Iyarkayin Padam poem by Ka Pandiselvi இயற்கையின் பாடம் கவிதை - க.பாண்டிச்செல்வி

இயற்கையின் பாடம் கவிதை – க.பாண்டிச்செல்வி




தென்னங்கீற்றின் ஊடே
ஒளிக்கீற்று
ஜன்னல் வழியே வியாபித்துக் கிடக்கிறது!
என் பட்டாசாலையில்.
இடைவெளிகள்
இருபுறமும் இருத்தல்
நன்றென போதிக்கின்றன,
இயற்கை.
இறுகப் பற்றுதலன்று அன்பு
இறுதிவரை பற்றுதலே!
உற்று நோக்கு,
ஓலையின் விலகல் விலகல்ல,
பின்னிப் பிணைகிறது விசிறியாய்!
பரிணமிக்க