Thedan Four Poems in Tamil Language. தேடன் கவிதைகள் (எச்சம், வெற்றிடங்கள், புகை, தாகம், தனுஷ்கோடி) Book Day and Bharathi Puthakalayam

தேடன் கவிதைகள் (வெற்றிடங்கள், புகை, தாகம், தனுஷ்கோடி)



வெற்றிடங்கள்

வெற்றிடம் நிரம்பித் ததும்புகிற அண்டமிதில்
சிறு திடப்பருமன் வாழ்தலெனும் பெரும் நகை.
காலம் வெற்றிடத்தில் கரைந்து போக
ஞாலம் நதிக்கரையில் நாகரிகம் அமைத்து
காலம் தள்ளுவது நகை முரண்.
வாழும் காலம் வெற்றிடங்கள் வாழ்வில் நிரம்பியிருக்கும்
இறப்பின் சாய்வில் வாழ்தல் கரைந்து நிறைக்கும்.
ஏனெனில் வெற்றிடங்கள் தானே உண்மையில் கனமானவை.

Thedan Four Poems in Tamil Language. தேடன் கவிதைகள் (எச்சம், வெற்றிடங்கள், புகை, தாகம், தனுஷ்கோடி) Book Day and Bharathi Puthakalayam

புகை

சிகரெட் புகை ஊதி வெளியே விடுவதை பார்க்கையில் எனக்கும் ஊதுவதாய் தொனித்தது
ஆள்நடு விரல்களை வைத்து வெறும் வாயில் ஒத்திசைந்து பார்த்தேன்
பிறகு விட்டதில் கொஞ்சம் இழுத்தும் பார்த்தேன்
புகையைப் பிடித்ததும் பிரட்டுகிறது
தொண்டை கம்மி இரும்புகிறது
சரியென்று இழுத்தப் புகையை
அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்
நெருப்பை அணைக்காமல்.

Thedan Four Poems in Tamil Language. தேடன் கவிதைகள் (எச்சம், வெற்றிடங்கள், புகை, தாகம், தனுஷ்கோடி) Book Day and Bharathi Puthakalayam

தாகம்

ஒவ்வொரு மாதமும் காமம் தலைக்கேற
அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்கிறாள்
தீயில் இறக்கி எரித்துவிடாமலிருக்க
கோலமிடுகையில்
தெருநாய்களின் ஊடுறவு நெருப்பில் குளிர்காய்கின்றன
கல்லை விட்டெறிந்து ஆண்டாளோடு பாசுரம் பாடச் சென்று விடுகிறாள் வெடுக்கென
கல்லால் அடித்துக் கொன்றவர்களை தெரிந்திருந்தது அவளுக்கு
நெருப்பின் கங்குகளில் வறண்டுக் கொண்டிருந்தவளுக்கு கயிறு ஒன்றை கட்டி ஓர் எல்லையில் மட்டும் தாகத்தை தீர்க்க அனுமதித்தனர்
தாகம் தீர்த்துக் கொண்டாளோ இல்லையோ
அதற்குள் வயிறு நிரம்பிப் பெருத்து விட்டது.

Thedan Four Poems in Tamil Language. தேடன் கவிதைகள் (எச்சம், வெற்றிடங்கள், புகை, தாகம், தனுஷ்கோடி) Book Day and Bharathi Puthakalayam

தனுஷ்கோடி

கடல் கொண்ட தனுஷ்கோடியின்
தேவாலயம்; சுற்றிலும்
ஆயிரம் காலடிப் புதைத் தடங்கள்
இயேசு போல நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி
‘தலைய சாய்ச்சு நில்லுடி’ என்றாள் அம்மா
அருகே விற்கப்படும் கடலின் எச்சங்கள் நமக்கு
கடலை வாரியெடுத்து கழுத்திலும் வீட்டிலும் கைகளிலும் தொங்கவிட்டு கடலை கொள்ள நமக்குத் தான் எவ்வளவு ஆசை
கடைகளைக் கடந்து செல்லச் செல்ல கதைகள் விரிந்தன
இடிந்த வீடுகள் பாழ் சுவர்கள்
அனைத்தையும் விழுங்கி குழந்தை போல் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது கடல்
இயேசுவான சிறுமியோடு.
திரும்பிப் பார்த்தால்
கடல் கொண்ட தனுஷ்கோடியின் தேவாலயம்;
சுற்றிலும் ஆயிரம் காலடிப் புதைத் தடங்கள்

– தேடன்

தாழப் பறக்கும் காகங்கள்! – தேடன்

தாழப் பறக்கும் காகங்கள்! – தேடன்

தாழப் பறக்கும் காகங்கள்! எங்கும் காகங்கள்! எப்போதும் அங்கு காகங்கள் தாழவே பறக்கும். தலையைத் தொட்டுச் செல்லும் அதன் கருஞ்சிறகு 'படபட'க்கும். கார்கள் மீது எச்சமிடும், நிமிர்ந்தவர்களைப் பயந்து தாழவிடும், தாழப் பறக்கும் அவை. தரையிறங்கி கூட்டமாக தத்திக் கொண்டும் கொத்திக்…
காலமும் காத்திருப்பும்..! – தேடன்

காலமும் காத்திருப்பும்..! – தேடன்

காலமும் காத்திருப்பும்! ******************************** பிரிதொரு யுகத்தில் எரிகல் வீச்சுக்காய் நிலைக் குப்புற விழுந்துவிட்ட மலைகளின் பள்ளங்களில் செங்குத்தாய் வழிந்தொழுகி ஒழுகி நிற்கும் காலம். உறைநிலையின் இருப்பிலிருக்கும் டைனோசர் முட்டை நெருப்புக் கோழியின் கால் தடம் அணில்களின் எலும்புக் கூடுகளென அனைத்திலும் எண்ணெய்…
தேடன் கவிதை

தேடன் கவிதை

ஒருவன் தினமும் வேலைக்குப் போய் வரும் வழியில் ஒரு குளம். அதைச் சுற்றிலும் வயல் பரப்பு. சில்லென காற்று வீசும் வேப்பமரமும் முதிர்ந்த ஓரு புளியமரமும். அக்குளத்தில் கால் வைத்து இளைப்பாற வேண்டும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவன் தினமும் எண்ணிக்…
தேடன் கவிதைகள்

தேடன் கவிதைகள்

கவிதை 1 கொசுக்கள் டியூப் லைட்டை மோதி மோதித் தடுமாறுகின்றன; மீண்டும் மோதுகின்றன தொடர்ந்து. உடைத்து விடுமோ என்ற அளவிற்கு எழுப்பிய ஒலிக் கூச்சல்கள். அதன் பூதிக்கேனும் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கையில் 'க்ரீக்' என்ற ஒலி; ஒளி நின்று எறிந்தது!…
 ஈரம்! – தேடன்

 ஈரம்! – தேடன்

எரிச்சலாக இருந்தது அன்று. எரிந்து விழும் மூடனாகப் போய் கொண்டிருந்தேன் சாலையோடே. ஒரே வாகன நெரிசல், சுற்றிலும் ஹார்ன் ஒலி; மண்டை காய்ந்து விடும் போலிருந்தது. முன் செல்லும் வெளியூர் வேன் ஒன்றில் ஒரு குழந்தை வண்ணக் குமிழிகளை ஊதிய படி.…