அக அரசு கவிதைகள்

அக அரசு கவிதைகள்




1.
தம் பிள்ளைகளின்
வயிற்றுப் பசியையோ
தான் பட்ட பாட்டைப்
பிள்ளைகள் பட்டுவிடாமல்
படித்து மேல வந்துவிட
அடி வயிற்றில் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த
நீண்ட கால ஏப்பத்தை பெரு மகிழ்வுடன்
வெளியேற்றி விடுகிறாள் தாய்
வேப்பங்கொட்டை பொறுக்கியாவது…

2.
சாலையிலிருந்து லாவகமாக
வானத்தைத் தொடும் வித்தையறிந்த
அசுர மனித மனம் படைத்தோர்
அதி விரைவான வாகனத்தில் கடக்கும் போது உரசியதில்
சிதைந்த நாயை அடக்கம் செய்ய
எங்கிருந்தோ வர வேண்டியுள்ளது ஒரு மனிதப் புனிதம்,
கண்களை மூடிக் கொள்வோம்
கடந்து செல்வோரெல்லாம்…

3.
ஓசியில் வாங்கி
நெருக்கடி நெருக்கிக் கொண்டிருந்த
போதிலும்
எத்தனையோ முறை
அலைபேசியை வைத்து விடட்டுமானு கூறிக்கிட்டே நானும் எம்மகளும்
அன்பில் கண்ணைக் கழுவிக் கொண்டிருந்ததில்,
அணைந்துதான் போனது
அலைபேசி…
அலையலையாய்
தன் நினைவு உள்ள வரை
உயரும் உன் நினைவு!

4.
சேர்த்துப் பார்த்துக் கட்டியபோது
கிடைத்த கொஞ்சம் பரவசத்தையும் மிஞ்சும்
பந்தாவையும்
பக்கத்தில்
நின்று பல தோரணைகளில்
தீட்டியதும் உணர்ந்த உற்சாகத்தையும்
நானெனப் பிளந்த ஆணவத்தையும்
நறுக்கெனக் கிள்ளி
மகிழ்ச்சியில் உச்சிதனை முகர வைக்கும்
குழந்தைகளின்
சிறுகையால் அளாவி தூவிய
வண்ணச்சாயம்!

5.
மற்ற நாட்டின் வளர்ச்சிக்காக
எண்ணிலடங்கா
காந்தி தாள்களை
கொட்டிக் கொடுக்க வண்ண
விளக்கிலான
நவீன விமானத்தில்
செல்பவரைக் கண்டு
பளிச்சொளி முகத்துடன்
கை கொட்டி மத்தாப்பாய் சிரிக்கிறாள் சிறுமி
சீமண்ணெய் விளக்கு அணைந்தது கூட தெரியாமல்!

6.
சாலையில் பயணிப்பவர்கள்
மீதுள்ள எல்லையில்லா
அரவணைப்பினாலோ
அல்லது ஆர்வக்கோளாறிலோ
வேக வேகமாக
ஊஞ்சல் போல் சாலையையும் சேர்த்து
ஆட்டிவிடுகிறது
ஜுலைக்_காற்று…

–அக அரசு

Karkaviyin Kavithaigal 9 கார்கவியின் கவிதைகள் 9

கார்கவியின் கவிதைகள்

இரட்டை நீல டிக்குகள்
**************************
முன்பெல்லாம்
மாதம் ஒருமுறை
டேடா செலுத்துபவன்
இப்பொது மூன்றுமாத சந்தாவிற்கு பழகி விட்டேன்….

ஏதோ ஒரு குழுவில்
நீ உரையாடி சென்ற
பொழுதும்
சேகரிக்கப்படாத
உனது எண்ணை
கிளிக் செய்து
டிபியை மட்டும்
பலகாலம் பார்த்து
வெளியேறுகிறேன்…

இப்பொது கிடைத்த
தைரியத்தில்
ஹாய் என கூறிவிட்டேன்
உன் முகம் காணாமல்
சிறு அங்குல பெட்டிக்குள்

ஒற்றை சாம்பல்
டிக்குகள்
நெஞ்சை சற்று அமைதிக்குள்ளாக்கியது
நீ ஆன்லைன் இல்லாத
வெறுமையை தந்தது..

இரட்டை சாம்பல் டிக்குகள்
நீ வந்து சென்ற
சுவடுகளை டிக் செய்து சென்றது

இரட்டை நீல டிக்குகள்
வியர்வை வழிந்தோட
என்ன ரிப்ளை என
நடுக்கலில் உறைந்தேன்
என் பெட்டியில்

நீண்ட நேர
பச்சை நிற
டைப்பிங் சொற்களுடன்
தொடர்புள்ளிகளின்
முடுவில்
கிடைத்தது…

“ஊ இஸ் திஸ்”

அகலப்பரந்த ஆழியில்
இரு சொட்டு
நீர்த்திவலையாய்
என்னுள் தடம்பதித்தது
இரட்டை நீல டிக்குகள்…..

தொலைப்பேசி நினைவுகள்
**********************************
ஊரெல்லாம் அழைக்காத பெயரை
என் வீட்டின் பின்னால் ஒலிக்க பழகியது

யாசகம்
கேட்பவனாய்
வாசலில்
நின்று கொண்டிருந்தோம்
சில நேரம்
நானும் அம்மையும்
சில நேரம்
நானும் அக்கையும்

ஆசையோடு
பேசிய
அண்ணனின்
எதிர்பார்ப்பை
யாசகத்திற்கு
கேட்கும் நிலையில்
சொல்லப்பட்டது
‘யார் அங்கே பேசுவது’

வாயடைத்தை
நிலையில்
ஆணைகளெல்லாம்
மறந்து போனது
அண்ணனுக்கு

பொறுமையில்
வைத்து
சில்லரை போட்டது
போல்
தொட்டுப்பார்த்து
பரிமாறிக் கொள்கிறாள்
அன்பை
என் அன்னை….

இன்று ஆறங்குல
பெட்டியில்
அண்ணனின் முகத்தையே
பார்க்கும் பொழுது
வடியும்
கண்ணீரில்
தொலைபேசி
நினைவுகள்….!

எழுதாத தேர்வு
******************
தேடும் இருளுக்கு  நிலவின் ஒளி
எட்டித் தொடும் அலைக்கு நிலா
மிஞ்சிய பசியை போக்கும் பூனை
கெஞ்சிய யாசகனின் தட்டில் நூறு

வெற்றிக்கு தேர்வுகள் அவசியம் இல்லை
கேள்விகளில் வாழ்க்கையும் இருப்பதே இல்லை
ஆம் எழுதிவிட்டேன் தேர்வை
யாரும் காணாத புது விடையை

கடல் முழுதும் வெளிச்சம் இல்லை
அலை தொலைவில் நிலவின் எல்லை
அறிதலும் புரிதலும் வாழ்வியல் தந்திரம்
கிடைக்காதது கிடைத்தால் இயல்கையின் மந்திரம்

இருக்கும் இடத்தில் இயற்கை வராது
எல்லாம் உனக்கென உறுதியாய் தராது
உழைத்திடு அனு தினம் விழிப்போடு
வெற்றிகள் கிடைத்திடும் உன் கையோடு