Posted inPoetry
தேதி அல்ல… வரலாறு கவிதை – சூரியாதேவி
எண்ணங்கள் எழுச்சிபெற்று எழுந்து நிற்கும் பேரோவியமாய்
வண்ணங்கள் பல தீட்டப்பட்டு வடிக்கப்பட்ட காவியமாய்
வாழ்க்கையை இன்பமயமாக்க இறுதிவரைப் போராடி
வேள்விகள் பல கடந்து உறுதியோடு வாதாடி
என்ன இந்த வாழ்வு என்றெண்ணி சோர்ந்து போகாமல்
எதையும் சாதிக்கும் என் நாட்டு பெண்மணிகள்
சாகசங்கள் பல நிகழ்த்தும் தன் நாட்டு கண்ணின் மணிகள்
வண்ணங்கள் இல்லாது போய்விட்டால் வானவில் ஏது
பெண்ணவள் இல்லாது போய்விட்டால் வாழ்கையே கிடையாது
ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று
அனைத்துத் துறையிலும் பெண்கள்
அனைத்துத் துறையிலும் பெண்கள்.
மார்ச் – 8 – 2023
முகவரி:
சூரியாதேவி ஆ
3/130, பாண்டியன் நகர் ,
சிவரக்கோட்டை,
திருமங்கலம் (தா),
மதுரை 625 706
அலைபேசி : 63795 25988