இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார்



கணினியும் மாணவனும்


நம்மைப் பற்றிய விவரங்கள் மட்டுமின்றி எதிர் காலத்தில் நம் தேசத்துக் குடிமகனும் தொழில்நுட்பத்தில் முன்னேறியவராக இருக்க வேண்டும் என்பதற்காக நம் தாய் மொழியில், நம் தனிப்பட்ட வியாபாரங்களுக்கான தொழில்நுட்பம் என்று நமக்கு வேண்டுமென்றால் நாம் கணினையை மாணவர்களாக யோசித்துத் தானே ஆக வேண்டும்?

நாம் கணினியை ஒரு மாணவராக யோசிக்கின்றோமோ இல்லையோ பல நாடுகள் அப்படி யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில  மொழியிலும் சீன மொழியிலும்  செயற்கை அறிவு உச்சத்தில் இருப்பது  நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைஉ தரவு உலகத்தில் முன்ணனியில் இருக்க வேண்டுமானால் உலகின் அனைத்து மொழிகளிலும் கண்டிப்பாக செயற்கை அறிவுத் திறன்   கணினிக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று உலக நிறுவனங்கள் நினைக்கின்றன.  உலக நாடுகளும் அதை வரவேற்கின்றன.

ஏப்ரல் மாதம் வந்த முக்கியமான ஒரு செய்தி லேசர் சக்தியால் ஆன ஒரு ஆயுதத்தை இஸ்ரேல் நாடு காணொலி வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலர் 4க்கும் குறைவானசெலவில் இதை உருவாக்கியுள்ளது இதன் மூலம் தரை கடல் வானம் என்று அனைத்து விதமான எல்லைகளைப் பாதுகாக்க இயலும் என்ரு இஸ்ரேல் அரசு கூறிகிறது. அறிவியல் புனைவு கதைகளில் நாம் சிறுவராக படித்து ஆச்சிரிஅப்பட்ட ஆயுதங்கள் இன்று நிஜத்தில் இருக்கின்றது. அந்த அளவிற்கு வேகமாகக் தொழில்நுட்பம் மாறி வருகிறது. உலகையே மாற்றக் கூடிய வளர்ச்சியாக இது இருக்கின்றது. தொழில்நுட்பங்கள் ஒவ்வோரு தனிதேசத்திற்கும் ஏற்ப தனியாக உற்பத்தி செய்வதும், அவ்வாறு உற்பத்தி செய்வது விலை குறைவாக இருப்பதும், கணினித் தொழில்நுட்பத்தால் நம் புவியைக் காப்பாற்ற முடியும் என்ற காரணிக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இந்த செய்தியால் தெரிகிறது.

சரி பாடங்களின் சாராம்சத்திற்கு வருவோம்

எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் முதலில் போலவே , பாடத்தின் சாராம்சத்தைப் பார்ப்போம். இப்பாடநூலின் பாடங்கள், அறிமுகம், தொகுப்புரை இவற்றிற்கு இடையில் இணையச்சுட்டிகளாகவுன் சுட்டிகளாகவும், பாடத்தைப் படிக்க மாணவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் உங்களுக்குத் தெரியுமா பகுதிகளையும், பாடத்தில் சொல்லப்படும் கருத்தை, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமாகவும் வண்ணமயமாகவும் வரையப்பட்டப் படங்களும் குழு செயல் பாடுகளும் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வோரு [அகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கொடுக்கப்பட்டுள்ளது.

இனி சாரம்சத்தின் ஆராய்ச்சிக்கு வருவோம்

புவியியல் பாடத்தில் சாராம்சத்தை இங்கே பாடநூலில் உள்ள பகுதிகளை, கணினி என்னும் மாணவனுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு உள்ளது? ஒரு மாணவன் கணிய்யை ஆளும் திறன் எவ்வாறு உள்ளது என்ற இரு கேள்விகளின் அடிப்படையில் ஆராயலாம்.

கணினி என்னும் மாணவன்

கணினிக்கு நாம் கொடுக்க்கும் விவரங்கள்,பலவகைத் தரவுகளாக கணினி எடுத்துக் கொண்டு, அந்தத் தரவுகளை வைத்து ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய உதவுகின்றது. கணினி செய்யும் செயல் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக இருக்க வேண்டும். பூளோகப் பாடத்தில் வானிலைபற்றிய தரவுகளௌக் கொண்டு ஒரு எதிர்காலக் கணினியால் என்ன செய்ய இயலும்? 

இன்றையக் கணினிகள் வானிலையையும் காலநிலையையும்,, தங்களுக்குக் கொடுக்கப்படும் தரவுகளைக் கணக்கிட்டு காலநிலையை துல்லியமாக கணிக்க வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றது. தரவுகளின் தரத்தைக் கொண்டு சூழவியியல் பாதிப்புக்களையும் கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. 

நாளைய கணினியின் வேலை. கொடுக்கபட்டுள்ள தரவுகளால், வரப் போகும் ஆபத்துக்களை ஆராய்ந்து, ஆபத்திலிருந்து காப்பாற்ற மட்டுமல்லாமல், ஆபத்தைக் களை களைந்து சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் வகையில் தரவுகளை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். சாதகமான சூழ்நிலைக்கான தரவுகளை மேம்படுத்தி சாதகமான விளைவுகளை வளர்ச்சிப் பாதையில் அதிகப் படுத்த வேண்டும். இந்தப் பணியை கணினி சிறப்பாகச் செய்ய

சமூகவியல் பாடத்தின் விவரங்கள் தரவுகளாக மாறினால் உதவி செய்யுமா?

 

கற்றலின் நோக்கங்கள்அறிமுகமும் தொகுப்புரையும்செயல்பாடுகள்கருதுகோள்உங்களுக்குத் தெரியுமா?
சிறப்புபுரிதலுக்கான வகைப்படுத்துதல், வகைப்படுத்தியவற்றை ஆக்கப்பூர்வமாக பயன் படுத்துதல்உலகமயமாதல் பற்றிய சிந்தனைமாணவர்கள் கல்ந்துரையாடலில் ஈடுபடுதல், கற்றலில் தங்கள் பங்கை முழுமையாகச்வானிலை காலநிலைஆகியவற்ற்றின் அடிப்படை அறிவைப்புகுத்தலும்,அதன் வழி பொதுஅறிவையும் இணையப் பயன்பாட்டை வளர்த்தல்பொது அறிவை வளர்க்கும் விஷயங்கள்
செலுத்துதல்
தேவையான மேம்பாடுபொதுவான விளக்கத்தைத் தாண்டி, கால லை, வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழி காட்ட வேண்டும்வெப்பச் சலனத்தால், அறிமுகப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புக்கள் பற்றிய தரவுகள் தரவுகளை சேகரிக்கும் வகைகள்______________காலநிலை வானிலை பற்றிய நுண்தகவல்கள், இயற்கையை பாதுகாப்பிற்கான தகவல் தேடல்கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்து ஆபத்துக்களை கணிக்கவும், ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகளும்
இயற்கை சக்திகளை துல்லியமாக அளவெடுக்கும் முறை
பின்னூட்டம்செயல்பாடுகள் மாணவர்களின் கற்றல் ஈடுபாடுகளை வளர்த்தாலும் கணினியோடு இணைந்து செய்யும்பாடத்தின் கருதுகோள் அடிப்படையை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
நாளையக் கணினி இதைவிட இன்னும் அதிமானத் தகவல்களை
இன்றைய கணினிகள் பெரும்பாலும் மேல் கொடுத்துள்ள பணிகளை செவ்வனே செய்கின்றது. அதனால் பின் விளைவுகள்
செயல்பாடுகளை உருவாக்கலாம்
இது மாணவருக்கும், கணினியின் செயற்கை அறிவுத் திறன் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்
நமக்குத் தரலாம்இன்றைய கணினிகள் பெரும்பாலும் மேல் கொடுத்துள்ள பணிகளை செவ்வனே செய்கின்றது. அதனால் பின் விளைவுகளை கணக்கிடும் புள்ளி விவரம் நமக்குக் கிடைக்கு

நம்முடைய திறன்பேசிகளைப் பயன்படுத்தி, நாம் நமது வானிலை அறிக்கைகளை இப்போது பெற்றுக் கொண்டு இருகின்றோம் தான்? ஒரு வெப்பமானி செய்த வேலையை நம் கைபேசி செய்கிறது.

IBM நிறுவனம் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளத் தகவலில் கோரானா காலத்தில் வானிலையை அரிவிக்க வேண்டிய அறிவிப்பாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியிருந்ததால், பல விதமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும் அதிலும் முக்கியமாக மெய்நீட்சி மெய்ம்மை(augmented reality) தொழில்நுட்பம் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.OTT (Over-The-Top) technology என்ற முழுக்க முழுக்க இணைய வழி சார்ந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கின்றது. சமூக வலைதளங்கள், குறுஞ்செயலிகள் ஆகியவை மூலம் உடனடியாக வானிலை செய்திகள் தனி மனிதனை அடையும் வண்ணம் வேலை செய்கின்றன என்ற விவரத்தையும் கூறுகின்றது. 

செயற்கை அறிவுத் திறனை பயன்படுத்தும் விதமாக ஒவ்வோரு வினாடியும் வானிலை விவரங்கள் துல்லியமாக, சேகரிக்கப்படுவது மட்டுமல்லாமல் , வானிலை அறிவிப்பாளரின் குரலில் உருவாக்கப்பட்டு காணோலிகளாகவும் வெளியிடப்படுகின்றன என்று விளக்கியுள்ளது. இது மட்டுமல்ல 

Weather InSight என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை வியாபாரநிறுவனங்களுக்காக இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வியாபாரநிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான காலநிலை வானிநிலை அறிக்கைகளைத் தாங்களே தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடியும். தொலைக்காட்சி நிலையங்கள் தங்கள் பார்வையாளர்களிடமிருந்து வானிலை சம்ம்பந்தமான புகைப்படங்கள் காணொலிகள் விவரத்தை வாங்கி ஒரு ஊடாடும் அனுபவமாக வானிலை அறிக்கைகளை உருவாக்குகின்றது.

2020 களில் இப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் வந்து விட்டது என்றால்? இன்னும் இருபது ஆண்டுகளில் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்? 

world meteorological organization( உலக வளிமண்டலவியல் நிறுவனம்) எதிர்கால வானிலை தொழில்நுட்பம் பற்றி அதனுடையத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடும் போது, தேசிய சர்வதேச அளவில் வானிலைத் தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளுக்கானத் தொழில்நுட்பமும், கொளவு தொழில்நுட்பம் மூலம் தரவு பகிர்தலும், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கைகளும் மிக முக்கியமான பங்கை அடுத்துவரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம் என்றும் அதற்குத் தேவையான திறன்மிக்க வானிலை ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது தலையாயப் பொறுப்பு என்றும் கூறுகின்றது.

கணினியை ஆளும் மாணவன்

கற்றலின் நோக்கங்கள்அறிமுகமும் தொகுப்புரையும்செயல்பாடுகள்கருதுகோள்உளுங்களுக்குத் தெரியுமா?
சிறப்பு
மேம்படுத்துதல்
பின்னூட்டம்

மேலே சொன்ன தகவல்கள் போன்ற செய்திகள் சமூகவியல் பாடத்தில் இல்லை என்பது தவிர, அப்படிப்பட்ட தகவல்களை எப்படிப் பெறுவது? அப்படிபெறப்படும் தகவல்களில் சரியானத் தகவல், தகவலின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்வது என்ற விவரங்களும் இல்லை. இது பாடத்தயாரிப்பாளர்களைக் குறை கூறுவதற்காக எடுத்துச் சொல்லப்படவில்லை. இன்றைய ஆசிரியர்களின் வேலை எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதையும் ஒவ்வோரு பாடத்திலும் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமும், துறை சார்ந்த கணினி த் தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வும் இருக்க வேண்டும் என்பதே!

என் தாயார் அண்மையில் கூறினார், இரண்டாம் படிக்கும் மாணவர் ஒருவர் எந்நேரமும் திறன்பேசியில் விளையாடுவதில் நாட்டம் கொண்டவர். ஆனால்கடந்த இரு ஆன்டுகளாக இணைய வழி பாடங்கள் நடத்தப்பட்டக் காரணத்தால் இப்போது திறன்பேசி என்றாலே அலறி அடித்து ஓடுவதாக! இதைக் கேட்கும் போதும் எழுதும் போதும் புன்னகைக்கிறேன் தான். ஆனால், கணினி வழி, திறன்பேசி வழி பாடம் நடத்துவதால் மட்டும், அந்தப் பாடம் கல்வி 4.0வின் பகுதியாக மாறிவிடுமா?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 84 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 84 – சுகந்தி நாடார்



சொன்னதே சொல்லும் கிளிப்பிள்ளை கணினி

சொன்னதே சொல்லும் கிளிப்பிள்ளை கணினி

சொன்னதைச் செய்யும் சுப்பாண்டியும்

கணினி தான். நம் மாணவர்களின் மூளைக்கும் மனித மூளையைப் போலவே செயல்பட விழியும் நம் கணினிக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. பாடநூல்களின் பொருண்மைகளின் வழி நாம் இப்போது இவை இரண்டையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்து வருகின்றோம்.

நம் மாணவர்களும் நம் பாடநூல்களில் உள்ள பொருண்மைகளில் எவ்வாறு தேறுவர் என்பதை பாடங்களிலுள்ள மதிப்பீட்டு வினாக்களின் அடிப்படையில் பார்த்து வருகின்றோம்.

அடுத்து சமூகவியலில் குடிமையியல் அலகு 2 குடிமக்களும் குடிஉரிமையும் என்ற பாடத்தைப் பார்ப்போம் இப்பாடத்தின் கற்றல் நோக்கங்களாக குடிமக்கள் குடியுரிமைக்கான பொருளையும் வரையறையும் அறிதல் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் இந்தியக் குடியுரிமை பெறுதலும் நீக்குதலும் வெளிநாட்டுக் குடியுரிமைத் தன்மை குடி மக்களின் உரிமைகளும் பொறுப்புக்களும் என்று பாட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடத்தின் விவரங்கள், ஒருவர் இன்று இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளும் அடிப்படை விவரங்களைக் கொண்டுள்ளன/ செயல் முறைப் பயிற்சிகள் குறைவே

செயல்பாடு
%
இவற்றை முயலுக
%
உங்களுக்குத் தெரியுமா?
%
பல்வகை திறநெறி வினாக்கள்
%
இணைய செயல்பாடு
%
குறிப்பு
%
சிந்திக்க
%
கணினி10010010090-10010010090-100
ஆசிரியர்90-10090-10090-10080-10090-10090-10090-100
மாணவர்35-10035-10035-10035-10015-10035- 10035- 100

இப்படி ஒவ்வோரு பாடமாகப் பார்த்து வரும் போது சென்ற வாரம் நாம் பகுத்தாய்வு செய்த பாட விவரங்களில், கணக்குப் பாட விவரம் மட்டுமே கணினிக்கு ஏற்ற பாடமாக தெரிந்தது.

பாடநூலில் உள்ள விவரங்களை விட இன்னும் அதிகமாகவே இன்றையக் கணினி விவரங்களைத் திரட்டி வைத்துள்ளது. ஒரு மொழியில் மட்டுமல்ல, உலகில் உள்ள பல மொழிகளில் இத்தகையத் தகவல்கள் கிடைக்கின்றன உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் விக்கிப்பீடியாவை சென்று பாருங்கள், அதன் விவரங்கள் எத்தனை மொழிகளில் இருக்கின்ற்ன என்று.எனவே மற்றப்பாடங்களின் விவரங்கள் அனைத்தும் கணினிக்கு ஏற்கனவேத் தெரிந்து இருக்கக் கூடும், கணக்குப் பாடத்தில் உள்ள பயிற்சிகள் கணினியின் முடிவெடுக்கும் திறனை சோதிப்பதால் கணினியின் அடிப்படை செயல்பாடுகளை செய்ய கணக்குப் பாடம் ஓரளவு உதவி செய்யலாம். நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கின்றேன்.

இன்று நடமாடும் கலைக்களஞ்சியமாக நம் கணினி திகழ்கிறது, அதில் நம் பாடப்புத்தகத்தில் வரும் விவரங்கள் மட்டுமல்ல்ல,பாடநூலில் வரும் விவரங்களுக்கு எதிரான கருத்துக்களும் உள்ளன அறிவியல் சமூகவியல் வரலாறு புவியியல் என்று எடுத்துக் கொண்டால். இறந்தகால நிகழ்கால விவரங்கள் மட்டுமின்றி, நாளைய நிகழ்வுகள் பற்றிய கணிப்புக்களும் கணினி வாயிலாக நமக்குக் கிடைக்கின்றது.

நம்முடைய பகுத்தாய்வில் நாம் கண்ட பாடங்களின் சாராம்சத்தை நாம் இப்போது ஆராயாலாம்.

இன்று நாம் கணினி என்று பார்க்கும் போது, தகவல்கள் வெறும் உரை வடிவில் மட்டுமா இருக்கின்றது.? இப்பாடங்களில் பொதுவாக கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எழுத்து வடிவில் உள்ள தரவுகள் கணினிக்கு கற்பிக்க போதுமா?

பாடப்புத்தகங்களில் வண்ண வண்ண படங்கள் இருக்கின்றது தான். கற்றலின் குறிக்கோளோடு ஒத்துப் போவதற்கான பிரிவுகளாக பாடப்பகுதி பிரிக்கப் பட்டு இருக்கின்றது தான். ஆனால் கணினியும் நாமும் கைகோர்த்து பயணம் செய்யும் இந்தக் காலக்கட்டத்தில், கணினிக்கு உரை வழியாக செய்தி மட்டும் கொடுத்தால் போதுமா?

ஏற்கனவே கவனச்சிதறலில் தங்கள் நேரத்தை விரயம் செய்யும் மாணவர்களுக்கு, உரையைத் தாண்டி எந்தந்த விதமாக நாம் பாடங்களைக் கொண்டு போகலாம் என்று யோசிக்க வேண்டி இருக்கிறோம்.

இணையம் வழி காணோலி மட்டும் இட்டு விட்டால் போதுமா? சில பொருத்தமான இணையச் சுட்டிகளைக் கொடுத்தால் போதுமா?

https://www.christophtrappe.com/alexa-podcasts/ என்ற தளத்தில் சென்று பாருங்கள்? ஒரே செய்தியை எத்தனை விதங்களில் ஒரு தகவலைக் கொடுக்கின்றனர். நாம் கொடுக்கப்பட்டுள்ள தகவலை மேலோட்டமாக வாசிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று கூட கணக்கிட்டுச் சொல்கின்றனர். ஏன் வாசகர்களின் கவனச் சிதறலை கணக்கில் கொண்டு, அவர்களின் வாசிப்புத் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக ஒருவர் இணையத்தில் உள்ள செய்தியை வாசிக்கத் தோராயமாக எவ்வளவு நேரம் ஆகும் என்று கூடச் சொல்லி ஒருவரை இணைய தளத்திற்கு வருகை புரிய ஊக்குவிக்கின்றனர்.

ஒரு தளத்தில் கொடுக்கபடும் செய்திகள் மெய்யோ, பொய்யோ செய்திகளை உடனுக்குடன் மாற்றுவது மிக எளிது. ஆனால் பல துறை வல்லுனர்களின் ஆராய்ச்சியில் உருவாக்கப் படும் பாடநூல் மாணவரின் பயன் பாட்டிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப உடனடியாக மாற்ற இயலாது.புதிய செய்திகளை உடனுக்குடன் இட இயலாது. ஒரு தனி மாணவத் தேவைக்கு ஏற்ப பயிற்சிகளை வேறுவிதமாக மாற்றி அமைக்க இயலாது.பாடப்புத்தகம் என்பது அச்சுவடிவில் இருக்கும் போது அது மாற்ற இயலாததாகத் தானே இருக்கின்றது.

புதிய தகவல்களை சேர்க்க ஏதுவாக பாடங்கள் இருக்க வேண்டாமா? புதிய புதிய பாடங்களை திட்டமிட்டு ஒவ்வோரு முறை உருவாக்கி அதற்கேற்றவாறு ஆசிரியர்களைப் பயிற்சிக் கொடுப்பதற்கு எவ்வளவு பொருள் செலவு? எத்தனை பேருடைய உழைப்பும் நேரமும் இங்கு முதலீடு செய்யப்படுகின்றது, இந்த மூன்று முதலீடுகளும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகலாமா? இல்லை களர் நிலத்தில்விழும் விதைகளாகாலகலாமா?

விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கு வந்து கற்றுக் கொள்ளும் மனித மாணவர்களுக்கான சிக்கல்களையே இத்தனை இருக்கும் போது, நம் பாடநூலில் உள்ள அடிப்படை அறிவுகளை ஏற்கனவே தாங்கி வரும்

கணினிகளுக்கு நாம் இன்னும் எத்தனைத் தடைகளைத் தாண்டி வர வேண்டும்?
மனித மாணவனாக இருந்தாலும் சரி, கணினியே நம் வகுப்பில் மாணவராக இருந்தாலும் சரி பாட விவரத்தரவுகள் பன்முகத் தன்மை கொண்டவையாகவும், தொழில்நுட்பமாற்றங்களுங்களுக்கு இணக்கமாக மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டுமல்லவா?

நம்முடைய பாடநூலில் சாராம்சம் ஏற்கனவே கணினிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் போது, ஏன் இன்னும் விவரம் கொடுக்க வேண்டும் என்று நாம் யோசிக்கலாம்? ஏற்கனவே வெறும் விவரங்கள் தரவுகளாக கொண்டு செயல்படும் கணினி அனைத்திலும் 100% என்பது நம் யூகம். ஏன் எனில் கணினியின் பல செயல்பாடுகளும் சரி நம்முடைய செயல்பாடுகளும் சரி ஆங்கிலத்தில் இருக்கின்றன்.

பொதுவாச் செயற்கை அறிவுத் திறன் கொண்ட ஒரு கணினிக்கு இந்த விவரங்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே இருக்கின்றன. அதனால் விவரங்களும் அதை சார்ந்த கணினியின் செயல்களும், செயல்களுக்கு அடிப்படையான முடிவுகளையும் எடுக்க ஆங்கில மொழியில் தான் அதிகம் இருக்கின்றது. இன்று செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தின் முன்னனியில் இருப்பது சீனாவும் அமெரிக்காவும் தான். அதிலும் செயற்கை அறிவுத் திறன் சார்ந்த தொழில்நுட்பங்களும் அதற்கான ஆராய்ச்சிகளும் அமெரிக்காவில் தான் நடந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் நம் பாடங்களில் உள்ள கேள்விகளை அப்படியேத் தமிழ் மொழியில் கேள்வியாகக் கேட்டால் கணினி சரியான பதில் சொல்லுமா? சந்தேகம் தான். ஏன் எனில் பாடங்கள் அனைத்தும் இன்று அச்சு வடிவிலேயே இருக்கின்றன.

இணையத்தில் தமிழ் மொழியில் கிடைக்கும் சொற்பத் தகவல்களும் நம் பாடப்பொருண்மையைச் சார்ந்ததாக இல்லை. அப்படியே பாடப் பொருண்மைகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதற்கான விடைகளை தமிழில் கணிக்கும் கணக்கீட்டு முறைகளை நாம் இன்னும் தமிழில் ஆழமாக ஆராய்ச்சி செய்யவில்லை.

தமிழ் மொழியில் செயற்கை அறிவுத் திறன் கண்டிப்பாக வளர வேண்டும்