தூக்கணாங்குருவி சிறுகதை – சுதா
பனைமர ஓலை இடுக்குகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்தது தூக்கணாங்குருவிக் கூடு.அந்தக் கூட்டில் ஒரு குருவி மட்டும் தான் வாழ்ந்துட்டு இருந்துச்சு. அந்தக் குருவிக்கு மனித குழந்தைகள் தான் ரொம்ப பிடிக்கும்..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளிக்கூடமா போயி குழந்தைகளை பார்த்து ரசிச்சிட்டு வரும். குழந்தைகளுக்கு பேர் இருக்கிற மாதிரி தனக்கும் பெயர் இருக்கணும்னு ஒரு ஆசை.அதனால அதுக்கு அதுவே க்ளஸினு பேர் வச்சுக்கிச்சு.
இப்படி ஒரு நாளைக்கு ஒரு பள்ளியின் போயி குழந்தைங்க பண்ற சேட்டைய ரசித்து வந்த க்ளஸி குருவிக்கு..பக்கத்துல இருக்குற ஒரு பள்ளியில் க்ளாட் னுஒரு பையன ரொம்ப பிடிச்சு போச்சு. க்ளாட்டும் அவனோட வகுப்பு தோழர்களும் உட்கார்ந்து சாப்பிடற மரத்துக்கு மேல எப்பவுமே இந்த தூக்கணாங்குருவி காத்திருக்கும்.
எதனால க்ளாட் மேல அந்த குருவிக்கு அவ்வளவு பிரியம்னு அதுக்கே தெரியல. ஒரு நாள் தவறாமல் வந்துரும் பள்ளிக்கூட விடுமுறை அப்டீனா க்ளஸி குருவிக்கு நாளே செல்லாது.குருவி பாக்குறது க்ளாட்க்கு தெரியாது.எப்படியாவது க்ளாட்க்கு அறிமுகமாகனும்னு ரொம்ப ஆசை க்ளஸி குருவிக்கு. சரி பள்ளிக்கூடத்துல ஒரு கூடு கட்டி இருக்கலாம் அப்படின்னு நினைச்சு. அந்த குருவி கூடு கட்டுற வேலைய ஆரம்பிச்சது.குழந்தைகளுக்கு பறவைகள்னா ரொம்ப பிடிக்குமே அதோட நான் தூக்கணாங்குருவி கட்டாயம் எல்லோரும் என்ன கவனிப்பார்கள் விரும்புவாங்க அப்டீனு நினைச்சது…இந்த சந்தோஷத்தோடவே க்ளாட் வகுப்புக்கு எதுத்தாப்புல தன்னோட கூட்டகட்டுச்சு.
கூட்ட கட்டி முடிச்சு அந்த குருவியும் அங்கேயே தங்கிடுச்சு..ஆனால் யாரும் அதை கவனிக்கலை எல்லோரும் அவங்கவங்க வேலைய பாக்க பரபரப்பா இருந்தாங்க. இந்த குருவிக்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்தது.க்ளாட் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் கிட்ட திட்டு வாங்கிட்டு வெளிய நிற்பான். அவனை பார்க்க இந்த க்ளஸி குருவிக்கு பாவமா இருக்கும்.சரி வகுப்புல அப்படி என்னதான் நடக்குது என்று பார்க்க ஆசையா க்ளாட் வகுப்பறைக்குள்ள போச்சு.இந்தக் குருவி உள்ள போனது கூட அங்கிருந்த எந்த குழந்தையும் ஆசிரியரும் கவனிக்கல. இது தாழ்வாரத்தில் இருந்த ஒரு கம்பில் உட்காந்துகிச்சு.இப்பவும் யாரு அத கவனிக்கல இத நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு.என்ன மனிதர்கள் இப்படி இருக்காங்க அப்படின்னு நினைச்சுது.
அங்க இருக்கிற குழந்தைங்க ரோபோக்கள் மாதிரி இருந்ததா அது நெனச்சது. டீச்சர் சொல்றத அப்படியே எழுதினாங்க யாரும் எதிர்க்கேள்வி எதுவும் கேட்கல சிரிப்பு சத்தமும் இல்லை ஏன் பேச்சு சத்தம் கூட இல்லை. இதுல இருந்து மாறுபட்ட குழந்தைங்க கண்டிப்புக்கு உள்ளானாங்க க்ளாட் மாதிரி. இதை எல்லாம் பார்த்த தூக்கணாங்குருவி ஒரு முடிவுக்கு வந்துச்சு. ரசிக்க தெரியாத குழந்தை எப்படி குழந்தைகளாக இருக்க முடியும். நாம இந்த இடத்தை காலி பண்றது நல்லதுனு நெனச்சு தான் கூடுகட்ட வேறு ஒரு மரத்தை தேடி பறந்திருச்சு.