Posted inPoetry
கலையின் கவிதைகள்
இயற்கையும் மனிதனும்
****************************
குப்பையைக் கிளறிவிட்டு
சாணம் தெளித்த
ஈரத் தரையில் குந்தி
மண்ணை இறக்கைகளில் வாரும்
கோழிகளுக்குத் தெரிந்திருக்கிறது
சூட்டைத் தணிப்பது
எப்படியென்று
நாம்தான்
எப்போதும் கற்துகளிலே!
***************************
வாய்க்காலில் நகரும்
நத்தைகள் ஒருநாளும்
கூடு நனைந்து போனதற்காக
போக்கிடமில்லையென புலம்பியழுததில்லை
உலா போய்க்கொண்டுதான் இருக்கின்றன…
நல் மண்ணில் வாழும்
கரையான் காற்று மழையில் கரைந்தாலும்
உறைந்து போக வில்லை
விரைந்து
கரையெழுப்பி வாழுகிறது …
வழிகளிருந்தும்
விழிகள்தான் செல்வதில்லை செல்லாதவற்கு!
-கலை