kavithai: perunthee aval by dr jaleela musammil கவிதை: பெருந்தீ அவள் - Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: பெருந்தீ அவள் – Dr ஜலீலா முஸம்மில்

அவளே அன்பின் சொர்க்கமும் நரகமும் அவளே வாழ்க்கையின் தாகமும் தண்ணீரும் அவளே ஏகாந்தம் அவளே கொண்டாட்டம் அவளொரு தேவதை அவளொரு பிசாசு மேகமாகவும் கவிவாள் புயலெனவும் உருவெடுப்பாள் மழையாகவும் பொழிவாள் புயலாகவும் சுழல்வாள் இரகசியங்களை இறுக்கிக்கொண்டு இதழ் வழி புன்னகை விரிப்பாள்…
Appavin Mugangal Kavithai By Kannan அப்பாவின் முகங்கள் கவிதை - கண்ணன்

அப்பாவின் முகங்கள் கவிதை – கண்ணன்




வீட்டினுள் ஒன்று
வெளியே வேறொன்று
வெளியே சிரித்த முகம்
வீட்டினுள் கடுத்த முகம்
கையிலே பணமிருப்பின்
அவரைப் போல் யாருமில்லை
மாதக் கடைசியில்
காலடிச் சத்தத்திற்கே
வீடே மௌனமாகும்
திண்ணையில் பேசுகையில்
கேட்டே விட்டேன் அப்பாவிடம்
‘பாசமே இல்லையாப்பா?’
அப்பா சொன்னது
அப்போது புரியவில்லை
பணமில்லாப் பொழுதுகளில்
இணையர் என்னைக் கேட்கும் வரை
‘ஒங்கள விட்டுட்டா நான்
யாருக்கிட்டப்பா
கோவப்படமுடியும்?’

Itrupothal Poem by Era Thamizharasi. இரா. தமிழரசியின் இற்றுப்போதல் கவிதை

இற்றுப்போதல் கவிதை – இரா. தமிழரசி




வழுக்கு நிலத்தில்
பற்றிய கரத்தைப்
பட்டென உதறிப்பிரிதல்..
உணர்வுப் பெருக்கில்
இதயம் பகிர்கையில்
அலைபேசி இணைப்பைச்
சட்டெனத் துண்டித்தல்…
‘சாப்டியா’ எனும் கேள்விக்கு
நாகரீகம் கருதியேனும்
எதிர்வினா வினவாதிருத்தல்… பொருட்களை நேசித்து
மனித மனங்களை
கசக்கித் தலைசுற்றி
தண்டவாளத்தில் எறிதல்…. வாழ்க்கைக்கான அர்த்தமென
இறுமாந்து இருப்போர்க்கு
சில மணித்துளிகளைக்கூட
கொடையளிக்காது மௌனித்தல்…
சுவர்களை இணைக்கும்
அறைக்கதவுகளை
அறைந்தறைந்து சாத்தி
இதயக்கதவை
இற்றுப்போக விடுதல்..
அன்றாடம் புகைவதைவிட
அக்கினியில் மூழ்கி
அடர்வனத்தின்
அமைதி தழுவ நிற்கலாம்
நிராதரவாக….!

Poem by Yaazh Ragavan யாழ் ராகவனின் கவிதை

யாழ் ராகவனின் கவிதை




பாவாடை நாடாவை இழுத்துவிட்டு
கருப்பி என விளித்துப்போகும்
சேக்காளி மேல்
வசைமாரிப்பொழிந்த காலம் உண்டு
கொஞ்சலினூடே மூக்கு வழித்தபடி
பெத்தவளே முணுமுணுத்த கருவாச்சிக்கு
உதடு பிதுங்க
முட்டிநின்றிருக்கிறது அழுகை
கல்லூரிக் கேலியில்
தார்ரோடு ஆகுகையில்
மேலும் இருண்டதுண்டு
அகமும் முகமும்
சகக்காரிகளோடான சண்டையில்
எவளோ உரசிய கரிச்சட்டி
இப்போதும் இதயத்தில் உருள்கிறது
நரைகளின் வாய்க்கு அவலான
பெண் பார்த்த படலத்தில்
அத்தனை வெறுப்பு கருப்பின் மீது
கூடல் பொழுதுகளில் உவமித்த கருமை
இரவைவிட கனத்த
ஞாபகத்தின் காட்டில் சுமை
காலத்தில் வாய்த்த
படையல் பொழுதொன்றில்
அத்தனைக் கருப்பையும்
மொத்தமாய்த் திரட்டி
என் உளக்குமுறலை ஒத்திருந்தது
ஐயானாரின்
ஓங்கிய கைஅரிவாள்