“லியோ டால்ஸ்டாய்” வாழ்க்கை கட்டுரைகள் – நூலறிமுகம்
நூல் விமர்சனம்: விடாமுயற்சி வெற்றி தரும் – தமிழில்: ச. சுப்பாராவ் – மு தனஞ்செழியன்
தோழர் சுப்பாராவ் அவர்களுக்கு கொரோனா காலத்தில் கட்டாய வீட்டுச் சிறையில் உதிர்த்து இருக்கும். குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு கதைகளை வாசிக்கும்போது நாமும் நம் பால்யத்திற்குத் திரும்பி விடும் பொருட்டு கதைகள் நகர்கிறது.
இந்த தொகுப்பில் வெவ்வேறு உலக மொழிகளில் எழுதப்பட்ட இருபத்தி ஏழு கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இரு கஞ்சர்கள் ஹீப்ரூ மொழிக்கதை இரண்டு கஞ்சர்களின் கஞ்சத்தனத்தால் உணவு கூட உண்ணாமல் தண்ணீர் மட்டுமே குடித்து வாழும் கதை
கெட்டிக்காரத் தவளை– ஜெர்மன் நாட்டுக் கதை நரிக்கும் தவளைக்கும் வழக்கமான உரையாடலில் நரியை விட தவளை தரமானது என்று நிரூபிக்கப்படுகிறது.
இளையவளும், அரக்கனும் – ஸ்காட்லாந்து நாட்டுக்கதை ராஜா இறந்த பிறகு ராணியையும் மூன்று குழந்தைகளும் குடும்பத்திலிருந்து விரட்டி அரக்கனிடம் இருந்து தப்பித்து வாழும் கதை குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கக்கூடிய வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மகன்களை ஏமாற்றிய தந்தை – காஷ்மீரத்துக் கதை. இன்றைய குடும்பச் சூழலில் தந்தை மகன் உறவுகளில் சிதலம் ஏற்படுவதைக் குழந்தைகளுக்குக் கதையாக பதித்துள்ளது காஷ்மீரத்துக் கதை.
இன்னொரு காஷ்மீர் மொழி கதை தான் சூரியன் சந்திரன் காற்று விருந்துக்கு சென்ற கதை இதை ஏற்கனவே நான் எனது அம்மா சிறுவயதில் கூறியபோது கேட்டது. இப்பொழுதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது, வேறு நாடுகளிலிருந்து கதைகள் மக்கள் வழியாக பயணித்து இருப்பதும். இதில், என் அம்மா சொன்ன அதே கதை மாற்றமில்லாமல் வந்திருப்பது என் குழந்தைப் பருவத்தை மீண்டும் வருடிச் சென்றது.
எல்லோரும் மொச்சை சாப்பிட்டு இருப்போம். ஆனால், மொச்சையின் மேலே இருக்கும் வெள்ளை முளைப்பகுதியை. மொச்சைக் போட்ட தையல் – ஜெர்மனி நாட்டுக் கதையில் நமக்கு மொழிபெயர்த்து விளங்க வைக்கிறார் எழுத்தாளர் சுப்பாராவ்.
பொதுவாக சிறார் கதைகள் இருக்கும் நண்பர்களின் ஜோடி சேருமணங்கள் வித்தியாசமாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். அதையேதான் குழந்தைகளும் விரும்புகிறார்கள். அப்படியான ஒரு ஜப்பானிய நாட்டுக் கதைதான் – புத்திசாலி குரங்கு கரடி நண்பனும். தன் முதலாளி தன்னை கசாப்புக்கு அனுப்ப போகிறார் என்று அறிந்த குரங்கு தன் கரடி நண்பனை வைத்து தந்திரமாக பிழைத்து கொள்கிறது.
புத்தகத்தின் தலைப்பாக வந்திருக்கும் விடாமுயற்சி வெற்றி தரும் குறுங்கதை அரேபிய மொழி கதையாகும். இதில் ‘கேட்பவனுக்குக் கிடைக்கும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிற பழைய அரபு மொழியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அதை நண்பர் ஒருவர் சோதித்துப் பார்க்கச் செய்யும் முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமைகிறது. குழந்தைகளுக்கும் ஒரு செயலை தொடர்ந்து செய்யுமாறு நம்பிக்கையூட்டும் வகையில் கதை நகர்கிறது.
குழந்தைகள் விரும்பும் மாயாஜாலக் கதைகள் இல்லையே என நினைக்கும்போதே எனக்கு ஒரு கண் போனாலும் பௌத்த ஜாதகக் கதை வந்து நிற்கிறது. சங்கை வைத்துத் தான் வேண்டியதை நிறைவேற்றிக் கொள்பவனும் அதை அவனிடம் இருந்து பறிக்க நினைப்பவனுக்கு நிகழ்வும் துன்பமே கதையின் முடிவு.
இதில் வரக்கூடிய கதைகள் பெரும்பாலும் அண்ணன் தங்கைகளைப் பற்றியும், குடும்ப உறவுகளை பற்றியும், அதில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது பற்றியுமே, நகர்கிறது அதிலும் குறிப்பாகச் சீன தேசத்துக் கதைகள் பெண்களின் புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.
சிலி நாட்டுக் கதைகள் குறும்புத்தனம் செய்யும் குழந்தைகள் மன்னர் உடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன்னரைத் தோற்கடித்து விடுகிறாள்.
நார்வே நாட்டுக் கதைகள் ‘யார் வேலை கடினம்’ என்கிற கணவன் – மனைவி பேதம் பற்றிய புரிதலைக் குழந்தைகளின் மனதில் ஒரு விட்டில் பூச்சி போல ஒளிரச் செய்கிறார் எழுத்தாளர்.
அமெரிக்கன் கதை – ‘கேன்டியின் மதிநுட்பம்’ படிக்கும் பொழுது கொஞ்சம் பயமாகவும் சிறார்களுக்கு எதற்கு ஒரு கொலை பற்றிய கதை என்கிற கேள்வியும் மனதில் குழந்தைகள் உலகத்தில் சூனியக் கிழவியும், அரக்கனும் இல்லாமல் போக மாட்டார்கள். அதே வரிசையில் அரக்கர்களை அடுத்து சூனியக் கிழவி வந்து நிற்கிறாள் ரஷ்யத் தேசத்து கதைகளில்.
ஜெர்மனி தேசத்துக் கதை பனிரெண்டு சகோதரர்களும் டென்மார்க் சொத்துக்களைப் பணி ரோஜாவும் வரும் பனிரெண்டு அண்ணன்களும் ஒரு தங்கையின் மீதான வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள் இருந்தாலும் கதையின் முடிவு நம்பிக்கை ஊட்டும் விதமாகவே முடிகிறது இந்த கதைகளில் இருக்கும் ஒற்றுமைகள் பனிரெண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் கதைகள் வெவ்வெரு நாட்டிற்கு இவரும் வரிகளின் வாயிலாகப் பயணிப்பதற்கு இந்த இரண்டு கதைகளும் ஒரு சாட்சியாக இருக்கலாம்.
‘புத்திசாலி மரியா’ போர்ச்சுகல் நாட்டுக் கதை. ஒரு தவறை இழைத்துவிட்டு அதற்கு வருந்தும் போது. அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது என்பதை மரியா புரிந்து கொண்டு ஒரு பொம்மையை வைத்து நாடகம் செய்கிறாள். இதுவே குழந்தைகள் மீது கோபத்தையும் தவறுகளையும் ஏற்படுத்துவதற்கு முன்னான ஒரு நிதானத்தையும் பொறுமையையும் பற்றி உணர்த்தும் கதையாகும்.
ஜெர்மன் நாட்டுக் கதைகள் பெண்களின் புத்திசாலித்தனத்தைப் போற்றியும் மனைவிமார்களின் செயல்களை மட்டமாக நினைக்கும் கணவன்மார்களின் புத்தியைச் சம்மட்டியால் அடிக்கவும் செய்கிறது.
சீன தேசத்துக் கதை, ஸ்காட்லாந்து நாட்டுக் கதைகள் என உலக வரைபடத்தைக் குழந்தைகளுக்கான கதைகளின் வாயிலாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.
நார்மண்டி நாட்டுக் கதை சிவப்பு, வெள்ளை, கறுப்பு என்று நிறங்களின் மீது காதல் கொண்டேன் ஒரு மன்னர் மாய உலகில் அவரை ஏமாற்றி வாழும் அவருடைய சித்தி என்று கதை போக்கக் குழந்தைகள் விரும்பும் வண்ணங்களால் நிரம்பியுள்ளது.
ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை குழந்தைகள் விரும்பும் மாய உலகின் வீரர்கள் நிகழ்த்தும் கதைகளாக நீள்கிறது.
பிரான்ஸ் தேசக் கதை மூன்று நாய்கள் அண்ணன், தங்கை ஒற்றுமை பற்றியும் சொத்துக்களை சமபங்காக அண்ணன், தங்கை பிரித்துக் கொள்கிறார்கள்.
அயர்லாந்து நாட்டுக் கதை – சொந்தமாய்
ஒரு பனிக்கரடி குழந்தைகள் உலகில் எப்போதும் யாரும் மறைந்து விடவே முடியாத அளவுக்கு வண்ணங்களாக ஆகும் ராஜகம்பளம் கற்பனையாகவும் இருக்கும் வீட்டில் தன்னுடன் இருக்கும் பொம்மைகளை வைத்து குழந்தைகள் அட்டவணையில் எவ்வாறெல்லாம் விளையாடுவார்கள் என்று எதார்த்த கற்பனை வாதத்தை அயர்லாந்து நாட்டுக் கதை மூலமாக நாம் அறிய முடிகிறது.
இத்தனை கதைகளின் மொழிபெயர்ப்பை பார்க்கும் போது வியப்பாகவும் மலைப்பாகவும் தான் இருக்கிறது. பிறமொழிகளிலிருந்து கதைகளைக் கொண்டு வருவது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு டைம் பாமின் சரியான வயரை கண்டு பிடித்து வெட்டுவது போன்ற பரபரப்பு நிறைந்த வேலை. பிறமொழிகளில் உள்ள கருத்தையும் வருமொழியில் அடக்குவது சுலபமானதல்ல இருந்தாலும். அதை சரியாகக் கருத்து பிறழ்வு இல்லாமல் கொண்டு வந்த எழுத்தாளர் ச. சுப்பாராவ் அவர்களுக்கு அன்பும், மகிழ்ச்சியும்..
*நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில்: வசந்ததீபன்
நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்
நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?
நான் கைவிடப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன் ?
நான் பூஜை _ஹோமத்தில் அமங்களமாய் இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?
ஆனால் இதை ஏன் மறந்து இருக்கிறாய்,
என நீ இருக்கிறாய்,
நீ , நீ இருக்கிறாய்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்.
யோனியிலிருந்து பாயும் இரத்தம் எனது கெளரவம்
நான் இயற்கைக்கு சமானமானவளாக இருக்கிறேன்.
அதன் மீது முழு பிரபஞ்சம் தங்கியுள்ளது
நான் அந்த அச்சாக இருக்கிறேன்.
உங்கள் பிறப்பின் விளக்கமாக இருக்கிறேன்.
யாரை பூஜிக்க செல்கிறீர்களோ
நான் அந்த காமாக்யாவாக இருக்கிறேன்.
ஹிந்தியில் : பெயரற்றவர்
தமிழில் : வசந்ததீபன்
பகவத் ராவத்த்தின் மூன்று ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்
(1) பாறைகள்
நாலாபுறமும் பரவியது.
நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில்
ஒரு மனிதன்
புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து
தீயை எரிக்கிறான்.
பாறைகளின் முகங்கள் வெளிறிப் போகிறது
மனிதன் அவை எல்லாவற்றிடம் செய்தியற்று
சோதித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே
எழுகிறான் மற்றும் அவற்றில் ஏதாவது ஒன்றின் மேல் அமர்ந்து
தனது உலகத்திற்காக
மாவைப் பிசைந்து கொள்கிறான்.
தீ வேகமாக எரிகிறது
பாறைகள் முதல் முறை
தமக்கு முன்னால்
சில உருவாகுவதை பார்க்கின்றன.
இறுதியில் மனிதன்
எழுந்து நடக்கிறான் திடீரென்று
இதுபோல செய்தியற்று
பாறைகள் முதல் முறை தமக்கு நடுவிலிருந்து
சில கடந்து செல்கிறதை
உணர்ந்து இருக்கின்றன.
(2) மாறிய பருவத்தின் சுபாவம்
எப்போதிருந்து
பூமி மண்டலம்
இல்லாமல்
இருந்து கொண்டிருக்கிறது புவியியல்
ஏறிப் போயிருக்கிறது
உலகமயமாக்கலின் காய்ச்சல்
எப்போதிருந்து மறையத் தொடங்கியது
தாராள மனப்பான்மை
பரவியது பிளேக் போல
தாராளமயம்
எப்போதிருந்து நாசமாகிப் போயின
கிராமங்கள், தொழில்கள் மற்றும் நகரங்களின் திறந்தவெளி மைதானங்களின் சந்தைகள்
வீடுகளுக்குள் நுழைந்தது
முக்காடிட்ட சந்தைவாதம்
இது காரணமின்றி இல்லை என்று அப்போதிருந்து இயற்கையும்
பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்து
தமது நியமம், அறம்
மாற்றி இருக்கிறார்கள்
தமது நடத்தையும் இயல்பும்
இப்போது இங்கே பாருங்கள் என்று
தெரியவில்லை என்று
மகிழ்ச்சி அல்லது கோபம் இருக்கின்றன
இவை புதிர்
பங்கு தரகர்களின் தூக்கி எறியப்பட்ட சென்செக்ஸ் போல.
பலத்த மழை பெய்துள்ளது இந்த ஆண்டு.
ஏதோவொரு மிகப் பெரிய பணக்காரனாக
தமது செல்வத்தின் அடி
இது மாதிரி என்பது போல
பசித்த பிச்சைக்காரர்களுக்கு
ஏதோ ஒரு நாள்
பலவந்தமாக திணித்தபடி
உணவிட்டார் எல்லா தின்பண்டங்களை
அவர்கள் சாப்பிட்டுச் சாப்பிட்டு
இறக்காமல் போகும் அப்போது வரை.
ஏதோவொரு தண்ணீர் கோட்பாடு மட்டும் தனது பயிற்சிக்காக
காரணமற்று ஒருவர் கீழ் உத்தியோகம் பார்க்கிறது மேல்
அப்போது வரை பெய்தது
சவுக்கு மேல் சவுக்கு தொடர்ந்து
எப்போது வரை சுயமாக களைத்து தோற்று தூங்காமல் போனார்கள்.
பாருங்கள் மறுபுறம் இந்தக் காட்சியை
அத்தகைய மழையில், போதையில் அசைந்து
தன்னுடையதான குடிவெறியில் நிற்கின்றன நகராமல்
உயர்ந்த, தாழ்ந்த மலைகள்
நிலையான ஞானத்தைப் போல
தனதான பொய் ஆடம்பரத்தில்நின்று இருக்கின்றன
உயரமாக, உயரமாக எழுகிற
கட்டடங்கள்
மேலும் துக்கத்தை விடவும் அதிகமான துக்கத்தில்
மூழ்கி இருக்கின்றன
அனைத்து தாழ்ந்த குடியிருப்புகள்
பாய்ந்தோடுகின்றன அவற்றின் எல்லாக் கூரை வீடுகள்
இவர்கள் தான் இறக்க இருக்கிறார்கள் காற்றினால், தண்ணீரினால், நெருப்பால்
மாறிய பருவத்தின் சுபாவத்தால்
சில நேரங்களில் தாகத்தால்,
சில நேரங்களில் மூழ்கி
சில நேரங்களில் வாயுவால்
சில நேரங்களில் நெருப்பால்.
(3) இந்த அந்நிய நகரத்தில்
சிலர்
காயமடைந்து வெளியேறிஇருந்தார்கள்
வீட்டிலிருந்து.
கதை சொல்லும் மக்கள் சொல்கிறார்கள்
தண்ணீர் குடிப்பதற்கு
குவளை கயிறு வரை இல்லாமல் இருந்தது என்று.
அவரிடம் எதுவுமில்லாமலிருந்து
வாழ்க்கையைத் தொடங்கினார் அவர்
அந்நிய நகரத்தில்
மற்றும் உடல், மனம் ஈடுபாட்டோடு
பணம் சம்பாதித்தார்
பணத்துடன் மரியாதை
மரியாதையுடன் பெயர்
இந்த மாதிரி அவர் ஒரு நாள்
நகரத்தின் முதலாளியானார்
வாழ்ந்தார் முழு வயது
வெற்றிக் கொடியைப் பறக்க விட்டு
அவர் பலரக வாத்தியங்களின் இசையோடு
சொர்க்கவாசியானார்
முடிவுகள் திடமானதாக
அவர் எப்பவும் திரும்பிச் செல்லவில்லை
தனது வீட்டின் பக்கமாக
வீடு தான் வந்தது அவர் வரை
அவருக்கு வணக்கம் செலுத்தவும்
போற்றவும்.
ஒவ்வொரு கோட்டையின்
எந்த மாதிரி இருக்கிறது ஒரு
பெரிய கதவு
அதிலிருந்து
கோட்டை திறக்கிறது
அது போல
ஒவ்வொரு நகரத்திற்கும் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு
அது போன்ற
பெரிதான பகுதி
அதனாலே திறக்க இருந்தன
நகரின்
மறைவான கதைகள்
அந்த நாட்கள் தான் கொஞ்சம் மற்றும் இருந்தன
மக்கள் சொல்லிச் சொல்லி
மனம் தளர்ந்து போய்
இருக்கிறார்கள்
மற்றும் நேரத்தை நிந்தித்து நிந்தித்து
அது போன்ற ஏதாவது ஒரு
கதையின் சுவரிலிருந்து
முதுகில் தாங்கச் செய்கிறது
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக
ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில்
வீடற்றவராகி
ஒவ்வொரு வருடமும்
வெளியேறிச் செல்கிறார்கள் மக்கள்
நகரங்களின் உடைந்து நொறுங்கிய சாலைகள்
அழைக்கின்றன அவர்களை
அந்நிய சமையலறைகளின் பாத்திரங்கள்
அவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன
தட்டுகளின் எச்சில்
அவர்களை அழைக்கிறது
மென்மையான படுக்கை
விரிப்பதற்கு
அவர்களின் கைகள்
எதிர்பார்க்கின்றன
மற்றும் எப்போது புரள்கின்றன அவை
வீடுகளின் பக்கம்
அவர்களை மறுபடியும் வாழ வைக்கவும்
பின்னர் ஏதோ தண்ணீர் நிரம்பிப் போகிறது
பின்னர் ஏதோ விலங்கு
பகல் கர்ஜித்து நுழைகிறது
அவர்களின் வீடுகளில்
பல ஆண்டுகளுக்கு முன்பு
தமது நேரத்தின்
முழுவதும் யெளவனமுள்ள பையன்களைப் போல
நானும் வெளியேறி இருந்தேன் வீட்டை விட்டு
துணிப்பையில் சில காகிதங்களை வைத்து
ஆனால் விட்டுவிடுங்கள்
இந்த கதையில் எதுவும் புதிதாக இல்லை
நீங்கள் சொல்லுங்கள்
நீங்கள் எப்போது மற்றும் ஏன் வந்தீர்கள்?
இந்த அந்நிய நகரத்தில்.
ஹிந்தியில் : பகவத் ராவத்
தமிழில் : வசந்த தீபன்
பகவத் ராவத்
பிறப்பு : 13,செப்டம்பர் 1939
பிறந்த இடம் : டேஹர்கா கிராமம், டீகம்கட் மாவட்டம், மத்திய பிரதேசம்.
முக்கிய படைப்புகள் :
(1) ஸமுத்ர கே பாரே மேன் (1977)
(2) தீ ஹுஈ துனியா (1981)
(3) ஹுஆ கிஸ் இஸ் தரஹ் (1988)
(4) ஸுனோ ஹீராமன் (1992)
(5) ஸச் பூச்சோ தோ (1996)
(6) பிதா_கதா (1997)
ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்-ன் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில்: வசந்ததீபன்
(1) பெயரற்ற பறவையின் பெயர்
கங்கைநதி புளியமரத்தின் இலைகளில் மறைந்திருந்த
ஒரு பறவையின் வாய் இருளைப்
பேசுகிறது மிகு இனிப்புக் குரலில்
போகவில்லை என்ன?
போகவில்லை எதனிடம்?
மற்றும் பொழிகிறது மழை
பாதி தூக்கத்தில் கட்டில் _ படுக்கை சுருட்டி
வீடுகளுக்கு உள்ளே ஓடுகிறார்கள் மக்கள்
கொஞ்சம் சிடுசிடுப்புகள், கொஞ்சம் சந்தோஷம்
மேகங்கள் சூழ்ந்த அந்தகாரத்தில் மின்னுகிறது மின்னல்
கனத்து பெய்கிறது மழை
நீர் நிரம்பிக் போகிறது வயல்
திருப்தி ஆகிப் போகிறது முன்னோர்களின் ஆன்மாக்கள்
உடைவதில் தப்பிக்கிறது
மனதின் முதுகு தண்டு
சொல்கிறாள் பிச்சைக்காரி
இந்த பறவையின் குரலால்
வருகின்றன மேகங்கள்
வெகு தூரமான சமுத்ரங்களிலிருந்து எழுந்து
ஓ.. பறவையே
நீ பேசினாய் தொடர்ச்சியாக கிராமத்தில்
வீட்டில், பள்ளத்தாக்கில், வனத்தில்
கல்லாகிப் போன மனிதனின் மனதில்.
(2) யாத்திரை
நதிகள் இருந்தன எமது வழியில்
அவைகளை அடிக்கடி கடப்பதற்கு இருந்தது
ஒரு சூரியன் இருந்தது
அது மூழ்காமல் இருந்தது
எப்படி யோசித்து இருக்கிறாய் என அதற்குப் பிறகு
எமக்கு என்ன நடக்கும்
ஒரு காடு இருந்தது
நவம்பரின் வெயிலில் குளித்து இருந்தது
சில பூக்கள் இருந்தன
நாங்கள் அவற்றின் பெயர்கள் அறியாமல் இருந்தோம்
ஒரு வயல் இருந்தது
நெல்லினுடய
விளைந்து
அது கூரான அரிவாளால் தொடுதலோடு
இருந்தது சந்தோஷம்
ஒரு நீலப்பறவை இருந்தது
நெல்லிக்காய் மரத்தின் வளைந்த கிளையிலிருந்து
இப்போது பறப்பதற்கு தயாராக
நாங்கள் இருந்தோம்
விஷயங்களின் பழைய பொட்டலங்களை அவிழ்க்கிறோம்
எமது பசி மற்றும் களைப்பு மற்றும் தூக்கத்தோடு சண்டையிடுகிறோம்
தூசி இருந்தன தொடர்ச்சியாக பறந்து இருந்தது
அது எமது புன்னகையை மூடி மறைக்க முடியாமல் இருந்தது
ஆனால் எமது முடி நிச்சயம்
சணல் போல காணப்பட இருந்தது
குளிர் இருந்தது மலையின்
எமது எலும்புகளில் இறங்கியது
விளக்கு ஏற்றும் நேரமாக இருந்தது
எப்படி மலையின் மேல் எங்கே எங்கே
மறைந்து இருக்கின்றன ஒளி_ பூக்கள்
ஒரு கரடுமுரடான சாலை இருந்தது
தொடர்ச்சியாக எம்முடன்
ஆறுலைத் தருகிறது
நீ மிகச் சரியாக சேர்வீர் வீடு என்று.
(3) பணநோட்டு எண்ணும் எந்திரம்
கனவுகளை எண்ண முடிகிற அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
கனவுகள் அவை பூமியின் மேல் பரவுகின்றன
இருக்கின்ற பூக்களின் விதைகள்போல.
அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
அது ஆசைகளை எண்ண கூடியதாக.
அந்த பிரத்யேக அதிர்வு
அது அநியாயம் மற்றும் சித்திரவதைகளுக்கு விரோதத்தில்
பிறக்கிறது.
பீதி பிறக்கிறது பணத்தின் சலசலப்பு
யாரோ குடிக்கிறான் வெள்ளி கிண்ணத்தில்
மனிதனின் ரத்தம்
எமது கடின உழைப்பின் தேன் யாரோ குடிக்கிறான்
ஒரு வலையது தினமும் விழுகிறது எங்கள் மேல்
ஆனால் தெரியவில்லை
இந்த வலையின் ஒவ்வொரு நரம்பதை எண்ண முடியும்.
அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
காடாக இருக்கிற பிந்த்ரான்வாகர் போல
மற்றும் மரங்களை எண்ணுவது இருக்கிறது கடினம்
கடினமாக இருக்கிறது எண்ணுவது.
அன்பு மற்றும் கனவு மற்றும் ஆசைகளை
மனிதனின் கோபம் எரிமலைக் குழம்பாக மாற்றுகிறது
மற்றும் அதனுடைய அன்பிலிருந்து பரவுகிறது ஒளி
மலருகின்றன ரோஜாக்கள்.
அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
அது நட்சத்திரங்களையும் ரோஜாக்களையும் எண்ணி முடிய.
அவை மலருகின்றன மனிதனின் அன்பில்
இரவின் வனத்தில்
மற்றும் பகலின் மரக்கிளைகளின் மேல் எண்ணிக்கையற்று.
ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்
ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
பிறப்பு : 08.02.1964
பிறந்த இடம் : ச்சுரா, ச்சதீஸ்கட்
சில முக்கியநூல்கள் : அன்ன ஹைன் மேரே சப்த , மிட்டீ ஸே கஹூங்கா தன்யவாத் , பீஜ் ஸே ப்பூல் தக்.
விருதுகள் : சரத் பில்லெளரே புரஸ்கார், கேதார் ஸம்மான், துஷ்யந்த் குமார் புரஸ்கார், டாகூர் பிரஸாத் சிங் புரஸ்கார், நரேந்த்ரதேவ் வர்மா புரஸ்கார் மற்றும் ஹேமந்த் ஸ்மிருதி கவிதா ஸம்மான் போன்றவை.