Posted inPoetry
தாயும் தனயனும் கவிதை – மரு உடலியங்கியல் பாலா
உதிரம் கொடுத் ‘தாய்’
உன்னுள் உதித்தேன்!
உயிரை கொடுத் ‘தாய்’
உலகில் பிறந்தேன்!
உடலை கொடுத் ‘தாய்’
ஊர்ந்து மகிழ்ந்தேன்!
தாய்ப்பால் கொடுத் ‘தாய்’
தளிரென வளர்ந்தேன்!
சுமந்து திரிந் தாய்
சுகமாய் அலைந்தேன்!
முத்தம் கொடுத் தாய்
மொத்தமாய் மகிழ்ந்தேன்!
சமைத்துக் கொடுத் தாய்
சுவைபல சுகித்தேன்!
காசுகள் கொடுத் தாய்
கண்டதை ருசித்தேன்!
அன்பினைக் கொடுத் தாய்
மனிதனாய் வாழ்ந்தேன்!
அறிவினைக் கொடுத் தாய்
அண்டத்தை அறிந்தேன்!
உழைப்பினைக் கொடுத்தாய்
உறிஞ்சித் திரிந்தேன்!
மனைவியைக் கொடுத்தாய்
மகன்நான் மறந்தேன்!
ஏன் எனக் கதைத் தாய்
சண்டையில் பிரிந்தேன்!!
– மரு உடலியங்கியல் பாலா