தங்கேஸ் கவிதைகள் (Thanges poems) - Thanges Kavithaikal | Bookday Kavithaikal | Tamil Poems | 1. அலகிலா விளையாட்டு - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1. அலகிலா விளையாட்டு நேற்று சொன்னது போல இருக்கிறது ஆனால் இந்த மஞ்சள் அரளிக்கன்று மொட்டை மாடி கைப்பிடிச் சுவரளவு வளர்ந்து விட்டது நேற்று விடிவெள்ளி முளைத்திருந்த இடத்தை இன்று எதை இட்டு நிரப்பும் வானம் என்று எண்ணிக்…
தங்கேஸ் கவிதைகள் - Thanges Kavithaikal - தமிழ் சிறப்பு கவிதைகள் - Tamil Poetry - Koodalingm Thangeswaran - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1 பௌதிகமான தூரத்தை என் மனதினால் கடந்து உன்னிடம் வருகிறேன் சகி உயிரினை உருக்கும் தனித்துவமான என் மூச்சுக்காற்று ஒரு முறையேனும் கடல் கடந்து வந்தாகிலும் உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் நான் இன்னும்…
சிறுகதை - நிழல் - தங்கேஸ் (Nizhal Short Story By Thanges)

சிறுகதை: நிழல் – தங்கேஸ்

வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த  வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து மிதந்து  கொண்டிருந்தது. கையை நெற்றிக்கு அணைவாக கொடுத்து மேலே அண்ணாந்து பார்த்தாள்.…
தங்கேஸ் கவிதைகள் (thanges poems)

தங்கேஸ் கவிதைகள்

1 நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்  கை குலுக்குகிறார்கள் கட்டித்  தழுவுகிறார்கள் தழுவியதும் விடைபெறுகிறார்கள் உருவம் கலைந்ததும்  வெற்றிடம் விரிகிறது வெற்றிடத்தைக் கண்டால் பூமி பெருமூச்சு விடுகிறது யார் நிரப்ப ? எண்ணங்களின் நிழல் வழியே நான் உனக்குள் இறங்குவேன்…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. கடவுளே! இந்த வாழ்க்கையை இதயத்தில் ஏந்திக்கொள்வது இருக்கட்டும் யார் யார் இதைச் சில்லறைக் காசு போல சட்டைப் பையில் போட்டுக் கண்டு திரிகிறார்களோ யார் கண்டது? யார் இதை சிகரெட் துண்டைப் போல புகைத்துக் கொண்டு அலைகிறார்களோ? யார் மதுப்…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு நான்கு வர்ணங்கள் நான்கு வேதங்கள் அதிலிருந்து முளைத்து விட்டன…
தங்கேஸ் கவிதைகள்: உறக்கமும் விழிப்பும்

தங்கேஸ் கவிதைகள்: உறக்கமும் விழிப்பும்

ஒருவன் மாட்டுத் தோல் உரிக்கிறான் மற்ற நேரங்களில் அந்த சூரிக்கத்தி மொண்ணையாகத்தான் இருக்கிறது ஒருவன் பறையடிக்கிறான். இசை துள்ளலாக வருகிறது பாடையில் கிடப்பவன் துள்ளி எழுந்து ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு இசை கேட்கிறான் மற்ற நேரங்களில் பறையடிக்கும் குச்சி சும்மாதான் கிடக்கிறது ஒருவன் மலம்…

தங்கேஸ் கவிதைகள்

நினைவின் வெளியில் அலையும் பறவை நிறுத்தமில்லாததொரு  விண்வெளிப் பேருந்து ஒளியாண்டுகள் ஆகும் ஓர் ஞாபகம் மக்கிப் போவதற்கு நட்சத்திரங்களின் ஆயுளில் பாதியைக் கொடு உன்னை மறப்பதற்கு வெண்ணிறப் புரவிகள் பொங்கிப் பிரவகிக்கும் போது நான் நிலவிற்குள் ஒடுங்கியிருப்பேன் ஒரு ஆலிலையைப் போல…
Thanges Poems 31 தங்கேஸ் கவிதைகள் 31

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
நினைவின் வெளியில் குதித்தவன்
மீண்டும் திரும்புவதேயில்லை
மீன்களுக்குப் புழுப் போல
சொற்களுக்கு இவன்

ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் குவித்து
தெருவில் பட்டாம் பூச்சி பிடித்துப் போகின்றவனை
புன்னகையில் கடந்து போகும் உதடுகள்
பிறகு குற்றவுணர்வு கொள்கின்றன

சுழன்று வரும் பிரபஞ்சமென
உதிரும் அரசமரத்திலை ஒன்று
முகத்தை வருடிச் செல்கிறது

பால் பேதமற்ற வெளியில்
ரூபத்திற்கும் அரூபத்திற்குமான
மங்கிய ஒளியில்
நிற்கும் அவன் மீது
இலைகளென உதிரும் பொழுதுகள்
தங்களைப் புதைத்துக் கொள்கின்றன

பிரக்ஞைக்கும் வெளியே
அறியாமையால் பிதற்றும் இவனை
இரவும் மன்னித்துக் கொண்டேயிருக்கிறது
தன் பங்கிற்கு.

கவிதை 2
மூடிய கண்களுக்குள் .
கணநேரம் சுழன்றாடுகிறது குழந்தமையின் சுடர்
நான்குகால் பாய்ச்சலில்
எல்லையற்ற வெளியில் பறந்து போகின்றேன்
பின்னோக்கிப் பாயும் குதிரைக்கு
கடிவாளம் ஏதும் பூட்டப்படவில்லை

தூக்கக் கலக்கத்தில்
உள்ளங்கையைக் கால்சாராய்
பையிலிருந்து எடுக்கிறான்
அப்பாவிச் சிறுவன்
கையோடு வருகிறது
வரையாடு தீப்பெட்டிக் கூடு

உள் கூட்டை
வலது கை ஆட்காட்டி
விரலால் தள்ளித் திறக்க
நிரப்பப்ட்ட பசும் கருவேல இலைகளுக்கு மத்தியில்
அசைகின்றன
மரகதப்பொன் வண்டுகள்

அருகில் பனித்துளி வடிவ
வெண்முட்டைகள்
வெண்முட்டைகளின் வெது வெதுப்பை
உள்ளங் கைகளுக்குள் உருட்டிப் பார்க்கிறான்

காலம் முதுமைக்கும் பால்யத்திற்கும்
இடையில் சோழியாக
உருண்டோடிக் கொண்டிருக்கிறது