மொழிபெயர்ப்பு மேடையில் கவிதையும் கவித்துவமும் - அ. குமரேசன் - Poetry and Poetics in Translation Platform - A.Kumaresan - https://bookday.in/

மொழிபெயர்ப்பு மேடையில் கவிதையும் கவித்துவமும் – அ. குமரேசன்

மொழிபெயர்ப்பு மேடையில் கவிதையும் கவித்துவமும் - அ. குமரேசன் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறபோது, அவற்றில் மேற்கோள் காட்டப்படுகிற கவிதைகள் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. ஒரு முழுக்கட்டுரையைத் தமிழாக்குவதற்கு நிகரான, சில நேரங்களில் அதைவிடக் கூடுதலான நேரத்தை அதில்…
Dr Babasaheb Ambedkar Vasant Moon டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வசந்த் மூன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்” – நந்தசிவம் புகழேந்தி

      “தைவாயத்தம் குலே ஜன்ம மதயத்தம் து பௌருஷம்” - மகாபாரதம் மேல் குறிப்பிட்ட சமஸ்கிருத மொழி ஸ்லோகமானது ஒருவன் குறிப்பிட்ட குலத்தில் பிறப்பது தெய்வச் செயலினால்; ஆனால் அவன் மேன்மை பெறுவது தன் சொந்த முயற்சியினால்” என்கிற அர்த்தத்தை தருகின்றது. 1500 வருடங்களுக்கும் மேலாக சனாதனத்தின் கோர கைகளால் பிய்த்து எறியப்பட்டு,…
அவன் காட்டை வென்றான் Avan Kattai Vendran

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அவன் காட்டை வென்றான் – தானப்பன் கதிர்

      ஒரு இரவில் காட்டில் நடக்கும் காட்சிகளை படமெடுத்துக் காட்டி இருக்கிறது இந்த குறுநாவல். தன்னந்தனியே ஒரு கிழவன் இரவில் அந்த காட்டில் செல்லும் போது நடக்கின்ற நிகழ்வுகளை பதை பதைப்புடன் நமக்கு காட்சிமைப்படுத்தி இருக்கின்றார் எத்திராஜுலு. பன்றிகளோடும்…
Communalisms Article By Aijaz Ahmad In tamil translated By S. Veeramani வகுப்புவாதங்கள் - அய்ஜாஸ் அகமது | தமிழில்:ச.வீரமணி

வகுப்புவாதங்கள் – அய்ஜாஸ் அகமது | தமிழில்:ச.வீரமணி




வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடது சாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் குறித்தும், வகுப்புவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வரலாறுகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் பின்பற்றிய வகுப்புவாதக் கொள்கைகள் குறித்தும் மிகவும் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொருள் குறித்து நானும் மிகவும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக இங்கே அடுக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் சில உண்மைகள் அவ்வப்போது நம் நெஞ்சில் வந்து மோதத்தான் செய்கின்றன.

வகுப்புவாதம், மதச்சார்பின்மை, தேசியம் அல்லது தேசியவாதம் போன்றவை குறித்து நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இது தொடர்பாக என் அடிப்படை நிலைப்பாட்டை மிகவும் கடுமையான வார்த்தைகளுடனேயே தொடங்கிட விரும்புகிறேன்.

அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் ஓர் ஆரோக்கியமான அரசியலில் தீர்க்கப்பட முடி யாத நோயல்ல. ஆர்எஸ்எஸ், சிவசேனை வகையறாக்கள் பரப்பிடும் வகுப்புவாத வெறி உணர்வுகளுக்கு எதிராக அதைவிட அதிகமான அளவில் மதச்சார்பின்மை, நாட்டுப்பற்று உணர்ச்சிகளைக் கொடுப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்திட முடியும். வகுப்புவாத நடவடிக்கைகள் என்று நாம் அழைத்திடும் – தற்போது மக்கள் பின்பற்றி வரும் – சில நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் சிக்கலான வரலாற்று வேர்களைக் கொண்டிருக்கின்றன. இந்திய சமூகத்தின் கட்டமைப்பிலும், நாள்தோறும் நாம் பின்பற்றும் நடைமுறை அரசியலிலும் நன்கு ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.

நாம் பின்பற்றிவரும் தத்துவங்களை விமர்சனத்திற்குள்ளாக்குவது சந்தேகமற மிகவும் முக்கியமானதுதான். ஆனால், எண்ணற்றோர் உயிர்கள் சூறையாடப்படுவதற்குக் காரணமாக விளங்கும் வகுப்புவாத வன்முறை சம்பந்தமான உண்மைகளையும், விவரங்களையும் திரட்டுவது அதைவிட மிகவும் முக்கியமானதாகும்.

அதுமட்டுமல்ல, வகுப்புவாத சிந்தனைகளும் நடைமுறைகளும் மிகவும் போற்றுதலுக்குரியவை என்றும், இவை நியாயமானவை மட்டுமல்ல, அவசியமானவையும், பயனளிக்கக் கூடியதும் என்றும் நாட்டில் உள்ள மக்களில் மிகப் பெரும் பாலானோர் நம்பிக்கொண்டும் இருக்கிறார்களே, இவர்களின் நம்பிக்கைகளை இவர்கள் மனம் கோணாதவாறு எவ்வாறு விமர்சிக்கப் போகிறோம் என்பது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நரேந்திர மோடி பாஜக சார்பில் இந்தியாவின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதவெறி உணர்ச்சியை மக்கள் மத்தியில் கிளப்பி விசிறிவிடுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதற்குச் சரியான அடையாளம் நரேந்திர மோடி என்று நான் துணிந்து கூறுவேன்.

அவர் பிரதமராகிவிட்டால், வகுப்புவாதத் திற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் பயணம் மேலும் சிறிது காலத்திற்கு நீடித்திடும். இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தோழர் ரோசா லுக்சம்பர்க் ஒருமுறை கூறுகையில், முதலாளித்துவம், சோசலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் மாறாக காட்டுமிராண்டித் தனத்திற்கும் கூட இட்டுச் செல்லலாம் என்றும் சொன்னார். இந்தியாவில் மக்களின் நலன்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைமையில் அமைந்துள்ள முதலாளித்துவத்திற்கு லுக்சம்பர்க்கின் கூற்று மிகவும் சரியாகவே பொருந்துகிறது. ஏனெனில், நம்நாட்டில் செயல்பட்டுவரும் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்கு வளர்வதுடன், ஒருபக்கம் இத்தகைய முதலாளித்துவக் கொள்ளைக் கும்பலை உருவாக்கிடவும், மிகப்பெரிய அளவில் மக்களை பலிகிடா ஆக்கிடவும் இட்டுச் செல்கின்றன.

இவ்வாறு ஓர் இனவெறியால் கொடுமைகளுக்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்கள், தங்கள் சொத்து சுகங்களை மட்டுமல்ல, தங்கள் அறநெறிப் பண்புகளையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் இருக்கக்கூடிய நிலையில் பாசிஸ்ட்டுகள் அவர்களை மிக எளிதாகத் தூண்டிவிட்டு, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

“பாசிசம்” தலைதூக்குவது என்பது புரட்சியை நம்மால் கொண்டுவர முடியாமல் நாம் தோல்வி கண்டதற்கான தண்டனை என்று கிளாரா ஜெட்கின் கூறினார். அது மிகவும் சரி யான கூற்று என்பதை வரலாறு மெய்ப்பித்திருக்கிறது.

முதலாவதாக, உலக அளவில் இடதுசாரி சக்திகள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, உலகின் பல பகுதிகளில் வலதுசாரி சக்திகள் வலுவடைவதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன் காரணமாக, (1) 1989க்கு முன் வலுவாக இருந்த சோசலிச முகாம் உலகின் பல பகுதிகளிலும் வலுவிழந்தது. இன்றைய தினம் உலகில் மிகச் சிறிய பூப்பந்தில் தான் (global space) மார்க்சிசமும், கம்யூனிசமும் கோலோச்சுகிறது. (2) அதிதீவிர முதலாளித்துவம் (extreme capitalism) என நான் அழைத்திடும் நவீன தாராளமயம் உலகில் பல நாடுகளில் மிகவும் விரிவான முறையில் நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் பெரிய அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு என்பது ஏற்படவில்லை. (3) ஆசிய மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பல நாடுகள் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாடுகளில் மேலோங்கியிருந்த தேசிய உணர்வு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு தற்போது முற்றிலுமாக இல்லாது ஒழிந்துவிட்டன. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு நரேந்திர மோடி. மதவெறியைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர் – நம்மால் இந்து மதவெறியன் என்றும் அவரது சகாக்களால் இந்து தேசியவாதி என்றும் அழைக்கப்படும் ஒருவர் – பிரதமராக முன்னிறுத்தப்படுவது சரியான எடுத்துக் காட்டாகும்.

இன்றைய தினம் நாட்டில் உள்ள அம்பானிகளும், டாட்டாக்களும், உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கோடீஸ்வரர்களும் நரேந்திர மோடியைச் சூழ்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இதற்குமுன் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் இப்போது அவரிடம் மன்னிப்பு கோரி அவரை வரவேற்று, அவருடன் கூடிக் கூலாவிக் கொண்டிருக்கின்றனர். எகிப்து நாட்டில் உள்ள முஸ்லீம் பிரதர்ஹூட் கட்சியின் தலைவரும் எகிப்தின் அதிபருமான மோர்சியைப் போன்று மோடி சிறப்பான முறையில் சித்தரிக்கப்படுகிறார்.

கிளாரா ஜெட்கின் கூற்றின் அடிப்படையில் ஆராய்கையில் இந்தியாவில் இவ்வாறு பல்வேறு வகுப்புவாதங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இடதுசாரிகளின் தோல்வியேயாகும். வகுப்புவாதத்திற்கு உண்மையான மாற்று என்பது கம்யூனிசம் அல்லது சோசலிசமேயாகும். (The real alternative to communalism is communism or socialism). நிச்சயமாக மதச்சார்பின்மையோ (secularism) அல்லது தேசியவாதமோ (nationalism) கிடையாது. கடந்த கால் நூற்றாண்டில் இடதுசாரிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளராததன் காரணமாகத்தான் இத்தகைய மதவெறி, இனவெறி மற்றும் பிராந்திய வெறி சக்திகள் நாட்டின் பல பகுதிகளிலும் வளர்ந்துள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்த அளவில் இத்தகைய சக்திகள் அவற்றுடன் முழுமையாகக் கருத்தொற்றுமை கொண்டு ஒத்துப்போகின்றன.

நாட்டில் இவ்வாறு பத்து விழுக்காட்டு அளவிற்கு கட்சிகள் இருக்கின்றன என்பதே என் கருத்து. அவை ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, அல்லது தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, இவை மக்கள் தொகையில் உயர் பத்து விழுக்காட்டினர் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இத்தகைய சக்திகள் வளர்ந்துள்ள இடங்களில் இடதுசாரிகள் தேர்தல் களத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய அளவிற்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்புவாத அரசியலைப் பொறுத்தவரை, இடதுசாரி அல்லாத அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியும் பாஜகவுடன் தீவிரமாக ஒத்துப்போகாதவை அல்ல. ஒருசில கட்சிகள் காங்கிரசுடன் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் காங்கிரசும் பாஜகவும் ஆள்வதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதுதான். பாஜக, வகுப்பு வாதத் துருப்புச் சீட்டைத் திட்டமிட்டு பயன்படுத்தும் அளவிற்கு காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்ற போதிலும், காங்கிரஸ் கட்சியும் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

முன்னுரை
இவை அனைத்து குறித்தும் மீளவும் நாம் விவாதிப்போம். முதற்கண் வகுப்புவாதம், மதச் சார்பின்மை மற்றும் தேசியவாதம் என்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் மூன்று முக்கிய சொற் றொடர்கள் குறித்து வழக்கத்துக்கு மாறான வழிகளில் ஆய்வு செய்திடுவோம்.

வகுப்புவாதம் (Communalism), மதச்சார்பின்மை (Secularism) மற்றும் தேசியவாதம் (Nationalism) ஆகிய சொற்றொடர்களுக்கு ஆங்கில அகராதியில் இருக்கும் அர்த்தத்தில் நம் நாட்டில் அவை உபயோகப்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக வகுப்புவாதம் என்ற சொல் நம் நாட்டில் ஓர் இனம் அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்ற இனத்தினர் மீது அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய சித்தாந்தத்தைப் பிரயோகிப்பதற்கும், வன்முறையை ஏவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒருவகையிலான பாசிச வடிவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. வகுப்புக் கலவரம் என்ற நிகழ்வே உலகில் இந்தியாவில்தான் நடைபெறுகிறது.

உதாரணமாக, எகிப்தில் கிறித்துவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நேரடியாகவே இஸ்லாமிஸ்ட் (Islamist), ஜிஹாதி (Jihadi), சலாஃபிஸ்ட் (Salafist) அல்லது வேறெந்த சொற்றொடர் மூலமோதான் அழைக்கிறார்கள். அவர்கள் அதனைத் வகுப்புவாரி (“communal”) தாக்குதல் என்று கூறுவதில்லை.

உண்மையிலேயே மிகவும் சரியாகச் சொல்வதென்றால், வரலாற்று ரீதியாக வகுப்புவாரி என்ற சொல் கம்யூனிஸ்ட் என்ற சொல்லிற்கு மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது. இவ்விரு வார்த்தைகளுமே பொது, (‘common’), நெருங்கிய தொடர்பு (‘commune’), சமூகஇனம் (‘community’) என்ற பொருள்களுடன் தொடர்பு கொண்டிருந்தவைதான்.

உதாரணமாக, சமூகத்தினருக்கான சொத்து (‘communal’ property) என்பது தனிச் சொத் துரிமைக்கு (private property) எதிரான சொற்றொடராக இருந்தது.

நம் நாட்டில் மேலும் இரு சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, பெரும்பான்மையினர் சமூகம், சிறு பான்மையினர் சமூகம் என்று பேசுவதில் எதுவும் சிரமம் இருப்பதில்லை. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இந்து சமூகத்தினர், முஸ்லீம் சமூகத்தினர், சீக்கிய சமூகத்தினர் போன்று பேசுவதில் சிரமம் இல்லை. ஆனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்ற சமூகத்தினர் மீது வகுப்புவாத உணர்வுடன் நடந்து கொள்ளாது, இந்தியாவின் பிரஜைகள் என்ற முறையில் மட்டுமே, அதாவது மதச்சார்பற்ற தேசிய இனத்தினர் (secular nationalists) என்ற உணர்வோடு மட்டும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையில் நம்முடைய விருப்பமாகும். நாடும் அரசாங்கமும் மதச்சார்பற்ற அறநெறியை (secular moralism) உயர்த்திப் பிடித்திருப்பதால், மத ரீதியான வகுப்புவாத அடையாளம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தனிநபர் பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

நாட்டில் உள்ள மக்களில் அறுதிப் பெரும்பான்மையினர், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதைத் தவிர வேறெந்த பிரஜா உரிமையையும் அனுபவிக்காத சூழ்நிலையில், இம்மக்கள் மத்தியில் தேசிய உணர்வு குறித்த பிரச்சாரங்கள் (nationalist discourses) போய்ச் சேருவதை விட, அவர்களின் சொந்த மத நம்பிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மிக எளிதாக அவர்களை சென்று அடைந்துவிடுகின்றன. அவை பிற மதத்தினருடனான உறவுகள் மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு மக்கள் தங்கள் சொந்த மதத்தின் அடிப்படையில் தங்கள் சமூக மற்றும் பொருளி யல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், அத்தகைய மத அடையாளங்களுடைய மோசமான பக்கத்தை எப்போது அவர்கள் மீறி வெளிவருவார்கள் என்பது குறித்து என்னால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை.

முஸ்லீமாக இருக்கும் ஒருவரால் தன்னுடைய மத அடையாளத்தைத் துறந்து, சிந்தனை செய்வது சாத்தியமா? வீரஞ்செறிந்த அளப்பரிய துணிவுள்ள ஒருசிலருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு அது சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.

அடுத்து, “இந்து சமூகத்தினர்” என்றும் “முஸ்லீம் சமூகத்தினர்” என்றும் கூறுவதுகூட கற்பனையான ஒன்று என்றே நான் கருதுகிறேன். ஒருசில மதம்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களும் கேரளாவில் உள்ள முஸ்லீம்களும் தங்களுக்கு இடையே உறவுகளைப் பகிர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே.

அதேபோன்றுதான் நாகாலாந்தில் உள்ள கிறித்துவர்களுக்கும், கேரளாவில் உள்ள கிறித்துவர்களுக்கும் இடையே உள்ள உறவுமாகும். அதேபோன்றதுதான் இந்தியா முழுதும் உள்ள இந்துக்களும் தங்கள் பிராந்தியங்கள், சாதிகள், தொழில்களைக் கடந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பதும் மிகவும் அபத்தமான ஒன்றேயாகும்.

ஆயினும், நம்முடைய அரசியல் பிரச்சாரங்கள் அனைத்திலும், நாடு முழுவதுமுள்ள மதச் சமூகத்தினர் அனைவரும் ஒரேமாதிரிதான் என்கிற முறையிலேயே நம்முடைய அரசியல் பிரச்சாரங்களும், கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கற்பனையான அடையாளம், உண்மையான சமூகத்தினர் மீது அனைத்து மதங்களைச் சார்ந்த சுயநல அரசியல் வாதிகளாலும் மேலிருந்து திணிக்கப்படுகின்றன. அரசுகளும், முந்தைய காலனிய அரசு விரும்பியதைப்போலவே, வர்க்க அரசியலுக்குப் பதிலாக இத்தகைய இனம் சார்ந்த பிரதிநிதிகளையே விரும்புகின்றன.

இரண்டாவதாக, அனைத்து மத நம்பிக்கைகளும், அவை நம்பிக்கையாக இருந்தாலும் சரி அல்லது செயலாக இருந்தாலும் சரி, வகுப்பு வாதத்தை நோக்கி இட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் மத அடையாள உணர்வு டன், வேண்டுமென்றே தங்கள் அரசியல் ஆதா யங்களுக்காக அரசியலாக்கப்படுகின்றன. இதற்கு மதங்களையே குறை சொல்லக்கூடாது. ஆயினும், சில வகையான மத உணர்வுகள் மறுக்கமுடியாத விதத்தில் பிற மதத்தினர் மீது மதவெறித் தீயை உசுப்பிவிடும் விதத்தில் தூண்டப்படுகின்றன. உதிரிப்பாட்டாளியாக (lumpen proletariat) இருக்கிற ஒரு கரசேவகரை, மூளைச் சலவை செய்து, ராமபிரானின் ஜன்மபூமியை விடுவித்திட ஆயுதம் ஏந்து, ராமரின் படையில் அனுமானைப் போல பாபர் மசூதியின் குவிமாடத்தின் (dome) மீது தாவி ஏறி அதனைத் தகர்த்திடு, இந்துவாக இருந்து உன் வீரத்தைக் காண்பி என்று சொல்லும்போது அது அந்த கரசேவகருக்கு நியாயமாகவே தோன்றுகிறது. இதற்கு மதம் பொறுப்பாகாது, அதேபோன்று இத்தகைய செயல் அப்பாவித்தனமான ஒன்றும் கிடையாது.

மதம், அரசியல் வாழ்க்கையின் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டால், மதத்தால் வன்முறை நிகழ்வுகள் நடைபெறுவது என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்திடும். மதவெறியைத் தூண்டிவிடுவது என்பதும் அநேகமாக இருக்காது.

அடுத்து, நாம் விவாதத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள மதச்சார்பின்மை (“secularism”) என்ற சொல்லிற்கு வருகிறேன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களுக்கும் சம அளவில் மரியாதை செய்தல் என்பது மிகவும் விசித்திரமான இந்தியக் கண்டுபிடிப்பாகும், காலங்காலமாக இருந்து வந்த மத சகிப்புத்தன்மை என்பதைப் படிப்படியாக ஒழித்துக் கட்டுவதற்கான வேலையே இது. உண்மையிலேயே மத நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த மதம்தான் உயர்வானது. எனவே அவன் மற்ற மதங்களுக்கும் சமமாக மரியாதை கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. மத நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லீமுக்கு, இந்து மதம் என்பது இயல்பாகவே மட்டமானது தான்.

அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறுவது, அரசின் விவகாரங்களை அமல்படுத்துவதில், லஞ்ச ஊழல் மிகுந்த தாராளமய ஜனநாயக அரசியலில், பெரும்பான்மையினர் மதத்தினரைப் பெரிய அளவிற்கு மரியாதை செலுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஏனெனில் எண்ணிக்கையில் அவர்கள் வாக்குகள்தான் அதிகம். பெரும்பான்மையினரின் பண பலமும், அதிகார பலமும்தான் ஆதிக்கம் செலுத்தும், பெரும்பான்மை மதத்தினரில் உள்ள மத்திய வர்க்கத்தினரின் மத்தியிலும் மூர்க்கத்தனமான முறையில் புதிய வகையிலான மதச் சிந்தனைகள் உருவாகி ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தியாவில், எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பின்மையைக் கடைப் பிடிப்பதாக அவை சொல்லிக்கொண்டாலும், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக் களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. பாஜக விற்கும் காங்கிரசுக்கும் சற்றே வித்தியாசம் இருக் கும் எனில் அது அவர்கள் பின்பற்றும் தத்துவங்க ளால் அல்ல, மாறாக அவர்கள் சார்ந்திருக்கிற நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.

இது தொடர்பாக, பெர்ரி ஆண்டர்சன் குறிப்பிடுகையில், இந்திய அரசு ஒரு இந்து வகுப்புவாத அரசுதான் என்கிறார். அது மதச்சார்பின்மை என்கிற சொல்லை தன் தத்துவத்தை நியாயப்படுத்துவதற்கானதாக உபயோகித்துக் கொண்டிருக்கிறது என்கிறார். ஆயினும், இதனை நான் வேறு விதமாகக் கூற விரும்புகிறேன். இந்து மதம் குறித்து காந்தி, நேரு மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வெவ்வேறான அளவுகோல்களை வைத்திருந்தன. அவற்றை ஒரேமாதிரி பார்ப்பதென்பது சரியல்ல. மேலும் இந்தியா என்பது பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. இங்கே முஸ்லீம்கள் உட்பட அனைத்து வகையான மதத்தினரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை இந்து நாடு என்று இந்து மதவெறியர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்து மதத்தினர்தான் நாட்டில் பெரும்பான்மையினர் மற்றும் வல்லமைபடைத்தவர்கள். மற்ற அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்தால் கூட அவர்களை விடப் பெரும்பான்மையினராவார்கள்.

அல்லது, இதனை வேறுவிதமாகவும் கூறலாம். இந்தியாவில் மதவெறி வன்முறை நிகழ்வுகள் இல்லாதவரை அல்லது மிகமிகக் குறைவாக நிகழும் வரை அது பல்வேறு மதங்களுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அவ்வாறு மிகவும் சிறிய அளவில் மத வன்முறை நிகழ்வுகள் நடைபெறுகையில், மற்ற வன்முறை நிகழ்வுகள் போன்றே அதுவும் ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச் சனைதான். மதச்சார்பின்மையை ஒரு நியாயமான தத்துவமாகக் கருதுவது எந்தவிதத்திலும் சரிதான்.

மதச்சார்பின்மை என்பது நவீனகால ஒழுக்கப் பண்பாகும். பண்டைக் காலங்களில் இது கிடையாது. அதாவது, அரசின் அதிகார வரம்புக்குள்ளிருந்து மதத்தை வெளியேற்றுதல் என்பதாகும். இது ஒரு ஐரோப்பிய ஒழுக்கப் பண்பாகும். இது தொடர்பாக மிக அதிக நாட்டுப்பற்றுடன் இதனை அணுகுவதற்கு முன்பு, மார்க்சிசமும் ஓர் ஐரோப்பிய ஒழுக்கப் பண்புதான் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய ஒழுக்கப் பண்புகள் அந்நாட்டின் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் அங்கே உருவாயின என்பதையும், பின்னர் வரலாற்று நிலைகளின் காரணமாக படிப்படியாக அவை உலகம் முழுவதும் பரவின என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் நவீனத்துவத்தைக் கிரகித்துக் கொள்ளாமல் தன்னுடைய சமூகக் கண்ணோட்டத்தில் மிகவும் பிற்போக்குத் தனமாக இருந்ததால், நவீன மதச்சார்பின்மை ஒழுக்கப் பண்பினை சிதைத்து சின்னாபின்னமாக்கி, மதம் சார்ந்த சொற்றொடர்களுடன் மாற்றி வடிவமைத்துக் கொண்டது.

ஐரோப்பாவிலேயே பல நாடுகள் தற்போது கலாச்சாரக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனெனில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த, பல்வேறு நிறத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் குடியேறி வந்துள்ள நிலையில் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் அது திணறுகிறது.

மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதில் இந்தியா அளவிற்குக் கூட அமெரிக்கா இருக்கிறதா என்பது சந்தேகமே. இரு முதலாளித்துவ அரசுகள்தான் உண்மையில் முறையான மதச்சார் பின்மையை – அங்குள்ள முதலாளிகள் இளைஞர்களாக இருந்த காலத்தில் – பெற்றிருந்தன. அவை புரட்சிகர பிரான்சும் கேமாலிஸ்ட் துருக்கியும் மட்டுமேயாகும். அவைகூட இன்று அவ்வாறு உரிமை கொண்டாட முடியாது. ஆட்சி அதிகாரத்திலிருந்து மதச்சார்பின்மை அடிப்படையில் தேவாலயங்களைப் பிரித்த நாடுகள் என்று சொல்வது என்றால், மதம் ஒருவரின் தனிப்பட்டவரின் உரிமை, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன நாடுகள் என்றால் அவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமேயாகும்.

சோவியத் யூனியன் தகர்ந்த பின்பு, தேச அளவிலும் சர்வதேச அளவிலும் இயங்கும் மதவாத அமைப்புகள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டதை நம்மால் பார்க்க முடிந்தது. இறுதியாக, இம்மூன்று சொற்களிலும் மிகவும் கடினமான வார்த்தை தேசியவாதம் என்னும் சொல்தான்.

ரஷ்யப் புரட்சியைத் தவிர, சீனா, கியூபா உட்பட மற்ற அனைத்து நாடுகளிலும் ஏற்பட்ட சமூகப் புரட்சிகளும் காலனிய மற்றும் அரைக் காலனிய நாடுகளில் நடைபெற்றவைகள்தான். எனவே, சோசலிசத்திற்கான இயக்கங்கள் தேச விடுதலைக்கான யுத்தங்களுடன் இணைக்கப்பட்டன. மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்த மிகவும் முற்போக்கான முதலாளித்துவ அரசுகள் தேசப்பற்றுடன் கூடிய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின. பாண்டுங் திட்டக் காலத்தில் நேருவின் இந்தியா, நாசரின் எகிப்து மற்றும் பாதிஸ்ட் அரபு நாடுகளை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இப்போது வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வேடார் நாடுகளை இவ்வாறு கூற முடியும். இவ்வரலாறுகள் நம்மை இன்றைய தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று உணர்வை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் பொருத்திப் பார்க்கும் போக்கிற்கும் இட்டுச் சென்றுள்ளது.

காலனிய நாடுகளில் உருவான தேசியவாத அல்லது நாட்டுப்பற்று சித்தாந்தம் காலனியத்திற்கு எதிரான ஒன்றுதான். ஆனால் இது பல சமயங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தமாக தவறான முறையில் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு காலனியத்திற்கு எதிராக உருவான பல இயக்கங்கள் சோசலிஸ்ட் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்று சொல்ல முடியாது. இத்தகைய இயக்கங்களில் பல ஏகாதிபத்திய மூலதனத்தின் நவீன காலனிய வடிவங்களுடன் மிக வேகமாகத் தங்களை இணைத்துக் கொண்டு, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றன.

ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் பல இத்தகைய வரலாற்றால் நிரப்பப்பட்டுள்ளன. ஏன், நம் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் குறித்து கூறத் தேவையே இல்லை. இதில் மிகவும் சிக்கல் நிறைந்த வழக்குகள் எவை எனில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக மூர்க்கமான முறையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாலிபான்களாகும். ஆயினும் இவர்கள் மக்களுக்கான சோசலிச முற்போக்கு சக்தியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் நடைமுறையில் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயின. முழுமையான தேசியவாதம் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவைகள் வலதுசாரி தேசியவாதங்களின் அனைத்து விதமான நச்சுத்தன்மை வாய்ந்த வடிவங்களையும் தம்முள் கொண்டிருந்தன. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது என்பது மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் தேசம் என்கிற வடிவம் உருவானது. இவ்வாறு கடுஞ்சிக்கல்கள் நிறைந்த நிலையில் தேசியவாதம் என்ற சொல்லை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் சமமாய்ப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது.

தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்ற சொல்லின் பின்னணியில் எந்தவித வர்க்க உள்ளடக்கமும் இல்லை என்பதே என் சொந்தக்கருத்தாகும். எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்கள் வர்க்க உள்ளடக்கத்தை அவற்றின் மீது ஏற்றுகின்றன என்பதே என் கருத்தாகும்.

லெனின், தொழிலாளி வர்க்கத்தின் கட்சியின் தலைவர் என்ற முறையில் காலனிய நாடுகளில் இருந்த நிலைமைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படயில் தேசிய இனப்பிரச்சனைக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கம் தமதாக்கிக் கொள்வதற்கு முன்பு தேசிய இனப்பிரச்சனை மீது மேலாதிக்கத்தை நிறுவிட விவசாய வர்க்கத்தின் கூட்டணியுடன் தொழிலாளி வர்க்கத்தால் சாத்தியமாகலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே லெனின் அவ்வாறு கூறினார்.

காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளிகளில் நாட்டுப்பற்று கொண்ட பிரிவினர் தலைமைப் பாத்திரம் வகிப்பதை ஏற்றுக் கொள்வது என்பது விரும்பத்தக்க ஒன்று அல்ல. இது கம்யூனிய இயக்கத்தின் ஒரு பலவீனமேயாகும்.

தேசியவாத சித்தாந்தம் என்பது அடிப்படையில் தேசிய-அரசு (Nation-State) வடிவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இணைக்கப்பட்டதாகும். தேசிய-அரசு என்ற வடிவம் இருக்கும் வரை, ஏதாவது ஒரு வகையிலான தேசியவாதம் ஒரு மெய்யான அவசியமாகும். நாஜி ஜெர்மனியின் பாசிஸ்ட் தேசியவாதம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய தேசியவாதம், வியட்நாம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர தேசியவாதம், மதச்சார்பற்ற அரசு தேசியவாதம், ஈரான் நாட்டின் சமயகுரு மார்களின் தேசியவாதம் என்று எண்ணற்ற தேசியவாதங்கள்.

எங்கெல்லாம் தேசியவாதங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தேசியவாதம் குறித்த பொருள் குறித்தும் எண்ணற்ற சண்டை சச்சரவுகளும் உண்டு. தேசியவாதத்தின் ஒரு வகை, மற்றோர் வகையால் தோற்கடிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதும் ஒரே நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதெல்லாம், உலகில் பலநாடுகளில், நாட்டின் குணாம்சத்தை வடிவமைப்பதில் அந்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மதத்தையும் இணைத்துக் கொள்வது என்பதும் புதுப்பாணியாக மாறி இருக்கிறது. யூத சமயத்தை ஒரு நாட்டினர் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், சில நாடுகளில் இஸ்லாமை தூக்கிப் பிடிக்கிறார்கள், இங்கே இந்துயிசத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். வேறொரு நாட்டில் கத்தோலிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

ஒரு காரணத்திற்காகவே இவை அனைத்தையும் நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமே இந்திய தேசியவாதத்திற்கான உண்மையான உள்ளடக்கமாக இருக்க முடியும் என்று நம்பக் கூடிய அளவிற்கு இடதுசாரிகளாகிய நீங்கள் ஏற்கனவே முடிவுக்கு வந்திருப்பீர்கள். நான் அவ்வாறுதான் நம்புகிறேன். ஏனெனில் நான் ஒரு மார்க்சிஸ்ட். துரதிர்ஷ்டவசமாக, மார்க்சிசம் நம் நாட்டில் மிகவும் சிறுபான்மையினர் மத்தியிலேயே இருந்து வருகிறது.

அதேசமயத்தில் இந்துத்துவா கொள்கையையும் புறத்தூண்டுதல் எதுவுமின்றி நகர்ப்புற, உயர்சாதி, மத்தியதர, சமூகத்தில் பத்தாம் பசலியாகவுள்ள இந்துக்கள் எவரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியாவில் இந்துக்கள்தான் அதிகம். எனவே இந்துக் கலாச்சாரத்தை தேசியக் கலாச்சாரமாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் நடை முறையில் அவ்வாறில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925 இல் துவக்கப்பட் டது. ஒவ்வோராண்டும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் 1948க்கும் 1962க்கும் இடையே மட்டும் விதிவிலக்காக அதன் உறுப்பினர் எண்ணிக்கை தேக்க நிலையில் இருந்தது. இவ்வாறு தேக்கநிலை ஏற்பட்டது என்பது காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும், நேரு இறந்ததற்கும் இடையிலான காலகட்டம் என்பதை நீங்கள் நினைவுகூர முடியும். 1962 இல் இந்திய – சீன யுத்தம் துவங்கியபின் இதனை, இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளை அவமானப்படுத்திட, அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திட, மிகவும் விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்பட் டது. அதன் பின்னர் வலதுசாரிகளும் தங்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டிக் கொள்ள முடிந்தது.

ஆயினும், 1948க்கும் 1962க்கும் இடையே ஆர்எஸ்எஸ் வளராமல் தேக்க நிலையில் இருந்ததற்கு மகாத்மா காந்தியின் படுகொலை ஒரு காரணியாக இருந்த போதிலும், அந்த சமயத்தில் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வழிவந்த ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சார மூலதனம்தான் அதற்கு மிகவும் முக்கியமான காரணி என்பது என் கருத்தாகும். மேலும் அந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் நேருவுக்கு எதிர்ப்பைப் பிரதானமாக வழங்கியது கம்யூனிஸ்ட்டுகளும், சோசலிஸ்ட்டுகளும்தான் என்பதையும் நாம் நினைவு கூர்தல் வேண்டும். இவ்வாறு அந்த சமயத்தில் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே வகுப்புவாதத்தை எதிர்த்த அரசியல் சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஆளும் கட்சி மட்டுமல்ல, ஹாப்ஸ்வாம் ஒருமுறை சொன்னது போல அறிவிற் சிறந்த இடதுசாரிகளும் (“The Enlightenment Left”) பிரதான எதிர்க்கட்சி சக்திகளாக இருந்து மண்ணின் மாண்புகளை உயர்த்திப் பிடித்தார்கள். ஜவஹர்லால் நேரு முதலமைச்சர்களுடன் கொண்டிருந்த எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகளிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வகுப்புவாதம் புரையோடிப் போயிருந்ததை அவர் கூர்மையாகக் கண்டறிந்திருந்தார் என்பதைக் காண முடியும்.

ஆயினும், அந்த சமயத்தில் இடதுசாரிகளின் மேலாதிக்கம் இருந்தது பற்றி நான்கு அம்சங்களைக் கூற வேண்டியது அவசியம். முதலாவது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கிரசிலிருந்த வலதுசாரிகள் சூழ்ச்சி செய்தபோதிலும் கூட அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியிலிருந்தாலும் சரி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இடதுசாரிகள் வகுப்புவாதத்திற்கு எதிராக முன்னின்று போராடினார்கள்.

இரண்டாவதாக, முதலாளிகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் அளிக்கப்பட்ட போதிலும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் துறைக்கு சேவகம் செய்யக் கூடிய விதத்தில் செயல்பட்ட அதே சமயத்தில், அவர்களின் அளவுக்கு மீறிய பேராசையை ஒரு சமயத்தில் தடுத்து நிறுத்தவும் முடிந்தது. இந்தியப் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு நெருக்கடிக்கு உள்ளான போது இந்திராகாந்தியுடைய வங்கிகள் தேசியமய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூன்றாவதாக, அந்த சமயத்தில்தான் இந்திய அரசு மிகவும் உறுதியுடன் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மிகவும் குளறுபடியாக இருந்த சமூக ஒழுங்கில் நவீன, மதச்சார்பற்ற, முற்போக்கு மாண்புகளை சமூகத்தில் ஆழப் பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் அப்போது வெளியான புதிய பாடப் புத்தகங்களில் காண முடியும். மேலும் ஆட்சியிலிருந்தவர்களால் மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியினராலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அரசியல் பேச்சுக்கள் அமைந்திருந்தன. ஏற்கனவே காலனிய எதிர்ப்பு இயக்கத்தில் அரசியலாக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இவை மேலும் பெரிய அளவில் பக்குவத்தை உருவாக்கின.

இறுதியாக, மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட ஒன்றாக பார்க்கப்படவில்லை. மாறாக அது அனைத்து மாண்புகளின் தொகுப்பாகவும், கூட்டுச் செயல்பாடாகவும் கருதப்பட்டது.

நாட்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளான ஒரு சமூகத்தை நாம் கொண்டிருந்தோம். நாடு சுதந்திரம் பெற்றபின் அயல்துறைக் கொள்கையில் அணிசேராக் கொள்கையை உறுதிபட பற்றி நின்றோம். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தைப் பாதுகாத்தோம். பொருளாதார விவகாரங்களில் சோசலிச வளர்ச்சிப் (“socialistic development”) பாதை முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு பல முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆட்சியாளர்கள் நடைமுறையில் செய்தார்களோ இல்லையோ வாக்குறுதிகள் தாராளமாகவே அளிக்கப்பட்டன. அத்தகைய வாக்குறுதிகளும் கூட மக்களின் அரசியல் செயல்பாட்டுக்கு சேவை செய்தன.

நேருவினுடைய ஆட்சிக்கு பிரதானமான எதிர்ப்பு என்பது வலதுசாரிகளிடமிருந்து கிடையாது, மாறாக இடதுசாரிகள்தான் பிரதானமான எதிர்ப்பினை மேற்கொண்டிருந்தார்கள். அவை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், மதச்சார்பின்மை மாண்புடன் பின்னிப்பிணைந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் விதத்தில் அது அமைந்திருந்தது. இப்போது அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுவிட்டன. இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.

நவீன தாராளமய மற்றும் வலதுசாரிகளின் கொள்கைகளில் மதச்சார்பின்மையின் மாண்பு எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று கூறுவது மிகவும் கடினம். உலகின் பல பகுதிகளிலும் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி மற்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளாக இருந்தாலும் சரி, நவீன தாராளமயக் கொள்கைகள் எந்த நாடுகளில் அமல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் வலதுசாரிகள் வெற்றிக் களிப்பில் மிதப்பதைப் பார்க்கலாம். இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா, என்ன?

வகுப்புவாதம் தொடர்பாக நான் இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். 1993 இல் அயோத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் குறித்து (“On the Ruins of Ayodhya) ஒரு நூலும், அதன் பின்னர் பத்தாண்டுகள் கழித்து 2003 இல், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், இரு கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். ஆயினும் மதவெறியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

இப்போது கார்ப்பரேட்டு மூலதனம் ஒன்றாக இணைந்து, மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தின் ஆட்சிப் பரப்பிற்குள் மூலதனத்தின் நவீன தாராளமய எதேச்சாதிகாரம், தத்துவார்த்த ரீதியாக வகுப்புவாத எதேச்சாதிகாரமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கைகோர்த்துக் கொண்டுள்ளன.

கார்ப்பரேட்டுகளும் அரசாங்கமும் ஒன்றாக இருந்த முசோலினியின் இத்தாலியப் பாசிசத்தின் வடிவம் குறித்து இங்கே நினைவுகூர்தல் நலம் பயக்கும். சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தியப் பின் நவீனத்துவம் குறித்த பிரச்சனையில், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்டின் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம் என்று கூறியிருந்தேன். 1947இலிருந்து 1975 வரை முதல் கட்டம். நேருவின் ஆட்சி தொடங்கி, இறுதியில் நெருக்கடிக்க ஆளாகி, அவசரநிலைக் காலத்தில் சிதைந்தது. அடுத்த இருபது ஆண்டுகள் இரண்டாவது கட்டமாகும். இக்கால கட்டம் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களை இணைத்த ஜேபி இயக்கத்தால் துவங்கப்பட்டு, அவசரநிலைக் காலத்திற்குப் பின் ஆட்சி செய்த ஜனதா அரசாங்கத்தின் காலம்.

இக்கால கட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய அரசியலில் ஒரு மரியாதைக்குரிய மதித்துப் போற்றக்கூடிய ஓர் இயக்கமாகவும் சட்ட ரீதியாக இயங்கக் கூடிய ஓர் இயக்கமாகவும் மாற்றப்பட்டது. இதன் அரசியல் அங்கமான ஜனசங்கம் கட்சிக்கும் அதன் தலைவர்கள் வாஜ்பாபி மற்றும் அத்வானிக்கும் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இது அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசின் அரசியல் நெருக்கடி காரணமாக மேலும் தொடர்ந்து ஆட்சி செலுத்தும் வல்லமையை இழந்தது. ஆயினும் அதற்கு மாற்றாக வேறொருவரும் தோன்றவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்து, இரண்டாவது வாஜ்பாயி அரசாங்கம் 1998 இல் ஆட்சிக்கு வந்தது. இது புதியதொரு கட்டத்தைத் தொடங்கி வைத்தது. இடதுசாரிகள் அல்லாத அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி ஓர் அரசியல் கட்சிகளின் கூட்டணி உருவானது. இது முதலாளித்துவ ஆட்சிக்கு புதியதொரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது. எந்தக் கூட்டணியில் நின்று தேர்தலில் போட்டியிட்டாலும், வெற்றி பெற்ற பின் கூட்டணியை மாற்றிக் கொள்வது என்பதும் இக்காலகட்டத்தில் நடந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1989இலிருந்து 1992 வரை மூன்றாண்டுகளில் சர்வதேச அளவிலும், தேச அளவிலும் முக்கிய சம்பவங்கள் பல நிகழ்ந்தன. சர்வதேச அளவில் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பு முறை முடிவுக்கு வந்தது. அமெரிக்கா உலக மேலாதிக்கப் போலிஸ்காரனாக (Hegemon) உருவெடுத்தது. இதனுடன் போட்டிபோடக் கூடிய அளவிற்கு எவரும் இல்லை. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசும் இப்போது வெளிப்படையாகவே புதிய ஏகாதிபத்திய வல்லரசுக்குப் பின்னால் எவ்விதமான கருத்து வேறுபாடுமின்றி அணிதிரண்டன.

நம் நாட்டிற்குள்ளும் நவீனதாராளமயக் கொள்கைகள் நரசிம்மராவ்-மன்மோகன்சிங் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் களமிறங்கின. வகுப்புவாதத்தின் அமைப்புகளுக்கும், காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையே அதிகார பூர்வமாக அறிவிக்காமல் குறிப்பறிந்து ஒன்றாய் செயல்படும் விதத்தில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இதனை 1989 இல் சிலாநியாஸிலும், மிகவும் மோசமான முறையில் 1998 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் பார்க்க முடிந்தது. இக்கால கட்டம் 1998 இல் முடிவுக்கு வந்தது.

அதன்பின் புதிதாக பாஜக தலைமையிலான வலதுசாரிகளின் அரசாங்கம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் எண்ணப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அது நாட்டிற்கு வெளியே ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டணி வைத்துக் கொண்டது, நாட்டிற்கு உள்ளே நவீன தாராளமயக் கொள்கையை (இதனை நான் அதிதீவிர முதலாளித்துவம் என்று அழைப்பேன்) பின்பற்றியது.

ஆளும் வர்க்கத்துக்கு மதச்சார்பின்மை முகத்துடன் காங்கிரஸ் சேவகம் செய்தது, பாஜகவோ வகுப்புவாத முகத்துடன் சேவகம் செய்தது. பாஜக தன்னுடைய ஆட்சிக்கு வேறு பல கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்ததால் அது தன்னுடைய சொந்தத் திட்டத்தின் ஆத்திரமூட்டல் அம்சங்களைச் சற்றே நிறுத்தி வைத்திருந்தது.

இப்போது மோடி, தன்னுடைய பிரதமர் பதவிக்கான கனவிற்கு இந்துத்துவாக் கொள்கையை இலக்காக முன்வைக்கவில்லை, மாறாக மன்மோகன்சிங்கிற்கு சேவை செய்த அதே வளர்ச்சிக் கொள்கையைத்தான் முன்வைத்திருக்கிறார்.

வகுப்புவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரை, அரசியல் அரங்கில் மிக முக்கியமான அம்சம், 1998க்குப் பின், பாஜகவுடன் இடதுசாரிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு சமயத்தில் அல்லது பிறிதொரு சமயத்தில் உறவு கொண்டுள்ளன என்பதாகும்.

மக்கள் மத்தியில் மதவெறி சிந்தனைகளை வளர்த்தெடுப்பதென்பது இரு விதங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் மக்கள் மத்தியில் இவ்வேலையை மிகவும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த 80 ஆண்டுகளில் தங்கள் பக்கம் ஆதரவர்களை அதிக அளவில் இவர்கள் பெற்றுள்ளனர். கிராம்சி கூறியதைப்போல சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள் மத்தியில் நாள்தோறும் சிறுசிறு இயக்கங்கள் மூலம் இவர்கள் தங்கள் வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இப்போது இத்தகைய வேலைகளை தாங்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஆட்சியாளர்கள் மூலமாகவும், அதன் அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்கள், அடக்குமுறை கருவிகள் மற்றும் பல சமயங்களில் நீதித்துறை மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

வகுப்புவாதம் குறித்த நம்முடைய ஆய்வுகள், சங்பரிவாரக் கூட்டத்தின் வேலைகள் குறித்தே அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கின்றன. ஏனெனில் நாட்டில் மிகவும் பெரிய அளவில் ஸ்தாபன ரீதியாக செயல்படும் வகுப்புவாத சக்தி இதுதான். ஆயினும் இது ஒன்று மட்டும் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டுக்காக நான் மேலும் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை முறையே முஸ்லீம் வகுப்புவாதம் மற்றும் சிவசேனை ஆகியவைகளாகும்.

பொதுவாக இந்திய முஸ்லீம்களைப் பொறுத்த வரை, ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், நாடு சுதந்திரம் அடைந்த பின் முஸ்லீம்களுக்கு என்று அகில இந்திய அளவில் ஒரு கட்சி உருவாகவில்லை. வட்டார அளவிலும் மாநில அளவிலும் ஏராளமாக இருந்தாலும், அகில இந்திய அளவில் அப்படி ஒரு கட்சி இல்லை.

தேசிய அரசியலிலும், ஏன் மாநில அளவிலான அரசியலிலும் கூட, முஸ்லீம்களில் பெரும்பாலோர் ஒரு மதச்சார்பற்ற தேர்தல் மாற்றைத்தான் (secular electoral alternative) கோருகின்றனர். இதற்கு அவர்கள் மதச்சார்பின்மை கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக மதச்சார்பற்ற அரசு மூலம்தான் தாங்கள் பெரும் அளவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு மதச்சார்பின்மை என்பது இவ்வாறு சமூக நவீனமயத்தை (social modernization) அல்லது ஓர் அரசியல் கண்ணோட்டத்தை அல்லது ஒரு தத்துவார்த்த வாழ்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமல்ல, தங்கள் இனத்தின் நலனுக்கு மிகவும் உகந்த ஒன்றாகவும் இது இருப்பதால்தான் அவ்வாறு அவர்கள் கோருகிறார்கள்.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில், முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகரீதியாக பத்தாம் பசலித்தனமான சக்திகள் முஸ்லீம்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய விதத்தில்தான் பொதுவாக இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, வருமானம், கல்வியின் நிலைகள், காவல்துறை மற்றும் ராணுவம் போன்ற அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுத்தல் என அனைத்திலும் முஸ்லீம்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான இடைவெளி விரிவடைந்திருப்பதாகத்தான் அனைத்துப் புள்ளி விவரங்களும் கூறுகின்றன. அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் வகுப்புவாதமயப்படுத்தப்பட்டிருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நன்கு ஸ்தாபனப்படுத்தப்பட்ட வன்முறை அவர்களுக்கு எதிராக ஏவப்படுதலும், முஸ்லீம்கள் மத்தியில், எந்த நிமிடத்திலும் தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுத் தாக்கப்படலாம் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.

காஷ்மீரில் அரசுப் பயங்கரவாதத்தை, ஜிகாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, சாமானிய மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளுக்கு எதிராகவும் பயன்படுத்துவது மக்களை ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தியுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள அந்த மாநிலத்தில் அவர்கள் சுயாட்சி கோருவது என்பதையே மதச்சார்பற்ற குடியரசு என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை. முஸ்லீம்களில் உயர்ந்தோர் குழாமைத் தவிர மற்ற சாமானிய முஸ்லீம்கள் அனைவரும் ஆட்சியாளர்களைத் தங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காது ஒதுக்கி வைத்திருப்பதாகவும், ஆடுமாடுகளைப் போலவே சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படுவதாகவும் கருதுகிறார்கள்.

இத்தகைய நிலைமைகள் அவர்களை பிற்போக்கான முஸ்லீம் மதத் தலைவர்களிடமும், படுபிற்போக்கு முஸ்லீம் சிந்தனையாளர்களிடமும் மிக எளிதாகத் தள்ளிவிட்டுள்ளது. இவற்றின் விளைவுகளில் ஒன்று, இவர்களை மிகவும் பயபக்தி உடைய கடவுள் நம்பிக்கையாளர்களாக மாற்றி இருப்பதாகும். சாதி இந்துக்களில் உள்ள வளர்ச்சியைவிட இது அதிகம் என்றே கூறலாம். வகுப்புவாத சக்திகள் இவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பயபக்தியுடன் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் படிப்படியாக அரசியலின் வகுப்புவாத வடிவங்களைப் போதிப்பதுடன் வன்முறையை ஏவிடும் வகுப்புவாதக் கட்டமைப்புகளுக்குள்ளும் அவர்களைத் தள்ளிவிடுகின்றன.

பாபர் மசூதி இடிப்பு, அதனைத் தொடர்ந்து குறிப்பாக குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது நடந்த இனப்படுகொலைகள், நகர்ப்புற முஸ்லீம்களில் ஒரு சிலர் மத்தியில் இந்து வகுப்புவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லீம் ஜிகாதி பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு‍களில் உருவாகியுள்ள பற்பல ஜிகாதி குழுக்கள் உத்வேகம் அளிக்கின்றன.

இந்திய முஸ்லீம் சமூகத்தில் மதச்சார்பற்ற நீரோட்டத்துடன் எண்ணற்ற முஸ்லீம்கள் இருந்தபோதிலும், அவர்களது சுதந்திரமான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இடையே முற்போக்கான முஸ்லீம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் ஓர் அமைப்பு இல்லாததன் காரணமாக, இவர்களை இங்கே இருக்கின்ற பல்வேறான பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

விளைவு, முஸ்லீம்கள், முற்போக்கு மேடைகளில் அணிதிரட்டப்படுவதென்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோருக்கு, பாலஸ்தீனப் பிரச்சனை என்பது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதலாகத்தான் தெரிகிறதேயொழிய, அது காலனியாதிக்கத்தின் மிகக் கொடூரமான காட்டு மிராண்டித்தனமாகப்படவில்லை. ஆப்கானிஸ்தானத்திற்குள்ளோ அல்லது ஈராக்கிற்குள்ளோ ஊடுருவுதல் நடைபெறுவதை அவர்களால் மேற்கத்திய கிறித்தவர்கள் கிழக்கத்திய முஸ்லீம்கள் மீது தொடுத்திடும் இனப்படுகொலைகளாகத்தான் பார்க்கப்படுகிறதேயொழிய, நவீன ஏகாதிபத்தியத்தின் வரலாற்றின் அத்தியாயங்களாக அவர்களுக்குத் தெரியவில்லை.

சமீபத்தில் கூட, இந்திய முஸ்லீம்களில் பலதரப்பினர் வங்கதேச முஸ்லீம் லீகிற்கு ஆதரவாக சக்திமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் ஷா பாக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இப்போது கடவுள் பற்றுள்ளவர்களால் கடவுள் பற்றற்றவர்கள் கொல்லப்படுவது என்பதும் சன்னி குழுவினரால் ஷியா குழுவினரும், முற்போக்கான பெண்கள் பிற்போக்கான ஜிஹாதிகளால் கொல்லப்படுவது என்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிற்போக்காளர்களால் கொல்லப்படுபவர்களுக்கு ஆதரவாக இந்திய முஸ்லீம்கள் மத்தியில் அர்த்தமுள்ள ஆதரவு இயக்கம் எதுவும் நடைபெறவில்லை.

நாட்டில் உள்ள முஸ்லீம்களில் உயர் அடுக்கில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களின் கொள்கைகள் சிலவற்றைக் குறித்து அவ்வப்போது எதிர்ப்பினையோ அல்லது விமர்சனங்களையோ காட்டுவார்கள். இது எதற்கு என்றால் அவர்கள் தங்களின் பேரம்பேசும் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தானேயொழிய, வேறெதற்காகவும் அல்ல. ஆனால், முஸ்லீம்களில் கீழடுக்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவே (Lumpen-Proletariat), சிவசேனை மற்றும் சங்பரிவாரக் கூட்டத்தில் உள்ளவர்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எங்கு வன்முறை வெடித்தாலும், அந்த சமயங்களில் காவல்துறையினராலும் இதர பாதுகாப்புப் படையினராலும் கைது செய்யப்படும்போது, இந்துக்களுக்கு உள்ளதுபோன்ற அமைப்புகள் எதுவும் இவர்களைக் காப்பாற்றுவதற்கு முன்வருவதில்லை.

பம்பாயில் சிவசேனை அமைப்பு இவ்வாறு உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டுதான் உருவானது. இவர்கள் உத்திகளை, தங்கள் எதிரிகளை மற்றும் வன்முறைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள்? தங்களின் கீழ் திரண்ட உதிரிப் பாட்டாளிகளை வைத்து ஒரு பக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளையும், தொழிற்சங்கவாதிகளையும் வேட்டையாடினார்கள், மறுபக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையை ஏவினார்கள். இவற்றிற்கு இந்துத்துவா வெறியர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

பின்னர் பீகாரிகளுக்கு எதிரான இயக்கத்தை நடத்தியபோது இவர்கள் இந்து பீகாரி மற்றும் முஸ்லீம் பீகாரிகளுக்கு இடையே வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. இங்கே நான் சிவசேனையைப் பற்றி ஆய்வு செய்திடவில்லை. எனினும் ஒருசில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியிருந்தது.

தாக்கரேயின் சித்தாந்தத்தின் முக்கிய கூறு என்னவெனில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது என்பதுதான்.

1966 இல் உருவான சிவசேனை 1980களில்தான் இந்துத்துவாவின் சித்தாந்தத்தை முழுமையாகத் தழுவிக் கொண்டது. ஒரு சமயத்தில், தாக்கரே அவசரநிலைப் பிரகடனத்தைக் கூட ஆதரித்தார், வடஇந்தியர்களுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரங்களின் போது அது இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. அனைவருமே வெளியாட்கள் போன்று தான் சித்தரிக்கப்பட்டார்கள். இவர்கள் பம்பாயில் இருப்பதால்தான் மராத்தியர்களின் துன்பதுயரங்களுக்குக் காரணமாம். நாட்டின் நிதி மையமாக விளங்கும் பம்பாயில் சூறையாடும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட துன்ப துயரங்களுக்கெல்லாம் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்த, மிக அற்பக் கூலி பெற்ற வட இந்தியர்கள்தான் காரணமாம்.

சிவசேனை தன் கீழ் இருந்த உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டு, வன்முறை வெறியாட்டங்களை தமிழர்கள், முஸ்லீம்கள், பீகாரிகள் என்று நடத்தியது. பின்னர் வங்காளிகள் மீது இவர்கள் எல்லாம் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அவர்களின் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள், அவர்களின் சிறிய வியாபார நிறுவனங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டார்கள்.

தாக்கரே ஆரம்பத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாகத்தான் தன் வேலையைத் தொடங்கினார். பின்னர் சிவசேனையின் தலைவராக உயர்ந்தபின் அவர் இறக்கும் தருவாயில் அவரது சொத்தின் மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.

இவ்வாறு வகுப்புவாத வன்முறை என்பது ஸ்தாபன ரீதியாகக் குற்றங்கள் புரிவதற்கான வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு கிரிமினலாகக் குற்றம் புரியும் அமைப்புகளோடு இவை சிண்டிகேட்டுகள் அமைத்துக் கொள்கின்றன. வகுப்புவாதத்தில் சரியான அம்சம் என்பது பொதுவாக இதுதான். சிவசேனையின் ஆட்கள் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலிருந்தே பொறுக்கி எடுக்கப்பட்டார்கள்.

மரபு ரீதியான முடிவுரை கூறி இந்த உரையை நான் முடிக்க முயற்சிக்கப் போவதில்லை. ஆயினும், ஒருசில முக்கிய அம்சங்களை மட்டும் கூறி முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, இந்தியாவில் வகுப்புவாதக் கட்டமைப்பிற்கு உதிரிப்பாட்டாளிகள்தான் (lumpen proletariat and the lumpenised petty bourgeoisie) குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது சங்பரிவாரக் கூட்டமாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லீம்களாக இருந்தாலும் சரி அல்லது சிவசேனை போன்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி. ஏனெனில், நவீன தாராளமய கட்டத்தில் இந்திய முதலாளித்துவத்தின் கட்டமைப்பு அம்சம் அதுதான். நாட்டில் தொழிலாளர் வர்க்கச் சேனையை விட வேலையில்லாத இளைஞர்களின் சேனை மிகவும் பெரிதாக இருக்கிறது. இத்தகு நிலையில் சமூகத்தில் ஒரு முறையான தொழிலாளர் வர்க்கக் கலாச்சாரத்தை நிறுவுவது என்பது மிகவும் சிரமம். தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே கூட உதிரிப் பாட்டாளிகளை உருவாக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. முறையான ஊதியம் கிடையாது, எந்த நிமிடமும் வேலையைவிட்டு விரட்டி அடிக்கப்படலாம் என்ற நிலை. எல்லாவற்றையும் விட மோசம், வேலையில்லாதோர் பட்டாளம் மிகவும் பெரிது, நிரந்தரமானது.

ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபட்டிருப்பவரின் நிலையான வாழ்க்கை ஒருவருக்கு மதிப்பையும் மரியாதையையும் அளிக்கிறது அல்லது குறைந்தபட்சம் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரத்தை அளிக்கிறது. அவ்வாறு ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபடாதவர்களின் நிலை? காலப்போக்கில் மற்றவர்களைத் துன்புறுத்துவதைப் பற்றிக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நபர்களை வகுப்புவாதம் தன்னுடைய வன்முறைச் செயல்களுக்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.

ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது அவரைப் போலவே ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோடும் இணைந்து ஓர் இனமாக, ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உதிரிப்பாட்டாளிகள் என்று சொல்லப்படுகிற ரவுடிகள், கிரிமினல்கள், திருடர்கள், பொறுக்கிகள் மற்றும் இதுபோன்று சமுதாயத்திற்குக் கேடு பயக்கும் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது இயற்கையாகவே குறிப்பிட்ட குணாம்சங்களுடன் கூடிய எவ்விதமான இனத்தையும் (The life of the lumpenproletariat is by its nature one that creates no community out of any shared conditions of labour) உருவாக்குவதில்லை, தற்காலிகமாக சேர்ந்து கொள்வார்கள், வேலை முடிந்தபின் கலைந்து சென்று விடுவார்கள். தொழிலாளர் வர்க்கக் குணம் பறிக்கப்பட்ட இவர்கள், சாதி, மதம் அல்லது வேறு எந்த விதத்திலாவது வெறியூட்டப்பட்டால் அதற்கு மிக எளிதாக மயங்கிவிடுவார்கள். வகுப்புவாத அரசியல் இத்தகைய உதிரிப் பாட்டாளிகளுக்கு வெகுவாகவே தீனி போடுகிறது.

இத்தகைய உதிரிப் பாட்டாளிகளை வகுப்பு வாத/பாசிஸ்ட் வகையிலான வன்முறை இயக்கங்கள் மிகவும் எளிதாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மிகவும் பொதுவாகக் கூறுவதென்றால், வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களும் நவீன தாராளமயம் அல்லது அதிதீவிர முதலாளித்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். அதாவது, முதலாளித்துவத்தின் பணப் பேராசை பிடித்தலைகிற, கொள்ளையிடும் வடிவமாகும். அனைத்து முதலாளித்துவமும் கொள்ளையடிக்கும் குணம் கொண்டவைதான். ஒவ்வொன்றுக்கும் இடையே கொஞ்சம் கூட குறைச்சல் இருக்கலாம், அவ்வளவுதான்.

இத்தகைய முதலாளித்துவ மனப்பாங்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆயினும் நவீனதாராளமய தீவிரவாதம் தலை தூக்குவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது அத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன. அரசின் தலையீடு என்பதும் அநேகமாக இல்லை. எப்போதாவது மதவன்முறை வெறியாட்டங்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையாக மாறும்போதுதான் அரசு தலையிடுகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் கட்டத்தின் போது, அரசு ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாக இருந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எல்லாம் இடம் தராது அதனை எதிர்த்து நின்று இந்தியப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய முதலாளித்துவம் வலுவானதாகவும், அதிகம் கொள்ளையடிக்கக் கூடியதாகவும் மாறியதால், ஏகாதிபத்தியக் கொள்ளையர்களோடு கூடிக்குலாவுவது என்பதும் அதிகமாகியது. பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கவும் முன்வந்தது. இந்தியப் பொருளாதாரத்தையும் மேலும்மேலும் அந்நியர்களுக்குத் திறந்துவிட வழிவகுத்தது. இவற்றின் மூலமாக ஒரு சிலரை மட்டும் நிரந்தர வேலையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வேலையில்லாதோர் பட்டாளத்தில் தள்ளியது.

இவற்றின் மூலமாக அரசின் குணாம்சமும் அரசின் பங்கும் மிகவும் மோசமாக மாறியது. நாட்டிற்குள்ளே, இது ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், அநேகமாக முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை மட்டுமே, அதிலும் குறிப்பாக கார்ப்பரேட்டுகள் நலன்களை மட்டுமே காக்கும் ஒன்றாக மாறியது. உலகப் பொருளாதாரத்துடனான உறவுகளைப் பொறுத்தவரை, அரசு, உலகத்தின் முன்னே இந்திய மக்கள் மற்றும் அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் இந்த அரசின் முக்கியமான வேலை என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களையும் கட்டளைகளையும் இந்திய மக்களுக்கு கைமாற்றிக் கொடுப்பதாகும். இத்தகைய சூழ்நிலையில் அரசு மதச்சார்பற்ற தேசியம் (secular nationalism) என்னும் கொள்கையை – நம்முடைய காலனிய எதிர்ப்பு இயக்கங்களின்போது நமக்கு அடிப்படையாக அமைந்திருந்த கொள்கையை – நடைமுறையில் கைவிட்டாக வேண்டும்.

இந்த இடத்தில் வலுவாக உள்ள வலதுசாரிகள் இந்திய தேசியத்தை (Indian nationalism) மதரீதியான, அறிவு பெருகுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற (obscurantist), உயர் பிராமணத்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிற மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத விதத்தில் மாற்றியமைக்கும் பணியை வேகம் வேகமாகச் செய்து வருகின்றன. நாட்டு மக்கள் இன ரீதியாக, பிராந்திய ரீதியாக, மத ரீதியாக மோதவிடப்பட்டு இந்திய மக்களின் ஒற்றுமை கூட கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்றன.

நவீனதாராளமயக் கொள்கை கொடூரமான சுரண்டலுக்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை மழுங்கடிக்கக் கூடிய விதத்தில் மிக அற்பக் கூலி தரும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. மக்களில் பெரும்பான்மையினருக்கு வேலை அளிப்பதற்கோ அல்லது பாதுகாப்பான வேலையை அளிப்பதற்கோ அது மறுக்கிறது.

இவ்வாறு இந்த அமைப்பு முறையானது சுரண்டல் தன்மை கொண்டது மட்டுமல்ல, சமூகத்தையே வேருடன் பிடுங்கி எறியக் கூடியதாகும். மக்களின் சமூக அமைப்பு முறையையும் குழி தோண்டிப் புதைக்கக் கூடியதாகும். இவ்வாறு அதிதீவிர முதலாளித்துவம் சமூகத்தையே அழுகச் செய்துவிட்டது. மக்களில் பெரும்பாலானவர்கள் மத்தியில் நஞ்சை விதைத்திருக்கிறது. ஏன், தொழிலாளர் வர்க்கத்தில் ஒருசில பிரிவினரிடம் கூட இதனை அது செய்திருக்கிறது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அனைத்து வடிவங்களும் மிகவும் அவசியமானவைகளாகும். ஆயினும் அதே சமயத்தில், எவ்வளவு காலத்திற்கு மற்றும் எவ்வளவு கடுமையாக இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது குறித்து எவ்விதமான மாயையும் நமக்கு இருக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மதச்சார்பின்மைக்கு ஆதரவான தத்துவார்த்த போராட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியுமாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வகுப்புவாதத்திற்கு (Communalism) மாற்று, கம்யூனிசம் (Communism) அல்லது சோசலிசம்தான். இன்றைய தினம் நாட்டில் வகுப்புவாத சிந்தனைகள் மிகப்பெரிய அளவில் ஊட்டி வளர்க்கப்படுவதை முறியடிக்கக் கூடிய விதத்தில் மதச்சார்பின்மையையும் கம்யூனிஸ்ட்டுகளின் குணங்களில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிட வேண்டும்.

Bhagat Singh's feelings are getting closer to us Article By Sitaram Yechury in tamil trnaslated By S. Veeramani பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன - சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன – சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

2021 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 114ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.

பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.

தில்லி வெடிகுண்டு வழக்கு
இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

“இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.”

இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

“சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.”

புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மன அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.”

பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர், இவர்களைப் பார்த்து, “இந்த முழக்கத்தின் பொருள் என்ன?” என்று கேட்டார். “புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

“ ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்போதைய சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான்.

உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமான முறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.”

“இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.”

“‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.”

“இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.

எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.”

சமூக அமைப்புக்கு எதிராகவே, எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல
தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …” “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.”

“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.

வகுப்புவாதத்திற்கு (எதிராக) மதச்சார்பின்மை
1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.

விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.

“இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.”

இதற்கு மாற்றுமருந்து என்ன?
‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.

“தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.”

“மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”

எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:

“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர். கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”

ஊடகங்கள்
மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:

“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”

“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில் வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”

இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.

சமூக நீதி
பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:

““… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டாமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது. அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”

பகத்சிங், ‘நான் ஏன் நாத்திகன்’ கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!

இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.

பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com

Features showing Assembly election results Article in tamil translated By S. Veeramani சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டும் அம்சங்கள் - தமிழில்: ச.வீரமணி

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டும் அம்சங்கள் – தமிழில்: ச.வீரமணி

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று முக்கிய அம்சங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. முதலாவது, உத்தரப்பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறையாகவும் ஆட்சி அமைத்திட தீர்மானகரமான முறையில் வெற்றி பெற்றிருப்பதும், அதேபோன்று உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் அது தன் அரசாங்கங்களைத் தக்க வைத்துக்கொள்வதிலும் வெற்றி பெற்றிருப்பதுமாகும். பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறைந்த பெரும்பான்மையே பெற்றிருந்தபோதிலும், அவற்றின் வாக்கு சதவீதம் 3.65 சதவீதம் அளவிற்கு உயர்ந்து, 45 சதவீதமாகி இருக்கிறது. சாதிக் குழுக்களையும், கூட்டணிகளையும் மிகவும் திறமையாகக் கையாண்டது, பணத்தை வாரி இறைத்தது, சமூக ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது போன்ற பல்வேறு காரணிகள் இவ்வெற்றிக்குத் துணை புரிந்திருக்கின்றன. ஆனாலும், மக்கள் மத்தியில் ‘இந்து உணர்வை’ மேலோங்கச் செய்திருக்கும் பிரதான அம்சத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது

இந்துத்துவா – மனுவாத சவால்
பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் கடந்த சில ஆண்டுகளில் உயர் சாதியினர் மட்டுமல்லாமல், மக்கள் தொகையில் கணிசமான பிரிவினர் மத்தியில் ‘நாம் இந்துக்கள்’ என்கிற உணர்வு விதைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களை முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் திருப்பிவிடக்கூடிய விதத்தில் இவர்கள் மத்தியில் இந்துத்துவா கருத்துக்களையும் ஏற்க வைத்திருக்கிறார்கள். பாஜக, உயர் சாதியினர், மற்றும் (முஸ்லீம்கள், யாதவர்கள் மற்றும் ஜாட் இனத்தவர்களைத் தவிர)இதர அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரையும், தலித்துகளையும் வென்றெடுத்திருக்கிறது என்று வளர்சமூகங்களின் ஆய்வு மையத்தின்-லோக்நிதி அமைப்பு நடத்திய (Centre for the study of Developing Socidtids-Lokniti) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்துக்கள் மத்தியிலேயே தங்களுடைய குறிப்பிட்ட சாதி அடையாளத்தை உயர்த்திப்பிடிப்பது என்பது பாஜக-வினருக்குப் பலன் அளிக்கக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது.

Features showing Assembly election results Article in tamil translated By S. Veeramani சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டும் அம்சங்கள் - தமிழில்: ச.வீரமணி

இவ்வாறு உணர்வுக்குத் தள்ளப்பட்ட மக்களிடமிருந்து இத்தகைய உணர்வை முறியடிக்க வேண்டிய நிலைக்கு சமாஜ்வாதிக் கட்சி-ராஷ்ட்ரிய லோக்தளம் தள்ளப்பட்டது. உத்தரப்பிரதேசம், இந்தி பேசும் மக்கள் மத்தியில் இதயம் போன்ற பகுதியாகும். இம்மாநிலம் முழுவதும் இதேபோன்ற ‘நாம் இந்துக்கள்’ என்னும் உணர்வு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில், ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும், வேலையின்மை மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிரமங்களும் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தபோதிலும், அவை மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கிற ‘இந்துக்கள் ஆதரவு’ உணர்வை மாற்றக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இல்லை. இத்தகைய சமூக எதார்த்தமானது, இந்துத்துவா சித்தாந்தத்தினை எதிர்த்து முறியடித்திடவும், இதற்கு மாற்று சமூக-கலாச்சார-தத்துவார்த்தக் கட்டமைப்பைக் கட்டி எழுப்புவதற்குத் தேவையான அளவிற்கு அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பணியினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதற்கு இடதுசாரிகளின் கேந்திரமான பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்துத்வா-மனுவாத சவாலை எதிர்த்து முறியடித்திடக்கூடிய அதே சமயத்தில் அதனுடன் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும், ஒரு மாற்று ஜனநாயக-மதச்சார்பற்ற சமூக-கலாச்சார விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கக்கூடிய போராட்டத்தையும் இணைத்து எடுத்துச் செல்ல வேண்டியதும் அவசியமாகும். இவை, இதர ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படையாகவும் இருந்திட வேண்டும்.

இரண்டாவது அம்சம்
இத்தேர்தல் முடிவுகள் வெளிக்கொண்டுவந்திருக்கும் இரண்டாவது அம்சம், தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகும். குறிப்பாக பஞ்சாப்பின் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ், அங்கும் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதர மாநிலங்களைப் பொறுத்த வரையிலும் கூட, உத்தரகண்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசின் செயல்பாடு, முந்தைய தேர்தல்களில் இருந்த நிலைமைகளைவிட, வாக்கு சதவீதத்திலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையிலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில், பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெறும் 2.3 சதவீத வாக்குகளையே பெற்று, இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. முன்பு அதற்கு இங்கே ஏழு இடங்கள் இருந்தன.

இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த இடங்களில் எல்லாம் பாஜக மிகப்பெரிய அளவில் ஆதாயம் அடைந்திருக்கிறது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி முன்பிருந்த பலத்துடன் ஒப்பிடுகையில் அது வெறும் எலும்புக்கூடாக மாறியுள்ளபோதிலும், அது இப்போதும் தான் ஒரு வலுவான பிரதான கட்சி என்கிற நினைப்புடன் நடந்துகொள்ளும் போக்கைக் கடைப்பிடிப்பது தொடர்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக-விற்கு சரியான முறையில் எதிர்ப்பை அளிக்கக்கூடிய விதத்தில் சமாஜ்வாதி-ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி உருவாகியிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துள்ள அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சி மட்டும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது குறித்து வேறெந்தவிதத்தில் விளக்கிட முடியும்? காங்கிரஸ் கட்சி, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் எதிராகவும், மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்யும் வேறு சில மாநிலங்களிலும் அவற்றுக்கு எதிரான நிலை எடுத்திருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துத்துவா சித்தாந்தத்துடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கைக் கடைப்பிடிப்பதையும் பார்க்க முடிகிறது. காந்தி குடும்பத்தை முழுமையாக சார்ந்திருப்பதிலிருந்து ஒரு முறிவை ஏற்படுத்திக்கொண்டு, புதியதொரு வலுவான தலைமையை உருவாக்குவது எப்படி என்பதில் காங்கிரஸ் கட்சி தீராத குழப்பத்தில் சிக்கியுள்ளதுபோன்றே தெரிகிறது. பாஜக-விற்கு ஒரு வலுவான எதிர்ப்பை அளித்திட, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்துவரும் பாஜக-விற்கு எதிரான சக்திகளை அணிதிரட்டுவது அவசியம். இதில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மூன்றாவது அம்சம்
மூன்றாவது அம்சம், இந்தத் தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருப்பதாகும். அது, தில்லியில் எப்படி இதர கட்சிகளைத் துடைத்தெறிந்துவிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றதோ அதே போன்று இங்கேயும் பிரதிபலித்திருக்கிறது. இங்கே ஆம் ஆத்மி கட்சி, சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மற்றும் அவர்களுக்கிடையே காணப்படும் பல்வேறு இனத்தினர் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றிருப்பதைக் காட்டுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை பஞ்சாப்பில் அமைந்திடும் ஆம் ஆத்மி அரசாங்கம், முதல் அடியை எடுத்து வைத்துக் காட்டியிருக்கிறது.

மார்ச் 16, 2022
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு

விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது – எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru  விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு
வர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் எம்மா கேம்ப்

வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சீனியராக உள்ள எம்மா கேம்ப் ‘கல்வியில் தனிநபர் உரிமைகளுக்கான அறக்கட்டளை’யில் பயிற்சி பெற்றவர். கல்வி வளாகத்திற்குள்ளே சுதந்திரமான பேச்சு குறித்து பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகின்ற ‘தி கவாலியர் டெய்லி’ என்ற மாணவர்களுக்கான செய்தித்தாளில் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் நான் பாலினம், பாலுறவு குறித்த பாடத்தில் எழுகின்ற அறநெறி சார்ந்த சிக்கலான கேள்விகளை என்னுடன் விவாதிக்கத் தயாராக இருக்கின்ற தத்துவவியல் துறைப் பேராசிரியரின் அலுவலக நேரத்திற்காகக் காத்துக் கிடப்பேன். நாங்கள் பேசுவதை எவரேனும் ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்பதைப் போன்று பெரும்பாலும் குரலைத் தாழ்த்தியே நாங்கள் பேசிக் கொள்வோம். இறுதிக்கட்ட படிப்பை நான் முடித்துக் கொண்டிருக்கும் அந்த வர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகின்ற பல உரையாடல்களையும் மிகவும் அமைதியான குரல்களும், கவலையான தோற்றங்களுமே இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

மாணவர் மன்றத்தில் நடைபெறுகின்ற பன்முகத்தன்மை பயிற்சியின் போது மிகவும் பொருளுள்ளதாக ஆனாலும் லேசாகப் புண்படுத்தும் வகையில் ஏதோவொன்றைச் சொன்ன மாணவனை ஒதுக்கி வைத்ததற்காக வருத்தப்பட்ட என்னுடைய தோழி தன் குரலைத் தணித்துக் கொள்ள வேண்டியிருந்தது. சமகாலத்து விமர்சனத்திலிருந்து தாமஸ் ஜெபர்சனைப் பாதுகாக்கும் வகையிலான விரிவுரை பற்றி குறிப்பிட்ட போது தன்னுடைய படுக்கையறை கதவை மூடி வைத்த என்னுடைய மற்றொரு நண்பர் ‘நாம் பேசுவதை என்னுடைய ரூம்மேட் கேட்டு விடப் போகிறார்’ என்று விளக்கம் கூறினார்.

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru  விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு

பேராசிரியர்கள், சகமாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்தக் கல்லூரிக்கு வந்தேன். அறிவார்ந்த பன்முகத்தன்மை, கடுமையான கருத்து வேறுபாடுகளை வென்றெடுக்கும் சூழல் குறித்து உண்மையில் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் என்னுடைய கல்லூரி அனுபவமோ முற்றிலும் மாறாக மிகவும் கடுமையான கருத்தியல் இணக்கம் கொண்டதாகவே வரையறுக்கப்பட்டது. அனைத்து அரசியல் சார்புடைய மாணவர்களும் – தங்களுடைய வகுப்பறை விவாதங்களில், நட்பு உரையாடல்களில், சமூக ஊடகங்களில் – தாங்கள் உண்மையில் என்ன நினைக்கிறோம் என்பதைச் சொல்வதை மறைத்துக் கொள்ளவே செய்கிறார்கள். கருக்கலைப்பு உரிமைப் போராட்டங்களில் கலந்து கொண்டவளாக, இனவெறிக்கு எதிராக நிற்க வேண்டியது பற்றி எழுதிய தாராளவாதியாக இருந்த போதிலும் சில சமயங்களில் நானும் என் மனதில் இருப்பவற்றை அப்படியே முழுமையாகப் பேசுவதற்கு அச்சப்படுபவளாகவே இருந்து வருகிறேன்.

பெரும்பாலும் விரும்பப்படாத கருத்துக்களுக்கு வகுப்பறைகளுக்குள் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவு மிகவும் சாதாரணமானதாகவே உள்ளது. மாணவர்கள் பலரும் அதுபோன்ற கருத்துகளுக்கான ஆதரவு அளிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டனர். தங்களுடைய பேச்சுகளைத் தணிக்கை செய்து கொள்ளாவிட்டால் குறைவான மதிப்பெண்கள் (கிரேடுகள்) வழங்கப்பட்டு விடும் என்று அவர்கள் சில சமயங்களில் அச்சப்படவும் செய்கிறார்கள்.

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru  விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு

‘காலேஜ் பல்ஸ்’ மூலம் 159 கல்லூரிகளில் 37,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் எண்பது சதவிகித மாணவர்கள் குறைந்தபட்சம் சில நேரங்களிலாவது தங்களை இவ்வாறு சுய-தணிக்கை செய்து கொள்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சர்ச்சைக்குரிய தலைப்பில் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்திய போது ‘சற்று சங்கடமாக’ அல்லது ‘மிகவும் சங்கடமாக’ இருப்பதை வகுப்பறைகளில் உணர்ந்தோம் என்று நாற்பத்தெட்டு சதவிகித இளங்கலை மாணவர்கள் விவரித்திருந்தனர். அதுபோன்ற கருத்துடன் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணக்கெடுக்கப்பட்டவர்களில் ஐம்பத்தியேழு சதவிகிதம் பேர் இருந்தனர்.

என்னைப் பொறுத்தவரை ஒரு வகுப்பறை விவாதம் மோசமாக இருக்கும்போது அதை ​​என்னால் சொல்ல முடியும். இரண்டாம் ஆண்டு பெண்ணியக் கோட்பாடு வகுப்பில் ​​இந்திய விதவைகள் மேற்கொள்கின்ற தற்கொலையாக உள்ள ‘சதி’ எனப்படுகின்ற சடங்கின் வரலாற்று நடைமுறையை இந்தியரல்லாத பெண்கள் விமர்சிக்கலாம் என்று நான் கூறினேன். அதுபோன்ற சிந்தனை கல்வி விவாதத்திற்காக ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது என்றாலும் அது என்னுடைய வகுப்புத் தோழர்கள் பலருக்கும் ஆட்சேபணைக்குரியதாகவே இருந்தது.

எனது கருத்தைக் கேட்ட அந்த வகுப்பறை பதற்றமானது. அங்கிருந்தவர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து மாறி அமர்ந்து கொள்வதைக் கண்டேன். யாரோ ஒருவர் மிகவும் கோபமடைந்தார். அதற்குப் பின்னர் அங்கிருந்த அனைவருமே கோபமடைந்தனர். பேராசிரியர் அந்த விவாதத்தை முன்னகர்த்த முயன்ற போது நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். தொடர்ந்து அதுகுறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் காண முடிந்தது. சொந்தக் கருத்துகளின் மீதே நம்பிக்கையிழந்தவளாக நான் மாறியிருந்தேன்.

உண்மையில் அதிர்ந்து போனேன் என்றாலும் பேசாமல் இருக்கக்கூடாது என்றே நான் தீர்மானித்தேன். சகமாணவர்களின் வெறுப்பு என் மீது தொற்றிக் கொண்டது. அந்தக் குழுவில் வரவேற்கத்தக்க உறுப்பினராக இருந்த என்னால் அதற்குப் பின்னர் அவ்வாறாக இருக்க இயலவில்லை.

மற்ற மாணவர்களின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதிலும் அதே போன்ற எதிர்வினைகளையே அந்த செமஸ்டர் முழுவதும் என்னால் காண முடிந்தது. மிகவும் குறைவான வகுப்புத் தோழர்களே பேசுவதைக் கேட்க முடிந்தது. இறுதியில் எங்களுடைய விவாதங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான குரலை எதிரொலிக்கின்ற வகையிலே மாறிப் போயின. செழுமையான, உறுதியான விவாதங்கள் இல்லாததால் நாங்கள் சமூக ரீதியாக மிகவும் பாதுகாப்பான கருத்துகளுக்குள்ளாக மட்டுமே மூழ்கிப் போனோம்.

மிகவும் கடினமான விவாதங்களின் போது விமர்சிக்கப்படுவது – அது மிகவும் கடுமையாக இருந்தாலும்கூட – என்னை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. ஆற்றல்மிக்க விவாதங்கள் நிறைந்த வகுப்பறைகளே நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால் விமர்சனம் என்பது பொதுவெளியில் அவமானப்படுத்துவது என்று மாறும் போது அது கற்றல் செயல்பாட்டை முடக்குவதாகி விடுகிறது.

தங்கள் வகுப்பறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பேராசிரியர்களும் கவனித்துள்ளனர். இவ்வாறான சுய-தணிக்கை மாணவர்களிடம் பரவியிருப்பதற்கு இரண்டு காரணிகள் காரணமாக இருப்பதாக தான் நம்புவதாக இங்குள்ள சமூகவியல் பேராசிரியரான பிராட் வில்காக்ஸ் என்னிடம் கூறினார். ‘முதலாவதாக சமூக ஊடகங்களில் தங்கள் சகாக்களால் விமர்சிக்கப்படுவது குறித்து மாணவர்கள் பயப்படுகிறார்கள்’ என்று கூறிய அவர் ‘இரண்டாவதாக, ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஊழியர்களிடமிருந்து மாணவர்கள் கேள்விப்படுகின்ற பெரும்பாலான செய்திகள் முற்போக்கானவையாக இருப்பதால், வகுப்பறை மற்றும் வளாக உரையாடல்கள், விவாதங்களில் அவ்வாறான செய்திகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்ற மறைமுக அழுத்தத்தை அவர்கள் உணர்கிறார்கள்’ என்றார்.

விதிமுறைக்குப் புறம்பாக எதையாவது சொல்வதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாகவே இருக்கும். எங்கள் விவாதக் கழகத்தில் ஸ்டீபன் வீசெக்கை நான் சந்தித்தேன். படித்து முடித்து வெளிச்செல்கின்ற, முதலாம் ஆண்டு வலுவாக விவாதம் செய்பவராக இருக்கும் அவர் கூட்டங்கள் முடிந்த பிறகு சுத்தம் செய்ய அடிக்கடி உதவுவார். அவரும் பழமைவாதிதான். தங்களை வலுவான குடியரசுக் கட்சிக்காரர் அல்லது பலவீனமான குடியரசுக் கட்சிக்காரர் என்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் ஒன்பது சதவிகிதம் பேர் மட்டுமே விவரித்துக் கொண்டிருப்பது அவரை மிகவும் சிறுபான்மையினராகவே இனம் காண்கிறது.

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru  விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு

சில நேரங்களில் ஒரு விருந்தில் அல்லது கேப்பெல்லா ஒத்திகையில் அல்லது வகுப்பறையில் மோதலைத் தவிர்ப்பதற்காக தன்னுடைய நம்பிக்கைகள் குறித்து நேரடியான பொய்களை அடிக்கடி தான் சொன்னதாக அவர் என்னிடம் கூறினார். அரசியல் என்று வரும்போது ‘அதிலிருந்து தப்பிக்கும் வழிக்கே நான் சென்றிருக்கிறேன்’ என்று கூறிய அவர் ‘விஷயங்களை எந்த வார்த்தைகளில் சொல்வது என்பது பற்றி மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும் என்பதால் நான் எப்போதும் மிகுந்த பதட்டத்துடனே இருந்திருக்கிறேன். அது கவலையைத் தூண்டுவதாக இருக்கிறது’ என்றார்.

அதுபோன்ற கவலைகள் பழமைவாதிகளை மட்டுமே பாதிப்பதில்லை. முற்போக்கான நான்காம் ஆண்டு மாணவியான அபி சாக்ஸுடன் பேசினேன். ஊடகங்களில் பாலினப் பாகுபாடு குறித்து நடைபெற்ற வகுப்பறை விவாதத்தின் போது எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு நியாயமற்ற வகையில் தன்னை விமர்சித்ததை தான் அனுபவித்ததாக அவர் என்னிடம் கூறினார். கேப்டன் மார்வெல்’ திரைப்படத்தை பெண்ணியத் திரைப்படம் என்று கூறிய தன்னுடைய பேராசிரியருடன் அவரால் உடன்பட முடியவில்லை. திரைப்படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தின் உள்மோதல், உணர்வுகளுக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தின் உடல் வலிமையையே அந்தப் படம் வலியுறுத்தியது என்ற கருத்தே சாக்ஸிடம் இருந்தது. தன்னுடைய கருத்து தனது பேராசிரியையை விரக்தியடையச் செய்ததாகவே தனக்குத் தோன்றியது என்று சாக்ஸ் கூறினார்.

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru  விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு

அபி சாக்ஸ்

தன்னுடைய வகுப்புத் தோழர்கள் அதைக் கவனித்ததாகக் கூறிய சாக்ஸ் ‘என்னுடன் உடன்படுவதை ஒருவர் பின் ஒருவர் என்று தொடர்ச்சியாக அங்கிருந்த பலரும் மிகவும் தீவிரமாக மறுக்கத் துவங்கினர்’ என்றார். தான் திணறுவதை சாக்ஸ் உணர்ந்தார். ‘அனைவரும் ஒன்று சேர்ந்தது அந்த அறையை உற்சாகப்படுத்தியது. அவர்கள் அனைவரும் சரியான கருத்து கொண்ட குழுவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர்’ என்று கூறிய சாக்ஸ் அந்த அனுபவம் தன்னை மீண்டும் வகுப்பிற்குச் செல்ல விருப்பமற்றவளாக்கியது என்றார். வகுப்பில் தொடர்ந்து கலந்து கொண்ட போதிலும் விவாதங்களில் மிகவும் குறைவாகவே தான் பங்கேற்றதாகவும், கண்ணுக்குத் தெரியாதவளாகி விட்டதைப் போல தன்னை உணர்ந்ததாகவும் அவர் சொன்னார்.

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru  விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு
சாமுவேல் ஆப்ராம்ஸ்

இதே போன்று மற்ற வளாகங்களும் போராடியவாறே இருக்கின்றன. சாரா லாரன்ஸ் கல்லூரியின் அரசியல் துறைப் பேராசிரியரான சாமுவேல் ஆப்ராம்ஸ் என்னிடம் ‘கருத்துகள் குறித்த பன்முகத்தன்மை கொண்ட பார்வை இப்போது உயர்கல்வியில் மிகவும் புனிதமான, முக்கியமான விழுமியமாகக் கருதப்படுவதில்லை’ என்று கூறினார். அதை நேரில் உணர்ந்தவராகவும் அவர் இருக்கிறார். பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கிடையே கருத்தியல் பன்முகத்தன்மை இருக்கவில்லை என்று தான் கருதியதைக் கொண்டு விமர்சித்து 2018ஆம் ஆண்டில் தி டைம்ஸுக்கு அவர் கட்டுரையொன்றை எழுதினார். அதற்குப் பிறகு, அவரது அலுவலகக் கதவு உடைத்து நொறுக்கப்பட்டது. அவரது பதவிக்காலத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய முயற்சிகள் தோல்வியுற்ற போதிலும் சக ஆசிரியர்களின் எதிர்வினைகளால் மிகுந்த அதிருப்தியுடனே டாக்டர் ஆப்ராம்ஸ் இருந்து வருகிறார். அந்தச் சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் அந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்களில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாக இருபத்தியேழு ஆசிரியர்கள் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர்.

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru  விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு

டாக்டர் ஆப்ராம்ஸ் இன்றைய வளாகங்களில் உள்ள சூழல் தன்னுடைய இளங்கலை படிப்பு அனுபவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என்கிறார். தன்னுடைய இளங்கலை படிப்புகளின் போது சக மாணவர்களுடன் நடந்த இரவு நேர விவாதங்களை நினைவு கூர்ந்த அவர், அந்த விவாதங்கள் சில சமயங்களில் தன்னைக் காயப்படுத்தினாலும் அவையே தன்னுடைய மனதைப் புதிய சிந்தனைகளுக்குத் திறந்து விட்ட பரவசத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தன என்கிறார். அதுபோன்ற சூழலை இந்த சுய-தணிக்கை அச்சுறுத்திக் கொணடிருக்கிறது என்று கவலைப்படுகின்ற ஆப்ராம்ஸ் கல்லூரி நிர்வாகங்கள் ‘கீழ்ப்படிதல் மற்றும் பயம் சார்ந்த கலாச்சாரத்தை’ மாணவர்களிடம் உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றன என்ற வாதத்தை முன்வைக்கிறார்.

மேலும் தைரியமாக இருங்கள் என்று மாணவர்களை ஊக்குவிப்பது மட்டுமே சுய- தணிக்கைக்கான தீர்வாக இருக்கப் போவதில்லை. பலராலும் விரும்பத்தகாத ஒன்றைச் சொல்லி சமூக நிலையைப் பணயம் வைப்பது தைரியமாகுமா? ஆமாம் – கல்லூரி மாணவர்களிடம் – எங்களில் நாற்பத்தியெட்டு சதவிகிதம் பேர் எங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதை மிகவும் சங்கடமான காரியமாகவே உணர்கின்றோம் – நீங்களே இந்தப் பிரச்சனையைச் சுதந்திரமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் கேட்டுக் கொள்வது நியாயமானதா? அதுகுறித்த முயற்சிகளை மேற்கொண்டு பார்த்திருக்கிறேன் என்பதால் அவ்வாறு இருக்க முடியாது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் – என்னை நம்புங்கள்.

தங்கியிருக்கும் அறைக் கதவுகளில் ஒட்டக் கூடிய சுவரொட்டிகளின் அளவு குறித்து எடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கொள்கை முடிவை அரசியலமைப்பின் முதல் திருத்தம் குறித்திருந்த மிகப் பெரிய தாளை கதவில் ஒட்டி வைத்ததன் மூலம் நான் எதிர்த்து நின்றேன். நான் ஒட்டிய அந்த தாளை பல்கலைக்கழகம் அகற்றியது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக நிர்வாகிகளுடன் இணைந்து குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கும் வகையில் நான் பணியாற்றினேன். பல்கலைக்கழகப் பத்திரிகையின் கட்டுரையாளர் என்ற முறையில் கருத்துச் சுதந்திரத்தைத் தழுவிக் கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு எதிர்வினையாக நண்பர்களை இழந்ததுடன் ட்விட்டரில் அதிக விமர்சனங்களையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மிகவும் தைரியமாகவே இருந்தேன் என்றாலும் ஆதரவு எதுவுமில்லாத என்னைப் போன்ற ஒரு சில மாணவர்களின் செயல்பாடுகள் ஓரளவிற்கு மாறவே செய்திருக்கிறது.

I came to college with an interest in engaging in discussions and could only see self-censorship there Article By Emma Camp in tamil translated By Chandraguru  விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது - எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு

நம்மிடையே உள்ள சமூகத் தொடர்புகளை பல்கலைக்கழகங்களால் மாற்ற முடியாது என்றாலும் அவற்றால் கல்விச் சூழல்களில் கருத்தியல் பன்முகத்தன்மையை வளர்த்தெடுக்க முடியும். கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் பொது அறிக்கைகளை வெளியிடுவதைக் காட்டிலும் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியவை அதிகம் இருக்கின்றன. கருத்தியல் பன்முகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கின்ற வளாக கலாச்சாரமும், வகுப்பறையில் கருத்து வெளிப்பாட்டைப் பாதுகாக்கிற வலுவான கொள்கைகளுமே நமக்குத் தேவைப்படுகின்றன.

சர்ச்சைக்குரிய பேச்சாளர்களை ரத்து செய்ய அல்லது நியாயமற்ற மாணவர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள பல்கலைக்கழகங்கள் மறுக்க வேண்டும். வகுப்பறை விவாதங்களில் அறிவுசார் பன்முகத்தன்மை, இணக்கமின்மைக்கு வெகுமதி அளிக்குமாறு அவை பேராசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும். மிக முக்கியமாக பேச்சுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கின்ற விதிகளை, கருத்தியல் மோதலை அசாதாரணமாகக் கருதுகின்ற ஒரு சார்பு எதிர்வினைக் குழுக்களை அவை உடனடியாக நிராகரித்திட வேண்டும்.

எங்களுடைய கருத்துக்கள் மீதான – எங்களை வளர அனுமதிக்கும் வழிகளில் – எதிர்ப்புகள் இல்லாமல் பல்கலைக்கழகக் கல்வியின் முழுப் பலன்களையும் எங்களால் அனுபவிக்க முடியாது. சாக்ஸ் என்னிடம் கூறியதைப் போல் ‘நம்முடைய கருத்துகளுக்காக ஒருவரையொருவர் தண்டித்துக் கொள்ளாமல் இந்தப் பிரச்சனைகள் குறித்த உரையாடல்களை நடத்திட வேண்டும்’.

https://www.nytimes.com/2022/03/07/opinion/campus-speech-cancel-culture.html
நன்றி: நியூயார்க் டைம்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

Translation Poem By Thanges மொழி பெயர்ப்பு கவிதைகள் - தங்கேஸ்

மொழி பெயர்ப்பு கவிதைகள் – தங்கேஸ்

முதன்முதலில்
காய்கறிவாங்க
ஆவலுடன் சென்ற பப்புவுக்கு
ஆயிரம் யோசனைகளைக்
கூறு கட்டி அனுப்பினாள் இவள்
அன்பின் பாதையில்
அடுக்கிய யாவையும்
அவளைப்போலவே சிரித்தன
பிரியங்களைக்கொடுத்து

பசுமையைப் பெற்றுவந்த
அவளின் அதிகாலைப்
புன்னகையைப் போலவே
சுவைகூட்டின
கண்ணாடிக்குள் இருந்த
முட்டை விழிகள்
குயுக்தியுடன் சிட்டையை
அகழாய்வு செய்ததில்
நல்லன யாவும்கொசுறாக
பப்பு கைகளை விரித்து
ஓடியபடி காய்கறிகளுக்கு
முத்தமிடத் தொடங்கினாள்..

when Pappu went eagerly to buy vegetables
for the first time ,
Her mother tied a thousand ideas as component
and sent along with her
on the path of love ,
every thing which layered there
laughed like her
Her early morning
which gave forth the affection and received greenish in turn ,
appeared like a smile .
The flawles smile added more taste in life
when the egg eyes with in the frame
swiftly excavate the items
all the fresh pieces appeared like damaged
Pappu , in running stretched out her hands ,
started to kiss the vegtables everywhere

எனது வேதனகளை
மொழிபெயர்த்துப் பகர்கிறது
அறையின் ஐந்தாவது சுவர்
வெறுமையின் கோரம் கடித்த
தனிமையின் மீது பீறிடுகிறது ரத்தம்
நிகழின் தூக்குமேடையில்
பிசுபிசுத்தபடி நிற்கிறது
நிர்வாணம் கலையாத நிழல்
காலைச் சுற்றி
கழுத்தைக் கௌவிய மௌனத்திற்கு
குரல்வளைக் குருதிக்கு முன்னேறுகிற அவசரம்
கடன் வாங்கியேனும் கழிக்க முனைந்து
மூளைக்குள் தடதடக்கும்
மகளின் கணிதப் பாட நேரலை
எங்கோவான நாயின் குரைத்தலில்
திரும்பிப் பார்த்த கண்களுக்குக்
கொஞ்சம் காற்றிலசைகின்றன
சரக்கொன்றை மலர்கள்

Translating my agony ,The fifth wall of the room murmers slowly
Bitten by the scourge of emptiness Blood spills on loneliness

On the stage of the present
it Stands viscous the undading shadow of Nudity is around leg
To the neck-wrenching silence
There is urgency for odvancing to the laryngeal blood
Tapping tut tut into the brain
Daughter’s live maths lesson about borrowing and subtracting the money
responding to the barking of a dog somewhere ,
the eyes lookback found sarakondrai flowers waving in the air..

Original verse in tamil : yal raghavan
Translation by : thanges
தமிழ் மூலம் : யாழ் ராகவன்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்

Ukraine War: Conflict between capitalist countries Article in tamil translated by S. Veeramani உக்ரேன் போர்: முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான மோதல் - தமிழில் : ச.வீரமணி

உக்ரேன் போர்: முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான மோதல் – தமிழில் : ச.வீரமணி

“கொடூரமான எதேச்சதிகாரி புடின்” மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ மேற்கொண்ட முயற்சிகள் பாசாங்குத் தனத்தையும் இரட்டை வேடத்தையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ஜான்சன் ஆகியோர் ரஷ்யாவுக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப் போர் முடிவடைந்தபின், முதன்முறையாக அமைதி நிலைமை ஆட்டம் கண்டிருக்கிறது. 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் யுத்தம் என்பது நேட்டோ படையினர் செர்பியா மற்றும் யூகோஸ்லேவியாவில் 1999இல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தம்தான் என்கிற உண்மையை அவர்கள் முழுமையாக மூடி மறைக்கிறார்கள். யூகோஸ்லேவியாவைத் துண்டாடுவதற்காக பெல்கிரேடிலும் மற்றும் பல இடங்களிலும் 78 நாட்கள் வான்வழித் தாக்குதல்களை நேட்டோ படையினர் மேற்கொண்டிருந்தார்கள்.

நேட்டோ அரங்கேற்றிய பயங்கரங்கள்..
உலக அளவிலான தனது மேலாதிக்கத்திற்கான ஒரு கருவியாக, நேட்டோவை அமெரிக்கா பயன்படுத்தி வருவது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. அமெ ரிக்காவும், பிரிட்டன் உட்பட அதன் கூட்டணி நாடுகளும், இராக்கில் ஆட்சி செய்த சதாம் உசேன் மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை வைத்திருக்கிறார் எனப் பொய்யாகக் குற்றம்சாட்டி, இராக்கிற்குள் புகுந்து, அதனை அழித்து, பல லட்சக்கணக்கான இராக்கியர்களைக் கொன்று குவித்தது. அதன் பின்னர், நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானத்திற்குள் புகுந்து, சுமார் 20 ஆண்டு காலம் அதனை ஆக்கிரமித்திருந்தனர். நேட்டோ கூட்டாளிகள் இறையாண்மை மிக்க நாடுகளாக இருந்த லிபியா மற்றும் சிரியாவையும் தாக்கினர். அவற்றின் நாசகர விளைவுகளிலிருந்து அந்த நாடுகள் இன்னமும் மீள முடியவில்லை. எனவே, உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்வதாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூப்பாடு போடுவதை உலகில் உள்ள நாடுகளில் பல, குறிப்பாக ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் அநேக மாக ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து பல்வேறுபட்ட குழப்பமான செய்திகள் வெளிந்திருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச அமைப்பு முறை ஒழிக்கப்பட்ட பின்னர் அங்கே ஏற்பட்ட நிலைமைகளைப் பார்க்காமல் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கே இரண்டு விதமான முரண்பாடுகள் முட்டி மோதின. ஒரு பக்கத்தில் அங்கே இருந்துவந்த பல்வேறு தேசிய இனங்களின் பிற்போக்கு சக்திகளது கூக்குரல்களும், மறுபக்கத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணி நாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவையே விழுங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் அங்கே முட்டி மோதின; மோதிக்கொண்டிருக்கின்றன.

ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நோக்கி…
1991இல் பனிப்போர் முடிந்த ஒருசில மாதங்களிலேயே, அமெரிக்காவின் ஆளும் வட்டாரங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உலகின் ஒரே துருவமாக நிறுவிட வேண்டும் என்று தீர்மானித்தன. அமெரிக்க ராணுவக் கொள்கை வழிகாட்டு தல்கள், “நம் கொள்கையானது எதிர்காலத்தில் சாத்தியமான எந்தவொரு உலகளாவியப் போட்டியும் தோன்று வதைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று கூறின. உலகை ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைக ளின் புவி அரசியல் கோட்பாடு இந்தத் திசைவழியில் தான் அமைந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இதற்கான முதல் தேவை என்பது ரஷ்யாவைப் பலவீனப் படுத்துவதே. அப்போதுதான் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்திட முடியும். இதற்கு நேட்டோவை ஐரோப்பாவின் கிழக்கே விரிவாக்கம் செய்திட வேண்டும். பின்னர், தங்கள் கவனத்தை சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் திருப்பிட வேண்டும். 1990இல், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி கோர்ப்பசேவிடம், இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றாக இணைவதன் காரணமாக, நேட்டோ விரிவாக்கம் மேலும் கிழக்கே நீட்டிக்கப்படாது என்ற உறுதி மொழியை அளித்தார். ஆனால் இந்த உறுதிமொழி வெறும் உதட்டளவில் மட்டுமேயானதாகும். அதன் பின்னர் நேட்டோ படையினர் ஐந்து முறை படை யெடுத்து வந்து, கிழக்கு ஐரோப்பா முழுவதுமே, அதாவது முன்பு சோவியத் ஒன்றியத்தின் அங்கங்களாக இருந்த பால்டிக் நாடுகள் அனைத்தையுமே தாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டன.

இதயத்திற்கு நேராக கூர்வாள்..
2008இல் நேட்டோ, ஜார்ஜியாவையும், உக்ரைனையும் தன்னுடைய உறுப்பு நாடுகளாக ஏற்றுக் கொள்ள முன்வந்தது. இது நடந்துவிட்டால், ரஷ்யா சுற்றி வளைக்கப்பட்டது போலத்தான். உக்ரைன், நேட்டோவின் ஓர் அங்கமாகிறது என்றால் அதன் பொருள் ரஷ்யாவின் இதயத்திற்கு எதிரே கூர்வாளை எப்போதும் நீட்டிக்கொண்டிருப்பது என்பதாகும். 2014இல் உக்ரைனில் ஜனாதிபதி விக்டர் யானுகோ விச் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக உக்ரைனில் ஒரு கலகம் நடத்தப்பட்டது. இவர் ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு எதிராகவே நவீன நாஜிக்களால் ‘மைதான் புரட்சி’ எனும் அந்தக் கலவரச்சதி (Maidan revolution coup) மேற்கொள்ளப்பட்டது. 2015இலிருந்து அமெரிக்கா, உக்ரைனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளித்து வந்தது. இதற்காக அது பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அளித்தது. ரஷ்யாவுடன் உக்ரைன் மோதல் போக்கைக் கடைப்பிடித்திட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இதையெல்லாம் செய்தது. இவ்வாறு அமெரிக்காவினால் ஊட்டி வளர்க்கப்பட்ட வலதுசாரி ஆட்சியாளர்கள், உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்தில் மிகப் பெரிய அளவில் வாழ்ந்துவந்த ரஷ்ய இனமக்களுக்கு விரோதமான முறையில் செயல்பட்டு வந்தனர். கிழக்கு உக்ரைனில் தொடங்கிய உள்நாட்டு யுத்தத்திற்கு, மின்ஸ்க் ஒப்பந்தத்திற்குப் பின்னர் தற்காலிகமாக தீர்வு காணப்பட்டது.

உக்ரைன் புதிய ஆட்சியாளர்கள் செய்தது என்ன?
உக்ரைனின் புதிய ஆட்சியாளர்கள் நேட்டோவில் சேர்வதை அரசமைப்புச் சட்டத்தில் பதிவு செய்தனர். வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், இன ரீதியாகவும் ரஷ்யாவுடன் உறவுகளை வைத்திருந்த உக்ரைன், முற்றிலும் ரஷ்யாவுக்கு எதிராக நிலை எடுத்தது, ரஷ்யாவை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது. இது, கிரீமியாவில் உடனடியாக வெளிப்பட்டது. உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த கிரீமியாவில் ரஷ்யர்கள்தான் அதிகமான அளவில் வசித்து வந்தார்கள். இங்கே 2014இல் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அவர்கள் ரஷ்யாவுடன் சேர்வது எனத் தீர்மானித்தார்கள். ரஷ்யாவின் கருங்கடல் கப்பற் படை (Black Sea naval fleet) கிரீமியாவின் செவஸ்டபோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறைமுகம் ரஷ்யாவுக்காக இருந்துவருகிற ஒரேயொரு மிதமான வெப்பத் துறைமுகமாகும். ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகள் நேட்டோவில் சேர்ந்தபின்பு, அமெரிக்காவும், நேட்டோவும் தங்கள் துருப்புகளையும், ஏவுகணைகளையும் அந்த நாடுக ளில் நிலைநிறுத்தியதன் காரணமாக, ரஷ்யாவில் பதற்ற நிலைமைகள் அதிகரித்தன. ரஷ்யா, உக்ரைனின் எல்லைகளில் தங்கள் துருப்புகளுடன் அணிவகுத்தது. உக்ரைன், நேட்டோவில் இணையக் கூடாது என்றும், ஆபத்தை விளைவித்திடும் ஏவுகணைகளை நிலை நிறுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திட முன்வர வேண்டும் என்றும், ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு கட்டமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் ரஷ்யா கோரியது. அமெரிக்காவும், நேட்டோவும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. உக்ரைன் இறையாண்மையுடன் கூடிய நாடு என்றும், நேட்டோவில் இணைவதா வேண்டாமா என முடிவு செய்வதற்கான உரிமை அந்த நாட்டுக்கு உண்டு என்றும் கூறின. இதனைத் தொடர்ந்து உக்ரைன்மீது ஏற்பட்டுள்ள ராணுவத் தாக்குதல் ஐரோப்பாவின் எதிர்கால அமைதி மீதும், பொருளாதார விவகாரங்கள் மீதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன.

விரிவான மோதலின் பிரதிபலிப்பு..
உக்ரைன் யுத்தம், அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே, ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளின் மத்தியில் ஏற்பட்டுள்ள விரிவான மோதலைப் பிரதிபலிக்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்தபின்பு ரஷ்யா ஒரு தனியதிகாரத் தலைவரின் கீழ் ஒரு முதலாளித்துவ நாடாக மாறியிருக்கிறது. நாட்டின் முக்கியமான பாதுகாப்பு நலன்களுக்காக நடவடிக்கைகள் எடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தன்னுடைய எல்லையைத் தாண்டிச் சென்று, ஓர் இறையாண்மை மிக்க நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் தொடுப்பது அனுமதிக்க முடியாததாகும். இதனை எவ்விதமான சந்தேகத்திற்கிடமின்றி எதிர்த்திட வேண்டும். இந்த யுத்தமானது ஏற்கனவே மிகப் பெரிய அளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புடினின் ‘தேசிய வாதம்’ ‘மகாரஷ்யா’ எனும் பேரினவாதம் ஆகும். இதனை அவர் போல்ஷ்விக்குகளைக் கண்டித்திருப்பதிலிருந்தும், ‘லெனினின் உக்ரைனை’ உருவாக்கப் போவதாகக் கூறியிருப்பதிலிருந்தும் பார்க்க முடியும். எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியது.

பைடனின் திட்டம்..
பைடன் நிர்வாகத்தைப் பொறுத்தவரையிலும், அதற்கு ஐரோப்பிய யூனியன் சுயாட்சி மிக்க ஒன்றாக உருவாவதற்கான வாய்ப்பு வாசல்களை அடைப்பதற்கும், நேட்டோ கூட்டணியை அங்கே மிக நெருக்கமாகக் கொண்டுசெல்வதற்கும், ஒரு பொன்னான வாய்ப்பாகும். ஐரோப்பாவிற்குள்ளேயே கூட ஜெர்மனி, நேட்டோவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முகம் சுழித்துக்கொண்டுதான் ஆதரவு அளித்து வந்தது. இதுவரையிலும் ராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்வதைத் தவிர்த்தே வந்தது. ஆனாலும் இப்போது, ஜெர்மனி அதிபர் உல்ப் சோல்ஸ் 100 பில்லியன் யூரோ (112 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 2022 பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கி இருக்கிறார். மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சத வீதத்தை, ராணுவத்திற்கு ஒதுக்குவதாகவும் உறுதி மொழி அளித்திருக்கிறார். இவ்வாறு ஜெர்மனி ராணு வத்திற்கு நிதி ஒதுக்கிட வேண்டும் என்று அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இதுவரையிலும் கோரி வந்தன. அதற்கு இதுவரையிலும் ஒப்புதல் அளிக்காமல் இருந்துவந்த ஜெர்மனி இப்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பால்டிக் நாடுகளுக்கு ஏராளமான துருப்புகளையும், ஆயுதங்களையும் அனுப்பி இருக்கின்றன. உக்ரைனுக்கும் நேட்டோ நாடுகள் உயிர்க்கொல்லி ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இப்போது ஜெர்மனியும் முதன் முறையாக ஆயுதங்களை அனுப்பி இருக்கிறது.

போரின் நிலை என்ன?
உக்ரைனின் போர் எப்படிப் போகும் என்பதைப் பரிசீலிக்கும்போது, இந்தப் பின்னணி அனைத்தையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ரஷ்ய ராணுவம் தாக்குதல் தொடுத்து இரண்டு வாரங்களாகிவிட்டன. அவை மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. கேர்சன் (Kherfson) நகரத்தைக் கைப்பற்றி இருக்கிறது. தலைநகர் கீவ் (Kiev), கார்கிவ் (Kharkiv) மற்றும் மரியபோல் (Mariupol) ஆகியவற்றைச் சுற்றி வளைத்திருக்கிறது. டான்பாஸ் (Don bas) பிரதேச உள்ளூர்ப் படையுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் உக்ரைன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தபோதிலும், ரஷ்யத் துருப்புக்கள் தரை வழியாகவும், நீர் வழியாகவும், வான் வழியாகவும் ஆதிக்க நிலையில் இருந்துவருகின்றன. பெலாரஸில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. மார்ச் 7 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, போர் நிறுத்தம் தொடர்பாக சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. முதலாவதாக, மனிதாபிமான அடிப்படையில் நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வழி திறந்துவிட வேண்டும். சுமி நகரில் தங்கியுள்ள சுமார் 700 இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்.

உக்ரைன் தரப்பில், தாங்கள் நேட்டோவுடன் இணையமாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் நடைபெற்ற நேர்காணலின் போதும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு குடியரசுகள் குறித்தும், கிரீமியா, ரஷ்யாவின் ஒரு பகுதி என அறிவித் திருப்பது குறித்தும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. நாம் இதனை (மார்ச் 9அன்று), எழுதிக்கொண்டி ருக்கும் சமயத்தில் மார்ச் 10 அன்று ரஷ்ய அயல்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் உக்ரைன் அயல்துறை அமைச்சர் குலேபா ஆகிய இருவரும் துருக்கியின் அண்டால்யாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். அயல்துறை அமைச்சர்கள் இடையே பேச்சு வார்த்தை என்பது ஒரு முன்னேற்றமான நடவடிக்கையே. யுத்தத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். மின்ஸ்க் ஒப்பந்தங்கள் அடிப்படையில் உக்ரைனுக்கு நடுநிலை அந்தஸ்து அளிப்பதும், டான்பாஸ் குடியரசுகளுக்கு தீர்வு காண்பதும் மிகவும் நடைமுறைத் தீர்வாக இருக்கக்கூடும்.

(மார்ச் 9, 2022),
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி