சில்வியா ஆஷ்டன்-வார்னர் (தமிழில் ஜி. ராஜேந்திரன்) எழுதிய "ஓர் ஆசிரியர்" புத்தகம் | Sylvia Ashton-Warner (G. Rajendran in Tamil) Oor Aasiriyar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சில்வியா ஆஷ்டன்-வார்னர் (தமிழில் ஜி. ராஜேந்திரன்) எழுதிய “ஓர் ஆசிரியர்” – நூல் அறிமுகம்

"ஓர் ஆசிரியர்" - நூல் அறிமுகம் இது புத்தகம் அல்ல.. கல்விக்கான விடுதலை சாசனம். ஆயிஷா இரா.நடராசன்        தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மத அடிப்படைவாத தனியார்மய பிரிவினைவாத கல்வியை திட்டமிட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக திணித்து வருகிறது…
திரைவிமர்சனம்: THE TEACHER (மலையாள மொழி திரைப்படம்) – விமர்சனம் கருப்பு அன்பரசன்

திரைவிமர்சனம்: THE TEACHER (மலையாள மொழி திரைப்படம்) – விமர்சனம் கருப்பு அன்பரசன்




திரைக்கலைஞர் அமலாபால்
தேவிகா டீச்சராக நடித்து
விவேக் இயக்கத்தால் வெளிவந்திருக்கும் “தி டீச்சர்” மலையாளத் திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டும்
நெட் பிலிக்ஸ் ..ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றும் தேவிகா டீச்சர்..
பயிலும் பள்ளி ஆண் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவிக்கும் பெண் ஆசிரியையை, ஆசிரியராக பார்க்க மறுத்த பார்வையிலும், எண்ணத்திலும் வளர்த்த, வளர்ந்த ஆண் பிள்ளைகள் என்கிற மதப்பில் ஆசிரியரின் அக்கறை மிகுந்த வார்த்தைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவருக்கு இனிப்பில் மயக்க மருந்து கொடுத்து,
மயங்கியதும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.

மயக்கம் தெளிந்து தன் நிலை உணர்ந்த தேவிகா டீச்சர் யாரிடமும் பகிர முடியாமல் தன் தோழியோடு மட்டுமே
பகிர்ந்திருப்பார். இதை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் அந்த மாணவர்கள் அவரை மிரட்டியதையும் சேர்த்தே சொல்லி இருப்பார் தன் தோழியிடம். அதெல்லாம் ஒன்று நடக்காது நீ தைரியமாக இரு என்ற தோழி அவருக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருப்பார்.

திருமணமாகி நான்கு வருடம் கடந்த பின்னும் தாய்மை அடையாதிருந்தவர் இந்த நிலையில் அவரின் பீரியட் நேரம் தள்ளிப் போகிறது. அதிர்ச்சியடைந்த தேவிகா தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொழுது; கர்ப்பப்பையில் கரு உருவாகி இருப்பது உறுதி செய்யப்படுகிறது. குற்ற உணர்ச்சியின் காரணமாக கரு உருவாகி இருப்பதை கணவரிடமும் சொல்லத் தயங்குகிறார். தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முற்பட்டதை அறிந்த கணவனிடம் பள்ளியில் நடைபெற்ற அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். ஆறுதலாக இருக்க வேண்டிய கணவன் அவரை தகாத வார்த்தை சொல்லி கடுமையான முறையில் நடந்து கொள்கிறான். அவரின் சுதந்திர செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கி தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறான் அவருக்கு எதிராக.

தேவிகா டீச்சருடைய கணவனின் அம்மா கல்யாணி.. கல்யாணி எளிய மக்களுக்கு ஆதரவாக அவர்களின் உரிமைக்காக அவரின் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து களத்தில் போராடிவரும் வீரமிகுந்த பெண்.. களப்போராளியாக இருக்கும் அவர் ஒரு கம்யூனிஸ்ட்.

தனக்கு நியாயம் வேண்டும் என்று தேவிகா டீச்சர் காவல் நிலையத்திற்கு செல்ல முற்படும்பொழுது
“இதை அப்படியே விட்டுவிடலாம்..
காவல் நிலையத்திற்கு சென்றால், நம்முடைய குடும்ப கௌரவம் என்னாவது.. எல்லோரும் தவறாகத்தான் பேசுவார்கள்” என்று சுய கௌரவத்திற்காக டீச்சரின் நடவடிக்கை கட்டுப்படுத்தும் போது அடங்க மறுக்கிறார் தேவிகா டீச்சர்.

டீச்சருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கல்யாணியும் அவரின் தோழர்களும். டீச்சரின் அப்பா அம்மா தங்கை உள்ளிட்ட குடும்பமும் அவரோடு நிற்கிறார்கள்.

காவல்துறையின் லத்திக்கு பெண்களை கருவுறச் செய்யும் வாய்ப்பு இருந்திருந்தால் இத்தனை நாட்களில் பல நூறு முறை நான் கருவுற்று இருப்பேன் என்று காவல்துறையின் நடவடிக்கை குறித்து பேசி, தேவிகாவை பார்த்து “நீ எடுக்கும் எந்த முடிவிற்கும் நான் உன்னோடு இருப்பேன்.. முடிவெடுக்கும் அதிகாரம் உன்னுடையது” என்று உறுதி கூறுகிறார்.

சமூகத்தில் பெண் ஒருவர் ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பொழுது அதை நேர்கொண்டு தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய கணவன் எப்படியெல்லாம் ஆணாதிக்க சிந்தனைக்குள்ளும் பொய்யான கௌரவத்திற்குள்ளும் இருக்கிறான் என்பதையும்.. ஆணாதிக்க சிந்தனைகளுக்கு ஆட்பட்டு இருக்கும் நீதித் துறையும், காவல்துறையும் இங்கு ஒரு சார்பாகவே பார்த்து பழகி இருக்கும் இந்நிலையில்; காவல்துறையின் துணையோடு சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளின் வழியாக தப்பித்திடும் ஆண்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எந்த வகையில் எப்படி எடுக்கப்பட வேண்டி இருக்கிறது என்பதனையும் கம்யூனிஸ்டுகளின் துணையோடு செய்து முடிப்பார் தேவிகா டீச்சர்.

சட்டம் தனக்கான நீதி வழங்கும் என்கிற நம்பிக்கை சாதாரண மக்களுக்கு ஏற்படாத பொழுது அவர்கள் எப்படியான நடவடிக்கைக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படுகிறார்கள் என்பதற்கு தேவிகா டீச்சர் முன்னுதாரணம்.

சட்டமும் ஜனநாயகம் வேண்டுமானால் களப்போராளி கல்யாணியின் செயலையும் தேவிகா டீச்சரின் நடவடிக்கையும் தீர்ப்பையும் எதிர்க்கலாம்..

ஆனால் எளிய மக்கள் சாதாரண மக்கள் எல்லா வர்க்கத்திலும் இருக்கக்கூடிய பெண்கள் தேவிகா டீச்சரின் நடவடிக்கையை கொண்டாடுவார்கள் அதில் வரக்கூடிய கம்யூனிஸ்டுகளை கொண்டாடுவார்கள்.

உடன் பயணிக்கும் ஆண், தன்னை நம்பாத பொழுது பெண் என்கிற சக்தி தனியாக வலுவாக நிற்க வேண்டும்; நிற்கும் என்பதற்கு உதாரணம்தான் “தி டீச்சர்” திரைப்படம்.

தனியா கெத்தாகா நிற்பார்கள் கம்யூனிஸ்ட் கல்யாணியும் தேவிகா டீச்சரும் படம் முழுவதிலும். தேவிகா டீச்சராக அமலாபால் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கல்யாணியாக வரும் பெண் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

இயக்குனர் விவேக் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

கருப்பு அன்பரசன்