கவிதை : என் மகள்(my daughter) - சூரியாதேவி - A Tamil Poetry - என் மகள் கவிதை, Daughter poem, அப்பா மகள் கவிதை - https://bookday.in/

கவிதை : என் மகள் – சூரியாதேவி

கவிதை : என் மகள் - சூரியாதேவி விண்ணகமும்  வியப்பில் மூழ்கிப் போகும் அவளது விரல் தொட்டால் மண்ணகமும் மாயையில் சாகும் அவளது மலரடிபட்டால் சிறுஉதட்டுப்புன்னகையோ தீ என்னும் வேந்தனை பூவாக மாற்றும் அவளது பால் முகத்தில் பட்ட நீர்த்துளியோ சிதறி…
Vasanthamana Varumai | Poetry | கவிதை | வசந்தமான வறுமை

கவிதை: வசந்தமான வறுமை

அலையில்லா ஆழ்கடல் அடியில் துளையில்லா புல்லாங்குழல்போல் சிறகில்லா பறவை நான் இங்கு சிரித்துக்கொண்டே வாழ்கின்றேன். மனிதர்களின் மாறுகின்ற மனம் இரக்கமில்லா இடும்பர்கள் இடையில் உறக்கமின்றித் தவிக்கின்றேன் உலகில் ஊரெல்லாம் சொந்தமென்றாலும் உதவிடத்தான் இன்று யாருமில்லை. வெளிச்சந்தான் விரயமாச்சு வாழ்வில் இருள் மட்டும்…
kavithai: poraalip pen - suriya devi a கவிதை: போராளிப் பெண் - சூரியாதேவி ஆ

கவிதை: போராளிப் பெண் – சூரியாதேவி ஆ

போராளிப் பெண்ணே நீயும் போராடு போராடு, எதிரியென்று எவன் வந்தாலும் சாய்த்துவிடு வேரோடு, உன் திறமை எதுவென்று தெரிந்துகொள்ள நீ ஓடு, வாய்ப்பு உன்னை நெருங்கிவராது தேடிச்சென்று நீ நாடு, சங்கத்தமிழ் பெண்ணே நீயும் சளைத்துவிட்ட பெண் அல்ல, சிங்கத்தின் பிடரியை…
தேதி அல்ல… வரலாறு கவிதை – சூரியாதேவி

தேதி அல்ல… வரலாறு கவிதை – சூரியாதேவி




எண்ணங்கள் எழுச்சிபெற்று எழுந்து நிற்கும் பேரோவியமாய்
வண்ணங்கள் பல தீட்டப்பட்டு வடிக்கப்பட்ட காவியமாய்
வாழ்க்கையை இன்பமயமாக்க இறுதிவரைப் போராடி
வேள்விகள் பல கடந்து உறுதியோடு வாதாடி
என்ன இந்த வாழ்வு என்றெண்ணி சோர்ந்து போகாமல்
எதையும் சாதிக்கும் என் நாட்டு பெண்மணிகள்
சாகசங்கள் பல நிகழ்த்தும் தன் நாட்டு கண்ணின் மணிகள்
வண்ணங்கள் இல்லாது போய்விட்டால் வானவில் ஏது
பெண்ணவள் இல்லாது போய்விட்டால் வாழ்கையே கிடையாது
ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று
அனைத்துத் துறையிலும் பெண்கள்
அனைத்துத் துறையிலும் பெண்கள்.

மார்ச் – 8 – 2023

முகவரி:

சூரியாதேவி ஆ
3/130, பாண்டியன் நகர் ,
சிவரக்கோட்டை,
திருமங்கலம் (தா),
மதுரை 625 706
அலைபேசி : 63795 25988

வீராப்பு  கவிதை – சூர்ய தேவி

வீராப்பு கவிதை – சூர்ய தேவி




காடு மேடெல்லாம்
கடந்து நடந்து
ஆடு மேச்ச ஆறுமுகத்துக்கு
கால் வயித்துக்
கஞ்சி குடிக்க நேரமில்ல;

சோம்பேறி பையன பெத்ததால
சூடு போட்டாப்புல
பேசினாலும்
தான் பெத்த புள்ளயாச்சே
அவனுக்கும் சேர்த்துதான் சோறு போடணும்;

காடு மேடெல்லாம்
கண்ணசந்து தூங்காம
நாலா பக்கமும்
ஆடு ஓடுமெனு
நட்ட நடு பகலுல ஒட்டு போட்ட
செருப்ப போட்டு ஓட முடியல;

பொண்ணு புள்ள ரெண்ட
கரசேர்த்தாச்சு
பொண்டாட்டியும் நீயும்
உட்கார்ந்து கஞ்சிய
குடியுமப்பானு
ஊரார் சொல்லியும்;

கேட்காம
காலு ரெண்டும் ஓடுதப்பா
மூணாவதா
சோம்பேறி பையன
கரசேர்க்கணுமுண்ணு;

இம்புட்டு செய்யுறயே
உம் மவனுக்கு
உனக்கென்ன கடைசியில
கஞ்சியா ஊத்தப்போரானு
கேட்ட ஊராருக்கு புரியும்படியா
ஆறுமுகம் சொன்னாரய்யா

கையும் காலும்
நல்லருந்தாபோதுமய்யா
கட்டையில போகும் வரை
இந்த கட்ட
கையேந்தாம வீரப்பா
பொழப்ப நடத்திப்புடும்னு.

– சூர்ய தேவி