நூல் அறிமுகம்: ரெட்இங்க்
ஆசிரியர்: சக. முத்துக்கண்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் அக்டோபர் 2021
விலை: ரூபாய் 95
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
பாரதி புத்தகாலயத்தின் அண்மை வெளியீடாக வந்துள்ள ரெட் இங்க் சிறுகதைத்தொகுப்பு சக. முத்துக்கண்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. கள்ளம் கபடமற்ற பிள்ளைகள் உள்ளங்களில் எழும் உணர்வுகளையும் அவை எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையும் முழுமையாக வெளிப்படுத்தும் சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடு
கதைப் பின்னலில் காணும் களங்கள் வேறு வேறு.
ஆனால் பள்ளிப் பிள்ளைகளின் உலகமே பின்னணி ஆகிறது வறுமையிலும் செம்மை, தடைகளைத் தாண்டி இலக்கை அடைய நினைக்கும் வேகம், ஆண்களின் குடிப்பழக்கம், பெண்கள் அவர்தான் மக்கள் வாழ்வு முழுமைக்கும் உண்டாக்கும் சிக்கல் இவற்றின் பின்னணியில் ஆசிரியர் மாணவர் உறவு, மாணவ ஆசிரியர் அன்பு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீதான அன்பும், அக்கறையும் கண்டிப்பும் கலந்து வெளிப்படும் பல கோணங்களை அறிமுகப்படுத்துகிறார் முத்துக்கண்ணன்.
மாணவர்கள் மீது கொண்டிருக்கிற அன்பை, அக்கறையை வெளிப்படுத்தும் போதெல்லாம் முத்துக்கண்ணன் நல்ல ஆசிரியர் ஆகிறார் மாணவர் மனநிலையை வெளிப்படுத்தும்போது மாணவன் ஆகிவிடுகிறார் காப்பரிச்சை, பீட்டி சார் ஸ்கூல் யூனிபார்ம், ஃபுல் ரவுண்ட், ரூல்ஸ் கேட்ச் போன்ற பிறமொழிச் சொற்களும், பேச்சு வழக்கும் மிகுதியாய் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளும் அளவு உயிரோட்டம் மிகுந்த நடை, இதயத்தைத் தொடும் எண்ண ஓட்டங்கள், காட்சி வர்ணனை, பாசப் பரிவின் பரிமாறல், பள்ளி நிகழ்வுகளை ரசனையாகவும் நகைச்சுவையாகவும் சொல்லுவதால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் பத்து கதைகளைப் படித்ததை சொல்லாமல் இருக்கமுடியாது.
சின்ன உள்ளங்கையை நெற்றியில் தட்டியபடி பெரிய மனுஷனாட்டம் நொந்து கொள்வான் ஆனாலும் கூப்பிட்ட சோர்க்கு அவன் வரும் வேகம் இருக்கே அகல விரித்த கண்களோடு கைகளை அசைத்து அவன் அடிக்கும் புளுகினிக் கதைகளைக் கேட்பதைவிட பார்க்கத்தான் ஆசையாக இருக்கும். வளராத வலதுகால் அதைப்பற்றி கவலைப்படாமல் அடிக்கடி மாடிக்கு வந்து அங்கு ஆசிரியரோடு பேசிப்பேசி அவருடைய நெருங்கிய தோழனாய்ப்போன ஐந்தாம் வகுப்பு படிக்கும் முருகேசு அவனுடனாகிய தன்னுடைய தோழமை உணர்வை உள்ளமுருக வெளிப்படுத்தும் கதை அவனே சொல்லட்டும்.
மனதில் வலியை ஏற்படுத்தும் கதை வாத்தியார்கள் தினம். தனியார் பள்ளிக்கு வேலைக்குப்போக மாட்டேன் என்ற வீம்பில் ஐந்து ஆண்டுகளைத் தள்ளிய குமரவேல் ஆசிரியராக வேண்டும் என்று தவம் இருந்தவன் தகுதித்தேர்வை தாண்டிய தகுதி இருந்தும் ஒரு மதிப்பெண் குறைந்ததால் பெயிண்டர் வேலைக்குத்தள்ளப்பட்ட காலக்கொடுமையைச் சொல்லும் கதை. டியூசன் நடத்திய அந்த வாடகை இடம் புத்தகம் வாசிக்கவும், நண்பர்கள் கூடிப் பேசவும் ஓர் இடமாக இருந்தது என்பது எல்லோரும் வழக்கமாகச் சொல்வது சம்பாதிக்காத காலத்தின் காயம் ஆற்றும் இடமாகவும் இருந்தது என்று சொல்லும் முத்துக்கண்ணன் தனித்துத்தெரிகிறார் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருப்பவன் ஆசிரியர் ஆவதற்கு தகுதி பெற்றிருந்தும் அவருக்கு தொடர்ந்த முயற்சியிலும் பணி கிடைக்காத கொடுமையை வெளிப்படுத்தும் விதம் படிப்பவரை நெகிழச் செய்கிறது ஆசிரியர் தினத்தை மறக்கமுடியாமல் செய்கிற கதை.
கலர் கோழிக்குஞ்சுகள்மீது பிள்ளைகளுக்கு இருக்கும் அளவுகடந்த ஆசையும் விளையாட்டு உணர்வையும் வைத்து பின்னப்பட்ட சிறுகதை கீச்கீச் கையிலிருந்த நோட்டுப் புத்தகங்களைப் போட்டு கலர்க்கோழி குஞ்சு வாங்கும் வியாபாரம் பள்ளி முழுவதும் நிறைந்து வழிகிறது. கணக்கு டீச்சர் பேக்கிலும் மூன்று குஞ்சுகள் பிள்ளைகளுக்கு தண்டனை ஒருபுறம் மறுபுறம் அதுபற்றிய பரவசமான பேச்சும் உரையாடலும் ஒரு வகுப்பில் பாடம் கூட அதுவாக இருக்கிறது செத்தவரை மெல்ல உயிர்ப்பித்திருந்தது. வகுப்பின் சிரிப்பு ஆசிரியரையும் தொற்றிக்கொள்ள ஒரு கோழிக்குஞ்சு வரைந்து கலர் அடித்துக் கொண்டாங்க என்று தொடரும் கதை கீச்கீச். புத்தகங்களை எடைக்குப்போட்ட பிள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கும் ஆசிரியர்கள் அதையே பெரிய அளவில் செய்யும் அதிகார சக்தியோடு நிறைவு பெறுகிறது.
தந்தை குடிகாரன் அவனிடம் அடியும் திட்டும் வாங்கி ஆத்திரத்தில் இருக்கும் தாய் இருவரிடமும் கிடைக்காத அன்புக்கு ஏங்கும் 10 வயது சிறுவன் கார்த்தி அன்பைத்தேடி பள்ளிக்கு வருகிறான் வீட்டில் நடந்த கொடுமையில் போதை மயக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை அரிவாளால் வெட்டிய மனைவியைக் காவல்துறை கைது செய்து கொண்டுபோனது. இது ஏதும் அறியாத தாய் மடி தேடும் பிள்ளைபோல் டீச்சரைத் தேடிவரும் பாலகனை அவன் மாம் அவன் மாமா இழுத்துச் செல்லும் காட்சி படிப்பவரை மனம் கனக்கச் செய்கிறது இதற்கு யார் பொறுப்பு என்பதை கேளாமல் கேட்கும் கதை டிராப்அவுட்.
நீ நாலாப்பு பெயில்றா இங்கு வந்து நில்லு இந்த ஒரு வார்த்தை அம்மாணவனுக்கு (பெயர் தான் ராசா) ஏற்படுத்தும் மன உளைச்சல்கள் அவமானங்கள் பல. செருப்பால் அடித்து சித்திரவதை செய்யும் தந்தை இறுதியில் இப்படி உன்னை பெயிலாகி கொன்னு போட்டாங்களே என்ற ஓலம் படிப்பவர் நெஞ்சைப்பதற வைக்கிறது. ராசா பிரிய மோடு எப்பொழுதும் சட்டைப்பையில் விளையாட வைத்திருக்கும் தேய்ந்துபோன நீலப் பந்து அதை வைத்து அருமையாக விளையாட கூடியவன் அவன்.
நீலப்பந்து செய்யும் சாகசங்கள் பக்கம் பக்கமாய் விரிகிறது. பெயில் ஆகி விட்டதால் தந்தை தரப்போகும் தண்டனையை நினைத்துப் பார்க்கிறான் அப்போதுகூட ஏலே எங்கப்பா நொக்கப் போறார்டா பந்து இருந்தா தூக்கி எறிஞ்சிடுவாரு. நீயே வச்சிரு. நாளைக்கு வர்றப்ப கொண்டு வா அப்போதுகூட பந்தின்மீது இருந்த பிடிப்பு அகலாமல் சொல்லும் வார்த்தைகள் இளம்பிள்ளையின் மனப்பாங்கை வரையும் சித்திரம் அல்லவா பருவ வயதில் பருக்கள் படுத்தும்பாடு எதிர்பால் நினைந்து உயரப் பறக்கும் கற்பனைச் சிறகுகள் அவர்கள் உணர்வுகளை ரசனையோடு வெளிப்படுத்துவது ஆசிரியருக்குக் கைவந்த கலை ஆகின்றது.
பதின்பருவ மாற்றங்களில் ஒன்று பரு தோன்றுதல். இதைக்கருவாக வைத்து பின்னப்பட்ட கதையில் மாணவர்களின் பதின்பருவ மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் படிக்கும்போது ரசிக்காமல் சிரிக்காமல் அவற்றைக் கடக்க முடியாது. வகுப்புக்கு புதிய மாணவியாகிய மெர்லின் வருகை மறுநாள் எச்.எம் வகுப்புக்கு வந்து மெர்லினைஅறிமுகம் செய்கிறார்
பிள்ளை சூப்பரா இருக்கு பிரச்சனை வரும்னு முன்னெச்சரிக்கை.
மெர்லின் வருவதற்குமுன் வந்ததற்குப் பின் என எங்களது ஹையர் செகண்டரி காலகட்டத்தை இரண்டாக பிரிக்கலாம். அகமது மெர்லின் பற்றி கவிதை எழுதி சங்கத்தில் வாசித்தான். ஆனால் வாசிக்காமல் கவிதைகள் எழுதிய நோட்டை பீரோமீது வைத்து பின் அதை எடுத்து மெர்லின் பெயரை கறுப்பு மையில் கிறுக்கி ஒரு பூ வரைந்த மாணவனின் செயல் சிறுகதையின் எதிர்பாரா முடிவு எனலாம்.
வளர் இளம் பருவ மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு உண்டாக்கும் உணர்வுகள் அவை தரும் எரிச்சல்கள் இனிய அனுபவங்கள் சில அவமானங்கள் அவற்றை மீறிய கற்பனைகள் கலந்து விளையாடும் பருவத்தில் உள்ள மாணவியின் அக உலகத்தை அழகாக விவரிக்கிறது ஜெயந்தி டீச்சர் சிறுகதை. இனி இப்படி மினி க்கிட்டு வரக்கூடாது (ராசாத்தி டீச்சர்) இந்த காயத்தை சுமக்க முடியாமல் ஜெயந்தி தவித்தாள்.
என்ன ஜெயந்தி டீச்சர் நீங்க என்ன சொல்றீங்க புது எச்.எம் கேட்டவுடன் டீச்சரின் முகம் வெளியேறி புடவை உடுத்திய ஜெயந்தி டீச்சர் முகம் அமர்ந்து கொண்டது போர்வைக்குள் ஜெயந்தி டீச்சர் கனவு மிதந்தது. எதை நினைத்தாலும் அதுவாக மாறமுடியும் என்கிற இளவயது வைராக்கியம் அழகிய கதையாகி நம்மை மகிழ்விக்கிறது. சில நாட்கள் விடுப்பில் இருந்து பின் பள்ளிக்கு வரும் பிளஸ் டூ மாணவி ஜீவிதா. தந்தை குடிகாரன் தாயை இழந்தவள்.
இத்தனை நாளா ஏன் வரல கல்ல ஆயப்போனேன் சார் படிக்கிறது பிளஸ்டூ ஞயாபகம் இருக்குல்ல நாளொன்றுக்கு 300 ரூபாய் கிடைக்கும் சார் இந்த வயதில் குடும்பக் கடனை அடைக்க வேலைக்குச் செல்லும் வயதுக்கு மீறிய பொறுப்புணர்வு மேலோங்கி நிற்பதை சொல்லும் உரையாடல் இது. தாயற்ற பெண் பொறுப்பற்ற தந்தை தந்தையின் வன்கொடுமைக்கு ஆளான அவலம் உள்வாங்கவே மனம் வலிக்கும் கதை சில்லிப்பு. விழிப்புணர்வுடன் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளச் சொல்லும் முயற்சிகள் இவை. 10 98 என்ற எண்ணை டயல் செய்தாள் என்ற அளவில் துன்புற்றவள் ஜீவிதா அந்நிலையிலும் அவளைத் தாங்கிப் பிடித்து உரிய நேரத்தில் உதவிகள் செய்யும் தேன்மொழி டீச்சர், மணிமேகலை, மோகனா தோழர் ஆகியோர் துன்ப இருளிலும் நம்பிக்கை தரும் கலங்கரை விளக்கங்கள். நம்பிக்கைச் சுடர்.
வீட்டிலும் பள்ளியிலும் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் மேலாக படிக்க வேண்டும் எனும் ஆர்வம் உந்தித் தள்ள பள்ளிக்குச் செல்லும் துடிப்பான ஒரு காலைப்பொழுதினை அந்தப் பெண் படும் அலைச்சலோடு சொல்வது மே ஐ கம் இன் சார் பாத்திரம் தேய்க்க குப்பை கொட்ட, டெஸ்ட் பேப்பர் வாங்க, ஊறுகாய் வாங்க என்று வகுப்புக்கு நேரம் ஆகிவிட தாமதமாய் வருவதற்குத் தண்டனை பெறவேண்டுமே என்ற திக் திக் மனதோடு வரும் மாரி என்ற பெண் கல்வி பெற எவ்வளவு பாடுபட வேண்டி உள்ளது என்பதற்கு ஏற்ற எடுத்துக்காட்டு இச்சிறுகதை.
அன்பு பண்பு எல்லாம் அரிதாகி விட்டது என்னும் எண்ணத்தைப் பொய்யாக்கி ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் அன்பை எல்லாம் வெள்ளைப்பூக்களில் காணலாம். ஆனால் அந்த அன்புள்ளம் கொண்டவர்கள் அடையும் துன்பம் அளவில்லாதது.
ஓனர் இல்லாத நேரத்தில் அரை கிளாஸ் டீ போட்டு சைடாக திட்டில் வைக்கும் போஸ் முற்றிலும் கைவிடப்பட்டவர்கள் இப்படி அழுக்கடைந்த சமூகத்தில் நண்பர்களாகி நிறைய பேசிக் கொள்கிறார்கள் ஆமாண்டா இப்படி வெளியூரிலிருந்து வந்த அனாதைகள் எல்லாம் ஒன்னு சேர்ந்துக்கிடுவோம் சமூகத்தில் அறியப்படாமல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் தருணங்கள் இவை.
எது நடந்தாலும் எப்படி இடர்ப்பட்டாலும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு சொல்லும் ஒரே அறம் நாங்கள் இருக்கிறோம் உயரப்பற என்கிற அரவணைப்பும் ஊக்கப்படுத்தும் உள்ளமும்தான் பிள்ளைகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் இணைந்த பள்ளிகளின் உலகத்தைப் பல வகைகளில் வரைந்த அற்புதச் சித்திரங்கள் இச்சிறுகதைகள் கல்விக்கூடங்களில் கண்டெடுத்த நிஜங்களைப் பதிவு செய்திருக்கும் பாங்கு அருமை. தமிழ்ச்சிறுகதை இலக்கியத் தரத்தை இன்னும் உயர்த்துவதில் சக.முத்துக்கண்ணன் அவர்களுக்கு நிச்சயம் பங்கு உண்டு.
முனைவர். பேரா.இரா.சாவித்திரி
மதுரை