'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது – அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு



'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

இஸ்லாமியர்களைப் பெருமளவில் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக -ஆர்எஸ்எஸ் கூட்டணியைச் சார்ந்தவர்கள் சமீபத்தில் ஹரித்துவாரிலும், தில்லியிலும் விடுத்த அழைப்புகள் இதுவரையிலும் இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டி தங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து திரட்டி வந்தவர்களின் செயல்பாடுகள் மூர்க்கத்தனம் கொண்டவையாக இப்போது மாறியிருப்பதையே காட்டுகின்றன. முன்னெப்போதுமில்லாத வகையிலே முஸ்லீம்களுக்கு எதிராக முழு அளவிலான ஆயுதப் போருக்கு இவ்வாறு அழைப்புகள் விடுக்கப்படுவது குறித்து நரேந்திர மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் மௌனம் காத்து வருகின்றனர். அவர்களிருவரிடம் உள்ள மௌனம் இரண்டு வழிகளில் இருப்பதாகக் காண முடிகிறது. ‘யாரும் தண்டனைக்குட்பட மாட்டோம்’ என்ற நம்பிக்கையை அளிப்பதற்கான அடையாளமாக, பாதுகாப்பின்மை குறித்து தங்களிடம் எழுந்துள்ள சந்தேக உணர்வின் அடையாளமாக என்று இரண்டு வழிகளில் அவர்களது மௌனம் இருக்கிறது. அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு குறித்த வாதங்களை இந்தக் கட்டுரையில் நான் முன்வைக்கிறேன்.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

என்னுடைய வாதம் உத்தரப்பிரதேசத் தேர்தல், தனக்கு முக்கியமான புனிதம் நிறைந்த பகுதிகளில் தான் அவமானப்படுத்தப்படுவதைப் பற்றிய பாஜகவின் கவலை குறித்ததாக மிகவும் வழக்கமான அணுகுமுறைவாதமாக இருக்கப் போவதில்லை. இனப்படுகொலைவாதம் என்று நான் குறிப்பிடுவதையே நாடு இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இனவெறி தேசியவாதங்கள் அனைத்தையும் பாதிக்கின்ற ஆழ்ந்த தர்க்கத்திலிருந்தே இந்த இனப்படுகொலைவாதம் உருவாகின்றது. அதன் தர்க்கம் தேசியவாதத்திற்கும், வன்முறைக்கும் இடையிலான தொடர்புடன் நன்கு பிணைக்கப்பட்டுள்ளது. மார்க்ஸ் மற்றும் மார்க்சிஸ்டுகள் பலரும் அதனை ‘டிரெட்மில் விளைவு’ என்றே அடையாளப்படுத்துகின்றனர்.

தேசியவாதத்துக்கும், வன்முறைக்கும் இடையிலுள்ள உறவு அந்தரங்கமானது, இருவழியிலானது என்ற வாதங்களை பிறிதொரு கட்டுரையில் முன்வைத்திருந்தேன். ‘தேசத்தின் பெயரால் மக்கள் இறந்து போவார்கள், தேசியவாதம் மக்களைக் கொல்வதை நோக்கியே இட்டுச் செல்லும்’ என்று கருதுவதற்கே நாம் பழகியிருக்கிறோம். தேசியவாதம் தீவிரமடையும் போது அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தேசத்திற்காக இறந்து போவது அல்லது மற்றவர்களைக் கொல்வது போன்ற செயல்களுக்குத் தயாராக உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அனைத்து தேசியவாதங்களும் தங்களிடம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான கருவையே சுமந்து கொண்டுள்ளன.

இஸ்லாம் மட்டுமே ஜிஹாதிகளை உருவாக்குகிறது என்ற சிந்தனை நம்முடைய காலத்தின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாகும். போர் வீரன், தியாகி என்ற அந்தஸ்தை ஒருசேர அடைவது என்ற நம்பிக்கையின் பேரிலே தீக்குளிப்பதற்கு அல்லது தற்கொலை செய்து கொள்வதற்குத் ​தயாராக இருக்கின்ற ஒவ்வொரு ஹிந்து, கிறிஸ்தவர் அல்லது யூதரும் தீவிர தேசியவாதத்தின் உள்ளார்ந்த தர்க்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றனர். தேசியவாதத்தின் எக்காளத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தாத ராணுவம், காவல்துறைப் படை, கமாண்டோ படை போன்றவை உறுதியுடன் இருப்பதற்கான சாத்தியமே கிடையாது. ஒருவேளை அவ்வாறு இருக்குமானால் அவை திறனற்றவையாகவே இருக்கும். தேசியவாதத்திலிருந்து வன்முறைக்கு இட்டுச் செல்கின்ற பாதை பற்றி அதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை.

தேசிய-அரசு குறித்த நவீன வடிவத்தின் வருகைக்குப் பிறகு குழு வன்முறைகள் புதிய செயல்பாட்டைப் பெற்றிருக்கின்றன. அது தேசத்தின் மீதான பற்றுதல் என்ற சிந்தனைக்கு எரிபொருளை ஊற்றுவதாக மாறியிருக்கிறது. அதை நாம் காணக்கூடிய முக்கிய இடமாக பயிற்சி, ஒத்திகை, உண்மையான போர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேசம் குறித்த புனைகதைகள், கருத்துருவாக்கங்களின் மீதான பற்றுதலை உருவாக்குகின்ற நவீன ராணுவங்களின் உருவாக்கம் இருக்கிறது. பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை தேசம் என்பது கருத்துருவாக, கற்பனையாக, எட்டாத தொலைவிலே இருப்பது என்பதால் அவர்களிடத்தே தேசத்தின் மீதான விசுவாசத்தை உருவாக்குவது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகும். அத்தகைய கருத்துருவாக்கத்தின் மீதான விசுவாசத்தை உருவாக்குவதற்கான உறுதியான வழிகளாகவே தேசத்திற்காக இறந்து போவது, மற்றவர்களைக் கொல்வது போன்ற செயல்பாடுகள் உள்ளன. அவை தியாகம், கௌரவம், தூய்மை போன்ற அனைத்து தேசியவாதங்களுடனும் ஆழ்ந்து பிணைந்துள்ள சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன.

அதிகாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வன்முறைகளின் மூலம், தேசத்தின் புனிதத்தன்மை மீதான உணர்வு புதுப்பிக்கப்பட்டு, புத்துயிர் தரப்பட்டு மீட்டெடுக்கப்படுகிறது. எப்போதும் கிடைக்கின்ற வகையிலே தேசியவாத இயந்திரத்திற்குத் தேவையான புனிதமான எரிபொருளைப் புதுப்பித்துக் கொள்ளும் வழிகளாகவே சமீபத்தில் மோடியும் அவரது கூட்டாளிகளும் வாரணாசி போன்ற இடங்களில் நடத்தியுள்ள நாடகக் காட்சிகள் இருந்திருக்கின்றன. மத்திய தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது, பாடப்புத்தகங்கள், சமூக ஊடகங்கள், அதிகாரப்பூர்வ பிரச்சாரங்கள் மூலமாக வரலாற்றை மாற்றி எழுதுவது, காஷ்மீரைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாக அடிபணிய வைப்பது போன்ற முயற்சிகளும் அதுபோன்றே இருக்கின்றன. இந்திய ஆயுதப் படைகள் இந்திய மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அனைத்து இடங்களிலும் (பழங்குடியினர், மாவோயிஸ்ட் பகுதிகளில், வடகிழக்கில், அனைத்து எல்லை மாநிலங்களில்) வன்முறை என்பது பயனுள்ள செயல்பாட்டைக் கொண்டுள்ள (அரசு ஆதரவுடன் திணிக்கப்படுகின்ற ஒழுங்கு) போதிலும் – அது தனக்குள்ளே பகட்டான, நாடகரீதியான செயல்பாட்டையும் கொண்டுள்ளது. தேசியவாதம் உயிர் பிழைத்திருக்கப் போராட வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாகவும் அது இருக்கிறது.

டிஜிட்டல் ஊடகங்கள் இன்றைய நிலைமையில் உள்ளூர் நிகழ்வுகள் தேசிய அரங்கில் உடனடியாக, பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கான உத்தரவாதத்தைத் தருபவையாக இருக்கின்றன. ஆனாலும் திட்டமிட்டு இந்திய முஸ்லீம்களை ஒழுங்கமைக்கப்பட்ட இனப்படுகொலை செய்வதற்காக ஹிந்துத்துவா விடுத்து வருகின்ற அழைப்புகளில் நாம் காண முடிகின்ற சுயமுரண்பாட்டின் முக்கியமான தருணத்தை நோக்கியதாக இருக்கின்ற அது மிகவும் எளிமையானதாக இருக்கவில்லை.

சிந்தனையாளர்கள் – குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் முதலாளித்துவத்தில் டிரெட்மில் விளைவை கண்டதைப் போலவே இங்கே இனப்படுகொலைவாதம் என்று நான் கூறுவதையும் காணலாம். இனப்படுகொலை வரலாற்றில் தேசியவாதத்தின் குறைந்தபட்சத் தேவையை நிலைநிறுத்துவதற்காக வன்முறைகளைப் பெருமளவிலே அதிகரிக்க வேண்டிய தருணமாகவே இனப்படுகொலைவாதம் அமைகிறது. முதலாளித்துவத்தைப் போலவே அது அமைப்புரீதியானதாக, ஒற்றைமயமாக்கலுடன், அச்சுறுத்திக் கைப்பற்றிக் கொள்வதாகவும் இருக்கின்றது. ஒட்டுமொத்தக் கவனம், அர்ப்பணிப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்களின் முழுமையான பங்கேற்பைக் கோருவதாகவும் அது இருக்கிறது. இனப்படுகொலைவாதம் முதலாளித்துவத்தைப் போலவே வன்முறையின் அன்றாட உற்பத்தியைத் தக்கவைத்துக் கொள்ளப் பணிக்கப்பட்டிருக்கின்ற ஏராளமான தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி சுரண்டுகிறது. வன்முறையின் டிரெட்மில்லை எதிர்நோக்கி, வடிவமைத்து, அதிலிருந்து பயன்பெறுகின்ற சிறிய வகை தொழில்முனைவோர், மேலாளர்கள் போன்றவர்களுக்குப் பயனளிப்பதாக அது இருப்பதால், இனப்படுகொலைவாதம் மூலம் பலனைப் பெற்றுக் கொள்பவர்களாகவே அவர்கள் கருதப்படுவர்.

மோடி இந்தியா இப்போது தேசியவாதத்தின் மிக முன்னேறிய கட்டமான இனப்படுகொலைவாத கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமர்சகர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, இனப்படுகொலை என்ற இயந்திரத்திற்கான எரிபொருள் வெளிப்படையாகவே தேவைப்படுகின்றது. இந்தியாவில் ஆங்காங்கே, தானாக எழுகின்ற, உள்ளூர் வன்முறை நிகழ்வுகளால் திருப்தியடைய முடியாத தேசியவாத இயந்திரத்தின் வெறித்தனமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் அது இருக்கிறது. முறையான வலுவூட்டல், அணிதிரட்டல் ஆகியவற்றுடன் அரசிடமிருந்து அல்லது அரசிற்கு மிக நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்து ஆட்சிக் கொள்கையும் அதற்குத் தேவைப்படுகிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வான்சீ மாநாட்டில் இறுதித் தீர்வு அதிகாரப்பூர்வ நாஜிக் கொள்கையாக மாற்றப்பட்டதற்கு இணையானதாகவே 2021 டிசம்பர் 17-19 நாட்களில் நடைபெற்ற ஹரித்துவார் சன்சத் கூட்டம் அமைந்திருந்தது. இப்போதும், அதைத் தொடர்ந்து காவியுடை உடுத்திய ஆண்களும் பெண்களும் முஸ்லீம்களுக்கு எதிராக விடுக்கப்பட்டு வருகின்ற போருக்கான அழைப்புகளுக்கு ஏற்பாடு செய்திருப்பது நாஜிக்களின் கீழ் வாஃபன்-எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஈடான பாத்திரத்தை பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரத்தின் சாது-அகாடா தரப்பு கொண்டிருப்பதற்கான விளக்கத்தையே தருகின்றது. மேலும் அது மையப்படுத்தப்பட்ட தலைமையைத் தேடுகின்ற பல்வேறு குண்டர்கள், கும்பல்கள், படைப்பயிற்சி பெற்றவர்கள் என்றுள்ள ஈட்டியின் முனையாகவும் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் தொடர்புடைய முக்கியமான நபர்களுக்கு எதிராக சமீபத்தில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், குறிப்பிடத்தக்க இந்தப் பொதுவெளி பேச்சுகள் குறித்து மோடியும் அமித்ஷாவும் மௌனம் காப்பது இன்றைக்கு இந்தியாவில் இனப்படுகொலைக்குத் தரப்பட்டிருக்கின்ற அதிகாரப்பூர்வ சட்டபூர்வமான தன்மையின் அலட்சியப்படுத்த முடியாத குறியீடாகவே இருக்கிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

நான் சொல்வது சரியாக இருக்குமென்றால், பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரத்தின் மிக உயர்ந்த மட்டத்திலே உருவாகியுள்ள பீதி, பதட்டம் நிறைந்த தருணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்த புதிய இனப்படுகொலைவாதம் எழுந்துள்ளது. அவர்களுடைய மனநிறைவு அல்லது மகிழ்ச்சிக்கான தருணமாக அது இருக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

இந்திய சமூகத்தில் அழிந்து போனவர்களாக முஸ்லீம்களை மாற்ற நினைக்கின்ற போர்க்குணமிக்க ஹிந்துத்துவாவின் நோக்கத்தால் வரையறுக்கப்படாத இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளதை இன்றைக்கு நடைபெறுகின்ற நாடகம் நமக்கு நினைவூட்டிக் காட்டுகிறது. தாங்கள் ஹிந்துத்துவக் கருத்தொற்றுமையில் அங்கம் வகிக்கவில்லை என்பதைக் காட்டுகின்ற வகையிலே – ஏறக்குறைய ஓராண்டு காலாமாக தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டிருந்து, தங்களை அடக்க நினைத்த மோடியின் மனவுறுதியை முறியடித்த இந்திய விவசாய சமூகங்களைச் சார்ந்த பிரதிநிதிகள்; கோபம் கொண்டவர்களாக, அரசியல்மயப்படுத்தப்பட்டவர்களாக, அதிகரித்து வருகின்ற எதிர்பார்ப்புகளின் விளைவான புரட்சியின் நாயகர்களாக பெரும் எண்ணிக்கையில் இந்தியா முழுவதிலும் இருக்கின்ற தலித்துகள் என்று இரண்டு முக்கியமான சக்திகளிடமிருந்து கோபம் வெளிப்பட்டிருக்கிறது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

ஆட்சிக்கு எதிராகத் திரும்பிய விவசாயிகள், ஹிந்துத்துவா எதிர்ப்பு தலித்துகள் என்று இந்த இரண்டு மக்களின் எண்ணிக்கை மேலோட்டமாகக் கணக்கிட்டாலும் குறைந்தபட்சம் இன்றைக்கு முப்பது கோடி இந்தியர்கள் என்ற அளவிலே இருக்கும். அந்த அளவிற்கான மிகப் பெரிய எண்ணிக்கையில் உள்ளோர் தற்போதைய ஆட்சிக்கு அடிபணிந்து போவதற்கான அறிகுறிகளையோ, அரசியல் மேடையில் இருந்து அமைதியாக வெளியேறிக் கொள்வதற்கான அறிகுறிகளையோ காட்டவில்லை.

அந்த முப்பது கோடிப் பேர் இந்தியாவின் இருபது கோடி முஸ்லீம்கள் மீதான ஹிந்துத்துவா வெறியின் இலக்காக இருக்கின்றனர். அதன் தர்க்கத்திற்கும், இன்றைய இனப்படுகொலைவாதத்தின் மையத்தில் உள்ள டிரெட்மில் விளைவுக்கும் ஏராளமான தொடர்பு இருக்கின்றது. இனப்படுகொலைக்கான அழைப்புகளை விடுப்பதன் மூலம் ஒருபுறத்தில் முஸ்லீம்களைப் பயமுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்கள் உண்மையில் இனப்படுகொலை செய்யப்படுவதற்கான ஆட்களாக தாங்கள் மாறி விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள், தலித்துகள், பிற எதிர்ப்புக் குழுக்களுக்கு விடுகின்ற எச்சரிக்கை சமிக்ஞையாகவே உள்ளது. மற்றொரு புறத்தில் இந்த குழுக்களைச் சார்ந்தவர்களுக்கு புதிய இனப்படுகொலைவாதச் செயலில் பங்கு கொடுத்து அவர்களை ஹிந்துத்துவா குடையின் கீழ் இழுத்துக் கொள்ளும் வகையில் ஆட்சேர்ப்பு உத்தியாகவும் அது இருக்கிறது. இனப்படுகொலை இயந்திரங்கள் எந்த வேகத்தில் இயங்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துவதையே இந்த இரட்டை உத்தி நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இனப்படுகொலைத் திட்டங்களுக்குத் தேவையான ஆட்களை முடிந்த அளவிற்கு வழங்குவதாகவும் அது இருக்கிறது.

இந்த புதிய இனப்படுகொலைவாதத்தை ஆளுகின்ற அரசிடம் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாகப் பார்க்கின்ற என்னுடைய வாதத்திற்கு இப்போது திரும்புகிறேன். மனித உரிமைகள் – குறிப்பாக இனப்படுகொலைக்கு இலக்கானவர்களின் உரிமைகள் – மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற மேற்குலகம் மற்றும் பிற அரசியல் சக்திகளின் அங்கீகாரம் மோடி, அவரது ஆட்சிக்கு இன்னும் தேவைப்படுகிறது. மற்ற இனவெறி எதேச்சதிகாரிகள் போலல்லாமல் மோடியால் அந்த வட்டாரங்களில் தன்னுடைய நம்பகத்தன்மையை இதுவரையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் அது இப்போது ஆபத்தில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தனது ஆதரவாளர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்புகளை விடுப்பதை அனுமதித்திருப்பது இந்த ஆட்சியிடம் உள்ள இனப்படுகொலை குறித்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. அதன் விளைவாக உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்பாளர்களின் பார்வையில் அவர்கள் மீதுள்ள பிம்பத்தின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. அதுவே அவர்களிடம் தற்போது ஏற்பட்டிருக்கும் விரக்திக்கான காரணமாக உள்ளது.

'Modi India’ has entered into genocide as the next stage of nationalism Article by Arjun Appadurai in tamil translated by T. Chandraguru. தேசியவாதத்தின் அடுத்த கட்டமாக ‘மோடி இந்தியா’ இனப்படுகொலைவாதத்திற்குள் நுழைந்திருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை | தமிழில்: தா. சந்திரகுரு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறப் போகின்ற பிற மாநிலத் தேர்தல்கள் இந்த புதிய இனப்படுகொலைவாதத்திற்கான காலம், இடங்களுக்குப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன என்றாலும் அவை பெரிய அளவிலே அல்லது புரிந்து கொள்ளக்கூடியவையாக இருக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் இந்த ஆட்சி சுதந்திரமான சட்டமன்றம், நீதித்துறை அல்லது பத்திரிகைகளுக்கான தேவைக்கு எதிராக தன்னையே பணயம் வைத்துக் கொண்டுள்ளது. அந்தப் பணயத்திற்காக இனப்படுகொலைவாதத்தை தங்களுடைய வெளிப்படையான அரசியல் தளமாக்கியுள்ள இந்த ஆட்சியும் அதன் ஆதரவாளர்களும் போதுமான இந்தியர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வைத்திருப்பது மிகவும் மோசமான பணயமாகும் என்றாலும் அதுவே ஒருவேளை இருள் கவிந்துள்ள இப்போதைய அரசியலில் நம்பிக்கைக்கான விடியலாகவும் இருக்கக் கூடும்.

https://thewire.in/politics/narendra-modi-india-genocidalism
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

Muranpattai Munvaithal - Munneduppin Avasiyam Book By Krishnakumar in tamil Translated By j. Shajahan Bookreview By M. Gopi Saraboji நூல் அறிமுகம்: கிருஷ்ணகுமாரின் முரண்பாட்டை முன்வைத்தல் – முன்னெடுப்பின் அவசியம் | தமிழில்: ஜே.ஷாஜஹான் – மு. கோபி சரபோஜி

நூல் அறிமுகம்: கிருஷ்ணகுமாரின் முரண்பாட்டை முன்வைத்தல் – முன்னெடுப்பின் அவசியம் | தமிழில்: ஜே.ஷாஜஹான் – மு. கோபி சரபோஜி




நூல்: முரண்பாட்டை முன்வைத்தல்
ஆசிரியர்: கிருஷ்ணகுமார்
தமிழில்: ஜே.ஷாஜஹான்
விலை: 50
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

இன்றைய கல்வி முறையில் பாடத்திட்டங்கள் சார்ந்து நிலவும் முரண்களையும், அதை கற்பிப்பதில் ஆசிரியர்களும், கற்பதில் மாணவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், சமூகம் சார்ந்த நடைமுறை நிகழ்வுகளிலிருந்து வரலாறு, அறிவியல் பாடங்கள் விலகி நிற்பதையும், ஆங்கிலவழிக் கல்வி மூலம் தனியார் பள்ளிகளின் எழுச்சியையும், அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சியையும் பற்றி இந்நூல் பேசுகிறது.  லேனிங் ப்ஃரம் கான்பிளிக்ட் என்ற தலைப்பில் கிருஷ்ணகுமார் எழுதியதை ஜே.ஷாஜஹான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

முரண்பாட்டை முன்வைத்தல்என்ற முதல் தலைப்பில் பிரதமர் இந்திரா படுகொலையின் தொடர்ச்சியாக சீக்கியர்கள் மீது நிகழ்ந்த வன்முறை சார்ந்த அரசின் செயல்பாடுகள், காந்தி படுகொலைக்கான காரணத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் பாடநூல்களில் பூசும் மதச் சாயங்கள் குறித்தான முரண்களை முன் வைக்கிறார். பொய்யான அல்லது நிலவும் சூழல், அரசியல் நிலைப்பாடு, சமூக நலன் கருதி மறைத்தோ, மேம்போக்காகவோ எழுதப்பட்ட பாடநூல்கள் மூலமாக மாணவர்களின் மனதில் நிஜத்திற்கு எதிரான கருத்துகளே வந்து அமர்வதாய் எச்சரிக்கிறார். வரலாற்றில் மிகையான தகவல்களை மட்டும் தந்து முரண்பாடுகளைத் தவிர்க்கும் பழைய கல்விமுறை மாணவர்களுக்கு எத்தகைய அறிவைத் தருகிறது? மாணவர்களுக்கு இந்த தேசத்தின் நிர்மானத்தை அது எப்படி புரிந்து கொள்ள வைக்கிறது?  என்பதன் வழியாக இளம் தலைமுறையினரின் அறிவுத் தேவையை நிறைவு செய்ய பழைய பாடத்திட்ட முறைகள் தடையாக நிற்கும் அவலத்தை முன் வைக்கிறார்.  நம்மால் இவைகளைத் துளியும் மறுக்க இயலவில்லை.

குழந்தைகளும் வரலாறும்என்ற இரண்டாவது தலைப்பில் அரசாங்கம் குழந்தைகள் விசயத்தில் தேச வரலாறை எப்படி முன்னெடுக்கிறது? அரசின் அந்த நோக்கம் குழந்தைகளிடம் முழுமையாக வெளிப்படுகிறதா? என்ற கேள்விகளை முன் வைக்கிறார். பண்டைய இந்தியா”, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா என நம் தேச காலவரிசையை  மூன்றாக்கி அதன் மூலம் முழுமையாக நம்முடைய தேசத்தின் வரலாறை அறிய வைக்கும் பாடத்திட்ட முறையும், நீண்ட நெடிய வரலாறை குறிப்பிட்ட பக்க வரையறைக்குள் அடக்க வேண்டும் என்ற நெருக்கடியும்  மாணவர்களிடம் புரிதலை சிக்கலாக்கி குழப்பத்தையே உருவாக்கும் என்கிறார். சுயமாக சிந்திக்க முடியாமல் மனனம் மூலமே எதையும் மாணவர்கள் அறியும் தன்மையைக் கொண்டிருக்கும் நம் பாடத்திட்ட முறை அந்த நிலையில் இருந்து புரிதல் நிலைக்கு மாறுவது இன்றைய தேவை என வாதிடும் நூலாசிரியரின் யோசனைகளை பாடத்திட்டக் குழுவினரும், அரசும் கவனத்தில் கொண்டால் குழந்தைகளுக்கு வரலாறை போதிப்பதன் நோக்கம் முழுமையடையும் என நினைக்கத் தோன்றுகிறது.

அறிவியலும், சமூகமயமாக்கலும் என்ற மூன்றாவது தலைப்பில் இயற்கைச் சூழல் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்தும், நம்பாடத்திட்ட முறைகளில் சுற்றுச்சூழல் அடிப்படை அறிவு அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக இருந்த போதும் அது கொண்டிருக்கும் முரண்பாடுகள் குறித்தும் பேசுகிறார். மேம்போக்கான தகவல்களைக் கொண்ட பாடத்திட்ட முறைகளால் புதிய அணைக்கட்டு திட்டங்கள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள், ஆலைக்கழிவுகள் சார்ந்து நீர் நிலைகளில் உருவாகும் மாற்றங்கள் பற்றி ஒரு தெளிவான பதிலை மாணவர்களுக்கு ஆசிரியர்களால் சொல்ல இயலா சிக்கல்களைச் சுட்டிக் காட்டுகிறார். உதாரண்மாக, பூமியின் வளத்தைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி பெறுதலை ஒரு வகுப்பிலும், அப்படிச் செய்வதில்  ஏற்படும் சமூக, சூழலியல் சிக்கல்களை அதற்கடுத்த வகுப்பிலும் படிக்கும் மாணவனால் எப்படி முரண்பாடு கொள்ளாமல் இருக்க முடியும் என்றும்,  இளம் பருவத்தில் மாணவர்கள் சமூகத்தில் பங்கேற்கும் நிலை இல்லாத போது பள்ளிகள் மட்டும் அவர்களை எப்படி சமூகமாக்க முடியும்? என்றும் ஆசிரியர் நம் முன் நகர்த்தி வைக்கும் கேள்விகள் விவாதத்திற்கு மட்டுமல்ல உற்று நோக்கி கவனம் செலுத்தவும் வேண்டியவைகளாக இருக்கின்றன.

நம் பாடத்திட்ட முறைகளில் ஒரு விஞ்ஞானியின் (ஜெகதீச சந்திரபோஸ்) அறிவியல் கண்டுபிடிப்பைச் சொல்ல மறந்து அவரை தேசியப் பெருமையாக அடையாளம் காட்ட மெனக்கெட்டிருப்பதையும், இயற்கைச் சூழலுக்கும், மனிதருக்குமான சிக்கல்களை உணர்ந்த பின்னரும் அதைத் தீர்க்கும் தீர்வைச் சொல்வதில் பாடத்திட்டத்தை வடிவமைப்பவர்கள் கவனம் கொள்ளாதிருப்பதையும் நூலாசிரியர் கோடிட்டுக் காட்டுவதில் இருந்து நம் பாடத்திட்ட முறை சூழலுக்குத் தக்கவும், மேம்போக்கான அம்சங்களுடனும் மட்டுமே கட்டமைக்கப்படுவதை உணர முடிகிறது. 

இரண்டு உலைகள் என்ற தலைப்பில் காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் தமிழ்வழிக் கல்வி – ஆங்கில வழிக்கல்வி, அரசுப்பள்ளி – தனியார் பள்ளி குறித்து விவாதிக்கிறார். தனியார் பள்ளிகள் ஆங்கிலம் என்ற மொழியின் மோகத்தை முகமாக்கி எப்படி அரசுப்பள்ளிகளை வீழ்த்தின என்பதையும், மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்ததற்கான காரணங்களையும் கூறுகிறார். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை ஒழுங்கமைத்து அதன் திறனை முன்னேற்றுவதற்குப் பதிலாக நவோதயா பள்ளிகளை அரசாங்கம் திறந்தது, அரசுப் பள்ளிகளுக்கென தனிப்பட்ட பெயர்கள் இல்லாமல் அவைகள் அமைந்திருக்கும் ஊரின் பெயரே அப்பள்ளிகளின் அடையாளமாக இருப்பது, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுதலில் ஏற்பட்ட தேக்க நிலையால் மாணவர்கள் சமூகத்தில் பொறுப்பான பணிகளுக்கும், பதவிகளுக்கும் வர இயலாமல் போனது ஆகிய அவலங்கள்  அரசுப் பள்ளிகளின் வெளிச்சத்தை எவ்வாறெல்லாம் மங்கச் செய்தது என்பதையும் தோல் உரிக்கிறார்.

முரண்பாட்டை முன்வைத்தல் மூலம் குழந்தைகளின் கல்வி முறையில், அவர்கள் கற்றுக் கொள்ளும் முறையில், சமூகமும், அரசும், ஆசிரியர்களும் மட்டுமல்ல ஒவ்வொரு பெற்றோரும் பங்கு கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார். வருங்கால சமுதாயத்திற்கான வடத்தை இழுப்பதில் பெற்றோர்களாகிய நாமும் பங்களிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறார். 

Those twenty minutes of indescribable tension with Prime Minister Modi are a very dangerous sign Article By Harish Khare in tamil translated by Chandraguru அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது - ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு

அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது – ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு



Those twenty minutes of indescribable tension with Prime Minister Modi are a very dangerous sign Article By Harish Khare in tamil translated by Chandraguru அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது - ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு
ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் இருந்த அந்த இருபது நிமிடங்கள் இந்தியாவின் பிரதமரின் அலுவலகத்தைச் சென்றடைந்துள்ள ஆகப் பெரிய தெருப் போராளியின் அடிவயிற்றைக் கலக்கியுள்ளன. சத்யபால் மாலிக்கிடம் அமித் ஷா கூறியவாறு அவர் தனது சுயநினைவை இழந்து விட்டதாகவே தெரிகிறது. அது ஏற்கனவே அதிக சூடுபிடித்திருக்கும் நமது அரசியலுக்கு நல்லதல்ல.

Those twenty minutes of indescribable tension with Prime Minister Modi are a very dangerous sign Article By Harish Khare in tamil translated by Chandraguru அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது - ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு

நரேந்திர மோடி ஒன்றும் நாகரிக ஜனநாயகத்தின் பண்பாடுகள், நடத்தைகளைக் கடைப்பிடித்து நாட்டின் பிரதமராகி விடவில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். கூட்டத்தை உற்சாகப்படுத்துவது, கும்பலைத் தூண்டுவது என்று தனக்கிருந்த திறமையைக் கொண்டே அவர் தனது சொந்தக் கட்சியின் தலைமை இடத்தைச் சென்றடைந்தார். அத்தகைய போக்கே அவரை ஹிந்து வலதுசாரி தளத்தில் ‘மறைமுகப் பெரும்பான்மை’ கொண்டவராக முடிவுக்குக் கொண்டு வந்தது. சந்தேகத்திற்கு இடமில்லாது திட்டமிடப்பட்டதாக அவரிடமிருந்த அந்த முரட்டுத்தனமே எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி போன்ற ‘பாரம்பரிய’ மூத்த பாஜக தலைவர்களைத் தடுமாறச் செய்தது. பாஜகவில் இருந்த முக்கியமானவர்களுக்கு அப்பால் மன்மோகன் சிங் அல்லது அடல் பிஹாரி வாஜ்பாயி போன்றவர்களின் கண்ணியமான பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக மோடியிடமிருந்த கரடுமுரடான தன்மை வரவேற்கத்தக்க வகையிலே உடல்ரீதியான பலமாகக் காட்டப்பட்டது.

ஆனாலும் நிச்சயமற்றவராக, பயத்தில் உறைந்து போன மனிதராக புதியதொரு நரேந்திர மோடியை ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் அவர் இருந்த அந்த இருபது நிமிடங்கள் நமக்கு இப்போது வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.

Those twenty minutes of indescribable tension with Prime Minister Modi are a very dangerous sign Article By Harish Khare in tamil translated by Chandraguru அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது - ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு

மோடி இன்னும் பத்து வயது இளையவராக இருந்திருப்பாரேயானால், அவர் தைரியமான இரண்டு எதிர்வினைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்றே நம்பலாம். முதலில் தனது காரை விட்டு வெளியே வந்து, சாலை மறியல் செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் நடந்து சென்று, அவர்களுடன் எவ்விதச் சிரமமுமின்றி அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பார். அனைவரின் மனதில் அவரைப் பதியச் செய்யும் வகையிலே தொலைக்காட்சிக் காட்சிகளை அது உருவாக்கிக் கொடுத்திருக்கும். அவர் அடிக்கடி பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி, தன்னை வணங்கி நிற்கின்ற வெகுஜன மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவராகவே இருந்திருக்கிறார். எனவே போராட்டக்காரர்கள் எந்த வகையிலும் அச்சுறுத்துவதாகவோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதாகவோ இருந்திராத நிலையில் அதுபோன்று அவர் நடந்து கொண்டிருந்தால் பாதகமான சூழ்நிலையிலும் தயங்காத துணிச்சலான தலைவர் என்று அவர் அடையாளம் காணப்பட்டிருப்பார்.

Those twenty minutes of indescribable tension with Prime Minister Modi are a very dangerous sign Article By Harish Khare in tamil translated by Chandraguru அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது - ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு

அவ்வாறாக இல்லையெனில் அதற்கு மாறாக தனது அலுவலகத்தின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சரை அழைத்து, மத்தியப் படைகளை (சில கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த) விரைந்து வந்து தன்னுடைய வழியிலிருந்து போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை அகற்றுவதற்கான உத்தரவை பிரதமர் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அதிகாரம் மிக்க அரசின் ஆற்றல் மிக்க பிரதமர் ஓரிடத்தைக் கடந்து செல்லும் உரிமையை யாரும் அவருக்கு மறுத்து விட முடியாது என்ற எளிய செய்தியை அவர் அனைவருக்கும் உறுதிப்படுத்திக் காட்டியிருப்பார். பயமில்லாத துணிச்சலான அந்தப் பிரதமர் அமைதியாகப் போராடுகின்ற விவசாயிகளிடம் மாட்டிக் கொண்டவராக தான் காணப்படுவதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் செய்து விடாமல் கேமரா, நாடகம் மீது எப்போதும் கண் வைத்திருக்கும் அந்த மனிதர் தன்னுடைய காருக்குள்ளேயே உறைந்து போய் அசையாமல் அமர்ந்திருந்தார்.

Those twenty minutes of indescribable tension with Prime Minister Modi are a very dangerous sign Article By Harish Khare in tamil translated by Chandraguru அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது - ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு

ஃபெரோஸ்பூர் பேரணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தளத்தில் -பல்லாயிரக்கணக்கான காலி நாற்காலிகளுடன் 3,032 பேருக்கு மேல் அங்கே கூடியிருக்கவில்லை என்று உள்ளூர் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது – மிகப் பரிதாபகரமான எண்ணிக்கையில் மிகக் குறைவான எண்ணிக்கையில் கூடியிருந்த கூட்டத்தைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்பதை அனுமானிப்பது தர்க்கரீதியான சாத்தியம் கொண்டதாகவே இருக்கிறது. பஞ்சாபை திரும்பப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் அஸ்வமேத யாகத்தின் நவீன அமலாக்கமாகவே பாஜகவால் அந்தப் பேரணி திட்டமிடப்பட்டிருந்தது. பேரணி ஏற்பாட்டாளர்களின் வசம் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார அரசியல் கட்சியின் அனைத்து வளங்களும் இருந்தன. மிக மோசமான மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கப்பட்டாலும், யாராலும் வெல்ல முடியாத நரேந்திர மோடி இன்னும் யாருக்கும் தலைவணங்காதவராக இருக்கிறார்; பஞ்சாபிற்கு நேரில் வந்து, கூட்டத்தைத் தன்வசப்படுத்துகின்றவராக தான் இன்னும் இருப்பதைக் காட்டுவார் என்பதை பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற மக்களுக்குச் சொல்கின்ற வகையிலே அவர்களுடைய நோக்கம் மிகவும் வெளிப்படையாக தெளிவாகவே இருந்தது. ஆனால் அந்த திட்டம் மிகவும் தவறுதலாகச் சென்று, நம்பிக்கையிழக்கச் செய்யும் பதற்றமான தருணத்தையே அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது. என்றும் தனக்கான வழியில் சென்ற அந்த மனிதர் தன்னுடைய தோல்வியால் எழுந்த பயத்தை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார்.

அந்த ஃபெரோஸ்பூர் நாடகம் மிகப் பெரிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. கட்டற்ற அரசு அதிகாரத்தின் உச்சத்தில் ஏழு ஆண்டுகள் எதிர்ப்புகள் எதுவுமின்றி செலுத்தி வந்த மேலாதிக்கம் பிரதமரிடம் தெய்வீக உரிமைக்கான உணர்வை வளர்த்தெடுத்துள்ளது. அது பாதுகாப்பு, உளவுத்துறை மூத்த அதிகாரிகளிடையிலும் பொறுப்பற்ற மெத்தனத்தை உருவாக்கியுள்ளது. பெரும்பாலும் அமைச்சர்கள், பிரதமர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுபவர்களே அரசியல்வாதிகளின் பாதுகாப்புக் கவசத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டைகளை முதலில் கண்டறிபவர்களாக இருப்பார்கள் எனும் போது, மோடியின் விஷயத்தில் விளக்குவதற்குத் தேவையான மர்மம் அதிகம் இருக்கவில்லை.

தன்னம்பிக்கை, சுயதிருப்தி கொண்ட அந்த மனிதர் எந்தவொரு குறையையும், குறைபாட்டையும், தோல்வியையும் ஒப்புக் கொள்ளாதவராகவே இருந்திருக்கிறார். தாங்கள் செய்வது எந்த அளவிற்கு முட்டாள்தனமாக இருந்தாலும், தங்களுடைய தலைவர் எப்போதும் தங்களை (குறைந்தபட்சம் பொதுவெளியில்) பாதுகாப்பார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். ஜனநாயக அரங்கில் தன்னை ஒன்றுமறியாதவர் என்று ஊகிக்க அவர் எவரையும் அனுமதிக்க மாட்டார். தவறிழைக்காதவர் என்ற இத்தகைய உணர்வே அதிகாரிகள், ராணுவத் தளபதிகள், உளவுத்துறைத் தலைவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.

Those twenty minutes of indescribable tension with Prime Minister Modi are a very dangerous sign Article By Harish Khare in tamil translated by Chandraguru அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது - ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு

ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் அவர் இருந்த அந்த இருபது நிமிடங்களுக்குப் பிறகு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள்ளாகவே, ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று – அவர்களில் பலரும் தமக்கு வேலையற்ற வேலைகள் அளிக்கப்படும் என்று நம்புகிறவர்கள் – அந்த சம்பவத்தின் பின்னணியில் சதி இருக்கிறது என்று முடிவு செய்திருந்தனர். தங்களது அறிக்கையில் ‘பிரதமரைச் சங்கடப்படுத்துவதற்காக, அவருக்கு தீங்கு விளைவிப்பதற்காக போராட்டக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களுடன் மாநில அரசு இயந்திரம் செய்து கொண்டிருந்த கூட்டின் வெட்கக்கேடான வெளிப்படையான காட்சியாகவே அது இருந்தது’ என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பொறுப்பான பதவிகளில் இருந்திருந்த அந்த அதிகாரிகள் இவ்வாறான பொதுப்படையான தீர்ப்பை வழங்குவதை விடுத்து நடந்தவற்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பெருமூச்சு தவறாக வழிநடத்தப்பட்ட பாரபட்சம் மற்றும் விசுவாசத்தால் உருவானது என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. வயது முதிர்ந்து கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ஒருவரின் பாதுகாப்பின்மை உணர்வை, சித்தப்பிரமையைத் தூண்டுகின்ற வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு வகையான குடிசைத் தொழில் நாட்டில் இப்போது தோன்றியிருப்பதாகவே தெரிகிறது.

மிகவும் கவர்ச்சியான தலைவர்கள் கூட தங்கள் தோற்றங்களை பொதுவெளிக்காக வடிவமைத்துக் கொள்வதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வடிவமைக்கப்படாத நெருக்கடியான தருணங்களில் மட்டுமே ஒரு தலைவனின் குணமும், திறமையும் உண்மையில் சோதித்து அறியப்படுவதாக இருக்கும்.

தான் தங்கியிருந்த பிரைட்டன் கிராண்ட் ஹோட்டல் மீது 1984ஆம் ஆண்டு ஐரிஷ் குடியரசு ராணுவம் நடத்திய குண்டுவெடிப்பை மார்கரெட் தாட்சர் ‘டவுனிங் ஸ்ட்ரீட் நினைவுக் குறிப்புகள்’ என்ற தன்னுடைய நூலில் நினைவு கூர்ந்திருந்தார். அப்போது ஆண்டுதோறும் நடைபெறுகின்ற கன்சர்வேடிவ் கட்சி கூட்டத்தில் தன்னுடைய திட்டமிடப்பட்ட உரையை ஆற்றி முடித்தார் ‘இது தொழிலாளர்களைத் தாக்கும் நேரம் அல்ல, மாறாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒற்றுமைக்கான நேரம்’ என்பதால் வரைவில் இருந்த அனைத்து பாரபட்சமான பகுதிகளைத் தான் நீக்கியதாகவும் அவர் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

தாட்சரிடமிருந்த பெருந்தன்மை, நிதானத்தை பஞ்சாப் முதலமைச்சரை நோக்கி பிரதமர் வைத்த தகுதியற்ற குற்றச்சாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்வாறு பேசிய அந்த ஒரே நொடியில், பொறுப்பான தேசியத் தலைவராக பிரதமர் முதிர்ச்சியடைந்து விட்டார் என்று இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையே மோடி உருவாக்கியுள்ளார். விரும்பத்தகாத அந்த பாரபட்சம் ஒருவரிடமிருந்து வருகிறது. பாரபட்சம் கொண்ட அந்த நபரை உலக அளவில் உயர்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாக நாம் நம்ப வேண்டும் என்று அவரது கூட்டாளிகள் விரும்புவது உண்மையில் ஆச்சரியம் தருவதாகவே இருக்கிறது.

Those twenty minutes of indescribable tension with Prime Minister Modi are a very dangerous sign Article By Harish Khare in tamil translated by Chandraguru அந்த இருபது நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் இருந்த விவரிக்க முடியாத பதற்றம் மிகவும் ஆபத்தான அறிகுறியாகவே உள்ளது - ஹரிஷ் காரே | தமிழில்: தா.சந்திரகுரு

இத்தகைய தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதமருக்கு எதிராக நிறுத்துவதற்கான தந்திரமும் அவர்களிடம் இருந்து வருகிறது. ஹிந்து நலன்களுக்கு விரோதமான வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் கீழ், சீக்கிய கூறுபாடுகளைக் கொண்டு தீட்டப்பட்ட சதியைக் கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டில் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற ஹிந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க வேண்டிய மோடியின் தேவையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சீக்கியர்களை இவ்வாறு மற்றவர்களாக வேறுபடுத்திக் காண்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி நிச்சயம் தேசியப் பேரிடரை உருவாக்குகின்ற செயலாகவே இருக்கும்.

https://thewire.in/politics/narendra-modi-nervous-punjab-flyover
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

Indhiya Puratchi Pathai Book P Sundaraiah BookReview By K S Rathakrishnan நூல் மதிப்புரை: பி.சுந்தரய்யாவின் இந்தியப் புரட்சிப் பாதை - கே. எஸ். இராதாகிருஷ்ணன்

நூல் மதிப்புரை: பி.சுந்தரய்யாவின் இந்தியப் புரட்சிப் பாதை – கே. எஸ். இராதாகிருஷ்ணன்




முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யாவின் இந்தியப் புரட்சிப் பாதை என்ற அவருடைய சிந்தனைகள் தமிழ் மொழிபெயர்ப்பு இன்றைக்கு கையில் கிடைத்தது.

இது ஏற்கனவே தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் வெளி வந்துள்ளது. சுந்தரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர். மாபெரும் தியாகி. தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுத்தவர்.

இவரை 1985 கட்டத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நெடுமாறனோடும், தஞ்சை ராமமூர்த்தியோடும் அன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ப.மாணிக்கம் உள்ளிட்ட மூவரோடு சேர்ந்து சந்தித்தோம்.அப்போது அங்கு சிபிஎம் அன்றைய மாநில செயலார் ஏ.நல்லசிவன் இருந்தார்.

அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் சில நிமிடங்கள் தெளிவாக தன் கருத்துக்களை பேசிக்கொண்டிருந்தார். அது இன்றைக்கும் நினைவில் இருக்கின்றது. பின் சில நாட்களில் காலமானார்.

சுந்தரய்யா அன்றைக்கே கங்கை நதியை தென் முகமாக தமிழகம் வரை திருப்பப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர். கங்கையை திருப்ப வேண்டும் என்று தமிழகத்தை பொருத்தவரை திருவிதாங்கூர் சி. பி. ராமசாமி அய்யர்,சுந்தரய்யா ஆகியோரின் குரலே முதல் குரல் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கடந்த 1940 முதல் 70 வரை உள்ள இந்திய அரசியலில் நடந்த விஷயங்களைத் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு அற்புதமான நூல் தொகுப்பு.மொழி பிரச்சனை, மொழிவாரி மாநிலங்கள் குறித்த செய்திகளும் கருத்தக்களை சுந்தரய்யா பதிவு செய்துள்ளார்.

இந்தியப் புரட்சிப் பாதை என்ற இந்த தொகுப்பை சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை அன்புக்குரிய க.மாதவ்தமிழில்மொழிபெயர்த்துள்ளார். இதன் மூலத்தை கே.பாலச்சந்தர் தொகுத்துள்ளார்.

மார்க்சியம் – லெனினியம்’ நடைமுறைக்கான சித்தாந்தம். அதை நடைமுறைப்படுத்தும்போது, அவ்வப்போது நிலையான, சீர்தூக்கிய மீளாய்வுகளுடன் மதிப்பீடு செய்ய வேண்டும். நடைமுறை அனுபவ மதிப்பீடுகளின் அடிப்படையில் சித்தாந்தம் மேம்படுத்தப்படும். அந்த வகையில் ‘மார்க்சியம் – லெனியம்’ ஒரு வளரும் சித்தாந்தம்.

தோழர் சுந்தரய்யா இந்தியப் புரட்சி இயக்கத்தின் சித்தாந்தத் தலைமையாக மட்டுமின்றி நடைமுறையிலும் முன் நின்று வழி நடத்தியதில் முக்கியமான தலைவர் ஆவார். இந்தியப் புரட்சிப் பாதையைப் பற்றி வேறு எவரையும்விட அதிகமாக எழுதிப் பதிவிட்டு ஆவணப்படுத்தியவர் தோழர் சுந்தரய்யா தான் என்று துணிந்து கூறலாம்.

பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985) மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரும் , தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர்.

பி. எஸ் சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் பொழுது சுதந்திர போராட்ட இயக்கத்திலும், பின்னர் பொதுவுடைமை இயக்கத்திலும் அதிக ஆர்வம் கொண்டார். 1932ம் ஆண்டு உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று தஞ்சாவூர் சிறுவர் சிறை, திருச்சி மற்றும் இராஜமகேந்திரபுரம் சிறைகளில் தண்டனைக் காலத்தை கழித்தார். 1933-34ம் ஆண்டுகளில் தென்னியதியாவில் பொதுவுடைமைக் கட்சியை உருவாக்க வந்த தோழர் அமீர் ஹைதர்கானின் தொடர்பால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டார். பின்னர் 1934ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். அவருக்கு கட்சி ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கட்சியை உருவாக்கும் பணியை அளித்தது. அதை அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.

24 வயது இருக்கும் போதே 1936-ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக மாறினார். நாட்டில் கட்சி மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்தியக் குழுவாக அதுஇருந்தது. தென்னிந்தியாவில் பொதுவுடமைக் கட்சியைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் தெரிவு செய்ததில் பி.சுந்தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். 1939ம் ஆண்டில் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியவுடன் கம்யூனிஸ்ட் கட்சி அந்த யுத்தத்தை எதிர்த்தது. இதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் 1940ம் ஆண்டில் நாடு முழுவதிலும் கம்யூனிஸ்டுகளை கைது செய்த பொழுது சுயதரய்யா கைதாகாமல் தப்பினார். சென்னையில் தென்னிந்தியாவுக்கான கட்சியின் தலைமறைவு மையத்தை உருவாக்கி வழிகாட்டினார்.

1942ம் ஆண்டில் தடை நீங்கிய பின், அவர் கட்சியின் முடிவுப்படி பம்பாயிலிருந்த கட்சியின் தலைமையகத்திலிருந்து செயல்பட்டார். கட்சிக்கென ‘பீப்பிள்ஸ் பப்ளிசிங் ஹவுஸ்’ என்ற புத்தக நிலையத்தை உருவாக்கினார். 1943ம் ஆண்டில் ஜப்பானியப் படைகள் இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் நுழைந்து இந்த நாட்டை கைப்பற்றக் கூடும் என்ற நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் சென்று கட்சி ஊழியர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க முடிவு செய்து, அந்தப் பணியை சுந்தரய்யாவிடம் ஒப்படைத்தது. அவர் நாடு முழுவதும் சென்று தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தார்.

1952ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரய்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1955ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஆந்திர மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற சுந்தரய்யா சட்டமன்றத்தில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1955ம் ஆண்டிலிருயது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தோன்றிய வர்க்க சமரசப் போக்கு தொடர்ந்து நீடித்து, கட்சி 1964ம் ஆண்டில் பிளவுபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது உருவாயிற்று.அவ்வாண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1977ம் ஆண்டு வரை(பன்னிரண்டு ஆண்டு காலம்) அப்பொறுப்பில் செயல்பட்டார்.

பின்னர் அவர் ஆந்திராவிற்கு திரும்பி, அங்கே கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனார்.1967இல் அக் கட்சியின் மத்தியக் குழுவால் நிறைவேற்றப் பட்ட ‘கட்சி ஸ்தாபனத்தின் பணிகள்’ என்கிற புரட்சிகர அமைப்பிற்கான செயல் திட்டத்தில் அவரது முத்திரையைப் பெற்றிருக்கிறது. 1968ம் ஆண்டிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சிக்குள் தோன்றிய இடது அதிதீவிரப் போக்கிற்கு எதிராக அவர் இதரதோழர்களுடன் சேர்ந்து பெரும் அரசியல் தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்தினார். 1975-76ம் ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமலில் இருந்த போது தலைமறைவாகச் சென்று கட்சிப்பணியாற்றினார்.