Thiruttu ShortStory By Era Kalaiyarasi. இரா.கலையரசியின் திருட்டு குறுங்கதை

திருட்டு குறுங்கதை – இரா.கலையரசி




அந்தக் கூட்டமான பேருந்தில் ஏறி விட்டான் திருடன்.

சிறுசிறு திருட்டுகளில்தான் வாழ்கிறது அவனது வயிறு.

வேலைக்கு பல இடங்களில் முயன்றும் எதுவும் நடக்கவில்லை. மெலிந்த உடலில் ஒட்டிஇருந்த வயிற்றுக்கு அத்தனை பலம் இருக்கிறது.

அதிகரித்த கூட்டம், முன்னும் பின்னும் ஆடும் பேருந்தின் இசைக்கு ஏற்ப, நடனமாடியபடி இருக்கிறது.

பெரியவர், ஒருவரின் அருகில் வந்தான். மெல்ல இரண்டு விரல்களை சுண்டிவிட்டு அந்தப் “பர்சை” லவட்டினான்.

படிகளுக்கு பக்கத்தில் வந்து விட்டான். ஐயோ! பர்சை காணோம்? என் பொண்டாட்டி ஆஸ்பத்திரியில இருக்கா. காசு கட்டலன்னா வீட்டுக்கு கொண்டுபோக சொல்லிட்டாங்கன்னு கதறி அழுதார்.

அவன் மனது என்னவோ நினைத்தது. கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டு நகர்ந்தான்.

கிழே குனிந்து தேடுவது போல். அவர் பர்ஸை தந்தான்.

கைகளை பிடித்த பெரியவர் அவன் கால்களில் விழ போனார்.

வெட்கம் பிடுங்கி தின்றது திருடனுக்கு. மனதின் ஈரம், கண்களை நனைத்தது.

Children Stroies Paramarippu by Era Kalaiyarasi. குழந்தை கதைகள் பராமரிப்பு

குழந்தை கதைகள் பராமரிப்பு



பராமரிப்பு.

சிங்கம் ரொம்ப வருத்தமா இருந்தது. நம்ம எல்லையில நடக்கிற இந்தக் கொள்ளையை தடுத்து நிறுத்தனுமேனு யோசிச்சுகிட்டு இருந்தார்.

மந்திரி நரியார், அப்பதான் வந்தார். நம்ம வைப்பறையில இருக்கிற தானியங்கள் காணாமல் போகுது என்ன பண்ணலாமுன்னு கேட்டார் சிங்க ராஜா.

ராஜா, இந்த திருட்டு ரொம்ப நாளா நடக்குது., இன்று இதை கண்டுபிடிக்கிறேனு சொல்லி போயிட்டார்.

அழகான கொடிகளில், அலங்கரிக்கபட்ட குகைதான் வைப்பறை.

கொடிகள் அறுந்து கிடந்தது. குகை கற்களில் ஒன்று நகர்ந்து இருந்தது. சில மின்மினிபூச்சிகளை பிடித்து சென்று குகையை ஒளியூட்டினார் நரியார்.

அங்கும், இங்குமாக எலிகள் துள்ளி ஓடின.”கீச் கீச்” என கத்திக்கொண்டு விளையாடின. பார்த்த நரியாருக்கு சிரிப்பு வந்தது.

பெரிய திருடன் அகப்படுவான் என எண்ணிய நரியார் சிரித்தே விட்டார்.

பராமரிப்பு இல்லாத அறையும், அரசும் இப்படிதான் இருக்கும்னு நினச்சுகிட்டார்.

Kaviyoviyathodar-Kollaikarargal 22 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-கொள்ளைக்காரர்கள் 22

கவியோவியத் தொடர்: கொள்ளைக்காரர்கள் 22 – நா.வே.அருள்




கொள்ளைக்காரர்கள்
******************************

கொள்ளையர்களின் நாற்காலிகள்
சவாரிகளால் ஆனவை.

சிறகுகளில்
வானத்தைத் திருடும் திட்டத்துடன்தான்
இப்பறவைகள்
தங்கள் வலசையைத் தொடங்குகின்றன.

அலகின் முணுமுணுப்பில்
தேசத்தின் தசைத் துணுக்குகள்.

பறக்கும் மரங்களை
அவர்கள்
அறிந்து வைத்திருக்கிறார்கள்.

கடிவாளத்தைச் சொடுக்கித்
தவளைகளில் சவாரி செய்யும் அவர்கள்
பறவைகள் குளிக்கும் படித்துறையில்
முதலைகளை மேயவிடுகிறார்கள்.

அவர்களின் கூடுகள்
குகையை விட இருண்டதும்
அபாயகரமானதாகவும் இருக்கின்றன

அவற்றிற்குள்
ஒரு தலைப்பாகை
ஒரு கோவணம்
ஒரு தனுகு மரத்தாலான நுகத்தடி
ஒரு பூட்டாங்கயிறு
ஒரு தார்க்குச்சி
ஒரு ஏர்க்கலப்பை
ஒரு துண்டு நிலம்

இவற்றையெல்லாம் வைத்துத்தான்
வயல்வெளிகளை
அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக
வதந்தி நிலவுகிறது.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

பேசும் புத்தகம் | நன்றி ஹோ ஹென்றி சிறுகதை தொகுப்பு *திருட்டு* | வாசித்தவர்: சத்யா சம்பத் குமார் (ss 56)

பேசும் புத்தகம் | நன்றி ஹோ ஹென்றி சிறுகதை தொகுப்பு *திருட்டு* | வாசித்தவர்: சத்யா சம்பத் குமார் (ss 56)

சிறுகதையின் பெயர்: திருட்டு புத்தகம் : நன்றி ஹோ ஹென்றி சிறுகதை தொகுப்பு ஆசிரியர் : எஸ். சங்கரநாராயணன் வாசித்தவர்: சத்யா சம்பத் குமார் (ss 56)   [poll id="167"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக…