பயணக் குறிப்பற்றவளின் துர் கனா ***************************************** முன் ஜாமப்
பொழுதொன்றில்
வெள்ளை வண்ண
இரட்டைக் குதிரை வண்டியில்
தென்றலாய்த் தவழ்ந்து வருகிறான் .
துளிர்த்த பச்சையம் மாறா காதல் நினைவுகளை ஏந்தியவாறு,
பதின்ம வயதில் அவள் மறுதலித்த
காதலொருவன்
கிழக்கு வாக்கில்.
பின் ஜாமப் பொழுதொன்றில்
செவலை நிறக் குதிரையொன்றில்
இழந்துவிட்ட வலியை
சுமந்து வருகிறான்
குற்றவுணர்வோடு
மித வேகத்தில்
அவள் காதலை நிராகரித்தவன்
மேற்கு வாக்கில்.
நடுச்சாமப் பொழுதொன்றில்
அடர் கருப்பு குதிரையின் மேல்
அழுது சிவந்த கண்களுடன் ஆர்ப்பரித்து வருகிறான்
துர் மரணமடைந்த கணவன்
வடக்குவாக்கில்
காற்று ஒலிப்பான்களுக்கிடையே
நடத்துனர் உரத்த குரலில் உசுப்பிவிடுகிறார்
அவளை .
கனவிலிருந்து விழித்தவள்
கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்
இறுக பற்றியாவாறு கேட்கிறாள்
இது எந்த ஊர் என….
எழுத்தாளர் ஜனநேசன் பதினேழு நூல்களின் ஆசிரியர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எனத் தடம் பதித்து இன்று குறுநாவல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியராய் இருந்து ஓய்வு பெற்ற அவர் தனது இரு மகன்களையும் நன்கு படிக்க வைத்து அந்தஸ்தான பணியில் அமர்த்தியிருக்கிறார். மூத்த மகன் ஐ ஏ எஸ் முடித்து தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சித் தலைவராய் இருக்கிறார். இளையமகன் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராய்ப் பணியாற்றுகிறார்.
ஆட்சித் தலைவருக்கான சலுகைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் சுற்றுலா சென்று வந்திருக்கிறார் ஜனநேசன். கிடைத்த அனுபவங்களை இலக்கியமாக்கிப் படைப்பியக்கத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்கள் அவரின் பல படைப்புகளுக்குக் களம் அமைத்துத் தந்திருக்கின்றன. மேகாலயா மாநிலத்திற்குச் சென்றபோது கிடைத்த அனுபவம்தான் “பயணம்” என்ற குறுநாவலாகப் பரிணமித்திருக்கிறது.
இந்தத் தொகுப்பில் மூன்று படைப்புகள் இருக்கிறன. முதல் கதை “பயணம்” எளிமையானதும் வலிமையானதுமான படைப்பு.
1 பயணம்.
அஸ்ஸாம் மாநிலத்தின் பகுதியாய் இருந்து பிரிந்து இன்று மேகாலயா மாநிலமாக உருவாகியிருக்கும் பகுதியின் முக்கிய் நகரம் ஷில்லாங். மலைச் சிகரங்களும் அடர்ந்த காடுகளும் நிறைந்த நிலப்பரப்பு.
அங்கு அமைந்த ராணுவ முகாமின் துணைக் கேப்டனாகப் பணி புரிந்தான் தென் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன். (வயது 22) ஞாயிறு ஒருநாள் மட்டும் ராணுவ வீரர்களுக்கு ஃப்ரீடே. நான்கு மணிநேரம் வெளியில் சென்று வரலாம். அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமை நகரத்தின் மிகப் பெரிய பொழுதுபோக்கு இடமான பூங்காவுக்குச் செல்கிறான். மாநிலத்துக்கு அன்று ஒருநாள் விடுப்பு என்பதால் அனைத்துப் பணியாளர்களும் அங்கு வந்து மகிழ்ச்சியாய் இருந்து செல்வர். குடும்பத்தோடு கட்டுச் சோறு கட்டி வந்து அனுபவிப்பார்கள். அரசுப் பேருந்தோ ஆம்னி வண்டிகளோ அதிகம் புழக்கத்தில் இல்லாத மாநிலம் அது. ஆட்டோ அல்லது கார் குறைந்த வாடகைக்கு இயங்கின.
ஐந்துபேர் அடங்கிய குடும்பம் ஒன்று ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ந்திருந்த போது அவர்களின் கட்டுச் சோற்றை ஒரு குரங்கு தூக்கிக் கொண்டு மரத்தில் ஏறிவிட்டது. இதைப் பார்த்த பாண்டியன் குரங்கை விரட்டியபோது அது பக்கத்தில் இருந்த குளத்துக்குள் பொட்டலத்தை எறிந்துவிட்டது. பனியாய்க் குளிரும் நீருக்குள் குதித்து உணவை மீட்டுத் தருகிறான் பாண்டியன். அவனை அந்தக் குடும்பத்தார் அனைவருக்கும் பிடித்துப் போகிறது. நாட்டுக்கு உழைக்கும் ராணுவ வீரன் என்பதால் கூடுதல் பிரியம். குடும்பத்தின் மூத்த மகள் ஹாஷிமா பாண்டியன்மீது காதல் கொள்ள வாராவாரம் மையல் தொடர்கிறது.
அவர்கள் ஹாஸி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அனைவரும் குள்ளமான மனிதர்கள். சீன மக்களைப்போல் தோற்றம் கொண்டவர்கள். ஹாஷிமாவின் தந்தையிடம் தங்கள் காதலைச் சொல்லி அவர் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் கேட்கிறான் பாண்டியன். நாடு காக்கும் வீரன் என்ற வகையில் பெண் தரக் குடும்பத்தாருக்குச் சம்மதந்தான். அதற்கு இனக்குழுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும். ஆனால் அவர் மறுத்துவிடுகிறார். ஹாஷிமா பாண்டியன்மீது கொண்ட அப்பழுக்கற்ற அன்பால், காதலன் அழைப்பை ஏற்று அவனோடு மதுரைக்கு வந்து விடுகிறான்.
பாண்டியன் ஹாஷிமா தம்பதிக்கு முதலில் மகன் பிறக்கிறான். பிறந்த வீட்டுக் குல தெய்வத்தின் அடையாளம் சேவல் என்பதால் சேவற்கொடியோன் என பெயர் சூட்டப்படுகிறார்கள். ஆனாலும் பாண்டியன் ஒரு வெற்றி வீரன் ஆதலால் மகன் ஜெயக்கொடி, எனவும் அழைக்கப் படுகிறான். கணவன்மீது கொண்ட அளவற்ற அன்பு காரணமாக குடும்ப அட்டையிலும் பள்ளிச் சான்றிதழிலும் “ஜெயக்கொடி” பதிவாகிறது. அடுத்து மல்லிகா என்ற பெண்குழந்தையும் பிறக்க பாண்டியன் இறந்துபோகிறான். 35 வருடங்கள் ஓடிவிட்டன. இரு தரப்புக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. ஹாஷிமா ஷில்லாங் போகவேண்டும் என்ற ஆசை இல்லாமல் தன் கணவன் ஊரிலேயே உயிர்விட ஆசைப் படுகிறாள்.
ஹாஷிமாவின் அம்மா இறந்து போனதாக ஒரு தந்தி ஷில்லாங்கில் இருந்து வருகிறது. ”அம்மாவின் சொத்தில் மகளுக்குச் சேர வேண்டியதை வந்து வாங்கிச் செல்லவும் என்றும் எழுதப் பட்டிருக்கிறது. கருமாதிக்கு சம்மந்தவழி சீர் செய்ய வேண்டும். கணவன் பெயருக்குக் களங்கம் நேர்ந்துவிடக் கூடாது என்பதால் மகனை மட்டும் சீர் செய்துவிட்டு தன் குடும்பத்தார் தருவதை வாங்கிவரும்படி சொல்லி அனுப்புகிறாள்.. அம்மாவுக்குக் கிடைக்கப் போகும் அந்தச் சொத்தைத் தான் அபகரித்துவிட வேண்டும் எனற நோக்கத்தோடு ரயில் ஏறுகிறான் ஜெயக்கொடி.
ரயில் பீகார் மாநிலத்தைக் கடந்த போது கிடைத்த ஓர் அனுபவம்! பிச்சை எடுக்கும் கூட்டம் அங்கு அதிகம். வட மாநிலங்கள் பலவும் மிக நீண்ட வறுமைக் கோடு கொண்டவை. ஒரு சிறுவன் கையேந்திய போது அடித்து விரட்டும் மக்கள் காவி உடை தறித்த சாமியார் பிச்சை கேட்டபோது வணங்கி பவ்வியமாய்க் காசு தருகின்றனர். திருநங்கைகளுக்கும் இதே அந்தஸ்துதான். இன்னொரு மாற்றுத் திறனாளி மனிதன் ரயிலில் ஏறி பிரஷ் கொண்டு துடைத்து சுத்தம் செய்துவிட்டுக் கையேந்துகிறான். செய்த வேலைக்குக் கூலியாகக் கூடப் பலரும் தர மறுக்கின்றனர். ஆக பிச்சையிடுவது அனுதாபம் கருதி, அல்லது சக மனிதனின் பசி போக்கவேண்டும் என்ற இரக்கம் கருதி அல்ல; ஆண்டிகளுக்கும் அணங்குகளுக்கும் தர்மம் தந்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்பதால்தான். காவியைக் கடவுளாய் நம்பும் மூடத்தனம் இன்றளவும் வட மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தமிழகம் போலவோ கேரளம்போலவோ மனிதநேயப் பண்பாட்டை வலுவிழக்கச் செய்யும் காவி சித்தாந்தத்தை அவர்கள் எதிர்ப்பதில்லை.
கௌஹாட்டி ரயில் நிலயத்தில் இறங்கிய போது மைத்துனன் பாண்டுங் வந்து வரவேற்று அழைத்துச் செல்கிறான். ஷில்லாங் நகரின் விடியலும் அந்தியும் வித்தியாசமாய் இருக்கின்றன. காலை ஐந்து மணிக்கு எட்டு மணிபோல் வெயில். மாலை ஐந்து மணிக்கு இரவு பத்துமணிபோல் இருண்டிருக்கிறது. (இந்தியாவின் காலத்தரவு (srandard time) வடகிழக்கு மாநிலங்களின் காலத்தரவோடு ஒத்துப் போகவில்லை என்பது முக்கியக் குறிப்பு.) மனித விலங்குகளின் உடலமைப்பும் அப்படித்தான். சமவெளி மனிதர்கள் ஐந்தடிக்குமேல் சராசரி உயரம் என்றால் அவர்கள் ஐந்தடிக்கும் கீழேதான். விலங்குகளும் குட்டைப் பிறவிகளாய் இருக்கின்றன. முகவெட்டு சீன, மங்கோலிய, நேப்பாள கலவையாய் இருக்கிறது.
மதச் சடங்கு முறைகளும் வித்தியாசமானது; அவர்களின் சொந்த மதம் ‘ஹாஸி’; ஆங்கிலேயர் வருகைக்குப் பின் கிறித்துவத்தைச் சிலர் தழுவினாலும் சொந்த மதச் சடங்குகளையே பின்பற்றுகின்றனர். சேவல்கொடி ஏந்தி சாஸ்திரங்கள் செய்கின்றனர். குடித்துக் கும்மாளமிடும் மனிதர்கள் அங்கு அரிது; ஆனால் பான்பராக் உறிஞ்சும் உதடுகள் அதிகம்.
ஷில்லாங் நிலப்பரப்பு வித்தியாசமானது. மலையும் பள்ளத்தாகுமாய் அதீத உழைப்பைக் கோரிய நிலப்பகுதி. மலையைக் குடைந்துதான் சாலை அமைத்திருந்தார்கள்.
அந்த மக்களின் காலை விருந்து என்பது ரசகுல்லாவும் ‘போகா’ என்ற அவல் உப்புமாவும்.
ஹாஷிமாவின் தம்பி நாற்பது வயதைக் கடந்திருந்தார். அக்கா மகனைப் பார்த்தது. அவர் கூறிய வார்த்தைகள் ஜெயக்கொடியை நெகிழ வைத்தன. ”முப்பது வருடத்தில் என்னவெல்லாம் மாறியிருக்கிறது! அம்மா இல்லை; அப்பா இல்லை; அத்தானும் இல்லை. எங்கள் வீட்டுக்கு நான், உங்கள் வீட்டுக்கு நீ; வாழ்க்கை ஓடுகிறது, இந்த மேகம் மாதிரி; நினைவுகள் சூரிய சந்திர நட்சத்திரங்களாய் ஜொலிக்கின்றன. மனிதனை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன; நினைவுகள் இல்லாட்டி மனிதனும் மிருகம்தானே?”
ஜெயக்கொடிக்குத் தன் தாயின் உறவினர்கள் காட்டிய அன்பினால் மனமுருகிப் போகிறான். தனது சுயநல சிந்தனையைக் கைவிடுவது என முடிவெடுத்து செய்முறை செய்துவிட்டு, அம்மாவின் சொத்தில் இருந்து மகள் ஹாஷிமாமாவுக்குச் சேர வேண்டிய ஐந்து லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புகிறான்.
சொத்து அபகரிப்புச் சிந்தனையைக் கைவிட்டு, அந்தத் தொகையை அப்படியே அம்மாவிடம் தந்து விடுகிறான்.
2 வேடிக்கை மனிதரோ?
நெருஞ்சிக்குடி கிராமத்தில் ஜாகையிட்ட திருநங்கைகள் 13 பேர் அவ்வழியே செல்லும் ரயில்களில் ஏறி யாசகம் பெற்று வாழ்ந்தனர். ஒருநாள் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அந்த ரயிலில் பயணம் செய்தபோது திருநங்கைளைக் கவனித்து, அவர்கள் நிலையறிந்து, அரசு நிவாரணம் வாங்கித் தர ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அவர்களில் கீர்த்தனா என்பவள் எம்காம் படித்தவள் என்பதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக ஊதவியாளர் பணி கிடைக்கிறது. போட்டித் தேர்வு எழுதி வெற்றிபெற்றால் உயர் பதவி கிடைக்கும். அரசு ஊழியர்களின் முயற்சியால் அனைவருக்கும் வீட்டடி வழங்கப் படுகிறது.
சமுதாயத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாய்த் திகழ்பவர்கள் திருநங்கைகளும் திருநம்பிகளும். அவர்களை “பிரம்மாவின் தும்மல் துளிகள்” என்று பரிகாசம் செய்கின்றன நமது புராணங்கள். (பிரம்மாவின் தும்மல் துளிகள்; சிறுகதை; இதயநிலவன்.)
“நம்மல ஏன் ஒம்பதுங்குறாங்க?” என்று ஒருத்தி கேட்கும் கேள்விக்கு இன்னொருத்தி பதில் சொல்கிறாள். “பூஜ்யம் பக்கத்துல ஒண்ணு மாதிரி இருக்குல்ல; அதனாலதான்.”
வேறொருத்தி வேறுமதிரி சொல்கிறாள். “ஒன்பது என்ற நம்பரை எந்த நம்பரால் பெருக்கினாலும் அதன் கூட்டுத் தொகை ஒன்பதுதான் வரும். ஒன்பதின் பெருக்கம் புது எண்ணை உற்பத்தி செய்யாது; இனப் பெருக்கத்துக்கு உதவாத எண் ஒன்பது.”
சமுதாயத்தின் ஏச்சுக்குப் புது அர்த்தம் கண்டுபிடித்து சமாதானம் அடைகின்றனர்.
வாழ்க்கை சுமூகமாக நடந்தபோது கொரோனாத் தொற்று பரவி வாழ்க்கையைத் தலைகீழய் மாற்றிவிடுகிறது. மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இரவு பகல் பாராமல் கொரோனாப் பராமரிப்புக் கூடத்தில் வேலை செய்து மனித உயிர்களைக் காப்பாற்றப் போராடுகின்றனர். கீர்த்தனா போன்ற அலுவலகப் பணியாளர்களும் அந்த வேலையில் இறக்கி விடப்படுகின்றனர். கீர்த்தனாவின் சக தோழிகளும் முழு முடக்கத்தால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு யாசகம் வாங்க வழியில்லாமல் திண்டாடிய போது, அவர்களுக்கும் உதவியாளர் பணி கிடைக்கிறது.
தீநுண்மி பராமரிப்புக் கூடத்துக்கு ஏராளமானவர்கள் வந்து குணமாகியும் குணமாகாமல் மரணமடைந்தும் போகின்றனர். இறந்தவர்களைப் புதைக்க மயானக் கிடைக்கவில்லை; குணமடைந்து செல்லும் ஏழைகள் ஊருக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். மருந்து கண்டுபிடிக்கப் படாத கொடூர நோயினால் மன பயம் அதிகரித்து அனைத்து மனிதர்களும் நடைபிணமாய் அலைகின்றனர்.
கீர்த்தனாவுக்கும் சோதனையில் பாசிடிவ் என வர 15 நாள் மருத்துவம் பார்த்துக் குணமடைகிறாள். இன்னும் இரண்டு வாரம் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் நெரிஞ்சிக் குடியில் இருக்கும் தனது சக தோழிகளுக்குக் கைபேசியில் அழைக்கிறாள். அந்தக் குடிலுக்கு வர அவர்கள் அனுமதிக்கவில்லை. தனிமைக்காலம் முடிந்தபின் வந்தால் போதும் என்கின்றனர்.
நோய்த்தொற்றுத் தடுப்பகத்தில் பணியாற்றியவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், களப் பணியாளர்கள் உட்பட, பணிச்சுமை காரணமாகவும், ஓய்வின்மை மற்றும் மக்கள் அறியாமையால் ஒதுக்குதல் காரணமாகவும் விரக்தி நிலையில் துவண்டு போவதை நிறைவாகச் சித்தரிக்கிறது கதை.
போக்கிடம் இல்லாமல் அலைந்த கீர்த்தனா ரயில் ரோட்டு வழியாய் விரக்தியோடு நடந்து செல்கிறாள். அப்போது, இருள் வெளியில் ஓர் ஆட்டோ டிரைவர் தற்கொலைக்குத் தயார் ஆவதைக் கவனித்து விடுகிறாள்.. அவனைக் காப்பாற்றி மீட்டெடுத்துத் தைரியம் சொல்லி “நாம் சாகவேண்டாம்” என்கிறாள். ”ரயிலை மறித்துப் போராட்டம் நடத்துவோம்; அதிகாரிகள் வந்து நிவாரணம் வழங்கட்டும்” என்கிறாள். இருவரும் சேர்ந்து ரயிலை மறிக்கின்றனர் என்பதோடு கதை முடிகிறது.
இந்தக் கதையில் முக்கியச் செய்தி ஒன்று உண்டு; தமிழகத்தில் இருந்து வட இந்தியத் தொழிலாளிகள் சாரி சாரியாய் நடந்து சென்று துயரப் பட்டதை அறிந்திருக்கிறோம். அதே நிலை தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது; மகாராஷ்ட்ரா உட்பட வட மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்திருக்கிறார்கள். இது பலருக்கும் புதிய செய்தி. நோய்த்தொற்றுக் காலம் என்பது அங்கிங்கெனாதபடி துயர முட்களைத் தெளித்திருந்தது; ஆசிரியர் மிக அழுத்தமாக இதைப் பதிவு செய்திருக்கிறார்.
தீநுண்மி துயரத்தின் ஏறத்தாழ முழுப் பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது இந்தக் கதை.
3 தெளிவு;-
பிரியா ஒரு கட்டுமானப் பொறியாளர். அவள் கணவனும் அவளும் ஐ ட்டித் துறையில் வீட்டில் இருந்தே இருவேறு காலமுறைமையில் பணியாற்றுகின்றனர். சென்னை நகரின் நெருக்கடியான வாழ்க்கை! இளமையை இன்பமாய் அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுகின்றனர். ஒரே வீட்டில் உள்ள தம்பதிகளுக்கு அமையும் முரண்பட்ட வேலை முறைமையிலும் கிடைக்கும் நேரத்தில் அதீதக்கூடுதலும், பணி நெருக்கடியும் அவனிடத்தில் உடல் சோர்வையும், அவளிடத்தில் போதாமையையும் உணர்த்துகின்றன. அதனால் தாம்பத்திய இடைவெளிகள் அதிகரிக்கின்றன. ஒரு கட்டத்தில் அடங்கா வேட்கையுடன் தாம்பத்தியம் கொள்ள பிரியா ஆசைப்பட்ட போது கணவன் பணிநெருக்கடியைச் சொல்லி ஒத்திப்போடுகிறான். அலைக்கழிக்கும் காமவிகார எண்ணங்களிலிருந்து தப்ப நினைக்கிறாள். கொஞ்சநாள் பிரிந்திருந்தால் அவன் சரியாகலாம் என்று பிரியா பிடிவாதமாய் வீட்டை விட்டுத் தேனி மாவட்டத்தில் இருக்கும் தன் சொந்த கிராமத்துக்குச் செல்கிறாள் .
தன்னை எடுத்து வளர்த்த பெரியம்மா வீட்டுக்குப் போகிறாள். அன்பு பொழியும் கிராம வாழ்க்கை அவளுக்குச் சில படிப்பினைகளைத் தருகிறது. தாம்பத்தியம் ஒரு பொருட்டல்ல; வாழ்வதுதான் முக்கியம் எனப் புரிந்துகொள்கிறாள்..
கணவன் நிறையக் குறுஞ்செய்தி அனுப்பி அவளை அழைத்துக் கொண்டிருந்தான். அவள் கிளம்பத் தயாராய் இல்லை. மூன்றாம் நாள் மதுக் கோப்பையைப் பதிவிட்டு “கோப்பையில் உதடுவைத்து மதுவைச் சுவைக்கையில் உன் உதட்டில் என் உதடு வைத்து உறிஞ்சுவதுபோல் பித்தேறிக் கண் சொக்குதடி” என வசனம் எழுதுகிறான். ஏற்கனவே குடிகாரனாய் இருந்தவனை மீட்டெடுத்து வைத்திருக்கிறாள். இப்போது மீண்டும் அடிமையாகி விட்டானே எனப் பதறுகிறாள். உடனடியாக டாக்ஸி எடுத்துக் கொண்டு சென்னைக்குச் செல்கிறாள். அங்கு அவன் மதுபோதையில் தன்னுணர்வு இல்லாமல் கிடக்கிறான். டாக்சி டிரைவர் உதவியால் மருத்துவ மனைக்குத் தூக்கிச் செல்கிறாள்.
தாம்பத்திய வாழ்க்கையின் வெக்கையும் வேட்கையும் சரியாகபுரிந்து கொள்ளபடாதை தெளிவு சொல்கிறது. இருவருமே பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்கள் என்பதை இருவர் நடத்தைகளும் கரை தாண்டாமல் வாழவைக்கிறது. இந்தக் காலகட்டத்தின் முக்கிய படைப்பு நூல் இது.
– தேனிசீருடையான்
வெளியீடு:
Pustaka digiral media pvt ltd
#7,002 mantri recidency
Bennergharra main road.
Bengaluru 560 076
Karnataka. India.
தாகமும், தவிப்புமாய்
அவஸ்தை கடக்க முயலுகிறாள்
எப்படி முடியும்
ஆத்திரத்தை அடக்கலாம்.,
வேறு வழியின்றி
ஒரமாகப் பேருந்து நிற்க வேண்டுகிறாள்.
முணுமுணுத்தவாறே அவர்கள்.
அகன்ற எட்டுவழிச்சாலையில்,
அடர்ந்த இருளைத் தேடுகிறாள்
ஒதுங்க,.
நாலாப் பக்கமும் ஒளிச்சிதறல்கள் ஒலிப்பான்களோடு
அவளை நோக்கியாவாறு விரைகின்றன
சிற்றின்பத்துடன்.
நின்ற பேருந்து ஜன்னல்களோ
இவளின் அசைவைக்
கண்காணிக்கிறது
கள்ளத்தனமாக.
அவளும் நின்றவாறே
தன் ஆடையை ஈரமாக்கினாள்
ஈரங்கெட்டவர்களின் பார்வையை விட
மூத்திர வாடையே மேலானாது.
********************
இணைந்து வாழ்தல் வரமென்று
மெனக்கெட்டு விதவைக்கு பொட்டிட்டாய்.!
முந்திய தழும்புகளை
காயப்படுத்தி
எச்சில் இலையென்றாய்
சுவைத்துண்டு,
மெட்டுக்குப் பாடல் எழுதுவது புதிதாக வருகிறவர்களுக்கு பெரும் சிரமமான காரியமாக இருக்கும். மெட்டுக்கு எப்படிப் பாடல் எழுதுவது என்று சில தம்பிமார்களும் நண்பர்களும் கேட்பார்கள். முதலில் உங்களுக்குத் தெரிந்த திரைப்பாடலின் மெட்டுக்கு எழுதிப் பழகுங்கள் என்பேன். அப்படி எழுதிப் பார்க்கிற போது நம்பிக்கை பிறக்கும். எழுதிய பாடல் வரிகளை ஒரு மெட்டில் பார்ப்பதில் ஓர் ஆனந்தம் உண்டாகும். ஒருவகையில் தெரிந்த மெட்டிற்குப் பாடல் எழுதுவது சுலபமாக இருக்கும் அதில் அவர்கள் பெறுகிற புரிதலை வைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடலாம் என்பது என் எண்ணம். அதனைத் தொடர்ந்து கேட்காத இந்திப் பாடலை அல்லது வேறு மொழிப் பாடலை எடுத்துக் கொண்டு அதன் மெட்டுக்கு எழுதச் சொல்வேன். அதையும் எழுதிவிட்டால் அவர்களின் நகர்வை என்னாலும் அவர்களாலும் உணர முடியும். அதன் பின் நான் எனக்குக் கொடுக்கப்பட்ட என் பாடலின் மெட்டை அந்த பாடல் வெளிவந்த பிறகு கொடுத்து எழுத வைப்பேன். அதிலும் எழுதிப் பழகிவிட்டால் அவர்கள் மெட்டுக்கு எழுதுகிறவர்களாக மாறிவிடுவார்கள். இப்போது மெட்டுக்கு எழுதிப் பழகிவிட்டார்கள் ஆனால் அவர்களின் கருத்தும் கவித்துவமும் அழகிலும் எப்படிக் கைவரப் பெற்றிருக்கிறது என்பது அடுத்த கேள்வி. இது குறித்தும் பயில நமக்கு நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பாடலாசிரியருக்கும் ஒரு பாணி இருக்கிறது. தமிழ் பாடலாசிரியர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பில் ஒவ்வொருவரின் பாடல் எழுத்துமுறையையும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் வண்ணம் நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும் என எனக்குக் கூட ஓர் எதிர்காலத் திட்டம் இருக்கிறது.
சென்னைக்கும் மதுரைக்கும் என்னைவிட அதிகம் பயணித்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் இதில் விதிவிலக்கு. இன்னொன்று இதற்கு நான் நடத்துநர் வேலையோ ஓட்டுநர் வேலையோகூட செய்திருக்கலாமோ என்றுகூடத் தோன்றும். அப்படி நான் பயணிக்கையில் மோசமான அனுபவமும் சந்தோசமான அனுபவமும் ஓரிடத்தில் கிடைக்கும். அந்த இடம் தான் ஹோட்டல். அங்கே கழிப்பறை மட்டமாக இருக்கும். பள்ளிக்கூட அனுபவத்திற்குப் பிறகு ஒருவரைக் கையில் குச்சியோடு பார்த்தேனென்றால் அது இங்கு தான். ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு கக்கூஸ்க்குள் அனுப்ப ஓர் அண்ணன் ஆசிரியர் வேலையைச் செய்வார். என்ன மாணவர்களுக்குத் தான் வயது கொஞ்சம் அதிகம். அதே போல் அங்கிருக்கும் ஹோட்டலில் தோசையும் சால்னாவும் சாப்பிட்டால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் பஸ் ஒரு நான்ஸ்டாப்பில் நின்று ஒருவர் வாட்டர் பாட்டிலோடு காடுகரை நோக்கி ஓட வேண்டும் தான். இப்போ விசயம் இதுவல்ல பஸ் நிற்கும் அந்த 15 நிமிடங்களில் அங்கே நான்கு ஐந்து பாடல்கள் ஒலிக்கக் கேட்கலாம். அந்த பாடல்களின் மூலமாகத்தான் நான் தமிழகத்தின் பல முக்கிய நாட்டுப்புற கானா பாடகர்களை அறியப்பெற்றிருக்கிறேன். அங்கு எல்லாவிதமான பாடல்களும் ஒலிக்கும். அங்கேயே கேசட் பிற்காலத்தில் சிடி விற்பனையும் நடக்கும். அங்கே என் பாடல் ஒலித்தால் எத்தனையோ பேரைச் சென்றடையுமே என்று ஏங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் என் பாடல் இரண்டாவது ஒலித்துவிடுகிறது ஆனால் நான் இப்போது மதுரைக்கும் சென்னைக்கும் ரயிலில் பயணிக்கிறேன்.
ஒரு முறை சிங்கப்பூர் சென்றிருந்த போது அங்கே உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களோடு போயிருந்தேன். யாரும் கற்பனை செய்ய வேண்டாம் நான் சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்தேன். அங்கே என் பாடல்களைத் தமிழ் நாட்டிலிருந்து வந்த பாடகர்கள் பாடும்போதும் அவற்றை அங்கிருந்த நண்பர்களும் நண்பிகளும் கேட்கும் போது எத்தனை பேர் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியாது எனக்கு றெக்கை முளைத்தது.
ஒருமுறை “வானவில்” என்கிற ஒரு படத்திற்குக் கேரளா சென்றிருந்தேன். அந்தப் படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன். மிகச் சிறப்பாக வந்திருந்தது. அந்த டீம் கேரளத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் பெயர்கள் மறந்தபோயின. ஆனால் அவர்கள் ஒரு தமிழ் கவிஞனுக்குக் கொடுத்த மரியாதையும் உபசரிப்பும் மறக்க முடியாத நினைவுகள். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை என் பாடல்களும் தான். இதை எதற்காக சொன்னேனென்றால் பத்தாண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் என் அருமைத் தம்பி அமைப்பொன்றின் ஆல்பத்திற்காக பத்துப் பாடல்கள் எழுத ஒரு மழைக்கால இரவில் ஒரு காட்டுப் பங்களாவில் தங்கவைத்தான். உடனிருப்பானென எண்ணினேன் இருக்கவில்லை. பேப்பர் பேனா எடுத்து எழுதத் தொடங்கினேன். கரண்ட் கட்டானது. மழைக் கொட்டியது ஆனால் குடிக்கத் தண்ணீரில்லை. யாரோ ஒருவர் நான்கு இட்லியைத் தந்துவிட்டு குடையோடு ஓடி மறைந்தார். மெழுகுவர்த்தியும் இல்லை. பேய் பயம் எனக்கில்லை. ஆனால் பயம் இருந்தது. தூங்குவதற்குத் தொந்தரவாக வெக்கை இல்லை ஆனால் சரியான விரிப்பான் இல்லை.
கொசுக்களின் துணை இருந்தது ஆனால் கடித்தன. விடிய விடிய தூங்கவில்லை. அந்த நான்கு இட்லியையும் சாப்பிடவில்லை பத்து பாடல்களும் எழுதவில்லை.
கேரளா போய் பாடல் எழுதிய அனுபவம் போல் கேரளத்து நண்பர்கள் சென்னை வந்து என்னிடம் பாடல் வாங்கிய விதமும் அழகானது தான். படத்தின் பெயர் “ட்ராமா” இது இரண்டே ஷாட்டில் எடுக்கப்பட்ட சினிமா. இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் திரைக்கு வரும். இந்த வாய்ப்பு என் பெற்றெடுக்கா மகள் விஜயலட்சுமியால் கிடைத்தது. அவர் வாட்ஸ்அப்பில் உரையாடும் போது நீங்கள் மண்வாசனை பாடல் மட்டும் தான் எழுதுவீர்களா வேறு வகைப் பாடல்களும் எழுதுவீர்களா எனக் கேட்டபோது சின்னதான கோபத்தில், நான் இங்கிலீஷ் படத்திற்கே பாடல் எழுதியிருக்கிறேன் என்னப் போய் இப்படி கேட்டிட்டியே மகளே என்றேன்.(அதற்கு அவர் என்ன.. இங்கிலீஷ் படமா என வாயைப் பிளந்தது, பிறகு அது என்ன படம் எனக் கேட்டபோது என் வாய் மூடிக் கொண்டதெல்லாம் எடிட்) அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு, ஏனெனில் அந்தப் படத்திற்கு விஜயா தான் வசனக்கர்த்தா. அந்தப் படத்தின் இயக்குநர் அஜய்குமார் என் அன்புக்குரியவர். அந்தப் படத்தில் மதுரையின் பெருமையைச் சொல்லும் விதமான ஒரு பாடல் ஜெய கே தாஸின் இசையில் வேல்முருகனின் குரலில்.
தொகையறா
மல்லிகைப் பூ வாசம் எங்க மதுரையோடது
நாயக்கர் மஹால் தூண்களால பெரும கூடுது
தெப்பக்குளத்தில பசங்க பாரு கிரிக்கெட் ஆடுது
நம்ம கோனார் மெஸ்ஸு கறி தோச நாக்கு தேடுது
பல்லவி
ஜிகர்தண்டா பேருபோன மதுரைதானுங்க
சிங்கப்பூரத் தோக்கடிக்கும் எங்க ஊருங்க
டீக்கடைங்க எங்களுக்கு சட்டமன்றம் தான்
அடிகுழாயில் நடக்கும் பட்டிமன்றம் தான்
வாழத்தார வச்சதுபோல் நான்கு கோபுரம்
வைகை ஆத்து இடுப்புலதான் நாங்க வாழுறோம்
சரணம் – 1
வருஷத்துல ஆறு மாசம் சென்ரல் ஜெயிலு
வந்ததுமே கோழி அடிக்கும் பொண்டாட்டி மயிலு
உசுப்பிக் கேளு ஒரு மணிக்கும் இட்டிலி கிடைக்கும்
சாமத்துக்கும் சலிக்காமல் சட்னி இருக்கும்
நண்பனை தொட்டவனை பிடித்திடும் சனிதான்
உசுரு கூட எங்களுக்கு பாக்கெட் மனிதான்
சரணம் – 2
கேலி கிண்டல் நக்கல் பேச்சு கூட பிறந்தது
பூமி போல எங்க ஊரு தூங்க மறந்தது
தியேட்டரில் புதுப் படன்னா விசில் தான் பறக்கும்
வெள்ளைக்காரச் சனங்க பாரு டவுசரில் நடக்கும்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது எங்களின் மண்ணு
நீ அதை நீதி கேட்டு எரிச்சதுங்க கண்ணகிப் பொண்ணு
நூல் : காடோடி நாவல் ஆசிரியர் : நக்கீரன் வெளியீடு : அடையாளம் விலை : 270
பக்க : 340 புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்:thamizhbook.com
வெறும் முன்னூறு ரூபாயில் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டுமா?
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிக் கொண்டிருந்த காலம் அது. “மருத்துவமனைகளில் இடம் இல்லை. அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவை. இடுகாட்டில் இடம் இல்லாததால் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன”. போன்ற அறிவிப்புகளே எங்கும் நிறைந்திருந்தது. போதாக்கு றைக்கு நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் ஒரு இறப்பு செய்தியை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பயமும் மனஉளைச்சலும் தொற்றிக் கொள்ள, அதிலிருந்து விடுபட நிறைய மறதியும் கொஞ்சம் அமைதியும் தேவைப்பட்டது. அவ்வளவு தான் போர்னியா தீவு என்னை வாரி அணைத்துக் கொண்டது. கடவுச் சீட்டு இல்லையென்றேன்; வேண்டாம் என்றது. இபாஸ் இல்லையென்றேன்; தேவையில்லை என்றது. பிறகு எதற்கு தாமதம்? கிளம்பலாமா?
ரசோங் குரங்கு
அதுதான் என் முதல் படகு பயணம். கினபத்தாங்கன் நதியின் நீண்ட படகு பயணத்தை தொடங்கும் முன், மிக நீண்ட சாலை பயணத்தையும் முடிக்க வேண்டியிருந்தது. கினபத்தாங்கனிலிருந்து வடக்கு நோக்கி திரும்பி லோக்கன் ஆற்றின் மீது மிதக்க தொடங்கியிருந்தது படகு. இருபுறமும் மரங்களடர்ந்த பொள்ளாச்சி – ஆனைமலை சாலையில் பயணம் செய்யும் போதெல்லாம் அதன் எழிலில் மயங்கி வண்டியில் ஊர்ந்து செல்லும் எனக்கு லோக்கன் இன்ப அதிர்ச்சி தந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த அடர்ந்த மரங்கள் லோக்கனை வெயிலுக்கு காட்டாமல் வளர்த்துக் கொண்டிருந்தன. லோக்கனின் வழிப்பாதையை தவிர எங்கு திரும்பினும் பசுமை. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வாலர்கள் வந்தால் கூட எந்த புள்ளினத்தின் ஒலி இது என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு கலவையான ஒலிகளால் கானகம் நிரம்பியிருந்தது. ஆனால் லோக்கனோ அதன் ஆழத்தில் கொஞ்சி விளையாடும் மீன்களை கண்ணாடிபோல் தெளிவாக காட்டி அமைதியாக சென்று கொண்டிருந்தது. லோக்கனின் தாகம் தீர்க்கும் பல ஓடைகளில் ஒன்று இடப்பக்கமாக மேற்கிலிருந்து ஓடிவந்து கலந்தது. இதற்கு மேல் படகு செல்லாது. இனி காணப்போவதெல்லாம் காடு காடு காடு மட்டும் தான். கொரோனாவினால் ஏற்பட்ட வலி கரைந்து கொண்டிருந்த தருணம் அது.
தனியாக தான் போனேன். ஆனால் அங்கு சென்றதும் முதலில் துவான் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். பின் ஒமர் வந்தார். யுவன்னா, இல்லை அன்னா வந்தாள். ஜோஸ்சும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். காடுகள் ஒளித்து வைத்திருந்த ஆர்மோனியப் பெட்டியை கண்டெடுக்க அவனே கற்றுக் கொடுத்தான். ஜோஸ்ஸின் சொந்தக்காரி ரலாவின் பாடல்களுக்கு இசை கருவிகளே தேவையில்லை. இவர்களுடன் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சிலர். அப்புறம் பிலியவ். ‘எனக்கு வண்டியில் பயணம் செய்ய தெரியாது’ எனக் கூறி என் பேரன்புகளை பிடுங்கி சென்றவர். படேல் சிலையருகே பாதங்களுக்கு பக்கத்தில் மோடி நிற்பது போன்ற காட்சியில் மூதாய் மரத்தையும் என்னையும் பொருத்திக் கொண்டிருந்த வேளையில் ஒமர் சொன்னார், உலகில் இவ்வளவு உயரமான மரவகைகள் அமேசான், ஆப்பிரிக்க காடுகளில் கூட கிடையாது. என்னையும் அறியாமல் என் தலை அதை ஆமோதித்து அசைந்து கொண்டிருந்தது. எங்களுடன் வா! நீ காண வேண்டியது நிறைய உள்ளது என்று ஜோஸ் சொல்லி முடிப்பதற்குள் நான் தயாரான வேகத்தைப் பார்த்து அனைவரும் வெடித்து சிரித்தனர்.
ஐம்பூதங்களில் மூன்றிற்கு காடு சம்பளத்துடன் கூடிய கால வரையறையற்ற விடுப்பு கொடுத்து விட்டது போலும். கண்ணுலையே படல. நிஜமாகத்தான் சொல்றேன். பல நூற்றாண்டுகளாய் சேமித்த இலை மேல்மண் மக்குகளால் சில அடி உயரம் வரை மூடப்பட்டிருந்த நிலம். ஓங்கியுயர்ந்து அடர்ந்து படர்ந்து வளர்ந்த மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம். சூரிய ஒளி புகமுடியாததனால் வெப்பத்திற்கு (நெருப்பு) தடை. ஆனால் வளிக்கும் (காற்று), அதனை குளிரூட்டும் சிற்றோடைகளுக்கும், குளங்களுக்கு (நீர்) மட்டும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டும் வேலை. இப்படி அடர் வனத்தின் குளிர்ந்த கவிகையில் மூன்று நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன்.
நான் பார்த்ததையெல்லாம் சொன்னால் நீங்கள் எல்லாரும் உடனே கிளம்பி அங்க போயிருவீங்க…கொஞ்சம் பயண களைப்பில் இருந்தாலும் உங்களுக்காக சில விஷயங்களை மட்டும் சொல்றேன்….. நம்ம ஊருல இருக்குற குரங்குகளெல்லாம் ஒரு மாறி மரப்பட்டை கலர்ல தான இருக்கும். இங்க அடர் செம்மஞ்சள் கலர்ல ஒரு குரங்கை பாத்தேன். அதுக்கு மூக்கு வேற தும்பிக்கை மாதிரி இருக்கு. ஒமரிடம் கேட்டேன், ரசோங் குரங்குகளாம். இங்கு தவிர உலகில் வேறு எங்கும் இல்லையாம்.
காட்டின் தாவரவியலையும், விலங்கியலையும் கரைத்து குடித்திருந்த ஒமர்தான் அந்த மூன்று நாட்களுக்கும் என் ஆசான். அதைப் போலவே உலகிலேயே மிகச் சிறிய குளம்புள்ள பாலூட்டியான கூரன் பன்றி, குள்ள யானை, வேதிவால் குருவி, இருவாசி பறவைகள், லயாங் லயாங் குருவி, பறக்கும் பாம்பு, பறக்கும் தவளை, பறக்கும் அணில், உராங் ஊத்தான், ஐந்தடி உயரமுள்ள தேன்கூடு, ஓரடி நீளமுள்ள குச்சிப் பூச்சி, பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு, டைனோசர் காலத்து தொன்மையான துபையா, தேன் குடிக்கும் ஒளவால், பெர்பாஞ்சாட் எனும் தொடை பருமனுள்ள காட்டு கொடி, பகட்டு கோழி, தாடி பன்றி, தெம்படாவ், பன்றிவால் குரங்கு, சாம்பல் குரங்கு, கலோய் மீன், சும்பித்தான்……. ஆமாங்க …இந்த பட்டியல் சற்று நீளமானது தான்..
காட்டுன்னா பல்வேறு மரங்களும் உயிரினங்களும் இருப்பது இயல்பு தானேனு நீங்க நினைக்கிறது கேக்குது. ஆனா மற்ற காடுகளில் இருப்பது போன்று அல்ல. நான் வாசித்த பட்டியலில் பெரும்பாலானவை ஓரிடவாழ்வி. இந்த காட்டை தவிர உலகில் வேறு எங்கேயும் இவற்றை காண முடியாது. இந்த காட்டை பற்றிய மேலும் ஒரு சுவையான உண்மையை ஒமர் என்னிடம் கூறினார். நான் உங்களிடம் கூறுகிறேன். குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை நாம் அறிவோம். அந்த குரங்கு இனத்திற்கே முன்னோடியாக உள்ள விலங்குகளை பிரைமேட் என்று கூறுவார்களாம். அது உலகெங்கிலும் பரவி இருந்தாலும் சுமார் பத்து பிரைமேட்கள் ஒன்றாக இந்த காட்டில் உள்ளதாம். ஆம். நம் பத்து முப்பாட்டனையும் நான் பார்த்து விட்டேன். அதில் ஒன்று தான் நாற்பத்தினான்கு விலங்கு. அந்த விலங்கில் ஆந்தையின் கண்கள், வௌவாளின் காதுகள், குரங்கின் வால், தவளையின் கால் என 44 வகையான விலங்குகளின் உறுப்புகள் இருந்தது. நான் மெரண்டுட்டேன். இறுதியாக,கதிரவன் கரையும் நேரத்தில், உலகிலேயே வௌவால்கள் அதிகம் வசிக்கும் கோமதோங் குகையிலிருந்து பல ஆயிரம் வௌவால்கள் வெளியேறிய காட்சியும், கோடான கோடி மலர்கள் ஒரே சமயத்தில் மலர்ந்திருந்த காட்சியும் இந்த பயணத்தில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது…….
உங்களுக்கும் அங்க போகணும்னு தோணுதா? இந்த பெருந்தொற்று காலத்திலும் இது சாத்தியமாகுமானு சந்தேகமா இருக்கா? அதுவும் வெறும் முன்னூறு ரூபாயில்.சாத்தியம்தான் நக்கீரனின் காடோடி நாவலை வாசித்தால். ஆமாங்க. இவ்வளவு நேரமும் நான் படித்த காடோடியில் உள்ள போர்னியா தீவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர நான் சென்று வந்ததை பற்றி அல்ல. கதையை சொல்லும் துவான், என் கையை பிடித்துக் கொண்டு கூட்டிப்போகும் உணர்வை அவர் எழுத்தில் தோய்த்திருந்தார் நக்கீரன்.
இக்கதை போர்னியாவைப் பற்றியது அல்ல. அங்கு வாழும் வாலில்லாக் குரங்குகள் பற்றியும் அல்ல. அங்குள்ள குளங்களிலும் அருவிகளையும் வளர்க்கும் ஓடைகளை பற்றியும் அல்ல. காடுகளை போற்றி பாதுகாத்து வாழும் திடோங், முருட் இனங்களை பற்றியதும் அல்ல. காட்டிலுள்ள மரங்களிடம் உரையாடும் பிலியவ் பற்றியும் அல்ல. மரங்களினுள் வாழும் கொற்றவை பற்றியும் அல்ல. அந்த கொற்றவையை கொல்ல வரும் வெட்டுமர கம்பனியை பற்றியதும் அல்ல. தன்னை வாழ வைக்கும் காட்டின் அழிவிற்காக கவலைப்படும் பகட்டு கோழியை பற்றியதும் அல்ல. மொத்த காடும் அழிந்து போர்க்களத்தின் இறுதி காட்சியை நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், மூதாய் மரத்தின் வெட்டப்பட்ட அடிமரத்தின் அருகில் சென்று, உரிந்த பட்டையை தடவி வலிக்கிறதா? என கேட்ட துவானைப் பற்றியும் அல்ல. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் பற்றியது. குரங்கின் மூளையை உயிருடன் சுவைக்கும் இரக்கமில்லாதவர்கள் பற்றியது. எதற்கு வாங்குகிறோமென தெரியாமலே பொருட்களை வாங்கி குவிக்கும் பேராசைக்காரர்கள் பற்றியது. ஆம் நம்மை பற்றியது. என்னைப் பற்றியது.
எல்லா ஊரும் ஒரே மாதிரிதான். ஆனால், ஒன்றுபோல இல்லை. அன்று அதிகாலைச் சூரியனுக்கு நான் முகம்காட்டியது கடவுளின் தேசத்தில் இருந்துகொண்டுதான். அடர்ந்த மரங்கள் இருந்த இடங்களில் இன்று அதன் தழும்புகள் மட்டுமே நிரந்தரமாகியிருக்கின்றன. தூசி படர்ந்த இலைகள் வழிநெடுக விரவிக்கிடந்தன தரையிலும் மரங்களின் கிளைகளிலும்.
ஒரு சொட்டு மழை கூறையில் விழுந்தாலும் வழுக்கிச் சென்று தரையை முத்தமிடட்டும் என்று நான்கு புறமும் சரித்துக் கட்டப்பட்ட ஓட்டுவில்லை வீடுகள். சாலையின் விளிம்புகளை பிடிவாதமாகத் தொட்டபடி கடைகள். சமீபகாலமாய் ஓட்டுவீடுகளின் விலாஎலும்பில் துருத்திக்கொண்டு முளைத்திருக்கும் அதிநவீன தார்சு கட்டிடங்கள்.
ஆங்காங்கே மௌனித்துப் பறக்கும் ஆகாயப் பறவைகள். இருபுறக் கரைகளின் அழுக்கை வாரி அப்பிக்கொண்டு மௌனமாய்ப் பயணிக்கும் அதிகாலை ‘பாரதபுழ’ ஆறு. மேம்பாலத்தில் உடலைக்குறைக்க நடைபயிற்சி செய்யும் ஆண்களும் பெண்களும். ’வா’ என்று ஒற்றைச் சொல்லில் வரவேற்கும் அகண்ட தார்ரோடு. அத்தனையையும் வேடிக்கை பார்த்தபடி நடந்து செல்லும் நான்.
முதலில் மொழி அத்தனை இலகுவாக பேசத்தெரியாததால் கொஞ்சம் திணறத்தான் வேண்டியிருந்தது. அவசியம் ஏற்படும்போது ஓரிரு தெரிந்த வார்த்தைகளை பிரயோகித்து சமாளித்தாலும், சரளமாக அவர்கள் பேசும் இசை போன்றதொரு மொழி உடனடியாகப் புரியாமல் நழுவிசெல்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சரளமாகப் பேசத்தெரியாவிட்டாலும், ஏதோ கொஞ்சம் புரிந்துகொள்ளும் அளவுக்கு இருந்தால் போதும் என்ற ரீதியில், மலையாளத் தொலைக்காட்சி ஷோக்களையும், மம்முட்டி மற்றும் மோகன்லால் நடித்த சினிமாப் படங்களின் உரையாடல்களையும் கொஞ்சம் தொடர்ந்து பார்த்தும் கேட்டும் வைத்திருந்தேன்.
காட்சிகளோடு கூடிய உரையாடல் என்பதால், முதல் காட்சியும் அடுத்த காட்சியின் நிகழ்வையும் பொருத்திப்பார்த்து, இதுவாகத்தான் இருக்கும் என்று தோராயமாகப் புரிந்துகொண்டு விடலாம்.. புரியாவிட்டாலும் அது பெரும் குற்றமொன்றுமில்லை. அவ்வாறு கற்றுக்கொண்ட ஓரிரு அவசியமான வார்த்தைகள் ஒருவிதத்தில் உதவிகரமாக இருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், ஒரு மொழியை சரளமாக அந்த ஊரின் நேட்டிவிட்டியோடு பேசுவது அவ்வளவு எளிதில்லை என்பது பிறகுதான் தெரிந்தது.
அந்தவூர் மண்ணின் மனிதர்கள் பேசும்போது இலக்கண சுத்தமில்லாமல் கொச்சைமொழியில் அவர்கள் மிக இயல்பாக பேசுவதுகூட ஏதோ அவசர அவசரமாகப் பேசுவதுபோல தோன்றுகிறது.
ஒவ்வொருவருக்கும் தனித்துவமான தொனி, உச்சரிப்பு லாவகம், தனித்ததொரு குரல்வளம். என்று ஆளுக்கு ஆள் வேறுபடுவது இயல்புதானே! ரோட்டோரக் கடைகளில் தேனீர் குடிப்பதிலும் காலை, மாலை உணவு உண்பதிலும் பெரிதளவில் எந்தவித சிக்கலும் இல்லை. சைகை போதும். கூடவே எந்த மொழியில் பேசினாலும் எதிரில் இருப்பவரால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் கேட்பதற்கேற்ப தலையை அசைத்தால் போதும்.
அந்நிய மொழிபேசும், புதிய இடத்தில், நம் தாய்மொழியில் யார் பேசினாலும் அவர்களோடு உடனடியாக நட்புகொள்ள நினைக்கிறது மனம். அவர்கள் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? என்றெல்லாம் ஆராய்ச்சியெல்லாம் அப்போது எழுவதில்லை. சொந்த ஊரில் பக்கத்து வீடு எதிர்வீட்டில் அதே மனிதன் இருக்கும்போதுதான் அத்தனையும் சாத்தியம்.
நேசனல் ஆயுர்வேத ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் பஞ்சகர்மா
பாலக்காடு அடுத்துள்ள சொர்ணூருக்குதான் எனது எதிர்பாராத பயணம். அங்குள்ள செறுதுருத்தி என்னும் இடத்தில் இருக்கும் ”நேசனல் ஆயுர்வேத ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் பஞ்சகர்மா” என்னும் மருத்துவமனைக்கு என் உடல் சார்ந்த பிரச்சினைக்காகச் சென்றிருந்தேன். எல்லாவகையான நெடுநாள் உடல்சார் நோய்களுக்கும், ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை அது. புறநோயாளிகளுக்கும், உள்நோயாளிகளுக்கும் சிறந்தமுறையில் சிகிச்சையளிக்கிறார்கள். கட்டணம் வெறும் பத்துரூபாய் தான்.
அதிகாலை ஏழு மணியிலிருந்தே டோக்கன் கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். நானும் ஒரு டோக்கனைப் பெற்றுக்கொண்டேன். எங்கு நோக்கிலும் சுத்தம். வெவ்வேறு ஊர்களில் இருந்து, ஏதேதோ நோய்க்கு மருத்துவம் பார்க்க நோயாளிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
வளாகத்திற்கு உள்ளேயே கேண்டின் இருந்ததால் காலை உணவிற்குக் கவலை இல்லை. வெள்ளப்பம் (நம்ம ஊர் ஆப்பத்தைதான் அப்படி அழைக்கிறார்கள்) நூலப்பம் (இடியாப்பம்) அதற்குத் தோதாக சட்னி சாம்பார், பூரி, இட்லி, தோசை, மெதுவடை என்று எல்லாம் கிடைக்கிறது. ருசிக்கு எல்லாவற்றிலும் கலந்துகட்டி அடிக்கவேண்டும் என்று ஆசை இருந்தது என்னவோ உண்மைதான்..
ஆனால், புதிய இடத்து பதார்த்தங்கள் சிக்கிச்சைக்கு சென்ற இடத்தில் வயிற்றைப் பதம்பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்து அரைவயிற்றோடு எழுந்துகொள்ள வேண்டியதாயிற்று.
இதுவரை அந்த ஊருக்குச் சென்றதில்லை. இடம் புதிது, மொழி புதிது. வழி புதிது, மொத்தத்தில் எல்லாமே புதிது. மருத்துவரிடம் ஆங்கிலத்தில் பேசிச் சமாளிப்பது மிக எளிதாக இருந்தது. தமிழில் பேசினாலும் புரிந்துகொள்கிறார்கள். நண்பகலுக்குள் மருத்துவரைப் பார்த்து முடிந்துவிட்டது. மருந்தும் பெற்றாகிவிட்டது.
இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். மருத்துவமனைக்குச் செல்வதுதான் எனது பிரதான நோக்கம். பிறகு ஊர் திரும்பவேண்டியதுதான். நான் ஊர் திரும்பவேண்டிய ரயில் இரவு பத்துமணிக்குத்தான். அதுவரை என்ன செய்வது?
எந்தவிதத் திட்டமிடலும் இல்லாததால், அருகில் ஏதேனும் பிரபலமான இடத்திற்கு சென்றுவந்தால் என்ன? என்ற எண்ணம் எழுந்தது என்பதைவிட அருகில் இருந்தவரிடம் அறைகுறை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கேட்டுத் தெரிந்துகொண்டேன் என்பதுதான் உண்மை.
30 கிலோமீட்டர் தொலைவில் ஒரு உயிரியல் பூங்கா இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்துநின்ற பேருந்தில் ஏறிக்கொண்டேன். சற்றேறக்குறைய 50 நிமிடப்பயணம்.
உடன் பயணிப்பவரிடம், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் என்று கலந்துகட்டிப் பேசுவது நமக்கும் சரி உடன் பயணிக்கும் மனிதர்களுக்கும் சரி விநோதமான(!) அனுபவம்தான். பேருந்து ஜன்னலின் வழியே ஊரையும், மக்களையும் உற்றுநோக்குவது அத்தனை பெரிய ஆனந்தம். ஏராளமான எண்ணச்சிறகுகள் சூழலுக்கேற்ப வளர்ந்து மேலேயும் கீழேயும் பறந்தவண்ணம் இருந்தது. கவிதை வரிகள் ஓரிரண்டு வந்து போனது. அதையெல்லாம் சொன்னால் சிரித்துவிடுவீர்கள் என்பதால் நாகரீகம் கருதி அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.
மனிதர்கள் புதியவர்களுக்கு எப்போதும் ஒத்தாசையாகத்தான் இருக்கிறார்கள் என்பதை ஒரு சிறுபயணம் உணர்த்திவிடுகிறது. திர்சூர் (தமிழில் திருச்சூர்) என்னை ஏராளமான வெய்யிலோடு வரவேற்றது. பேருந்து நிலையத்திற்கு முன்னதாகவே இருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கச் சொன்னதோடு இல்லாமல் எப்படிச் செல்லவேண்டும் என்று வழியும் சொன்னார்கள்.
சொன்னபடியே, சற்று தொலைவில் பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் உயிரியல் பூங்கா இருந்தன. சாலையின் இருபுறங்களிலும் வேடிக்கை பார்த்துகொண்டே நடந்து சேர்ந்தபோது நுழைவாயிலில் ’ஸ்டேட் மியூசியம் & ஜூ’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
திர்சூர் நகரத்தின் மையத்தில், நாட்டிலேயே மிகப்பழமையான மிருகக்காட்சி சாலை இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம். இரண்டு கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்டது. காலை பத்துமணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கிறது. வெறும் பத்து ரூபாய் நுழைவுக்கட்டணம். வாகன நிறுத்தத்திற்குக் கட்டணமில்லை. உடைமைகளை வைக்கும் இடத்திற்குக்கூட கட்டணமில்லை. சற்றே ஆச்சரியம்தான். நம்மூர் மனிதர்களை இன்னும் அவர்கள் காப்பியடிக்கவில்லை என்பது பெருத்த நிம்மதி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நரி, சிங்கம், புலி, சிறுத்தை, புனுகுப்பூனை, கரடி, மான்கள், எருமைகள், நீர் யானை, குரங்குகள் முதலை, பாம்பு, மற்றும் பலவகையான அரிய பறவைகள், உட்பட ஏராளமான உயிரினங்களை கூண்டுக்குள் வலம்வருவதைப் பார்க்க முடிந்தது.
மரங்களில் நாகலிங்க மரம் மற்றும் பீரங்கிக் குண்டு மரம் (கேனன் பால் ட்ரீ) பார்த்ததும் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அற்புதமான நினைவு.
இளம்பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதன் பெயர்களைச் சொல்லி அவர்கள் திரும்பச் சொல்லுவதைக் கேட்டுப் பரவசப்பட்டுக்கொண்டார்கள். கூண்டுக்குள் இருந்த மிருகங்களையும் வேடிக்கை பார்த்த மனிதமுகங்களையும் முழுவதுமாகப் பார்க்கவே இரண்டுமணி நேரத்திற்கு மேல் பிடித்தது.
உயிரியல் பூங்கா முடிவுபெறும் இடத்தில் தொடங்குகிறது பாரம்பரிய அருங்காட்சியகம். (மியூசியம்) கொச்சின் மகாராஜாவின் அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள்.
திர்சூர் வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் கட்டிடக்கலைக்குப் பிரசித்திபெற்ற இடம் என்பது அங்கு செல்லும் வரை எனக்குத் தெரியாது. எதுவும் தெரியாமல் இருப்பதும் ஒருவிதத்தில் நல்லதுதான். முதன்முறை காணும்போது, நமது வியப்பும் அதைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் விரிவடைந்துகொண்டே செல்கிறது.
ஒரு அருங்காட்சியகம் என்னைப் போன்ற சாமானியனின் மனதில் என்ன பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? என்ற இருமாப்பும், அலட்சியமும் ஒருகாலத்தில் எனக்குள்ளும் இருந்ததென்னவோ உண்மை. ஆனால், அருங்காட்சியகத்தில் நாம் காணும் ஒவ்வொரு பொருளும் ஒருகாலத்தில், ஒரு சமூகமே பயன்படுத்திருக்கிறது என்பதை எப்போது உணர்கிறோமோ அப்போதுதான் ஒரு அருங்காட்சியகத்தோடு ஒருவித நெருக்கம் உண்டாகும்.
மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பலபொருட்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கும், பாதுகாப்பிற்கும், சமூக அந்தஸ்திற்கும், அதிகாரத்திற்கும் பயன்படுத்தப்பட்ட ஒன்று காலமாறுதலால் பழையது என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத்தோன்றலாம்..
உண்மையில் பலங்காலப் பொருட்களில் சில மட்டுமே நாம் காண்பதற்குக் கிடைத்திருக்கின்றன. எத்தனையோ பொருட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள்ளே புதைந்துகொண்டிருக்கின்றன.
தற்போது மிகஎளிதாகக் கிடைக்கும் எந்தவித நவீனகருவிகளும், தொழில்நுட்பமும் இல்லாத ஒரு காலத்தில் அவர்கள் கையாண்ட நுட்பமான கலைத்திறன், பண்பாடு, பொழுதுப்போக்கு ஆகிய அனைத்து அந்தச்சூழலில் இருந்துகொண்டு ஒவ்வொரு பொருட்களையும் அணுகவேண்டும் என்ற அறிவைத் தந்தது அருங்காட்சியகங்கள்தான்.
வன்மம் தீர்க்கச் சத்தமிட்ட போர்வாள்கள், எத்தனையோ அப்பாவிகளின் ரத்தம் பார்த்த போர்க்கருவிகள், சுயநலம்கொண்டு தங்களைப் பாதுகாக்க அணிந்துகொண்ட இரும்புக்கவசங்கள், அதிகாரத்தையும் அந்தஸ்த்தையும் ஒருசேர காட்டிக்கொள்ள அணிந்துகொண்ட உடைகள் தாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பதிவு செய்துவைத்த கல்வெட்டுக்கள் வேட்டையாடிப் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் மாதிரிகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், இலைகள், நார்கள், சாமானியர்கள் சமையல் செய்யப்பயன்படுத்திய பாத்திரங்கள் என ஒரே இடத்தில் நேர்த்தியாக அணிவகுத்திருந்ததைப் பார்க்கும்போது ஒரு சரித்திர நாவலை ஆளில்லாத இடத்தில் அமர்ந்துகொண்டு ஆழ்ந்து வாசிப்பதற்குச் சமம். அவற்றை வார்த்தைகளால் வர்ணித்துவிடமுடியாது.
மகாராஜா பயன்படுத்திய குதிரைவண்டி, பலவகையான சிலைகள், பலதரப்பட்ட புராதான விளக்குகள், கற்சிற்பங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் பாத்திரங்கள், செம்பு மற்றும் வெண்கலப் பாத்திரங்கள், பணம் பாதுகாக்கும் பண்டாரப் பெட்டி, என எத்தனையோ அற்புதமான பொருட்களை இன்னும் பராமரித்து வருவதற்காவே அவர்களுக்கு மிகப் பெரிய நன்றியையும் வணக்கத்தையும் செலுத்தலாம்.
நல்ல பசி, என்பதால் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் உணவகத்திற்குச் சென்றபோது கொட்டை அரிசிச் சோறு எந்தக் குழம்பிற்கும் ஒட்டாமல் விரைத்துகொண்டு என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. ஒவ்வொரு கவளத்தையும் மென்று தின்பதே வாய்க்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிபோல் தோன்றியது. புதிதாக உண்ணும் உணவு வயிற்றைப் பதம்பார்த்துவிடுமே என்று பயந்து பயந்துதான் உண்ணவேண்டியிருந்தது.
மியூசியத்திற்கு வெளியே வந்து சுற்றுச் சுவரை ஒட்டியே நடந்தால் அடுத்தவரும் கட்டிடம் ஒரு அரண்மனை என்று சொன்னார்கள். பிறகென்ன? மீண்டும் நடைதான். மத்தியான வெய்யில் உச்சந்தலையை பதம்பார்த்தது. பயங்கர சூடு. எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம். ரோட்டோரக்கடை இளநீரும், எலுமிச்சை ஜுசும் ஏதோ கொஞ்சம் தாகம் தணித்தது.
சக்தன் தம்புரான் கொட்டாரம் என்று அனைவராலும் அழைக்கப்படும் அரண்மனை இந்திய-டச்சு கட்டிடக்கலை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கொட்டாரம் என்றால் அரண்மனை என்று பொருள். சக்தன் தம்புரான் என்று அனைவராலும் அறியப்பட்ட கொச்சி மகாராஜா ஸ்ரீ ராமவர்ம ராஜாவின் அரண்மனை இன்றளவும் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது. உயரமான கூறை, தடிமனான சுவர்கள் திர்சூரின் இதயத்தை அலங்கரிக்கும் இந்த அரண்மனை தற்போது கேரள தொல்பொருள் துறையினால் அற்புதமாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது.
இது தற்போது தொல்பொருள் சுவரோவியக் கலை அருங்காட்சியகமாகச் செயல்பட்டுவருகிறது. அரண்மனையின் உள்ளே நுழையும்போதே நமக்குள்ளே ஒரு கம்பீரமாய் ஒரு ராஜநடை போடவேண்டும் என்ற உணர்வு தன்னுள்ளே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உயிரியல் பூங்காவிற்கும் மியூசியத்திற்கும் மக்கள் கொடுத்த முக்கியத்துவம் இங்கே இல்லை. தனியொருவனாக அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றிப் பார்ப்பது அலாதியான இன்பம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எந்த அவசரமும் இல்லை. அரண்மனையில் பார்க்கும் இடமெல்லாம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன்கூடிய மரப்பலகைகள். மரப்படிக்கட்டுகள். மரத்தால் ஆன கைப்பிடிகள்.
முதல்மாடியில் முழுக்க முழுக்க ஓவியங்கள். மியூரல் பெயிண்டிங்ஸ் (சுவர் சித்திரம்) என்றார்கள். ஓவியத்தில் எனக்கு அத்தனை ஞானம் இல்லையென்றாலும் ஆழ்ந்து ரசிக்குமளவிற்கு அறிவு இருந்தது. பீகாரில் பிரசித்திபெற்ற மதுபானி-ஓவியக்கலையை பல ஓவியங்கள் நினைவூட்டியது.
கீழ் தளத்தில் பழங்கால கோவில்களின் மாதிரிகள், நினைவுச் சின்னங்கள், ஓலைச்சுவடிகள், மண்பானைகள், முதுமக்கள்தாழி, சிந்து – ஹரப்பா நாகரீத்தைச் சேர்ந்தபொருட்கள், அவர்கள் பயன்படுத்திய அடுக்களைப் பொருட்கள். இலையால் செய்யப்பட்ட பீப்பீக்கள். (ஊதிகள்). இன்னும் ஏராளமான பொருட்கள் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் மேலெழும்பிக்கொண்டே இருந்தது. நேரம்தான் போதவில்லை. ஒரே நாளில் இத்தனையும் சாத்தியமா என்ற பிரம்மிப்பு எழுந்தாலும் எதுவும் சாத்தியம்தான் என்பதை இன்றைய பகல்பொழுது சுட்டிக்காட்டியது.
வரவேற்பறையில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அத்தனையும் கேரள தொல்லியல் துறையால் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள். அதிகளவில் மலையாளத்திலேயே இருந்தன. சில ஆங்கிலத்தில் இருந்தன. ”பத்மநாபபுரம் அரண்மனை” என்ற புத்தகம் ஒன்றே ஒன்று மட்டும் தமிழில் இருக்கவே அதை விலைகொடுத்து வாங்கிக்கொண்டேன்.
ஆனால், திர்சூர் அரண்மனையைப் பற்றிய தகவல்கள் தாங்கிய புத்தகம் எதுவும் தமிழில் இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். கேரள தொல்லியல் துறை கொஞ்சம் மெனக்கெட்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது. இதுபற்றி தொல்லியல் துறையிடம் முறையிடவேண்டும் என்பதற்காக இ-மெயில் ஐடியைப் பெற்றுக்கொண்டேன்.
அரண்மனையில் உட்புறச் சுற்றுச்சுவர் முழுவதிலும் ஐம்பது மியூரல் பெயிண்டிங்ஸை சுற்றிப்பார்க்க முடிந்தது வரப்பிரசாதம். ஆள் அரவமில்லாத அமைதி மேலும் மேலும் ஓவியங்களை ரசிக்கத் தோதாக இருந்தது. எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தது போதும் என்ற எண்ணம் தோன்றியபோது வெளியே வந்துவிட்டேன். இன்னும் சூரியன் பிரகாசமாகவே சுட்டெரித்துக்கொண்டிருந்தான். என்மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருப்பது போன்றதொரு பிரம்மை.
மீண்டும் நடை. ரோடெங்கும் மனிதர்கள். பெரியவர்களின் கரங்களைப் பற்றியபடி குழந்தைகள். இடதுபுறம் திரும்பி வலதுபுறம் திரும்பி என்று கேட்டுக்கேட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தாகிவிட்டது. மிகத்தூய்மையான கட்டணமில்லா வெஸ்டர்ன் கழிப்பறைகள். எல்லா பைப்புகளிலும் தண்ணீர் வந்தது. கூடவே பக்கெட்டும் மக்கும் இருந்தது உடையாமல் ஒழுகாமல் இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
பள்ளி, கல்லூரிகள் விட்டுவிட்டார்கள் போலும். பார்க்கும் இடம்தோறும் சீருடையில் வளர்ந்த மாணவக்குழந்தைகள். பேருந்திற்காகக் கொத்துக் கொத்தாய் காத்திருந்தார்கள். கூட்டம்கூட்டமாகப் பள்ளிச் சிறுமிகள் கலகலத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
இன்றையை வளர்ந்த குழந்தைகளுக்கு ஏன்தான் தங்கள் சிகையலங்காரத்தின்மேல் இத்தனை ஈர்ப்பு என்று தெரியவில்லை. பள்ளிசெல்லும் வளர்ந்த ஆண்குழந்தைகள் ஒருபக்க முடியை சுத்தமாக வழித்துவிட்டு மறுபக்கம் விரித்துபோட்ட சடைபோல் வளர்த்தியிருக்கிறார்கள். அவ்வப்போது தலையை சிலுப்பிக்கொள்வதும் கோதிக்கொள்வதும் பார்க்க ரசிக்கும்படிதான் இருக்கிறது. பெண்கள் எந்தவிதத்திலும் குறைவில்லாமல் முன்னுச்சியில் மேடிட்டுக் கொண்டை வைத்தபடி சிகையலங்காரம் செய்திருந்தார்கள்.
கொரானா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பள்ளிக்கல்லூரி மாணவமாணவியர்களின் கைகளில் மொபைல் ஃபோன் அதிகம் புழங்குவதாக எனக்குப்பட்டது.
பொதுவெளியில் வளர்ந்த(?) பெண்குழந்தைகள் சக ஆண் மாணவர்களோடு கைகளைப் புதைத்துக்கொண்டு அடிக்கடி முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டும், உதடுகளைக் குவித்தபடியும் கைவிரல்கள் இரண்டை காட்டியபடியும் குரூப்ஃபி எடுத்தவண்ணமே இருந்தார்கள். (தனியாக எடுத்தால்தானே செல்ஃபி?, குரூப்பாக எடுத்தால் அது குரூப்ஃபி என்றுதானே சொல்லவேண்டும்)
எனக்கு சற்று பொறாமையாகக்கூட இருந்தது என் காலத்தில் இப்படியொரு சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொள்வதைத் தவிற வேறென்ன செய்யமுடியும்? நான் செல்லவேண்டிய பேருந்தில் ஏறிக்கொண்டேன். மீண்டும் சாலையோர கட்டிடங்களையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்தபடியே பயணம்.
திரும்பி வரும்போதுதான் கவனித்தேன், பாரதப்புழ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 117 வருடப் பழமையான கொச்சின் பாலம் 2009ல் சேதமாகி நட்டாற்றில் தொங்கிக்கொண்டிருந்ததை. இந்தப்பாலம்தான் சொர்ணூரிலிருந்து கொச்சிக்கு ஏராளமான ரயில் பயணிகளை கடந்துசெல்ல பயன்பட்டிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலம் நெடுநாட்களாக அகற்றப்படாமலேயே இருந்தது. ஒருவேளை என்னைப் போன்ற வெளியூர் பயணிகளுக்கு அதன் கட்டிடகலையின் மதிப்பையும், வரலாற்றுச் சிறப்பையும் சேர்த்து ஏதேனும் சேதிசொல்வதற்காகக் கூட இன்னும் அகற்றப்படாமல் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.
ரயிலுக்கு இன்னும் நான்கரை மணிநேரம் இருக்கிறது. ஜங்சனுக்கு எதிரிலேயே மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலின் (லாலேட்டன் என்கிறார்கள் அந்தவூர்காரர்கள்). நவீன சினிமா தியேட்டர் இருப்பதை காலையில் கண்டபோது எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. ஆனால், மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் (மம்முக்கா என்கிறார்கள் அதே ஊர்க்காரகள்) பீஸ்ம பர்வம் என்றொரு புதிய சினிமா ரிலீசாக மூன்றாவது வாரம் என்றார்கள்.
மனதிற்குள் நப்பாசை விருட்டென்று தலையைத் தூக்கி நமைச்சலைக் கொடுத்தது. சகல நிகழ்வுகளும் கூடிவரும்போது தவறவிடக் கூடாதல்லவா! இதுவரை எத்தனையோ ஊர்களுக்குச் சென்று பகல்பொழுதையும் இரவுப்பொழுதையும் வெட்டியாகக் கழித்திருந்தபோதும் சினிமாவிற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை எழுந்ததும் இல்லை, அதற்கான வாய்ப்பும் கிட்டியதில்லை. ஆனால் கடவுளின் தேசத்தில் கிட்டியிருக்கிறது.
மலையாள சினிமாக்கள் நான் அறிந்தவரை, கதை, கதைக்களம், இசை, நடிப்பு, சண்டைக்காட்சி என்று எப்போதும் ஒருவித இயல்புத்தன்மையோடு இருக்கும் என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், இந்தப்படம். அப்படியில்லை என்பது என்னளவில் ஏமாற்றம்தான்.
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்ற பழமொழிக்கேற்ப வயதான மம்முட்டியின் கணீர்குரல் படம் முழுக்க எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை போடும்போதெல்லாம அவரது வெளிறிப்போன ஒல்லியான கால்கள் நம்மை நெளியவைக்கிறது.
கூட்டுக்குடும்பம். ஏராளமான நடிகர் நடிகைகள். சதித்திட்டம் தீட்டும் குடும்ப உறுப்பினர்கள், பழிவாங்கப் புறப்பட்டுவரும் இளவயது வில்லன் படுத்துக்கொண்டே திட்டம்போட்டு எதிரிகளைப் பந்தாடும் மம்முட்டி என்று வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று பார்க்கும்போதே புரிந்துவிடுகிறது. ஆண்குரலிலும் இல்லாமல் பெண்குரலிலும் இல்லாமல் ஐஸ் வாட்டரைக் குடித்துவிட்டு காதருகே கிசுகிசுக்கும் பாடல்கள் இப்போதெல்லாம் ட்ரெண்ட் போலும். நமக்கெதற்கு வம்பு என்று நம் பங்கிற்குக் கேட்டுவிட்டு ஆஹா அருமை என்று சொல்லிவிட வேண்டியதுதான்.
வில்லனையும் கதாநாயகனையும் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் எதற்காக அப்படியொரு காதைப் பதம்பார்க்கும் பின்னணி இசை என்று யாராவது சொன்னால் பரவாயில்லை. அடிதடி, ரத்தம், கொலை என்று தொடர்ச்சியாய் நடக்கும்போது காவல்துறை, சட்டம், ஒழுங்கெல்லாம் எங்கே ஓடி ஒளிந்துகொண்டிருக்கின்றன என்று தேடவேண்டியிருக்கிறது.
பழி, பழிக்குப் பழி, ரத்தம், பெண்களின் கண்ணீர், விரோதம், குரோதம், எல்லாமே சினிமாக் கதைகளில் பார்த்துப் பார்த்து அயர்ச்சியைத் தருகிறது என்றபோதும் எதுவும் மாறவில்லை. கடவுளின் தேசத்துச் சினிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது என்பதற்கு இப்படம் ஒரு சிறு பொறி அவ்வளவே.
எல்லாம் முடிந்து தியேட்டரைவிட்டு வெளியே வந்தபோது என்மேல் கோபம்கொண்ட சூரியன் சொல்லிக்கொள்ளாமலே சென்றிருந்தான். இரவுநேரக்கடைகளில் கூட்டம் நம்மூரைப்போலத்தான். வீடுகளில் சமையல் செய்வதை நிறுத்திக்கொண்டார்கள் போலும். அகண்ட தோசைக்கல்லில் மோதும் தோசைக்கரண்டியின் தாளலயம் தப்பாமல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இரவு பத்துமணிக்கு நான் செல்லவேண்டிய ரயில் ஐந்தாவது ப்ளாட்பாரத்தை வந்தடையவே நான் கடவுளின் தேசத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டேன். என் நினைவுகளில் கடவுளின் தேசத்தைப் பற்றிய நினைவலைகள் ஏராளமாக இருப்பதைப்போல என்னைப் பற்றிய நினைவுப் பதிவுகள் யார் மனதிலேனும் இருக்கக்கூடும்.
மணி 5 இருக்கும். நேரமாச்சு சீக்கிரம் வேலையை முடி என குமார் கத்திக்கொண்டே இருந்தான். சுமதி அதையெல்லாம் பொருட்படுத்தி அவளாக தெரியவில்லை.சுமதி அவளுக்கே உரிய பொறுமையோடு தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு ட்ரெயின் விட்டா அவ்வளவுதான் துணிமணிகளை பையில் வச்சுக்கிட்டு ராத்திரி சாப்பாட்டை பார்க்கணுமே.பொம்பளைகளுக்கு எத்தனை கை இருந்தாலும் பத்தாது போல.
குமாரும் சுமதியும் இப்பதான் கல்யாணம் ஆச்சு என்று சொல்ல முடியாவிட்டாலும் இன்னும் குழந்தை இல்ல பாக்க ரெண்டுபேரும் இளமையா இருக்கிறதால புதிய தம்பதிகள் மாதிரி தெரியும்.
சரியா ஆறரைக்கு கிளம்பி மதுரை சந்திப்புக்கு வந்தாச்சு. பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதனோட வேகத்தைக் காட்ட ரெடியா பிளாட்பாரத்தில் நினைச்சு. சுமதியும் குமாரும் தன்னோட கம்பார்ட்மென்ட் பார்த்து சீட்டு தேடி உட்காரகுள்ள ரெண்டு பேருக்கும் ரெண்டு தடவை சண்டை வந்துருச்சு என்ன செய்ய வாழ்க்கை அப்படித்தான் இருக்கு.
ரயிலும் புறப்பட ஆரம்பிச்சிருச்சு திருச்சியில் ரயில் நிலையம் வர்றதுக்குள்ள ரெண்டு பேரும் பேசிக்கல. விறுவிறுன்னு சாப்பிட்டு தன்னோட பெர்த்தில் ஏறி படுத்த குமார சுமதி மறந்தும் போயிட்டா. மறந்ததற்கு காரணமும் இருக்கு. திருச்சியில் சுமதியோட இருக்கைக்கு எதிரே கைக்கு ஒரு கண்ணு தெரியாத தம்பதி ஏறினாங்க. சுமதி அவங்களையே பார்த்துகிட்டு இருந்தா என ரெண்டு பேரும் கண்பார்வை இல்லாதவங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்னா செய்யலாம் அப்படின்னு அவளும் அவங்கள பார்த்துகிட்டே இருந்தா. ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் ரொம்ப கூட்டம் இல்ல ரிசர்வேஷன் பண்ணவங்க மட்டும்தான் அங்க எங்க இருந்தாங்க.
சுமதி கவனம் சிதறாமல் எதிர்பார்த்த இருந்தா உங்கள பாத்துகிட்டே இருந்தா அப்படி என்ன அவங்க கிட்ட பிடிச்சு போச்சுன்னு தெரியல. கண் குறைபாடு உள்ளதாக அவங்கதான் இணைய தொடுத்துள்ளதான் பாத்துக்கிறாங்க. ரெண்டு பேரும் கைகளைக் கோர்த்துகொண்டேதான் இருந்தாங்க. திருச்சிக்கு அடுத்து வந்த நிறுத்ததில் அடி வாங்கின அடி வாங்கும் போது 20 ரூபாய் நோட்டை விரல்களால் அளந்து பார்த்து தனக்கு வந்த மிச்ச பணம் சரி தானா என்று உறுதி பண்ணிட்டாங்க. கண் பார்வை இல்லாதவர்களுக்கு கண்களில் பார்வை இல்லைனா என்ன விரல்களில் பார்வை காதுகளில் பார்வை என நிறைய கண்கள் இருக்கு போல.
அப்பப்போ அந்த தம்பதிகளுக்கு உள்ள ஏதோ பேசி உடனே அந்த பொண்ணு தன் மாராப்பை சரி செய்தாள் கொஞ்சம் சிரிப்பும் சமூகத்தின் மீதான பயத்தையும் ஒருசேர உணர்ந்தாள் சுமதி. மணி ஒன்பதைத் தாண்டியதும் எல்லோரும் ரெஸ்ட் ரூம் போயிட்டு தன் பெர்த்தில் ஐக்கியமாகி கொண்டிருந்தனர். சுமதியும் தன் பெர்த்தில் படுத்துக்கொண்டாள் ஆனால் எதிர் புறத்தில் உள்ள தம்பதிகள் மட்டும் அசையவே இல்லை என இவர்கள் தூங்கலையா என்று நினைத்துக் கொண்டவளாய் கண்களை மூடவும் திறக்கவும் இருந்தாள். இப்படியே அவர்களையே அவள் பார்த்துக் கொண்டிருந்த போதும் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அந்தப் பெட்டி முழுவதும் அமைதியான பின் விளக்குகளும் உறங்கத் தொடங்கியது. அந்த தம்பதிகள் ரெஸ்ட் ரூமுக்கு செல்ல எழவும் சுமதியும் சட்டென எழுந்து விளக்குகளை விழிக்க வைத்தாள். ஆனால் அவர்களுக்கு இரவும் பகலும் வெளிச்சமும் இரண்டும் ஒன்றுதானே என்பதை அவள் பின்புதான் உணர்ந்தாள்.
அப்போதும் அவர்கள் ஒருவரையொருவர் விலகாமல் நடந்து சென்றார்கள். பத்தாததற்க்கு சுமதியும் தன் தலையை வாசல் பக்கத்தில் வைத்து அவர்கள் நடந்து செல்வதையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ரெஸ்ட் ரூம் கதவைத் திறந்து அவர்கள் இரண்டு பேருமே உள்ளே நுழைந்தார்கள் சுமதிக்கு இருப்பு கொள்ளாமல் எழுந்து சென்றாள் அந்த தம்பதி நான்கு பக்கத்தையும் அளந்து கொண்டிருந்தார்கள். உள்ளே வேறு யாரும் இருக்கிறார்களா என ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பின்பு அவர்களின் கடன்களை முடித்துவிட்டு இருக்கையை ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டே வந்து தன் இருக்கையில் அமர்ந்தார்கள் இவர்கள் வருவதற்கு முன்பு எழுதித் தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
சரி இப்போதாவது அவர்கள் படுக்கைக்குச் செல்வார்கள் என நினைத்தாள் ஆனால் அப்போதும் இருவரும் பிரிவதில்லை இரவு முழுவதும் அந்த இருக்கையை விட்டு நகரவே இல்லை. இடையிடையே கண்விழித்து பார்த்தபோது அவர்கள் உறங்கவும் இல்லை.
சுமதி தன்னை அறியாது கண்ணசந்தால் செங்கல்பட்டு நிறுத்தத்தில் வண்டி நின்றதும் சுமதி கண் விழித்து மீண்டும் உறங்கிப் போனாள் குமார் மட்டும் தன் பெர்த்தில் இருந்து இறங்கி போர்வையை மடித்து விட்டு சுமதி சுமதி என்று எழுப்பும் போதுதான் சுமதிக்கு தன் கணவன் நினைவே வந்தது. விழித்தவுடன் எதிரிலிருந்த தம்பதிகளைதான் தேடினால் ஆனால் அவர்கள் இறங்கிவிட்டார்கள். எப்போது இறங்கினார்கள் என்று குமாரிடம் கேட்டு தெரிந்து கொண்டால் செங்கல்பட்டில் இருப்பார்கள் சீக்கிரம் எடுத்து வை சுமதி தாம்பரம் வரப்போகுது இல்லை என்ற குமாரின் சத்தத்தில் சுமதியின் கைகள் மட்டுமே வேலை செய்தது அவள் நினைவோ அந்தத் தம்பதியை சுற்றியே இருந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும் பிளாட்பாரத்தில் ட்ராலியை தள்ளிக் கொண்டே நடந்தனர் சுமதி என் மனதில் கேள்விகள் விரிந்தது.
அந்தப் பெண் எப்படி உணர்வால் அன்பின் வெளிப்பாடாகவும் பாதுகாப்பாக அல்லது சுதந்திரமற்ற உணர்வா எப்படி உணர்வால் என்ற சிந்தனையில் டிராலி உருளும் சத்தத்தோடு அவள் நினைவுகளும் உருண்டன.
நடை வண்டி காபி *************************
தற்போது தள்ளுவண்டி
‘டீ காபி டீ காபி’
கூவி விற்கிறது
குழந்தை
காற்றில் கைமாறும்
காகிதம்
‘காபி சரியில்லை
என் காசைக் கொடுங்க’
அடுத்த கணமே
திரும்ப வந்தது காசு
குழந்தையின் தராசுமுள்
எப்போதும்
சாய்வதேயில்லை