Theera Pallam Kavithai By Kannan தீராப் பள்ளம் கவிதை - கண்ணன்

தீராப் பள்ளம் கவிதை – கண்ணன்

கீச்சி போய்
அழகி வந்தது
டாம்மி போய்
ராக்கி வந்தான்
முட்டைக் கண்ணன் போக
மீதமிருக்கும் மூன்று
செவ்வகத் தொட்டியில்
ராக்கியுடன் நடைபயில

மறந்தே போனான் விக்கி
சொன்னால் தான்
அழகிக்கு தீனி வைக்கிறாள்
பாப்பா
எத்தனை முயன்றாலும்
இட்டுநிரப்ப ஏனோ
முடியவில்லை

பிரியமான ஒருவர்
போனபின்னால்
கண்ணுக்குத் தெரியாமல்
உருவாகிறது
எவராலும் ஏதாலும்
நிரப்பவே முடியாத
தீராப் பெரும் பள்ளம்