தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 15 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 15 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
15.தாய்ப்பால் வகுப்பறை-ΙΙΙ

பள்ளிக்கூடத்தில் தான் வீட்டுப் பாடம் தருவார்கள், இங்கேயுமா? ஆம், மருத்துவமனையில் கற்றுக் கொண்ட விசயங்களை வீட்டிலே தனிமையில் அமர்ந்து பிள்ளையும் நீங்களுமாக பயிற்சி எடுக்க வேண்டாமா? என்ன தான் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாலும் தனியாய் ஒரு விசயத்தை செய்யும் போது, நம்மைத் தனியே விட்டு இனி நீதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தள்ளிவிடும் போதும் தான் இன்னும் நிறைய விசயங்களைப் புரிந்து கொள்ளவே முடியும்.

வீட்டிலிருக்கிற காலங்களில் உண்டாகிற சந்தேகங்களை நம் செவிலியரிடம் அலைப்பேசியில் பேசி குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் தாய்ப்பால் புகட்டி பிள்ளையை வளர்த்தெடுத்த பின்பாக நாற்பத்திரண்டு நாட்கள் கழித்து பிள்ளைக்கு முதல் தவணையாகத் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைக்கு நாம் செல்ல வேண்டியிருக்கும் அல்லவா! அப்போது வீட்டில் செய்த வீட்டுப்பாடத்தின் மூலம் பிள்ளைகள் எப்படித் தேறியிருக்கிறார்கள், எவ்வளவு எடை கூடியிருக்கிறார்கள், இன்னும் எத்தகைய கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும், எத்தகைய உணவுகளைப் பிள்ளைக்கு எந்த வயதிலிருந்து கொடுக்கலாம் என்பன உள்ளிட்டவைகளையும் கேட்டுத் தெளிந்து கொண்டு வீடு வந்து சேரலாம் தானே!

மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டிற்கு கிளம்புகையில் மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் கேட்டு விடைபெற்றுக் கொள்ளும் முன்பாக சில விசயங்களில் நாமுமே தெளிவு பெற வேண்டியிருக்கிறது. வீட்டிற்குச் சென்ற பின்பாக தாய்ப்பாலூட்டலிலும், குழந்தை வளர்ப்பிலும் ஏதேனும் சந்தேகமிருக்கையில் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைத்துப் பேசலாமா, நேரில் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாமா? மீண்டும் அடுத்து எப்போது வந்து குழந்தையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியிருக்கும், அதற்கு இடைப்பட்ட காலங்களில் என்னென்ன மருந்துகளைத் தொடர்ந்து நாங்கள் எடுக்க வேண்டியிருக்கும், மேலும் தன்சுத்தம், மார்பகம், குழந்தை பராமரிப்பு மற்றும் தாயிற்கான உணவுகள் தொடர்பாக ஏதேனும் முக்கிய ஆலோசனைகளைக் கேட்டுவிட்டு வீடு திரும்பலாம்.

வீடு திரும்பியவுடனே தான் நம்முடைய வீடுகளில் வழக்கமாயிருக்கிற சம்பிரதாய நடவடிக்கைகள் துவங்கிவிடுகிறதே! அப்போது பிள்ளை பெற்றவள் புகுந்த வீடு தீட்டாகிவிடுகிறது, அதனால் தானே பதினாறாம் நாள் வெள்ளையடித்து தீட்டைக் கழிக்கிறார்கள். அவள் புழங்குகிற பாத்திரங்கள்கூட அச்சமயத்தில் தீட்டாகிவிடும், அவற்றைத்தான் வீடு கூட்டுதல் என்று பழையனவற்றைக் கழித்துப் புது பாத்திரங்களை வாங்குகிறார்கள். அவர்களைச் சந்திக்கிற மனிதர்களுமே தீட்டுப்பட்டுவிடுவார்கள் என்பதால் தான் வீட்டில் தீட்டுக்கழிக்கிற பதினாறாம் நாள் வரையிலும் யாரும் வந்துசேர மாட்டார்கள். வீட்டில் கெட்ட ஆவிகள் நுழைந்துவிடக் கூடாதென்று மாதவிலக்கு உள்ளானபோது உலக்கையைப் போட்டவர்கள், இப்போது இரும்பினை வாசல் பார்த்துப் போட்டு வைப்பார்கள்.

இக்காலத்தில்தான் நற்குணமான வயசாளிகள் வந்து பிள்ளைக்குச் சேனை வைத்தால் அவர்களைப் போலவே நல்ல குணமாய் வருவார்கள் என்று தேனை, சர்க்கரைப் பாகுவை, பழைய கஞ்சியைக்கூட நாவில் தொட்டு வைக்கிற பழக்கமெல்லாம் நடக்கும். சில ஊர்களில் கழுதைப்பால் கொடுப்பது, கழுதைக் காதிலிருந்து கீறியெடுத்த இரத்தத்துளியை பஞ்சில் நனைத்து வாயில் சொட்டுவிடுவது உள்ளிட்டவைகளைச் செய்தால் சீக்கு அண்டாது, மஞ்சள்காமாலை வராது என்பது போன்ற அவர்களின் வழக்கமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவர்.

பதினாறாம் நாள் விசேசத்தன்று ஒவ்வொரு சமூகத்திலும், மதத்திலும், பொருளாதாரம், தொழில், வழிபாடு சார்ந்து வெவ்வேறான சம்பிரதாயங்களைச் செய்வார்கள். அப்போது பிள்ளைக்குப் பேர் வைப்பது, அரைஞாண் அணிவிப்பது, தொட்டில் போடுவது உள்ளிட்ட சம்பிரதாயங்களெல்லாம் நடக்கும். அப்போதுதான் ஊர் உறவினர்களெல்லாம் ஒன்றுகூடி வந்து பிள்ளையைப் பார்த்து பாராட்டி சீராட்டுவதும், பெற்ற தாயை வாழ்த்திப் போற்றுவதும் எல்லாம் நடக்கும். அதேசமயத்தில் வந்தவர்கள் பிள்ளையின் பாலினம் சார்ந்து நாசுக்காக சொல்லிச் செல்வதும், பிள்ளையின் எடை வத்திப் போவது பற்றிய நெருப்பைக் கிள்ளிப் போட்டுப் போவதுமான இருக்கையில் புட்டிப்பால், சத்துமாவு, டானிக் என்று செயற்கையாக பாலூட்டலுக்கு தாயினை நகர்த்துவதும் நடக்கும்.

ஆக, இதிலிருந்தெல்லாம் ஒரே ஓட்டமாக தப்பிப்பிழைத்து கையோடு பிள்ளையையும் தப்புவித்து அவர்களுக்கு முழுக்க முழுக்க தாய்ப்பால் மட்டுமே தந்து வளர்த்தெடுப்பதெல்லாம் ஓட்ட பந்தயத்தைவிட அரியதொரு சாதனைதான். மேலும் வீட்டிலிருக்கிற காலங்களில் தாய்ப்பால் தொடர்பான சிக்கல்கள் எழும்போதுகூட அருகிலே உறவினர்கள் எவரேனும் பாலூட்டிக் கொண்டிருக்கையில் அவர்களிடம் உரிமையோடு போய் தாய்ப்பால் தொடர்பாகக் கலந்தாலோசித்துக் கொள்ளலாம். நம் பிள்ளைக்குப் பாலில்லை என்கிற போது அவசியப்பட்டால் அவர்களிடமே கொடுத்து பாலூட்டி அமர்த்தச் செய்யலாம். ஏனெனில் மனிதகுல வரலாற்றில் பெற்ற பிள்ளைக்குச் சகோதரி பாலூட்டிய, அத்தை பாலூட்டிய, அம்மா பாலூட்டிய நிகழ்வுகளெல்லாம் கூட நிகழ்ந்த மண்ணிது.

வீடுகளில் தாய்ப்பாலு புகட்டுவதற்கென தனியொரு இடத்தை ஒதுக்கிடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். விருந்தினர்கள் திடுதிப்பென்று உள்நுழைகிற போது அசூசையாக அம்மாவிற்கு தோன்றாதளவிற்கு இடமிருந்தால் போதுமானதுதான். குழந்தையின் உடலுக்கு போதிய கதகதப்பு அவசியமாயிருப்பதால் அம்மாவின் தோலோடு நெருக்கம் தேவைப்படுகிற அதேசமயத்தில் வீடும் நல்ல வெளிச்சத்தோடு, கூடிய காற்றோட்டத்தோடு இருப்பது நல்லது. பாலூட்டுகிற பிள்ளையைப் போர்த்துவதற்கென தனியே துணிகளை நன்கு துவைத்து வெயிலில் உலர வைத்துப் பயன்படுத்துகையில் ஏனைய பூச்சிகள் வந்து பிள்ளையை துன்புறுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைக்கு மெத்தையென்றில்லாமல் வெறுமனே காட்டன் துணியில் போர்த்தி விரிப்பில் கிடத்தினாலே போதுமானதுதான். எப்போதும் தொட்டிலில் போடுவது என்றில்லாமல் அம்மா அயர்ந்து தூங்கியெழுகிற போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் பாலூட்டும் இடத்தில் அதற்குத் தேவையான அத்தனை பொருட்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முதுகுக்கும் மடியில் பிள்ளையை தாங்கிக் கொள்வதற்கான தாய்ப்பால் தலையணைகள், காட்டன் துண்டுகள், குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்பாகத் தேவைப்படுகிற மாற்று உடைகள், வெந்நீர் நிரப்பப்பட்ட பாட்டில்கள், தாய்ப்பால் நைட்டிகள், தாய்ப்பால் பிழிந்தெடுத்து சேகரிக்கப் பயன்படுகிற பொருட்கள், தாய்ப்பாலூட்டும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய டானிக் மாத்திரைகள், மகப்பேறு மற்றும் தடுப்பூசி அட்டையென அருகாமையிலே வைத்துக் கொள்ளலாம். அதேபோல முக்கியமாக மருத்துவர், செவிலியர், மருத்துவமனை அலைப்பேசி எண், தடுப்பூசி அட்டவணை நாட்கள் போன்ற அத்தியாவசிய நாட்கள், நம்பர்களை டைரியில் குறித்து வைத்துக் கொண்டு அவசியப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்

நூல் அறிமுகம்: என்.மாதவனின் “காலந்தோறும் கல்வி” – சுமி ஹரி

நூல் அறிமுகம்: என்.மாதவனின் “காலந்தோறும் கல்வி” – சுமி ஹரி




நூல் : காலந்தோறும் கல்வி
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ. ₹90/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

சமூகத்தில் வளரும் தலைமுறைக்கு வாழ்க்கை நெறிகள், உலகத்தின் மீதான பார்வை, வாழ்க்கை நடத்துவதற்கான அடிப்படைத் திறன் இவை அனைத்துமே கல்வி என்ற ஒன்றினால்தான் பெருமளவு கடத்தப்பட்டிருக்கிறது. ஒரு சமூகத்தினருக்கு கல்வியைத் தடை செய்திருந்த சமயமும் இருந்தது. அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும், இழப்புகளும் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்தது. அப்படி உலக அளவிலும், இந்தியாவிலும் கல்விமுறையில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை விளக்குகிறது இந்த நூல்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்விப் பணிகளில் தனக்கு கிடைத்த அனுபவங்கள்தான் இந்த புத்தகத்தை எழுத உதவியாக இருந்ததாக முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். பல இடங்களில் கல்வி பற்றி உரையாடப் போகும்போது, மற்றவர் கேட்கும் கேள்விகளும், அதன் பதில்களும் கூடவே பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு தேடியவைகளுமே பல தகவல்களை பெற உதவியதாக கூறுகிறார். கல்வியாளர்கள் பலரின் கருத்தான குழந்தைகளுக்குச் சுதந்திரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதன் பலனை நேரில் கண்டு உணர்ந்ததையும் சொல்கிறார். அப்படி சுதந்திரம் கொடுக்கப்பட்ட குழந்தைகள் பொறுப்பானவர்களாக மாறியதையும் தன் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலான கல்விப்பணியில் நேரில் கண்டதைப் பகிர்ந்திருக்கிறார்.

சமூகத்தின் அடிப்படையாக இருப்பதில் மிகவும் முக்கியமானது குடும்பங்களும், பள்ளிகளும். மனித வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண, பயிற்சி பெற வேண்டிய இடங்கள்தான் இவை இரண்டும். இதில் நகர்ப்புறத்தில் வாழ்கின்ற குழந்தைகளும், கிராமப்புற பிள்ளைகளும் இடையே பள்ளிச் சூழலில் இருக்கும் வேறுபாட்டை விளக்கியிருக்கிறார். நகரத்தில் இருக்கும் பிள்ளைகளின் பரபரப்பான காலை நேர பள்ளி செல்லும் வைபவம், கிராமப் பிள்ளைகளிடையே மிக அமைதியாகவே நகர்கிறது. காரணம் கிராமப்புறங்களில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் சுயசார்பு உடையவர்களாக தங்களின் வேலையை அவர்களே செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். இந்நிலைக்கான சூழ்நிலையை குடும்பங்களில் நடக்கும் உரையாடல் வழியாக சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்த இரு பள்ளிகளுக்கு இடையே மாணவர்களின் மாற்றம், வளர்ச்சி போன்றவை நம்மையும் யோசிக்க வைக்கிறது.

அடுத்த பகுதி, கல்வியின் பரிணாமம் எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது.

மன்னர் ஆட்சியிலிருந்த கல்வி முறை அப்போதைய தேவையின் அடிப்படையில் இருந்தது. போர் பயிற்சிகளான சிலம்பம், வாள், குதிரையேற்றம் போன்றவையும் கூடவே படைத் தேவைகளை கவனித்தல், வரிவசூல் கணக்கு, அதற்கான பராமரிப்பு இவையே கல்விமுறையாக இருந்தது. இதில் முக்கியமான ஒன்று முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமே இந்த வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. மன்னராட்சியின் தொடர்ச்சியாகத்தான் முதலாளித்துவம் வடிவெடுத்தது என்பதையும் மறுக்க முடியாது.

எனவே, மற்றவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பைக் கொடுக்கவேண்டும் என்ற கவலை யாருக்கும் இல்லாமல் போய்விட்டது. மற்ற சமூகத்தினரிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் கல்விப் பரவல் நடக்காமல் இருந்ததற்கு ஒரு காரணம். அனைத்திற்கும் மேலாக சமூகத்தில் மேலோங்கியிருந்த சாதிய ரீதியான பாகுபாடுகளும் கல்வியை அனைவருக்குமான ஒன்றாகப் பார்க்கப்படவில்லை.படைப்பிரிவு ஊழியர்களாக வாழும் நிலையே சாதாரண மக்களுக்கு வெகுகாலம் இருந்தது.

இதற்குப் பின் நாட்டில் பல இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த முற்போக்கு இயக்கங்களும் பல்வேறு சிந்தனையாளர்களும் தொடர்ந்து கல்விக்கான சட்டங்கள் வேண்டி போராட்டங்களைத் தொடங்கினர். இதற்கு அடிபணிந்தே மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியிருக்கிறது. இது நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகில் பல இடங்களிலும் நடந்திருக்கிறது.

கல்வியை ஒரு சமூக ஏற்பாடாக மாற்றுவதில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. மேலும் பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டாலமி போன்ற கிரேக்க தத்துவ ஞானிகளின் படைப்புகள் ஐரோப்பாவில் பரவி சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் சாதிய ரீதியான பிரிவுகள் பலமாக வேரூன்றி இருந்தது என்றால், மற்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவம் செல்வவளமும் அப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு வாய்ப்பாக இருந்தது.

இதைத்தொடர்ந்து தொழிற்புரட்சியினால் கல்விப் பரவல் எப்படியிருந்தது என்பதை விளக்குகிறார். இயந்திரங்களின் துணையோடு பொருட்களின் உற்பத்தி அதிகரித்த போது அதைப்பற்றிய அளவீடுகள், எண்ணறிவு, எழுத்தறிவு போன்றவை பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தேவைப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவையும் வளர்ந்தது. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அளவீட்டு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இதைப்பற்றி படிப்பறிவு உள்ள தொழிலாளர்களுக்கு அனைத்து நாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகரித்தது. இது கல்விப் பரவலுக்கான அடுத்த நிலை என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

குழந்தைகளுக்கான நர்சரி பள்ளிகள் தொடங்கியது இதே காலகட்டத்தில்தான். ஆண்களோடு பெண்களும் தொழிற்சாலைகளில் பணிபுரியத் தொடங்கினார்கள். ஆண்கள் பணிபுரியும் போது ஏற்படும் சிக்கலை விட பெண்கள் வேலைகளில் ஈடுபடும்போது குழந்தை பராமரிப்பு பெரிய சவாலாக இருந்தது. குழந்தை பற்றிய கவலை இல்லாமல் பணிபுரிய வேண்டுமானால் அவர்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருந்தது. இதுவே நர்சரி பள்ளிகள் தொடங்கிய காலகட்டம். பின்னாளில் அது பணி புரியாத பெண்களும் உபயோகிக்கும் இடமாக மாறிவிட்டது. இப்போதோ இந்த மழலையர் கல்வியிலும் பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது.

நமது நாட்டின் அரசியல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக ஏற்பாடுகளுக்கும் ஆரம்பகாலத்தில் உதாரணமாக அமைந்தது இங்கிலாந்து நாட்டின் சமூக ஏற்பாடுகள்தான். இந்த அமைப்பின் பல படிநிலைகளை கடந்துதான் ஆரம்பக்கல்வி கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் மெல்ல குறையத் தொடங்கியது. இந்த சமயத்தில் அரசாங்கம் இலவசமாகக் கல்வி கொடுக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தது. நிறைய பொருட் செலவு ஏற்படுவதை கருத்தில் கொண்டு தனியார் கற்பிக்கும் பள்ளிகளை அரசு ஊக்குவித்தது. இப்படித் தொடங்கியதுதான் இன்று வியாபாரமாக மாறி விட்ட தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்குக் காரணம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கல்விக்கான சுயமான முயற்சிகள் தொடங்கிய காலகட்டம். ஒருபக்கம் பிரிட்டிஷ் அரசின் ஆசியோடு செயல்பட்ட கிறிஸ்துவமத கல்வி நிறுவனங்கள் கல்விப் பணி செய்து கொண்டிருந்தன. மறுபக்கம் இந்தியாவின் கலாச்சாரத்தை காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு பிரம்ம சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் இவை களத்தில் இருந்தன.

இந்த சமயத்தில் கல்விக்கான திருத்தங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கோகலே அவர்களும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இவர் அதற்கான பல ஆலோசனைகளைச் சொல்லி, சட்டசபையிலும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் ஆதிக்க சக்திகளின் ஊடுருவலால் சட்டசபையில், ஆரம்பக் கல்வி அளிப்பதற்கு எதிராக முப்பத்தியெட்டு வாக்குகளும் ஆதரவாக பதிமூன்று வாக்குகளும் கிடைக்கின்றன. பல போராட்டங்களுக்குப் பிறகே இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அடுத்து, தொடக்கம் முதலே ஆசிரியர்கள் கடந்து வந்த விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார்.
ஆங்கிலேய அரசின் ஊழியர்களாக ஆசிரியர்கள் இருந்தபோது அவர்களுக்கு சற்றும் சுதந்திரம் இல்லாமல் இருந்தது அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேட்கும் இயந்திரங்களாகவே இருந்தனர். அரசு ஊதியம் மிகக் குறைவாக இருந்தது. எனவே தங்கள் பொருளாதார தேவைகளுக்காக அரசின் மற்ற வேலைகளிலும் ஈடுபட்டனர். உதாரணமாக கால்நடைகள் கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு குடும்ப நலத் திட்டங்கள் போன்றவை. சில சமயம் கட்டாயப்படுத்தப்பட்டு இந்த பணிகளைச் செய்தனர். அதுவே இன்று வரை தொடர்கிறது. அந்த சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தேவை என்ற போது ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் கூட ஆசிரியர்கள் ஆக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் ஆசிரியர் கல்வி, மற்றும் பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்திருக்கிறது.

அடுத்து தேர்வு முறையில் வர வேண்டிய மாற்றங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் இன்று தேர்வு என்றாலே பயம் என்ற நிலை வந்துவிட்டது. மாணவர்கள் தேர்வு காலகட்டத்தில் மன அழுத்தத்திற்குத் தள்ளப்படும் நிலைக்கு வந்து விட்டார்கள். மதிப்பெண்கள் விரக்தி மனப்பான்மைக்குச் சென்று தற்கொலைக்குத் தூண்டும் விதமாக மாறிவிட்டது. இதை எப்படி மாற்றலாம் என்று தன் கருத்தையும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் சமமானவர்கள்தான். அதுபோல அவர்களின் கல்வி கற்கும் முறையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். சமூகம், அரசு இரண்டுமே பிள்ளைகளை அவர்களின் சொத்தாக கணக்கில் கொண்டு, கற்பிப்பதில் பாகுபாடே இல்லாமல் செய்ய வேண்டும். அது போன்ற கல்வி அவர்களை உன்னதமான இடத்திற்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை என முடித்திருக்கிறார். ஆரம்ப காலம் முதல் இன்று வரையான கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களை பல உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆரம்பத்திலிருந்து கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றின் வளர்ச்சி நிலைகள் பற்றி அறிந்து கொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

Sumi Hari
சுமி ஹரி

கோடை விடுமுறையில் விஞ்ஞானம் கற்பதற்கு மாணவர்களை அழைக்கும் இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சி முகாம்

கோடை விடுமுறையில் விஞ்ஞானம் கற்பதற்கு மாணவர்களை அழைக்கும் இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சி முகாம்

இந்தியாவில் "இளைஞர்களிடையே இளம்வயதிலே விண்வெளி தொழில்நுட்பங்களில் ஆர்வத்தை உருவாக்கும் விதமாக 'யுவிகா' எனப்படும் இளம் விஞ்ஞானி திட்டம் செயல்படுகிறது. 'யுவிகா' என்பது 'யுவ விக்யானி கரியக்ரம்' என்பதன் சுருக்கம். ஜனவரி 18, 2019 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த விண்வெளி பயிற்சித்…