திரைவிமர்சனம்: NIGHTCRAWLER – DAN GILROY – சிரஞ்சீவி இராஜமோகன்
NIGHTCRAWLER – DAN GILROY – 2014
நைட்கிராலர் என்ற ஒரு திரைப்படத்தைப் பற்றி இந்த விமர்சனத்தில் பார்ப்போம். ஜேக்கில்லன்ஹால் என்றொரு நடிகர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவருடைய கதை தேர்ந்தெடுத்தாலும் நடிப்பும் நம்ம ஊர் நடிகர் அருள்நிதி போல் இருக்கும். வித்தியாசமான கதைகளை தேடி எடுத்து நடித்து முடிப்பார்
கதைக்குள் போவோம். வேலையில்லாமல் திரிந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன் தனக்கான வேலையை ஒவ்வொருவரிடம் கேட்டு கேட்டு அலுத்து போய் கிடைத்த வேலைகளை செய்து அன்றாட செலவுகளை சமாளிக்க சிரமப்படுகிறான். இடையில் ஏதோ ஒரு இடத்தில் சாலையில் வாகனங்கள் அடிப்பட்ட நிகழ்வுகளை விபத்துக்களை கேமராக்கள் மூலம் மீடியாக்கள் படம் பிடித்து அதை காசாக்குவதை தெரிந்து கொள்கிறான் தானும் அந்த தொழிலில் ஈடுபட கேமரா ஒன்றை வாங்கி அது போன்ற இடங்களுக்கு (ஆக்சிடென்ட் நடக்கும் இடங்களுக்கு) நியூஸில் பார்த்து சென்று படம் பிடிக்க முயற்சிக்கிறான். அதிலும் ஒரு சிரமம் ஏற்படுகிறது அவனுக்கு அதாவது காவல்துறையினர் பிற மீடியாக்கள் அனைவரும் வந்து சென்று படம் பிடித்து சென்ற பின்னே இவன் செல்ல நேரிடுகிறது. எப்படி காவல்துறையினரும் மீடியாக்களும் சீக்கிரமே அங்கு செல்கிறார்கள் என்பதை அலசி ஆராயும்போது அவனுக்கு சில தொழில்நுட்ப உதவிகள் தேவைப்பட்டது.
தன்னைப் போல வேலையில்லாத ஒரு இளைஞனை சந்தித்து அவனையும் தன் அசிஸ்டெண்டாக நியமித்துக் கொள்கிறான் தனக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளை வாங்கிக் கொள்கிறான் அதாவது காவல்துறையினர் வாக்கி டாக்கில் பேசும் விஷயங்களை; ரகசிய கோடுகளை டிகோடு செய்து சம்பவ இடத்திற்கு சென்று படம் பிடிப்பது இந்த ஹேக்கிங் முறை. தொழில்நுட்பத்துடன் வெற்றி கண்டு சம்பவ இடத்திற்கு பிற மீடியாக்களுக்கு முன்னரே செல்கிறான் இருப்பினும் அவனுக்கு அதில் திருப்தி இல்லை காவல்துறையினருக்கு முன்னரே செல்ல வேண்டும் என்பதே அவனது குறிக்கோள். ஓரளவு வருமானம் வந்து கொண்டிருக்கும் நிலைமையில் தொழில்நுட்பத்தை அதிகப்படுத்துகிறான் டி காவல்துறைக்கு வரும் கம்பளைண்ட் அவற்றினை வைத்து காவல்துறைக்கு முன் நேரமே சம்பவ இடத்திற்கு செல்லும் கதாநாயகனுக்கு பல திடுக்கிடும் காட்சிகளை வீடியோவாக படம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
படம் இங்கிருந்து விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது காவல்துறையினருக்கு முன்னமே இவன் எப்படி செல்கிறான் என்பது காவல்துறைக்கும் பிற மீடியாக்களுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து இவனுடைய வீடியோக்களை பார்த்து வியக்கின்றனர் நல்ல பணமும் காசும் இவனுக்கு கிடைக்கப்பெறுகிறது மேலும் கதாநாயகன் ஆரம்பத்திலிருந்து தனக்கு தேவையானது என்றால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வான் என்கிற மனநிலையை நம் அனைவருக்கும் இயக்குனர் உரித்தாக்கிக் கொண்டே வருகிறார் பல காட்சிகளில்.
கதாநாயகன் ஒரு கொலை நடந்த இடத்திற்கு காவல்துறைக்கும் சக மீடியாக்களுக்கும் முன்னமே சென்று படம் பிடித்து விடுகிறான் கொலை நடந்த இடங்கள் அதற்கான கருவிகள் அனைத்தையும் படம் பிடித்தது மட்டும் இல்லாமல் கொலை செய்தவர்கள் வெளியே வரும் காட்சிகளையும் படம் பிடித்து விடுகிறான் இந்த ஒரு காட்சிக்கு இந்த படத்தை பார்க்கலாம். பின்பு தனது உதவியாளர் உடன் கொலை நடந்த இடத்தையும் அதற்கான கருவிகளையும் காசாக்கி விட்டு கொலைகாரர்களைத் தத்ரூபமாக படம் பிடித்த வீடியோ கிளிப்பை மட்டும் எடிட் செய்து வைத்துக் கொள்கிறான். காவல்துறையிலிருந்து அவனுக்கு விசாரணை வருகிறது எப்படி சென்றீர்கள்? எப்படி படம் பிடித்தீர்கள் என்னவென்றெல்லாம் உண்மையை கூறாமல் நான் இதை சரியாக சென்று கொண்டிருந்தேன் அப்போது சத்தம் கேட்டது அப்படியே படம் பிடித்தேன் கொலைகாரர்களை நான் பார்க்கவில்லை என்று பொய் சொல்கிறான். பின்பு கொலைகாரர்களின் வீடியோ கிளிப்பை வைத்துக்கொண்டு அவன் காசாக்கும் விதம் நம்மை பிரமிக்க வைக்கும் இதற்குப் பின் நடக்க போகும் சுவாரசியங்கள் அனைத்தும் நீங்கள் இந்த படத்தை பார்த்ததற்கான பரிசு.
பலம் : படத்தின் வித்தியாசமான திரைக்கதை திரில்லிங் அனுபவம், மெல்லிய பின்னனி இசை.
பலவீனம் : மீடியா சம்பந்தப்பட்ட விஷயங்கள் டிஆர்பி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதற்கு உண்டான வசனங்கள் சற்றே குழப்பமாகவும் புரியாமலும் அமைந்திருக்கின்றன.
மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.
நன்றி
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140