உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையும் இந்தியாவின் நிலையும் உண்மையைத் தேடி – ஆயிஷா. இரா. நடராசன்

உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையும் இந்தியாவின் நிலையும் உண்மையைத் தேடி – ஆயிஷா. இரா. நடராசன்




நம் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அம்மையார் சமீபத்தில் பெருமிதத்தோடு குறிப்பிட்ட ஒரு விஷயம் உலக- கண்டுபிடிப்பு தரவரிசையில் நம் நாடு பலபடி முன்னேறி 40 வது இடத்தை பிடித்து விட்டது என்பது சர்வதேச கண்டுபிடிப்பு இன்டெக்ஸில் நம் நாடு 81 வது இடத்தில் இருந்து 40 வது இடம் நோக்கி முன்னேறிவிட்டது என்பது சிறப்பான செய்தி அல்லவா. குஜராத் பல்கலைகழகத்தின் இளம் பெண்களுக்கான ‘ஹர்-ஸ்டார்ட்’ (Her – START) திட்டத்தை தொடங்கி வைத்தபோதுதான் நம் ஜனாதிபதி அம்மையார் இப்படியாக பெருமிதம் கொண்டிருக்கிறார். நமக்கும் மகிழ்ச்சியே.

அதென்ன சர்வதேச கண்டுபிடிப்பாளர் இண்டெக்ஸ்,..? பொதுவாக நம் நாட்டில் அறிவியல் – தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் நிலை என்ன? நம் நாடு பட்டினி இண்டெக்ஸ், வளர்ச்சி கணக்கீடு, கல்வி என்று பெரும்பாலான உலகளாவிய தரவரிசைகளில் பின் நோக்கி அதிர்ச்சிப் பயணம் செய்து துயரம் தரும் காலத்தில் கண்டுபிடிப்பு தரவரிசை நம்மை ஆச்சரியப்படுத்துவது உண்மைதானா? கண்டுபிடிப்பாளர் என்றால் யார்? எதை வைத்து இந்த (கண்டுபிடிப்பு) சர்வே எடுக்கப்படுகிறது. இப்படி கேள்விகள் எழுவது நியாயம்தான். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அறிவியல் – தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்பது கண்டுபிடிப்பு (Invention). புதுமை புகுத்துதல் (Innovation) முன்னேற்றுதல் (IMPROVING) என்ற மூன்றையும் உள்ளடக்கியதாக பொதுவில் சொல்லப்படுகிறது.

ஒரு பேனாவையே கண்டுபிடிப்பது வேறு. ஏற்கனவே இருப்பதை மேம்படுத்துவது வேறு. ஒவ்வொரு படிநிலை முன்னேற்றமும் உரிமம் பெற தகுதியானதே விதவிதமான பேனாக்கள் சந்தையில் இருப்பதை காணலாம். இங்க் பேனா, இங்க் டேங்க் பேனா, பந்துமுனைப் பேனா, ஜெல் எனும் கூழ்மப் பேனா மூடி வைத்தது பின்னே பித்தான் வைத்தது தானியங்கி பேனா என அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாவகைக்கும் உரிமம் பெறப்பட்டு அதனதன அறிவுசார் உடைமை (Intellectual property rights) அதன் கண்டுபிடிப்பாளருக்கு தக்க விதத்தில் சென்று சேரவேண்டும்.

நவீன யுகத்தில் மனித வளர்ச்சி அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு – இது இன்னாருடைய பங்களிப்பு – என்று உரிமச் சான்று தரும்- அமைப்பு மறுமலர்ச்சியை இத்தாலியில் 1474ல் தொடங்கியது. ஆனால் அப்படி ஒரு தரச்சான்று அளிக்கும் முறை ஆதி கிரேக்கத்திலும் சீனத்திலும் கூட இருந்ததற்கு சான்று உண்டு இங்கிலாந்தில் முதல் ஆங்கிலேய வர்த்தகம் சார்ந்த கண்டுபிடிப்பு உரிமம் 1449ல் உத்தெய்னம்- ஜான் என்பவருக்கு கண்ணாடி தயாரிக்கும் முறைக்காக நான்காம் ஹென்றி மன்னரால் வழங்கப்பட்டது. அப்போதைய இங்கிலாந்தில் யாருக்குமே ஜன்னல் கண்ணாடிகள் செய்யத் தெரியாது. 1561 முதல் 1590 வரை முதலாம் எலிசபெத் மகாராணி தன் கையொப்பமிட்டு குறைந்த பட்சம் 50 சான்றிதழ்களாவது தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக வழங்கியுள்ளதையும் வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது. மன்னர் முதலாம் ஜேம்ஸ் தன் மனப்போக்கில் வேண்டப்பட்டவர்களுக்கு எல்லாம் உரிமங்களை வாரி வழங்கியபோது இங்கிலாந்து (அப்போதைய) பாராளுமன்றம் சர்வதேச அளவில் முதல் கண்டுபிடிப்பு- உரிமம் நடைமுறை சட்டம் – என்கிற ஒன்றை 1624ல் நிறைவேற்றியது. பிறகு தொழிற்புரட்சி ஆண்டுகளை உலகம் அடைந்த நாட்களில் அறிவியல் வளர்ச்சி மேலும் தெளிவான நடைமுறைகளை நோக்கி கண்டுபிடிப்புகளை பதிவுசெய்தலை பரிணாமம் அடையவைத்தது.

இந்தியாவில் தன் கண்டுபிடிப்புகளக்காக சில பெயர்கள் பிரபலமாக அறியப்பட்டது அவரவர்களின் நூல்களால் தான். சுஸ்ருதா மருத்துவ நூலும், நம் சங்க காலத்தின் வானவியல் கணிதத்தை தந்த சிலேட்டர், குடுக்கை நன் கணியார் என தமிழிலும் உண்டு. ஆங்கிலேயர்கள் 1911ல் இந்திய உரிமம் மற்றும் வடிவமைப்பு (Patents & Design Act) உரிமை சட்டத்தை அறிமுகம் செய்தது. 1950ல் இச்சட்டம் முதல்முறை திருத்தப்பட்டாலும் 1957ல் நேரு அரசு இன்னும் தெளிவான அனைவருக்கும் பயன்படும் உரிமம் பெறும் சட்டத்தை – கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சட்டமாக மாற்றிட பரிந்துரைகளை வழங்குமாறு நீதியரசர். எம். ராஜகோபால் ஐயங்கார் கமிட்டியை நியமித்தது. அதன்படி அப்போது (1959) ஒரு முறை சட்டம் திருத்தப்பட்டது.

ஆனால் 1972, ஏப்ரல் 20 அன்றுதான் தெளிவான ஒரு கண்டுபிடிப்பு உரிமச்சட்டம் நம் நாட்டில் அமலுக்கு வந்தது. இது ஏறத்தாழ முப்பதாண்டுகள் கழித்து 1999ல் உரிம சட்டதிருத்த மசோதா மூலம் மேலும் கணினி இயல் – சந்தை வர்த்தகம் என்ற ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டு அதன்பின் 2002ல் ஒருமுறையும் 2005ல் ஒரு முறையும் மாற்றத்திற்கு உட்பட்டு டில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை நகரங்களில் இந்திய அறிவுசார் உடைமை-பதிவு அலுவலகங்களை திறந்து நவீன மயமாக்கப்பட்டது. இருமல் மருந்து, செருப்பு, கைபேசி பல்பு, குண்டூசி முதல் குவாட்டர் பாட்டில் வரை சகலத்திற்கும் அங்கே (சர்வலோக ) உரிமம் வழங்கப்படுகிறது. உரிமம் பெறத்தக்க கண்டுபிடிப்பாக எது இருக்க முடியும் என்பதற்கு அந்த அலுவலகத்தில் ஆயிரம் பக்கத்திற்கான (!) ஒரு வழிகாட்டி புத்தகம் கூட உள்ளது. (அதற்கும் உரிமம் வாங்கி வைத்து இருக்கிறார்கள்!)/

நம் நாட்டின் தற்போதைய சிக்கல் மிகவும் வினோதமானது. பிரதம அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு சென்ற மாதம் நம் ‘கண்டுபிடிப்பு உரிமம் பெரும் சூழல் அமைப்பில் அவசர மூலதனம் ஏன் தேவை எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தது. இந்தியாவை அறிவார்த்த பொருளாதாரமாக்கிட (Intellectual – knowledge economy) தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதன் அவசியத்தை அவசரத்தை அந்த அறிக்கை விளக்கியது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விபரங்கள் நமக்குள் பல புதிர்களை விதைப்பனவாக உள்ளன.

ஒரு உற்பத்தி பொருள் மீதோ அல்லது கண்டுபிடிப்பின் மீதோ அறிவுசார் சொத்துரிமை கோரும் உரிம- அனுமதி இருவகை. ஒன்று இந்திய உரிமம் கோரும் அயல் கண்டுபிடிப்பாளர்களுடைய கண்டுபிடிப்பு உரிம-அனுமதி விண்ணப்பம். இரண்டாவது உள்ளூர் கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பம் முதல் முறையாக 2021 -2022 ல் அயல் விண்ணப்பங்களை விட உள்ளூர் கண்டு பிடிப்பாளர்களின் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. சென்ற பத்தாண்டு காலத்தைவிட (2010-19) இந்த புத்தாண்டின் தொடக்கமே சாதனை. 2010/19 காலகட்டம் தனக்கு முந்திய பத்தாண்டு காலகட்டத்தைவிட இருமடங்கு அதிக கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 2022-2023 பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில் – உள்ளூர் விண்ணப்பங்கள் மேலும் அதிகரிப்பதையே புள்ளிவிபர போக்கு நமக்கு காட்டுவதாகவும் பிரதம அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் சர்வதேச தரப்பட்டியல் வெளியானது. 80 விதவிதமான அளவுருக்களின் அடிப்படையில் அது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. கார்னெல் பல்கலைக்கழகம், இன்சீடு எனம் அமைப்பு மற்றும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் இணைந்து நடத்துவது அது இன்சீடு என்பது ஒரு (Institute of European Administration of Business Affairs) பொருளாதார கல்வி வர்த்தக அமைப்பு. பிரான்சு, அபுதாபி, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உண்டு. இன்சீடு(In SEAD) என்ற தனது இதழில்தான் அந்த தரவரிசையை அது வெளியிடுகிறது. இன்சீடு. ஒரு கல்வி நிறுவனம் எம்.பி.ஏ எம்.சி.ஏ என்று பட்டப்படிப்பும் உண்டு.

இந்த தரவரிசை இரு பிரதான அளவுரு வகைப்பாடுகளை கொண்டது. ஒன்று உள்ளீட்டு (கண்டுபிடிப்பு) அளவுரு மற்றது வெளியீட்டு (கண்டுபிடிப்பு) அளவுரு. இவற்றை மேலும் பல படிநிலை அளவுருக்களாக பிரிக்கிறார்கள். 2007ல் வெறும் 17 படிநிலை அளவுருக்காளாக இருந்ததை 2019ல் 120 படிநிலைகளாக பிரித்துவிட்டார்கள். காரணம் உண்டு. 2019ல் ஐ.நா. சபையின் கண்டு பிடிப்பு தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சி எனும் அறிக்கை வெளிவந்தது. அது ஆண்டுதோறும் உலக நாடுகளிடையே தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல்பூர்வமான நிலைத்த வளர்ச்சி குறித்த தரப்பட்டியலை வெளியிட முடிவு செய்தது. (நிலைத்த வளர்ச்சி –தரவரிசை பற்றி யாருமே பேசுவது இல்லை. ஏனெனில் இந்தியாவின் தர – இடம் கம்போடியா, வங்காளதேசத்திற்கும் கீழே உள்ளது- முதலாம் இடம் பின்லாந்து, 121-வது இடத்தில் இந்தியா).

இந்தியாவின் கண்டுபிடிப்பு –உரிமம் பெறும் நடைமுறை மிகுந்த சிக்கல் நிறைந்த நீண்ட போராட்டம் ஆகும். எனவே பெரும்பாலும் யாருமே நேரடியாக விண்ணப்பிப்பது இல்லை. அதற்கென்று இடைத்தரகர்கள் பெருகிவிட்டார்கள். இந்த நடைமுறை – சிவப்பு (திண்டாட்டத்தை) நாடா பள்ளத்தாக்கை நம்பி சுமார் இரண்டு லட்சம் வழக்குரைஞர்கள் பணியாற்றும் தனித்துறையே உள்ளது. நானும் எடிசன்போல பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவேன் எனும் குழந்தைப்பருவ கனவை விதைப்பவர்கள் – உரிமம் பெருகிற பின் விளைவு தெரிந்தால் அறிவியலைவிட்டே ஓடிவிடுவார்கள். ஷரத்து (9) 1ன் படி ஒவ்வொரு விண்ணப்பமும் வந்த ஒரு வருடத்திற்குள் கண்டுபிடிப்பு குறித்த தரச்சான்று தரும் அரசு அங்கீகாரம் பெற்றவர்களால் தரப்பட்ட சான்றாதார விபர அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதைவிட கொடுமை 21(1)ம் ஷரத்து. உரிம அலுவலர் உங்கள் விண்ணப்பத்தில் ஒரு எழுத்து பிழையை கண்டுபிடித்து விட்டாலும் நீங்கள் முதலில் இருந்து –வேறு புதிய விண்ணப்பத்தை‘விலை‘ கொடுத்து வாங்கி மீண்டும் பயணத்தை முதல் பெட்டியில் இருந்து தொடங்கவேண்டும். ஒவ்வொரு படிநிலைக்கும் பழையபடி (இடைத்தரகர்) கட்டணம் உங்களை தாளித்து விடும் அவலம் ஒருபுறம். அதே விஷயத்தை தானும் கண்டுபிடித்ததாக சும்மா யாரோ ஒருவர் –ஒரு கடிதம் கொடுத்தாலும் நீங்கள் அம்போ.

இந்த நிலையில் 2016ம் வருடம் தேசிய அறிவுசார் உரிமை- கொள்கை என்ற ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது. தனது புதுமை – கண்டுபிடிப்பு உரிம அலுவலக சோதனைகளின் தேறாது என்று தெரிந்தேகூட ஒருவர் உரிம விண்ணப்பம் அளிக்க முடியும் என்று நம் நாட்டின் கொள்கை வாசல் திறந்து விட்டது. ஒருபுரம் உயர் கல்வியில் தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி (R&D) – உள்ளூர் செலவீனத்திலும் தனியாரை வரவழைத்து 2013ல் 5% மாக இருந்ததை 2018 ல் 7% மாக உயர்த்தி காட்டி இருக்கிறோம் (ஆதாரம் யுனெஸ்கோ அறிக்கை) 2015 – 16 ல் 838 ஆக இருந்த பத்து இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு உரிமம் கொரும் விண்ணப்ப எண்ணிக்கை மேற்கண்ட காரணங்களால் 2019 – 20 ல் 2,533 ஆக உயர்ந்துள்ளது.

உரிமம் கோரி விண்ணப்பித்த அளவுருவில் உலகின் 40 வது இடம். சரிதான் சற்றே அருகில் வைத்து கணக்கீட்டை பரிசீலித்தால் பெரிய அதிர்ச்சியே ஏற்படுகிறது. சிஜிபிடி இயக்குனர் அலுவலக (controller General of Patents, Designs, Trademarks and geographical Indications) சமீபத்திய அறிக்கை ஒரு விஷயத்தை நம் கவனத்திற்கு கொண்டுவருகிறது. நம் நாட்டில் கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பங்களில் கைவிடப்பட்ட அல்லது 9(1) மற்றும் 21(1) விதிகளின் படி ஏற்கப்படாத விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2010 – 11 ல் 5186 ல் இருந்து 2019 / 20 ல் 23, 291 ஆக உயர்ந்து விட்டது. இதை சர்வதேச தரக் கணக்கீடு கணக்கில் எடுத்ததா என்பதே புதிராக உள்ளது. ஆக நம் நாட்டில் கண்டுபிடிப்பு உரிமம் பெற விண்ணப்பித்தவர்களையும் பெற்றவர்களையும் எண்ணிக்கைப்படி ஒப்பிட்டால் மொத்தமாக 4.2 சதவிகிதம் பேர் மட்டுமே உரிமம் பெறுகிறார்கள் என்று சி.ஜி.பி.டி யின் அண்மை அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. இதற்கான காரணம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுவது என்னவென்றால் உயர்கல்வி மற்றும் இந்திய நிறுவனத்துறைகளில் கண்டுபிடிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்த ரசீது (ஆதாரம்) இணைப்பது உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு ஒரு நிபந்தனையாக 2016 முதல் அமலானது. உரிமம் பெற்றிருக்க வேண்டியதில்லை. விண்ணப்பித்தாலே போதும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) முதல் தளவாட ஆய்வு நிலையம் (DRDO) அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) ஏன் நம் எல்.ஐ.சி முதல் வங்கிகள் வரைகூட – வேலை பார்க்கும் ஒருவர் ஏதாவது புதிதாக கண்டுபிடித்தால் தன்சொந்த பெயரில் கண்டுபிடிப்பு உரிமம் பெறமுடியாது. அந்த நிறுவன தலைமையிடம் அனுமதி கோர வேண்டி உள்ளது மட்டுமல்ல கண்டு பிடிப்பாளரின் உழைப்பை அந்த நிறுவனத்தின் கூட்டுமுயற்சி என்று பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதும் நிறுவன விதிமுறைகள் உங்களை சுயமாக கண்டுபிடிப்பாளராக செயல்படமுடியாத நிலையும் நீடிக்கிறது.

கண்டுபிடிப்பாளர் சபீர்பாட்டியா ((HOT MAIL) ஹாட் மெயில் – புகழ்) சமீபத்தில் சொன்னதைப்போல ஒரு கண்டு பிடிப்பை நிகழ்த்துவதைவிட அதை பதிவு செய்து உரிமம் பெருவதற்கு பலநூறு மடங்கு செலவு செய்யும் கொடுமை இந்தியாவைத்தவிர வேறு எங்குமே கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளுக்கு உதவித்தொகை வழங்குவதை குறைத்து, சாந்தி சொரூப பட்னாகர் விருது உட்பட முன்னூறு அறிவியல் விருதுகளையும் கிடப்பில் போட்டுவிட்ட மத்திய அரசு – கண்டுபிடிப்பு உரிமம் பெறும் படி நிலைகளில் சிக்கல்களை களைந்து எளிமை படுத்தியாவது உதவ வேண்டும். அதற்காவது நமது மேதகு ஜனாதிபதி அம்மையாரின் பெருமிதம் உதவ வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

– ஆயிஷா. இரா. நடராசன்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார்



கணினியும் மாணவனும்


நம்மைப் பற்றிய விவரங்கள் மட்டுமின்றி எதிர் காலத்தில் நம் தேசத்துக் குடிமகனும் தொழில்நுட்பத்தில் முன்னேறியவராக இருக்க வேண்டும் என்பதற்காக நம் தாய் மொழியில், நம் தனிப்பட்ட வியாபாரங்களுக்கான தொழில்நுட்பம் என்று நமக்கு வேண்டுமென்றால் நாம் கணினையை மாணவர்களாக யோசித்துத் தானே ஆக வேண்டும்?

நாம் கணினியை ஒரு மாணவராக யோசிக்கின்றோமோ இல்லையோ பல நாடுகள் அப்படி யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில  மொழியிலும் சீன மொழியிலும்  செயற்கை அறிவு உச்சத்தில் இருப்பது  நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைஉ தரவு உலகத்தில் முன்ணனியில் இருக்க வேண்டுமானால் உலகின் அனைத்து மொழிகளிலும் கண்டிப்பாக செயற்கை அறிவுத் திறன்   கணினிக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று உலக நிறுவனங்கள் நினைக்கின்றன.  உலக நாடுகளும் அதை வரவேற்கின்றன.

ஏப்ரல் மாதம் வந்த முக்கியமான ஒரு செய்தி லேசர் சக்தியால் ஆன ஒரு ஆயுதத்தை இஸ்ரேல் நாடு காணொலி வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலர் 4க்கும் குறைவானசெலவில் இதை உருவாக்கியுள்ளது இதன் மூலம் தரை கடல் வானம் என்று அனைத்து விதமான எல்லைகளைப் பாதுகாக்க இயலும் என்ரு இஸ்ரேல் அரசு கூறிகிறது. அறிவியல் புனைவு கதைகளில் நாம் சிறுவராக படித்து ஆச்சிரிஅப்பட்ட ஆயுதங்கள் இன்று நிஜத்தில் இருக்கின்றது. அந்த அளவிற்கு வேகமாகக் தொழில்நுட்பம் மாறி வருகிறது. உலகையே மாற்றக் கூடிய வளர்ச்சியாக இது இருக்கின்றது. தொழில்நுட்பங்கள் ஒவ்வோரு தனிதேசத்திற்கும் ஏற்ப தனியாக உற்பத்தி செய்வதும், அவ்வாறு உற்பத்தி செய்வது விலை குறைவாக இருப்பதும், கணினித் தொழில்நுட்பத்தால் நம் புவியைக் காப்பாற்ற முடியும் என்ற காரணிக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இந்த செய்தியால் தெரிகிறது.

சரி பாடங்களின் சாராம்சத்திற்கு வருவோம்

எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் முதலில் போலவே , பாடத்தின் சாராம்சத்தைப் பார்ப்போம். இப்பாடநூலின் பாடங்கள், அறிமுகம், தொகுப்புரை இவற்றிற்கு இடையில் இணையச்சுட்டிகளாகவுன் சுட்டிகளாகவும், பாடத்தைப் படிக்க மாணவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் உங்களுக்குத் தெரியுமா பகுதிகளையும், பாடத்தில் சொல்லப்படும் கருத்தை, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமாகவும் வண்ணமயமாகவும் வரையப்பட்டப் படங்களும் குழு செயல் பாடுகளும் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வோரு [அகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கொடுக்கப்பட்டுள்ளது.

இனி சாரம்சத்தின் ஆராய்ச்சிக்கு வருவோம்

புவியியல் பாடத்தில் சாராம்சத்தை இங்கே பாடநூலில் உள்ள பகுதிகளை, கணினி என்னும் மாணவனுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு உள்ளது? ஒரு மாணவன் கணிய்யை ஆளும் திறன் எவ்வாறு உள்ளது என்ற இரு கேள்விகளின் அடிப்படையில் ஆராயலாம்.

கணினி என்னும் மாணவன்

கணினிக்கு நாம் கொடுக்க்கும் விவரங்கள்,பலவகைத் தரவுகளாக கணினி எடுத்துக் கொண்டு, அந்தத் தரவுகளை வைத்து ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய உதவுகின்றது. கணினி செய்யும் செயல் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக இருக்க வேண்டும். பூளோகப் பாடத்தில் வானிலைபற்றிய தரவுகளௌக் கொண்டு ஒரு எதிர்காலக் கணினியால் என்ன செய்ய இயலும்? 

இன்றையக் கணினிகள் வானிலையையும் காலநிலையையும்,, தங்களுக்குக் கொடுக்கப்படும் தரவுகளைக் கணக்கிட்டு காலநிலையை துல்லியமாக கணிக்க வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றது. தரவுகளின் தரத்தைக் கொண்டு சூழவியியல் பாதிப்புக்களையும் கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. 

நாளைய கணினியின் வேலை. கொடுக்கபட்டுள்ள தரவுகளால், வரப் போகும் ஆபத்துக்களை ஆராய்ந்து, ஆபத்திலிருந்து காப்பாற்ற மட்டுமல்லாமல், ஆபத்தைக் களை களைந்து சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் வகையில் தரவுகளை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். சாதகமான சூழ்நிலைக்கான தரவுகளை மேம்படுத்தி சாதகமான விளைவுகளை வளர்ச்சிப் பாதையில் அதிகப் படுத்த வேண்டும். இந்தப் பணியை கணினி சிறப்பாகச் செய்ய

சமூகவியல் பாடத்தின் விவரங்கள் தரவுகளாக மாறினால் உதவி செய்யுமா?

 

கற்றலின் நோக்கங்கள்அறிமுகமும் தொகுப்புரையும்செயல்பாடுகள்கருதுகோள்உங்களுக்குத் தெரியுமா?
சிறப்புபுரிதலுக்கான வகைப்படுத்துதல், வகைப்படுத்தியவற்றை ஆக்கப்பூர்வமாக பயன் படுத்துதல்உலகமயமாதல் பற்றிய சிந்தனைமாணவர்கள் கல்ந்துரையாடலில் ஈடுபடுதல், கற்றலில் தங்கள் பங்கை முழுமையாகச்வானிலை காலநிலைஆகியவற்ற்றின் அடிப்படை அறிவைப்புகுத்தலும்,அதன் வழி பொதுஅறிவையும் இணையப் பயன்பாட்டை வளர்த்தல்பொது அறிவை வளர்க்கும் விஷயங்கள்
செலுத்துதல்
தேவையான மேம்பாடுபொதுவான விளக்கத்தைத் தாண்டி, கால லை, வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழி காட்ட வேண்டும்வெப்பச் சலனத்தால், அறிமுகப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புக்கள் பற்றிய தரவுகள் தரவுகளை சேகரிக்கும் வகைகள்______________காலநிலை வானிலை பற்றிய நுண்தகவல்கள், இயற்கையை பாதுகாப்பிற்கான தகவல் தேடல்கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்து ஆபத்துக்களை கணிக்கவும், ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகளும்
இயற்கை சக்திகளை துல்லியமாக அளவெடுக்கும் முறை
பின்னூட்டம்செயல்பாடுகள் மாணவர்களின் கற்றல் ஈடுபாடுகளை வளர்த்தாலும் கணினியோடு இணைந்து செய்யும்பாடத்தின் கருதுகோள் அடிப்படையை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
நாளையக் கணினி இதைவிட இன்னும் அதிமானத் தகவல்களை
இன்றைய கணினிகள் பெரும்பாலும் மேல் கொடுத்துள்ள பணிகளை செவ்வனே செய்கின்றது. அதனால் பின் விளைவுகள்
செயல்பாடுகளை உருவாக்கலாம்
இது மாணவருக்கும், கணினியின் செயற்கை அறிவுத் திறன் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்
நமக்குத் தரலாம்இன்றைய கணினிகள் பெரும்பாலும் மேல் கொடுத்துள்ள பணிகளை செவ்வனே செய்கின்றது. அதனால் பின் விளைவுகளை கணக்கிடும் புள்ளி விவரம் நமக்குக் கிடைக்கு

நம்முடைய திறன்பேசிகளைப் பயன்படுத்தி, நாம் நமது வானிலை அறிக்கைகளை இப்போது பெற்றுக் கொண்டு இருகின்றோம் தான்? ஒரு வெப்பமானி செய்த வேலையை நம் கைபேசி செய்கிறது.

IBM நிறுவனம் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளத் தகவலில் கோரானா காலத்தில் வானிலையை அரிவிக்க வேண்டிய அறிவிப்பாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியிருந்ததால், பல விதமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும் அதிலும் முக்கியமாக மெய்நீட்சி மெய்ம்மை(augmented reality) தொழில்நுட்பம் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.OTT (Over-The-Top) technology என்ற முழுக்க முழுக்க இணைய வழி சார்ந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கின்றது. சமூக வலைதளங்கள், குறுஞ்செயலிகள் ஆகியவை மூலம் உடனடியாக வானிலை செய்திகள் தனி மனிதனை அடையும் வண்ணம் வேலை செய்கின்றன என்ற விவரத்தையும் கூறுகின்றது. 

செயற்கை அறிவுத் திறனை பயன்படுத்தும் விதமாக ஒவ்வோரு வினாடியும் வானிலை விவரங்கள் துல்லியமாக, சேகரிக்கப்படுவது மட்டுமல்லாமல் , வானிலை அறிவிப்பாளரின் குரலில் உருவாக்கப்பட்டு காணோலிகளாகவும் வெளியிடப்படுகின்றன என்று விளக்கியுள்ளது. இது மட்டுமல்ல 

Weather InSight என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை வியாபாரநிறுவனங்களுக்காக இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வியாபாரநிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான காலநிலை வானிநிலை அறிக்கைகளைத் தாங்களே தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடியும். தொலைக்காட்சி நிலையங்கள் தங்கள் பார்வையாளர்களிடமிருந்து வானிலை சம்ம்பந்தமான புகைப்படங்கள் காணொலிகள் விவரத்தை வாங்கி ஒரு ஊடாடும் அனுபவமாக வானிலை அறிக்கைகளை உருவாக்குகின்றது.

2020 களில் இப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் வந்து விட்டது என்றால்? இன்னும் இருபது ஆண்டுகளில் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்? 

world meteorological organization( உலக வளிமண்டலவியல் நிறுவனம்) எதிர்கால வானிலை தொழில்நுட்பம் பற்றி அதனுடையத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடும் போது, தேசிய சர்வதேச அளவில் வானிலைத் தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளுக்கானத் தொழில்நுட்பமும், கொளவு தொழில்நுட்பம் மூலம் தரவு பகிர்தலும், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கைகளும் மிக முக்கியமான பங்கை அடுத்துவரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம் என்றும் அதற்குத் தேவையான திறன்மிக்க வானிலை ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது தலையாயப் பொறுப்பு என்றும் கூறுகின்றது.

கணினியை ஆளும் மாணவன்

கற்றலின் நோக்கங்கள்அறிமுகமும் தொகுப்புரையும்செயல்பாடுகள்கருதுகோள்உளுங்களுக்குத் தெரியுமா?
சிறப்பு
மேம்படுத்துதல்
பின்னூட்டம்

மேலே சொன்ன தகவல்கள் போன்ற செய்திகள் சமூகவியல் பாடத்தில் இல்லை என்பது தவிர, அப்படிப்பட்ட தகவல்களை எப்படிப் பெறுவது? அப்படிபெறப்படும் தகவல்களில் சரியானத் தகவல், தகவலின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்வது என்ற விவரங்களும் இல்லை. இது பாடத்தயாரிப்பாளர்களைக் குறை கூறுவதற்காக எடுத்துச் சொல்லப்படவில்லை. இன்றைய ஆசிரியர்களின் வேலை எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதையும் ஒவ்வோரு பாடத்திலும் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமும், துறை சார்ந்த கணினி த் தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வும் இருக்க வேண்டும் என்பதே!

என் தாயார் அண்மையில் கூறினார், இரண்டாம் படிக்கும் மாணவர் ஒருவர் எந்நேரமும் திறன்பேசியில் விளையாடுவதில் நாட்டம் கொண்டவர். ஆனால்கடந்த இரு ஆன்டுகளாக இணைய வழி பாடங்கள் நடத்தப்பட்டக் காரணத்தால் இப்போது திறன்பேசி என்றாலே அலறி அடித்து ஓடுவதாக! இதைக் கேட்கும் போதும் எழுதும் போதும் புன்னகைக்கிறேன் தான். ஆனால், கணினி வழி, திறன்பேசி வழி பாடம் நடத்துவதால் மட்டும், அந்தப் பாடம் கல்வி 4.0வின் பகுதியாக மாறிவிடுமா?