Posted inPoetry
தெளிவு படுத்தாத சட்டம் – மு தனஞ்செழியன்
அது ஒரு வினோத
பழக்கம் தான்
தினமும் குளிப்பது.
நிலக்கரி சுரங்கத்தைச்
சுற்றித் திடீரென
உருவாகும் மேடுகளைப் போல
அறையின் மூலையில்
குவிந்து கிடந்தன.
அதற்கெல்லாம் ஒரு எசமானி இருக்கிறாள்
இந்திய அரசியல் அடிப்படைச் சட்டத்தில் கூட
தெளிவு படுத்தாததைக்
கையில் எடுக்கிறாள்
வீட்டார் அனைவரும்
உள்ளாடையை
தனித் தனியாக அணிந்தாலும்
எல்லோர் உள்ளாடையையும்
அவள் மட்டும் துவைக்கிறாள்.