் விலக்கு அளிக்க வேண்டுகிறேன். சலனமற்ற உதட்டோடும் உரைந்துபோன பார்வையுடன் முதலாளியின் முன் நின்றான் மார்க். அவன் மகள்தற்கொலை செய்துகொண்டாள். தன் சுயம் எனும் பக்கத்தை உலகிற்கு காட்டியிருந்தாள்.

முதலாளியின் ஆறுதலான வார்தைகளிள் அரேபிய சாயலாக வெளிபட்டது.

“ நான் திருமணம் செய்து கொண்டேன் எனது அயல் நாட்டு நுழைவு சான்றிதழை குடும்பம் சார்ந்த ஆவணமாக மாற்ற வேண்டுகிறேன்” என்ற கோரிக்கை சமர்பிக்கபட்டது.

அதான் (முஸ்லீம் சமூகத்தில் பொது தொழுகைக்கு அழைப்பது) அறிவிப்பு கடல் அலைபோல காற்றில் பரவியது. முதலாளி அருகில் உள்ள மசூதியில் கை – கால் சுத்தம் செய்வதற்கு கால தாமதம் ஆகும் , ஆகையால் மார்க் காத்துக்கொண்டிருந்தான்

பெத் வேலை செய்யும் மருத்துவமனையில் சலசலக்கும் மக்கள் மேகக்௯ட்டங்களா கலைந்நு சென்றனர். புர்கா அணிந்த பெண்கள் மட்டும் மந்திரவாதியைப்போல ௨லாவிக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் நாற்காலிகளின் மீது அமர்ந்து கொண்டு முக்காடு வழியாக கண்களை சுழற்றிக் கொண்டிருந்தனர்

பெத் மட்டும் தனியே தன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். மார்கை பொருத்த வரையில் பெத் சிற்றின்பம் கானும் ஒரு நேர்மையான பெண் போலதோன்றினாள், மேலும் கேள்விக்குறியைப் போல தலையைப்பின்னியுள்ள ஆப்ரிக்க பெண் தலைமை செயலாளரின் குணத்தால் மார்கின் வருகைக்கு திட்டவோ, கடிந்து கொள்ளவோ இல்லை.

பெத் ஐ வீட்டிற்கு அழைத்து செல்லும் போது தன் மகள் பற்றிய செய்தியை வெளியிட்டான். “எனக்கு தெரியும் “என்று. கண்கள் குளமாக ௯றினாள் பெத். அந்த கண்களிள் குற்ற ௨ணர்வு மறைந்திருந்தது. ஆணவம், பொறாமை, வெறுப்பு அனைத்தும் மாறி, மாறி தோன்றி மறைந்தது.

அவன் மனைவி, மகள் பாசத்தை ௨ணர்ந்த பெத் கோபக்கணல் போன்ற வார்த்தைகளை வெளியிட்டும், பதிலாக புன்முறுவல் மட்டுமே வெளியிட்டவாறு மார்கும் பயணம் செய்து கொண்டுடிருந்தனர். இவர்களின் ௨றவு பற்றி தெரிந்ததிலிருந்து அவன் மகள் அழுகை,பொறாமை போன்ற மன ௨ணர்வுகள் வெளியிடும் வாயிலாக கடிதத்தை பயன்படுத்தினாள்.

“என் மகள் அழகானபுத்திசாலி “என்ற இருமாப்புடன் மீண்டும் ஒருமுறை புன்னகை பூத்தான் மார்க்.அவன் மனதில் பாசம் என்ற ௨ணர்வு கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரைப் போல பாய்ந்து கொண்டிருந்தது,ஆனால் பெத் அமைதி மட்டுமே சுழலின் பிம்பமாக காட்டினாள்.மணமகளான அவள் வெள்ளை அங்கிக்குமேல் கருப்பு பர்தாவை அணிந்திருந்தாள்.அவளின் கண்கள் ஒளி இழந்து ,வாடிப்போன ௨தடுகளாக மாறியிருந்தது மாறாக மார்க் “காமம்” எனும் கடலில் மூழ்கியிருந்தான்.

அவனிடம் பல கேள்விகள் ௨ருண்டோடி, துளைத்து காயப்படுத்தியது தற்போதுள்ள சூழலில் நான் அவளை காதலிக்க முடியுமா? காமம் என்ற கடலில் திளைத்த பின்பும் அதன் மாய வித்தைகளை அனுபவித்த பிறகும் காதல் கொள்ள இயலுமா ? கனவில் வயல்வெளியில் சுற்றித் திரியும் பெண் போன்ற ௨டலமைப்பை கொண்டவளை காண்பேனா? அல்லது காதல், காமம், மரபு போன்றவை கழுகின் அலகுகளாக மாறி காயப்படுத்தமா? வீட்டிற்கு நுழையும் சமயத்தில் சாய்வுப்பாதை அருகே பெத்தை முத்தமிட்டான். இதற்கு முன் பலமுறை முத்தமிடாலும், அவன் மனைவி என்ற பெயரோடு இங்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.

முன்பு பள்ளி விடுமுறை நாட்களில் அவன் மனைவி, மகள் அந்த அறையில் தங்கியிருந்தனர். மேலும் பெத்தின் பெட்டியும், பிற பொருட்களுகம் சிதரிக்கிடந்தது. அது ஒரு சிறிய அறை அறை ஒரு மூலையில் மலர் குவளை உள்ளது அது புதியதும் அன்றி பழையதும் அன்றி நடுத்தர பாணியிலான அறை,, திரைக்கு அருகில் ஒரு சிறிய கட்டில் உள்ளது, அவரது மகள் அறை மற்றும் கட்டிலைப் பற்றி பல முறை கூறியிருக்கிறாள்.

பெத் இந்த கட்டிலை ஞாபகம் இருக்கிறதா ? சிறிது குழப்பமான புன்னகையுடன் கேட்டான். மேலும் பெத் முன்பு செவிலியிய விடுதியில் இருந்து தப்பி , இங்கு அடைகலம் இருந்ததையும் நினைவு கூர்ந்தான். பெத் மார்கின் கட்டிலை நோக்கி நகர்ந்து சென்று தலை முன்னோக்கியவாறு அமர்ந்தாள். மேற்புற பர்தாவை களைந்து வெள்ளை நிற அங்கியை மட்டும் அணிந்திருந்தாள். குளித்து , ௨டைகளை மாற்றிய பின் சமையலரைக்கு சென்று இரண்டு குவளை பழச்சாறு கோப்பைகளுடன் பெத்தின் அருகே அமர்ந்தான் ஆனால் பெத் சிலையைப்போல அமர்திருந்தாள்.

என் மகளின் நினைவுகள் கடுமையான பாறைபோலவும், ௨றைபனியைப்போலவும் என் நினைவுகளிள்பதிந்துள்ளது என மனதின் நிலையை பிரதிபலித்தான் மார்க். அவள் “என் கடந்த, நிகழ்காலத்தின் தொகுப்பு”என்று ௨றுதியுடன ௯றினான் பழச்சாற்றின் மூலம் புத்துணர்ச்சி பெற்ற மார்க் மேற்கொண்டு பேச ஆரம்பித்தான். மார்கின் தோள்களைபற்றிய பெத்,” மார்க்..நிறுத்து” என்றாள். மார்கின் விசும்பலை காணாமல் மேற்கொண்டு அழ ஆரம்பித்தாள்..”இந்த குற்ற ௨ணர்வு என் வாழ்நாள் முழுவதும் என்னை கொல்லுமே! திருமணம் ஆன நபருடன் ௨றவு கொள்ளாதே என்று என் நண்பர்கள் என்னை எச்சரித்தனர்

வளர்ந்து கொண்டிருந்த மகள், முன்பும் இப்பொழுதும். முதிர்ந்தும் அல்லாத முதிர்ச்சியடைத பெண் போலவும் அல்லாத வளர்ந்து கொண்டுடிருந்தாள். பெண் என்ற அடையாளம் அவளின் ஒவ்வொறு கடிதத்திலும் பிரதிபலித்தாள். அவளின் வட்ட வடிவ முகம், தோள்கள், தளர்ந்த ௨தடுகள் என ௨டல் மட்டுமே வளர்ந்திருந்தது, தன் அப்பா எப்படியும் தன் குடும்பத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்று ௯றிக்கொண்டிருந்தாள் என் கனவு ௨லகத்தின் அரசி, என் மகளே, என் இளமையை ௨யிர்பித்த மணமகளே. எல்லா தந்தையை போல அல்லாமல் அவளை பேதை, குழந்தைத்தனம் நிரம்பியவளாக மட்டுமே மார்க் பார்த்தான். இருவரின் ௨றவு தெரிந்த ௨டன் அவன் மனைவி பிரிந்து சென்றபோதும், இவள் மட்டும் தொடந்து மார்கோடு போராடிக்கொண்டிருந்தாள்

இரண்டு நாட்களுக்கு முன்பு கிடைத்த கடிதத்தை நினைவு௯ர்ந்தான் மார்க். அவன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என்று குழந்தைத்தனமான மிரட்டல் போல இருந்தது. கடிதம் முழுவதும் பெத் மேல் ௨ள்ள பொறாமை, கோபம், போன்ற மனவெழுச்சிகளை வெளியிட்டு எழுதியிருந்தாள் என் சிறிய பச்சைநிற ராட்சசியே, ௨ன் பொறாமை, கோபம், அனைத்தும் பெத்தின் ௨டம்பு, கட்டில், மூச்சு, கண்கள் என்று என் மீது மட்டுமே என்று நினைத்து பெத்தின் ௨டம்பு சிலிர்த்தது. மார்க் பெத்தை கட்டிக்கொண்டு அழுதான். அவளோ எல்லாம் சரியாகி விடும் என்றுஆறுதலாக௯றினாள். அவளின் கைகள் ௨டல் முழுவதும் படர்ந்து பரவியது இருவரின் அனைப்பில் ஒரு வெப்பம் ௨ருவானது.

மார்க் பெத்தின் மூலம் மீண்டும் அந்த வெப்ப ஜுவாலைகளை ௨ணர்ந்தான் முன்பு முதன்முதலாக பெத்தை பார்த்த கணம் ஒரு வெப்பம் இரத்த குழாய்கள் வழியே கடந்தைப்போல ௨டல் முழுவதும் பரவி பெருகியது. ௨டல் சற்று நடுங்கியது, காய்ச்சல் வருவது போல் அறிகுறி இருந்தது. பெத் ஒவ்வொரு அசைவிலும், மார்கின் ஆசைகள் கலந்த தொடுதலின் வழியே வெப்பத்தை ௨ணர்ந்தாள். என் கனவு ௨லகத்தின் அரசி, என் மகளே, என் இளமையை ௨யிர்பித்த மணமகளே மார்க் பெத்தை இருக்கமாக கட்டியணைத்தான். மேலும் மார்க் ஆசை, காமம் கலந்த வெப்பத்தை பெத்தின் ௨தடுகள் வழியே கடத்தினான். எங்கும் வெப்பம் பரவியது.

The Bride

Sithara S.

My daughter has died-my daughter has killed herself Sir, please exempt me from night duty.” Mark neither bowed down nor bit his lips before the penetrating glare of his boss this time. His daughter had died. She had affirmed her self- beyond what could be possibly expected from a 15-year-old girl.

The Boss offered a few consoling words in his Arabic-tinged English. “Sir, I got married today morning-at the Embassy. I would request you to consider switching me to a family visa.”

The adhaan reverberated around, announcing the time of prayer. The boss would now perform ablution before visiting the mosque nearby. It would be a long time before he returned. Shoving his hands into his pockets, Mark stood up

The jostling crowd in the hospital where Beth worked slowly began to disperse. Few black burkha-clad women were still hobbling on the verandah like enchantresses. Others simply sat on the chairs nearby, allowing only eyes to drift through their black veils.

Beth was alone in her room. A fair woman, or in Mark’s language, a sensual woman, who laid her face on the table. This time, Beth didn’t scold Mark, as she used to before their wedding, asking him why he had come there, only to be snubbed by the Head Nurse. The Head Nurse was an African woman who wore her hair knotted like question marks-a jealous spinster.

While Mark drove Beth home, he told her about the call he had received from his home about his daughter.

“I knew it.” Beth, who was silent till then, said softly. It could be guilt that hid in her narrow eyes. Not exactly guilt. Maybe, a tentative numbness. Though after a while, all the arrogance, jealousy, and resentment in her would resurface. She would start blaming Mark again for his fondness for his former wife and daughter Mark smiled softly while driving. His daughter also had similar traits. The jealousy of a 15-year-old girl. Her envy flowed in the form of ranting mails to Beth and weeping letters to her Papa ever since she learnt about their affair. “My daughter. My smart and beautiful little girl, Becky” Mark smiled again, affection overflowing in his mind.

Beth was silent with an unusual expression on her face. A bride wearing a black purdah over her white gown. Her rounded arms rested on her lap. Desiccated eyes and languid lips Even amidst all these happenings, Mark’s mind was engulfed by lust, as always. But…

“But now, would I be able to love her again, while lying satiated after each heaving and sinking sea of lust, gasping after each passionate moment of love-making? Would I ever dream of this woman with a rounded body that resembled a peasant woman? Would my love, lust and middle-aged fear of death turn eagle-beaks, unleashing and descending into myself?”

Entering the flat and shutting the door behind, Mark kissed Beth passionately in the darkness of the corridor. Although she had come here a few times before, this was her first visit as his wife.

Beth’s suitcases and other belongings were piled up in the room where once, during school vacations, his daughter used to stay with her mother. They were dumped there by Beth and her friends after the marriage contract was signed. It was a small room. A table with a bronze flower vase in one corner. A smell, neither old nor new, pervaded the room. A small cot near the curtains. After the daughter grew up, on every visit, she used to complain of how small the cot was.

“Do you remember this cot, Beth?” Mark has queried with a smile. Beth had absconded from the nurses’ hostel and had come here during her maiden visit. And then, it was to this small cot that Mark had carried Beth, without much resistance from her. Beth walked towards Mark’s bedroom, her head bent forward. She took

off her burkha and sat on the cot without taking off her white gown.

After taking a bath, and changing his clothes, Mark went to the kitchen, took two glasses of juice and came back only to see Beth sitting in the same posture. Sculpted like stone. Frozen like mist. “My daughter too, Mark sighed, is turning solid like a stone and frozen like the mist in my mind. Freezing and frozen, she is becoming my time present as well as my time past.”

Placing a glass on the side table, and relishing the other glass, Mark sat beside Beth on the cot. “Mark,” suddenly she leaned onto his shoulders with a whimper. “Stop it Becky…” Mark placed the empty glass on the table. His lips moved, as though, to say something. Without listening to him, Beth continued weeping. “This guilt will haunt me and kill me for the rest of my life. I should have listened to my friends’ warnings about not getting involved with a man with a grown-up daughter…”

Grown-updaughter-15-year-old girl. She is not a grown-up girl. Or she is too grown up a girl Yes, she was…she is.

She used to be a girl in all the letters she wrote ever since her childhood days. Each vacation when I saw her, her body alone had grown with her well- rounded legs, arms and languid lips. She always insisted that Papa come back home and stay with her. Poor girl. My little princess from the tales of Enchantresses. My daughter. The bride of Papa’s revived youthfulness. Like any father approaching middle-age feels about his daughter, Mark saw her always as innocent, but not always childlike, and yet as his mature and grown up baby When his affair with Beth set off ripples back home, his wife bore a canopy of apathy, resigning herself. And yet, this little princess continued fighting her fight. Even after he informed her of his decision to marry Beth, even after she failed in her attempts to dissuade him, she still continued fighting. She still does.

M ark remembered the letter he received from her some three or four days ago. It was a childish threat to end her life, if her papa married for the second time. It was a letter filled with jealousy, resentment and grudge against Beth, a letter nobody would take at face value, a letter filled with childish impishness. My little green-eyed monster. Her jealousy is all around me. In the air, on the cot, on Beth’s body, in my breath, eyes wide open…

Tightly hugging Beth. Mark wept bitterly, crying his heart out. “It is okay,” Beth said. Her caressing hands moved along Mark’s aching body. Her legs entwined his thighs. Mark was feeling the heat amidst the chill of his weeping.

Heat. Holding himself in the tight and warm hugs of Beth, Mark once again remembered the heat. Slowly, his veins felt the same heat he felt when Beth first shook hands with him near the basketball court. His body shivered a little. He ran his fingers on Beth’s body. His whole body was now roused in that shiver. Like, fever had come visiting. Beth’s fever. That same Beth, with her well-rounded and sensuous body, who burnt the embers of desire with each touch. The bride of my revived youthfulness. My little princess. My baby”

My daughter!

Embracing Beth’s body tightly, Mark spread the fire of affection and lust onto her lips, leaving them scorched.

Translated from the Malayalam story ‘Vadha’ by PRASAD PANNIAN

ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பு: மு. விஜயக்குமார்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




இப்போதெல்லாம்..
***********************
இப்போதெல்லாம் நான் உறங்கிவிடுகிறேன் இரவில்..
படுக்கையில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுருக்கும் நோயாளியின் ஆறுதல்..

இப்போதெல்லாம் நான் பசித்து உண்கிறேன்..
புளித்த ஏப்பகாரனின் வாக்குமூலம்..

இப்போதெல்லாம் நான் கிறித்துவ போதகன்
வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் பிரகடனம்..

இப்போதெல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடியாகிறது..
தற்கொலையில் உயிரிழந்த விவசாயிகளின் ஏளனப் பார்வை..

இப்போதெல்லாம் நான் கோமாளி வேடம் நடிப்பதில்லை எங்கும்..
வேட்டி அவிழ்ந்து அம்மணமான கலைஞனின் அறியாமை

இப்போதெல்லாம் நான் சாலையை இருபுறம் திரும்பிப் பார்த்துக் கடக்கிறேன்..
சவக்குழிக்குள் குடும்பஸ்தனின் அங்கலாய்ப்பு.

புத்தம் புது பூமி வேண்டும்
******************************
புத்தம் புதுபூமி பிறந்திட வேண்டும்..
அழகிய நீல வானம் விரிந்திட வேண்டும்..
மின்னும் மழைத்துளிகள் உரசிட‌வேண்டும்..
பசுமை பூத்து நிலமெங்கும் செழித்திட வேண்டும்..

மனிதர் மனம் மகத்துவம் சமைத்திட வேண்டும்.
மெய்மை தாங்கிய சொல் உதிர்த்திட வேண்டும்.‌
பொய்யே இல்லா உலகு படைத்திட வேண்டும்..
கள்ளமில்லா நெஞ்சு வார்த்திட வேண்டும்

மனிதம் என்ற ஆடையை
மனிதர் உடுத்திட வேண்டும்..
வாய்மை என்ற ஒன்றே
வாழ்வாய் மலர வேண்டும்
மத வெறி அற்ற பூமி
மண்ணில் மலர வேண்டும்
சாதிகளற்ற சமத்துவம்
பூமியில் வாய்க்க வேண்டும்

உயிர்களிடத்தில் அன்பு
உயர் கல்வி ஞானப் பெருக்கம்

தன்னிகரில்லா தனித்துவம்
தரணி முழுவதும் தமிழ்
வேண்டும் வேண்டும் இவையாவும்
விரைவு கொண்ட விடியல் வேண்டும்..

அடக்கம் செய்வோம் வன்முறை தனை
*********************************************
போதுமே இனி வன்முறை..
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடலாம்
தேங்கியகழிவுகளை..

பரந்து பட்ட பூமியிது..
அமைதி நாடுவோம் நனி…

வேண்டாமே போர்.
போதுமே கண்ணீர்…
அணையுமோ அனல் தகிக்கும் செந் நீர்.‌.

குருதியுண்ட வீச்சத்தின் நீச்சத்தில்
திணறுகிறது தேசத்தின் மூச்சு..

போதுமே வன்முறை…
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடலாம் இனி

வாழ்வென்பது பெரும் பேறு
வழக்கொழிந்து கிடக்கிறது சகமனிதர் பாடு

போதுமே வன்முறை.
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடுவோம்…
குப்பைகளை…

து.பா.பரமேஸ்வரி.
சென்னை…

இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை – முனைவர் பு.அன்பழகன்

இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை – முனைவர் பு.அன்பழகன்




வேளாண்மைத்துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினைச் செய்கிறது. வேளாண் பயிர் செய்யும் பணிகள் தொடங்குவதிலிருந்து அவற்றை சந்தை படுத்தும்வரை செலவிடப் பணம் தேவைப்படுகிறது. இந்திய விவசாயிகளில் பெருமளவிற்குச் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் ஆவார்கள். இவர்கள் பயிர் தொழிலுக்குத் தேவையான குறுகிய, நடுத்தர, நீண்டகாலக் கடனைப் பல்வேறு ஆதாரங்கள் வாயிலாகப் பெறுகின்றனர். இந்திய விவசாயிகள் தங்களின் பணத்தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள நிறுவன (Institutional) மற்றும் நிறுவனமல்லா (Non-Instituional) நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெறுகின்றனர். நிறுவனமல்லாக் கடன்களை முறைசாராக் கடன் எனவும் அழைக்கலாம். முறைசாராக் கடன்களை நிலச் சுவான்தாரர்கள், நிதி வணிகர்கள், தரகு முகவர்கள் போன்றவர்களிடமிருந்து பெறுகின்றனர். முறைசாராக் கடனின் வட்டி வீதம் 36 விழுக்காடு வரை உள்ளது. இதனால் விவசாயிகள் கடன் பொறியில் (Debt trap) வீழ்ந்துவிடுகின்றனர் (கடன் பொறி என்பது பழைய கடனைத் திருப்பி செலுத்துவதற்காகப் புதிய கடனை வாங்கத் துண்டும் நிலையாகும்). இந்த விவசாயிகளின் துயரினைப் புரிந்துகொண்ட அரசு பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் தொடர்ந்து திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. முறைசார் கடனை (நிறுவனக் கடனை முறைசார் கடன் எனவும் அழைக்கப்படுகிறது) அளிக்கக் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகள் என விவசாயிகளுக்குக் குறுகியகால, நடுத்தர, நீண்ட காலக் கடன்களை வழங்க வழிவகைகளை உருவாக்கித் தந்துள்ளது. 1951ஆம் ஆண்டு விவசாயிகளின் முறைசார் கடன் 10.2 விழுக்காடாகவும், 89.1 விழுக்காடு முறைசாராக் கடனாகவும் இருந்தது. 1966ல் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நவீன முறை விவசாயம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் விவசாய இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவை வாங்கவும், இயந்திரங்களைப் பயன்படுத்தவும் அதிக அளவிற்குப் பணம் தேவைப்பட்டது. 1969ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கான ஒரு முக்கிய நோக்கம் வேளாண் வளர்ச்சிக்குத் தங்குதடையின்றி கடன் வழங்குவதாகும். 1970ல் வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகள் துவக்கப்பட்டது. இதனால் முறைசார்க் கடன் 1971ல் 32 விழுக்காடாக அதிகரித்தது. 1980ல் மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதனால் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1991ல் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1991ல் முதல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வங்கி நடவடிக்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. எனவே விவசாயக் கடன் அதிகரித்தது. 1991ல் மொத்த விவசாயக் கடனில் 65 விழுக்காடு முறைசார்க் கடனாக இருந்தது. மீண்டும் 1998ல் இரண்டாவது நரசிம்மம் குழுவின் பரிந்துரையின்படி வங்கித் துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்படி வங்கிகளுக்கான அதிகாரங்கள் நீக்குப்போக்குடன் செயல்பட அனுமதித்தது. வங்கிகள் துவங்க உரிமம் தேவை என்பது நீக்கப்பட்டது, இழப்பில் செயல்பட்டுவந்த வங்கிக் கிளைகள் மூடப்பட்டது, வட்டி வீத கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது, கடன் இலக்கு குறைக்கப்பட்டது. 1975ல் 5598ஆக இருந்த வங்கிக் கிளைகள் 1991ல் 11344ஆக அதிகரித்தது. இதனால் வேளாண்மைக்கான கடன் அதிகரிக்கத் தொடங்கியது.  ஆனால் 1991-2001ஆண்டுகளுக்கிடையே 28.67 விழுக்காடு மட்டுமே வங்கிகளின் கிளைகள் அதிகரித்தது. பெருமளவிற்கு வங்கிக் கிளைகள் கிராமப்புறங்களில் குறைந்தது. கடந்த 10ஆண்டுகளில் தனியார் வங்கிகள் அனுமதிக்கப்பட்டதால் தற்போது (மார்ச் 2021ல்) 1.22  லட்சம் (பொது, தனியார் வங்கிகள்) வங்கிக் கிளைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது (www.rbi.org.in). வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கும் நடைமுறை உள்ளது.

1969ல் 14 விழுக்காடாக இருந்த முன்னுரிமைத் துறைக்கான கடன் பங்கானது 2002ல் 34.8 விழுக்காடாக அதிகரித்தது.  இதனால் வேளாண் துறை பெருமளவிற்குப் பயனடைந்தது. அதேசமயம்   வேளாண் துறையின் முறைசாராக் கடனின் பங்கு 4 விழுக்காட்டுப் புள்ளிகள் 1991 – 2002ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிகரித்தது. இம் முறைசாராக் கடனில் பெருமளவிற்கு நிதி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டதாகும். வங்கி விரிவாக்கம் குறைந்தது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அளவு குறைந்தது போன்றவை இதற்கான காரணங்களாகச் சுட்டப்படுகிறது. 2001க்கு பின்பு கிராமப்புறங்களில் வங்கி கிளைகள் விரிவாக்கம். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் மீண்டும் முறைசார் வேளாண் கடன்கள் 2002ல் 61.1 விழுக்காடாக இருந்தது 2013ல் 64 விழுக்காடாக அதிகரித்தது, 2015ல் இது 72 விழுக்காடாக மேலும் உயர்ந்தது ஆனாலும் நான்கில் ஒரு பங்கிற்குமேல் முறைசாராக் கடன் பெறப்பட்டிருந்தது (Ahubhm Sehal 2021). வங்கித்துறையில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய விவசாயிகள் சரியான வட்டி வீதத்தில் முறைசார்க் கடன்களைப் பெற்றுள்ளனர்.  அதே சமயம் பெரும்பகுதியான சிறு குறு விவசாயிகள் முறைசார் கடனை அணுகமுடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

Inthiya Velan Katanum Vivasayikalin Tharkolaikalum Article By Dr. P. Anpalagan இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை - முனைவர் பு.அன்பழகன்

Mjhuk;: Ashok Gulati and Ritika Juneja (2019): “Agricultural Credit System in India: Evaluation, Effectiveness and Innovations.” ZEF, Working Paper series 184, Centre for Development Research University of Bonn.

இந்தியாவின் அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள் வேளாண் கடனாக மொத்தக் கடன் அளவில் 1970ல் 9 விழுக்காடு அளித்திருந்தது.  இது தொடர்ச்சியாக அதிகரித்து 1990ல் 15.9 விழுக்காடாக உயர்ந்தது, ஆனால் 2000ல் 9.9 விழுக்காடாகக் குறைந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் இக்கடன் உயரத் தொடங்கியது, 2016ல் இக்கடன் 13.2 விழுக்காடாக உயர்ந்தது.  மொத்தக் கடனில் தொழில்துறைக்கு அதிக அளவில் (1970ல் 61.2 விழுக்காடு, 2016ல் 39.4 விழுக்காடு) அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (Shromona Gangulylk et al 2021). தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியான NABARD (2018) கணக்கீட்டின்படி 2015-16ல் 61 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் முறைசார்க் கடனைப் பெற்றுள்ளதாகவும். 30 விழுக்காடு முறைசாராக் கடனையும் 9 விழுக்காடு முறைசார் மற்றும் முறைசாராக் கடனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறது.  நிஹாரிகா பாண்டே et al (2021) நடத்திய ஆய்வில் கோவிட் பெருந்தொற்று காலங்களில் வேளாண் கடன் 2020ல் சம்பா சாகுபடி காலத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி மொத்த விவசாயிகளில் 63 விழுக்காட்டினர் கடன் பெற்றவர்களாக இருந்தனர். இதில் 35 விழுக்காட்டினர் முறைசார்க் கடனும், 22 விழுக்காட்டினர் முறைசாராக் கடனும், இவ்விரண்டையும் 9 விழுக்காட்டினர் பெற்றிருந்தனர் என கணிக்கப்பட்டது.  இம் முறைசாராக் கடன் அதிக அளவில் நிதி வணிகர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயக் கடனின் அதிகரிப்பு பருவகாலத்தை சார்ந்துள்ளது. பருவமழை தொடங்கியவுடன் விவசாய நடைமுறைகள் உடனடியாக தொடங்கப்படவேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது. பருவம் தவறி பயிர்செய்வது எதிர்பார்க்கிற விளைச்சலைத் தராது. எனவே இதற்கானச் செலவுகளை எதிர்கொள்ள முறைசார் கடனைப் பெறுவதற்கு  அதிக நடைமுறைகளும், காலவிரயமும் உள்ளதால் முறைசாராக் கடனைப் பெற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உடனடியாகப் பயிர் வேலைகளைத் துவக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் அதிகப்படியான வட்டியையும் கருத்தில் கொள்ளாமல் முறைசாராக் கடனைப் பெறுகின்றனர்.  பல்வேறு காரணங்களினால் விவசாய உற்பத்தியில் இழப்பு அல்லது விளைபொருள்களுக்கான விலையின் வீழ்ச்சி போன்றவையினால் விவசாய வருமானம் குறைய நேரிட்டால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாமல் போகிறது. இது விவசாயிகளின் தற்கொலைக்கான முதன்மைக் காரணமாக உருவெடுக்கிறது. 1990களில் தொடங்கிய விவசாயிகளின் தற்கொலை இன்றுவரை தொடர்ந்துகொண்டுள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு அன்மையில்  ஒன்றிய அரசினால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் (PM-Kisan Samman Nidhi)

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் 1 டிசம்பர் 2018ல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி அளிப்பதற்காகத் துவக்கப்பட்டது.  ஒன்றிய அரசு இதற்கான நிதி உதவியினை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது. விவசாயிகளுக்கு நிதியுதவியினை நேரடியாகவே வழங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் விவசாயிகள் வேளாண் பயிர் வேலைகளைப் பருவ காலங்களில் தொடங்கப்படும்போது எதிர்கொள்ளும் நிதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு உதவுகிறது. ஓவ்வெரு ஆண்டும் சம்பா, குறுவை, கோடை பயிர்களைப் பயிரிடத் தொடங்கும்போது பருவத்திற்கு ரூ.2000 வீதம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி போன்ற அடிப்படைச் செலவுகள் செய்ய இந்த நிதி உதவி பயன்படும்.  இந்த திட்டத்தினால் மார்ச் 2022 முடிய 11.78 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர், ரூ.1.82 லட்சம் கோடி இதுவரை (பிப்ரவரி 2022) நிதி உதவியாக அளிக்கப்பட்டுள்ளது (GoI 2022).  உத்திரப் பிரதேச மாநிலத்தில் உச்ச அளவாக 22.9 விழுக்காடு இந்திய அளவில் இத் திட்டத்தில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தினால் இரண்டுவிதமான நன்மைகளை விவசாயிகள் பெறமுடியும்,  1. வருமான உதவியினைப் பெறுதல் 2. வங்கிகளில் குறுகிய, நீண்டகாலக் கடன்களைப் பெறமுடியும்.  இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்கேற்பு மிகவும் குறைந்த அளவில் உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், ஆதர் அட்டை, வங்கிக்கணக்கு, நிலத்தின் உரிமையாளர் பெயர் போன்றவை ஒத்துப்போவதில்லை. அதிக அளவிற்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் பெறப்படுகிறது ஆனால் அவற்றைப் பரிசீலனைச் செய்ய போதுமானப் பணியாளர்கள் இல்லை.  இந்த திட்டம் நில உரிமையாளர்களை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் குத்தகைதாரர்களுக்கு, கிராமப்புற கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு, கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இது பொருந்தாது. இந்தியாவில் நாடு முழுவதும் குத்தகைக்குப் பயிரிடும் முறை பரவலாகப் பின்பற்றப்படுகிறது.  இவர்கள் உண்மையான உழுபவர்களாக இருந்தும் இவர்கள் இந்த திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.  இந்த திட்டத்தில் நிதி தொகை பயனாளர்களுக்குச் சென்றடையக் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் சரியாக பதிவுசெய்யப்படாதது, பெயர்கள் ஒத்துப்போவதது போன்றவை ஆகும். ரூ.6000 ஆண்டுக்கு நிதி உதவி அளிப்பது விவசாயக் குடும்ப வருவாயில் 6.43 விழுக்காடாக உள்ளது.  சிறு குறு விவசாயிகள் அதிகமாக இந்த திட்டத்தினால் பயனடைகின்றனர்.  இது போன்ற திட்டங்கள் பல  மாநில அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது (தெலுங்கானாவில் ரித்துபந்து என்ற திட்டம் 10 மே 2018லிருந்து ரூ.10000 ஒவ்வொரு விவசாயக் குடும்பங்களுக்கும்  நிதி உதவியாகச் செயல்படுத்தப்படுகிறது, ஆந்திரப் பிரதேசத்தில் ரிதுபரோசா 15 அக்டோபர் 2019லிருந்து ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ.13500 நிதி உதவி அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, ஒடிசாவில் காலியா என்ற திட்டம் டிசம்பர் 2018லிருந்து ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ.10000 நிதி உதவி அளிக்கப்படுகிறது, மேற்கு வங்காளத்தில் விவசாயிகளின் நண்பன் என்ற திட்டம் வழியாக 1 ஜனவரி 2019ல் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ரூ.5000 நிதி உதவி வழங்கப்படுகிறது, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜிவ் காந்தி கிஷன் நியாய என்ற திட்டம் 3 மார்ச் 2020ல் ரூ.1000 – ரூ.13000வரை ஒவ்வொரு விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது)  (Kavitha et al 2021).

விவசாயக் கடன் வாங்கும் குடும்பங்களின் மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு முறைசார்க் கடனாகப் பெறப்படுகிறது (2018-19ல்). குறிப்பாகப் பெரிய நில உடைமையாளர்கள் 80 விழுக்காடுவரை முறைசார்க் கடனாகப் பெறுகின்றனர் ஆனால் சிறிய நில உடைமையாளர்கள் 28 விழுக்காடுவரை முறைசார்க் கடனைப் பெறுகின்றனர். பெறுகின்ற மொத்தக் கடனில் மூன்றில் ஒரு பங்கு பயிர் தொழிலைச் செய்யவும், ஐந்தில் ஒரு பங்கு நுகர்வுச் செலவிற்கும், 5 விழுக்காடு திருமணம், சடங்குகள், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை மேற்கொள்கின்றனர் (Kavitha et al 2021). விவசாயக் கடனுக்கும், வேளாண் உற்பத்திக்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. விவசாயிகளின் தற்கொலையினால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரமும் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறது. 

விவசாயிகள் தற்கொலை
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் கடந்த 25 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. விவசாயத் தற்கொலை என்பது விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் இரண்டையும் சேர்த்தது என்கிறது தேசியக் குற்றப் பதிவு பணியாக்கம்  (National Crime Records Bureau  – NCRB).    விவசாயிகள் தற்கொலைக்கு அடிப்படைக் காரணம் கடன் திரட்சியாகும் (Debt Accumulation).  பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அன்மைக் காலங்களாகப் பல்வேறு காரணங்களை முன்னிருத்தி வேளாண் தொழிலிருந்து அதிக அளவிற்கு விவசாயிகள் வெளியேறி மாற்று வேலைகளுக்கு (வேளாண் சாரா) செல்வதால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருவதால் உழவு உள்ளிட்டப் பணிகளுக்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இயந்திரம் பயன்படுத்துவதால் (குறிப்பாக நெல் கோதுமை போன்ற பயிர்களுக்கு) மொத்த உற்பத்திச் செலவில் 5 விழுக்காடு அளவிற்குக் குறைகிறது என்பது ஆய்வில் தெரிகிறது.  வேளாண் இயந்திரங்கள் அனைத்து விவசாயிகளும் வைத்திருப்பதில்லை.  குறு சிறு விவசாயிகள் வாடகைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் இயந்திரங்களைச் சொந்தமாகக் கடனில் வாங்குகின்றனர். இக்காரணங்களினால் விவசாயக் கடனளவு அதிகரிக்கிறது (Avinash Kishore  et al 2022).

2013ல் தெலுங்கானாவில் 89 விழுக்காடு விவசாயிகள் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொண்டனர். கர்நாடகாவில் இதே காரணத்திற்காக 77 விழுக்காடு விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 56 விழுக்காடும், மத்தியப் பிரதேசத்தில் 46 விழுக்காட்டினரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் மொத்த விவசாயத் தற்கொலையில் கடனின் காரணமாக 52 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  தொடர்ந்து பயிர்த் தொழிலில் வருமான இழப்பு, நுகர்ச்சிக்காக் கடன் வாங்குவதால் போன்றவற்றால் கடனில் விழ நேரிடுகிறது. இதனால் அதிக கடன் திரட்சியினால் தற்கொலை முடிவிற்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். சுக்பூல் சிங், மஞ்சீத் கவுர் மற்றும் கிங்ரா (2021) ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி ஆய்வு செய்தனர். இவ் ஆய்வின்படி 2000-2018ஆம் ஆண்டுகளுக்கிடையே 79 விழுக்காடு விவசாயிகள் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொண்டனர் என்றும், 21 விழுக்காடு விவசாயிகள் பிற சமூக பொருளாதாரக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்டனர் எனவும் கண்டறிந்தனர்.  மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 82.6 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்டோர் என்றும், 65.85 விழுக்காட்டினர் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், மொத்த தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 92.63 விழுக்காடு முறைசாராக் கடன்களை நிதி வணிகர்கள், நிலச்சுவான்தாரர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் கடன் பெற்றவர்கள் ஆவார்கள். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 63.84 விழுக்காட்டினர் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர், 85 விழுக்காட்டினர் 18லிருந்து 50 வயதுக்குள்  இருந்தனர். இவ்வாய்வின் ஒரு முக்கிய வெளிப்பாடு பாதி அளவிற்கான (49.66 விழுக்காடு) தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களில் விவசாயி தற்கொலை செய்துகொண்டபின் வருமானம் ஈட்டும் நபர்கள் யாரும் இல்லை என்பதாகும். பஞ்சாப் அரசின் நேரடி நிதி உதவி மூலம் 95 விழுக்காடு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது (Avinash Kishore  et al 2022).

விவசாயத் தற்கொலை இந்தியாவில் முதன்முதலில் 1960களிலும் 1970களிலும் தமிழ்நாட்டில் காணப்பட்டது.  1990களில் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நிகழ்வுகள் ஏற்படத்துவங்கியது.  குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை உச்ச அளவாக அறியப்படுகிறது. இம் மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் தற்கொலையில்; 90 விழுக்காடாக உள்ளது. இதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் தற்கொலைகள் அதிக அளவில் காணப்பட்டது. 2014ல் சராசரியாக ஒரு நாளைக்கு 15 விவசாயிகள் தற்கொலை நிகழ்ந்தது இது 2015ல் 21 தற்கொலைகளாக அதிகரித்தது (Sukhpal Singh  et al 2021).  2020ல் மொத்தம் 10677 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளது இது 2019விட அதிகமாக (10281) உள்ளது.  தேசியக் குற்றப் பதிவு பணியாக்கம் புள்ளி விவரத்தின்படி 1995-2019 ஆண்டுகளுக்கிடையே மொத்தம் 3,58,164 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளது. இவ்விரு ஆண்டுகளில் நடந்த நாட்டின் மொத்த தற்கொலைகளில் விவசாயத் தற்கொலைகள் 12.53 விழுக்காடாக உள்ளது. 1995ல் நாட்டின் மொத்த தற்கொலையில் விவசாயத் தற்கொலைகள் 13.43 விழுக்காடாக இருந்தது 2004ல் 16.3 விழுக்காடாக அதிகரித்தது இது 2019ல் 7.61 விழுக்காடாகக் குறைந்துள்ளது.  விவசாயத் தற்கொலை வீதம் (1 லட்சம் மக்கள் தொகைக்கு) 1995ல் 5.3ஆக இருந்தது 2001ல் 7.1ஆக அதிகரித்தது இது 2011ல் 5.3ஆக மீண்டும் குறைந்தது, 2018ல் இது மேலும் குறைந்து 3.6ஆக இருந்தது (Sthanu R Nair 2022)

1990களில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் நிகழந்தது. 2010-2016ஆம் ஆண்டுகளுகிடையே நடந்த தற்கொலைகள் 2000-2010ஆம் ஆண்டுகளுக்கிடையே நடைபெற்ற தற்கொலைகளைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.  1990களின் கடைசியில் விவசாயிகளின் தற்கொலையினைத் தடுக்க நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.Inthiya Velan Katanum Vivasayikalin Tharkolaikalum Article By Dr. P. Anpalagan இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை - முனைவர் பு.அன்பழகன்Mjhuk;: GoI (2021): “Accidental Death and Suicides in India 2020,” National Crime Record Board, Government of India.
ஆனால் இது சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே விவசாயிகளின் தற்கொலைகளை இது தடுக்கத் தவறிவிட்டது.  அதே சமயம் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களும், வேளாண் பொருள்களுக்குத் தகுந்த விலை கிடைக்காததாலும், விவசாய இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெறக் காரணமாக அமைந்தது.  2006ல் விவசாயிகளுக்கான புனர்வாழ்வு தொகுப்பு அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை நடந்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.  2008ல் வேளாண் கடன் துடைப்பு மற்றும் கடன் நிவாரண திட்டம் (ADWDRS) துவக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டது. ஆனால் இதுவும் தேவைப்படுபவர்களுக்குக் கடன் அளிக்கவில்லை. பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா 2016ல் துவக்கப்பட்டு விவசாயிகளுக்குக் காப்பீட்டு மூலம் பயிர் இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்பட்டது.  ஆனால் 2016 நவம்பரில் பணமதிப்பீட்டு இழப்பு கொண்டுவரப்பட்டதால் உயர் மதிப்புடைய பணமான ரூ.500, ரூ.1000 செல்லாமல் போனது. இந்த காலகட்டம் விவசாயிகளின் குறுவை பருவப் பயிர்செய்யும் நேரம் என்பதால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு 2017ல் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன் விளைவு விவசாய இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. 2019ல் உருவான கோவிட் பெருந்தொற்றினால் பல மாநிலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது, விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டதால் வேளாண் பொருட்கள் சந்தை படுத்த இயலாமல் போனது இதனால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளானார்கள்.  2020ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் மத்தியில் பெரிய எதிர்ப்பினை உருவாக்கியது. குறைந்தபட்ச ஆதார விலையினை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் சுமார் ஓர் ஆண்டிற்கு நடத்தப்பட்டதால் 2021ல் இந்த சட்டங்கள் ஒன்றிய அரசினால் திரும்பப் பெறப்பட்டது. தற்போது (2022ல்) உக்ரைன்-ரஷ்ய போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டினால் உணவு பணவீக்கம் அதி அளவிற்கு உயர்ந்துள்ளது.  இதனைக் காரணம் காட்டி கோதுமை ஏற்றுமதியினை ஒன்றிய அரசு தடைசெய்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு அரசு கொள்கைகள், இயற்கைச் சீற்றம் போன்ற காரணங்களினால் விவசாயிகள் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றனர் இதன் விளைவு தற்போதும் விவசாயத் தற்கொலைகள் ஆண்டிற்குச் சராசரியாக 10000க்கு மேல் தொடர்ந்துகொண்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்போது வேளாண் உற்பத்திச் செலவான C2+10% உடன் எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையான 50% செலவினைக் கணக்கில் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளுக்கான கடன் அளித்தாலும் தற்போதும் மூன்றில்-ஒரு பங்கு விவசாயிகள் முறைசாராக் கடனைப் பெறுகின்றனர் எனவே தனியார் கடனையும், வட்டியையும் முறைப்படுத்தவேண்டும்.  விவசாயக் கடன்களைத் தக்க நேரத்தில் நீக்குப்போக்குடன் எளிய வழிமுறைகளைக் கையாண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதுபோன்று விவசாயிகள் பயிர் தொழிலில் அதிக இழப்பினைச் சந்திக்கின்றனர் இதனைத் தடுக்க வேளாண் ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் (தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 விழுக்காட்டிற்குக் கீழ் ஒதுக்கப்படுகிறது).

References :
Avinash Kishore, Suriti Saini and Muzna Alvi (2022): “Assessing Direct Benefit Transfer of Agricultural Subsidies in Bihar and Odisha,” Economic and Political Weekly, Vol 57 (16), pp 36-42.

Dayandev C Talule (2021): “Sucide by Maharashtra Farmers: The Signs of Persistent Agrarian Distress,” Economic and Political Weakly, Vol 56 (51), pp 46-55.

Dipanjana Roj (2021): “Farmer Suicides in India, 1997-2013 Taking Stock of Data, Arguments and Evidence,” Economic and Political Weekly, Vol 56 (5), pp 50-60.

Economic and Political Weekly, Editorial (2021): “Government Policies Drive Farmars to Penury,” Economic and Political Weekly, Vol 56 (38), p 7.

GoI (2022): “Three Years of Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) – Press Information Burea,” Ministry of Infromation and Broadcasting, March 11, 2022, Government of India.

Kavitha H N, Pramod Kumar, P Anbukkani, R R Burman and P Prakesh (2021): “Income Support Schemes: Evaluation of PM Kishan vis-à-vis State Government Scheme,” Economic and Political Weekly, Vol 56 (34), pp 13-17.

NABARD (2018): “All India Rural Finanical Inclusion Survey 2016-17,” National Bank for Agriclture and Rural Development, Mumbai.

Niharika Pandya, Divya Veluguri, Aditi Roy, Poornima Prabhakaran and Linasay M Jaacks (2021): “Economic Impact of the 2020 COVID – 19 Lockdown on Indian Farmers,” Economic and Political Weekly, Vol 56 (50), pp 31-34.

Pradynt Guha and Tiken Das (2022): “Farmer’s Suicides in India,” Economic and Political Weekly, Vol 57 (5), pp 13-16.

Shromona Ganguly Mohua Roy (2021): “Development Banks and the changing Contour of Industrial Credit in India,” Economic and Political Weekly, Vol 56 (49), pp 50-57.

Shubham Sehal (2021): “Banking Sector Reforms of 1991 and Agricultural Credit,” Economic and Political Weekly, Vol 56 (50), p 5.

Sthanu R Nair (2022): “Rethinking Agrarin Susides in India,” The Indian Express 8.4.2022.

Sukhpal Singh, Manjeet Kaur and H S Kingra (2021): “Agrarian Crisis and Agricultural Labourer Suicids in Punjab,” Economic and Political Weekly, Vol 56 (13), pp 49-56.

ஆய்வுத்தடம்: தமிழ் நாவல்களில் – தற்கொலை (உளப்பகுப்பாய்வு நோக்கு) – முனைவர் சு.கணேஷ்

ஆய்வுத்தடம்: தமிழ் நாவல்களில் – தற்கொலை (உளப்பகுப்பாய்வு நோக்கு) – முனைவர் சு.கணேஷ்

  (மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரை முழுநேர முனைவர்ப் பட்ட ஆய்வாளராக ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் செ.சாரதாம்பாள் அவர்களின் நெறியாளுகையின் செய்யப்பட்ட ஆய்வு. 2010 ஆண்டு ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டு, 2011ஆம் ஆண்டில் பொதுவாய்மொழித் தேர்வு நடத்தப்பட்டு…