ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டமும் கட்டுரை – அ.பாக்கியம்

ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டமும் கட்டுரை – அ.பாக்கியம்




ஆன்லைன் சூதாட்டம் பல இளைஞர்களின் வாழ்வை பலி கொல்கிறது என்பதினால் அவற்றை தடை செய்வதற்கு தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.

அக்டோபர் 1ஆம் தேதி அவசர சட்டதில் கையெழுத்திட்ட ஆளுநர் அந்த சட்டத்தை அமல்படுத்த விடாமல் சூழ்ச்சியில் இறங்கிவிட்டார்.

இத்தனை நாட்கள் கடந்த பிறகு சட்டம் காலாவதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆளுநர் சந்தேகங்களை கேட்டு திருப்பி அனுப்புகிறார். இவ்வளவு நாள் ஏன் அனுப்பவில்லை? என்ற கேள்வி எழுவது நியாயம் தானே.

சென்னை உயர்நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை செய்யும் முந்தைய சட்டத்தை ரத்து செய்தது.

உயர் நீதிமன்றத்தின் அவதானிப்புக்கு ஏற்ற வகையில் இந்த மசோதா இல்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா விளையாட்டு மற்றும் திறன் விளையாட்டு ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடுகளை சரியான முறையில் வரையறுக்க வில்லை எனவே இது விதி 19 (1)(ஜி)க்கு எதிரானது.

தடை என்பது விகிதாச்சாரமாக மட்டுமே இருக்க முடியுமே தவிர முழுமையாக இருக்க முடியாது என்று வினா எழுப்பி உள்ளார்.

அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் ஆகியவை வராது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை ஆளுநர் மேற்கோள் காட்டியுள்ளார்.

எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் ஆளுநர் கேட்கலாம். ஆனால் மசோதா காலாவதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்பியது ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவான நிலையோ என்று கருத தோன்றுகிறது.

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து EGaming Federation (EGF) தொடர்ந்து இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த வியாழக்கிழமை கவர்னர் மசோதாவின் சந்தேகங்களை கிளப்பி அனுப்பியிருந்தாலும் 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை 11:00 மணிக்கு இதற்கான விளக்கம் எழுத்துப்பூர்வமாக மாநில அரசு கொடுத்துள்ளது.

இந்த மசோதா திறன் விளையாட்டு மற்றும் வாய்ப்பு விளையாட்டு ஆகியவற்றை வேறுபடுத்தி விகிதாச்சார கோட்பாட்டின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை மட்டுமே தடை செய்கிறது என்றும் மொத்தமாக தடை செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளில் கேம் டெவலப்பர் எழுதிய கணினி குறியீட்டிற்கு எதிராக நபர் விளையாடுவதால் பந்தயம் மற்றும் சூதாட்டம் என்ற அம்சத்தில் ஒரு நபர் ஏமாற்றப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற முறையில் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

பந்தயம், பொது சுகாதாரம், திரையரங்குகள், நாடக நிகழ்ச்சிகள் ஆகியவை அரசியல் சட்ட ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இந்திய அரசியல் அமைப்பிற்கு இணங்கிய முறையில் தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் மாநில அரசு தெளிவு படுத்தி உள்ளது.

எத்தனை விளக்கம் கொடுத்தாலும் பாஜகவின் பிரச்சாரகராக செயல்படக்கூடிய ஆளுநர் அண்ணாமலைக்கு எப்போதும் கதவை திறந்து வைத்துக் கொண்டிருக்கும் ஆளுநர் மாளிகை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சருக்கு சந்திக்க நேரம் ஒதுக்காத மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

மொத்தத்தில் தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் தடைக்கு எதிராக செயல்பட்டு தமிழக மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்.

அ.பாக்கியம்

சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரியில் நடத்த முடிவு

சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரியில் நடத்த முடிவு




சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் பொது நூலக இயக்கக இயக்குநர் கே.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன், எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஜெர்மனிக்குச் சென்று அங்கு நடைபெற்ற ‘பிராங்ஃபர்ட்’ புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை சென்னையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று நாள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் புத்தக ஆசிரியர்களுடன் சந்திப்பு, உரையாடல் உள்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்தக் கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இது குறித்து இணை இயக்குநர் சங்கர சரவணன் கூறியது: சர்வதேச அரங்கில் வெளிநாட்டு எழுத்தாளர்கள், முன்னணி தமிழ் பதிப்பாளர்களைச் சந்திக்கவும், விளம்பரப்படுத்தவும் ஒரு சிறந்த பகுதியாக இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி அமைய உள்ளது. சர்வதேச எழுத்தாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியீட்டாளர்கள், இலக்கிய ஆசிரியர்கள் உள்பட பங்கேற்பாளர்கள் தங்களின் புத்தகங்களின் உரிமைகளை விற்க அல்லது வாங்கக்கூடிய வகையில் ‘உரிமைகள் மையம்’ என்ற நிகழ்வும் இதில் இடம்பெறும்.

கனடா, ஃபின்லாந்து போன்ற அயல்நாட்டு மாணவர்களை ஈர்க்கவும், உயர்கல்வி உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படும். எனவே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்கும். இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கண்காட்சியின் ஒரு பகுதியாக ‘தமிழ் மற்றும் உலகளாவிய புத்தகம் வெளியீடு’ என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஆண்டுகளில் புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்களுடன் இணைந்து புத்தகங்களை விற்பனை செய்வதற்கு 200-க்கும் மேற்பட்ட தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது சர்வதேச புத்தகக் கண்காட்சித் திட்டத்துக்கான தொடக்கமாக இருக்கும் என்றார் அவர்.

நன்றி: தினமணி

நாட்டில் வேறெங்கும் இல்லாத நிலையில் முஸ்லீம்களை தமிழ்நாடு அரசு, காவல்அடைப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச. வீரமணி)

நாட்டில் வேறெங்கும் இல்லாத நிலையில் முஸ்லீம்களை தமிழ்நாடு அரசு, காவல்அடைப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச. வீரமணி)

[இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாடு மட்டும் முஸ்லீம்களை காவல் அடைப்பு முகாம் ஏற்படுத்தி அடைத்து வைத்திருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த தப்லிகி ஜமாத் உறுப்பினர்களை இவ்வாறு அடைத்து வைத்திருக்கிறது. ஏப்ரல் 11இலிருந்து இவ்வாறு அடைத்து வைத்திருப்பவர்களுடன் பேசுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று…